ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 கருத்துகள்: