கேள்வி :
ஒரு ஜாதகத்தை எடுத்ததும் பெரிதாக பார்க்கப்படுவது தோஷம்.சில குரிப்பிட்ட
கிரகங்கள் குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்தால் தோஷம் என புராதன ஜோதிட
நூல்கள் கூறுகின்றன.அந்த வகையில் ஒரு கிரகம் ஒரு பாவத்தில் அமர்ந்து
தோஷத்தை ஏற்படுத்தினால் உதாரணமாக குடும்ப/தன/வாக்கு ஸ்தானத்தில்
சனியோ,ராகு,கேது,செவ்வாயோ அமர்ந்தால் தோஷம் என்பது புராதன ஜோதிட நூல்படி
விதி.அந்தவகையில் எந்த கிரகம் அமர்ந்தததோ அந்த கிரகத்தின் காரகம்
பாதிக்கப்படுமா?அல்லது அந்த பாவம் அதாவது தன/குடும்ப/வாக்கு என்ற
அமைப்புகள் பாதிக்கப்படுமா?
அல்லது சுருக்கமாக கேட்கிறேன்.
உதாரணமாக களத்திர ஸ்தானம் எனில் அந்த இடத்திற்கு உரிய கிரகத்தின் பலன் கிடைக்குமா?
அந்த இடத்தில் அமர்ந்த கிரகத்தின் பலன் கிடைக்குமா?
அந்த இடத்தை பார்க்கும் கிரகத்தின் பலன் கிடைக்குமா?
ஒரு பாவத்தின் பலனை எந்த கிரகம் முடிவு செய்கிறது?அமர்ந்த
கிரகமா?இடத்திற்கு உரிய கிரகமா?இடத்தை பார்க்கும் கிரகமா?அல்லது சாரம்
பெற்ற கிரகமா?இதை எப்படி தெரிந்துகொள்வது?
உதாரணத்துடன் விளக்கி ஒரு பதிவு எழுதினால் எங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்.
நன்றிகளுடன்
ஜோதிட பித்தன்
பதில் :
இதற்க்கு ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பதில் சொல்கிறேன் கிழ்கண்ட ஜாதகத்தில் உள்ள அமைப்பை சற்றே கவனியுங்கள் .
பொதுவாக ஜாதக பார்க்கும் ஜோதிடர்கள் இந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உண்டு லக்கனத்தில் ராகு , ஏழாம் வீட்டில் கேது என்று பதில் சொல்வார்கள் .
ஆனால் எபிமெரிஸ் கணிதப்படி ஜாதக நிலையை கணிதம் செய்யும் பொழுது , ராகு, கேது இரு கிரகங்களும் , மிதுனத்தில் உள்ள 12 ம் வீட்டில் ராகுவும் , தனுசுவில் உள்ள 6 ம் வீட்டில் கேதுவும் அமர்ந்து
( ஜாதகருக்கு லக்கினம் ஆரம்பிப்பது மிதுனத்தில் 89 .05 .46 பாகை முதல் ரிஷபத்தில் 115 . 42 . 12 வரை )
( ராகு இருப்பது மிதுனத்தில் உள்ள 12 ம் வீடு 78 . 46 . 48 பாகையில் )
அந்த வீடுகளின் பலனை முழுவதுமாக தான் ஏற்று கொண்டு பலனை தந்து கொண்டு இருக்கின்றனர் , இவர்கள் இருவரும் சம்பந்த பட்ட வீடுகளுக்கு நன்மை செய்கின்றணர அல்லது தீமை செய்கின்றணர என்று கணிதம் செய்வதே ஜோதிடத்தில் திறமை .
இதில் மிதுனத்தில் உள்ள ராகு 12 ம் வீட்டுக்கு 100 சதவிகித நன்மையை மட்டுமே ( 12 ம் பாவத்திற்கு உண்டான பலனை தானே ஏற்றுக்கொண்டு ) சுய ஜாதகத்தில் செய்து கொண்டு இருக்கின்றார் ஆனால் தனுசு 6 ம் வீட்டில் அமர்ந்த கேது 6 ம் வீட்டுக்கு 100 சதவிகித தீமையை மட்டுமே
( 6 ம் பாவத்திற்கு உண்டான பலனை தானே ஏற்றுக்கொண்டு ) செய்துகொண்டு இருக்கிறார் , இதில் மற்ற கிரகங்களை பற்றி நாம் கவனத்தில் கொள்ள தேவை இல்லை .
ஒரு ஜாதகர் எந்த லக்கினம் ஆனாலும் லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ அமர்வது அந்த லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையே செய்யும், அல்லது அமரும் பாவகத்தின் பலனை முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டு நன்மையோ தீமையோ சரியாக செய்யும்.
மேலும் ஒரு ஜாதகத்தில் பலனை தெரிந்து கொள்வதற்கு ஜாதகங்களில் உள்ள பாவகங்களின் நிலை எப்படி உள்ளது என்றும் , தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம், சூட்சமம் , ஆகியன எந்த பாவக பலனை நடத்துகிறது என்று தெரிந்தாலே போதும் , மேலும் அந்த பவகங்களுடன் தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் எவ்வித பலனை தருகின்றது என்பதை கவனித்தால் மட்டுமே போதும் ஜாதக பலனை துல்லியமாக சொல்லிவிட முடியும் .
எடுத்து காட்டாக மேலே காணப்படும் ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசை 7 ம் வீட்டு பலனை நடத்துகிறது. நாம் ஜாதக பலனை சொல்லும் பொழுது இந்த 7 ம் வீட்டுடன் தற்பொழுது கோட்சார ரீதியாக சமபந்தம் பெரும் கிரகம் நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்று கணிதம் செய்தால் மட்டும் போதும் , ஏனெனில் ஜாதகருக்கு 2014 ஆண்டு வரை நடக்கும் செவ்வாய் திசை 7 ம் வீட்டு பலனை மட்டுமே நடத்தும் . மற்ற வீடுகளின் பலன் நடக்காது .
ஆனால் மற்ற ஜோதிடர்கள் சந்திர ராசி ரீதியாக சனி பெயர்ச்சி என்றும் , குரு பெயர்ச்சி என்றும் சொல்லி , தானும் குழம்பி , ஜாதகரையும் குழப்பிவிடுவார்கள் . மேலும் ஜோதிடருக்கு நடக்கும் செவ்வாய் திசை என்ன பலனை செய்கிறது என்று தெரியாமல், பழைய புத்தகங்களில் எழுதி உள்ள பொது பலனை சொல்லி தப்பித்துகொள்ளும் தன்மை ஏற்ப்படும் .
இந்த ஜாதக ரீதியாக தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசை களத்திர வழியில் இருந்து 200 சதவிகதம் கெடுதலான பலனையே ஜாதகருக்கு வழங்கி கொண்டு இருக்கிறது , மேலும் உபய லக்கினத்திற்கு 7 ம் வீடு பாதக ஸ்தானம் ஆகவே 200 சதவிகதம் கெடுதலான பலனையேதரும். சம்பந்த பட்ட ராசி நெருப்பு தத்துவமாக இருப்பதால் , ஜாதகர் முன் பின் யோசிக்காமல் தானே தனக்கு கெடுதலை செய்து கொள்வார் , சுய கட்டுப்பாடு இருக்காது , சுய சிந்தனை வேலை செய்யாது .
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக