எதிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூன், 2015

லக்கினதிபதியின் திசை ஜாதகருக்கு நன்மையை மட்டுமே தருமா ?



சுய ஜாதகத்தில் லக்கினாதிபதி எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர் தனது திசையில் நன்மையை மட்டுமே தருவார் என்ற கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவே
" ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் எந்த பாவகத்திர்க்கு அதிபதி என்றாலும் சரி தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறாரோ, அந்த பாவக பலனை தங்கு தடையின்றி 100 % செய்வார் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இதில் லக்கினாதிபதி,கேந்திராதிபதி, கோனாதிபதி என்ற விதி விளக்கு கிடையாது, இதை சரியான உதாரண ஜாதகம் கொண்டு காண்பது, தெளிவை தரும்.


லக்கினம் : மகரம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்
 
ஜாதகருக்கு அடுத்து வரும் திசை சனி திசை ( 04/08/2016 முதல் 04/08/2035 வரை ) இந்த ஜாதகருக்கு லக்கினம் மற்றும் இரண்டாம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவாதல், சனிபகவானின் திசை ஜாதகருக்கு மிகுந்த யோகத்தையும் தான வரவையும் ஏற்ப்படுத்தும் என்பதாக பலன் சொல்லபட்டு இருக்கிறது, பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பாவகத்திர்க்கு அதிபதியை நிர்ணயம் செய்யும் பொழுது, அந்த ராசிக்கு அதிபதியை பாவக அதிபதியாக நிர்ணயம் செய்வது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும், மேலும் இது சரியான பலனை நிர்ணயம் செய்ய உதவாது, இந்த ஜாதகருக்கு  லக்கினத்திற்கு அதிபதி சனி அல்ல குரு என்பதே ஜாதக கணிதம் அறிந்த  அனைவருக்கும் தெளிவாக புரியும்.

மேலும் ஜாதகருக்கு சனி திசை வழங்கும் பலன்களை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், சனிபகவான் ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர எதுவாக உள்ளது, பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர  நீர்ராசியாக அமைவதும், கால புருஷ அமைப்பிற்கு 8ம் ராசியாக   அமைவதும் ஜாதகர் சனி திசையில் எதிர்கொள்ள இருக்கும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும் காட்டுகிறது, மேலும் ஜாதகர் மனதளவில்  அதிக போராட்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே ஜாதகர் எதிர்வர இருக்கும் சனி  திசையை மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது மட்டும்   உறுதி, லக்கினாதிபதி திசை தனக்கு நன்மை தரும் என்று ஜாதகர் கவனம் இன்றி இருப்பின் ஜாதகருக்கு வரும் இழப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கும்  என்பது மட்டும் நிச்சயம்.

பொதுவாக சுய ஜாதகத்தில்  நடைபெறும் திசை புத்திகள், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் எதிர்காலத்தை ஜாதகர் மிக தெளிவாக மிக எளிதாக எதிர்கொள்ள இயலூம், மாறாக நடைபெறும் திசை புத்தி எந்த பாவக பலனை வழங்குகிறது என்ற விஷயம் தெரியாத பொழுது , ஜாதகர் உண்மைக்கு புறம்பான ஆலோசனைகளின் பேரில் மிக பெரிய  பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட கூடும், மேற்கண்ட ஜாதகத்தில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையிலும், 2ம் பாவக அதிபதி என்ற முறையிலும், லக்கினத்திற்கு 8ல்  மறைவு நிலையில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு லக்கினத்திற்கு அதிபதியாக வருவதால் மிகுந்த நன்மையை செய்வார் என்று  கணிப்பது மிக மிக தவறு, மேலும் சனி பாகாவன் திசை ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது நிச்சயம் நன்மையை தர  வாய்ப்பில்லை.

 எனவே ஜாதகர் 6,9,11ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது மட்டும் ஊறுதி, ஆக மேற்கண்ட வீடுகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகர் தன்னை தற்காத்து கொள்வது மிகுந்த  நலன்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடன்,நோய் மற்றும்  எதிரிகள் தொந்தரவு, 9ம் பாவக வழியில் இருந்து தனது நர்ப்பெயருக்கு களங்கம், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது, அறிவு திறன் மங்குதல், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைதல், பிற்போக்கு எண்ணங்கள், நம்பிக்கை இல்லாமல் செயல்படுதல் என்ற வகையில் பலன்களை தரக்கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 3 நவம்பர், 2014

" மறைந்த புதன் நிறைந்த கலை " என்பதற்கு ஏற்ப சுய ஜாதகத்தில் புதன் பலன் தருமா ?



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக வருவது கன்னி ராசி இதன் அதிபதி புதன், இங்கு புதன் ஆட்சி மற்றும் உச்ச நிலையை பெறுகிறார், மேலும் உபய மண் தத்துவ அமைப்பை கன்னி ராசி பெறுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தை மறைவு ஸ்தானமாக பாவிப்பார்கள், மேலும் 6ம் பாவகம் சத்ரு ஸ்தானமாக வர்ணிப்பதும் உண்டு, சுய ஜாதகத்தில் ஒருவரின் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியையும், பங்கு பெரும் போட்டி பந்தையங்களில் எதிர்பாராத வெற்றியையும், எதிரிகளின் சதியை முறியடிக்கும் அபரிவிதமான ஆற்றலையும், வழக்குகளில் பெரும் வெற்றியையும் குறிக்கும், மேலும் ஜாதகர் அரியகலைகளில் அபரிவிதமான அறிவு திறனையும், செயல் திறனையும் வாரி வழங்கும், இந்த விஷயம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக கன்னி ராசி வருவதாலும், இங்கே உபய மண் தத்துவம் சிறப்பாக செயல்பட்டு, புதன் ஆட்சி உச்சம் பெறுவதாலும் " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு பொருத்தமானதாகவே இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.


ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் 6ம் பாவகத்தில் அமர்வது அந்தஜாதகருக்கு பலவகையான தனி திறமைகளை வாரி வழங்கி விடுகிறார் ( 6ம் பாவகம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ) மேலும் ஜாதகருடன் தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள்,உறவுகள், எதிர்பாலினரின் தன்மையை தெளிவாக தெரிவிப்பது, ஜாதகரின் 6ம் பாவகமே, மேலும் ஜாதகரின் சூட்சம அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை இந்த ஆறாம் பாவகத்திர்க்கே உண்டு என்பதால், நுண்ணறிவுக்கு அதிபதியான புதன் இங்கு வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சிந்தனை,அறிவாற்றல்,செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் மெச்சும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 6ம் பாவகத்தில் அமரும் புதன் ஜாதகருக்கு தனது வழியில் இருந்து எவ்வித யோகங்களை வழங்குகிறார், என்பதை இனி சிந்திப்போம்.

6ம் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் துரித கதியில் மிக சிறப்பாக செயல்படும், 6ம் பாவகம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நிதானமாக ஸ்திர தன்மையுடன் நீண்ட நாட்கள் பலன் தரும் அமைப்பில் செயல்படும், 6ம் பாவகம் உபய ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் தனக்கும் மற்றவருக்கும் குறுகிய காலத்திற்கு மட்டும் பலன்தரும் அமைப்பை தரும், இந்த விஷயம் சுய ஜாதகத்தில் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப சில மாறுபட்ட பலன்களை தந்த போதிலும், அதிக சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கின்றது.

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு நெருப்பு தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு அரிய கலைகளில், போர் முறைகள் சார்ந்த விசயங்களில் ஞானம் உண்டாகும், எதிரிகளை தாக்கும் சூட்சம கலைகளில் சிறந்து விளங்குவார்கள், குறிப்பாக வில் அம்பு எய்தல், துப்பாக்கி சுடுதல், ரகசிய போர் முறைகளை அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், வீரம் சார்ந்த ரகசிய கலைகளில் அபரிவிதமான தேர்சியை தரும், தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும்  வல்லமை ஜாதகருக்கு மிக எளிதாக கைவர பெறுவார், நெருப்பு தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்களை வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் மண் தத்துவமாக இருப்பின் ஜாதகர் மருத்துவ கலையில் சிறந்து விளங்குவார் , ஒருவரை பார்த்த உடனே அவரின் உடல் நிலையை மிக சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும், மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பல மூலிகை ரகசியங்களை அறிந்திருக்கும் பலரது ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை பார்க்க முடிகிறது, மேலும் சித்த மருத்துவ முறையில் சிறந்த வைத்திய  ரகசியங்களை அறிந்துகொள்ளும் யோகத்தையும் இங்கு அமரும் புதன் வாரி வழங்கி விடுகிறார்.

6ம் பாவகம் காற்று தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு கணிதம்,ஜோதிடம்,எதிர்காலத்தை  துல்லியாமாக கணிதம் செய்யும் அனைத்து ஜோதிட கலைகளிலும் அபரிவிதமான ஞானத்தையும், தெளிவான கலை நுணுக்கத்தையும் வழங்குகிறது, மேலும் எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து போன்ற  கலைகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தருகிறது, மேலும் இயல் இசை நாடகம் மற்றும் சிற்ப கலையில் சிறந்து விளங்கும் நுண் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது, ஜாதகரின் அறிவாற்றல் பலரது வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் தன்மையை, காற்று தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் நீர் தத்துவமாக இருப்பின் ஜாதகர் சிறந்த மனோதத்துவ நிபுனாராக விளங்குவார், ஜாதகரின் மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியும் தன்மையை சிறு வயதிலேயே பெற்று விடும், குறிப்பாக நல்ல மனோதத்துவ நிபுணர் தனது மனதை ஒருநிலை படுத்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளுணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார், சரித்திரத்தில் சில பாத்திரங்களை மிருக பாஷை அறிந்தவராக சிததரித்து இருப்பார்கள், அதற்க்கு பொருத்தமானவர்கள் என்று இவர்களை சொல்லலாம், டெலிபதி, கிரகங்களின் தன்மையை உள்ளுணர்வாக புரிந்து கொள்ளும் மன ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேலும் மண்ணில் புதையுண்ட ரகசியங்களை அறிந்துகொள்ளும் தன்மையையும், பின்னல் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்து கூறும் வல்லமையை, நீர் தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

மேலும் சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தில் சாய கிரகமான ராகு அல்லது கேதுவோ ஆளுமை செய்து 6ம் பாவகத்தை வலிமை பெரும் தன்மையில் இருக்குமாயின், புதனின் அபரிவிதமான சக்தியை சாயா கிரகங்கள் பெற்று பன்மடங்கு அதிகரித்து தரும் என்பது குறிப்பிட தக்கது, ராகு கேதுவுடன் சேர்ந்த புதனின் தன்மை பன்மடங்காக அதிகரிக்கும், குறிப்பக கேதுவுடன் சேரும் பொழுது அபரிவிதமான அறிவாற்றலையும், ராகுவுடன் சேரும்பொழுது அளவில்லா உடல் வலிமையையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறது  என்பது கவனிக்க தக்க ஒரு சிறப்பு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

எனவே " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு நிச்சயம் உண்மையானதே, இதை வேறுஒரு பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு உறுதி செய்வோம் அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !



பொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.

6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா ? அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

ஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில்  ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்)  வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .

6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.

2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின்  வலிமையே என்றால் அது மிகையாகாது .

3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை  தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .

4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும்  பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.

5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம்  மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் . 

6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் . 

8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :  

1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்களை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .

3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.

4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும்  ஆயுள் பாவகத்தின் வலிமையே.

5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில்  ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில்  அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .

6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.

12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக  அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம்  உருவாகும்.

2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக  ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொலைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.

3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த  திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .

4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை  தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில்  தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .

5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .

6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும்  பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை அன்பர்களே ! துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com