சுக ஸ்தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக ஸ்தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சுய தொழில் துவங்குமுன் ஒருவர் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !



 பொதுவாக சிலர் புதியாதாக தொழில் துவங்கும் பொழுது கோட்சார கிரகங்களின் பலனை அடிப்படையாக கொண்டும் , நடப்பு திசை புத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் தொழில் துவங்கி விடுகின்றனர் , இது புதிதாக அல்லது  சுயமாக தொழில் துவங்க ஏற்றதல்ல , காரணம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சில பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது தொழில் சிறப்பாக நடைபெற உதவி புரியும் , குறிப்பாக தொழில் துவங்கிய சில நாட்களிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்து மூடுவிழ காணும் சூழ்நிலை வருவதற்கு பொதுவான ஜாதக பலனையும் ,கோட்சார பலனையும் அடிப்படையாக வைத்து செய்வதாலேயே இந்த நிலை , சரி ஒருவர் சுய தொழில் ,அல்லது கூட்டு தொழில் புதிதாக துவங்கினால் சிறப்பான முன்னேற்றமும் , தொழில் வளர்சியும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .

ஒருவர் சுய தொழில் செய்யவோ அல்லது கூட்டு தொழில் செய்யவோ, அவரது ஜாதகத்தில் லக்கினம் , நான்காம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஏழாம் பாவகம் , ஜீவன ஸ்தானம் எனும் பாவகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , ஏனெனில் ஜீவனம் எனும் தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் செயல் பட மேற்கண்ட பாவகங்கள் உதவி செய்தால் மட்டுமே தொழில் விருத்தி பெரும் , மேலும்  ஒவ்வொரு பாவகமும் ஜீவன ஸ்தானத்துடன் எவ்வாறு சம்பந்தம் பெறுகிறது என்பதை பற்றி இனி பார்ப்போம் .

லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் நிலையான தன்மையை குறிக்கும் , நிலையான புத்தி தெளிவான சிந்தனை , புத்திசாலித்தனமாக  சரியாக முடிவு எடுக்கும் தன்மை , தொழில் முன்னேற்றத்திற்க்காக அயராது பாடுபடும் குணம் , எவரின் உதவியும் பெறாமல் சுயமாக முன்னேற்றம் பெரும் தன்மை , சுய தொழில் செய்யும் பொழுது தனக்கு என தனித்தன்மையுடன் ஒரு இடத்தை தக்க வைத்துகொள்ளும் திறன் , எப்பொழுதும் தொழில் முன்னேறத்தை பற்றிய சிந்தனையுடன் சுறு சுறுப்பாக இயங்கும் தன்மை , தொழில் புதுமையான முறைகளை அறிமுகம் செய்யம் தனி திறமை , ஜாதகருக்கு அமையும் தொழில் சிறப்பான முன்னேற்றம் பெரும் யோகம் , அரசு வழியில் இருந்து வரும் ஆதாயம் , என ஜாதகருக்கு சிறப்பான முன்னேற்றத்தை தர இந்த லக்கினம், ஜீவன ஸ்தானத்திற்கு நல்ல நிலையில் இருப்பது அவசியம் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி தொழில் செய்வதை குறிக்கும்.

நான்காம் பாவகம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் தொழில் முறை சொத்து , வண்டி வாகனம் , அசையும் சொத்து அசையா சொத்து , போக்குவரத்து சரக்கு வாகனங்கள் , மக்களை ஏற்றி செல்லும் இலகுரக கனரக வாகனங்கள் , உற்பத்தி செய்த பொருட்களை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்லும் அமைப்பு , பொருட்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல் கொண்டுசெல்லும் தன்மை , மேலும் தனித்தனியாக பகிர்ந்து விற்பனை செய்யும் முறைகள் , என ஜாதகர் செய்த உற்பத்தி பொருட்களை சரியான நேரத்தில் சரியான இடங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்கும் பணிகளில் நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக அமையும் , மேலும் நமது நாட்டில் சரியான போக்குவரத்து வசதி  இல்லை என்றால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் , எனவே மேற்கண்ட பாவகம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் செய்த முதலீடுகளால் கிடைக்கும் பொருட்கள் இயந்தர தளவாடங்கள் , சொத்துகள் , நிலம் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் பாவகமாக நான்காம் பாவகம் செயல் ஆற்றுகிறது , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை சரியான இடத்திற்கு எடுத்து செல்வதை குறிக்கும் .

பூர்வ புண்ணியம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் பூர்வீகத்தில் தொழில் செய்வதால் வரும் முன்னேற்றத்தை பற்றி குறிப்பிடும் பாவகம் , இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் பூர்விகத்தில் இருப்பதாலும் , தொழில் செய்வதாலும் வெற்றி மேல் வெற்றி கிடக்கும் ,எடுத்துகாட்டாக பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் சிறப்பாக தொழில் செய்துகொண்டு இருப்பவர்கள் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் நல்ல நிலையில் அமைந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் , ஒருவேளை இந்த பாவகம் பாதிக்க பட்டால் பூர்வீகத்தில் இருந்து அதிக தொலைவில் சென்று தொழில் செய்வதால் வெற்றி கிட்டும் .

ஏழாம் பாவகம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

நேரடியாக மக்களிடம் தொடர்புகொள்ளும் தொழில்களில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் , தனது உற்பத்தி பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்து எவ்வித விளம்பரமும் இல்லாமல் பொதுமக்கள்  மூலம்  தனது உற்பத்தி பொருட்களுக்கு வாய் வழி விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தரும் , மேலும் ஜாதகர் தனியாக தொழில் செய்வதா ? அல்லது கூட்டு தொழிலா ? என்பதை சரியாக நிர்ணயம் செய்ய இந்த பாவகம் , சரியான பதிலை தரும் . மேலும் பொதுமக்களிடம் தனது பொருட்களுக்கு சிறப்பான வரவேற்ப்பை தரும் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை குறிக்கும் .

பத்தாம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் சுயமாக தொழில் செய்து பெறும் வெற்றிகளையும் , ஜீவன முன்னேற்றத்தையும்  கீர்த்தியையும் நிர்ணயம் செய்யும் பாவகமாக பத்தாம் வீடு அமைகிறது , சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் அமைப்பை தெளிவாக காட்டும் , மேலும் தனது தகப்பனார் செய்து வந்த தொழிலை ஜாதகர் நிர்வாகிக்கும் அமைப்பை பற்றி தெளிவாக தெரிவிப்பது ஜீவன பாவகமே ,  மேலும் அந்த ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக நிலையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த பாவகம் சிறப்பாக உதவி செய்யும் , ஒருவர் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழிலே  சிறப்பானதா ? என்பதை நிர்ணயம் செய்யும் இடம் இது , இந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகர் அனைவரும் சுய தொழில் செய்வதே மிகுந்த நன்மை தரும் . மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதால் பெரும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் , பொருளாதார முன்னேற்றத்தை பற்றி தெளிவாக குறிப்பிடும் இடம் இந்த ஜீவன பாவகமே .

தொழில் அமைப்புகள் 

உலகத்திலேயே மூன்று விதமான தொழில் அமைப்புகள் மட்டுமே உள்ளன அவையாவன 1 ) உற்பத்தி தொழில்கள் 2 ) உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வது 3 ) விற்பனை செய்த பொருட்களை பராமாரிப்பது ( அதாவது உற்பத்தி , விற்பனை , பராமரிப்பு ) என்று அனைத்தும் இம்மூன்றில் அடங்கிவிடும் . இதில் ஜாதகர் எதை தொழிலாக செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதை சுய ஜாதகம் கொண்டு தொளிவாக தெரிந்து கொண்டு , அதை தொழிலாக செய்தால் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 1





பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் நவக்கிரக அமைப்பால் , லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிப்படைந்து இருக்கும் எனில் , அந்த  பாவகங்களின் பலன்களை நடப்பு திசை அல்லது எதிர்வரும் திசை தருமாயின் , இதனால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து துன்பங்களையும் , கெடுதலான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும் , இதையே பல ஜோதிடர்கள் தோஷம் என்று சொல்கின்றனர் , மேலும் அப்படி வரும் தீமையான பலன்களில் இருந்து ஒரு ஜாதகர் எப்படி தப்பிப்பது , தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்வது , சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம் . அதாவது பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் )

லக்கினம் பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் சுயமாக முடிவெடுக்காமல் , குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் , அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று செய்வது காரியங்களில் 100 சதவிகித வெற்றியை தரும் , போதை வஸ்துகளின் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த நன்மையை தரும் , மேலும் மனதை அலைய விடாமல் ஒருநிலை படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துகொல்வதும் , சுய கட்டு பாட்டுடன் வாழ்க்கையை நடத்துவதும் , நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வாழ்வதும் நிச்சயம் தீமையான பலன்களில் இருந்து காப்பாற்றி , நன்மை தரும் , மேலும் விழிப்புணர்வுடன் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் .


இரண்டாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் அளவறிந்து செலவு செய்வதும் , தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும் ,வீண் ஆடம்பரங்களை களைந்து எளிமையான வாழ்க்கையை வாழ பழகி கொள்வது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பம் வந்து சேரும் , மேலும் தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் , வாழ்க்கை துணை தங்களை மனம் நோகும் படி செய்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் , குறிப்பாக தேவையில்லாமல் பேசகூடாது , இதனால் மன நிம்மதி கெடும் , யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது தங்களுக்கும் நல்லது , தங்களை சார்ந்தவருக்கும் நல்லது .


மூன்றாம்  பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


சகோதர வழயில் இருந்து வரும் இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்றுகொள்வது ஜாதகரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக எடுக்கும் முயற்ச்சிகளில் சரியாக கவனம் செலுத்துவது குறிப்பிட்ட காரியத்தில் வெற்றியை தரும் , தேவையில்லாமல் பெண்களிடம் பேசுவது ஜாதகருக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் , மன நிம்மதி கெடும் தேவையில்லாத வீண் முயற்ச்சிகள் எடுத்து தோல்வியை தழுவ வேண்டி வரும் , திட்டமிடாத செயல்களால் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , மேலும் சரியான உண்மை  தகவல்களை ஜாதகர் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆட்ப்படலாம் , இதனால் தவறான முடிவு அவசரப்பட்டு எடுத்து சிக்கல்களை உருவாக்கி கொள்ள கூடும் எனவே எதிலும் நிதான போக்கை கடை பிடிப்பது அவசியம் , பொறுமையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் .

நான்காம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் குடியிருக்கும் வீடு தனக்கு உகந்த அமைப்பில் இருக்கிறதா என்று சரியான ஜோதிடரின் மூலம் ஆலோசனை பெற்று , தனக்கு உகந்த வாயிர்ப்படி அமைந்த வீடுகளில் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனது பெயரில் , வீடு , வண்டி , வாகனம் ஆகியவற்றை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது , தனது தாய்க்கு ஏதாவது உடல் நிலை பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனடியாக ஓடி சென்று கவனித்துகொள்வது நான்காம் வீட்டு பாதிப்பான பலனில் இருந்து காப்பாற்றும் , மேலும் வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமுடன் வாகனத்தை இயக்குவது நலம் தரும் , அல்லது வாகன ஓட்டுனரை பணிக்கு நியமித்து கொள்வது சால சிறந்தது , மற்றவரிடம் பழகும் பொழுது கோப உணர்வை காட்டாமல் , அன்பாக பேசுவது நலம் தரும் .

ஐந்தாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று ஜீவனம் செய்வது மிகுந்த நன்மை தரும் , ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது ஒன்ற சரியான தீர்வாக இருக்க முடியும் , மேலும் தனது குழந்தைகளால் வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுக்கொள்வதும் , முறையாக குலதெய்வ வழிபாட்டினை மேற்க்கொல்லுவதும் நிச்சயம் இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக அமாவசை தினங்களில் குலதெய்வ கோவில்களுக்கு சென்று முன் பின் தெரியாத மக்களுக்கு அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் நன்மை தரும் , இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் விரைவில் வலிமை பெரும் .

ஆறாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் யாரிடமும் தேவையின்றி கடன் வாங்காமல் , கொடுக்காமல் இருப்பது மிகுந்த நன்மை தரும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய உடல் நிலை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் , இந்த கால கட்டங்களில் சிறு முதலீடு செய்வது நிச்சயம் இழப்பையே தரும் , மன நலம் கெடும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல் இருப்பது நன்மை . இல்லையெனில் மீள தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , யாவரிடமும் பகைமை பாராட்டாமல் சுகுமுமான போக்கை கடைபிடிப்பது சால சிறந்தது , மேலும் மற்றவருக்கு ஜாமீன் ஏற்காமல் இருந்தால் ஜாதகரின் பெயருக்கு எவ்வித களங்கமும் வர வாய்ப்பிருக்காது .




வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696