ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நட்சத்திரங்கள் பாதிப்பை தருமா ?


 கேள்வி :

பெண்ணின் நட்சத்திரம் மூலம் ஆயின் மாமனாருக்கும், ஆயில்மானால் மாமியாருக்கும், கேட்டை ஆனால் மூத்த மைத்துனருக்கும், விசாகம் ஆனால் இளைய மைத்துனருக்கும், ஆகாது என்பது உண்மையா?



பதில் : 
           27 நட்சத்திரங்களில் ( அபிஜித் உடன் 28 ) எந்த ஒரு நட்சத்திரமும் பாதிப்பை தருவது இல்லை, 

ஆகாது என்றால்  ஜாதகிக்கும, சம்பந்தப்பட்ட நபருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுமே தவிர, இதனால் பெருளாதாரம், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் ,முன்னேற்றம் போன்ற அமைப்புகளில் இருந்து பதிப்பு வருவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பு இல்லை. 

இதனால் பல இளம் பெண்களின் திருமண வாழ்கை அமைவதற்கு தடையாக பெற்றோரே இருப்பது கலிகாலத்தின் கொடுமை, இதனால் பதிக்கப்பட்ட ஜாதக அமைப்பை கொண்ட பெண்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த பதிவை இங்கு சமர்ப்பிக்கிறேன், அவர்களின் கண்ணீர் இனி மாற வேண்டும் என்பது எனது ஆவல். 

மேலே சொல்லப்பட்டவை போல் ,ஆகாத அமைப்பு அனைத்தும் ஒரு காலத்தில் தமிழர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம், இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்து வர வாய்ப்பில்லை.

 மேலும் திருமணதிற்கு பிறகு 80 சதவிகித தம்பதியினர் தனி குடித்தன அமைப்புக்கு சென்று விடுகின்றனர், இதனால் அவர் அவர் வாழ்க்கையை சுயமாக வாழ தெரிந்து கொண்டுள்ளனர், இதனால் தமக்கு  வரும் பிரச்சனைகளை அவர்களே சமாளித்துகொல்கின்றனர், இதனால் பெற்றோர்கள் பயம் கொள்ள தேவையில்லை,  

இனியாவது இந்த பெற்றோர்கள் தங்களது மகனுக்கு மூலம்,ஆயில்யம் ,கேட்டை,விசாகம் நட்சத்திரம் கொண்ட பெண்களை திருமணம் செய்து வைத்து நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்க வேண்டும்.

 மேலும் ஒரு ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 சதவிகிதம் மட்டுமே பலன் தரும், 

திருமண வாழ்க்கைக்கு இருவரது ஜாதக அமைப்புகளை ஆராய்ந்து குடும்பம் எனும் இரண்டாம் வீடு, புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு , களத்திரம் எனும் எழாம் வீடு , ஆயுள் எனும் எட்டாம் வீடு , ஜீவனம் எனும் பத்தாம் வீடு முறையே நான்றாக இருக்கும் பொழுது, திருமணம் செய்து வைத்தால் தம்பதியர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழை அடி வாழையாக சிறப்பாக இருப்பார்கள் என்பதே உண்மை .

மேற்க்கண்ட வீடுகள் வலுவாக இருந்தால் ரச்சு பொருத்தம் கூட தேவை இல்லை என்பதே நான் கண்ட உண்மை, இதை பல தம்பதிகளின் ஜாதக அமைப்பு மற்றும் அவர்களது வெற்றிகரமான திருமண வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன் ,

  நட்சத்திர பொருத்தம் 10 /10 இருந்தும் பல தம்பதிகளின் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததையும்  பார்த்திருக்கிறேன் ,

மேலும் சில ஜோதிடர்கள் சொல்லுவது போல், செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷம், களத்திர தோஷம்,  புதிதாக கண்டு பிடித்துள்ள திசா சந்திப்பு, இதுவெல்லாம் சுத்தமான மூட நப்பிக்கையே தவிர வேறு  ஒன்றும் இல்லை.
செவ்வாய் , ராகு கேது , களத்திரம்  திசா சந்திப்பு போன்றவைகள் ஒரு ஜாதகருக்கு, நன்மையை தருகிறதா தீமையை தருகிறதா, என்று தெரியாத ஜோதிடர்கள் வேண்டுமானால் இவ்வாறு செல்லி மக்களை குழப்பம் பெற வைக்கலாம், ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் யாரும் இந்தமாதிரி சொல்ல வாய்ப்பில்லை. 

மனித வழக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது அதை மேலும் சிறப்பாக வாழ தெரிந்து கொண்டு சகல நலமுடனும் அனைத்து வளமுடன் ,

 வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

1 கருத்து:

  1. நல்ல ஓர் பதிவு... நல்ல விளக்கம்




    //நட்சத்திர பொருத்தம் 10 /10 இருந்தும் பல தம்பதிகளின் திருமணவாழ்க்கை தோல்வி அடைந்ததையும் பார்த்திருக்கிறேன் ,//
    தோல்விக்கு கரணம் எதனால் ??? பொருத்தம் இருந்தும் தோல்வியா ???


    //மேலும் சில ஜோதிடர்கள் சொல்லுவது போல், செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷம், களத்திர தோஷம், புதிதாக கண்டு
    பிடித்துள்ள திசா சந்திப்பு, இதுவெல்லாம் சுத்தமான மூட நப்பிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை.//

    ஒ அப்படியா ???.. ராகு கேது தோஷம் மற்றும் வலுவிலைந்தால் எதிர்மறை பலன் இல்லையா >???

    பதிலளிநீக்கு