மிதுனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிதுனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : தனுசு லக்கினம் ( 2019-2020 )




தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிமை மிக்க யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : தனுசு 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாகவும் விளங்கும் தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலும், லக்கினமான  1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் திடீர் அதிர்ஷ்டம் என வெகு சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்க தக்கது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் அல்லது  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், வியாபார விருத்தி அளவில்லா லாபங்களை வாரி வழங்கும் பொதுமக்கள் ஆதரவு, விளம்பரம் மூலம் சிறப்பான நன்மைகளை பெரும் நேரமிது, இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபயோக வாழ்க்கையை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணையுடன் இணக்கமற்ற சூழ்நிலை, கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள், திருப்தி இல்லாத மனநிலை, சரியான தகவல்களை பெற இயலாமல் முரண் பட்ட கருத்துக்களால் தடுமாறும் தன்மை, எதிர்ப்புகள் மூலம் ஏற்படும் நஷ்டங்கள், தெளிவில்லாத முடிவுகள், சிந்தனை திறனில் குறைபாடு, முன்னேற்றமின்மை, பதற்றம், செயல்திறன் பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் தோல்வியை தரும், உறவுகள் வழியில் இருந்து வரும் அதீத தொல்லைகள், பொருள் இழப்பு, மதிப்பு மரியாதை குறைவு, தொழில் முறை கூட்டாளிகளுடன் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வரும் இன்னல்களை சமாளிக்க இயலாமல் கடுமையாக பாதிக்கும் நிலை என வெகுவான துன்பங்களை தரக்கூடும்.

உயிர் உடலாகிய ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தனுசு லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க  தக்கது, சுய கட்டுப்பாடு அதிகரிக்கும், உடல் நலம்  மேலோங்கும், எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிட்டும், மனஉறுதி மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடி வரும், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வமும், செயல்பாடுகளில் வீரியமும் அதிகரிக்கும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் சரியான முடிவுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள், தங்களின் அறிவு வெகு பிரகாசமாக நன்மைகளை வாரி வழங்கும், புகழ் வெற்றி சமூக அந்தஸ்த்து தேடி வரும், தங்களின் அறிவு திறனை கண்டு அனைவரும் வியந்து நிற்பார்கள், கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் தங்களுக்கு அதீத ஞானத்தையும், தெளிவான சிந்தனையையும் வாரி வழங்கும், முழு அளவில் கேதுவின் ஆதிக்கத்தில் தங்களின் உடல்,மனம் கட்டுக்குள் அடங்கி சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்கும், எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள், தொழில் வழியிலான திட்டமிடுதல்கள் தங்களுக்கான நெடுநாள் வளர்ச்சியை உறுதி செய்யும், நல்ல ஞானம் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும்.

ஆன்மீக பெரியோர்கள் சந்திப்பு, ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிட்டும், இது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் தேர்ச்சி, குறிப்பாக ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, வெளியூர் சென்று படிக்கும் யோகம், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல நன்மைகளையும் பெரும் தன்மை, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சுவீகரிக்கும் யோகம், தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  வரும் யோக வாழ்க்கை என சிறப்பு மிக்க நன்மைகள் நடைமுறைக்கு வரும், சுய ஞானம், நல்லறிவு, தெளிவான சிந்தனை போன்றவை தங்களின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை தருவதுடன், நிலையான முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்களின் நம்பிக்கை பரிபூர்ண வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், லட்சியம் வெற்றி பெரும், தங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து நின்று வெற்றியை உறுதி செய்யும், சமூகத்தில் அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும் என்பதுடன், அரசியல் அல்லது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உண்டாகும், செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பை சேர்த்து, கவுரவம் அந்தஸ்த்துடன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெரும் நேரமிது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : சிம்ம லக்கினம் ( 2019-2020 )


 "அடிச்சது ஜாக்பாட்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு என்று சொல்லலாம் -  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : சிம்மம்

கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடு மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானமாக விளங்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் ராகு பகவானும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதீத லாபங்களை அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் நிலையில் தனது சஞ்சார நிலையை துவங்குவது வரவேற்கத்தக்கது, இதுவரை வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருந்த சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டத்தின் தாக்கம் சற்று அதிக அளவில் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல லாபங்களுடன் கூடிய வெற்றியை தரும், முற்போக்கு சிந்தனையும் தன்னம்பிக்கையும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்லதோர் முன்னேற்றத்தை வழங்கும், தெய்வீக அனுகிரகம் எதிர்ப்புகளை களைந்து சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், வியாபாரம் சிறக்கும், தொழில் வழியிலான புதிய நடவடிக்கைகள் எதிர்பாராத நன்மைகளை தரும், புதிய பொறுப்புகள் வழியிலான அதிர்ஷ்டங்கள் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தெளிவான வாழ்க்கை பாதையை அமைத்து தரும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு நற்பெயரும் எதிர்ப்புகளற்ற வெற்றியும் கிட்டும், தனது வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உடையவர்களாக சிம்ம லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பிரகாசிப்பார்கள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள், வருமானம் அதிர்ஷ்டம் போன்றவை இவர்களது வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும்.

கமிஷன் வியாபாரம், தரகு, காண்ட்ராக்ட் போன்ற துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், நிலுவையில் உள்ள பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வும், எதிர்ப்புகளற்ற வியாபர வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அபரிவித முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், குறிப்பாக மனதில் உள்ள திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் காலம் இதுவென்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் அதிர்ஷ்டமும் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதால் தங்களின் முயற்சியில் யாதொரு தொய்வும் இன்றி செயல்படுவது அவசியமாகிறது, சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு வழியில் இருந்து நல்ல வெற்றிகளை தாங்கள் நிச்சயம் உறுதியாக எதிர்பார்க்கலாம், வியாபாரம் மட்டுமே நோக்கமாக உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் நல்லொதொரு வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு நலம் பெறுங்கள், சாயா கிரகமான ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தான சஞ்சார நிலையில் நின்று 100% விகித நன்மைகளை மட்டுமே  தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கலைத்துறையில் தேடுதல் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வெற்றிமீது வெற்றி வந்து சேரும் என்பதுடன் பிரபல்ய யோகம் உண்டாகும், அதிர்ஷ்டத்தின் வழியில் தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்று யோக வாழ்க்கையை பெறுவதற்கு தயார் நிலையில் இருக்க "ஜோதிடதீபம்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்க கடமை பட்டுள்ளது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து இனிவரும் 18 மாதங்கள் 100% விகித நன்மைகளை மட்டுமே வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது, சிம்ம லக்கின அன்பர்களின் சமயோசித புத்திசாலித்தனம் இனி மேலோங்கி நிற்கும், தங்களுக்கு வரும் யாதொரு பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உண்டாகும், தேடிவந்து உதவி செய்வார்கள், பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத செல்வாக்கை பெற்று தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களின் வாழ்க்கையில் சிறப்பானதொரு வெற்றி பாதையை அமைத்து தரும், பொறுப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள் மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்புகளை இறை அருள் வாரி வழங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் யோகம் மிக்கதாக அமையும் என்பது உறுதியான விஷயமாக படுகிறது, தெய்வீக காரியங்கள் ஆற்றி அதன் வழியில் சுபயோகங்களையும், வெற்றிகளையும் சுவீகரிக்கும் வாய்ப்பை தரும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சமூக அந்தஸ்த்து வெகுவாக உயரும், நல்ல நண்பர்கள் சேர்க்கை அல்லது வயதில் அதிகமுள்ளோர் வழிகாட்டுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறந்த திருப்பு முனையை ஏற்ற்படுத்தும், ஆன்மீக திருத்தல வழிபாடுகள், நீண்டநாள் கனவான ஆன்மீக சுற்றுலா சார்ந்த விஷயங்களில் தடை இருப்பின் அது நீங்கி எண்ணம் போல் ஆசைகள் நிறைவேறும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், இதுவரை புத்திர பாக்கியம் அற்ற அன்பர்களுக்கு யோகம் மிக்க வாரிசுகள் அமையும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கைக்கு நல்லதோர் அடித்தளத்தை அமைத்து தரும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜோதிடம், சாஸ்திர ஞானம், மந்திர உபதேசம், இறைவழிபாடு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் இயற்கையாக அமையும், தெய்வீக தரிசனமும், ஆன்மீக வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றியும் இதுவரை எதிர்பார்த்த பதவியும் தங்களை தேடிவரும், புதிய கண்டுபிடிப்புகள் தங்களின் எதிர்கால  வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நிம்மதி மிக்க வாழ்க்கையில் பெருமை மிகு காரியங்களை செய்து புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னிறைவான பொருளாதர வசதிகளை தனது அறிவுத்திறன் கொண்டு சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் தேடிவரும், ஆய கலைகள் 64ல் ஆர்வம் உள்ள கலையில் தேர்ச்சியும் வெற்றியும் 100% விகிதம் உண்டாகும், முற்போக்கு சிந்தனை சமயோசித அறிவு திறன், மேம்பட்ட அறிவாற்றல் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை சிம்ம லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, கேது பகவானின் தனுசு ராசி சஞ்சார நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதுவித யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக கலை துறையில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் காலம் மிகப்பெரிய யோக காலமாக அமையும், சாஸ்திர சார்ந்த ஆய்வுகளில் வியக்கத்தக்க உண்மைகள் வெளிவரும், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றமும், ஞானம் பெற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக மக்களிடம் பிரகாசிப்பார்கள், சிம்ம லக்கின அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியும், லாபமும் பெறுவார்கள், சிம்ம லக்கின அன்பர்களின் அறிவு திறன் மிக பெரிய அளவில் பிரகாசிக்கும், பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள் சிம்ம லக்கின அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து சிம்ம லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )



 நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 27 மே, 2017

சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?


 சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?

மிக சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, வலிமை அற்ற நிலை ஆகியவை பற்றி தெளிவு பெறுவதும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் தனது சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பற்றி தெளிவு பெறுவதும், அதற்க்கு கோட்சார கிரகங்கள் தனது கோட்சார நிலையில் இருந்து வழங்கும் பலாபலன்கள் பற்றிய தெளிவும், ஒருவரது சுய ஜாதகத்தில் வரும் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம் பற்றி மிக துல்லியமாக அறிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் தற்போழுது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் ( நல்ல நேரம் ), வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களையும் ( கெட்ட நேரம் ), அனுபவிக்கும் நிலையை தரும்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமையே ஓர் ஜாதகரின் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, நடைபெரும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம், பொதுவாக சுய ஜாதகத்தில் பாவக கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்களும், சுப கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்தும், மேற்கண்ட கருத்தும் என்பது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களை நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, நவகிரகங்கள் ஜாதகருக்கு தனிப்பட்ட பலாபலன்களை வழங்காது என்பதனை கீழ்கண்ட உதாரணம் மூலம் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை நடைபெறுகிறது, ( 05/03/2009 முதல் 05/03/2027 வரை நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு தரும் பலன் என்ன ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடம் எது ? தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு வலிமை சேர்க்கும் விதத்தில் இருக்கின்றாரா ? தனது திசையில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் ராகு விருச்சிக ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையில் காணப்படுகிறார், இருப்பினும் தனது திசாபுத்தி காலங்களில் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு மிக சிறந்த நல்ல நேரத்தை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் ராகு திசை ராகு புத்தியில் நற்பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதற்க்கு காரணமாக ராகு திசை மற்றும் புத்தி வலிமை பெற்ற 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்ததே என்றால்? அது மிகையில்லை.

மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 5 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 25 பாகைகளும் கொண்டதாக அமைந்தது, ஜாதகர் அசையா மண் தத்துவம் சார்ந்த தொழில் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஸ்திரமாக பெற்றார், பொருளாதார ரீதியான வெற்றி ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது, ராகு சுய ஜாதகத்தில் வலிமை அற்று நின்ற போதிலும், தனது திசாபுத்தியில் வலிமை மிக்க பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளையும், தனசேர்க்கையையும் வாரி வழங்கியது.

ராகு திசையில் குரு புத்தி ஜாதகருக்கு வழங்கி பலன் என்ன? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு ராகு திசையில் குரு புத்தி ( 16/11/2011 முதல் 11/04/2014 வரை ) நடைபெற்றது, நடைபெற்ற குரு புத்தி ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, சம்பந்தம் பெற்றாலும் நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் சம்பந்தம் பெற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது நல்லது, ஆனால் மேற்கண்ட ஜாதகருக்கு முழு முதற் சுப கிரகமான "குரு" தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் 8பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 19பாகைகளும் கொண்டு இருப்பது, ஜாதகருக்கு அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வியையும், தொழில் வழியிலான திடீர் இழப்புகளையும், ஜீவன ரீதியான  ( வியாபாரம் மற்றும் கூட்டு தொழில், ஏற்றுமதி இறக்குமதி ) தொடர் நஷ்டங்களையும் 200% விகிதம் வாரி வழங்கியது, இதனால் ஜாதகர் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை உண்டானது, ஜாதகருக்கு ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தந்த போதிலும், ராகு திசையில் குரு புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களை கடுமையாக தந்தது, நடைபெறும் திசா அல்லது புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில் ஜாதகரின் பாடு, படுதிண்டாட்டம் ஆகிவிடும் என்பதற்கு மேற்கண்ட உதாரணம் சரியாக பொருந்தும்.

ராகு திசையில் ராகு புத்தி யோக பலனையும் ( நல்ல நேரம் ) குரு புத்தி அவயோக பலனையும் ( கெட்ட நேரம் ) தந்தது, அடுத்து வந்த சனி புத்தி ஜாதகருக்கு வழங்கிய பலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு திசையில் சனி புத்தி ( 11/04/2014 முதல் 15/02/2017 வரை ) ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு புத்தியில் வழங்கிய இன்னல்களை தொடர்ந்த போதிலும், 3ம் வீடு  வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை தந்தது, இதனால் ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இன்னல்களை சந்தித்த போதிலும் ( கெட்ட நேரம் ) வீரிய ஸ்தான வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை ( நல்ல நேரம் ) அனுபவிக்கும் யோகம் உண்டானது , ஜாதகருக்கு சகோதர  வழியிலான நன்மைகள், புதிய முயற்சிகள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியம் உண்டானது, மனதில் தைரியம் அதிகரித்தது, ஜாதகருக்கு  நல்ல தொடர்புகள் மூலம் வியாபர விருத்தி உண்டானது, தரகு, கமிஷன் மற்றும் ஏஜென்சி துறை மூலம் நல்ல பொருளாதார விருத்தியை முழுஅளவில் வாரி வழங்கியது, ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்தது இறை அருளின் பரிபூர்ண கருணையை முழு அளவில் அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதனால் ஜாதகரின் வாழ்க்கையில் பல சுப நிகழ்வுகள் அரங்கேறியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் புதன் புத்தி ( 15/02/2017 முதல் 04/09/2019 வரை ) ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களையும், 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித இன்னல்களையும் தருவது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே ( நல்ல நேரம் ) அதிக அளவில் தரும் அமைப்பாகும், எனவே தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும், புதன் புத்தியும் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் நல்ல நேரத்தை கட்டியம் கூறுகிறது.

எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும் சுபயோக பலன்களை தருவதும், ராகு திசையில் புதன் புத்தியும் சுபயோக பலன்களை தருவதும் தற்போழுது நடைபெறும் ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்துகிறது.

ராகு திசையில் புதன் புத்திக்கு அடுத்து வரும் கேது புத்தி ஆயுள் பாவக பலனையும் ( கெட்ட நேரம் ), சுக்கிர புத்தி சுக ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் ) சூரியன் புத்தி ஜீவன ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  சந்திரன் புத்தி வீரிய ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  செவ்வாய் புத்தி விரைய ஸ்தான பலனையும் ( கெட்ட நேரம் ) தருவது ராகு திசையில் மற்ற புத்திகள் தரும் பலாபலன்கள் ஆகும், எனவே ராகு திசை ஜாதகருக்கு பொதுவாக சுபயோக பலன்களை தருவது ( நல்லநேரம் ) என்றே எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்தும், வலிமை அற்று இருப்பது ஜாதகரின் கெட்ட நேரத்தை உறுதிப்படுத்தும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையையும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையையும் தெளிவாக உணர்ந்து நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை உணர்ந்து நலம் பெறலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 16 மார்ச், 2017

குரு திசை வழங்கும் யோக பலன்கள் ! லாப ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை !


 சுய ஜாதகத்தில் குரு திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோக அமைப்பை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது உண்டு, குரு திசை ஒருவருக்கு நடைபெறும் பொழுது அவருக்கு நன்மையான பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்து, இது உண்மைக்கு புறம்பானது என்ற போதிலும், நடைபெறும் குரு திசை ஒருவருக்கு சுப யோகங்களை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

எந்த ஓர் ஜாதகத்தில் நவகிரகங்களின் திசைபுத்தி ( சுபர் அசுபர் ) தனிப்பட்ட நன்மை தீமைகளையும், யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றதல்ல என்ற அடிப்படை விஷயத்தை முன் வைத்து இந்த பதிவை தொடர்கிறது " ஜோதிடதீபம் " உண்மையில் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை ஏற்றே நவ கிரகங்களின் திசாபுத்திகள் யோக அவயோக பலாபலன்களை வழங்குகிறது என்பதால், சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக பலன்களையும், சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் நிலையை தருகிறது, இதை மறுத்து சுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு யோக பலன்களையும், அசுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு அவயோக பலன்களையும் தரும் என்ற வாதம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலை உணராமல் கூறும் பொது பலன்களாகவே கருத வேண்டி உள்ளது, கிழ் கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை, அடுத்து வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம்.

ஜாதகருக்கு குரு திசை ( 07/02/2007 முதல் 07/02/2023 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், ஜாதகர் நினைத்தபடி நிகழ்வுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தன்னம்பிக்கையும் தைரியமும் வெகுவான  லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனை, செய்யும்  காரியங்களின் புதுமையை விரும்பும் மனநிலை என ஜாதகர் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார்.

குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துவதும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடான கடகம் ஜாதகருக்கு லாப ஸ்தானமாக அமைவது ஒரு வகையில் வண்டி வாகன யோகம், வீடு, நிலம், இடம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை என்ற வகையிலும் சுபயோகங்களை தரும், தனது தாய் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகர் இந்த குரு திசை காலத்தில்  தடையின்றி பெறுவார், தனது எண்ணத்தின் வலிமையை வெற்றிகரமான சாதனைகளுக்கு மூலதனமாக பயன்படுத்தும் யோகம் பெற்றவராக மாற்றும் வல்லமையை தரும்  தற்போழுது நடைமுறையில் உள்ள குரு தசை என்பது மேற்கண்ட ஜாதகத்தில் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம். ( தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனை தருவது இன்னல்களை தரும் அமைப்பாகும் )

ஜாதகருக்கு எதிர் வரும் ( 07/02/2023 முதல் 07/02/2042 வரை ) சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பதும் மிகுந்த யோகத்தை தரும் அமைப்பிலேயே உள்ளது அதாவது 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் , 8ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் தருவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே எதிர்வரும்  ( இயற்க்கை பாவியான ) சனி திசையும் ஜாதகருக்கு பாக்கியம் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுப யோகங்களையே வாரி வழங்குகிறது என்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 9,10ம் பாவக பலனை ஏற்றுநடத்துவதில் இருந்து தெளிவாகிறது.

குறிப்பு :

நவகிரகங்கள் தனது திசையில் தரும் பலன்களை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அவர்கள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பை கருத்தில் கொண்டு  நிர்ணயம் செய்வதே மிக சரியான அணுகு முறை, இதை தவிர்த்து பொது பலன் கூறுவது என்பது, ஜோதிட கணிதத்தின் உண்மை நிலையை புரியாமல் சொல்லும் வாய்ஜாலம் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 15 மார்ச், 2017

செவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையைதான் தேர்வு செய்ய வேண்டுமா ?


 செவ்வாய் தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருப்பின், அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருப்பதே திருமணம் வாழ்க்கைக்கு நல்லது, இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், தம்பதியர் ஒற்றுமை குறையும், குறிப்பாக மணமகன் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தை விட மணமகள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் சற்று வலிமை குறைவாக இருப்பது நல்லது, செவ்வாய் தோஷம் என்பது ஜாதகத்தில் 2,4,7,8,12ல் இருப்பின் அந்த ஜாதகரோ ஜாதகியோ செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்படுவார்கள், என்ற  விஷயங்கள் யாவும் காலம் காலமாக மக்களிடம் பரவலாக உள்ள மூட நம்பிக்கை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, தங்களின் ஜாதகத்தையே இந்த செவ்வாய் தோஷம் சார்ந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் 7ல் அமர்ந்து இருப்பதால் கடுமையான செவ்வாய் தோஷம் என்றும், இதனால் தாங்கள் செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையையே தேர்வு செய்ய வேண்டும் என்பதனை, தங்களின் கேள்வியில் இருந்தே தெளிவாக அறிய முடிகிறது, ஆனால் தங்களின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தங்களுக்கு தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்து இருக்கின்றார் என்பது மற்றவர்களின் கூற்று, இதில் உண்மை இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து பொதுவாக ஓர் பாவகம் ஆரம்பிக்கும் பாகை, முடிவுறும் பாகை ஆகிய விஷயங்கள் தெளிவாக தெரிந்த ஜோதிடர்களுக்கு மேற்கண்ட குழப்பம் வர சிறிதும் வாய்ப்பில்லை, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு மீன ராசியில் 347:04:48 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:22:32 பாகையில் முடிவடைகிறது, தங்களது களத்திர பாவகம் மீன ராசியில் 13 பாகையும், மேஷ ராசியில் 17 பாகையும் கலந்து நிற்கின்றது, செவ்வாய் பகவான் தங்களது ஜாதகத்தில் 339:17:46 பாகையில் நிற்கின்றார், எனவே செவ்வாய் மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை.

இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் ( மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் ) அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதியாகிறது, எனவே சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமரவில்லை, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றார் எனும் பொழுது, இங்கு செவ்வாய் தோஷத்திற்கு கூறும் விதி முறைகள் யாவும் பொய்த்து போகின்றது, 7ல் செவ்வாய் அமர்வதே செவ்வாய் தோஷம் ( உண்மைக்கு புறம்பானது )  என்றால் , தங்களது ஜாதகத்தில் செவ்வாய்  6ல் அமர்ந்து இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதே சரியானது, ஆகவே செவ்வாய் தோஷம் என்ற விஷயம் தங்களது ஜாதகத்திற்கு  பொருந்தி வாராது.

செவ்வாய் தோஷம் என்ற மாயையை களைந்து சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு வாழ்க்கை துணையை தாங்கள் தேடுவதே சாலச்சிறந்தது என்று  அறிவுறுத்த ஜோதிட தீபம் விரும்புகிறது, தங்களது திருமணம் தாமதமாக செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பது உறுதி, திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பரே, 

தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களது திருமண வாழ்க்கை தாமதமாக முழு முதற்காரணமாக அமைகிறது என்பதே உண்மை, எனவே அதற்க்கான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 3 மார்ச், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்னி !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கன்னி :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கன்னி லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மானுடம் பயன்பெற வாழ்க்கையில் பல தியாகங்களையும், தன்னுள் இருக்கும் இருக்கும் அணைத்து விஷயங்களையும் தனது குழந்தைக்கு தந்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடும் தாயின் குணத்தை பெற்ற கன்னி இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை வீர்ய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வெற்றிகளை வாரி வழங்கிய சனி பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது  மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் சுக போக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது.

4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த சிறு மாற்றங்களை தரக்கூடும், பழைய வீடு, வண்டி வாகனம்  போன்றவற்றை மாற்றிக்கொள்ள இது சிறந்த கால நேரமாக கருதலாம், மேலும் உயர்கல்வி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சரியான நேரம் இதுவே, புதியதாக வண்டி வாகனம் வீடு நிலம் வாங்க விரும்புவார்கள், அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது உடனடியாக நல்ல பலன் தரும், இருப்பினும் தங்களது உடமைகளை, சொத்துக்களை மற்றவர்களை நம்பி கொடுக்கும் பொழுது சற்று கவனம் தேவை, நம்பிக்கைக்கு உகந்த நபர்களிடம் மட்டுமே தாங்கள் தங்களது உடமைகளையும் சொத்து, வண்டி வாகனத்தையும் தரலாம், இல்லை எனில் தவிர்த்து விடுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் இழப்புகளையும் தவிர்க்க உதவும், அரசு துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல பதவி உயர்வு உண்டாகும், கல்வி மற்றும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், யோக வாழ்க்கையும் கிடைக்க பெறுவார்கள், தங்களது வாழ்க்கையில் கவுரவம் அந்தஸ்த்து போன்றவை வெகுவாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் யோக காலமாக அமையவிருக்கிறது என்பதால், சனியின் சுக ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு நன்மையையே தரும்.

9ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, கல்வி கேள்விகளில் நல்ல அதிர்ஷ்டத்தையும், குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நல்கும், வெகுநாள் லட்சியங்கள் தங்களுக்கு விரைவாக நிறைவேறும், தனபிராப்பர்த்தி சரளமாக வரும் வாய்ப்பு உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றி, சிறந்த பேச்சு திறமை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், ஆன்மீக அன்பர்களுக்கு சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும், தங்களின் தேடுதல்களுக்கு சரியான குரு அமைவார், சகல செல்வாக்கும் மக்களின் ஆதரவு மூலம் பெருகி வரும், தெய்வ அனுகிரகம் மூலம் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்கள் பன்மடங்கு பெருகி வளரும், விவசாயம் செய்வோருக்கு திடீர் யோகம் உண்டாகும், விளைச்சல் அதிகரிக்கும், அரசு சார்ந்த  உதவிகள் தங்களை தேடிவரும் வாய்ப்பும் உண்டு, திருமண வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர், ஓர் பெரிய மனிதரின் ஆசியினால் ஒன்று கூடும் வாய்ப்பு உண்டாகும், தங்களின் வேண்டுதல்கள் எதிர்பார்ப்புகள்  நிறைவேறும், குறிப்பாக பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 10ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, இதுவரை தொழில் ரீதியாக இருந்த இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவார், அதன் அடிப்படையில் முடங்கி கிடந்த தொழில்கள் இனி வரும் காலங்களில் சிறப்பாக ஏற்றமிகு லாபத்துடன் நடைபெறும், சுய தொழில் செய்வோர்க்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்ச்சிகளில் நிச்சய வெற்றி கிட்டும், குறிப்பாக கமிஷன், தரகு, எஜென்ஜி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு சரளமான பண வசதியும், செல்வாக்கும் அதிகரிக்கும், தங்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல வெற்றி வாய்ப்பினை நல்கும், தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும், எதிர்ப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு பணிந்து போவார்கள், வியாபாரத்தில் வெற்றி, பன்முக  திறமை மூலம் வாழ்க்கையில் ஜீவன ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் தங்களை தேடி வரும், குறிப்பாக தங்களின் அறிவு திறன்  மிக சிறப்பாக செயல்படும், தொழில் முன்னேற்றம் என்பது இரண்டு மடங்கு பல்கி பெருகும்.

1ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி  லக்கின அன்பர்களுக்கு, வயிறு சார்ந்த இன்னல்களை சற்று அதிகமாக தரக்கூடும், இதனால் வரும் தொந்தரவுகள் தங்களுக்கு சற்று செலவினத்தை தரகூடும், இருப்பினும் உடல் ரீதியாக வரும் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வும், சிறந்த மருத்துவமும் கிடைக்க பெறுவீர்கள், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன் சார்ந்த இன்னல்கள் உடனடியாக முடிவுக்கு வரும், எதிர்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் நேரம் இது, தங்களின் செயல்பாடுகளில் சற்று வீரியம் அதிகரிக்க வேண்டிய நேரம் இது, அதிக விழிப்புணர்வுடன் ஒவ்வொரு காரியத்திலும் ஈட்டுபட்டு, நன்மைகளை மட்டும் தேர்வு செய்து முன்னேற்றங்களை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், தங்களின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை கொள்ளுங்கள், இதனால் தங்களின் ஜீவன மேன்மை என்பது பலமடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,9,10,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,9,10,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கன்னி லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !



கேள்வி :

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.
இதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும் கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.

நான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது பிரச்னைகள் எப்போது தீரும்?

மதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

இப்படிக்கு
சே.மதிவாணன்.

பதில் :

தங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை " ஜோதிடதீபம் " வழங்கும் அன்பரே ! ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில்  அவ்வித  பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

திருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் சிம்மம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சிம்மம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஐந்தாம் ராசியான சிம்ம ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், சிம்ம லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இறை அருளின் பரிபூர்ண கருணையையும், மிதம்மிஞ்சிய புத்திக்கூர்மையையும் ஒருங்கே அமைய பெற்று, இந்த பூவுலகில் அறிய பல சாதனைகளை புரியும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இதுவரை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சரித்த சனி பகவானால், சுகபோகங்களை துறந்து, ஒருவிதமான மனசஞ்சலத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வந்த தங்களுக்கு, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கு சனிபகவானால் சிறு சிறு இன்னல்கள் வந்த போதிலும், பெரும்பாலான நன்மைகளும் நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறு தாமதங்களை தர கூடும், தங்களின் வெகுநாள் திட்டமிடுதல்கள் மிக மெதுவாக வெற்றிபாதையை நோக்கி நகர ஆரம்பிக்கும், வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு என்பதால் அவர்களது வாழ்க்கையில் சிறிது அக்கறை கொள்வது நலம் தரும், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், சுயமுன்னேற்றம் பெறுவதற்கு உண்டான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில ரகசியங்களை காப்பது தங்களுக்கும், தங்களது முன்னேற்றத்திற்கும் பேருதவிகளை தரும், மேலும் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும், மற்றவர்கள் விஷயங்களில் தாமாக முன்வந்து தலையீடு செய்வது தங்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே சாலச்சிறந்தது, தன்னம்பிக்கையை  அதிக அளவில் வளர்த்துக்கொள்வதும், எதையும் சமாளிக்கும் மனதைரியத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது, தங்களுக்கு உகந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்களது குல தேவதை வழிபாடு சகல நிலைகளில் இருந்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், சனி மாற்றத்தால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தங்களது பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆலோசனையை பரிசீலனை செய்வது தங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதிய தொழில் வாய்ப்புகளையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்குவார், மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், இதுவரை திருமண தடைகளை சந்தித்து வந்த வரனுக்கும், வதுவுக்கும் பொருத்தமான துணை வந்து சேரும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், உடல் ரீதியாக கடினமான இன்னல்களை சந்தித்து வந்த அன்பர்களுக்கு, சரியான மருத்துவரிடம் சென்று தனது உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவ சிகிசிச்சையை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும், உடல் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடும் யோகமும் உண்டாகும், வட்டி தொழில், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகத்தை தரும், பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பாராத அளவிற்கு வாரி வழங்கும், தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் நேரமாக இந்த சனிபெயர்ச்சி விளங்கும் என்பதில் மாறு கருத்து இல்லை, எனவே சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான வெற்றி உறுதி என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

11ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை தனது அறிவு திறன் மூலம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து, வெற்றிகரமான வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை இனிவரும் காலங்களில் சனி பகவான்  தனது திருஷ்ட்டி மூலம் வழங்குகிறார், இனிவரும் காலங்களில் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் பிரகாசிக்கும், தான்  நினைத்ததை சாதிக்கும் வல்லமை உண்டாகும், எதிர்கால திட்டமிடுதல்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், தனது சமயோசித அறிவு திறன்  மற்றும் புத்திசாலித்தனம் சிம்மலக்கின அன்பர்களுக்கு  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பொதுக்காரியங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும், கமிஷன்,தரகு மற்றும் பங்கு வர்த்தக துறையில்  உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும், தனது அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வதற்கு உண்டான  சந்தர்ப்பங்கள் இயற்கையாக இவர்களுக்கு தேடிவரும், அதிகார பதவி,  மக்கள் ஆதரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம், உலக புகழ், பிரபல்ய யோகம் என சிம்ம லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தில் பல படிக்கட்டுகளை மிக எளிதாக கடக்கவும், அதன் வழியில் யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளையும் சனி பகவான்  சம சப்த 7ம் பார்வை வாரி வழங்கும், உண்மையில் சனி பகவானின் பார்வையின் மூலம் சகல யோகத்தையும் பெரும் அன்பர்கள் சிம்ம லக்கினத்தை, தனது ஜென்ம லக்கினமாக பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

2ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா வருமான வாய்ப்புகளை தொடர்ந்து வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையான தாம்பத்திய வாழ்க்கையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு சகல மரியாதையும் கிடைக்கும், மக்களை வசீகரிக்கும் யோகம் உண்டாகும், தனது வாக்கை தொழிலாக கொண்டவர்களுக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் காலம் இது, தன்னிறைவான பண வசதி, குறுகிய காலங்களில் நல்ல தன சேர்க்கையை பெரும் யோகம், எதிர்ப்புகளை களைந்து வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம், சகல விதங்களில் இருந்தும் மிகப்பெரிய நன்மைகளை பெரும் யோகம், தனது பரோபகார செயல்களால், சமூக மதிப்பு கூடும், ஜாதகர் ஈடுபடும் போட்டி பந்தயம், தேர்வு, தேர்தல் என அனைத்திலும் வெற்றிவாய்ப்பினை வாரி வழங்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து மற்றும் அரசியல் பதவிகளை வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, திட்டமிட்ட செயல்பாடுகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மன நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு இறை அருள் தந்த " நன்கொடை " என்றால் அது மிகை அல்ல, மேலும் தற்போழுது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், சிம்மலக்கின அன்பர்களுக்கு சகல விதங்களில் இருந்தும், 2ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகின்றார் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 5,10,11,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  5,10,11,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696