நந்தன ஆண்டு மகர சங்கராந்தி பலன் !
இந்த வருடம் மகர சங்கராந்தி கரஜி நாமகரணம் கொண்டு கும்பலக்கினம், கும்பராசியில் மேஷம் செவ்வாய் நவாம்சையில் - செவ்வாய் ஓரையில் ஆண் யானை வாகனம் துவங்கிஷி என்கிற பெயரில் உத்திரம் நட்சத்திரம் 2 ம் பாதம் மகர ராசியில் ஸ்ரீ சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார் .
எனவே மழை மிகும் , உணவு பொருட்கள் விலை குறையும் , விமான விபத்து அதிகம் நெருப்பினால் ஆபத்து அதிகம் வெளிநாடு முதலீடு அதிகரிக்கும், போலி ஆன்மீக வாதிகளுக்கு தண்டனை அரசு வழங்கும் ஏழை எளியவர் வாழ்க்கை மேலோங்கும் , கருப்பு பணம் வைத்திருப்போர்கள் அரசு கெடு பிடிக்கு ஆளாவார்கள். கால்நடைகளுக்கு பாதிப்பு , சைவ உணவு விடுதிகள் அதிகரிக்கும் அசைவ வகைகளுக்கு திடீர் நஷ்டம் , பணபுழக்கம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் .
பழைய கோவில் திருப்பணிகள் எங்கும் நடக்கும் தமிழகத்தில் பழைய கோவில்களில் புதையல்கள் கிடைக்கும் குறிப்பாக தலை நகரில் திடீர் நெருப்பால் பாதிப்பு , கணினி பொருட்களுக்கு விற்பனை அதிகரிக்கும் , வண்டி வாகனம் அதிகரிக்கும் செல்லவ செழிப்பு அதிகரிக்கும், வியாபாரம் நல்ல வருவாய் தரும் , நிலங்கள் விலை குறையும் , தங்கம் விலை குறைந்து ஏறும், எங்கும் சுப செய்திகள் ஒலிக்கும் .
கவனத்தில் கொள்க
ஆண்யானை மீது சங்கராந்தி வந்துள்ளதால்
ஆண்கள் அனைவரும், தமது சக்திக்கு ஏற்றார்ப்போல் தமது ஒவ்வொரு சகோதிரிகளுக்கு சொர்ணதானம் ( தங்கம் ) வழங்க வேண்டும். இல்லை எனில் அவர்களுக்கு , பொருளாதார நெருக்கடி , உடல் நிலை பாதிப்பு செலவுகள் அதிகம் ஆகும். சொர்ணதானம் செய்யும் பொழுது அனைவருது வாழ்க்கையும் செழிப்புறும் குறிப்பாக ஆண்களது வாழ்க்கை சிறக்கும்.
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக