ஞாயிறு, 9 நவம்பர், 2014

எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் !



வணக்கம் அய்யா !

ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி, பல ஜோதிடர்கள்  புத்தகம் எழுதியுள்ளனர். எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள், பற்றி தங்களின் கருத்து என்ன ?


வணக்கம் அன்பரே !

அடிப்படையில் ஜோதிடதீபம் தங்களுக்கு ஒரு சிறு விளக்கத்தை தர விரும்புகிறது, பொதுவாக பாரம்பரிய ரீதியாக ஜாதக பலன் காணும் ஜோதிடர்கள் அனைவரும், ராசிகளுக்கு கோட்சார கிரகங்களை தொடர்பு படுத்தி பலன் சொல்வார்கள் ( குறிப்பாக சனி, குரு, ராகு கேது ) இது எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம், பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்திற்கு பலன் காண வேண்டுமெனில் அந்த ஜாதகரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடத்தின் அடிப்படையில் கணிக்தம் செய்து ஜாதகரின் லக்கினம் என்ன? என்பது முதலில் நமக்கு தெரிய வேண்டும், இரண்டாவதாக ஜாதகருக்கு லக்கினத்தின் அடிப்படையில் 12 பாவக நிலைகளை பற்றிய தெளிவு வேண்டும், மூன்றாவதாக தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் 12 பாவகங்களில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் எவ்வித பலன்களை தருகிறது? என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நாம் சரியான ஜாதக பலன்களை தெளிவாக மற்றும் துல்லியமாக கணிதம் செய்து சொல்ல இயலும் அன்பரே!

சந்திரன் நின்ற அமைப்பை வைத்து ( அதாவது ராசி பலன் ) ஒரு ஜாதகருக்கு பலன் சொல்வது என்பது ஏற்புடையதாக இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதவில்லை, ஏனெனில் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற விஷயம் தெரியாத பொழுதே மேற்கண்ட ( ராசிகளுக்கு சனி பெயர்ச்சி பலன் காணும் ) குழப்பம் ஏற்படும், மேலும் ராசிகளுக்கு கோட்சார பலன் காணும் முறை வெகு காலமாக இருந்து வருகிறது, அந்த காலத்தில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஜாதகம் இருந்தது, பல நபர்களுக்கு பிறந்த நேரம் என்ற ஒரு விஷயமே தெரியாது, ஏன் சிலருக்கு பிறந்த தேதி என்ன ? என்பது கூட தெரியாது, இதை தங்களின் பெற்றோரை விசாரித்தலே தெரிந்துவிடும்.

எனவே ஜாதகம் இல்லாத நபர்கள் ஜோதிடரிடம், தமக்கு இனி என்ன பலன்கள் நடைபெறும் என்று கேள்வியை முன்வைக்கும் பொழுது, ஜோதிடர் அவரின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு நட்சத்திரம் அறிந்து அதற்க்கு உண்டான ராசியை தெரிந்து, தற்பொழுது நடைமுறையில் உள்ள கோட்சார கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப ராசி பலன்களை சொன்னார்கள், இந்த வழக்கம் அப்படியே தொடர்ந்தது, தற்பொழுதும் ராசி பலன் காணும் முறை  நடைமுறையில் இருப்பதிற்கு இதுவே காரணமாக இருக்கும், ஆக ஒரு ஜாதகருக்கு பிறந்த நேரம் தெரியாமல், அவரது ஜாதகம் தெரியாமல் நட்சத்திரம் மற்றும் ராசி அமைப்பை வைத்து பலன் அறிந்துகொண்ட முறை, தற்பொழுது உள்ள நவீன உலகத்திற்கு எப்படி பொருந்தும்.

அந்த காலங்களில் நிலத்தில் உளவு செய்ய கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையை நாடினர், ஆனால் தற்பொழுது நிலத்தில் உளவு செய்ய டிராக்டர் போன்ற அதி நவீன கருவிகளை பயன்படுத்துகிறோம், அதெல்லாம் முடியாது  நான் கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையைதான் பயன்படுத்துவேன் என்றா சொல்கிறோம், இதை போன்றுதான் இருக்கிறது ராசி பலன் காணும் முறையும், தற்பொழுது ஒருவரின் பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்துகொள்ள நமக்கு வாய்ப்புகள் அதிகம், இதை கொண்டு ஒருவரின் ஜாதகத்தை மிக துல்லியமாக எடுக்க இயலும், ஒருவேளை பிறந்த நேரத்தை தவறாக சொல்லி இருந்தாலும் கூட நமது ஜாதக கணித முறை கொண்டு குறிப்பிட்ட ஜாதகருக்கு சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக எடுக்க இயலும் அன்பர்களே !

ஆக சனி பெயர்சி பலன், குரு பெயர்சி பலன், ராகு கேது பெயர்சி பலன் என்பதெல்லாம் ஒரு ஜாதகரின் லக்கினம் என்னவென்பது தெரியாத நிலையிலும், தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலும், அப்படி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன் என்ன ? என்பது தெரியாத பொழுது சரியாக இருக்கும், துல்லியமாக ஜாதக கணிதம் செய்யும் ஜோதிடர்களுக்கு இந்த மேற்கண்ட குழப்பம் வர வாய்ப்பே இல்லை என்பதால், ஒருவரின் சுய ஜாதகத்திற்கு  லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும்  என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் நிதர்சனமாக வலியுறுத்துகிறது.

மேலும் கோட்சார கிரகங்களுக்கு  பரிகாரம் என்ற பெயரில் பரிகார திரு தளங்களில் சிலர் செய்யும் தவறுகளை இங்கே ஜோதிடதீபம் சுட்டிகாட்ட விரும்புகிறது, திரு தளங்களுக்கு செல்லும் அன்பர்கள் அங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி தமது ஆடைகளை அந்த தீர்ததிலேயே விட்டு சென்றுவிடுகின்றனர் , இது சரியானதல்ல என்று ஜோதிடதீபம் கருதுகிறது, திருநள்ளாறு திருத்தலத்தில் நள மகராஜா தனது சொத்து சுகம், வீடு, மக்கள் அரசு பதவி அனைத்தையும் இழந்து, அங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடும் பொழுது அவரின் அரைஞான் கயிறும் அறுந்து, ஆடையும் இழந்து பிறப்பில் குழந்தையின்  தன்மையை அடைந்த பொழுது, சனி பகவானின் அருட்பார்வை  மூலம் சகல நன்மைகளும் பெற்றதாக புராணங்கள் எடுத்துரைக்கிறது என்பதால், இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைத்து தீர்த்தத்தில் தமது ஆடைகளை விட்டு செல்கின்றனர், கோவில் வழிபாட்டில் கோவிலை தூய்மையாக  வைத்திருப்பதே சரியான பரிகாரமாக இருக்க கூடும் அன்பர்களே! இதை போன்று கோவிலை அசுத்தம் செய்வது பாவ வினைகளை அதிகரிக்குமோ தவிர , பரிகாரமாக அமையாது என்பதால் இதை கருத்தில் கொண்டு கோவிலை பரிசுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.

மேலும் எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் என்பது சுய ஜாதகத்தில்  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவக அமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை செய்யும், ராசிக்கு பலன் காணும் பொழுது நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக எடுத்து உரைக்க  இயலாது என்பதுமட்டும் உண்மை என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக