புதன், 20 ஜூன், 2018

சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது ?


கேள்வி : 

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது? இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்குமா ? 5ல் கேது புத்திர தோஷத்தை தருமா ? நடை பெரும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் யோகமிக்கதாக அமையுமா ?

பதில் :

தங்களது ஜாதக வலிமை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் முன் நாம் சில விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொள்வது நல்லது, ஒருவரது சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் உற்பட பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, மேலும் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமங்கள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராகிறார், இனி தங்களது ஜாதக வலிமை பற்றியும், தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 3ம் பாதம்

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ?

பொதுவாக சுய தொழில் செய்வது அல்லது கூட்டு தொழில் செய்வது இரண்டும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அமைவதே சகல நிலைகளில் இருந்தும் சிறப்புகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், தொழில் நிர்ணயம் என்பது ஜீவன ஸ்தானம் எனும் ஒரு பாவகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குவதல்ல, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் அடிப்படையிலேயே தொழில் மற்றும் அதுசார்ந்த வெற்றிகள்   ஒருவருக்கு சிறப்பாக அமையும், கேந்திர பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான கவுரவம் அந்தஸ்து சுயமரியாதையை உறுதிப்படுத்தும், கோண பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான அறிவார்ந்த செயல்கள், புத்திசாலித்தனம், தொழில் நுணுக்கம் மற்றும் இறை அருளின் கருணையை உறுதிப்படுத்தும், மறைவு ஸ்தானங்கள் ஜாதகருக்கான அளவில்லா பொருளாதர வெற்றியையும், நிம்மதி மற்றும் நிதான செயற்பாடுகளை உறுதிப்படுத்தும், தொழில் வெற்றிகளை 100% விகிதம் பெற ஓர் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும் அதி அவசியமானதாக உள்ளது, இந்த அமைப்பை பெரும் ஜாதகரே மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்கும் வல்லமையை பெறுகின்றார்.

 தங்களது ஜாதகத்தில் அப்படிப்பட்ட  ஓர் வலிமையான நிலை இருப்பது வரவேற்கத்தக்கது, தாங்களும் ஓர் தலைசிறந்த தொழில் அதிபராக விளங்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே ! மேலும் தங்களது சுய ஜாதகத்தில் பாவக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானதாக அமைந்து இருப்பது வரவேற்கத்தக்கது, அதுபற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சுய ஜாதகத்தில் வலிமையான பாவக தொடர்புகள் :

 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து ஆரோக்கியமான உடல், தெளிவான மனம், கூட்டாளியால் யோகம், நன்பர்கள் வழியிலான நன்மைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், எதிர்பாலின சேர்க்கை பொதுமக்கள் ஆதரவு, அரசு பதவி, சிறந்த நிர்வாக திறமை, விரோதிகள் மறைந்து நன்மை உண்டாகுதல் என்ற வகையிலும், 7ம் பாவக  வழியில் இருந்து சக்தி நிறைந்த கூட்டு தொழில் அல்லது கூட்டாளி, யோகம் நிறைந்த வாழ்க்கை துணை, பொதுமக்கள் ஆதரவு, செய்தொழில் வழியில் பிரபல்ய யோகம், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி என்ற அமைப்பில் நன்மைகளை வாரி வழங்கும்.

2,3,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், கனிம பொருள் சார்ந்த வியாபாரத்தில் வெற்றி, தாய் வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், இனிமையான பேச்சு திறன், வாக்கு வன்மை, உறுதிமிக்க செயல்பாடுகள் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையில் செல்வாக்கு, பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் வெற்றி, போக்குவரத்து தொழில் வழியில் லாபம், முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றி பெரும் தன்மை, விவசாயம் மூலம் வருமானம், அரசியல்வாதிகள் மூலம் லாபம் பெரும் தன்மை, தைரியம், தன்னம்பிக்கை, சுய ஆளுமை திறன், வெற்றி பெரும் வல்லமை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, எதிர்பாராத திடீர்இழப்பு, மருத்துவ செலவினங்கள், குழப்பம், வியாதி, மனஇறுக்கம் எல்லாவகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகனம் சார்ந்த விஷயங்களில்  முதலீடு செய்யும் யோகமும், அதன் வழியிலான முன்னேற்றங்களும், விவசாயம் அல்லது விவசாய உபகரணம் சார்ந்த பொருட்கள் வழியிலான அதிர்ஷ்டம் மற்றும்  லாபம் உண்டாகும்.

10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 10ம் பாவக வழியில் இருந்து உத்தியோக வெற்றி, சுய தொழில் விருத்தி, வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் அபரிவித அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி, கம்பீரம் தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் செல்வச்செழிப்பு என்றவகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அரசு மற்றும் தனியார் துறை வழியிலான அதிஷ்டம், தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கை, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணம் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் நிலை, தெளிவான மனநிலை, சிறந்த மனவலிமை, அதிபுத்திசாலித்தனம், பல்துறை ஆய்வுத்திறன், அமைதியான சூழ்நிலையை விரும்புதல், எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதான விருப்பம், சுய ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம், சமாதான முறையில் வெற்றி, மதசம்பதமான யோக வாழ்க்கை, பட்டய கல்வியில் தேர்ச்சியை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த பண்புகள் அடிப்படையிலே அமைந்து இருக்கும், ஒழுக்கம் மற்றும் பண்பு நிறைந்த மனம், அனைவரையும் தம்மைப்போல் கருதும் சமதர்மத்தை போற்றும் தன்மையை பெற்றவராக திகழ்வார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு விபத்து, மருத்துவ செலவினங்களை தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை இழக்கும் தன்மை, இளமையில் போராட்டம், நஷ்டம், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், அதிக வேலைப்பளு என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் 4,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, மேலும் பெரும்பாலான வீடுகள் தொடர்பு பெரும் 4,7,10ம் பாவகங்கள் அனைத்தும் சர இயக்க ராசிகளான மேஷம் கடகம் மற்றும் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது பரிபூர்ண நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது தங்களை மிகசிறந்த வியாபாரியாக பிரகாசிக்க செய்யும், துலாம் சர காற்று ராசி என்பதால் தங்களின் தொழில் சார்ந்த அறிவு திறன் மற்றும் நுண்ணறிவு மிகசிறந்த எதிர்காலத்தை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் வலிமையாக  உள்ளதால் சுய தொழில்  செய்வதே சிறப்பான நன்மைகளை தரும், பரிபூர்ண வெற்றியும் உண்டாகும், கூட்டு தொழில் வழியிலான வெற்றி மேலும் சிறப்பானதாகவே அமையும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் விருப்பம் சார்ந்த முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள்.

திருமணம் தங்களுக்கு சூரியன் திசை புதன் புத்தி காலத்தில் நடைபெறும், சூரியன் திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும், திருமணத்திற்க்கு பிறகான வாழ்க்கை யோகமிக்கதாக அமையும்.

5ல் அமர்ந்த கேது தாம் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்ப்பதால், 5ம் பாவகம் 100% விகித வலிமையுடன் இருக்கின்றது, எனவே தங்களுக்கு நல்ல புத்திர பாக்கியமும், ஆண் வாரிசும் அமையும்.

சூரியன் திசை தங்களுக்கு  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் சந்திரன் திசை 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான சுபயோகங்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது.

குறிப்பு :

தங்களது சுய ஜாதக வலிமை மிகவும் அபரிவிதமானது, அதை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை வெகு சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள், மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்க " ஜோதிடதீபம் " தங்களுக்கு தனது சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. respected sir, pls kindly guide me. i was born in 30.03.1991. time 09.30 PM PLACE ARIYALUR.When i will get good job pls give me a path in ur free time. thank u sir.my watsup num 9159337588.

    பதிலளிநீக்கு