கடந்த வாரத்தில் எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு நண்பர் வந்திருந்தார் அவருடைய தோற்றமும் பேச்சும் , பார்க்கும் பொழுது வாழ்க்கையில் ரொம்ப பாதிக்க பட்டது போல் இருந்தது , வந்தவர் அய்யா எனது நண்பர் தங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வந்திருந்தார்.
அவர் பெயர் மூர்த்தி (தலை நகருக்கு சென்று கிரகங்களை அக்டிவேசன் செய்து தன்னிடம் இருந்த இரண்டு லாரிகளையும் டீ அக்டிவேசன் செய்தவர் ) மற்றும் எனது நெருங்கிய நண்பர் தங்களின் ஆலோசனையின் படி தற்பொழுது செய்துவரும் தொழில் படிப்படியான முன்னேற்றத்தை பெற்று வருகிறார் , நானும் அவர் செய்யும் தொழிலை வேறு இடத்தில் செய்து வருகின்றேன்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ஜோதிடர் என்னை குடும்பத்துடன் காசி ராமேஸ்வரம் சென்று வாருங்கள் , உங்கள் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இரண்டும் கெட்டுவிட்டது என்று சொன்னதை கேட்டு நம்பி ! குடும்பத்துடன் காசி சென்று வந்தோம் வந்ததிலிருந்து, எனது தொழில் நீட்டி நெடுங்கடையாக படுத்து விட்டது , மேலும் அவர் பேச்சை கேட்டு கோமேதகமும் , வைடுரியமும் வலது இடது கையில் போட்டு இருக்கிறேன் . குடும்பத்தில் நிம்மதிஎன்பதே இல்லை எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் என்று கேட்டார் .
சரி தொழில் எப்படி பாதிக்க பட்டது என்றேன் , காசி ராமேஸ்வரம் சென்றிருந்த போது இவர் நம்பிக்கையாக தனது நிறுவனத்தை நிர்வாகிக்க விட்டுருந்த மேலாளரும் , அவரது நண்பரும் சேர்ந்து அவரது நிறுவனத்திற்கு வந்த வாய்ப்புக்ளை எல்லாம் வசப்படுத்தி , இவரது நிறுவனத்திற்கு பக்கத்திலேயே ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து நன்றாக பயன் படுத்திகொண்டு முன்னேற்றம் பெற வழி வகுத்துகொண்டனர் என்றார் , மேலும் இவர் வந்தவுடன் அந்த மேலாளர் சில காரணங்களை சொல்லி வேலையை விட்டு விலகி விட்டார் என்றும் வருத்தத்துடன் கூறினார் .
பிறகு அவரது ஜாதகத்தை வாங்கி கணிதம் செய்த பொழுது ஜோதிடர் சொன்னது போல் சூரியனும் , சந்திரனும் எவ்வித பாதிப்பான பலனையும் தரவில்லை , மேலும் ஜாதகருக்கு வயது 28 இந்த வயதில் ஜாதகர் தொழிலை கவனிக்காமல் காசி ராமேஸ்வரம் என்று போனால் தொழில் நீட்டி நெடுங்கடையாக படுக்காமல் , 100 சதவிகித வளர்ச்சியினையா பெரும் ?
யாராவது திண்ணையில் உட்கந்துகொண்டு பொழுதை போக்க எதையாவது உளறினால், அதை அப்படியே நம்பிக்கொண்டு செய்தால் விளைவு இதுதான் .
திண்ணையில் உட்காந்து கொண்டு சொல்கிறவனுக்கு உன்னை பற்றி என்ன கவலை , அவனுக்கு வருவது வந்தால் போதும் என்று அவன் சொல்லுவதை சொல்லத்தான் செய்வான், உனக்கு எங்கு போயிற்று புத்தி என்று கேட்டதற்கு ஜாதகர் தலையை கவிழ்ந்து கொண்டார் , பிறகு ஜோதிட ரீதியான சரியான பலன்களை சொல்லி தொழில் வளர்ச்சி பெற, செய்ய வேண்டியவைகளையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் .
எனக்கு தெரிந்து காசி ராமேஸ்வரம் எல்லாம் வாழ்க்கையின் இறுதி காலங்களில் வாழ்ந்து முடித்தவர்கள் செல்ல கூடிய இடங்கள், செய்த பாவங்களையும் வினைகளையும் தீர்த்து கொண்டு இறை நிலையை அடைய செல்வார்கள் என்பது ஐதிகம் , ஆனால் இந்த தம்பிக்கு வயது 28 இவன் என்ன வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பான் என்று இதை சொன்ன அந்த ஜோதிடனுக்கே வெளிச்சம் .
மேலும் ரத்தினங்களில் கோமேதகமும் , வைடுரியமும் மனிதர்கள் அணிந்துகொள்ள ஏற்றது இல்லை என்பதை கூடவா அந்த ஜோதிடனுக்கு தெரியாது , இதை கோவில்களுக்கு தானம் செய்வதே சிறந்தது என்று இரத்தின சாஸ்திரம் சொல்வதை அந்த ஜோதிடன் ஒருவேளை படிக்க வில்லை போலும் .
கோமேதகம் அணிவதால் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டும் , வைடுரியம் அணிதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியாது . சரி எப்படியோ போகட்டும் நமக்கு என்ன ? அவன் செய்யும் கர்ம வினை அவனே அனுபவிக்க வேண்டும்.
வயதுக்கு ஏற்றார் போல் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு கடமை உண்டு சிறுவயதில் நன்றாக படிப்பது , வாலிபத்தில் நல்ல வேலை வாய்ப்பை செய்து வருமானம் செய்து தனது குடும்பத்தையும் , பெற்றோர்களையும் காப்பாற்றுவது .
நல்ல குழந்தைகளை பெற்று நல்ல விதமாக வளர்ப்பது , தம்மை நாடி வரும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ,தம்மால் இயன்ற உதவியை செய்வது .
தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து அதன் வளர்ச்சிக்காக பாடு படுவது இவையே ஆயிரம் கோவில் சென்று வழிபாடு செய்வதற்கு சமம் கடமையே கடவுள் . தனது கடமைகளில் இருந்து தவருபவனுக்கு எந்த கடவுளும் கருணை தந்தாக சான்று இல்லை.
காசி வழிபாட்டின் தத்துவம் :
காசி தீர்த்தம் என்பது நெருப்பு தத்துவம் ஆகும் . நெருப்பு மட்டும் தானும் புனிதமாகவும் தன்னிடம் சேரும் அனைத்தையும் சுத்தம் செய்து புனிதமாக்கும் தன்மை கொண்டது , மற்ற நதிகள் அனைத்தும் நீரின் தன்மை கொண்டவை மலை நீரையும் , ஊற்று நீரையும் அடிப்படையாக கொண்டவை .
கங்கை மட்டும் பனிமலையில் உருவாகி வரும் தன்மையால் நெருப்பு
( ஐஸ் கட்டியை கையில் வைத்து பாருங்கள் கைகளை சுடும் )தத்துவம் கொண்டது .
எனவே இதில் குளிப்பவர்கள் புனித தன்மையை பெறுகிறார்கள் , மேலும் அவர்கள் வினை பதிவை செய்யாமல் இறுதியில் இறை நிலையை பெறுகிறார்கள், அதற்க்கு ஏற்ற வயது ஒவ்வொருவரின் இறுதி காலங்களே.
சிறுவயதில் காசி சென்று வந்தால் மீண்டும் வினை பதிவினை தொடரும் சூழ்நிலை ஏற்ப்படும் .
காசி சென்று வழிபாடு செய்தால் கிடைக்கும் பலனை நாம் தமிழகத்தில் உள்ள ஒரு சிறப்பு மிகுந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நிச்சயம் பெற முடியும் ,
அந்த திருத்தலம் திருவெண்காடு இங்கு சென்று அக்கினி , சூரிய , சந்திர தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசனம் செய்தால் , காசிக்கு சென்று வந்த பலன் நிச்சயம் கிடைக்கும் , கையில் வெண்ணையை வைத்துகொண்டு நாம் ஏன் நெய்க்கு அலைய வேண்டும்.
தமிழகத்தில் இல்லாத திருத்தளங்களா என்ன ? நாங்கள் இருக்கு பவானியில் உலகின் மிக சிறந்த திருத்தலங்களில் ஒன்றான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது இதன் அருமை , இங்கு வந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும் .
ஜோதிடன் வர்ஷன்
9443355696 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக