தனுசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனுசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : தனுசு லக்கினம் ( 2019-2020 )




தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிமை மிக்க யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : தனுசு 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாகவும் விளங்கும் தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலும், லக்கினமான  1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் திடீர் அதிர்ஷ்டம் என வெகு சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்க தக்கது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் அல்லது  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், வியாபார விருத்தி அளவில்லா லாபங்களை வாரி வழங்கும் பொதுமக்கள் ஆதரவு, விளம்பரம் மூலம் சிறப்பான நன்மைகளை பெரும் நேரமிது, இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபயோக வாழ்க்கையை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணையுடன் இணக்கமற்ற சூழ்நிலை, கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள், திருப்தி இல்லாத மனநிலை, சரியான தகவல்களை பெற இயலாமல் முரண் பட்ட கருத்துக்களால் தடுமாறும் தன்மை, எதிர்ப்புகள் மூலம் ஏற்படும் நஷ்டங்கள், தெளிவில்லாத முடிவுகள், சிந்தனை திறனில் குறைபாடு, முன்னேற்றமின்மை, பதற்றம், செயல்திறன் பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் தோல்வியை தரும், உறவுகள் வழியில் இருந்து வரும் அதீத தொல்லைகள், பொருள் இழப்பு, மதிப்பு மரியாதை குறைவு, தொழில் முறை கூட்டாளிகளுடன் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வரும் இன்னல்களை சமாளிக்க இயலாமல் கடுமையாக பாதிக்கும் நிலை என வெகுவான துன்பங்களை தரக்கூடும்.

உயிர் உடலாகிய ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தனுசு லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க  தக்கது, சுய கட்டுப்பாடு அதிகரிக்கும், உடல் நலம்  மேலோங்கும், எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிட்டும், மனஉறுதி மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடி வரும், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வமும், செயல்பாடுகளில் வீரியமும் அதிகரிக்கும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் சரியான முடிவுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள், தங்களின் அறிவு வெகு பிரகாசமாக நன்மைகளை வாரி வழங்கும், புகழ் வெற்றி சமூக அந்தஸ்த்து தேடி வரும், தங்களின் அறிவு திறனை கண்டு அனைவரும் வியந்து நிற்பார்கள், கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் தங்களுக்கு அதீத ஞானத்தையும், தெளிவான சிந்தனையையும் வாரி வழங்கும், முழு அளவில் கேதுவின் ஆதிக்கத்தில் தங்களின் உடல்,மனம் கட்டுக்குள் அடங்கி சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்கும், எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள், தொழில் வழியிலான திட்டமிடுதல்கள் தங்களுக்கான நெடுநாள் வளர்ச்சியை உறுதி செய்யும், நல்ல ஞானம் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும்.

ஆன்மீக பெரியோர்கள் சந்திப்பு, ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிட்டும், இது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் தேர்ச்சி, குறிப்பாக ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, வெளியூர் சென்று படிக்கும் யோகம், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல நன்மைகளையும் பெரும் தன்மை, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சுவீகரிக்கும் யோகம், தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  வரும் யோக வாழ்க்கை என சிறப்பு மிக்க நன்மைகள் நடைமுறைக்கு வரும், சுய ஞானம், நல்லறிவு, தெளிவான சிந்தனை போன்றவை தங்களின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை தருவதுடன், நிலையான முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்களின் நம்பிக்கை பரிபூர்ண வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், லட்சியம் வெற்றி பெரும், தங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து நின்று வெற்றியை உறுதி செய்யும், சமூகத்தில் அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும் என்பதுடன், அரசியல் அல்லது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உண்டாகும், செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பை சேர்த்து, கவுரவம் அந்தஸ்த்துடன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெரும் நேரமிது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : சிம்ம லக்கினம் ( 2019-2020 )


 "அடிச்சது ஜாக்பாட்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு என்று சொல்லலாம் -  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : சிம்மம்

கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடு மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானமாக விளங்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் ராகு பகவானும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதீத லாபங்களை அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் நிலையில் தனது சஞ்சார நிலையை துவங்குவது வரவேற்கத்தக்கது, இதுவரை வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருந்த சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டத்தின் தாக்கம் சற்று அதிக அளவில் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல லாபங்களுடன் கூடிய வெற்றியை தரும், முற்போக்கு சிந்தனையும் தன்னம்பிக்கையும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்லதோர் முன்னேற்றத்தை வழங்கும், தெய்வீக அனுகிரகம் எதிர்ப்புகளை களைந்து சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், வியாபாரம் சிறக்கும், தொழில் வழியிலான புதிய நடவடிக்கைகள் எதிர்பாராத நன்மைகளை தரும், புதிய பொறுப்புகள் வழியிலான அதிர்ஷ்டங்கள் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தெளிவான வாழ்க்கை பாதையை அமைத்து தரும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு நற்பெயரும் எதிர்ப்புகளற்ற வெற்றியும் கிட்டும், தனது வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உடையவர்களாக சிம்ம லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பிரகாசிப்பார்கள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள், வருமானம் அதிர்ஷ்டம் போன்றவை இவர்களது வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும்.

கமிஷன் வியாபாரம், தரகு, காண்ட்ராக்ட் போன்ற துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், நிலுவையில் உள்ள பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வும், எதிர்ப்புகளற்ற வியாபர வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அபரிவித முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், குறிப்பாக மனதில் உள்ள திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் காலம் இதுவென்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் அதிர்ஷ்டமும் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதால் தங்களின் முயற்சியில் யாதொரு தொய்வும் இன்றி செயல்படுவது அவசியமாகிறது, சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு வழியில் இருந்து நல்ல வெற்றிகளை தாங்கள் நிச்சயம் உறுதியாக எதிர்பார்க்கலாம், வியாபாரம் மட்டுமே நோக்கமாக உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் நல்லொதொரு வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு நலம் பெறுங்கள், சாயா கிரகமான ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தான சஞ்சார நிலையில் நின்று 100% விகித நன்மைகளை மட்டுமே  தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கலைத்துறையில் தேடுதல் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வெற்றிமீது வெற்றி வந்து சேரும் என்பதுடன் பிரபல்ய யோகம் உண்டாகும், அதிர்ஷ்டத்தின் வழியில் தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்று யோக வாழ்க்கையை பெறுவதற்கு தயார் நிலையில் இருக்க "ஜோதிடதீபம்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்க கடமை பட்டுள்ளது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து இனிவரும் 18 மாதங்கள் 100% விகித நன்மைகளை மட்டுமே வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது, சிம்ம லக்கின அன்பர்களின் சமயோசித புத்திசாலித்தனம் இனி மேலோங்கி நிற்கும், தங்களுக்கு வரும் யாதொரு பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உண்டாகும், தேடிவந்து உதவி செய்வார்கள், பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத செல்வாக்கை பெற்று தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களின் வாழ்க்கையில் சிறப்பானதொரு வெற்றி பாதையை அமைத்து தரும், பொறுப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள் மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்புகளை இறை அருள் வாரி வழங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் யோகம் மிக்கதாக அமையும் என்பது உறுதியான விஷயமாக படுகிறது, தெய்வீக காரியங்கள் ஆற்றி அதன் வழியில் சுபயோகங்களையும், வெற்றிகளையும் சுவீகரிக்கும் வாய்ப்பை தரும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சமூக அந்தஸ்த்து வெகுவாக உயரும், நல்ல நண்பர்கள் சேர்க்கை அல்லது வயதில் அதிகமுள்ளோர் வழிகாட்டுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறந்த திருப்பு முனையை ஏற்ற்படுத்தும், ஆன்மீக திருத்தல வழிபாடுகள், நீண்டநாள் கனவான ஆன்மீக சுற்றுலா சார்ந்த விஷயங்களில் தடை இருப்பின் அது நீங்கி எண்ணம் போல் ஆசைகள் நிறைவேறும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், இதுவரை புத்திர பாக்கியம் அற்ற அன்பர்களுக்கு யோகம் மிக்க வாரிசுகள் அமையும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கைக்கு நல்லதோர் அடித்தளத்தை அமைத்து தரும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜோதிடம், சாஸ்திர ஞானம், மந்திர உபதேசம், இறைவழிபாடு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் இயற்கையாக அமையும், தெய்வீக தரிசனமும், ஆன்மீக வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றியும் இதுவரை எதிர்பார்த்த பதவியும் தங்களை தேடிவரும், புதிய கண்டுபிடிப்புகள் தங்களின் எதிர்கால  வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நிம்மதி மிக்க வாழ்க்கையில் பெருமை மிகு காரியங்களை செய்து புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னிறைவான பொருளாதர வசதிகளை தனது அறிவுத்திறன் கொண்டு சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் தேடிவரும், ஆய கலைகள் 64ல் ஆர்வம் உள்ள கலையில் தேர்ச்சியும் வெற்றியும் 100% விகிதம் உண்டாகும், முற்போக்கு சிந்தனை சமயோசித அறிவு திறன், மேம்பட்ட அறிவாற்றல் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை சிம்ம லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, கேது பகவானின் தனுசு ராசி சஞ்சார நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதுவித யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக கலை துறையில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் காலம் மிகப்பெரிய யோக காலமாக அமையும், சாஸ்திர சார்ந்த ஆய்வுகளில் வியக்கத்தக்க உண்மைகள் வெளிவரும், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றமும், ஞானம் பெற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக மக்களிடம் பிரகாசிப்பார்கள், சிம்ம லக்கின அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியும், லாபமும் பெறுவார்கள், சிம்ம லக்கின அன்பர்களின் அறிவு திறன் மிக பெரிய அளவில் பிரகாசிக்கும், பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள் சிம்ம லக்கின அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து சிம்ம லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )



 நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 27 டிசம்பர், 2018

சுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் !



பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம்  சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

இந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில்  பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி  வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த  பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 19 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ தன்மை பெற்றதுமான தனுசு லக்கின அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஒருவகையில் லக்கினாதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திற்கு அதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், எனவே லக்கினத்திற்கு 12ல் மறைவும், 4ம் பாவகத்திற்கு 9ல் கோண பலம் பெறுகின்றார், குரு பகவான் விருச்சிகத்தில் அமர்ந்த நிலையில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு சற்று வீண் விரயங்களை தரக்கூடும், மேலும் சுப விரையங்களாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை தனசு லக்கின அன்பர்கள் உருவாக்கி கொள்வது அவசியமாகிறது, மேலும் எதிர்பாராத மனஉளைச்சல், மனப்போராட்டம், மனஅழுத்தம் போன்றவை மென்மேலும் துன்பங்களை தரக்கூடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலையும், அனைவராலும் துன்பம் என்ற நிலையும் தனுசு லக்கின அன்பர்களுக்கு மிகப்பெரிய சவால்களாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது, லக்கினாதிபதி மறைவு பெறுவதும், சுக ஸ்தான அதிபதி கோணபலம் பெறுவதும் தனுசு லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணமும், தான் எடுக்கும் முடிவுகளில் தெளிவும் தேவை என்பதை உணர்வது அவசியமாகிறது, மேலும் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல வண்டி வாகனம், வீடு சொத்து சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனம் தேவை, சிறு கவனமின்மை கூட தனுசு லக்கின அன்பர்களுக்கு கடுமையான பாதிப்பையும் இழப்பையும் தரக்கூடும் என்பதால், பயணங்களில் கவனமும், சொத்து சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையும் கொண்டிருப்பது அவசியமாகிறது, தனது பெற்றோரை கவனமுடன் பாதுகாப்பது ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து காத்தருளும், அனைவரிடமும் சுமுக போக்கை கையாள்வது ஜாதகருக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், புதிய வீடு, வண்டி வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யுமுன் சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து செய்வதே சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், ரிஷபம் எதிர் வர்க்க கிரகம் என்பதும் சற்று கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், குரு பார்வை பொதுவாக கோண வீடுகளை ( 1,5,9 ) சுவீகரிக்கும் பொழுதும், சம வீடுகளை ( 3,11 ) சுவீகரிக்கும் பொழுது மட்டுமே சுபயோகங்களை வாரி வழங்கும் , கேந்திர வீடுகளை பார்வை செய்யும் பொழுது இன்னல்களையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குருபகவானின் சமசப்த பார்வை சத்ரு ஸ்தானத்திற்கு விழுவது கடுமையான இன்னல்களையே தரும், குறிப்பாக ஜாதகரின் குறுகிய கால வருமானங்களில் தொய்வு ஏற்படும், உடல் நலம் பாதிக்கும் குறிப்பாக தலை மற்றும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, மேலும் கடன், வரவு செலவுகள் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது சகல நன்மைகளையும் தரும், மேலும் தனது வார்த்தைகள் மூலம் அதீத துன்பங்கள் உண்டாகவும், எதிர்ப்புகள் அதிகரிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் நாவடக்கம் தனுசு லக்கின அன்பர்களுக்கு அவசியமாகிறது, குரு பார்வையால் ஏற்படும் ஒரே நன்மை மற்றவர்கள் பணம் தன் கையிருப்பாக மாறும், அதன் வழியிலான வருமானம் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக அமைவதும் சிறப்பான நன்மைகளை தரும், திடீர் அதிர்ஷ்டம் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் கைகொடுக்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவும், பொருளாதார உதவிகளும் தனுசு லக்கின அன்பர்களுக்கு பேருதவியாக அமையும், ஆயுள் நீடிக்கும், உடல் நலம் மற்றும் இழப்புகளில் இருந்து மீண்டு வரும்  யோகம் உண்டாகும், பங்கு சந்தை லாட்டரியில் யோகம் உண்டு, புதையல் கனிம பொருட்கள் வழியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு அபரிவிதமான தனசேர்க்கை உண்டாகும், தெய்வீக  அனுக்கிரகம் சுய ஜாதகத்தில் ஆளுமை செய்யும் என்பதால் ஆன்மீக வெற்றி உண்டாகும், புதிய மனிதர்கள், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழங்கும் நன்மையாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

செவ்வாய், 9 மே, 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( வலிமை பெற்ற சுயஜாதகம் )



சுய ஜாதகம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, அவரது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியிலான சுபயோகங்களை ஸ்திரமாக பெற்று தரும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும், வலிமை பெற்ற சுய ஜாதகம் ஜாதகருக்கு வழங்கும் சுப யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அதற்க்கு முன் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது, ஜாதகருக்கு எப்படி சுப யோகங்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தாலும், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு சுப யோக பலன்களே நடைமுறைக்கு வரும், மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலை வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் நடைமுறைக்கு வரும்.


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து மனநிலையில் தெளிவு,  ஞாபக சக்தி மற்றும் நுண்ணறிவு பாதிப்பு, வீடு வண்டிவாகனம் பாதிப்பு, அடிக்கடி மாற்றுதல், கால்நடைகள் மூலம் விரையம், பயணம் மூலம் பாதிப்பு, அமைதியின்மை, பேரம் மாறும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் நஷ்டம், மற்றவர்கள் விஷயங்களில்  தலையீடு செய்வதால் இன்னல்கள்  என்ற வகையில் சிரமங்களை தந்த போதிலும், நல்ல குணம் அமையும், அறிவு திறன் மூலம் தனது  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் யோகம் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள், ஏஜென்சி மற்றும் காண்ட்ராக்ட் விஷயங்களில் லாபம், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் நன்மையை தரும், எதிரிகளால் செல்வாக்கு உண்டாகும், சகல சௌபாக்கியம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதிரிகள் பலம் குறையும், எதிர்பாராத வகையில் சொத்தது சுக சேர்க்கை உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு,  பிரயாணங்களில் விருப்பம், ஆராய்ச்சி துறையில் வெற்றி, பணியில் இடம் மாற்றம், புதிய சூழ்நிலைகளில் ஆர்வம், சகோதர வழி நற்பெயர், தனது அறிவு திறனை எழுத்துருவாக மாற்றும் வல்லமை, அதன் வழியிலான சுய முன்னேற்றம், சுயநலம் கருதா நிலை என்ற வகையில் சுப யோகங்களை நல்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி துறையில் ஜாதகர் புகழ் பெற்ற வியாபாரியாக திகழும் வாய்ப்பை தரும், எழுத்து மற்றும் பத்திரிக்கை துறையில் பெயரும் புகழும் உண்டாகும், வியாபார ஆலோசனை வழங்கும் துறையில் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும், வீரியமிக்க தொழில் துறையில் ஜாதகர் வெற்றி பெறுவார், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மூலம் ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், செய்யும் தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், திடீர் செல்வத்தை தொழில் மூலம் ஜாதகர் பெறுவார், அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடு யோகம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், செய்த முதலீடுகள் வழியிலான லாபம் பெரிய அளவில் வந்து சேரும், நல்ல உறக்கம், சிறந்த ஆன்மீக வழியிலான தேடுதல்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், திருப்தியான மனநிலையையும் தரும்.

  2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக  வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர் உதவி, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, வாக்கு சாதுர்யம், செய்யும் தொழில் வழியிலான சிறப்பான வருமானம், தெய்வீக சிந்தனை, பரிவு மிக்க செயல்பாடுகள், சிறந்த குடும்ப வாழ்க்கை, பல தொழில் செய்யும் யோகம், முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண் வாரிசு, குழந்தைகள் , மூலம் வாழ்க்கையில்  செல்வச்செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம், லாட்டரி யோகம் அறிவு திறனால் பெரும் வளர்ச்சி, எப்பொழுதும் சந்தோசம், குழந்தைகள் மற்றும் வாழ்க்கை துணையுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழும் யோகம், திருமணத்திற்கு பிறகான தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், குலதெய்வ அனுக்கிரகம், சந்தர்ப்பங்களை சரியாக கையாளும் வல்லமை, எதிர்பாராத வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம், தனது அறிவு திறன் மூலம் சகல செல்வங்களையும் பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நினைத்த ஆசைகள்  நிறைவேறும்யோகம், மிக சுலபமாக அனைத்தையும் வெற்றி கொள்ளுதல், திருப்தியான  மனநிலை, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியிலான  வருமான வாய்ப்புகள், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பால் அமைப்பினரால் பெரும் வருமானம், நீண்ட ஆயுள், திடீர் பொருள் வரவு, மருத்துவ உபகரணம் மூலம் அல்லது மருத்துவ துறையிலான லாபங்களை குறுக்கியகாலத்தில் பெரும் யோகம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை மூலம் பெரும் சொத்தது சேர்க்கை மற்றும் வருமானம் என்றவகையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், திருமணத்துக்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் திடீரென  பலிதம் பெரும் யோகம், தெய்வீக சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை தேடி பெரும் யோகம், எதிர்பாராத வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதர தன்னிறைவு, எதிர்ப்புகளை கடந்து  வெற்றிபெறும் யோகம், போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நல்ல மனநிலை, பின்யோக ஜாதகம் ( திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் )

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவது ஜாதகத்திலே மிகவும் மோசமான அமைப்பை தரும், மேலும் களத்திர ஸ்தான வழியிலான  இன்னல்கள்  ஜாதகருக்கு 200% விகித துன்பங்களை தரக்கூடும் என்பதால் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் இருப்பது நலம் தரும், ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது  சற்று சிரமம், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது குதிரை கொம்பு என்றே சொல்லலாம், பொதுமக்கள் வழியிலான வளர்ச்சி வெகுவாக குறையும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக எதிர்பாலின அன்பர்களின் பிரச்சனைகளில்  தலையீடு செய்யலாம் இருப்பதே ஜாதகருக்கு சகல அமைப்புகளில் இருந்தும் நன்மையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் : ( 30/05/2002 முதல் 30/05/2021 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக அமைத்து லாபங்களை அதிர்ஷ்டங்களையும் தான் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, விளையாட்டுகளில் ஆர்வம், பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்றவகையில் ஜாதகருக்கு சனி திசை முழு அளவிலான நன்மைகளையே ஸ்திரமாக வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளை பெற்று தரும், எந்த  சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில்  வெற்றிநடைபோடும் வாய்ப்பினை தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை 1,3ம் பாவக வழியில் இருந்து தரும், நல்ல ஆரோக்கியம், ஸ்திரமான மனநிலை, பயம் அறியா குணம், வீரியமிக்க செயல்திறம், அரசு துறையிலான ஆதரவு என்ற வகையில் ஜாதகருக்கு  சீரிய முன்னேற்றங்கள் வந்து சேரும், சனி திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பல சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்.

சனி திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தரும் பலன்கள் ( 11/01/2016 முதல்  17/11/2018 வரை )

ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி 2ம் வீடு திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், நிறைவான வருமான வாய்ப்பு வரும்படியான நல்ல பணி அமையும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும், தன்னம்பிக்கை  அதிகரிக்கும், திடீரென எதிர்பாராத சந்தோஷங்கள் மற்றும் மன நிறைவை தரும் காரியங்கள் நடைபெறும், குறிப்பாக திருமண வாய்ப்பு ஜாதகருக்கு திடீரென அமைய  வாய்ப்பு உண்டு என்பதால், விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெறுவது  அவசியமாகிறது மேலும் ஜாதகரின் பணியில் நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு என்பதால் ஜாதகருக்கு ராகு புத்தி மிகுந்த யோகத்தையே வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,10,11,12 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் பாதிக்கப்பட்ட பாவகம் என்பது களத்திர  ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஒன்று மட்டுமே மேலும் களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகவும் கடுமையானதாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ஜாதகர் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வலிமை பெற்ற ஜாதகத்தை  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும்  கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பதில் கவனம் கொள்ளக.

திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் :

கேது : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சுக்கிரன் : 

4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை மற்றும் புத்திகளில் யோக பலன்களை தருகின்றது.

சூரியன் : 

1ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சூரியன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சந்திரன் : 

5,8,11ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சந்திரன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

செவ்வாய் : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை செவ்வாய் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

ராகு : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

குரு : 

3ம் வீடு வலிமை பெற்ற 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும், 11ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் குரு திசை மற்றும் புத்திகளில் தருகின்றது. 

சனி : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற  3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சனி திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

புதன் : 

7ம் வீடு பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து 200 % விகித கடுமையான இன்னல்களையும் , மிகுந்த பாதிப்பையும் தருகின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு  நவகிரகங்களின் திசா புத்திகளில் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே கடுமையான தவிர்க்க இயலாத இன்னல்களை வாரி வழங்கும், மேலும் இதன் பாதிப்பு என்பது எதிர்பால் இனம் அல்லது மற்றவர்களால் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும், மற்ற திசா புத்திகள் யாவும் ஜாதகருக்கு பரிபூர்ண யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் தனுசு !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் ராசியான தனுசு  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஜென்ம ஸ்தானமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், தனுசு லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இயற்கையிலேயே மிதம்மிஞ்சிய அறிவு திறனையும், இறையருளின் பரிபூர்ண கருணையையும் பெற்ற தனுசு லக்கின அன்பர்களுக்கு இதுவரை விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு வீண் மனக்கவலைகளையும், வீண் விரைய செலவுகளையும் சற்று கடுமையாக வழங்கி இருக்கிறார், ஆனால் தற்பொழுது ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, உடல் வலிமையையும், மனவலிமையையும் சிறப்பாக வாரி வழங்குவார், புது தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செய்யும் செயல்களில் பொறுப்பும் கவனமும் அதிகரிக்கும் இதனால் தாங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், நேர்மை உண்மை சத்தியம் தவறாத தங்களின் நடவடிக்கைகள் மூலம் மற்றவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள், தொன்மையான புராதன திருக்கோவில்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஆன்மீகத்தில் உயர்நிலையை தரும், சமூகத்தில் மக்கள் செல்வாக்கு மூலம் அரசுபதவி தங்களுக்கு தேடிவரும், இதுவரை இருந்த உடல் நலக்குறைவு மாற்று மனப்போராட்டங்களுக்கு நல்லதோர் தீர்வும், அதனால் மனநிம்மதியும் கிட்டும், லக்கின பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு நல்ல படிப்பினையும், சத்தியத்தின் வலிமையையும் உணரவைப்பார்.

  6ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு குறுகியகால லாபங்களை தொடர்ந்து வழங்குவார், வழக்கில் சாதகமான தீர்ப்பு கிட்டும், தேர்வில் நல்ல தேர்ச்சியும், போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பும் உண்டாகும், ரத்த உறவுகள் வழியிலான லாபங்கள் மற்றும் வருமானம் வந்து சேரும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், வயிறு சார்ந்த இன்னல்கள் இருப்பின் அதற்க்கான மருத்துவம் மூலம் ஆரோக்கியமும் உண்டாகும், கடன் சார்ந்த விஷயங்களில் தங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும், திடீர் பண உதவி தங்களை தேடிவரும், குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், வாக்குவன்மை மூலம் நிலையான வருமானம் பெரும் யோகமும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் சிறப்பான  பொருளாதார  முன்னேற்றமும் உண்டாகும், எதிரிகளால் தங்களுக்கு நேர இருந்த இன்னல்கள் களைந்து, நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும், சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களின் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ செய்வார்.

7ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளியூரில் இருந்தும் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்குவார், அந்நிய நபர்கள் அல்லது அந்நிய தேசத்தினர் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை நல்குவார், திருமணம் சார்ந்த தடைகளை  சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆண் பெண் அன்பர்களுக்கு விரைவாக திருமண வாழ்க்கை அமையும், சனி பார்வை மிதுனத்திற்கு 7ம் பார்வையாக விழுவதும், புதன் சனி வர்க்க கிரகமாக அமைவதும் திருமண தடைகளை தகர்த்து சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்து தரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் யோகம் உண்டாகும், நல்ல மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக வியாபாரம், கூட்டு தொழில் அல்லது வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு சனியின் 7ம் பார்வை சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்குவார், சுய தொழில் புரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றம் அபரிவிதமாக அமையும், குறிப்பாக கடன் பெற்று தொழில் செய்யும் அன்பர்களுக்கு 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், தேடிவரும் தொழில் மற்றும் பண உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து தொழில் புரியும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அளவில்லா வருமானங்களை வாரி வழங்கும், சுய கெளரவம் மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும், உறுதிமிக்க செயல்பாடுகள் தீர்க்கமான வாத திறமை தங்களின் ஜீவன முன்னேற்றத்தை பலமடங்கு முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும், சீரிய முயற்சிகள் மூலம் பல வெற்றிகளை பெற சரியான நேரம் இதுவே, சனி பகவானின் ஜீவன ஸ்தான வசீகரம் தனுசு லக்கின அன்பர்களுக்கு தொழில் ரீதியான நிச்சய வெற்றிகளை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் தனுசு லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

விருச்சகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை  தந்தது, ஆனால்  இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு  உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின்  2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.

7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும்  அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான  வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்  வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 5 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696