வியாழன், 7 ஜூன், 2018

ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன ?


 ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன ? குறிப்பாக பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட முறையான நிவர்த்தி பரிகாரம் உண்டு எனில் தெளிவாக விளக்கம் தர வேண்டுகிறோம், எனது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிகழ்வுகள் பற்றி விளக்கம் தரவும் வேண்டுகிறோம்.


லக்கினம் : கன்னி
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 1ம் பாதம்

1,3ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிக்கல்கள், உடல் மனம் சார்ந்த இன்னல்கள், தெளிவில்லாத முடிவுகள், மனோ பயம், வீரியம் குறையும் தன்மை, தானாகவே இன்னல்களை தேடிக்கொள்ளும் நிலை, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, வீண் கற்பனைகள், திட்டமிடுதல்கள் யாவும் செயல் வடிவம் பெற இயலாத நிலை, கற்பனையில் ஜீவிக்கும் தன்மை, ஜாதகரால் மற்றவர்களும், மற்றவர்களால் ஜாதகருக்கும் இன்னல்கள் ஏற்படும் நிலை, மன உறுதி, தன்னம்பிக்கை குறையும் தன்மை, தனக்கு வரும் நன்மைகளை ஜாதகரே உதறித்தள்ளும் நிலை, நிலையற்ற மனம், அலைபாயும் சிந்தனைகள், நல்லோர் சேர்க்கையை தவிர்க்கும் நிலை, பெரியோர் ஆசியை பெற முடியாமல் தவிக்கும் நிலை, உறுதியற்ற மனநிலை, செய்யும் காரியங்களில் நேர்த்தியை கடைபிடிக்காத தன்மை, சுய கட்டுப்பாடு இழக்கும் நிலை, சிந்தனையும் செயலும் முழு வடிவம் பெற இயலாத சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமை பெற முடியாத சூழ்நிலை, மனதைரியம் இழந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முழு முயற்சி இன்றி பின்வாங்கும் குணம், எதிர்ப்பு திறன் குறைவு, வீரியமிக்க காரியங்களில் ஆர்வம் இன்மை, எதிர்பாராத வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த முடியாமல் வீண் விரையம் செய்யும் நிலை, எதையும் எதிர்கொள்ள வலிமை இன்றி தவிக்கும் நிலை, சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்துவரும் நன்மைகளை முழு அளவில் சுவீகரிக்க இயலாமல் போராடும் தன்மை, எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கும் குணம், லாபம் அதிர்ஷ்டம் இரண்டையும் தவறவிடும் குணம்,சீரிய முயற்சி இன்மை, சுய கட்டுப்பாடு இழத்தல், சபல குணம், எதிலும் ஆர்வம் இன்றி தவிக்கும் நிலை, சரியானவற்றை தவிர்த்து, இன்னல்களை தேடி சென்று அனுபவிக்கும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், கமிஷன் மற்றும் சிறு தொழில் வழியிலான நஷ்டங்கள், வியாபார முடக்கம், சரியான தொழில் தேர்வை செய்வதில் குழப்பம் மற்றும் தாமதம் என்ற வகையில் பெரும் சிரமங்களை ஜாதகருக்கு தர கூடும்.

2,4,6,10,12ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் படிப்பு எழுத்து, கல்வி மற்றும் புத்தக வெளியீடு மூலம் வருவாய் கிட்டும், பேச்சு திறன் மூலம் நல்ல தான்சேர்க்கை உண்டாகும், விளம்பர துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டு, இலக்கியம் மற்றும் ஆய்வு சார்ந்த துறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், ஏஜென்சி துறையில் அதீத வருமானம், கமிஷன் மற்றும் ட்ராவலிங்க ஏஜென்ட் மூலம் அபரிவித லாபம் கிட்டும், தூதுவர், தரகு தொழில், சிறு பிரயாணங்கள் மூலம் லாபம், வாக்கு வன்மையின் மூலம் வருமானம் பெரும் வல்லமை ஜாதகருக்கு உண்டு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகள் கிட்டும், சேமிக்கும் வழக்கம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்.

4ம் மனநிலை பாதிப்பு மற்றும் நியாபக சக்தி குறையும், வீடு  வாகனம் அடிக்கடி பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு, கால்நடை மற்றும் பயணங்கள் மூலம் பணவிரயம் உண்டாகும், காண்ட்ராக்ட் தொழிலில் தொல்லைகள், சுக போக வாழ்க்கைக்கு தடைகள், குணம் சார்ந்த பாதிப்பு, போட்டி மனப்பான்மை, குறுகிய எண்ணங்களால் பெரிய சாதனைகளை தவறவிடும் தன்மை, அமைதியின்மை, மனசஞ்சலம், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் பெருத்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வது சகல நலன்களையும் தரும், குணம் சார்ந்த நடவடிக்கைகளில் மிகுந்த நேர்மையை கடைபிடிப்பது ஜாதகருக்கு நன்மையை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி காண்டராக்ட் தொழில் வழியில் திடீர் லாபம், குறுகிய காலத்தில் ஜீவன மேன்மையை பெரும் தன்மை, உடல் நலம் சார்ந்த இன்னல்கள், வயிறு மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்புகள், எதிரிகள் மூலம் லாபம் அடையும் தன்மை, எழுத்து மற்றும் சுய சிந்தனை மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், எவரிடமும் ஜாதகர் பகைமை பாராட்டாமல் இருப்பதே சகல சௌபாக்கியங்களையும் தரும், மற்றவர் பணம் ஜாதகருக்கு உதவி புரியும், கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதால் நன்மையையும், யோகமும் உண்டாகும், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் சிறப்பான விருத்தி உண்டாகும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கமிஷன் அடிப்படையில் செய்யும் எந்த தொழிலும் அபரிவித வெற்றியை வாரி வழங்கும், ஏஜென்சி, கான்ராக்ட், மற்றும் தரகு தொழில் மூலம் ஜாதகர் மிகப்பெரிய தான சேர்க்கையை பெறுவார், அந்நிய நபரால் ஜாதகருக்கு அபரிவித தொழில் முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு தொழில் ஸ்தான அமைப்பில் இருந்து பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து மற்றும் பேச்சு திறன் மூலம் ஜாதகர் அபரிவித சுபயோகங்களை தன்னிறைவாக பெறுவார், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நீர் ராசியான விருச்சகம் என்பதால், உணவு பொருட்கள், பால் பொருட்கள், காய்கறி, நீர், மளிகை, அரிசி, தானியம், விவசாய விளைபொருட்கள், மீன், திரவ பொருட்கள், ஆயில், பெட்ரோல், எண்ணெய்வித்துக்கள், இறக்குமதி பொருட்கள், ஆயுள் காப்பீட்டு துறை, மருத்துவ உபகரணம், மருந்து பொருட்கள், வண்டிவாகனம், தானியம், கால்நடை தீவனம், மாவு பொருட்கள், மாவு மில், அரசி மில் என ஜாதகருக்கு விருப்பமான தொழிலை தேர்வு செய்து பரிபூர்ண வெற்றி காணலாம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாகவும், உபய காற்று ராசியில் அமைவதால் ஜாதகர் சிறு வியாபாரம் மூலம் குறுகிய காலத்தில் பெரும் தனசேர்க்கையை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், வியாபாரம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றியை தரும், நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகன ஏஜென்சி எடுப்பது ஜாதகருக்கு பரிபூர்ண பொருளாதார முன்னேற்றத்தை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் இருந்துவரும் பொருட்கள் மூலம் அபரிவித லாபங்களை பெறுவார், முதலீடுகள் வழியிலான அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக உண்டு, நீண்டகால முதலீடுகள் ஜாதகருக்கு பெருத்த லாபத்தை தரும், வேற்று மதத்தினர், வேற்று சமூகத்தினர் மூலம் ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும், இல்லற வாழ்க்கையில் நிறைவும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமும் கிட்டும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஜாதகருக்கு பெரும் சுபயோகங்களை தரும், நிம்மதியான உறக்கம் ஜாதகருக்கு சிறப்பான வழிமுறைகளை தரும், கனவுகளில் ஜாதகரின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும், பெரும் சொத்துக்கள், பெரும் பொருள் வரவுகளை ஜாதகர் முழு அளவில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5,7ம் வீடுகள் ஜாதகருக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் ஆகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 100% விகித சுபயோகங்களை சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும் குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரியில் யோகம், புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்போதும் மகிழ்ச்சி சந்தோசம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், எதிர்பாரத அதிர்ஷ்ட வாழ்க்கை, எந்த ஓர் சூழ்நிலையிலும் ஜாதகர் போராடி வெற்றி பெரும் அமைப்பு, குலதெய்வ அனுக்கிரகத்தால் அனைத்தையும் வெற்றி கொள்ளும் வல்லமை, பொது வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சி, குழந்தை, மனைவி குடும்பத்தாருடன் இணக்கமான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் வாழும் தன்மை, நிறைந்த அறிவாற்றல், சமயோசித புத்திசாலித்தனம், எதையும் ஏற்றுக்கொள்ளும் வல்லமை, ஜாதகருக்கு வரும் பிரச்சனைகளே, யோக வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து தரும் நிலை என ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெறுவார், ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசு அமையும், அதன் பிறகான வளர்ச்சி ஜாதகரே எதிர்பார்த்திராத வண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் யோகம் மிக்க வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், சக்தி மிகுந்த கூட்டு தொழில் விருத்தி, வெளிநாடுகளில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகத்தால் கிடைக்கும் நல்ல நட்புறவுகள், எதையும் சமாளிக்கும் வல்லமை, வாழ்க்கை துணையுடனான இணக்கம் மற்றும் இணைபிரியாத யோக வாழ்க்கை, எதிர்பால் இன கவர்ச்சி, பொது வாழ்க்கையில் முன்னேற்றம், அரசியலில் வெற்றி, வியாபாரம் மற்றும் சுய தொழில் செய்வதால் வரும் அதீத லாபங்கள், பொதுமக்களிடம் நன்மதிப்பு, உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம், ஜாதகரின் கூட்டு முயற்சி யாவும் பலிதம் பெரும் அமைப்பு, திருமணத்திற்கு பிறகான அசுர வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு வியாபார நிமித்தமாக சென்று வரும் யோகம் என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

8,11ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை தரும் என்ற போதிலும், ஆரோக்கிய குறைவை உண்டாக்கும், அடிக்கடி மருத்துவ செலவினங்கள் ஏற்படும், விபத்து, சிகிச்சை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும் வாழ்க்கை துணைக்காக நிறைய செலவினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்கள், துயரம், வியாதியால் இன்னலுறும் தன்மை, திருப்தி இல்லாதா மனநிலை என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து திருப்தி இல்லாத மனம், அதீத மனக்கவலைகள், வீண் மனபயம், பெரியவர்கள், அரசு, கூட்டாளிகள் மூலம் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை, இறுதியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தவற விடுதல், தகப்பனார் வழியிலான சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் பலாபலன்களை தரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் வெகுவாக குறையும், சிறு ஏமாற்றத்தையும் தாங்க இயலாத மனநிலையை தரும், முற்போக்கு சிந்தனையில் நாட்டமின்றி, பிற்போக்குத்தனமான விஷயங்களில் அதீத ஈடுபாட்டை தரும், எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறனை வழங்கும், பயனவிருப்பம் மற்றும் அதன் வழியிலான லாபங்கள் உண்டாகும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், புனிதமிக்க திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத விருப்பத்தை தரும், ஜாதகருக்கு வரும் இன்னல்கள் யாவும், பித்ருக்கள் ஆசியினால் வெகுவாக குறையும், சுய ஜாதகத்தில் உள்ள சுப யோகங்களை சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும், சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்வதற்கான வழிமுறைகள் ஜாதகருக்கு தேடி வரும், அரசியல் லாபம், பெரியமனிதர்கள் ஆதரவு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் போன்றவை ஜாதகருக்கு சுபயோக சுப வாழ்க்கையை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக  வழியிலான நன்மை தீமைகளை பற்றிய தெளிவான விபரங்களை அறிந்தோம், இனி ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை சுவீகரித்து எப்படி? வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை  தவிர்ப்பது எப்படி ? என்பதனை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜாதகருக்கு சுக்கிரன், செவ்வாய்,ராகு,சனி மற்றும் கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதால், மேற்கண்ட கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், இதை சுய ஜாதக ரீதியாக உணர்ந்து ஜாதகர் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு சூரியன்,புதன் மற்றும் குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலன் நடைமுறைக்கு வருவதால், திடீர் இழப்பை தவிர்க்கும் விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, மேலும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசி என்பதால், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், சத்தியத்தை மதித்து நடப்பது, அனைவரிடமும் சுமூகமாக நடந்துகொள்ளுதல், அவசரப்பட்டு எந்த ஓர் காரியத்திலும் இறங்காமல், நன்கு சிந்தனை செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, பொறுமையும், திட்டமிடுதலும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பை தரும்.

ஜாதகத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் ஒரே கிரகம் சந்திரன் மட்டுமே எனவே ஜாதகர் சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் லக்கினம் மற்றும் வீரிய ஸ்தான வழியிலான பலன்களை மிக சிறப்பாக கையாள்வது அவசியமாகிறது, குறிப்பாக சந்திரனின் அந்தர காலம் ஜாதகருக்கு சில கடுமையான சிரமங்களை தரக்கூடும் என்பதால், உடல் நலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை, ஆன்மீக பெரியோர் ஆசி, இறை வழிபாடு, முறையான பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, ஜாதகர் தன்னைப்பற்றி ஓர் தெளிவான கண்ணோட்டத்தில் சந்திரன் திசையினை எதிர்கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையினை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக