சனி, 29 நவம்பர், 2014

ஆதார் அடையாள அட்டையும், சுய ஜாதகத்தில் பாவகத்தின் தன்மைகளும் !


ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிளுருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவைக்கப் பட்டுள்ளது. இந்திய அரசால் 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

சுய ஜாதகம் என்பது 12பாவகங்களுடன்12 இலக்க எண் பொறித்த அட்டையை போல் தனிப்பட்ட வலிமையுடன் ) இறை அருளால், ஒவ்வொருவரும் தாம் செய்த வினை பதிவிற்கு ஏற்றார் போல் 12 பாவக அமைப்பில் இருந்து பாவக வலிமை மற்றும் சிறப்பு தன்மை என்ற அடிப்படையில் வழங்கபடுகிறது, எப்படி ஒரு நபருக்கு ஆதார் அடையாள அட்டையில் உள்ள விபரங்கள் மற்ற ஒருவருக்கு ஒத்து போகாதோ, அதை போன்றே ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் தன்மை மற்ற ஒருவருக்கு ஒத்து போகாது, ஆதார் அடையாள அட்டையில் உள்ள பொதுவான விஷயங்களான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருப்பது போல், நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான அமைப்புடன், தனது ஜீவ சக்தியை வழங்குகிறது, மேற்கண்ட குறிப்புகளான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் பெறுவது போல், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை என்ற அமைப்பில் வித்தியாசபடுகிறது. எனவே நவகிரகங்கள் பூமியில் ஜெனனம் செய்யத மனிதர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஜீவ காந்த சக்தியையே தருகிறது, மனிதர்களின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் தனது கொள்ளளவுக்கு ஏற்றவகையில் கிரகங்களின் ஜீவசக்தியை பெற்று ஒரு ஜாதகருக்கு தனது பாவக வழியில் இருந்து யோக பலன்களையோ, அவயோக பலன்களையோ வாரி வழங்குகிறது.

அன்பர்களே மேற்கண்ட உதாரணம் எதற்காக என்பதை தங்களுக்கு ஜோதிடதீபம் விளக்கம் தர கடமைபட்டுள்ளது, மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போலவே வாழ்க்கையில் பலாபலன்கள் நடைபெறுகிறது என்பதை தெளிவு படுத்தவே, ஒரு வேலை தாங்கள் ஒரே மாதிரியான ஜாதகம் எம்மிடம் உள்ளது என்றால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள், அப்படி பட்ட ஜாதகங்கள் பாவக அமைப்பில் எப்படி தனித்துவம் பெறுகிறது என்பதை ஜோதிடதீபம் தங்களுக்கு உண்மையான விளக்கத்தை தர கடமைபட்டுள்ளது, ஒருவரின் ஜாதகத்திற்கு ஜோதிட ரீதியாக கணிதம் கொண்டு பலன் காண முற்படும் பொழுது, அவர்களது ஜாதகத்தில் பாவகத்தின் தன்மை அறிந்து ஜாதக பலன்களை கூறுவதே மிக துல்லியமாக இருக்கும், ஏனெனில் ஒட்டி பிறந்த இரடையர்கள் ( சில வினாடிகள் வித்தியாசத்தில் ) ஜாதகத்தில் கூட பாவகங்களின் தன்மை வித்தியாசம் பெறுகிறது என்பதை, அந்த ஜாதகத்தில் பாவக வலிமையை ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது நமக்கு மிக தெள்ள தெளிவாக புரியும்.

நவகிரகங்கள் மனித ஜீவன்களுக்கு தரும் ஜீவகாந்த சக்தி என்பது பொதுவானது, ஆனால் ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்பது ஒவ்வொருவருக்கும்  நிச்சயம் வித்தியாசம் பெரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது, உண்மையும் அதுதான், பொதுவாக ஒருவரின் ஜாதகத்தை காணும் ஜோதிடர்கள், இதற்க்கு முன் வாழ்ந்த ஜாதகர்களுக்கு ஒப்பிட்டு பலன் சொல்வதுண்டு, இது உண்மைக்கு புறம்பானது ஏனெனில் ஒருவரது ஜாதகத்தில் உள்ளதுபோல் நவகிரகங்கள் அமர்ந்து இருக்கலாம், ஆனால் பாவக வலிமை என்பது நிச்சயம் ஒருவருக்கு இருப்பதை போல் மற்றவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, பாவக வலிமை என்பது இறையருள் அவருக்கு கொடுக்கும் தனிப்பட்ட அடையாளமாகவே ( ஆதார் அடையாள அட்டையை போல் ) இருக்கும் என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது, இதற்க்கு தங்களின் விமர்சனங்கள் வரவேற்க படுகிறது, ஒருவரது ஜாதகத்தை போல் மற்றொருவருடைய ஜாதகத்தை தாங்கள் ஜோதிட தீபத்திற்கு காட்டி விளக்கம் தந்து நிருபித்து விட்டால் அவர்களுக்கு ஜோதிடதீபம் 5000/- ரூபாய் பரிசாக தருகிறது என்று உறுதி அளிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


1 கருத்து: