செவ்வாய், 11 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கடகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


கடக லக்கினம் :

5ல் அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு நினைவாற்றலையும், சிந்தனை திறனையும் வெகுவாக குறைப்பார், ஞாபக மறதியால் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது , வெளிநாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளை செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், மற்றவருக்கு பண உதவிகள் செய்யும் பொழுது  உண்மை காரணத்தை அறிந்து செய்யுங்கள், இல்லை எனில் தேவையில்லாத மன உளச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் காலம் இதுவென்பதால் ஜாதகர் தனது பிரச்சனைகளுக்கு தானே தீர்வுகளை தேடிகொள்வது சால சிறந்தது, முன் பின் யோசனை செய்யாமல் எடுக்கும் எந்த ஒரு காரியமும் எதிர்பாராத தடைகளை சந்திக்கும் என்பதால், நன்கு ஆலோசனை செய்து செயல்படுவது மிகுந்த யோகத்தை  தரும், இனிவரும் காலங்களில் ஜாதகர் மனோ ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளை அதிகம் தருவதால், தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வது நல்லது, அல்லது நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும், தனது தாய் தந்தையின் மனம் நோகமால்  நடந்துகொள்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை அபரிவிதமாக வாரி வழங்குகிறார், இதுவரை மந்த நிலையில் சென்று கொண்டு இருந்த தொழில் இனி காட்டு தீ போல் வெகு வேகமாக முன்னேற்றத்தை தரும், குறிப்பாக தினம் தினம் அழியும் தன்மை கொண்ட உணவு பொருட்களை, வியாபாரமாக செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் விவசாயம், விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது  ஒரு வருமான வாய்ப்பை வழங்கும் பொற்காலம், அரசு துறை வேலையை எத்திர்பார்த்து  இருப்பவர்களுக்கு திடீரென வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திடீரென பதவி உயர்வு உண்டாகும், ராணுவம் மற்றும் காவல் துறையில் பணிபுரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், சுய தொழில் செய்வோருக்கு இனி வரும் இரண்டரை வருடங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும் .

7ம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே சகல அதிர்ஷ்டங்களையும் பெரும் யோகத்தை  தருகிறார், நேற்றுவரை சாமானியராக இருந்தவர்கள் இன்றுமுதல் அதிர்ஷ்ட தேவதையில் அருளை பெற்றவர்கள் ஆகிறார்கள், வருமான வாய்ப்பு ஜாதகரின் வாயிற்க் கதவை வழிய வந்து தட்டும், குறிப்பாக வட்டி தொழில் நகை வீடு அடமான கடன் தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்றமிகு யோக காலம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும், ஜாதகரின் கட்டளைக்கு அனைவரும் அடிபணிந்து நடக்கும் யோகத்தை தரும், தனது சுய உழைப்பால் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரும், முற்போக்கு சிந்தனையுடன் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும் , தனது வாத திறமையால் அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை தரும்.

10ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு குடும்பத்தில் சிறு சிறு சிரமங்களை தந்த போதிலும், வருமான வாய்ப்பை குறைக்க மாட்டார், ஜாதகர் தனது குல தெய்வத்தை நாடி வழிபாடு செய்வதால் சகல நலன்களும் பெறுவார், தனக்கு வரும் வருமானத்தை தேவையில்லாத செலவுகளை செய்து வீண் விரயம் செயாமல் இருப்பது  நலம் தரும், குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது சால சிறந்தது, உதாரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரது உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், அதே போன்று தங்களின் உடல் நலனினிலும் கவனமாக இருப்பது நலம், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க கூடும், உணவு பழக்க வழக்கங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், ஜாதகர் தனக்கு வரும் வருமானத்தை சேமிக்கவும், திட்டமிட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இனி வரும் இரண்டரை வருடகாலம் தரும்.

கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. HI I DO COME ACROSS BOTH GOOD AND TESTING PERIODS I USE MY MIND INSTINCT TO CROSS MY TROUBLES I TAKE GOOD AND BAD THINGS EQUALLY> SO DO NOT PUT MORE FAITH IN JOTHIDAM TRY TO FACE THE DIFFICULTIES SIMPLE BE A GOOD MAN IN ALL WAYS THAT IS ENOUGH

    பதிலளிநீக்கு