குழந்தை பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வழங்கும் அறிவுத்திறன் !




பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் ஒருவரின் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் அறிவு திறனின் செயல்பாடுகள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! சுய ஜாதக அமைப்பில் புத்திர பாக்கியம்,குல தெய்வத்தின் அருளாசி மற்றும் ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் ஜாதகர் தனது பூர்வீக அமைப்பில் இருந்து பெரும் யோக வாழ்க்கை அனைத்தையும், ஒன்று சேர வழங்குவது 5ம் பாவகமான பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் அது மிகையில்லை,.

 பொதுவாக ஜாதகம் காணும் பல ஜோதிடர்கள் 5ம் பாவகத்தை பற்றி சிறப்பித்து கூறுவது உண்டு, ஏனெனில் ஜாதகரின் அறிவுத்திறனை நிர்ணயம் செய்யும் பாவகம் என்பதால் 5ம் பாவகத்திர்க்கு இந்த பெருமை நிச்சயம் உண்டு, ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை ஒவ்வொரு விதத்தில் யோக பலனை தந்த போதிலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வழங்கும் பலன் என்பது ஜாதகரை சிறப்பு தகுதிகளுடன் பரிணமிக்க செய்யும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரை அமர்ந்த இடத்தில் இருந்து உலக பிரசித்தி பெற வைக்கும் வல்லமை இந்த 5ம் பாவகத்திற்கு உண்டு, பரம்பரை பரம்பரையாக முன்னோர்களின் வழியில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் அறிவாற்றலின் தனி தன்மையை பிரகாசிக்க செய்யும் வல்லமை 5ம் பாவகத்திற்கு உண்டு என்றால் அது மிகை அல்ல அன்பர்களே !

இந்திய மண்ணில் பாரம்பரியம் மிக்க பல விஷயங்களை வியப்புடன் மற்ற நாட்டினர் பார்ப்பதற்கு இந்த 5ம் பாவகம் காரணமாக அமைகிறது, என்ற உண்மை இந்திய மண்ணில் பிறந்த நமக்கே இன்னும் தெரியவில்லை என்பது ஒருபக்கம் இருந்த போதிலும், நமது முன்னோர்களின் அறிவு திறனின் செயல்பாட்டிற்கு ஒரு எல்லையே இல்லை என்பதே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், வணிக மேலாண்மை, வானியல் கண்டுபிடிப்புகள், கால கணிதம், கிரக,நட்சத்திர சூட்சம ஆய்வு, வருமுன் உணரும் முற்போக்கு சிந்தனை, விவசாய நெறிமுறைகள், ஆரோக்கியமான வாழ்விற்கான உணவு பழக்க வழக்கம், மருத்துவத்தில் நோய் தீர்க்கும் முறைகள், இறை வழிபாட்டில் சிறப்பு, மனிதர்களையும் விலங்குகளையும் அரவணைத்து செல்லும் பாங்கு, தனி மனித முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் என அனைத்து விஷயங்களிலும் சிறப்பான வெற்றிகளை காண்பதற்கு உண்டான விதிகளை வகுத்து வைத்தது அதன் வழியில் சிறப்பான மனித குல தோன்றுதலுக்கு ஆதாரமாக விளங்கியது நமது முன்னோர்களின் அறிவுத்திறன் என்றால் அது மிகையில்லை, அதற்க்கு காரணமாக அமைந்தது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகமே என்றால் இதை மறுக்கவும் இயலாது.

5ம் பாவகம் மற்றும் குல தெய்வம் என்ற ஒரு விஷயத்துடன் இணைத்தது, பாரம்பரியமாக தனது முன்னோர்கள் தனது வாரிசுகளுக்கு சொல்ல வேண்டிய சரியான அதே சமயம் உண்மையான விஷயங்களை குல தெய்வ வழிபாட்டின் மூலம் நாம் தெளிவாக உணராலாம், பாரம்பரியமாக தனது முன்னோர்களின் அறிவு  மற்றும் செயல்பாடுகளின் தன்மையை அவர்களின் வாரிசுகள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த குல தெய்வம் வழிவகுத்தது, அதன் வழியில் அவர்களின் வாரிசுகள் சிறப்பான வெற்றிகளையும், சரியான திட்டமிட்ட செயல்பாடுகளின் வழியில் முன்னேற்றங்களை மிக எளிதாக பெறுவதற்கு உண்டான வாய்ப்பை, இந்த குல தெய்வ வழிபாடு தருகிறது  என்பது நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க தக்க விஷயமாக உள்ளது, பொதுவாக 5ம் பாவகம் வலிமை பெறுவதால் ஜாதகர் யாருடைய உதவியும் இன்றி தன்னிச்சையாக தனது செயல்களிலும், முயற்ச்சிகளிலும் வெற்றி காண இயலும் என்பது கண்கூடான விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

இதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர் என்பது கடந்த சில வருடங்களில், இந்தியர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையில் இருந்து தெரியவரலாம் ( ஒரு வகையில் அவர்களின் தேடுதல்களுக்கு உண்டான அறிவு திறன் நம்மிடம் இருப்பதாக கொண்டாலும் கூட ) இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை எனலாம், இந்தியர்கள் சாதிக்கத விஷயங்களே இல்லை எனலாம், இந்த விஷயங்கள் சாத்திய பட்டது எப்படி என்றால்? அவர்களது ஜாதகத்தில் உள்ள 5ம் பாவகத்தின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, புதுமையான சிந்தனை, புதிய யுக்திகள் அனைத்தும் நமது வசம் இருந்த போதிலும் இதன் பயன்பாடுகள் என்பது மற்றவர்களுக்கே போய் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கல்வியில், புதிய கண்டுபிடிப்புகளில், ஆராய்ச்சியில், கணித துறையில், வணிக துறையில், நிதி நிர்வாகத்தில், மருத்துவத்தில் மேலும் பல துறைகளில் ஒரு ஜாதகரை பிரகாசிக்க வைப்பதில் 5ம் பாவகத்தின் பங்கு மிக அளப்பறியாத ஒன்றாகவே காணப்படுகிறது, நூதன தேடுதலுக்கு உண்டான விளக்கங்களையும், சரியான பதில்களையும் இந்த 5ம் பாவகமே வாரி வழங்குகிறது, மனிதகுலம் செழித்து ஓங்குவதற்கு உண்டான விஷயங்களையும், கருத்துகளையும் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமை இந்த 5ம் பாவகத்திற்கே உள்ளது, விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கே வெற்றிபெற 5ம் பாவகத்தின் வலிமை மிக மிக அவசியம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

5ம் பாவக வலிமையை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒருவரின் அறிவு திறன், சிந்தனை ஆற்றல், சமயோசித புத்திசாலித்தனம் என்று சொல்லாம், குல தேவதையின் அருளாசியுடன் 5ம் பாவக வலிமையின் தன்மைக்கு ஏற்ப சுய ஜாதக வெற்றிகள் அமையும் என்பதால், ஒரு  ஜாதகர் தனது பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையில் பின்பற்றிய ரகசிய யுக்திகளை உணர்ந்து, நமது படைப்பின் சாராம்சம் அறிந்து, தமது வாழ்க்கையில் தேடுதல்களின் பூரணத்துவ நிலையை  5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறனாலும் புத்திசாலிதனத்தாலும் நிச்சயம் பெறுவார், இதற்க்கு இறை நிலையின் அருள் துணைபுரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 30 செப்டம்பர், 2013

அளவற்ற நன்மைகள் வாரி வழங்கும் புரட்டாசி அமாவாசை வழிபாடு !



புத்திர பாக்கியம் உண்டாக :

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல், குடும்பத்தில் குழந்தை செல்வம் இருப்பின் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை என்பதே இருக்காது, பல காலங்கள் அல்லது வருடங்கள் குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியர்கள் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தங்களது குல தேவதை எங்கு உள்ளதோ அங்கு சென்று , தங்களது வழக்கமான குல தேவதை வழிபாட்டினை செய்யும் பொழுதும் , தங்களது பிதுருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யும் பொழுது 54 வருடங்களாக இருந்துவரும் குல தெய்வ சாபமும், பித்ரு சாபமும் நீங்கி எதிர்வரும் ஒருவருட காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், புத்திர சந்தானமும் உண்டாகும்.

கல்வியில் தடை நீங்க :

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கு ஏற்ற போல் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கல்வியில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் வெற்றிவாகை சூட , எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் குலதேவதைக்கு வஸ்திர தானம் செய்து வழிபடும்பொழுது சம்பந்த பட்ட குழந்தைகள் கல்வியில் மிகப்பெரிய வெற்றியையும் , சிறந்த மதிப்பெண்களையும் பெறுவார்கள்.

 மேலும் தான் கற்ற கல்வியின் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த உறவுகளுக்கும் பெற்றோருக்கும், வாழ்க்கையை கற்றுத்தரும் இந்த சமுதயத்திற்கும் பயனுள்ள வகையில் தனது வாழ்க்கையை தானாகவே சுயமாக அமைத்துகொள்ளும் தன்மையை பெறுவார்கள், எவருடைய உதவியும் நாடாமல் தனது சொந்த காலில் நிற்கும் தனி திறமையை தரும் மேற்கண்ட குல தேவதை வழிபாடு.

உடல் நலம் மேலோங்கவும், விபத்தினை தவிர்க்கவும் :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத விஷயமாக கருதலாம், பல இடங்களுக்கு சென்று வரும் நமக்கு எந்த நேரத்தில் என்ன ? நேரும் என்று சொல்ல இயலாது, ஒரு விபத்தில் உயிர் பிழைக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் வாக்கியம் "என்ன புண்ணியம் செய்தார்களோ இவரது பெற்றோர்கள்" பெரிய பாதிப்பில்லாமல் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டார் என்பதாக இருக்கும் , இந்த புண்ணிய பதிவினை ஜாதகனுக்கு சரியான நேரத்தில் கொடுத்து உயிர் காக்கும் தன்மையை தருவது பித்ரு வழிபாடு என்றால் அது மிகையில்லை.

 ஒருவர் அல்லது அவரை சார்ந்த முன்னோர்கள் பல புண்ணிய காரியங்களை செய்திருந்தாலும் அதை பெறுவதற்கு, சம்பந்த பட்ட ஜாதகர் வருடம் தவறாமல் பித்ரு கடமையை செய்து வந்தால் மட்டுமே, ஜாதகர் தாம், தமது முன்னோர்கள் செய்த புண்ணிய பதிவின் பலன்களை அனுபவிக்க இயலும், எனவே எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் பித்ரு கடமைகளை முறையாக பிண்டம் வைத்து செய்யும் பொழுது , சம்பந்தபட்ட ஜாதகரின் குடும்பத்தில் உடல் நலம் இன்றி இருந்தவர்களின் ஆரோக்கியம் மேம்படும், திடீர் என நிகழும் விபத்துகளில் இருந்து ஜாதகரும், ஜாதகரின் குடும்பமும் காப்பாற்ற படும் .

செய்யும் தொழில் சிறக்கவும், திடீர் பொருள் இழப்பை தவிர்க்கவும் :

சில அன்பர்கள் செய்யும் தொழில் திடீர் என முடங்கிவிடும், அல்லது பணியாற்றும் இடத்தில் இருந்து வேலை பறிபோய்விடும், இதனால் ஜாதகர் செய்வது அறியாமல் திகைக்கும் சூழ்நிலையை தரும் , சில நேரங்களில் கூட்டு  தொழில் செய்யும் அன்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு தொழில் பிரிவினை ஏற்படும் , இதனால் சம்பந்தபட்ட இருவரும் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், மேலும் செய்யும் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான தொழில் சிக்கல்களை தர கூடும் இதனால் ஜாதகரும், ஜாதகரை சார்ந்தவர்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

 இந்த நிலையில் இருந்து மீண்டு வரவும் செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம் பெறவும், திடீர் பண பொருள் இழப்பில் இருந்து மீண்டு செய்யும் தொழில் முன்னேற்ற பாதையிலே செல்லவும் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெறவும், ஜாதகர் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தேவதைக்கு பால்,தேன்,இளநீர்,மஞ்சள்,குங்கும அபிஷேகம் செய்து , கனி வகைகளை தானம் செய்து தொழில் முன்னேற்றத்தை பெறலாம், இதை தொடர்ந்து வருடம் தவறாமல் செய்யும் பொழுது ஜாதகருக்கு படிப்படியான தொழில் முன்னேற்றத்தை மட்டுமே இறைஅருள் தந்துகொண்டு இருக்கும் .

திருமண தடை நீங்கவும் தம்பதியர் ஒற்றுமை ஓங்கவும் :

சரியான பருவ வயதில் திருமணம் நடை பெறாமல், திருமணம் வாழ்க்கை தள்ளி போவதற்கும், திருமணம் ஆன தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு திருமண வாழ்க்கையில் மன முறிவு ஏற்படுவதற்கும் அதி முக்கிய காரணமாக அவர்களது ஜாதகத்தில் பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமுமே காரணமாக அமைகிறது, குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த நிலை ஏற்ப்படும் பொழுது அவர்களின் வாழ்க்கை நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது, பெற்றோர் அதரவின்றியும், வாழ்க்கை துணையின் ஆதரவின்றியும், சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, கடுமையான மன போராட்டத்திற்கு தள்ளிவிடும் தன்மையை தரும்.

 மேலும் வாழ்க்கையை நேர்கோட்டில் வழ தவறிவிட்டால் அவர்களின் நிலை இதைவிட மோசமான சூழ்நிலையையும், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையை தந்துவிடும் , இந்த நிலையில் இருந்து சம்பந்தபட்டவர்கள் வாழ்க்கை நிலை மாறவும், தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பான திருமண வாழ்க்கை அமையவும் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில், அவரவர் குல தெய்வ கோவிலுக்கு சென்று தனது பெற்றோர்களுக்கு புத்தாடை தானம் செய்து ( அல்லது பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் ) அவர்கள் கையால் அட்சதை ஆசிர்வாதம் பெற்றால், சம்பந்த பட்ட அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் சிறப்பான முறையில் அமையும், திருமணம் செய்துகொண்ட தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தாம்பத்தியம் சிறக்கும், மன வாழ்க்கை இனிக்கும் .

மேற்கண்ட பெருமைகள் பெற்ற புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தெய்வ கடமையையும், பித்ரு கடமையையும், பிராமண தர்மத்தையும் சிரத்தையுடன் செய்து தங்களது வாழ்க்கையில் இறையருளின் கருணையினால் சகல நலன்களையும் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறை அருள் துணை நிற்கட்டும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696