ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் . கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார்.
இந்த அமைப்பில் இரு கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100 சதவிகித நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன :
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100 சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் மிகவும் நன்மையே, இவர்களுக்கு எவ்வித தோஷமும் ஏற்ப்பட மற்றும் செயல் பட வாய்ப்பு 100 சதவிகிதம் இல்லவே இல்லை . இது இவர்களது முன்னேற்றத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .
பல ஜோதிடர்கள் ராகு கேது லக்கினத்தில் மற்றும் களத்திர பாவங்களில் அமர்ந்து இருந்தால் போதும் அவை கெடுதல் மட்டுமே செய்யும் என்று தவறான கருத்தை மக்களிடயே புகுத்தி விடுகின்றனர் இதனால், இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள், படும் பாடு திண்டடம் ஆகிவிடுகிறது, இது மாதிரி நுனிப்புல் மேயும் ஜோதிடர்களிடம் , மாட்டிக்கொண்டு சில ஜாதகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் ,
குறிப்பாக 45 வயது ஆனாலும் திருமணம் ஆகாமல் தவிக்கிற தவிப்பு சொல்ல முடியாது, இதில் ஆண் பிள்ளையை பெற்றவர்கள் அமைப்பு பரவாயில்லை , பெண் பிள்ளையை பெற்றவர்கள் நிலை அந்தோ பரிதாபம் .
என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு பெண்ணுக்கு வயது 38 அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை காரணம், எந்த ஜோதிடனோ ஒருவன் இந்த பெண்ணுக்கு கால சர்ப்ப தோஷம் மற்றும் களத்திர தோஷம் இதனால் திருமணம் 38 வயதுக்கு மேல் செய்ய்தால்தான் மாங்கல்யம் நிலைக்கும், அதற்க்கு முன் இந்த பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் நடந்தால் கணவன் விபத்தில் இறந்து விடுவான் என்று கூறியுள்ளான், இதை அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொல்லியிருந்தால் பரவாயில்லை , பெண்பார்க வந்த மணமகன் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறான் இது காட்டு தீபோல் ஊரெல்லாம் பரவி அந்த பெண்ணின் வாழ்க்கையே கெட்டு குட்டிசுவர் ஆகிவிட்டது.
உண்மையில் அந்த பெண்ணின் லக்கினம் கடகம், ராகு கேது லக்கினம் ஏழாம் வீடு முறையே மிகவும் சிறப்பாக அமர்ந்து இருந்தனர், ஜாதகத்தில் எவ்வித தோஷமும் இல்லை ,
சரி அப்படியிருக்க இந்த பெண்ணுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை, என்று பார்த்த பொழுது தான் ஜாதகத்தில் நான்காம் வீடு மற்றும் ஐந்தாம் வீடு ஆகியவை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது, நான்காம் வீடு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பெண்ணின் தகப்பனாரே திருமண தாமதத்திற்கு காரணம் ஆகிவிடுவார், ஜாதகியின் தகப்பனார் வரன் பர்தறேன்றால் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை அதையும் இதையும் குறை சொல்லி, வரும் வரன்கள் அனைத்தையும் தட்டி கழித்து விடுவார், மேலும் ஐந்தாம் வீடு பாதிக்கப்பட்டால் ஜாதகி தனது பூர்விகத்தை விட்டு 100 கிலோ மீட்டர் தள்ளி வந்து குடியிருந்திருந்தால் திருமணம் இளம் வயதில் மிகவும் சிறப்பாக நடந்திருக்கும் . என்பதை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.
சில மாதங்களுக்கு முன் அவர்கள் வெளியூர் சென்று விட்டனர், கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்று அந்த பெண்ணின் தாயார் கடிதம் மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். எல்லாம் இறை அருளின் கருணை .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
நல்ல விளக்கம். சில ஜோதிடர்கள் ராகு கேது என்றால் நன்மை செய்ய மாட்டார்கள் என்ற பொருளில் சொல்கின்றனர். எனக்கும் ஐந்தில் ராகு இருப்பது நல்லதா அல்லது கெடுதலா என்று சிறு குழப்பம் இருந்தது. ஆனால் நீங்கள் ராகுவினால் நான் 100% நன்மை அடைவேன் என்று சொல்லி அதற்கான தெளிவான விளக்கம் சொன்னீர்.நன்றி. நல்ல காலத்திற்காக காத்து கொண்டுஇருக்கிறேன். விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று நம்புகிறேன்
பதிலளிநீக்குஅச்டிவேசன் & டியாக்டிவேசன் ஜோதிடரர்களின் கருத்து
பதிலளிநீக்கு//ஐந்தில் ராகு;எடுத்தவுடன் எதுவும் நடக்காது.ஒண்ணுக்கு பத்து முறை எதையும் முயற்சி பண்ணனும்.கட் அண்ட் ரைட்டா பேசுவாக.முதல் குழந்தை பெண்ணா இருந்தா நல்லது.இரண்டாவது ஆண் வாரிசு உண்டு.ஒரு அபார்சனும் ஏற்பட்டிருக்கும்.செவ்வாய்,ராகு இணைந்து 5 ல் இருந்தால் மந்திரவாதி.பேய்,பிசாசு எல்லாம் சொன்னபடி கேட்குமாம்.வராகி வசியம் பண்ணி வைத்திருப்பர்.குட்டி சாத்தான் சினேகமும் உண்டாம்.5 ஆம் இடத்து அதிபதியும் கெட்டுவிட்டால் குழந்தை இல்லை.ஜோதிடம் படிப்பர்.//
//லக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.//
//11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பா//
//ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .
//
Sir my daughter is born in 18.81984 @4.50 a.m in chennai - alliance is not fixing and though she is greatly qualified, her employment is also not fetching great salary. can you pls. analyse why and what is the reason for the delay in marriage?
பதிலளிநீக்குரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் ஆகிய லக்னங்களுக்கு பலன் சொல்லி விட்டீர்கள் மற்ற லக்னங்களுக்கு என்ன பலன் ஐயா.......?
பதிலளிநீக்குSir,
பதிலளிநீக்குAs told by you in the above article, few days back an Astrologer based at Thiruvarur has suggested to the parent of a bride to reject the proposal of my son who is well placed in life as his horoscope showed Raagu in Lagnam and Kethu in Seventh Place.
Pray God that NO PARENT approach the above Astrolger for matching Horoscopes till he is fully equipped with the basics of the Astrology.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஐயா,
பதிலளிநீக்குஎன் பிறந்த நாள் 01-08-1989 8.15am
சிம்ம லக்னத்தில் புதன், சுக்ரன், செவ்வாய் கேது, சுக்ரன்
4 ல் மாந்தி
5 ல் சனி
7ல் ராகுu
11ல் குரு
12ல் சூரியன் சந்திரன்
பலன் எப்படி இருக்கும்...
I am preparing for Govt exams
மகர லக்னம் ராகு உள்ளது பெண் பிறந்த நேரம் 10.55 pm 18.05.1990 place karaikal தயவு செய்து விளக்கம் கூறவும்
பதிலளிநீக்குஐயா நான் 1997-12-27 மாலை 6:58
பதிலளிநீக்குமிதுன லக்கினம் 3ல் ராகு,
6ல் சந்திரன்,புதன்
7ல் சூரியன்
8ல் குரு செவ்வாய் சுக்கிரன்
9ல் கேது
10ல் சனி
என்னுடைய திருமண வாழ்க்கை
தொழில் என்பன பற்றி அறிந்து கொள்ள முடியுமா? ஐயா
ஐயா வணக்கம் எனக்கு லக்கினத்தல் கேது 7 ல் ராகு சந்திரன் உள்ளது
பதிலளிநீக்குதனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்கினம் திருமணம் ஆகவில்லை வயது 30 என் தந்தை தான் வரன் தேடுகிறார்..
முறையாக ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக
நீக்கு