திங்கள், 3 நவம்பர், 2014

" மறைந்த புதன் நிறைந்த கலை " என்பதற்கு ஏற்ப சுய ஜாதகத்தில் புதன் பலன் தருமா ?



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக வருவது கன்னி ராசி இதன் அதிபதி புதன், இங்கு புதன் ஆட்சி மற்றும் உச்ச நிலையை பெறுகிறார், மேலும் உபய மண் தத்துவ அமைப்பை கன்னி ராசி பெறுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தை மறைவு ஸ்தானமாக பாவிப்பார்கள், மேலும் 6ம் பாவகம் சத்ரு ஸ்தானமாக வர்ணிப்பதும் உண்டு, சுய ஜாதகத்தில் ஒருவரின் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியையும், பங்கு பெரும் போட்டி பந்தையங்களில் எதிர்பாராத வெற்றியையும், எதிரிகளின் சதியை முறியடிக்கும் அபரிவிதமான ஆற்றலையும், வழக்குகளில் பெரும் வெற்றியையும் குறிக்கும், மேலும் ஜாதகர் அரியகலைகளில் அபரிவிதமான அறிவு திறனையும், செயல் திறனையும் வாரி வழங்கும், இந்த விஷயம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக கன்னி ராசி வருவதாலும், இங்கே உபய மண் தத்துவம் சிறப்பாக செயல்பட்டு, புதன் ஆட்சி உச்சம் பெறுவதாலும் " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு பொருத்தமானதாகவே இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.


ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் 6ம் பாவகத்தில் அமர்வது அந்தஜாதகருக்கு பலவகையான தனி திறமைகளை வாரி வழங்கி விடுகிறார் ( 6ம் பாவகம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ) மேலும் ஜாதகருடன் தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள்,உறவுகள், எதிர்பாலினரின் தன்மையை தெளிவாக தெரிவிப்பது, ஜாதகரின் 6ம் பாவகமே, மேலும் ஜாதகரின் சூட்சம அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை இந்த ஆறாம் பாவகத்திர்க்கே உண்டு என்பதால், நுண்ணறிவுக்கு அதிபதியான புதன் இங்கு வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சிந்தனை,அறிவாற்றல்,செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் மெச்சும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 6ம் பாவகத்தில் அமரும் புதன் ஜாதகருக்கு தனது வழியில் இருந்து எவ்வித யோகங்களை வழங்குகிறார், என்பதை இனி சிந்திப்போம்.

6ம் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் துரித கதியில் மிக சிறப்பாக செயல்படும், 6ம் பாவகம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நிதானமாக ஸ்திர தன்மையுடன் நீண்ட நாட்கள் பலன் தரும் அமைப்பில் செயல்படும், 6ம் பாவகம் உபய ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் தனக்கும் மற்றவருக்கும் குறுகிய காலத்திற்கு மட்டும் பலன்தரும் அமைப்பை தரும், இந்த விஷயம் சுய ஜாதகத்தில் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப சில மாறுபட்ட பலன்களை தந்த போதிலும், அதிக சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கின்றது.

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு நெருப்பு தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு அரிய கலைகளில், போர் முறைகள் சார்ந்த விசயங்களில் ஞானம் உண்டாகும், எதிரிகளை தாக்கும் சூட்சம கலைகளில் சிறந்து விளங்குவார்கள், குறிப்பாக வில் அம்பு எய்தல், துப்பாக்கி சுடுதல், ரகசிய போர் முறைகளை அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், வீரம் சார்ந்த ரகசிய கலைகளில் அபரிவிதமான தேர்சியை தரும், தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும்  வல்லமை ஜாதகருக்கு மிக எளிதாக கைவர பெறுவார், நெருப்பு தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்களை வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் மண் தத்துவமாக இருப்பின் ஜாதகர் மருத்துவ கலையில் சிறந்து விளங்குவார் , ஒருவரை பார்த்த உடனே அவரின் உடல் நிலையை மிக சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும், மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பல மூலிகை ரகசியங்களை அறிந்திருக்கும் பலரது ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை பார்க்க முடிகிறது, மேலும் சித்த மருத்துவ முறையில் சிறந்த வைத்திய  ரகசியங்களை அறிந்துகொள்ளும் யோகத்தையும் இங்கு அமரும் புதன் வாரி வழங்கி விடுகிறார்.

6ம் பாவகம் காற்று தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு கணிதம்,ஜோதிடம்,எதிர்காலத்தை  துல்லியாமாக கணிதம் செய்யும் அனைத்து ஜோதிட கலைகளிலும் அபரிவிதமான ஞானத்தையும், தெளிவான கலை நுணுக்கத்தையும் வழங்குகிறது, மேலும் எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து போன்ற  கலைகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தருகிறது, மேலும் இயல் இசை நாடகம் மற்றும் சிற்ப கலையில் சிறந்து விளங்கும் நுண் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது, ஜாதகரின் அறிவாற்றல் பலரது வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் தன்மையை, காற்று தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் நீர் தத்துவமாக இருப்பின் ஜாதகர் சிறந்த மனோதத்துவ நிபுனாராக விளங்குவார், ஜாதகரின் மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியும் தன்மையை சிறு வயதிலேயே பெற்று விடும், குறிப்பாக நல்ல மனோதத்துவ நிபுணர் தனது மனதை ஒருநிலை படுத்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளுணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார், சரித்திரத்தில் சில பாத்திரங்களை மிருக பாஷை அறிந்தவராக சிததரித்து இருப்பார்கள், அதற்க்கு பொருத்தமானவர்கள் என்று இவர்களை சொல்லலாம், டெலிபதி, கிரகங்களின் தன்மையை உள்ளுணர்வாக புரிந்து கொள்ளும் மன ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேலும் மண்ணில் புதையுண்ட ரகசியங்களை அறிந்துகொள்ளும் தன்மையையும், பின்னல் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்து கூறும் வல்லமையை, நீர் தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

மேலும் சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தில் சாய கிரகமான ராகு அல்லது கேதுவோ ஆளுமை செய்து 6ம் பாவகத்தை வலிமை பெரும் தன்மையில் இருக்குமாயின், புதனின் அபரிவிதமான சக்தியை சாயா கிரகங்கள் பெற்று பன்மடங்கு அதிகரித்து தரும் என்பது குறிப்பிட தக்கது, ராகு கேதுவுடன் சேர்ந்த புதனின் தன்மை பன்மடங்காக அதிகரிக்கும், குறிப்பக கேதுவுடன் சேரும் பொழுது அபரிவிதமான அறிவாற்றலையும், ராகுவுடன் சேரும்பொழுது அளவில்லா உடல் வலிமையையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறது  என்பது கவனிக்க தக்க ஒரு சிறப்பு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

எனவே " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு நிச்சயம் உண்மையானதே, இதை வேறுஒரு பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு உறுதி செய்வோம் அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக