செவ்வாய், 12 ஜூன், 2018

ஜாதக ஆலோசனை : பெண்கள் ஜாதகத்தில் சுபயோகங்கள் தரும் நன்மைகள் !

  

 ஓர் வலிமை மிக்க பெண்ணின் ஜாதகம் தன்னையும், தன்னை சார்ந்து ஜீவிப்பவர்களையும் வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் வல்லமை கொண்டது, மேலும் வலிமை பெரும் பாவக வழியில் இருந்து, பெற்றோர்,சகோதர சகோதரிகள், உறவுகள், வாழ்க்கை துணை, குழந்தைகள், வாழ்க்கை துணை வழியிலான உறவுகள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் யோகம் பெற்றவர்கள், எனவே நமக்கு வலிமை மிக்க ஜாதகம் பெற்ற தாய்,வாழ்க்கை துணை,குழந்தை கிடைப்பது நாம் செய்த புண்ணியம் மற்றும் பாக்கியத்தின் வலிமையே ஆகும், கீழ்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மகரம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று அமைவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நாற்காலியில் நான்கு கால்களும் வலிமை பெற்று இருப்பதற்கு நிகரான யோக பலன்களை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று நான்கு பாவகங்களும் முறையே, மகரம்,மேஷம்,கடகம் மற்றும் துலாம் ராசிகளில் வியாபித்து நிற்பது ஜாதகி ஸ்திரமான வலிமை பெற்ற யோக ஜாதகம் பெற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது மேலும் மேற்கண்ட ராசிகள் யாவும் சர இயக்கத்தில் இயங்குவது யோக பலன்களை 100% விகிதம் சுவீகரித்து வழங்கும் என்பதை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் வாரி வழங்கும், மேலும் லக்கினம் சர மண் தத்துவத்தில் 18 பாகைகளும், ஸ்திர காற்று தத்துவத்தில் 15 பாகைகளையும் கொண்டு இருப்பது ஆரோக்கியமான திரேகத்தையும், சிறந்த அறிவு திறனையும் வழங்கும், மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிக்கதாகவும், அதன் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுபவராகவும் இயங்க செய்யும், நிறைந்த நல்லறிவு, நேர்மையான குணம், செய்யும் காரியங்களில் சத்தியத்தை கடைபிடித்தல், அனைத்திலும் வெற்றி வாய்ப்பு, மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும் தன்மை, எதிர்ப்பவர்களை வென்று நலம் பெரும் தன்மை, மேன்மையான நோக்கங்கள், எதையும் சமாளிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,7,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு நல்ல குணாதிசயத்தை தரும், இளகிய மனமும், பரோஉபாகர மனநிலை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், மக்கள் தொடர்புள்ள துறைகளில் ஜாதகியை விருத்தி பெற செய்யும், மருத்துவம், ஹீலிங், மற்றும் மனநலம் சார்ந்த துறைகளில் ஜாதகிக்கு முழு வெற்றி கிட்டும், சமாதான குணம், பெருந்தன்மையான நடவடிக்கை மூலம் அனைவரையும் கவரும் தன்மையை தரும், மிக பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கான வல்லமை பெற்றவர், வீடு நிலம், இடம் ஆகியவற்றின் மூலம் நல்ல செல்வசேர்க்கை உண்டாகும், வண்டி வாகன யோகம்  உண்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை தரும், உறவுகள் வழியிலான ஆதரவு, தந்தைக்கு யோகம், தந்தையுடன் பாசமாக இருத்தல், தந்தையின் உறவுகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை அமையும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாக அமையும், நல்ல வாழ்க்கை துணை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமைவார், கணவர் வழியிலான நன்மைகளை வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான யோகம் பெற்றவர், பொதுமக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்புகளை தரும், செய்யும் செயல்களில் யாவிலும் பொதுநலம் பிரதிபலிக்கும், நேர்மறையான எண்ணங்கள் ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் யோகம் உண்டாகும், ஜாதகியின் வாழ்க்கை மிகவும் பிரகாசம் மிக்கதாக அமையும், வியாபாரம் தொழில், கூட்டு தொழில், கூட்டு முயற்சிகள் யாவும் ஜாதகிக்கு நல்லதோர் வெற்றிகளை தொடர்ந்து வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை மிக இனிமையா அமையும், வாழ்க்கை துணையுடனான புரிதல்கள் இல்லற வாழ்க்கையையும், குடும்பத்திலும் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகி வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன மேன்மையை 100% விகிதம் பெறுவார், நல்ல வியாபர நுணுக்கங்களை தரும், பொதுமக்கள் ஆதரவு மற்றும் மரியாதை முழு அளவில் கிடைக்கும், சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்த்தை வெகு விரைவில் பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகியை தேடி வரும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகிக்கு செய்யும் தொழில் வழியிலான விருத்தி வெகு விரைவில் சீராகவும் அமையும், பல தொழில் புரியும் யோகம் உண்டு, தனது தாய்க்கு மிகுந்த யோகத்தை தருபவர், தாய் வழியிலான ஆதரவும், ஆசியையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நிறைய சொத்து சுக சேர்க்கையை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் உண்டாகும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் ஜாதகிக்கு தேடிவரும், செய்யும் தொழிலில்  வழியில் நேர்மையும், பெரும் புகழும் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

9ம் வீடு ஜாதகிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும், மிதமிஞ்சிய அறிவு திறன் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தகு முன்னேற்றங்களை நல்கும், தெய்வீக அனுக்கிரகமும், பித்துருக்கள் ஆசியும் ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையும், தெளிவான சிந்தனை அறிவு, எதையும் சமாளிக்கும் சமயோசித அறிவு திறன், ஆன்மீக ஈடுபாடு ஆகியவை ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகியின் கல்வி அறிவு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், ஆராய்ச்சி கல்வி, பட்டய படிப்பில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார், சுபயோகங்களை  பெறுவதில் தடையேதும் இருக்காது.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, தாமத திருமணம், வருமானம் சார்ந்த இன்னல்கள், வாக்கின் வழியிலான இன்னல்கள், வீண் விரையம், வருமானம் சில நேரங்களில் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையைத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபத்தை தரும், அறிய கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் நல்கும், விட்டுக்கொடுக்கும் தன்மை, அயலார் மூலம் நல்ல லாபம், நீண்ட பயணம், சட்டம் மூலம் அதீத நன்மைகள், புதிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்து நடத்தல் என்ற வகையில் நன்மைகளை தரும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், விடாமுயற்சி ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவுகள், வீண் விரையம் மருத்துவ செலவினங்கள், மன அழுத்தம், மனபோராட்டம், அனைவராலும் தொல்லைகள், துன்பங்கள், எதிர்பாராத இழப்புகள், நிம்மதி குறைவு, நல்ல உறக்கம் இன்மை, தாம்பத்தியம் சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட  ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும், பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், திருப்தி இல்லாத சூழ்நிலையில் அதீத மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டத்தை தரக்கூடும், இழப்புகளை தவிர்க்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது, வாழ்க்கை துணை வழியிலான சிறு சிறு விரயம் தவிர்க்க இயலாது.

5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கியத்தில் தாமதத்தையும், கற்ற கல்விக்கு உண்டான வருமானம் அற்ற நிலையையும் தரும், குல தெய்வ சாபம் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரக்கூடும், சுபயோக நிகழ்வுகள் யாவும் ஜாதகிக்கு பெரும் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதால், குல தெய்வ வழிபாடு முறையாக செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

6ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் தொந்தரவு அதிக அளவில் ஜாதகிக்கு இன்னல்களை தரக்கூடும், வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள் கடுமையாக பாதிக்க கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் ஜாதகி மிக இலகுவாக நடந்துகொள்ளது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தனது சொத்துக்கள் மீது கடன் வாங்குவது மிகுந்த பாதிப்பை தரும், மற்றவருக்கு கடன் கொடுப்பது ஜாதகிக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து, அதிர்ஷ்டம் சார்ந்த பின்னடைவுகள் ஜாதகிக்கு பெரும் பாதிப்பை தரும், விரக்தி மனப்பான்மை ஜாதகிக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும், தோல்வியை கண்டவுடன் அதீத மனபயம் சார்ந்த இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், கடின உழைப்பே ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளையும் சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் ( 20/12/2012 முதல் 20/12/2028 வரை )

குரு திசை ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தந்த போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தி ஜாதகிக்கு 1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1ம் பாவக வழியில் இருந்து சிறப்புகளை தருவது, ஜாதகிக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% விகிதம் வாரி வழங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகத்தால், ஜாதகிக்கு உயர் கல்வி, திருமணம், புதிய வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடு யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும் என்பதால்,  நடைபெறும் புதன் புத்தி ஜாதகிக்கு சிறப்பான யோக வாழ்ககையே வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது மட்டுமே சற்று கடுமையான இன்னல்களை தரும், விரைய ஸ்தான தொடர்பை பெரும் பாவக வழியில் இருந்து பெரிய அளவில் இன்னல்கள் நடைமுறைக்கு வாராது என்பதால், ஜாதகி 5,6,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக