புதன், 15 பிப்ரவரி, 2012

ஜோதிடத்தில் ஒரு ஜாதகருக்கு துல்லியமாக பலன் சொல்ல !



ஜோதிடத்தில் ஒரு ஜாதகருக்கு துல்லியமாக பலன் சொல்ல தேவையானவை கணிதம் என்ன என்று இந்த பதிவில் காண்போம் .

1 )  ஜாதகருடைய சரியான பிறந்த தேதி , மாதம் , வருடம் , மற்றும் சரியான பிறந்த நேரம் ( மணி , நிமிடம் , வினாடி ). ஜாதகர் பிறந்த இடம் துல்லியமாக தேவை.

2 )  இந்த குறிப்புகளை கொண்டு ஜோதிடர் சரியான கணிதம் செய்து ஜாதகருக்கு துல்லியமான ஜாதகம் எடுத்து கொள்ள வேண்டும் , மேலும் ஜாதகர் தவறான நேரத்தை கொடுத்துவிட வாய்ப்பு உள்ளது, ஜோதிடர் கவனமாக கணிதம் செய்து ஜாதகரின் சரியான பிறந்த நேரத்தை கண்டு பலன் சொல்லுவது முக்கியம். உண்மையாக ஜோதிடனுக்கு சாதகனின் பிறந்த சரியான நேரத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

3 ) ஜாதகனின் லக்கினம் முதற்கொண்டு 12 பாவங்களை நன்கு ஆராய்ந்து, ஒவ்வொரு பாவங்களின் தன்மையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

4 ) இதற்க்கு பிறகு ஜாதகர் கடந்து வந்த பாதையில் எந்த கிரகத்தின் திசை புத்தி நடைபெற்றது , அது எந்த பாவங்களுடன் சம்பந்தம் பெற்று நன்மையான மற்றும் தீமையான பலன்களை வழங்கியது, என்று கணிதம் செய்து பலன்களை சொல்லுவது முக்கியம் இதில் ஜோதிடனுக்கு குழப்பமே  வரக்கூடாது, 

5 ) மேலும் தற்பொழுது நடந்து கொண்டுள்ள திசை ஜாதகருக்கு எந்த திசை எந்த புத்தி , அது எந்த வீடுகளுடன் சம்பந்தம் பெறுகிறது, அந்த வீடுகளின் நிலை என்ன ? அவை நன்மையான பலன்களை செய்கிறதா அல்லது தீமையான பலன்களை செய்கிறதா என கணிதம் செய்வது முக்கியம்.

6 )  சமபந்தப்பட்ட திசை புத்திகள் ஜாதகருக்கு சர, ஸ்திர , உபய அமைப்பா என காண்பது பலன் சொல்லுவதற்கு உரு துணை புரியும், மேலும் அந்த பாவங்கள் எந்தராசி அமைப்பை பெறுகின்றது , அதாவது நெருப்பு ராசியா , நில ராசியா , காற்று ராசியா , நீர் ராசியா என காண்பது ஜாதகரின் தற்பொழுது நடக்கும் வீடுகளின் பலன்களை சொல்லுவதற்கு உதவி புரியும் .

7 ) சில ஜோதிட புத்தகங்களில் காண்பது போல் நல்ல கிரகங்களின் திசைகள் அனைத்தும் நன்மை செய்யும், என்றும் தீய கிரகங்களின் திசை அனைத்தும் தீமை செய்யும், என்று பலன் சொல்வது முற்றிலும் தவறானது, 

8  )எந்த ஒரு கிரகத்தின் திசையும், சுயஜாதாக அமைப்பின் படி எந்த வீடுகளின் பலன் நடக்கிறது, என்று கண்டு அந்த வீடுகள் நன்மையான பலன்களை தருகிறத ,அல்லது தீமையான பலன் தருகிறத என்று கண்டுணர்ந்து, சொல்லுவது நலம் தரும்.

9 ) இந்த அமைப்பில் பலன் சொல்லும் பொழுது ,  கோட்சாரத்தில் சம்பந்தப்பட்ட வீடுகளுடன் எந்த கிரகம் சம்பந்தம் பெறுகிறது அதனால் நன்மையா தீமையா என காண்பது மீக முக்கியம். 

இந்த அமைப்பை கடை பிடித்து ஜாதகருக்கு பலன் சொல்லும் பொழுது நிச்சயம் பலன் துல்லியமாக அமையும் என்பதில் , சந்தேகமே இல்லை .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

2 கருத்துகள்:

  1. சபாஷ் போட வைத்த பதிவு.
    மேலும் தொடர்ந்து பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. எனக்கு தற்பெருமை மற்றும் தைரியம் கூடுகிறது.... உங்களை சந்தித்த பின் ????

    உங்களிடம் வருவதற்கு முன் எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது... நீங்கள் அதை நேரம் செலவிட்டு உங்களை சந்திபதற்கு முன் எனக்கு விளக்கி கூறியதற்கு நன்றி(வேறு யாராவதாக இருந்தால் எல்லா விடயமும் சொன்ன பிறகு மாப்பிள்ளை நேரில் வரமாட்டான் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இது தான் என்னை உங்களிடம் ஜோதிடம் பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது )

    உங்களின் ஜோதிட முறை அதில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை மேலும் வியப்படைய செய்கிறது

    ஏனென்றால் என்னை விட நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து பரிகாரம் கூறி ,அதையும் முறையாக விபரமாக கூறியது, வேறு யாரிடமும் கண்டதில்லை

    அதே போல் இதுவரை நடந்தது ... தடங்கள் அதற்கான காரணம் என்பதை விளக்கி கூறி அதற்கான பரிகாரத்தை எளிய முறையில் செய்திட வாழ்வில் நான் பெற கூடிய நன்மைகள் பொறுமையாக விலகியது உங்களின் தொழில் பக்தி மற்றும் உங்களை நாடி வருபவர்களிடம் நீங்கள் கூறும் தைரிய வார்த்தைகள் ...........

    எனக்கு தற்பெருமை மற்றும் தைரியம் கூடுகிறது.... உங்களை சந்தித்த பின் ...எப்பொழுதும் நீங்கள் எனக்கு உதவிட இருப்பீர்கள் என்று ...வாழ்வில் தீபம் ஏற்ற ஜோதிட தீபமாக

    நன்றி நன்றி நன்றி

    வேலு
    கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு