ஞாயிறு, 17 ஜூன், 2018

ராகு மஹா திசை தரும் இன்னல்களும், திருமணம் தொழில் சார்ந்த தடைகளும் !


சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், மேலும் சாயா கிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமையற்று அமர்வதும், வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் கடுமையான இன்னல்களை ஜாதகருக்கு பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கிவிடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4ல் அமர்ந்த ராகு வளர்பிறை சந்திரன் என்பதால் தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், பாவக தொடர்பு வழியில் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது வீட்டிற்கு சத்ரு ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் யாதொரு நன்மையையும் பெற இயலாத சூழ்நிலையை தற்போழுது வரை பலாபலனாக வழங்கிக்கொண்டு இருக்கின்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்திலேயே, ஜாதகருக்கு சுக ஸ்தானம் முழுவதும் வியாபித்து நிற்பது சிறப்பானது என்ற போதிலும், ராகு பகவானால் 100% விகித பாதிப்பிற்கு உள்ளாவது ஜாதகருக்கான சுபயோகங்களை 4ம் பாவக வழியில் இருந்து வெகுவாக தட்டிப்பறிக்கும்.

ஜாதகர் மேற்கொண்ட வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது சுக ஸ்தானமான 4ம் பாவக பாதிப்பே அன்றி வேறுஎதுவும் இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகம்  கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பெயரில் சொத்து சுகம், வண்டிவாகனம் மற்றும் வீடு நிலம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லதல்ல, மீறி வைத்திற்குக்கும் பொழுது ஜாதகருக்கு அது சார்ந்த நஷ்டங்களை தவிர்க்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது, இதை உணராமலும், நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றி அறியாமலும், ஜாதகர் செய்த முதலீடுகள், ஆரம்பித்த தொழில், புதிதாக துவங்கிய காரியங்கள் யாவும் மிகுந்த நஷ்டத்தையே வழங்கியது, மேலும் ஜாதகருக்கு 37 வயது நிறைவடைந்ததும் திருமணம்  கைகூடி வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

ஜாதகருக்கு ராகு அமர்ந்த நிலையிலும் வலிமை பெறவில்லை, தனது திசையிலும் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சம்பாதிக்கும் வருமானம், வரும் பொருள் வரவுகள் அனைத்தும் திடீர் இழப்பை தந்தது, ஜாதகரின் நிதி நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியது, ஜாதகருக்கு திடீர் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத விபத்து , பொருளாதார சிக்கல்கள் யாவும் வாட்டி வதைத்தது, நிதி நிலையை சீர் செய்ய ஜாதகர் எடுத்த முடிவுகள், ஜாதகரின் பெற்றோர் சொத்துக்களுக்கும் இறையாயின , வீடு நிலம், தோட்டம் போன்றவை ஜாதகரின் கடன் பிரசனைகளுக்கு  ஈடாக அடமானம் வைக்கப்பட்டது, இவையெல்லாம் ராகு மகா திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சந்திரன் புத்தி 5,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை செய்வது, மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து ஓர் பெரிய மனிதரின் ஆதரவில் மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து குல தெய்வ அருளாலும், பித்ருக்கள்  ஆசியாலும் மீண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை நல்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம், சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களில் இருந்து மீட்டுஎடுக்கும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், எதிர் வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கான ஜீவன யோகத்தை பரிபூர்ணமாக தர தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் சர மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்து சிறப்பான நன்மைகளை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களில் ராகு மட்டும் பாதிப்பை அமர்ந்த நிலையிலும், தனது தசையிலும் கடுமையாக தரும் அமைப்பில் உள்ளது ஆனால் கேது அமர்ந்த நிலையில் மிகுந்த வலிமையுடனும், தனது திசையில்  6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  சர இயக்கத்தில் மகர ராசியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகருக்கு ராகு பாதிப்பை தந்த போதிலும், கேது அதற்க்கு நிகரான சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், ஜாதகரின் முன்னேற்றம் கேது வின் மூலம் மிக  அபரிவிதமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்  
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக