சனி, 23 டிசம்பர், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மீனம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மீனம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மீன லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், செயல்படும் காரியங்களில் பரிபூர்ணத்துவத்தை அடைய விரும்பும் மீன லக்கின அன்பர்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் தங்களுக்கு ஆன்மிகம் சார்ந்த தடைகளையும், சமூகமதிப்பில் ஓர் சுணக்கத்தையும், தெளிவில்லாத மன நிலையையும் அதன் வழியிலான திருப்தியற்ற வாழ்க்கையையும் தந்து இருக்க  கூடும், ஆனால் தற்போழுது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து  ( ஜீவனம் ) சிறு சிறு அவப்பெயர் மற்றும் தடைகளை தந்த போதிலும் தனது  வர்க்க கிரகங்களின் வீடுகளான ரிஷபம்,மிதுனம் மற்றும் கன்னியை வசீகரித்து மிகுந்த லாபத்தை தரும் அமைப்பாகும், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த சனி தங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும், மேல் அதிகாரிகள் வழியில் இருந்து மனஉளைச்சலை தரும், செய்யும் தொழில் வழியில் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் யாதொரு பாரபட்சமும் இன்றி  கடுமையான இன்னல்களை தங்களுக்கு தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் குறையும், பெற்ற தந்தை வழியிலான இன்னல்கள் தங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது  தங்களுக்கு சகல நலன்களையும் வாரி வழங்கும், திட்டமிடாமல் செய்யப்படும் காரியங்கள் தங்களின் வாழ்க்கையில்  மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க, மீன  லக்கினத்தை சார்ந்த பெண்கள் தனது தாயின் வார்த்தைகளை மதித்து நடப்பது  நல்லது இல்லை எனில் வீண் அவப்பெயரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் , எக்காரணத்தை கொண்டும் தனிமையில்  பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல மேலும், பாதுகாப்பான பயணம் தங்களுக்கு வரும் வீண் மருத்துவ செலவினங்களை குறைக்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனைகாலமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அவர்களது  உண்மை தன்மையை பரிசோதித்து உதவுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், சனிபகவானின் தாக்கம் குறைய இறையருளின் ஆசியை பெறுவது ஒன்றே தீர்வாக அமையும்.

3ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், தங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல  வெற்றி வாய்ப்பு கிட்டும், சகோதரவழியிலானா உதவிகள் தேடிவரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், கமிஷன் தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வருமான கிடைக்கும், அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும், தங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறன் மூலம் சகலவித நன்மைகளையும் பெறுவதற்கு யோகம் உண்டு, தனிப்பட்ட திறமைகளை பரிசோதித்து வெற்றிகாணும் நேரமிது என்பதனை மீன லக்கின அன்பர்கள் உணர்வது அவசியமாகிறது, மனபலம் அதிகரிக்கும்  செயற்கரிய காரியங்களை சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் நேரமாக இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு அமையும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு கவுரவம் மற்றும் நன்மதிப்பு உண்டாகும், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு, செய்தி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சியை பெற்று தரும், புதிய எதிர்காலம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தர தயார் நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும், வீர்ய ஸ்தானத்தின் மீதான சனிபகவானின் பார்வை தங்களுக்கு கைநிறைவான வருமான வாய்ப்பையும், தடைகளை உடைத்தெறிந்து தன்னிறைவான முன்னேற்றத்தை பெறுவதற்க்கான சந்தர்ப்பங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது மீன இலக்கின அன்பர்களே!
 " வாழ்த்துகள் "

4ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு மிதம் மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்குவார், தங்களின் அறிவுத்திறனும், நல்ல குணமும் எதிர்பாராத பொருளாதார அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் தேடிவரும் தெய்வீக அனுக்கிரகம் கூடும், அறிய திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை  உருவாக்கும், சுகபோக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது , தங்களின் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் ஆதாயம் தங்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு சரியான முதலீடாக அமையும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், புதிய வீடு வண்டி வாகனம் வாங்க இதுவே சரியான  தருணம், தடைபெற்ற காரியங்கள் யாவும் தன்னிறைவாக வெற்றி வாய்ப்புகளை வழங்கும் என்பதனால், அறிவில் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளை பெறுவது தங்களின் கடமையாகிறது, சனிபகவானின் சமசப்த பார்வை தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமையுடன் திகழ்கிறது.

7ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சுகபோகத்தை வாரி வழங்குவார், திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதோர் வாழ்க்கை துணை அமையும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளையும், ஆதரவையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நல்ல நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றப்படும், இதுவரை இருந்த சந்தேகங்கள் நீங்கி தங்களின் மனம் தெளிவடையும், எதிர்ப்புகள் யாவும் நட்பு பாராட்டும், விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள், தங்களின் ஆலோசனையின் பெயரில் பல காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும், சமூக அந்தஸ்து உயரும், உடல் நலம் சார்ந்த  முன்னேற்றமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், பிணி அகலும், பொருளாதார வசதி வாய்ப்பை பெறுவதற்கான ஆயத்த பணிகளை இனிவரும் காலங்களில் தாங்கள் நடைமுறைப்படுத்தலாம், கூட்டு தொழில் வழியிலான நன்மைகள் தங்களை தேடி வரும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடு வெளியூர் செல்லும் யோகமும், அதன் வழியிலான ஜீவன முன்னேற்றமும் சிறப்பாக தங்களை தேடிவரும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் சகல சௌபாக்கியமும் தங்களுக்கு உண்டாகும், எதிர்பாலின ஆதரவு தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில்  மீன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 16 டிசம்பர், 2017

பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகுபகவான் தரும் அதிர்ஷ்டம் மிக்க ஆண் வாரிசு !



 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு கடுமையான புத்திர தோஷத்தை தரும் என்றும், ஜாதகருக்கு புத்திரபாக்கியம் கிட்டாது என்று கூறி சுய ஜாதகத்தில் ராகு பகவானால் வலிமை பெற்ற 5ம் பாவகத்தை கொண்ட ஜாதகங்களையும் திருமண பொருத்தம் காணும் பொழுது புத்திரபாக்கியம்  இல்லை என்று பல அன்பர்களின் ஜாதகங்களை பெண்வீட்டார் தவிர்த்து விடுகின்றனர், 5ல் ராகு அமர்ந்த ஜாதகங்களை குழந்தை பாக்கியம் அற்ற ஜாதகம் என பல ஜோதிடர்களும் பெண்வீட்டாருக்கு மனதில் ஓர் பயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர், இது மிகவும் தவறான அணுகுமுறையாகும், சுய ஜாதகத்தில் 5ல் ராகு அல்லது கேது அமர்ந்து இருப்பதை மட்டும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் இல்லை என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறானதாகும், 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட 5ம் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு இல்லாமல் கூறப்படும் கருத்துக்கள் யாவும் ஜோதிடக்கணிதத்திற்கு புறம்பான விஷயம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

 சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசாகவே பிறக்கும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் இவர்களுக்கு பெண் குழந்தை பிறப்பதென்பதே அரிதாக அமையும், தொடர்ந்து ஆண் குழந்தைகளாகவே பிறக்கும், ஒருவேளை 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டு ஆண் வாரிசு என்பது தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் அமையும், எனவே சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது புத்திரபாக்கியம் இன்மையை தரும் என்று கருதுவது சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை பற்றிய எதுவும் தெரியாமல் குத்துமதிப்பாக சொல்லும் வாய்ஜாலம் என்பதை அனைவரும் உணருவது அவசியமாகிறது.

5ல் அமர்ந்த ராகு கீழ்கண்ட ஜாதகருக்கு தொடர்ந்து  3 ஆண் வாரிசாகவே வாரி வழங்கி இருப்பதற்கு அவரது ஜாதகத்தில் 5ல் அமர்ந்த வலிமை பெற்ற ராகுபகவானின் கருணையே காரணம் என்பதை உறுதியாக பதிவு செய்ய முடியும், மேலும் ராகு பகவான் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்வதால் ஜாதகர் பெரும் நன்மைகளை என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 3ம் பாதம்

மேற்கண்ட மகர லக்கின ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 5ம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு 100% விகித யோக பலன்களை தரும் அமைப்பில் காணப்படுகிறார், இது ஜாதகருக்கு உபய மண் தத்துவம் சார்ந்த தொழில்களான மண் மனை வண்டி வாகன துறையில்  நல்லறிவையும், சமயோசித அறிவுத்திறன் மூலம் மேற்கண்ட தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையையும் தருகின்றார், மேலும் ஜாதகரின் தொழில் நுணுக்க அறிவு திறன் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு  சுய ஜாதகத்தில் ராகு பகவான் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் வலிமை பெற்று இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

பொதுவாக 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை வழங்கமாட்டார் என்ற விஷயம் யாதொரு ஜோதிட நூல்களிலும் இல்லை, இந்த கருத்து இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்ட தவறான கருத்து என்பதை சொல்லி தெரிவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஓர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தாம் அமரும் பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்ற அடிப்படை விஷயம் அறிந்திருப்பது அவசியமாகிறது, குறிப்பாக மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகுவும், 11ல் அமர்ந்த கேதுவும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது வசம் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதுவும் 100% விகித வலிமையுடன், இதன் காரணமாக சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்பட்ட போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறு தாமதத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தந்து இருக்கின்றது, பொதுவாக சுய ஜாதகத்தில் 2ம் வீடு பாதிப்படைவது ஜாதகருக்கு திருமண தடைகளை தரும் , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் ராகு பகவானால் வலிமை பெறுவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை பெறுகின்றார்.

ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே " புத்திரபாக்கியம் இல்லை " என்ற மூடத்தனமான நம்பிக்கைகளை களைந்து, 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு வலிமையை  சேர்க்கிறதா ? வலிமையற்று இன்னல்களை தருகின்றதா ? என்பதை  தெளிவாக தெரிந்து கொண்டு சிறப்புறுவதே " ஜோதிட கணிதத்தின் " பரிபூர்ணத்துவம் அடங்கியிருக்கின்றது.

நவ கிரகங்கள் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு பார்த்து  பலாபலன்களை தருவதில்லை, அவரவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமையும் லக்கினம் முதல் 12 பாவகங்களின் மீது விழும் நவக்கிரகத்தின் ஜீவகாந்த சக்தியை சுவீகரிக்கும் வலிமை பெற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து  அவயோகங்களையும் தருகின்றது, இந்த பாவக பலன்களை நவக்கிரகத்தில் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் காலங்களில் ஏற்று நடத்தி ஜாதகனுக்கு நன்மை தீமையை வழங்குகின்றது என்ற உண்மையை உணரும் பொழுது, ஒருவருக்கு தமது வாழ்க்கையில் தனது ஜாதகத்தின் பங்கு என்ன என்பதை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் ஓர் தெளிவான விழிப்புணர்வு கிடைக்கும், மாறாக நவ கிரகங்கள் நன்மை தீமை தருகின்றது  என்ற மூடநம்பிக்கையில் இயங்குவது முற்றிலும் ஜாதக கணிதம் தெரியாமல் ஒருவர் கூறும் கற்பனை நிறைந்த கட்டுக்கதைகளாகவே அமைந்துவிடும், சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் அமையும் என்பதனை உணரும் பொழுது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், சாதக பாதகங்களை அறிந்து செயல்படும் வல்லமையும் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற ராகு, தொடர்ந்து 3 ஆண் வாரிசுகளையும், அவர்களின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களையும் கொண்டிருக்கும் தன்மையை தருகின்றார், எனவே நமது சுய ஜாதகத்தில் 5ல் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்து இருந்தால் பயமேதும் கொள்ளாமல், அவர் வலிமையுடன் உள்ளாரா ? வலிமை அற்று காணப்படுகிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, 5ல் வலிமை பெற்ற சாயா கிரகங்கள் ஒருவருக்கு நல்ல ஆண் வாரிசை வழங்குவதுடன், அவர்களை அதிர்ஷ்டத்துடன்  யோகம் மிக்கவர்களாக திகழ செய்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

குறிப்பு :

 ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி,துலாம்,தனுசு மற்றும் மீன ராசிகள் 5ல் பாவகமாக அமைந்து அங்கு அமரும் ராகுகேது ஜாதகருக்கு புத்திர தோஷத்தை நிச்சயம் தாராது, ஆனால் இதில் சில விதி விளக்குகளும் உண்டு என்பதை  கருத்தில் கொள்வது சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 13 டிசம்பர், 2017

கிரகமாலிகா யோகம் ஜாதகருக்கு பலன் தருமா? சுய ஜாதக வலிமை ஜாதகருக்கு பலன் தருமா ?


கேள்வி :

 கிரகமாலிகா யோகம் உள்ளதால் எனது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் என்கின்றனர், நடைபெறும் குரு திசை சிறப்பான நன்மைகளை தரும் என்கின்றனர், ஆனால் குரு திசை கடந்த 5 வருடமாக மிகுந்த சிரமங்களையே வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, யாதொரு முன்னேற்றமும் இல்லை, எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தருகின்றது, தன்னம்பிக்கையுடன் போராடி வருகின்றேன், வெற்றி கிட்டுமா ? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? கிரகமாலிகா யோகம் எனக்கு பலன்தருமா? பலன் தாராத விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

 சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று இந்த கிரகமாலிகா யோகம், கிரகங்கள் தொடர்ச்சியாக வீடுகளில் அமர்ந்து இருப்பது மேற்கண்ட கிரகமாலிகா யோகத்தை தரும் என்று கூறுவது சுய ஜாதக வலிமை அமைப்பிற்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்பதை முதலில் நாம் தெளிவாக உணர்ந்துகொள்வது நல்லது, நமது சுய ஜாதகம் என்பது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், கிரகமாலிகா யோகம் , கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் என்பதெல்லாம் கிரகங்களின் சேர்க்கை நிலை, அமர்ந்த நிலை மற்றும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு கற்பனையாக சொல்லப்படும் விஷயங்களாகும், இவையெல்லாம் ஜோதிடம் கேட்க வந்தவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துமே அன்றி நடைமுறையில் பயனேதும் தாராது என்பதே உண்மையாகும், தங்களது ஜாதகத்தில் உள்ள கிரக மாலிகா யோகம் என்பது தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது யாதொரு நன்மைகளையும் சுபயோகங்களையும் தாராது என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம் அன்பரே !

இனி தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தங்களது சுய ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகள் சற்று வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து தாங்கள் நிச்சயம் சுபயோக பலாபலன்களை நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் சுவீகரிக்க அதிக வாய்ப்பு உண்டு அதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் 8ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களுக்கும், 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களும் தங்களை  படுத்தி எடுக்கும் என்பதுடன் 3,9ம் பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களை தங்களால் தாங்க இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், கிரகமாலிகா யோகம் என்று யாரவது வாயில் வந்ததை உளறி வைத்திருக்க கூடும் அதை நம்பிக்கொண்டு தாங்கள் செய்யும் காரியங்கள் யாவும் தாங்க இயலாத துன்பத்தையும், படுதோல்விகளையும் தரும் என்பதை தாங்கள் இதுவரை நடைமுறையில் உணர்ந்து இருக்க கூடும், சுய ஜாதகம் வலிமை பெறாமல் தங்களால் ஓர் அணுவையும் அசைக்க இயலாது இது இறையருள் நிர்ணயம் செய்த விதி, தங்களது லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மிதம் மிஞ்சிய தன்னம்பிக்கையை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, ஆனால் தங்களது ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை நம்பிக்கொண்டு வீணாக நேர விரயத்தையும், பொருள் விரயத்தையும் செலவு செய்வது தங்களது முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 பொதுவாக தங்களது சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது  தங்களின் முயற்சிகள் யாவினையும் தடை செய்து கடும் நெருக்கடிகளை தரும், தங்களின் அறிவு திறன் தங்களுக்கு பயன் தாராது, பித்ரு சாபம் சார்ந்த இன்னல்களையும், அதன் தாக்கத்தால் தொடர் தோல்விகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும் தங்களது சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  வலிமை பெற்று இருப்பினும் 11ம் பாவகம் உபய ராசியில் அமைவது லாப  ஸ்தான வழியில் இருந்து முழு யோக பலன்களை தாராது, மேலும் லாப ஸ்தானம் என்பது மிதுன ராசியில் 9 பாகைகளையும், கடக ராசியில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய காற்று தத்துவத்தில் சிறிதும், சர நீர் தத்துவ அமைப்பில் அதிக அளவும் வலிமை பெற்று நிற்பது மனம் சார்ந்த வலிமையை தருமே அன்றி, அறிவு,உடல் மற்றும் செயல்திறன் சார்ந்த நன்மைகளை தாராது, தங்களின் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ அமைப்பே மேலோங்கி நிற்கிறது, தங்களின் மனஎண்ணத்தின் வீரியத்தை அதிகரிப்பதை மட்டுமே இது குறிக்கின்றது, மற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து  தங்களுக்கு செயல் திறன், உடல் திறன் மற்றும் அறிவு திறனை  வெகுவாக பாதிக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை, சுய ஜாதகத்தில் நெருப்பு, நிலம், வாயு மற்றும் நீர் தத்துவ ராசிகள் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகம் தனது பரிபூர்ண இயக்கத்தை பெரும், தங்களது சுய ஜாதகத்தில் நெருப்பு மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது  உடல் மற்றும் செயல் திறனில் தடைகளை தரும் அமைப்பாகும், காற்று  தத்துவ ராசி பாதிக்கப்படுவது தனது அறிவார்ந்த முயற்சிகளில் வரும் பின்னடைவை உறுதிப்படுத்துகிறது.

 எனவே தங்களின் மன எண்ணத்தின் ஆசைகளை நிறைவு செய்ய நெருப்பு,மண் மற்றும் காற்று தத்துவ ராசிகள் தங்களுக்கு ஒத்துழைப்பை நல்கவில்லை என்பதால் தங்களது ஜாதகத்தில்  உள்ள " கிரகமாலிகா " யோகம் என்பது வாய் ஜாலமே அன்றி தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது  என்பதை கருத்தில் கொண்டு, சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை மட்டும் சுவீகரிப்பது தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள், சுய ஜாதகத்தில் கிரகமாலிகா யோகம் உள்ளதால் தங்களுக்கு எதிர்பாராத யோகங்கள் கிட்டும் என்ற கனவை தவிர்த்து, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுங்கள், மற்றவர்கள் சொல்லும் வாய் ஜாலங்களை நம்பி செயல்பட்டால் மண்குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு பொருத்தமான பலாபலன்களை தாங்கள் அனுபவிக்க நேரும் என்பதை மனதில் நிலை நிறுத்தி வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

 தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குரு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும், குரு திசை சனி புத்தி பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் நல்குவது தங்களுக்கு 7,5ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை தரும் என்பதால் களத்திரம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியிலான பலாபலன்களை சுவீகரித்து வளமான வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 டிசம்பர், 2017

இரட்டையர் சுய ஜாதகத்தில் பாவக தொடர்பு வழியிலான வித்தியாசங்கள் ! திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் !

 

 ஒருவரின் சுய ஜாதகத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது லக்கினமும் 12 பாவகங்களின் வலிமை நிலையே என்பதற்கு நல்ல உதாரணம் கிழ்கண்ட ஜாதகங்களே, கீழ்கண்ட ஜாதகங்கள் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் நாம் இதை தெளிவாக உணர முடியும், குறிப்பாக சுய ஜாதகம் என்பது பிறந்த தேதி நேரம்  மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படும் விஷயமாகும், கீழ்கண்ட ஜாதகங்கள் 1நிமிட இடைவெளியில் ஜனனம் ஆன ஜாதகங்கள் என்ற போதிலும், இருவருக்கும் பாவக தொடர்பு என்பது நிறைய வித்தியாசங்களை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதை நமது ஆய்வின் மூலம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இது ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தாலும், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவரின் ஜாதகம் அமையாது என்பதற்கு நல்ல உதாரணமாகவும், சுய ஜாதகம் என்பது ஒவ்வொருவருக்கும் கைரேகை போன்று தனித்துவம் பெற்றதாகவே அமைந்திருக்கும் என்பதற்கும் நல்ல எடுத்துகாட்டகவும் விளங்குகிறது என்பதை பதிவின் இறுதியில் நாம் மிக தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

 பெரும்பாலும் சுய ஜாதக பலன் காணும் பொழுது கிழ்கண்ட ஜாதகங்களுக்கு  கிரக நிலைகள் ஒரே மாதிரியான அமைப்பை பெற்று இருக்கும், திசா புத்திகளும் ஏக காலத்தில் இருவருக்கும் ஒரே மாதிரி அமைப்பில் நடைமுறைக்கு வரும், ஆனால் ஜாதகர் இருவரின் குணாதிசியமும், பலாபலன்களும் மிக பெரிய வித்தியாசமான அமைப்பை பெற்று இருப்பது நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடும், இதற்க்கு என்ன காரணம் என்பதை கீழ்கண்ட இரட்டையர் ஜாதகத்தில் இருவருக்கும் ஜாதக ரீதியாக பாவக வழியிலான தொடர்புகளின் வலிமை நிலையை பற்றியும், இருவரும் பாவக வழியில் இருந்து பெரும் நன்மை தீமை நிலையை பற்றியும், தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது அதற்க்கான பதில் நமக்கு கிடைக்கும்.


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3பாதம் 


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 4பாதம் 

மேற்கண்ட இரண்டு பெண் குழந்தைகள் ஜாதகத்தில் பொதுவாக பார்க்கும் பொழுது இரு ஜாதகமும் ஒன்றை போலவே தெரியும் ஆனால் இருவரது சுய ஜாதகத்தை பாவக வழியிலான தொடர்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வழியிலான தொடர்புகளில் உள்ள வேற்றுமை மிக தெளிவாக நமக்கு புரிய வரும்.

ஜாதகி : 1 ( பாவக தொடர்புகள் )

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் உள்ளது.
2,4,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.
8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
10ம் வீடு ஆயுள் ஸ்தானமான  8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையற்று காணப்படுகிறது.

ஜாதகி : 2 ( பாவக தொடர்புகள் )

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் உள்ளது.
2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று காணப்படுகிறது.
5ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.
6,10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான  8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
8ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையற்று காணப்படுகிறது.

மேற்கண்ட இரட்டை பிறவி சகோதரிகள் 1 நிமிட இடைவெளியில் பிறந்து இருந்தாலும் இருவரது சுய ஜாதகத்தில் கிட்டத்தட்ட 5 வீடுகள் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக பெரிய வித்தியாசத்தை நமக்கு எடுத்துரைக்கிறது, முதல் சகோதரி ஜாதகத்தில் வலிமை அற்ற 2,4,6ம் வீடுகள் இரண்டாவது சகோதரி ஜாதகத்தில் 2,4ம் வீடுகள் வலிமை பெற்றும் 6ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்றும் காணப்படுகிறது, முதல் ஜாதகத்தில் ஜாதகிக்கு குடும்பம், சுக போகம் மற்றும் ஆரோக்கியம் நன்றாக அமையாத பொழுது, இரண்டாம் ஜாதகத்தில் ஜாதகிக்கு நல்ல குடும்பம், சிறந்த பேச்சு திறன், நிறைவான வருமானம் என்றவகையில் குடும்ப ஸ்தான நன்மைகளை சிறப்பாக வாரி வழங்குகிறது, மேலும் சுக ஸ்தான வழியில் இருந்து தனது தந்தைக்கு யோகத்தையும், தனது தந்தை வழியிலான சொத்து சுக சேர்க்கையையும் பெரும் அமைப்பை பெறுகின்றார், மேலும் ஜாதகியின் குணம் மிகவும் நல்ல குணமாகவும், பரோபகார மனநிலையை கொண்டவராகவும் திகழ்வார், முதல் ஜாதகிக்கு 4ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி தனது தகப்பனாருடன் பகைமை பாராட்டும்  தன்மையையும், தனது குணத்தில் சிறப்பற்ற தன்மையையும் பெற்று இருப்பார், மேலும் நல்ல வருமானம் இன்மை, வாக்குவாதம்  செய்யும் குணம், வீடு வண்டி வாகன யோகம் அற்ற தன்மை, சத்ரு வழியிலான இன்னல்கள் உடல் நல பாதிப்புகளை அடிக்கடி சந்திக்கும் தன்மையை பெறுவார், இரண்டாவது சகோதரிக்கு சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து கடன் சார்ந்த இழப்புகளை தரும் ஆனால் உடல் நல பாதிப்பு அதிகம் தாராது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

முதல் சகோதரி ஜாதகத்தில் 8ம் பாவக வழியில் இருந்து தகப்பனாருக்கு சில பொருளாதார இழப்புகள் ஏற்படும், ஜாதகி தனக்கு வரும் சுக போக  வாழ்க்கையை உதறித்தள்ளுவார், இரண்டாம் சகோதரி 8ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை சந்தித்த போதிலும் திடீர் வருமான வாய்ப்புகளை புதையலுக்கு நிகராக பெறுவார், மேலும் இன்சூரன்ஸ், கிராஜுவிட்டி, போனஸ் போன்ற அமைப்புகளில் இருந்து நல்ல வருமானம் உண்டாகும், தனது பேச்சு திறன் மூலம் நல்ல வருமானத்தை இரண்டாம் சகோதரி பரிபூர்ணமாக பெறுவார்.

இரண்டு சகோதரிகளுக்கும் தற்போழுது நடைபெறும் ராகு திசை பாக்கிய ஸ்தான பலனை தந்த போதிலும், ராகு திசை சுக்கிரனை புத்தி முதல் சகோதரிக்கு 10ம் பாவக வழியில் இருந்து தனது அன்னைக்கு கடும் இன்னல்களை தருகின்றார், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் தருகின்றார், இரண்டாம் சகோதரி 6,10ம் பாவக வழியில் இருந்து திடீர் பொருள் இழப்புகளையும், தனது அன்னைக்கு பெரும் சிரமங்களையும் சேர்த்து தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எதிர்வரும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக  பலன்களும் இதை போன்றே சில வித்தியாசமான பலாபலன்களை தருவதற்கு ஏதுவாக காணப்படுகிறது என்பது கவலைக்குரிய விஷயமாக காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 6 டிசம்பர், 2017

சுக்கிரன் திசை ( குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கிய ஸ்தானாதிபதி திசை ) நடைபெற்றும் திருமணதடை ஏற்ப்பட காரணம் என்ன ?


கேள்வி :

 கடந்த 13 வருடங்களாக சுக்கிரன் திசை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி திசை என்பதால் நன்மைகளை தருவார் என்றனர், இதுவரை யாதொரு நன்மையையும் இல்லை, கல்வியில் தடை, திருமண முயற்சிகள் யாவும் தடை, பொருளாதார சிக்கல்கள், எதிர்பாரா இழப்புகள் என மிகுந்த இன்னல்களுக்கு மட்டுமே இதுவரை ஆளாகி வந்துள்ளேன், சுக்கிரன் திசை எனக்கு வழங்கும் உண்மையான பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எனக்கு எப்படி அமையும் ?


பதில் :

லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்

தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குடும்பம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல், மிகவும் வலிமை அற்ற கடுமையான பாதிப்புகளை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதே தாங்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, பொதுவாக சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் நன்மையை செய்யும், அசுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் பகை,நீசம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் தீமையை செய்யும், என்று கருதுவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்பட்டும் பொது பலன்களே, இதை கருத்தில் கொண்டு நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது என்பது மண் குதிரையை நம்பி நடுஆற்றில் இறங்குவதற்கு சமமானது, இதை மேற்கண்ட தங்களின் சுய ஜாதகத்தை உதாரணமான கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !

  தங்களது ஜாதகத்தில் 5,7ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் தங்களுக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக  பாதிக்கப்பட்ட 5,7ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது  ( 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தங்களின் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க இயலாத துன்பங்களை 5ம் மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% விகிதம் வாரி வழங்கும், அடிப்படையில் தங்களின் பூர்வீகத்தில் இருந்து ஜீவன செய்ய இயலாத நிலையை தந்து பரதேச ஜீவனம் என்ற நிலைக்கு ஆளாக்கும், சிறிதும் இறை அருளின் கருணை தங்களுக்கு உதவி செய்யாது, தங்களின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் பயன்படாது, உதவி செய்ய யாரும் அற்ற நிலையில் தனிமையாக போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலனளிக்காது, தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத துறையில் தனது வாழ்க்கை பயணத்தை நடத்தியாகவேண்டிய சிரமமான சூழ்நிலையை உருவாக்கிவிடும், ஜாதகர் மேற்கொள்ளும் சுப நிகழ்வுகள் யாவும் தடைபெற்று பாதியிலே நின்றுவிடும், ஜாதகரின் அனைத்து முயற்சிகளும் மிகப்பெரிய தோல்வியையே தரும் என்பது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5ம் பாவாக வழியில் இருந்து தரும் பலன்களாகும்.

 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பாலின அமைப்பினர் மூலம் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், காதல்வயப்பட்டு அதன் மூலம் மிகப்பெரிய இழப்புகளை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும், இறுதியில் தேவையற்ற வீண் அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படும், குறிப்பாக ஜாதகர் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இருந்து பெரிய அளவிலான துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும், கூட்டு முயற்சி பெரிய பாதிப்புகளை தரும், நண்பர்கள் வழியிலான பொருளாதார சீர்குலைவு தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், தேவையற்ற சகவாசம் தங்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

தங்களின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் அமைவது தங்களின் தொழில் வழியிலான முன்னேற்றத்தையும், அறிவு சார்ந்த முயற்சிகளையும் கடுமையாக பாதிக்கும், ஓர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவதே குதிரை கொம்பாக அமையும், மேலும் கவுரவம் சார்ந்த பிரச்சனைகள் தங்களின் எதிர்காலத்தையும், தொழில் வழியிலான முயற்சிகளுக்கும் மிக பெரிய தடைக்கற்களாக அமையும் என்பதை கவனத்தில் கொள்க.

தங்களின் 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய ஸ்தானமான மீன ராசியில் அமைவது எதிர்பாலினம், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து கடுமையான மனநிம்மதியிழப்பையும், மனஅழுத்தத்தை வழங்கும் என்பதால் சற்று கவனமுடன் மேற்கண்ட உறவுகளுடன் நட்பு பாராட்டுவது நலம் தரும், குறிப்பாக தவறான எதிர்பாலின சேர்க்கை இருப்பின் அதில் இருந்து வெகு விரைவில் விடுபடுவது தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை தரும்.

அடுத்து வரும் சூரியன் திசை தரும் பலன்கள் திருமண தடை சார்ந்த கேள்விகளுக்கு  அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696