திங்கள், 24 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கன்னி


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


கன்னி லக்கினம் :


3ல் அமர்ந்த சனிபகவான் கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, ஜாதகர் செய்யும் முயற்ச்சிகளில் எதிர்பாராத வெற்றிகளை வரி வழங்கும், வீரியம் மிக்க செயல்களால் ஜாதகர் மக்களின் பாராட்டுகளை பெரும் சந்தர்ப்பங்கள் ஏற்ப்படும் , ஜாதகரின் மன நிலை மிகவும் தெளிவாக செயல்படும், பரந்த மனப்பக்குவமும், ஜாதகரின் நல்லெண்ணங்களும் பலிதம் பெரும் யோக காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகருக்கு சுய முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உண்டாகும், சகோதர வழியில் இருந்து உதவிகளும், ஆதரவும் எதிர்பாராவண்ணம் சிறப்பாக அமையும், ஜாதகர் தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனலாம், ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல வேலைவாய்ப்பு, எதிர்பாராத வருமான வாய்ப்பும் நிச்சயம் வந்து சேரும், ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் முதல் படி எடுத்து வைக்கும் வாய்ப்பை தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனி பகவான் வாரி வழங்குகிறார் என்றால் அது மிகையில்லை.

8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கன்னி லக்கினத்தாருக்கு, விபரீத ராஜ யோக பலன்களை வாரி வழங்குகிறார், ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் சோம்பேறித்தனம் இன்றி ஜாதகர் சுறுசுறுப்பாக உழைக்கும் யோக காலமாக கருதலாம், ஜாதகருக்கு புதையலுக்கு ஈடான பொருளாதார வரைவை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும், இதுவரை இருந்த உடல்  உபாதைகள் ஜாதகருக்கு சரியான மருத்துவ உதவியினால் குணம் பெற்று குறுகிய காலத்தில் நலம் பெரும் யோகத்தை தரும், ஜாதகர் செய்து வரும் தொழில்களில் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும் என்பதை மறுக்க இயலாது, நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களை இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு ஏற்றமிகு யோக காலம் எனலாம், முன் பின் தெரியாத நபர்கள் மூலமும் ஜாதகரு திடீர் வருமானம் உண்டாகும், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், வட்டி வரவு செலவுகள் சிறப்பாக அமையும்.

9ம் பாவகத்தை 7ம் பார்வையாக வசீகரிக்கும் சனிபகவான், ஜாதகர் பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது அதிக கவனத்தை கொண்டு இயங்குவது நலம் தரும், எதிர்பாராத சில அவபெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தர கூடும், பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும் பொழுது மிக கவனமாக  இருப்பது நலம் தரும், தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட வாய்ப்பு அதிகம், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் இடம்,பொருள்,ஏவல் தெரிந்து பேசுவது நலம் தரும், இல்லை எனில் ஜாதகரின்  பேச்சே ஜாதகருக்கு எதிரியாக மாறிவிட வாய்ப்பு உண்டு , மற்றவருக்கு வாக்கு கொடுப்பதென்றாலும் நிறைய யோசனை செய்து கொடுப்பது வீண் அவபெயரை  தவிர்க்கும், கன்னி லக்கினத்தாருக்கு சனி பகவான் குடும்பம்,வாங்கு,தனம், சமூக வாழ்க்கை என்ற அமைப்பில் இருந்து சில சிரமங்களை தந்த போதிலும், கை நிறைவான வருமானத்தை நிலையாக வாரி வழங்குவார் என்பது ஆறுதலான விஷயம்.

12ம் பாவகத்தை 10ம் பார்வையாக வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு, சிறந்த ஆன்மீக வெற்றியை வழங்குகிறார், ஜாதகரின் சிந்தனையும் அறிவாற்றலும் சமாதானத்தை விரும்பு தன்மையை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தையும், மருத்துவ துறையில் இருக்கும் அன்பர்களுக்கு இது ஏற்றமிகு யோககாலமாக கருதலாம், ஜாதகரின் வாழ்க்கையில் பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், ஆன்மீக அன்பர்களின் நல்லாசியும் ஒன்று சேர கிடைக்கும் யோக காலம் இது, ஜாதகர் இறை அருளின் தன்மையை பரிபூரணமாக உணரும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் ஏற்ப்படும் என்பதை மறுக்க இயலாது, ஜாதகர் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் ஜாதகர் இறை அருளின் கருணையினால் மீண்டு வரும் யோகத்தை தரும் இதற்க்கு முன் நடந்த காலங்களில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்கள், இனிவரும் காலங்களில் நல்ல அனுபவத்தை பெற்று தரும், ஜாதகர் இனிவரும் காலங்களில் சனிபகவானால் சுடர்விட்டு எரியும் ஒளிவிளக்காக பிரகாசிப்பார், இதன் மூலம் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்களும் நிலையான நன்மைகளை பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

கன்னி இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட3,8,9,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 3,8,9,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக