வியாழன், 13 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


சிம்ம லக்கினம் :

சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமர்ந்த சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகருக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து திடீர் என வீடு வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், புதிய சொகுசு வாகனம் வாங்கும் யோகம், கூட்டு முயற்சியாக பல தொழில்களில் முதலீடு செய்யும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியில் இருந்து  கிடைக்கும் எதிர்பாராத பொருளாதார உதவிகள், வெளியூர் பயணங்களால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக அமைப்புகள், ஆன்மீக பெரியவர்கள் மூலம் ஜாதகருக்கு திடீர் என கிடைக்கும் நல்லாசிகள் , போதும் என்ற மனம், விவாசாயத்தில் எதிர்பாராத நல்ல லாபம்,  வண்டிவாகன தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும், கலைத்துறையில் உள்ளவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை பெறுவார்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்கு இனிவரும் காலங்கள் சிறந்த  நன்மைகளை  ஸ்திரமாக தொடர்ந்து வழங்கும் என்பதால் இந்த சனி பெயர்ச்சி, சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு 4ம் பாவக வழியில் இருந்து 100%  யோகத்தையே வாரி வழங்கும்.

6ம் பார்வையாக பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் பொது காரியங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு மிகப்பெரிய சோதனைகளை தருவார், மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையீடு செய்தால் , ஜாதகருக்கு வீண் அவபெயரும் மனோரீதியான போராட்டங்களையும்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவருக்கு ஜாமீன் தருவது , மற்றவருக்காக பொறுப்பை ஏற்று கொள்வது போன்றவை மிக பெரிய  துன்பங்களை வாரி வழங்கும், எந்த காரணத்தை கொண்டு எதிர்பால் அமைப்பினரிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டிய காலம் இது ஏனெனில் ஆண் என்றால் பெண்களாலும், பெண் என்றால் ஆண்களாலும் தேவையில்லாத வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், இதனால் தங்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு அன்பர்களே, இது ஒரு வகையில் சிரமங்களை தந்த போதிலும் ஜாதகர் பல திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், சிறந்த ஆன்மீக பெரியோர் மற்றும் சமுதாய  பெரிய மனிதர்களின் ஆசிர்வாதமும், ஜாதகருக்கு பரிபூரணமாக் கிடைக்கும், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் ஜாதகருக்கு இறுதியில் நன்மையே உண்டாகும்.

7ம் பார்வையாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% வாரி வழங்குகின்றார், ஜாதகருக்கு வருமான வாய்ப்புகள் தொடர்ந்து  வந்தவண்ணம் இருக்கும் என்பதால் இது சிம்மலக்கினத்தருக்கு வருமான வாய்ப்பையும், தொழில் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்,  சமுதாயத்தில்  கௌரவம் மற்றும் அந்தஸ்து சுய மரியாதை ஓங்கி நிற்கும், ஜாதகரின் புகழும் கீர்த்தியும் உலகம் முழுவதும் பிரபலமாகும், பொது மக்களை சார்ந்து தொழில் செய்துவரும்  சிம்ம இலக்கின அன்பர்களுக்கு அபரிவிதமான யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்கள் வழியில் இருந்து நல்ல வருமானத்தையும், நீடித்த ஆதரவையும் வாரி வழங்கும், ஜாதகரின் பேச்சு திறமையும், வாக்கு வன்மையும் பிரகாசிக்கும், நிதி நிறுவனம் அல்லது பணம் சார்ந்த தொழில்களை  செய்துவரும் அன்பர்களுக்கு இது ஒரு அபரிவிதமான வருமானத்தை வாரி வழங்கும் யோக காலம், இதுவரை திருமணம் ஆகாமல் தடைபெற்று  வந்த சிம்ம இலக்கின அன்பர்களுக்கு திடீரென குறுகிய காலத்தில்  திருமணம் நடைபெறும், சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும் என்பது  கவனிக்கத்தக்கது, சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம்  சனிபகவான் மிகுந்த யோகத்தை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்குகிறார் என்பதால் சிம்ம இலக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக லக்கினத்தை பார்வை செய்யும் சனிபகவான், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சிறந்த உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும், அறிவில் தெளிவையும் தரும் காலம் இது, தனது சுய அறிவை கொண்டு, சாதுர்யமான செயல்களால் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பை தருவார் சனிபகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எவ்வித தடையும் இன்றி குறுகிய காலத்தில் சிறந்த வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சுய அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம் அன்பர்களே !  உயர்கல்வி ரீதியாக ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும், கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், புகழ் மிக்க பொறுப்புகளை ஜாதகர் ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும், குறுகிய வட்டத்தில் இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம்  உலகபிரசித்தியை பெற்றுத்தரும், உலக அளவில் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள் பிரகாசிக்கும் யோக காலம் இது என்பதால், சிம்மலக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தனது தகுதிகளையும் திறமைகளையும் உலக அளவில் அறிமுகம் செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெறுங்கள் வாழ்த்துகள் .

 சிம்ம இலக்கின அன்பர்களே! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துக்கள் 


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. சனிக்கு 6 ம் பார்வை இருக்கா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனிபகவானுக்கு 6ம் பார்வையே உண்டு, 3ம் பார்வை என்பது இல்லை என்பதை ஆதி ஜோதிட நூல்களின் வாயிலாக தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், சாய கிரகமான ராகுகேதுவுக்கு பார்வை இல்லை என்பது உறுதிபடுத்தபட்ட ஒரு விஷயமாக இருக்கிறது, தேடுதல் இருப்பின் தெளிவு கிடைக்கும்

      நீக்கு