சனி, 21 ஏப்ரல், 2012

ஏழரை சனி, ஜென்ம சனி




கேள்வி :
வணக்கம், 
ஜோதிடத்தின்மீது நம்பிக்கை உள்ள எவருமே ராசிபலன் பார்க்காமல்
இருக்கமாட்டார்கள்
.ஆனால் ஜோதிட வல்லுனர்களோ கோசார ரீதியாக கூறப்படும்
ராசி
பலன்கள்,குரு,சனி,ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் எல்லாமே 10%
பலித்தாலே
பெரியவிஷயம் என்கின்றனர்.மேலும் தசா புக்தி யின் உட்பிரிவான
அந்தரம்
அதன் உட்பிரிவான சூட்சுமத்தின் படியே அந்த ஜாதகரின் அன்றாட செயல்
அமையும்
என்கின்றனர்.இது சரியா?இதுபற்றிய தங்களின் விளக்கத்தை
உதாரணத்துடன்
எதிர்பார்க்கிறேன்.

பதில் : 
ஜாதகம் என்பது ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கே வினாடிகள் என்ற அமைப்பில் மாறுதலாக அமையும் தன்மை 
கொண்டது , இதில் கோட்சார ரீதியாக அனைவருக்கும் பொதுவாக பலன் எழுதுவது என்பது முற்றிலும் ஏற்றுகொள்ள இயலாதவை, ஜோதிடர்கள்  தன்னை விளம்பரம் செய்துகொள்ள வேண்டுமானால் பயனுள்ளதாக 
இருக்கலாம் .

மேலும் சுய ஜாதக அமைப்பை கொண்டே கோட்சார ரீதியான பலனை கணிதம் செய்வது துல்லியமாகவும் , சரியானதாகவும் இருக்கும்.


கேள்வி :

இது சரி எனில் அஷ்டம,ஏழரை சனி,ஜென்ம குரு,சந்திராஷ்டமம் போன்றவற்றிற்கு
மனிதன் பயப்பட தேவையில்லையா? அல்லது

பதில் : 

 பயப்படுவதால் மட்டும் பலன் நன்மையாகவா நடந்து விடும் நிச்சயம் இல்லை.


இந்த ஜாதக அமைப்பில். 2018 ஆண்டுவரை நடக்கும் குருதிசை 3 ,6 ,9 ,12 வீடுகள் 12  ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்துகிறது. எனவே இந்த ஜாதகர் 2018 ஆண்டுவரை 12 ம் வீட்டுக்குண்டான பலனை மட்டுமே அனுபவிப்பார். மேலும் கோட்சார ரீதியாக இந்த வீட்டுடன் தொடர்பு பெரும் கிரகம் கோட்சார ரீதியாக இந்த வீட்டை பார்வை செய்யும் கிரகம் மட்டுமே சம்பந்தபட்ட வீட்டுக்கு நன்மையோ தீமையோ செய்யும் , மேலும் ஜாதகர் துலா ராசி எனவே ஏழரை சனி அமைப்பால், ஜாதகர் பாதிக்க படுவார் என்று பலன் சொல்வது முற்றிலும் தவறான பலனை சொல்லும். 

சுய ஜாதக அமைப்பில் தற்பொழுது கோட்சார ரீதியாக உள்ள சனி பகவான் துலாத்தில் இருக்கிறார், நடக்கும் குரு திசை 12  ம் வீட்டின் பலனை மட்டுமே செய்கிறது, அந்த 12  ம் வீட்டிற்கு சனி பகவானின் பார்வையும் இல்லை எனவே ஏழரை சனியால் பாதிப்பு சிறிதளவேனும் ஜாதகருக்கு நடக்க வாய்ப்பே இல்லை.

 மேலும் மற்ற ஜோதிடர்கள் இந்த ஜாதகத்தை பார்த்து விட்டால் ஏழரை சனியால் ஏற்ப்படும் துன்பம் அனைத்தையும் சொல்லி, ஜாதகம் பார்க்க வந்தவரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவார்கள் . ஜாதகம் பார்க்க வந்தவர் தன்னிடம் இருந்த கொஞ்ச நாசம் மன உறுதியையும் குழைத்து விடுவார்கள். 

ஒரு வேலை இந்த ஜாதகத்தில் துலாம் ராசியின் ஐந்தாம் வீட்டுக்கு உண்டான பலன் நடக்குமாயின் ஜாதகர் ஏழரை சனி பற்றி கவலை கொள்ள வேண்டும். அப்படி நடக்கும் ஏழரை சனி நன்மையை செய்தால் நிச்சயம் நல்ல பலன் நடக்கும் , தீமையை செய்தால் மட்டுமே கெடுதல் நடக்கும். அதை தெளிவாக கண்டு பிடிப்பதே ஜோதிடனின் கடமை .   

1.
சுய ஜாதக அமைப்பில் சனி எங்கே எப்படி இருந்தால் அவரை ஏழரை சனி,அஷ்டம
சனி
பாதிக்கும்?
 

சனி எங்கு இருந்தாலும் சுய ஜாதகத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வீடுகளுடன் நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் தொடர்பு பெற்றால் மட்டுமே , அல்லது சனிபகவானின் அந்த வீடுகளுடன் சம்பந்தம் பெற்றால் மட்டுமே அதன் பாதிப்பு அதற்கேற்றவாறு  நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும் .

2.
சுய ஜாதக அமைப்பில் குரு எங்கே எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் அவரை
ஜென்ம
,அஷ்டம குரு பாதிக்கும்?

 நடக்கும் திசையுடன் சம்பந்தம் பெற்ற வீடுகளுக்கு கோட்சார ரீதியாக குரு பகவான் வரும் பொழுது மட்டுமே நன்மையே தீமையோ பலனை தவறாமல் வழங்கும்.
 இதில்  ஜென்ம , அஷ்டம குரு என்ற பாகுபாடு இல்லை ஒருவேளை சம்பந்தபட்ட வீடுகளுடன் கோட்சார குரூ சம்பந்தம் பெறவில்லை என்றால் அதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை .
சந்திர ராசிக்கு கோட்சார கிரகங்களை சம்பந்தம் செய்து பலனை சொல்லுவது 100 சதவிகிதம் தவறான அணுகு முறை , நடைமுறை வாழ்க்கையில் சரியாக வர வாய்ப்பில்லை இது முடியை கட்டி மலையை இழுக்கும் அமைப்புக்கு ஒப்பானது . 

 3. சுய ஜாதக அமைப்பில் சந்திரன் எங்கே எப்படிப்பட்ட நிலையில் இருந்தால்
அவரை சந்திராஷ்டமம் பாதிக்கும்?

சந்திராஷ்டமம் என்பது சந்திர ராசிக்கு 8 ல் கோட்சார சந்திரன் வரும்பொழுது சொல்லப்படும் பலன் ஆகும் , சந்திர ராசிக்கு 8 வீடு இலக்கான ரீதியாக நடக்கும் திசையுடன் சம்பந்தம் பெற்றால் மட்டுமே அதற்க்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை தரும் . சந்திராஷ்டமம் என்பதும் முற்றிலும் தவறான கணித பலனே .

4.
அந்தரத்தின் உட்பிரிவான சூட்சுமம்.  கோசாரபடி அன்றைய கிரக நிலை
இவற்றில்
எதற்கு வலிமை அதிகம்?எதன்படி அந்த ஜாதகருக்கு பலன் நடக்கும்?

 சூட்சமம் நடத்தும் விடுகளுடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்களையும் கணிதம் செய்து இரண்டையும் இணைத்த அமைப்பில்  நடக்கும் பலன் வழுமையானது .

இதற்கு
சற்று விரிவாக உதாரணத்துடன் பதில் அளித்தால் என்போன்ற ஜோதிட
ஆர்வலர்களுக்கு
பயன் உள்ளதாக அமையும்.

நன்றிகளுடன்
,
By,
ஜோதிட
பித்தன்

பதில் திருப்தியாக இருக்கும் என்று நம்புகிறேன் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக