ஞாயிறு, 10 ஜூன், 2018

ராகு திசை தரும் இன்னல்களும், சுய ஜாதகத்தில் அமர்ந்த நிலையில் தரும் பாதிப்புகளும் !


 சுய ஜாதகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையில் அமர்ந்து, தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது சம்பந்தம்பட்ட ஜாதகருக்கு வெகுவான சிரமங்களை தரக்கூடும், குறிப்பாக பாதக ஸ்தான தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தனது திசையில் தருவது ஜாதகரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் தன்மை கொண்டது, கீழ்கண்ட ஜாதகருக்கு, சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும் பலன்கள் பற்றியும், நடைமுறையில் உள்ள ராகு திசை தரும் பலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! மேலும் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : உத்திரம்3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்ல மனநிலையை தரும், பயணங்களில்ஆர்வம், சகோதரர் மற்றும் உறவுகளுடன் சுமூக நிலை, நல்ல நடப்புறவு, அவர்கள் வழியிலான ஆதரவு மற்றும் உதவிகளை பெரும் வாய்ப்பு என்ற அமைப்பில் நன்மைகளை தரும், மேலும் வளரும் சூழ்நிலையில் ஜாதகருக்கு தெளிவான திட்டமிடுதல்களை மேற்கொள்ளும் வல்லமையை தரும், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு பூர்ண விருத்தியை தரும், வாக்கில் தெளிவு, உண்மையை மதித்தல், முற்போக்கு சிந்தனை, விடா முயற்சி, எதிர்ப்புகளை புறம்தள்ளி வெற்றியை ஈட்டும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும், உடல் நலம் சார்ந்த விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிட்டும், தேடுதல் மட்டுமே ஜாதகருக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும் உடல் நலம் சார்ந்த இன்னல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது, சிறந்த எழுத்தாளர் மற்றும் இலக்கிய ஆளுமையை ஜாதகருக்கு பிறவியிலேயே வழங்கிவிடும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஜாதகரை முழு வேகத்தில் முன்னேற்ற பாதையில் பயணிக்க வைக்கும், மின்னணு உபகரணங்கள் ஜாதகருக்கு சிறப்பான தொழில்  வாய்ப்பை நல்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், எதிரிகளை வெல்லும் யோகம் பெற்றவராகவும் ஜாதகர் விளங்குவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் நல்ல வெற்றிகளையும் சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் அறிவு திறன் உண்டாகும், உடல் வலிமையை விட மனவலிமையை  அதிக அளவில் பெற்றவராக ஜாதகர் திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது, தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகர்  மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றிகளை வாரி வழங்கும், சத்தியத்தை மதித்தலும், உண்மையை ஆதரிப்பதும் ஜாதகருக்கான சிறப்பு குணாதிசயம், உயர் கல்வி வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமாக அமையும், மாற்றங்களை கிரகித்துக்கொள்ளும் வல்லமை, புதிய சூழ்நிலைகளை விரும்பும் மனம், ஏஜென்சி எடுத்து செய்யும் அனைத்து தொழில்களிலும் நல்ல வருமான வாய்ப்பு என்ற வகையில் ஜாதகருக்கு வீரிய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

2,4ம் வீடுகள் ஜாதகருக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்தை பரிபூர்ணமாக நல்கும், கனிம பொருட்கள் மூலம் ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றம் உண்டாகும், சொந்த ஊரில் சிறப்பும், தனது தாய் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகர் முழு அளவில் பெறுவார், பொதுமக்கள் சேவையாக வண்டி வாகன போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொழில்களில் அபரிவித வளர்ச்சியினை ஜாதகர் பெறுவது இயற்கையாக நிகழும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வண்டிவாகனங்கள் ஜாதகருக்கு நிலையான வருமான வாய்ப்பை நல்கும், வீடடிற்கு தேவையான உபகரண பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் ஜாதகருக்கு சிறப்பான தொழில் விருத்தி உண்டாகும், பொதுமக்கள்  ஆதரவுடன்  செய்யும் தொழில்கள் யாவிலும் ஜாதகருக்கு  நிறைவான  வருமானம் வந்து சேரும், மேலும் ஜாதகரின் வாக்கு வன்மை  அதிகரிப்பதால் ஜோதிடம், கணிதம், தரகு தொழில்கள் மூலமும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

4ம் பாவக வழியில் இருந்து சுய உழைப்பின் மூலம் மண் மனை வண்டி வாகனம், சொந்த ஊரில் செல்வாக்கு, கல்வி துறையில் சிறப்பான எதிர்காலம்,  உயர் கல்வியில் வெற்றி, நெறியுடைய நன்னடத்தை, ஒழுக்கம், நல்ல குணம் என்ற  வகையில் சிறப்பை தரும், முறையான மக்கள் ஆதரவு ஜாதகருக்கு சிறப்பான அரசியல் பதவிகளை தரக்கூடும், வீடு கட்ட தேவையான பொருட்கள் சார்ந்த வணிகம் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், தெளிவான சிந்தனை மற்றும் திட்டமிட்டு காரியமாற்றும் வல்லமை இரண்டும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், சொந்த வியாபாரம் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், ட்ராவலிங் ஏஜென்சி மூலம் நல்ல லாபம் உண்டாகும், கமிஷன் சார்ந்த வண்டி வாகன விற்பனையும் ஜாதகருக்கு சிறப்பான பொருளாதர வளர்ச்சியை தரும்.

5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடை, சுபகாரியங்களில் தடை, தெய்வீக  அனுக்கிரகம் இன்மை, குலதெய்வ சாபம், குழந்தைகள் வழியிலான இன்னல்கள், கற்ற கல்வி வழியிலான வளர்ச்சியை பெற இயலாமல் தவிக்கும் நிலை, உதவி செய்ய வருபவர்களுக்கு நேரும் இன்னல்கள், சோர்வு, முயற்சி தடைபடும் தன்மை, உதவி செய்ய யாருமற்ற சூழ்நிலை, எதிர்பாராத துன்பங்கள், நீண்ட போராட்டம், போதிய வசதி வாய்ப்பு இன்மை என்ற வகையில் சிரமங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம் இன்மை, திருமண தாமதம், எதிர்பாலினர் வழியிலான இன்னல்கள், பொது காரியங்களில் தொய்வு, வாழ்க்கையை சிரமத்துடன் எதிகொள்ளும் தன்மை, பொறுப்புகளை இறுதி நேரத்தில் தவறவிடும் தன்மை, வாழ்க்கை துணைக்கு வரும் இன்னல்கள், கூலியாட்கள் மூலம் வரும் இன்னல்கள், எதிர்ப்புகளை அதிக அளவில் சமாளிக்க வேண்டிய கட்டாயம், என்ற வகையில் ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடிகளை தரும், வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையின்றி தேர்வு செய்துவிட்டால், இல்லற வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிய காட்டயத்தை தந்து விடும், எந்த காரணத்தை கொண்டும் ஜாதகர் கூட்டு தொழில் செய்வது சரியான நன்மைகளை தாராது.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டமின்மையான  வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை போன்ற விஷயங்கள் ஜாதகருக்கு வெகுவாக பாதிக்கப்படும், மெய்பொருள் காண்பது அறிவு என்ற வாக்கிற்க்கு புறம்பான செயல்பாடுகளை தரும், புதிய முயற்சி  மேற்கொள்ள வெகுவான தடைகளையும் தாமதங்களும் ஜாதகர் சந்திக்கும் நிலையை தரும், அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வெகு தூரம் நிற்கும் என்ற போதிலும், கடின உழைப்பின் வழியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, முரண்பட்ட கருத்துக்களை விட்டுவிட்டு முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.

 6,8,10,12ம் வீடுகள் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து கடன் கொடுத்தவர்களால் மிகுந்த  இன்னல்கள், கடன் பெற்றவர்களால் நிதி நிலை பாதிப்பு என்ற வகையில் கடும் இன்னல்களை தரும், நல்ல வேலையாட்கள் அமைவது சிரமம், வேலை நிறுத்தத்தால் பொருளாதர இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் என்ற வகையில் இன்னல்களை தரும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் சுமுக போக்கை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு விபத்து, மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனகுழப்பம் மற்றும் போராட்டம், அறுவை சிகிசை மேற்கொள்ளும் சூழ்நிலை, வீண் கற்பனைகள், மரண பயம், போதிய விழிப்புணர்வு இன்மை, தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மை, மருத்துவத்தால் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணும் அமைப்பு என்ற போதிலும், ஜாதகருக்கு மன அழுத்தம் அதிகமாகும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் வெளிநாடு சார்ந்த தொழில்களில் நல்ல முன்னேற்றம், திடீர் தொழில் முடக்கம், வரவைவிட செலவு அதிகரிக்கும் தன்மை, கவுரவம் மற்றும் சுய மரியாதை பாதிக்கும் தன்மை, எதிர்பாராத தொழில் வழியிலான பொருளாதர சிக்கல்கள் என்ற வகையில் இன்னல்களை தரும், உகந்த காலநேரம் அறிந்து நலம் பெறுவது அவசியமாகிறது .

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்கள் வரும், எதிர்பாராத  பொருளாதர சிக்கல்கள் மனநிம்மதியை பாதிக்கும், உறக்கம் கெடும், பங்கு சந்தை மற்றும் லாட்டரியில் இழப்பை தரும், திருப்தியில்லை என்ற  சூழ்நிலையை உருவாக்கும், அனைவராலும் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் வழியிலான முன்னேற்றத்தடை, வீண் மனபயம் அதீத கற்பனை, மனசஞ்சலம், கிலேசம் போன்றவை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், அயன சயன சுகம் கெடும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9 ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து உயர் கல்வி ஆய்வு கல்வி மூலம் அபரிவித செல்வாக்கையும், சிறந்த வேலை வாய்ப்பையும் நல்கும், பெரிய மனிதர்கள் ஆதரவும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும், அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும், பரந்த மனப்பக்குவம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், பித்ருக்கள் ஆசி ஜாதகருக்கு நல்லதொரு இல்லறவாழ்க்கையை நல்கும், சிறந்த அறிவு திறன் உள்ளதால் ஜாதகருக்கு வரும் இன்னல்களை மிக  எளிதாக கையாளும் வல்லமை உண்டாகும், சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இறை அருள் ஜாதகருக்கு சிறப்பான வாய்ப்புகளை நல்கும்.

 நடைபெறும் ராகு திசையும், எதிர்வரும் குரு திசையும் ஜாதகருக்கு  5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடந்த 10/08/2006 முதல் கடுமையான இன்னல்களை  வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு வாழ்க்கையில் பெரிய பின்னடைவுகளை தந்துகொண்டு இருப்பது கவலைப்படத்தக்கது என்ற போதிலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை சுக்கிரன் புத்திக்கு அடுத்து  வரும் சூரியன் புத்தி ( 1,3-3 ), சந்திரன் புத்தி ( 4-4 ), செவ்வாய் புத்தி ( 9-9) ஆகியவை வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகர் சிறப்பான யோக வாழ்க்கையை மேற்கண்ட பாவக தொடர்புகள் வழியில் இருந்து  பரிபூர்ணமாக பெறுவார்.

ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் பாவக வழியில் 2ல் அமர்ந்த கேது தான் அமர்ந்த பாவத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில்  இருப்பதும், பாவக தொடர்பு வழியில் சுக ஸ்தான தொடர்பை பெறுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், சிறப்பான குடும்ப வாழ்க்கை, கைநிறைவான வருமானம், தொடர் முன்னேற்றம், பொருளாதர வசதி வாய்ப்புகள் என்ற வகையில் சுபயோகங்களை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வழியில் 8ல் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவத்திற்கு வலிமை அற்ற அமைப்பில்  இருப்பது பெருவாரியான இன்னல்களை தரும், மனம்  சார்ந்த போராட்டம், திடீர் இழப்பு மருத்துவ செலவினங்கள், மனபயம் என்ற  வகையில் சிரமங்களை தருவது வருந்தத்தக்கது, மேலும் ராகு தனது திசையில் 5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று பலாபலன்களை  தருவது, மிகுந்த இன்னல்களை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ராகு சுய ஜாதகத்தில் வலிமை அற்றும், தனது திசையில் இன்னல்களையும் தருவது வருந்தத்தக்கது.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பினும், பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ராகு,குரு பகவான்கள் மட்டுமே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கிடைத்த கொடையாக கருதலாம், எனவே ஜாதகர் ராகு,குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மேற்கண்ட பாவக வழியில் ( 5,7,11) மிகுந்த எச்சரிக்கையுடன்  இருந்து நலம் பெறுவது அவசியமாகிறது, மற்ற கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சிறப்பான வலிமை  பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளே நடைமுறைக்கு வரும், மேற்க்கண்ட அமைப்பு ஜாதகருக்கு கடுமையான பாவக பாதிப்பை பெற்ற போதிலும், அதனால் வரும் இன்னல்கள் வெகுவாக குறையும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக