செவ்வாய், 24 ஏப்ரல், 2012

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ




வணக்கம்,
எனது
கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை வழங்கிக்கொண்டிருப்பமைக்கு நன்றி.

கேள்வி :
1.
ஒரு பாவம் கெட்டுவிட்டது என்பதற்கும் பாதிக்கப்பட்டது என்பதற்கும் என்ன
வித்யாசம்
?

 பதில் :

ஒருவருக்கு  சுய ஜாதகத்தில் ஒரு பாவத்துக்குண்டான கிரகம் தனது வீட்டுக்கு சுப பலனை பெறாமலும் , அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கிரகங்களும் சம்பந்தம் பெற்ற பாவத்துக்கு நன்மையை செய்யவில்லை என்றால், அந்த பாவகம் 100   சதவிகிதம்  கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்ய முடியும். 

மேலும் இந்த அமைப்பில் பாவகத்துக்கு அதிபதி நன்றாக இருந்து, சம்பந்தம் பெற்ற  பாவத்தை  பார்க்கும் கிரகங்கள்  தீமை செய்தாலும் . பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்து , பாவ அதிபதி மட்டும் தீமை செய்தாலும். அந்த பாவகம் பாதிக்க பட்டுள்ளதாக நிர்ணயம் செய்ய முடியும் . மேலும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது என்று சுய ஜாதகத்தை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் .  


 கேள்வி :
2. பூர்வபுண்ணியத்தில் ராகு இருந்தால் ஏற்படும் தோஷத்திற்கும்,ராகுவோடு
சூரியன்
சேர்ந்து இருக்கும் தோஷத்திற்கும் என்ன வித்யாசம்?இதில் எது
கொடியது
?



பதில் : 

ராகு சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே செய்வார் ஆகவே அவருடன் சேர்ந்த கிரகம், அந்த பாவகத்தை பார்த்த கிரகம் பற்றிய கவலை நமக்கு தேவையே இல்லை அது எந்த கிரகமானாலும், ஒரு ஜாதகத்தில் மிகுந்த வலிமை உடைய கிரகம் ராகுவும் , கேதுவுமே ஆகும் என்பதனை நான் இங்கு நினைவு கூறுகிறேன் . 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பாரே ஆயின் அவருடன் சேரும் சூரியனால் மற்ற கிரகங்களால் பெரிய கெடுதல் எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பு இல்லை, சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மை ராகு கேதுவுக்கு உண்டு . இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஐந்தாம் பாவத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ நன்மை செய்கின்றனர அல்லது தீமை செய்கின்றனர என்பது மட்டுமே .




கேள்வி :
3.
லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?இதை அறிவியல் மற்றும் சாஸ்திர ரீதியாக எப்படி சரிசெய்வது?



பதில் : 

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ, சுய ஜாதகத்தில் லக்கினம் கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு , மேலும் லக்னாதிபதி ஆட்சி, 
உச்சம் , நட்பு , சமம் என்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மை செய்வதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு. 

எடுத்துகாட்டாக : 


சிம்ம லக்கின ஜாதகருக்கு சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் அமர்ந்தாலோ , கும்பத்தில் அல்லது ரிஷபத்தில் பகை பெற்று அமர்ந்தாலோ லக்கினத்திற்கு நன்மையே செய்வார், மேலும் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமருவது லக்கினத்தை தானே 100  சதவிகிதம் கெடுத்து விடுவார், மேஷத்தில் உச்சம் பெற்று அமருவது பாதிப்பையே செய்வார்.

  ஒருவேளை சிம்மத்தில் ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்தால், லக்கினாதிபதி எங்கு இருந்தாலும் அவரை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை ஏனெனில் லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் ராகுவோ அல்லது  கேதுவோ மட்டுமே செய்வார் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக ! 

லக்கினம் எந்த கிரகத்தால் பாதிக்க பாதிக்க படுகிறதோ அந்த கிரகத்தின் மீது தவம் இயற்றலாம், அந்த கிரகத்திற்கு உண்டான உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் நல்லுறவை பேணலாம் . அந்த கிரகத்திற்கு உண்டான ரத்தினங்களை சுத்தி செய்து பயன் படுத்தி உயிர்கலப்பு பெறலாம், இந்த அமைப்பின் மூலம் ஜாதகர் 100  சதவிகித  நன்மை பெற முடியும் .

 கேள்வி :
லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ,6,8,12ம் வீட்டின் தொடர்பை பெற்றிருந்தாலோ என்ன
மாதிரியான பலன் ஏற்படும்?அதை சரிசெய்வது எப்படி?

நன்றிகளுடன்.

By
ஜோதிட பித்தன்

பதில் :
 லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு இல்லை , ஒரு வேலை
6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால் வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு , அப்படி பாதிக்க பட்டாலும் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் லக்கினம் 100  சதவிகிதம் வலுப்பெறும் .


ஜோதிடன் வர்ஷன்
9443355696 

11 கருத்துகள்:

  1. அண்ணா,
    லக்கினம் பற்றிய பதிவு அருமை.

    ///சிம்மத்தில் ஆட்சி பெற்று அமருவது லக்கினத்தை தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார், மேஷத்தில் உச்சம் பெற்று அமருவது பாதிப்பையே செய்வார்.///

    நான் சிம்ம லக்கினம் லக்கினாதிபதி மேஷத்தில் உச்சம்.ஆனால் இளவயது வாழ்க்கை மிகவும் கஷ்டஜீவனமாகத் தான் இருந்தது.பல தீமைகள் தான் நடந்தது தந்தையார் 1 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார்(பாவ நாசவிதிப்படி).

    ///லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் ராகுவோ அல்லது கேதுவோ மட்டுமே செய்வார் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக ! ///

    நீங்கள் மேலே சொன்னது போல் லக்கினத்தில் இருந்த கேது எனது சகோதரிக்கு மிகவும் அதிர்ஷ்டமான வாழ்வை அமைத்துத் தந்தார். விருச்சிக லக்கினம்.லக்கினத்தில் கேது,லக்கினாதிபதி நீசம்,உடன் உச்சம் பெற்ற குருவும்.மூல நட்சத்திரம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் முழுமையும் நடந்த கேதுமகாதிசை அளப்பறிய வாழ்வை அமைத்துத் தந்தது.இந்தக்குழந்தை கருவில் வளரத்தொடங்கிய 1 மாதத்திலேயே மிகவும் குடிகாரரான தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி சம்பாதித்த பணத்தையே முதலாக மாற்றத்தொடங்கினார்.பிறந்த பின்பு ராஜயோகம் தான்.பொதுவாக சிறுவயதில் வரும் ராகு,கேது திசை பலவிதமான உடல் உபாதைகள்,கஷ்ட, நஷ்டங்களைத் தான் தரும் என படித்தும் இருக்கிறேன்.சில உறவினர் ஜாதகங்களில் பார்த்தும் இருக்கிறேன்.அதனால் தான் தங்களிடம் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. /* லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ, சுய ஜாதகத்தில் லக்கினம் கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு , மேலும் லக்னாதிபதி ஆட்சி,
    உச்சம் , நட்பு , சமம் என்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மை செய்வதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு.*/

    /*ஒரு வேலை 6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால் வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு*/

    your answers confuses me. please clarify.

    பதிலளிநீக்கு
  3. லக்கினாதிபதி 6 ,8 ,12 ல் மறையும் பொழுது லக்கினத்திற்கு தரும் தீமையான பலன் எவ்வளவு சதவிகிதம் என்பதை பொறுத்து லக்கினம் எவ்வளவு பாதிக்க பட்டு இருக்கிறது, என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும் . மேலும் லக்கினாதிபதி 6 ,8 ,12 ல் மறைந்தாலும் , லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது லக்கினம் 100 சதவிகிதம் வலிமை பெரும் , எனவே இலக்கின அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையை பெறுவார் , இங்கே லக்கினாதிபதி மறைவு பெறுவதை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை நண்பரே !

    ஒரு வேலை 6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால் வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு , என்று எழுதியதின் அர்த்தம் லக்கினதிபதியின் வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் பாதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொண்ட பிறகே லக்கினம் எவ்வளவு சதவிகிதம் பாதிக்க படுகிறது என்று நிர்ணயம் செய்ய வேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனுசு லக்கனம் 12இல் (விருச்சிகத்தில்) குரு,கேது சேர்க்கை ,சனி பார்வை உள்ள லக்கனம் ,செவ்வாய் பார்வை உள்ள விருச்சிகம் எப்படி இருக்கும் ஐயா

      நீக்கு
  4. மகர லக்னத்திற்கு 10ல் சுக்கிரன் ஆட்சி பெற்று சனியும் ராகுவும் சிம்மத்தில் இருந்தால் பலன் என்ன

    பதிலளிநீக்கு
  5. மகர லக்னத்திற்கு 10ல் சுக்கிரன் ஆட்சி பெற்று சனியும் ராகுவும் சிம்மத்தில் இருந்தால் பலன் என்ன

    பதிலளிநீக்கு
  6. ரிஷப லக்னம் 6ல் சுக்ரன் என்ன பலன் தருவார்

    பதிலளிநீக்கு
  7. En pennukku mesha lagnathipathi chevvai ,6-l maraigirar.lagnathil kethu irukkirathu.chevvai navamsatthil uccha mahara veettil irukkirar.Ithan palan enna,thayavuseithu kooravum.

    பதிலளிநீக்கு
  8. சிம்மலக்கினம் மிதுனராசி லாக்கின்திபதியும்இராசிஅதிபதியும் சேர்ந்து9ல் நிற்க (அதாவது மேசத்தில் ) ஆனால் செவ்வாய் கடத்தில் நீச்ம் (12ல) சந்திரன் 11ல் மிதுனத்தில் உச்சம் தயவு செய்து பலன் கூறுங்கள்...?

    பதிலளிநீக்கு
  9. விருச்சிக லக்னம் லக்னத்தில் சுக்கிரன் (புதன் சாரம்)மற்றும் கேது(சனி சாரம்) லக்னாதிபதி செவ்வாய் துலாத்தில் (செவ்வாய் சாரம்) அஸ்தமனம் சூரியனுடன் (செவ்வாய் சாரம்) பலன் யாது.

    பதிலளிநீக்கு