பத்தாம் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தாம் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2012

வேலை அல்லது தொழில் சிறப்பாக அமைய ஒருவர் செய்ய வேண்டிய வழிபாடு !



பொதுவாக ஒரு ஜாதகருக்கு , கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் தொழில் , ஜீவன ஸ்தானமாக வருவது சனிபகவானின் வீடான மகரம் , இது சர ராசியாகவும் , மண் தத்துவமாகவும் வருகின்றது, ஒரு நபருக்கு  சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக எந்த கிரகம் வந்தாலும் அவரின் ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகரின் வேலை , அல்லது சுய தொழில் சிறப்பாக அமையும் .
 
மேலும்  லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின் வலுவையும் , தொழில் ஸ்தான காரகத்துவத்தையும் , சனிபகவானே முன் நின்று அனைத்து பலனையும் நடத்துவார் . எனவே சுய ஜாதகத்தில் பத்தாம் வீட்டுக்கு உண்டான பலனை நடத்துவதில் அதிக பங்கு வகிப்பது சனிபகவான் மட்டுமே , லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதி பாதிக்க பட்டு இருந்தாலும் , சனிபகவான் அல்லது சனிபகவானின் வீடு,  ஒரு ஜாதகத்தில் நன்றாக இருக்கும் அமைப்பை பெற்றவர்களுக்கு, தொழில் அல்லது வேலை சிறப்பாக அமையும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  
 ஆனால் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு பத்தாம் வீடு, பத்தாம் வீட்டு அதிபதி மட்டும் வலுபெற்று , சனிபகவானும் , சனிபாகவனின் இரு வீடுகளும் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகருக்கு,  தொழில் வேலை ஆகிய அமைப்புகளில் தொடர்ந்து மாற்றமும் , விருப்பம் இல்லாத தொழில் அல்லது வேலையில் பாணியார்ற வேண்டிய நிர்பந்தமும் ஏற்ப்படும் .

பொதுவாக  மேற்காணும் அமைப்பை பெற்ற ஜாதகருக்கும், அவரது தகப்பானாருக்கும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசாகவே, வாழ்க்கை வாழவேண்டியிருக்கும், இருவருக்கும் கருத்து வேறுபாடு என்பது இயற்கையிலேயே அமைந்து இருவருக்கும், தகப்பன் மகன் என்ற ஒரு நல்ல உறவுமுறை அதிகம் பாதிக்க படும் .


இந்த அமைப்பை பெற்று ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அமையாத அன்பர்கள் அனைவரும் நாங்கள் கூறும் சில வழிபாடுகளை , முறையாக செய்து வந்தால் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றம் பெற இயலும் .


வேலை அல்லது  தொழில் சிறப்பாக அமைய :


சம்பந்தபட்ட ஜாதகர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து சூரிய உதயத்திற்கு  முன் எழுந்து முறையான சூரிய நமஸ்காரம் செய்து வருவது நிச்சயம் நல்ல வேலை, தொழில் அமைய வழிவகுக்கும்.


சுய ஜாதகத்தில் சனிபகவான் எந்த வகையிலாவது பாதிக்க பட்டு இருப்பின் சனி பீரிதி செய்து கொள்வது, விரைவான நன்மையை தரும் சிறந்த வேலை , தொழில் நிச்சயம் அமையும் .

 

அல்லது மாற்று திறனாளிகளுக்கு ஜாதகரால் முடிந்த அளவு உதவிகளை எந்த வகையிலாவது செய்து வருவது விரைவான ஜீவன மேன்மையை தரும் .  செய்தொழில் வளர்ச்சி பெற முடியாமல் இருப்பவர்கள் , தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலார்களிடம், கண்ணியமாகவும் அவர்களின்  தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையுடன்,  நடந்து கொள்வார்களே ஆயின் அந்த தொழில் விரைவில் முனேற்றம் பெரும்.

தனது தகப்பானார் மூலம் எவ்வித துன்பங்களை ஜாதகர் அனுபவித்தாலும், அதை ஏற்று கொள்வாரே ஆயின்,  ஜாதகர் செய்யும் தொழில் நிச்சயம் 100 சதவிகித வெற்றி பெரும், ஏனெனில் ஒருவகையில் ஜீவன ஸ்தானத்துடன், தகப்பானர் ஆதிபதியமும் சம்பந்தம் பெறுவதால், அதன் காரகதுவ வழியில் ஜாதகர் கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு வழி, மேலும் ஜீவன வழியில் அதிக நன்மையை ஜாதகர் பெறுவார் இது உறுதி .


ஒன்றுமே இயலாத நிலையில் உள்ளவர்கள் கூட, கன்று குட்டியுடன் உள்ள ஒரு பசுவிற்கு ஒன்பது சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஒரு வாழை பழம் கொடுத்துக்கொண்டு வருவாரே ஆயின் , சில நாட்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வேலை அல்லது தொழில் அமையும் .


செய்து ஜீவன வழியில் அனைத்து நன்மைகளையும் பெறுங்கள் .


வாழ்க வளமுடன்

 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?




அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து , கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனது உறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனது வாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம் அடைந்து தானும் நன்றாக  வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும் நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வு செய்வோம் !

 6  ம்  வீடு

முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ அமைந்து, ஆறாம் பாவகம்  100  சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம் மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில் எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோ ஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .

மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவு அவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில் அமைய நிச்சயம் இந்த 6  ம்  வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் .

  8  ம் வீடு

இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல் அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கே அமையும் சிறப்பான வசதிகளும்.

 பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகன வசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும் தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில்,  ஜாதகத்தில் 8  ம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ இருந்து 100  சதவிகிதம் நன்றாக 
அமைந்து .

  8  ம் வீடு மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு , நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த 8  ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .

 12  ம் வீடு

முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில் அமர்ந்து , அனைத்து வசதிகளையும்,  அனுபவிக்கும் யோகத்தை பெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனது சந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடி உரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .

 வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பான பயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு நிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய் நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை , நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால் ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை  ஆபரண சேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம் அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12  ம் பாவகமே , அதற்க்கு இந்த 12  ம் வீடு  சர அல்லது  ஸ்திர ராசியாக வந்து , மண் அல்லது நீர் தத்துவத்தை பெற்று 100  சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .

மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாக இருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6  8  12  வீடுகளின் பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகல யோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல் நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

 ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

      

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நெருப்பு , நிலம், காற்று, நீர் தத்துவ ராசிகள் ஜாதகத்தில் நடத்தும் பலன்கள் !




நெருப்பு

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் மிகவும் நேர்மையான தன்மையுடன் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , மேலும் சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , அதிகாரம் செய்யும் அமைப்பு , கௌரவம் , சுய மரியாதை மற்றும் கடமை உணர்ச்சி கொண்டுள்ளவராக காணப்படுவார் , மேலும் இது சம்பந்தப்பட்ட தொழில் செய்து சமுதாய முன்னேற்றத்திற்கு பயனுள்ளவராக இருப்பார் .

 ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் மூர்க்கத்தனம் , முன்கோபம் , சுயநலம் , போதை , போகம் , முதலியவற்றில்  ஈடுபட்டு, தானும் கேட்டு , தன குடும்பத்தையும் , சமுதாயத்தையும் கெடுப்பார் , மேலும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்து அதில் இன்பம் காணும் கொடூர குணம் கொண்டவராக இருப்பார் , இவரால் மற்றவர்கள் எவ்வித நன்மையையும் பெற வாய்ப்பே இல்லை , மேலும் இது சம்பந்தம் பெற்ற தொழில்களை ஈடுபட்டு , சமுதாய குற்றவாளியாக மாறிவிடுவார் .


 நிலம் 

 ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நில தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் , நிதானம் , மற்றவரை அனுசரித்து செல்லும் குணம் உடையவராகவும் , மற்றவரையும் தன்னை போல் கருதும் தன்மை கொண்டவராக இருப்பார் , மேலும் அனைவரிடமும் கண்ணியத்துடனும் ,  மரியாதையுடன் நடந்துகொள்ளும் தன்மையுடையவராக  இருப்பார் , மேலும் கடின உழைப்பாளியாகவும் , மண் மனை , வண்டி , வாகன யோகம் உடையவராகவும் , உணவில் நாட்டம் உள்ளவராகவும் இருப்பார் . மேற்கண்ட அமைப்பில் ஜாதகருக்கு தொழில் நல்ல நிலையில் செய்து வெற்றி பெறுபவராக இருப்பார் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் எதை செய்வதாலும் தயக்கம் உள்ளவராக இருப்பார் , மேலும் பயந்த சுபாவத்தால் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வி அடையும் , மேலும் தனது பிடிவாத குணத்தால் தனக்கே பெரிய கெடுதல்களை தேடிகொல்வார்  , மற்றவரை குறை சொல்வதே வழக்கமாக கொண்டு திரியும்  தன்மை ஏற்ப்படும் , இவர்களது சோம்பேறித்தனம் உலக அளவில் பெயர் பெரும் அளவிற்கு ஜாதகர் நடந்து கொள்வார் , போகத்தில் ஈடுபட்டு தனது உடல்  நிலையை கெடுத்துகொள்வார், மேலும் நன்றாக சாப்பிடுவதே வாழ்க்கை  என்ற நிலைக்கு வந்துவிடுவார் , அதற்காக எதையும் இழக்கவும் தயாராக இருப்பார் , தன்னை அழகு படுத்தி கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார் .

  
காற்று


ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே  காற்று தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகரின் புத்திசாலித்தனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் , ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் , மேலும் இவரின் சுய சிந்தனை மற்றவர்களின் வாழ்க்கைக்கு சரியான பாதையை அமைத்து தரும் , இவரின் அறிவாற்றல் சமுதாயத்திற்கு பல நல்ல பலனை தரும் , முற்ப்போக்கு சிந்தனை உள்ளவராக காணப்படுவார் . மேலும் டாக்டர் , வக்கீல் , எஞ்சினியர் , ஆடிட்டர் போன்ற அறிவை  முதலீடாக கொண்ட தொழில்களில் ஜாதகர் தனது வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே காற்று  தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகரின் முட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இருக்காது , மேலும் சபல புத்தி உள்ளவராகவும், முட்டாள் தான செய்கையால் தனக்கே பெரிய ஆப்பாக  அடித்து கொள்வார் , மேலும் சுயநல வாதியாகவும் குறுகிய மனம் படைத்தவராகவும் , சமுதாயத்திற்கு  முரண்பாடான  வாழும் வாழ்க்கை அமைந்துவிடும் . 



 நீர்

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நீர் தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெரும் அமைப்பை பெறுவார் , அருங்கலைகளில்  ஈடுபாடு , கற்பனை திறனால் சாதனை செய்யும் அமைப்பு , இவர்களின் கற்பனை நிச்சயம் உயிர் பெரும் . மேலும் திட்டமிட்டு செயல்படுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே ! சுயகட்டுபாடு, உள்ளதை வைத்து வாழும் திறமை , மனித நேயம், அன்பு, பாசம் இவற்றிற்கு இலக்கணமாக திகழ்வார்கள் . நல்ல ஞான மார்க்கம் ஏற்ப்படும் , மேற்கண்ட அமைப்பில் தொழில் ஜாதகருக்கு அமையும் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நீர்  தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் பிடிவாதகுணம் , சபலம் , உணர்ச்சிவசப்படுதல் , மற்றவரை சார்ந்து அல்லது இம்சித்து வாழ்க்கை நடத்துதல் , போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் நிலை , ஆடம்பர கேளிக்கைக்கு வீண் செலவு செய்யவது , தனது வாழ்க்கைக்கு தானே கெடுதல் செய்துகொள்ளுதல் போன்ற நிலை , இது சம்பந்தம் பெற்ற தொழில்களில் ஈடுபடுவதால் பாதிப்படைவார் .

 ஜோதிட கணிதம் செய்யும் பொழுதும், பலன் சொல்லும் பொழுதும் இவற்றுடன் சர, திர, உபய தத்துவத்தை இணைத்து பலன் சொல்ல வேண்டும் .


ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

வெள்ளி, 30 மார்ச், 2012

"ருண பந்தம்"










உலக " வாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்" என்றார் கவியரசர்.

" போனால் போகட்டும் போடா " என்று விரக்தியானவர்கள் சொல்லலாம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் யாரோருவரும் அப்படி நினைக்கலாமோ? வாழ்க்கை என்பதெல்லாம் உவமான, உவமேயமே அன்றி வேறில்லை. இது யாவருக்கும் பொருந்தும்.

இறை அருளின் கருணையினாலும் , பூர்வ ஜென்ம புண்ணியத்தை அனுசரித்தும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன்களை ( ருணம் ) ஏற்றுக்கொண்டே பிறக்கிறார், அவை :

1 ) தேவ ருணம் :

தேவ ருணம், " அணையாத அக்னி காரியங்களை செய்வதால் தீரும் என்பது நியதி " கலியுகத்தில் 
இது சாத்தியம் இல்லை. பின் எவ்வாறு தீர்ப்பது ?

அனுதினமும் ஆண்டவனை ஆரதிப்பதோடு நில்லாமல் " குல தெய்வத்தை
 கொண்டாடுவதால் தீரும் " .

ஒரு ஜாதகர் எவ்வளவு கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்தாலும், துயரமும், சோதனைகளும் வந்தாலும் குல தெய்வத்திடம் மனம் உருக வேண்டினால் பாரம் குறையும், மார்க்கம் பிறக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .

வம்சா வளியினருக்கு, மொட்டை அடிப்பது, காது குத்துவது மட்டும்  " குல தெய்வத்தை நாடினால் போதும் என்றில்லாமல், பிறந்த நாள் , திருமண நாள் , அமாவாசை  , பொர்ணமி , மஹாலய பட்சம் , சொத்து வாங்கும் போதும், இன்ன பிற முக்கியமான நிகழ்வுகளின் போதும், " குலம் தளைக்க உதவிடம்மா" என குல தெய்வத்திடம் வேண்டிட வேண்டும் .

எளிமையாக சொன்னால் , நமது மாவட்ட கலெக்டர்தான் நமக்கு உதவுவார், 
மேலும் அது அவரது கடமை , வேறு அதிகாரி ஒருவரை, எனக்கு அவரை 
தெரியுமே என்றாலும், அவரால் எதோ பரிந்துரைக்க முடியுமோ தவிர 
"Executor" நம் குல தெய்வமே .

" நான் பாவி, பாவ கர்மமுடையவன், பாவத்தையே  செய்பவன் , 
பாவத்துடன் சம்பந்தம் உடையவன் உம்மை சரணடைந்தேன். 
என்னை காப்பாற்ற வேண்டும் என்று இறை நிலையை " அபயம் " என்று அடைந்தால் " வரதம்" கொடுத்தேன் என இறைவன் இறங்குவார்.

ஆக லயிப்புடன் , பக்தி செலுத்தி வேண்டுதல் நலம் தரும் , நம் ஆணவம் , கன்மம் , மாயை , நீங்கி சத் , சித் , ஆனந்த நிலையை அடைய 
" சிரத்தையுடன்" பிரார்த்திக்க வேண்டும் .

வீட்டுக்கு ஒரு பிரதிநிதி என்றில்லாமல் குழந்தை, குட்டிகளோடு,
 குடும்பத்தோடு  பிரார்த்திக்க வேண்டும் . இதனால் அடுத்த 
சந்ததிக்கு இதன் அருமை மற்றும் பாரம்பரியம்  புரியும்.

2 ) ரிஷி ருணம் :

உலக நன்மையின் பொருட்டு சான்றோர்கள் பலர் சிறந்த 
சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவற்றை தானும் 
கசடற கற்று, பிறருக்கு கற்க உதவிட வேண்டும் . " கல்வி கொடை" மிகச்சிறந்தகும். வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு " கல்வி கற்க உதவி செய்வது மிக சிறந்த தொண்டாகும் .

3 ) பித்ரு ருணம் :


நாம் நமது முன்னோருக்கு கடமை பட்டுள்ளோம் , அவர்கள் 
எவ்வுலகில் இருந்தாலும் , எந்த   நிலையில் இருந்தாலும் , அவர்கள் நன்மை கருத்தில் குறித்து நித்தமும் எண்ணுதல் வேண்டும் .

உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு பணிவிடை செய்வது பித்ரு ருணத்தின் ஒரு பகுதியாகும் , சொல்ல போனால் பெருகிவரும் முதியோர் இல்லங்கள் தேவையில்லையோ என என்னும்படி வாழ வேண்டும் .

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " எனும் குறள் படி தென்புலத்தார் ஐந்து வகையானவர்கள் :

புரூரவர்கள்          - தேவர்களின் அம்சம்
ஆருத்ரவர்கள்     -  ரிஷிகளின் அம்சம்
வசுக்கள்                 -  அமரரான தந்தை
ருத்ரர்                       -  அமரரான தாத்த
ஆதித்யர்                 -  அமரரான முப்பாட்டனார்

இவர்களை வழிபடுவது தலையாய கடமையாகும் .

4 ) நர ருணம் :

சக மக்களுடைய பசி, பிணி , இவைகளை  போக்க உதவுவது, சுற்றியுள்ளோர் வாழ்க்கையை பன்படுத்துதலும் மற்றும் பல தொண்டுகள் நர ருணத்தை தீர்க்கும் .

அன்னதானம்  செய்தாலும் , மருத்துவ முகாம்கள் , இன்ன பிற உதவிகளும் செய்வது இதன் காரணமாகத்தான் .

5 ) பூத ருணம் :

கால்நடைகள் உள்ளிட்ட மற்ற ஜீவன்கள் மனித வாழ்க்கைக்கு பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன . அவ்வுயிர்களை பேணி பாதுகாப்பது நமது கடைமைகளில் ஒன்றாகும் .


நன்றி :  திரு ஆர் மணிவண்ணன்

ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 

                  

திங்கள், 19 மார்ச், 2012

பாவ காரகத்துவ வழியில் நடத்தும் பலன்கள் !



ஜாதக பாவங்களில் இருந்து ஒருவீடு நன்றாக இருந்தால் தரும்   பலன்கள் :


லக்கினம்  நன்றாக இருந்தால் :

ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை மிகவும் நன்றாக இருக்கும், மன ஆற்றல் ,தன்னம்பிக்கை , மன நலம் , வாழ்க்கையில் சகல வளங்களும் நிறைந்து இருக்கும் , கற்பதில் ஆர்வம் அதிகமிருக்கும் , எண்ணம் செயல்பாடு நேர்மையான அமைப்பில் இருக்கும் .


இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் :

நல்ல அறிவு திறன் , சிறப்பான  வருவாய் , குடும்பம் சிறப்பாக அமையும் , ஜாதகரின் பேச்சு திறன் சிறப்பாக அமைந்து இருக்கும் , மேலும் தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் நடத்தி செல்லும் ஆற்றல்  ஜாதகருக்கு அதிகம் உண்டு.


மூன்றாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் மன நிலை , ஜாதகரின் நண்பர்கள் , மேலும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்டவை , எழுத்தாற்றலின் மூலம் ஜாதகர் பெரும் நன்மை , ஜாதகர் மேற்கொள்ளும் சிறு பயணங்கள் , ஜாதகரின் மன வலிமை , தைரியம் , சிறு அதிர்ஷ்டம் போன்ற நிலைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .


நான்காம் வீடு நன்றாக இருந்தால் :

தனது தாயின் நிலை , அவரால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை , ஜாதருக்கு அமையும் சொத்து , சுகம் , வீடு , வண்டி வாகனம் , ஜாதகருக்கு அமையும் சொகுசு  வாகனம் மற்றும் வீடு , விவசாய நிலம் மூலம் ஜாதகர் அடையும் லாபம் போன்றவை சிறப்பாக அமையும் .


 ஐந்தாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகர் தனது பூர்விக இடத்தில் வசிப்பதால் நன்மைகள் அதிகம் , குழந்தை பாக்கியம் மற்றும் வாரிசு மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு ஏற்ப்படும் , அவர்கள் வழியே ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயரும் புகழும் . ஜாதகர் அனுபவிக்கும் பொழுது போக்கு விசயங்கள் , கலை வாழ்வில் ஈடுபாடு  போன்ற விசயங்கள் சிறப்பாக அமையும் .


ஆறாம்  வீடு நன்றாக இருந்தால் :

உடல் நலம் முயற்ச்சியால் ஜாதகருக்கு கிடைக்கும் வெற்றி , கடன் பெறுவதால்  ஏற்ப்படும் முன்னேற்றம், வழக்குகளில் கிடைக்கும் வெற்றி , தனது தாய் மாமன் மூலம் ஜாதகர் அனுபவிக்கும் நல்ல வாழ்க்கை  போன்ற விஷயங்கள் சிறப்பாக அமையும் .


ஏழாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் மனைவி மற்றும்  ஆண் / பெண் நண்பர்கள், அவர்களால் ஏற்ப்படும் நன்மைகள் , ஜாதகரின் கூட்டாளி , தொழில் முறை கூட்டாளி , கூட்டு தொழிலால்  அடையும் நன்மைகள் , தொழில் நிலையில் ஏற்ப்பாடு நிலையான வளர்ச்சி போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


எட்டாம்  வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகருக்கு திடீர் என வரும் அதிர்ஷ்ட வாழ்க்கை , புதையல் , பூரண ஆயுள் , விபத்திலிருந்து வெகு விரைவில் உடல் நிலை முன்னேற்றம் , சொந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு ஏற்ப்படும் திடீர் வளர்ச்சி , வாகன மாற்றம் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 ஒன்பதாம்  வீடு நன்றாக இருந்தால் : 

ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயர் , நீதி நேர்மையான மன பக்குவம் , பாக்கியம் செய்ததால் ஜாதகருக்கு அமையும் நல வாழ்க்கை , இறை நிலையுடன் ஜாதகருக்கு ஏற்ப்படும் தொடர்பு , கடவுள் பக்தி , அறிவியல் ரீதியான ஆராய்ச்சி , அதனால் ஜாதகர் அடையும் நன்மைகள் ,   போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .  


பத்தாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , தொழில் , சுய தொழில் செய்வதால் பெரும் அபரிவிதமான முன்னேற்றம் , தனது தகப்பனார் அவர் மூலம் ஜாதகர் அடையும் முன்னேற்றம் , வாகன சுகம் நாற்கால் ஜீவன்கள் வளர்ப்பதால் ஜாதகர் அடையும் நன்மைகள் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 லாப ஸ்தானம் நன்றாக  இருந்தால் :

ஜாதகரின் துணைவியார் , ஜாதகரின் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர் பாலினரிடம் ஏற்ப்படும் மயக்கம் , ஜாதகரின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் , ஜாதகரின் எண்ணம் பலிதம் , அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் யோகம், போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 பன்னிரெண்டாம் வீடு  நன்றாக இருந்தால் :

ஜாதகர் அதிகமான பணம் முதலீடு செய்வதால் அடையும் லாபம், மற்றும் வாழ்க்கையில் திடீர் என நிகழும் யோகம் , நல்ல நிம்மதியான தூக்கம் , அறிவின்  செயல் பாடுகள் , மன ஆற்றல் மற்றவர்களால் ஏற்ப்படும் மன நிம்மதி , ஆன்மிக வாழ்வில் ஏற்ப்படும் முன்னேற்றம்  போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696

வியாழன், 15 மார்ச், 2012

பரிகாரம்





ஜோதிட பலன் கேட்கவரும் அனைவரின் அடுத்த கேள்வி என்ன பரிகாரம் செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கும் என்பாதாக இருக்கிறது இதை பற்றி ஒரு சிந்தனை :

பரிகாரம் என்றாலே மக்கள் அனைவருக்கும் ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் கோவில் வழிபாடு, பூஜை முறைகள் , நவக்கிரக சாந்தி , இரத்தின ஆலோசனை , பெயர் மாற்றம் , என எண்ணில் அடங்காத பல பரிகாரங்களை, ஜோதிட  ஆலோசனை பெற வந்தவர்களிடம் சொல்கின்றனர் , இதை கேட்கும் மக்கள் அனைவரும், நிறைய பொருட் செலவு செய்தும் பலன் பெற முடியாமல் இருப்பவர்கள் அதிகம், இதற்க்கு காரணம் ஜோதிடர்கள் சொன்ன பாரிகாரங்கள் சரியா ? அல்லது அந்த பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தரவில்லையா? 

 என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்கள் 80  சதவிகிதம் பேரின் வாக்கு மூலம் என்னவென்றால் நான் இதற்க்கு முன் ஜோதிடர்கள் சொன்ன அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன் பலன் இல்லை என்பதாகவே இருக்கிறது .

உண்மைதான் என்ன ?

பரிகாரம் என்றாலே அது நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகர்தான் செய்ய வேண்டும் , அது எந்த பாவம் ஜாதகத்தில் கெட்டு விட்டது என்று, ஜோதிடனின் கணிதம் கொண்டு அறிந்து. 

எந்த ஒரு சிறந்த ஜோதிடனும் ஜாதகருக்கு பரிகாரம் பற்றி சொல்வாரோ தவிர அவரே பரிகாரம் செய்ய மாட்டார் .

 இதில் அடுத்த விஷயம் கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால் தோஷம் போய்விடும் என்று சொல்லுவது உண்மையில்லை , கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால்  ஜாதகத்தில் எந்தவீடு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வகையில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு ஜாதகரின் அறிவு  விழிப்புடன் செயல்பட்டு, அந்த பிரச்சனைகளுக்கு ஜாதகரே தீர்வு காணும் ஆற்றலை கோவில் வழிபாடு / பரிகாரம் ஜாதகருக்கு  கொடுத்து விடும் என்பதே உண்மை , அது எந்த வகை பரிகாரமானாலும் சரி .  

மேலும் கோவில் வழிபாடு / பரிகாரம் என்பது ஜாதகரின் சிந்தனை திறன், செயல் பாடு, அறிவில் விழிப்பு நிலை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும்  என்பது கண்கூடாக கண்ட உண்மை. மேலும் நன்மை தீமைகளை உள் உணர்வு மூலம் தெரிந்துகொண்டு வருமுன் காக்கும் தன்மையை அதிகரிக்கும். 


 
ஜாதகர் எவ்வித பரிகாரம் செய்யாமலே ஜாதகத்தில் பாதிப்புக்களை நிவர்த்தி நிச்சயம் செய்துகொள்ள முடியும் எப்படி எனில் ? 

சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தொடர்ந்து தவம் செய்து வருவாரே ஆயின் அந்த கிரகத்தில் இருந்து வரும் அலை கதிர்கள் நன்மையான  பலனையே வாரி வழங்கும் , இது ஓரிரு நாட்களில் நடக்க வாய்ப்பு இல்லை தொடர்ந்து மாதகணக்கில் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

  மேலும் சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்ற அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஜாதகர் நன்மையே செய்வார் எனில், ஜாதகருக்கு மிகுந்த நன்மையே ஏற்ப்படும் .

எடுத்துகாட்டாக :

1  ம் ( இலக்கணம் ) வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் சுய ஒழுக்கம் , மன கட்டுப்பாடு , தன்னம்பிக்கை  , கெட்ட எண்ணங்களை தவிர்த்தல் , தனது உடல் நிலையில் அதிக அக்கறை , போன்றவற்றில் கவனம் செலுத்துவாறே ஆயின் பாதிப்படைந்த லக்கினம் வழு அடைந்து ஜாதகர் நன்மை பெறுவார் .

 4  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தாயாரிடம் அதிக அன்புடனும் , மரியாதையுடனும் நடந்து கொள்வது நலம் தரும் , மேலும் தாயாரின் ஆசைகளை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும், அவர்களிடம் காட்டும் அன்பு ஜாதகருக்கு நல்ல சொத்து சுக சேர்க்கையை பெற்று தரும் , தாயாரை அவரது இறுதி காலம் வரை நன்றாக பார்த்துக்கொள்வது ஜாதகருக்கு நல வாழ்வினை தரும் .

 7   ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது நண்பர்களுடன் நல்லுறவு அவர்களால் ஏற்ப்படும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளுதல் , மனைவி வழியில் இருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு முழு அளவில் நன்மையே செய்தல் , மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுதல் ( மனைவி  கெடுதலே செய்தாலும் ) போன்ற தன்மையுடன் இருந்தால்  சிறிதுகாலம் ஜாதகர்  சிரமம் அடைந்தாலும் பிறகு அந்த பாவ வழியில் இருந்து 100  சதவிகித நன்மையே பெறுவார் .

 10  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தகப்பானரிடம் பற்றுடனும் பாசமுடனும் இருப்பது ஜாதகருக்கு 100  சதவிகித தொழில் வளர்ச்சியை பெற்று தரும் ,  மேலும் தகப்பானார் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவரை நன்றாக பாதுகாக்க வேண்டும். மேலும் அவரது கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வது ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும் .

பரிகாரம் என்பது நாம் முன் ஜென்மங்களில் செய்த கர்ம வினை பதிவுகளை,  இந்த பிறப்பில் போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பை இறைநிலை, நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்,

 இதை நன்றாக நாம் உணர்ந்து செயல் பாடுவோமே ஆனால், நமது சந்ததியினர் அனைத்து நலன்களையும் பெறுவார்கள் . இதை உணராமல் மேலும் இந்த கர்ம வினை பதிவினை அதிகரித்து கொள்ளுதல் நமக்கும் நல்லதல்ல , நமது சந்ததியினருக்கும் நல்லதல்ல,

பரிகாரம் நம்மை சுற்றியே உள்ளது அதை நாம் தெளிவாக தெரிந்து கொண்டு நடந்தோம்  என்றால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக வாழ முடியும் .

ஜோதிடன் வர்ஷன் 
 9842421435 
9443355696 
    

புதன், 14 மார்ச், 2012

தொழில் ஸ்தானம் சிறப்பாக அமைந்தால், ஜாதகருக்கு அமையும் தொழில்கள் !



ஒவ்வெருவருக்கும் பிறக்கும் பொழுதே இறைவன் ஜீவனம் செய்யும் வாய்ப்பினை நன்கு உணர்த்தியே படைத்து விடுகிறார், சரியான நேரம் வரும்பொழுது ஜாதகருக்கு இந்த நிலை விழிப்புணர்வால் ( தனது அறிவின் நிலையிலிருந்து ) தெரிந்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்கின்றனர், 

இருப்பினும் ஜாதகரீதியாக 100  சதவிகிதம் தெரிந்துகொண்டு அந்தவகை தொழிலை ஜாதகர் தன்னம்பிக்கையுடன் செய்வாரே ஆயின் நிச்சயம் நல்ல வாழ்வினை பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை .

ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதி , மற்றும் ஜீவன ஸ்தானம் எனும் இரு அமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜாதகர் எந்த தொழில் செய்தால் சிறப்பாக வருவார் என்று தெளிவாக சொல்லிவிட முடியும், மேலும் தொழில் அமைப்பில் இரு நிலைகளை வைத்தே ஜாதகருக்கு அமையும் தொழிலை சொல்லிவிட முடியும் அது கீழ்க்கண்டவாறு அமையும் :

ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

மருத்துவம் , நீதிமன்றம் , ரயில்வே , தொழிற்சாலை , காவல் துறை , கெமிக்கல் , இஞ்சினியர் , அரசு அதிகாரி , விஞ்ஞானி , நீதித்துறை , ஜவுளி , பங்கு மார்க்கெட் , மேனேஜர் , விளையாட்டு வீரர் , அரசியல் , நகை , பணம் , விமானம் , சமயத்துறை , துப்பறியும் இலாகா , வங்கி , கல்வி நிறுவனங்கள், அரசு ஒப்பந்த வேலை, அணுசக்தி , பொதுத்துறை நிறுவனம், நில ஆய்வாளர் , சென்சஸ் ஆபீஸ் , கணித துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவர் ,

   ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது  என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம் நிலை தொழில்கள் :

தொழிலாளி , மெக்கானிக் , அரசுக்கு பொருட்களை சப்பளை செய்வோர் , அரசு சார்ந்த தொழில்கள் , டெக்னீசியன் , பாய்லர் , ரோமம் , சுரங்கப்பொருள் , உலோகம் , சர்க்கரை , ரப்பர் , எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் போன்ற துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் படை , ரயில்வே அதிகாரி , மருந்துகள், தூதுவர்கள், கணித ஆசிரியார்கள் , பொறியியல் துறை சார்ந்தவர்கள் , பஸ் முதலாளி , நர்ஸ் , மொழி பெயர்ப்பாளர் , கவுன்சிலர் , வங்கி , நீதி துறை , நீர் விநியோகம் , ஓவியர் , இசை, குழந்தை மருத்துவர் , மன நல மருத்துவர் , அரசியல் , பொது நல வாதி , நீதி மன்றம் சார்ந்த தொழில் , எழுத்தாளர் , வெளிநாட்டில் வேலை , பேச்சாளர் , நீர்பாசன துறை, விவசாயம், உணவகம் , 64  கலைகள் , இலக்கியம் , சாஸ்திரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம்  நிலை தொழில்கள் :

திரவ பொருட்கள் , வியாபாரம் , மாலுமி , பாய்லர் , விவாசய தொழிலாளி , சிற்றுண்டி சாலை , லாட்ஜ் , உரம் , ட்ராவல் ஏஜென்சி , ஜவுளி , பால் , வாசனை திரவியம் , புரோக்கர் , விர்ப்பனையாளர் , மருந்துகடை , வட்டி தொழில் , மீனவன் , மண்ணெண்ணெய் , ஆறு, குளம் , கிணறு , போர்வெல் , கடல் , சார்ந்த தொழில்கள் , இரவு நேர வேலைகள், சமையல் பொருட்கள் , எண்ணெய், பட்லர்,  சமையல் , ரொட்டி கடை , பெட்ரோல், கண்ணாடி, சாய பட்டரை , டோபி, ஐஸ், சிமென்ட் , பார்பர் , குளிர்பானம் , டெய்லர் , பழம் , காய்கறி , விளையாட்டு பொருட்கள் , தரகர், சாராயம் , பொழுது போக்கு சாதனங்கள் , நீரோட்டம் பார்ப்பவர் , நாடகம் ,சினிமா நடிகர்கள் , போன்ற துறையை சார்ந்தவர்கள் . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

வியாழன், 8 மார்ச், 2012

தொழில் நிர்ணயம் !?






கேள்வி :

ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று நிர்ணயிப்பது எப்படி? 10ம் பாவம் ஜீவனத்தை குறிக்கிறது. 6மிடம் பிறருக்கு கீழ் பணியாற்றும் நிலையை குறிக்கிறது. 11ம் பாவம் நமக்கு வருமானம் வரும் வழியை குறிக்கிறது. 2ம்பாவம் ஜாதகரது செல்வநிலையை குறிக்கிறது.

இப்படி பல பாவங்கள் தொழிலை குறிப்பதால் நாம் எந்த பாவத்தை கொண்டு ஜாதகரது அடிப்படை ஜீவனத்தை நிர்ணயிக்க வேண்டும்.



பதில் :


ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று, எங்களது ஜோதிட முறை மூலம்,  தெளிவாக நிர்ணயம்  செய்துவிட முடியும். மேலும் ஒருவருக்கு தொழில் நிலை பற்றி தெளிவாக சொல்லும் பாவம் 10  ம் வீடு, இந்த ஒரு வீட்டினை வைத்தே ஜாதகருக்கு  அமையும் ஜீவனத்தை பற்றி தெளிவாக சொல்லிவிட முடியும். 

இதற்க்கு 2  ம் வீடு 6  ம் வீடு 11  ம் வீடு ஆகியவற்றுடன் தொடர்பு செய்து பலன் சொல்ல தேவையில்லை,.

மேலும் இந்த வீடுகள் முறையே  (  2  ம் வீடு ) ஜாதகருக்கு வரும் வருவாய் அது எந்த வழியில் இருந்து வரும் என்பதனையும் ,  ( 6  ம் வீடு ) கடன் பெற்று தொழில் செய்தால் ஜாதகருக்கு நன்மை தருமா ? சிறு அதிர்ஷ்டம் பற்றியும் . ( 11  ம் வீடு ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக நீடித்த அதிர்ஷ்டம் உண்ட, செய்யும் தொழில் அதிர்ஷ்ட வாழ்வினை தருமா ? என தெரிந்து கொள்ளவே இந்த வீடுகளை பயன்படுத்தி பலன் சொல்லலாம்.

 அது சரி நீங்கள் எப்படி இந்த வீடுகள் எந்த விதமான பலனை தரும் என்று நிர்ணயம் செய்வீர்கள் நண்பரே ?

தொழில் என்றாலே 10  ம் வீட்டை மட்டும் வைத்து 100  சதவிகிதம் ஜாதகருக்கு என்ன தொழில் அமையும் என்று நிர்ணயம் செய்து விட முடியும் என்பது எனது தீர்க்கமான முடிவு . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

செவ்வாய், 6 மார்ச், 2012

11 ம் வீடும் அதிர்ஷ்ட வாழ்க்கையும் !



நீடித்த அதிர்ஷ்டம் அமைந்த ஜாதகங்கள் பற்றிய ஒரு சிந்தனை :


நீடித்த அதிர்ஷ்ட வாழ்வு ஒவ்வொரு மனிதரும் ஏக்கம் கொள்ள செய்யும் ஒரு வார்த்தை, இந்த அதிர்ஷ்ட வாழ்வினை எந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் அனுபவிக்க இயலும்.


 மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்கன அமைப்பை கொண்டவர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டம் வழங்கும் 11  ம் வீடு சர ராசியில் அமையும் . 

 இவ்வாறு அமைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் சுய  ஜாதகங்களில் 
( இந்த 11  ம் வீடு 11  ம் வீட்டுடனோ, இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் ) , நிச்சயம் நீடித்த அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் என்பதில் சிறிதேனு சந்தேகமே இல்லை , ஆனால் இந்த வீடுகளின் பலன்களை தற்பொழுது நடக்கும் திசை நடத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க இயலும் .


மேலும் ஜாதகர் எந்த வழியில் அதிர்ஷ்டங்களை அடைவார் என்று நிர்ணயம் செய்வதுதான் ஜோதிடனின் திறமை உள்ளது .


பொதுவாகவே  இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் , ஜாதகர் ஓரளவு அதிர்ஷ்ட வாழ்வினை பெற இயலும் அது எந்த லக்கினம்
ஆனாலும் சரி.


அதிர்ஷ்ட அமைப்பை பற்றி கணிதம் செய்த பொழுது கிடைத்த 
தகவல்கள் :


1 ) மிதுன லக்கினத்திற்கு மேஷம் 11  ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக செயல் படும் பொழுது எந்தவகையில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் ஜாதகர் செய்யும் தொழில் பொறியியல் சம்பந்தம் பெற்று அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார் ,

2 ) கன்னி லக்கினத்திற்கு கடகம் 11  ம் வீடாக வந்து சர நீர்த்ததுவமாக செயல்படும் பொழுது ஜாதகர்  தனது மன ஆற்றலை கொண்டு ( யோக நிலை மனோவசியம், மக்கள் வசியம்)  அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

3 ) தனுசு  லக்கினத்திற்கு துலாம் 11  ம் வீடாக வந்து சர காற்று தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் தனது அறிவை மூலதனமாக கொண்டு ( கமிஷன், போதனை , பேச்சு ) அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

 4  ) மீன லக்கினத்திற்கு மகரம் 11  ம் வீடாக வந்து சர மண் தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் மண் மனை வண்டி, வாகனம் ,சொத்து வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.


இதுவெல்லாம் சிறு விளக்கம்  நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டும் . இதில் மேலும் பல விசயங்கள் உண்டு .



ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

சனி, 25 பிப்ரவரி, 2012

உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்று சொல்லுவது உண்மைய ?





பொதுவாகவே ஒருவருடைய   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பது முற்றிலும் 
தவறானது , 

உதராணமாக சிம்ம இலக்கின ஜாதகருக்கு சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலம் பெறுவதும் மேஷத்தில் உச்ச பலன் பெறுவதும் ஜாதகருக்கு அவ்வளவு நன்மை தருவதில்லை, என்பது சிம்ம இலக்கின அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டு பார்த்தால் தெரியும்.

 இதே சிம்ம இலக்கான ஜாதகருக்கு சூரியன்  கும்பத்தில் அமர்ந்து பகை பெற்றாலும் லக்கினத்துக்கு 100  சதவிகித நன்மையை வாரி வழங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

இதே போல் கும்ப இலக்கின ஜாதகருக்கு சனிபகவான் துலாம் ராசியில் அமர்ந்தால் நன்மையான பலன்களை சிறிது கூட கொடுப்பதில்லை , மேலும் துலாம் இலக்கின ஜாதகருக்கு மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ஜாதகரை கடனாளியாகவும் மன ரீதியான பிரச்சனைக்குள் தள்ளிவிடுகிறார் என்பது முற்றிலும் உண்மை. 

ஜாதக கணிதம் செய்யும் பொழுது   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிதம் செய்வது, நுனி புல் மேய்ந்த கதை ஆகும் .

ஒரு ஜாதகத்தில் எந்தவொரு கிரகமும் ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , நீச்சம், பகை என்ற அமைப்பை வைத்து கொண்டு ,  

 ஆட்சி , உச்சம் , நட்பு என்ற அமைப்பை பெற்றால், நன்மை செய்யும் என்றும் . 

 நீச்சம், பகை என்ற அமைப்பை பெற்றால் தீமை செய்யும் என்றும். கணிதம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை .

 மேலும் ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் தனது வீடுகளுக்கு ( அதாவது ஸ்தான பலன் ) என்ன வகையான பலன்களை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சரியான ஜோதிட ஆலோசனை வழங்க ஏதுவாக இருக்கும். இந்த அமைப்பில் கணிதம் செய்யும் பொழுது பலன்கள் துல்லியமாக வந்து விடும் என்பது உண்மை .

இந்த அமைப்பில் கணிதத்தின் மூலம் நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் ஜாதகருக்கு எந்த வீடுகளின் பலன்களை தருகிறது, அது நன்மையா ,தீமையா என எளிதில் கணிதம்  செய்து ஜாதகரின் நிலையை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்பது நிச்சயம் .
 
 மேலும் கோட்சார அமைப்பில் நவகிரகங்கள்  ஜாதகருக்கு நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் அமைப்பில் நடத்தும் எந்த  வீடுகளுடன் எவ்விதம் சம்பந்தம் பெறுகிறது என்று கணிதம் செய்து விட்டால், ஜாதக பலன்கள் 100  சதவிகிதம் சரியாக சொல்லிவிட முடியும் .

 ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

வியாழன், 23 பிப்ரவரி, 2012

தாரபலம்




தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வந்த தொகையை ஒன்பதில் கழித்து நின்ற மிச்சத்தில்
 2 - 4 - 6 - 8   நட்சத்திர நாட்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைதருபவையாக அமையும் . தார பலன்கள் முறையே கீழ்கண்டவாறு அமையும் .

உதராணமாக ஜாதகருடைய நட்சத்திரம் அஷ்வினி யானால் :

அட்டவணையில் கண்டது போல் பலன் தரும் நடைமுறையில் கண்டு பலன் அடையுங்கள் .

மற்ற நட்சத்திர அமைப்பை சேர்ந்த அனைவரும் தமது நட்சத்திரத்தை ஜென்ம தரையாக கொள்ள வேண்டும் .



 அஷ்வினி
 மகம் 
 மூலம் 
 கேது 
 ஜென்மதாரை 
பயம் 
 பரணி 
 பூரம் 
 பூராடம் 
 சுக்கிரன் 
 சம்பத்துதாரை
 சம்பத்து 
 கார்த்திகை 
 உத்திரம் 
 உத்திராடம் 
 சூரியன் 
 விபத்துதாரை 
 விபத்து 
 ரோகிணி
 அஸ்தம் 
 திருவோணம் 
 சந்திரன் 
 ஷேமதரை 
 சேமம் 
 மிருகஷிரிடம் 
 சித்தரை 
 அவிட்டம் 
 செவ்வாய் 
 பிரத்தியதாரை 
 நாசம் 
 திருவாதிரை 
 சுவாதி 
 சதயம் 
 ராகு 
 சாதகதாரை 
தெய்வஅருள்
புனர்பூசம்
 விசாகம் 
 பூரட்டாதி 
 குரு 
 வதை தாரை
 கஷ்டம் 
 பூசம் 
 அனுஷம் 
 உத்திரட்டாதி 
 சனி 
 மைத்தரதரை 
 சுபம் 
 ஆயில்யம் 
 கேட்டை 
 ரேவதி 
 புதன் 
 பரமமைத்தரதரை
 மத்திமம் 

சனி, 18 பிப்ரவரி, 2012

அட்சதை மகிமை !

 அட்சதை மகிமை !

இந்து மத அமைப்பினர் அனைவரும் பாரம்பரியமாக, வாழ்த்துக்களை  தெரிவிக்க மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு மற்றும் புதிதாக தொழில் துவங்கும் தமது வாரிசுகளுக்கு " அட்சதை " பயன் படுத்துகின்றனர் இதனால் என்ன பயன் ?

முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது  மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம். 

ஆகவே  உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும். மொத்தாமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை .

மேலும் தமது வாரிசுகள்  புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து,

 உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும்  அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

இந்த அமைப்பில் அமையும் திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று , சகல நலன்களையும் அடையும் என்பது உறுதி .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696