வெள்ளி, 8 ஜூன், 2018

சுபயோக ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !

 

 சுய ஜாதகம் வலிமை பெறுவது ஒவ்வொருவருக்கும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும், இறை அருளின் கருணையினால் வெகு சில ஜாதகங்களே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமை பெற்று அமைகிறது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெரும் நன்மைகளையும் யோக வாழ்க்கையையும் இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

 ஜாதகருக்கு ரிஷப லக்கினம், லக்கினம் மற்றும் சில வீடுகளும் சுபத்துவம் பெற்ற பாவகங்களுடனே சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் தரும் சுபயோகங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்,

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,2,6,8ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, ஒழுக்கம் சுய கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், சிறந்த மனப்பக்குவம், அனைத்தையும் அனுசரித்து செல்லும் குணம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், பல்துறை நுண்ணறிவு, பொறுமை சகிப்பு தன்மை, திட்டமிட்டு செயல்படும் யோகம், நீண்ட ஆயுள், மனதில் தெளிவு, எதிரிகளை வெல்லும் வல்லமை, இனிமையான பேச்சு திறன், கடவுள் ஈடுபாடு ஆன்மீக வெற்றி மனமும் உடலும் ஒருங்கே சிறப்பாக செயல்படும் தன்மை, வெற்றி, புகழ், கீர்த்தி மற்றும் சுய அந்தஸ்துடன் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மையை தரும்.

2ம் பாவக வழியில் இருந்து இனிமையான வாக்குவன்மை, பேச்சின் மூலம் காரியம் சாதிக்கும் யோகம், வார்த்தைகளில் வெளிப்படும் கம்பீரம் மற்றும் தைரியம், உறுதியான நிலைப்பாடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடன் நல்லுறவு, பொருளாதார ரீதியான வெற்றி வாய்ப்புகள், தன்னிறைவான வசதி வாய்ப்புகள், கைநிறைவான வருமானம், தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வல்லமை, சுய தொழில் வழியிலான வருமானம், வியாபாரம் மூலம் வரும் அபரிவித தனசேர்க்கை, பேச்சில் உறுதி, அனைவரையும் மதிக்கும் குணம், வலிமை மிக்க பதவிகள், வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவு மற்றும் தன சேர்க்கை, வாக்கு வன்மையை தொழில் முதலீடாக பெரும் யோகம், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிபெறும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் சற்று பாதிப்பை தரக்கூடும், செய்யும் தொழில் மற்றும் பணியில் நேர்மையை தரும், எடுத்த காரியங்களில் அபரிவிதமான வெற்றியை பெறுவார், அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை ஜாதகருக்கு நல்ல வெற்றிகளை வழங்கும், கடன் சார்ந்த இன்னல்கள் ஜாதகருக்கு சற்று சிரமங்களை தரக்கூடும், பொது காரியங்களில் ஈடுபாடு, சமூக அக்கறை அதிகரிக்கும், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் வல்லமை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் உண்டு, தொல்லைகள் யாவும் ஜாதகருக்கு புது உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மிக எளிதாக அனைத்தையும்  சாதிக்கும் வல்லமை, இன்சூரன்ஸ் துறையில் அபரிவித லாபத்தை வாரி வழங்கும், விபத்து மருத்துவ சிகிசையை தவிர்க்க இயலாது, அறுவை சிகிக்சை மூலம் உடல் நலம் பெரும் வாய்ப்பு உண்டு, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத கவனம் ஜாதகருக்கு தேவை என்பதை மனதில் கொள்வது அவசியமாகிறது.

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் கனவுகள் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும், அதிகப்படியான வண்டி வாகன யோகமும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், விவசாயம் மற்றும் விவசாய உபகரணம் மூலம் பெருத்த லாபம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம் சார்ந்த லாபம், தர்மத்தை நம்புதல் கடைபிடித்தல், கணிதம் மற்றும் சாஸ்திரத்தில் தேர்ச்சி, திருமணத்திற்கு பிறகான அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார்.

5ம் பவாக வழியில் இருந்து ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டாகும், முதலீடுகள் மற்றும் வியாபாரம் சார்ந்த லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும், தனது சமயோசித புத்திசாலித்தனத்தால் ஜாதகர் பன்மடங்கு வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெறுவார், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தரும், எப்பொழுதும் மகிழ்ச்சி, மனைவி மற்றும் குடும்பத்துடன் சுமுக போக்கு, குழந்தைகள் வழியிலான அதிர்ஷ்டம், கற்ற கல்வி  வழியிலான யோகம், வருமுன் காக்கும் வல்லமை, தெய்வீக அனுக்கிரகம்  மற்றும் குலதெய்வ ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை  தரும், நல்ல ஆண் வாரிசு அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகம் பெற்ற திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்று வாழ்க்கையை மிக  யோகமிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், முன்னோர்களின் புண்ணிய பதிவுகள் வழியில் இருந்து ஜாதகர் சிறப்பான சுபயோகங்களை பெறுவார், யோகமிக்க புத்திரபேறுகளை அடையும் நிலையம், அவர்கள் வழியிலான யோக பலன்களையும் ஜாதகர் தங்கு தடையின்றி  பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், எவ்வளவு பெரிய சிரமங்கள் ஏற்பட்டாலும் அதில் இருந்து குறுகிய காலத்தில் வெளிப்படும் தன்மையை தரும், ஜாதகரின் அறிவாற்றல் பெருமைப்படத்தக்க விஷயங்களில் ஈடுபட்டு அதன்வழியிலான நன்மைகளை  பரிபூர்ணமாக அனுபவிக்க வைக்கும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டத்தை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், ஜாதகரின் மேன்மையான நல்ல குணம் அனைவரிடத்திலும் நற்ப்பெயரை பெற்று தரும், யோகமிக்க எதிர்காலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க நன்மைகளை தரும், மனநிம்மதியும், ஒருமைப்பாடும் ஜாதகருக்கு வியக்கத்தக்க வெற்றி வாய்ப்புகளை நல்கும், பல தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து  சேரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும், புதிய முயற்சிகள் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும், நம்பிக்கை மிகுந்த மனவலிமை ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமையும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகனம், சொத்து சுகம், இடம் நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிக பெரிய சொத்துக்களை வாங்கும் வல்லமையை தரும், ஜாதகரின் நல்ல குணம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை தரும், போதிய வசதி வாய்ப்புகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்படும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் மேற்கொள்வது சகல சௌபாக்கியத்தையும், பெரும் செல்வ சேர்க்கையையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் வளர்ச்சி வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் மிகவும் அபரிவிதமானதாக அமையும், சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை ஜாதகர் பெறுவது அவசியமாகிறது.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முழு ஆதரவை தரும்,  திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும், இணக்கமான சூழ்நிலையை வாழ்க்கை துணையுடன் பெறுவது ஜாதகருக்கு மென்மேலும் யோக வாழ்க்கையை நல்கும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, அன்னியோனிய இல்லற வாழ்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு  நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகளில் யோகம், குடியுரிமை பெரும் வாய்ப்பு, பிரபல்ய யோகம், பொது வாழ்க்கையில் வெற்றி, மக்கள் ஆதரவு, வியாபாரம் சுய தொழில் செய்வதன் மூலம் அதீத லாபம் என்ற வகையில் சிறப்புகளை தரும், கலைத்துறையில் ஈடுபாடு, கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

10,12ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, தொழில், வணிகம், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவித முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் மிக்க பதவிகள் தேடி வரும், சுய முன்னேற்றம் சார்ந்த  நடவடிக்கைகள் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்,  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் அமைவது வரவேற்கத்தக்கது, ஜாதகரின் அறிவு திறன் சார்ந்த ஜீவன அமைப்புகளில் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தொழில் வழியில் எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சுய தொழில் செய்வதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட கால தொழில் முதலீடுகள் அபரிவித வளர்ச்சியை தரும், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை ஜாதகர் முதலீடுகள் வழியில் இருந்தும், தொழில் வழியில் இருந்தும் பெறுவார், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், போதும் என்ற மனமும், திருப்தியான மனநிறைவும் ஜாதகருக்கு அயன சயன ஸ்தான வழியில் இருந்து முழுமையாக கிடைக்கும், மனதில் உள்ள ஆசைகள் மற்றும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும், திடீர் மாற்றங்கள் ஜாதகருக்கு திகைப்பை தந்தபோதிலும், அதுவே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருப்பது அவசியமாகிறது.

எதிர் வரும் குரு திசை தரும் பலன்கள் ( 19/07/2018 முதல் 19/07/2034 )

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எதிர்வரும் குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மிகுந்த நன்மைகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை நல்கும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பது போராட்ட வாழ்க்கை தரும், ஆனால் எதிர்வரும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகமில்லை, ஜாதகர் 3,5,9,11ம் பாவக வழியிலான பலன்களை சுவீகரிக்க ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி, தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு