பறந்து
வரும்
ராகு/கேது பத்தில்
இருந்தால்
ஜாதகர் நன்கு
சம்பாதிப்பார்
இது ஒரு வலை பதிவில் கண்டது அதாவது பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வருமாம் என்ன கொடுமை சார் ?
சுய ஜாதகத்தில் பத்தாம் வீடு ரிஷபம் , துலாம் , தனுசு , மீனமாக வந்து அந்த வீட்டில் ராகு கேது இருப்பின் ஜாதகருக்கு பணம் பறந்து வராது பாய்சன் தான் பறந்து வரும் , மேலும் வளர் பிறை சந்திரனாக ஜாதகத்தில் அமைந்து கடகம் பத்தாம் வீடாக வந்து ராகு கேது இருப்பின் , சூரியனுடன் சேராத ( 14 பாகைக்குள் ) புதனாக சுய ஜாதகத்தில் அமைந்து மிதுனம் அல்லது கன்னி பத்தாம் வீடாக வந்து ராகு கேது இருப்பின் அந்த ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகவும் பரிதாப கரமாக அமைந்துவிடும் மேலும், இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் டவுசர் கிழிந்து டார் டாராக தொங்குவதை எவராலும் தடுக்க இயலாது .
சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்
எவனோ சும்மா இருந்தவன் திண்ணையில் உட்காந்து கொண்டு சொல்லிவிட்டு போன பலமொழில் இதுவும் ஒன்று நான் பார்த்தவரை சித்தரையில் பிறந்தவர்கள் அதிகம் பேர் அரசு துறையில் பணியாற்றுகிறார்கள், மேலும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர் .
குரு
பார்க்க கோடி நன்மை
ஒருவரது ஜாதகத்தில்
குரு இருந்த
இடத்தை விட குரு
பார்த்த இடங்கள்
மிகச் சிறந்த பலன்களை
தரும்
இப்படி பல கட்டு கதைகளையும் , வசன நடையாகவும் சில ஜோதிட மொழிகளை நம்பி வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதிர்கள் நண்பர்களே.
ஜாதக பலன் என்பது சுய ஜாதகத்தி கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றவை எல்லாம் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் என்பதை மனதில் கொள்ளுங்கள் .
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக