பாதசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

கடக லக்கினத்திற்க்கு சனி மகாதிசை கடுமையான இன்னல்களையும் வெகுவான பாதிப்பையும் தருவதேன் ?



 ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி, அதார்ஷ்டமசனி, சனி திசை, சனி புத்தி காலங்களில் ஒருவருக்கு சனி பகவான் தரும் துயரம் என்பது தாங்க இயலாத வண்ணம் இருக்கும் என்பதும், சனி பகவான் ஒருவருக்கு இன்னல்களை தர ஆரம்பித்துவிட்டால் அவர் அதில் இருந்து தப்புவது அரிதிலும் அரிது என்றும் பல கருத்துக்கள் நம்மிடையே உள்ளது, இதற்க்கு பல்வேறு புராணங்கள் இதிகாசங்களில் இருந்து பலதரப்பட்ட கதைகளும், விளக்கங்களும் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவை அனைத்தும் சுய ஜாதக கணிதத்திற்க்கு சிறிதும் பொருத்தமற்றதும், உண்மைக்கு புறம்பானது என்பதுவே " ஜோதிடதீபத்தின் " கருத்தாகும்.

ஒருவருக்கு சுய ஜாதக ரீதியாக நன்மை தீமை, யோகம் அவயோகம் போன்ற பலன்களை வழங்கும் வல்லமை லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே நடைமுறைக்கு வருகின்றது, நமது சுய ஜாதகம் பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிதம் செய்யப்பட்டு, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமையுடன் காணப்பட்டால், கடக லக்கினம் மட்டுமல்ல, எந்த லக்கினம் என்றாலும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே நவ கிரகங்களின் திசா புத்திகள் வழங்கும், மாறாக நமது சுய ஜாதகத்தில் சில பாவகங்களோ பல பாவகங்களோ வலிமையற்று இருப்பின், அப்படி வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, இதற்க்கு நவகிரகங்களின் திசா புத்திகள் இன்னல்களை தருகின்றது என்று தவறான புரிதல்களை கொண்டிருப்பது, ஜாதக கணிதம் பற்றிய அறியாமையினால் ஏற்படும் ஓர் நிலையே அன்றி, உண்மை என்பது சிறிதும் இல்லை.

கீழ்கண்ட ஜாதகருக்கு கடக லக்கினம், சனி திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சனி திசை சுயமாக தனது திசையிலும் புத்தியிலும் துன்பத்தை தருவதாக கருதுவது, ஜாதகரின் வினாவில் பிரதிபலிக்கிறது, அது உண்மை அல்ல தங்களது சுய ஜாதக பாவக வலிமையையே தனது திசையில் சனி பகவான் ஏற்று நடத்துகிறார் என்பதை ஜாதக கணிதம் கொண்டு தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, அது சார்ந்த விளக்கங்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !  


லக்கினம் : கடகம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் 

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1,3,7,9ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும் அமைப்பாகும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தோடர்பை பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலனை வாரி வழங்கும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கான முன்னேற்றங்களை பரிபூரணமாக வாரி வழங்கும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது 6,10ம் பாவக வழியில் ஜீவன மேன்மை,செல்வச்செழிப்பை தன்னிறைவாக வாரி வழங்கும்.

  மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, சுய ஜாதகத்தில் 8 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 100% விகித இன்னல்களை தரும் குறிப்பாக ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 29 பாகைகளை கொண்டிருப்பது ஜாதகருக்கு உகந்ததல்ல, இது ஜாதகருக்கான சுக போகங்களை வெகுவாக பாதிக்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவு, வீண் விரையம், மற்றவர்களால் ஏற்படும் பொருளாதர தடைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

ஜாதகருக்கு சர நீர் ராசியான கடகமும், உபய நீர் ராசியான மீனமும் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகரின் மனம் சார்ந்த பாதிப்புகளை வெகுவாக அதிகரிப்பதுடன், சுகபோகங்களை தடைசெய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு :

11ம் வீடு பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்க்கு 11ம் வீடு பாதக ஸ்தானம் ) 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு எனலாம், ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்தே 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை, வலிமை அற்ற பாவக தொடர்புகள் பற்றியே ஓர் தெளிவு நமக்கு கிடைத்து விட்டது, அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை மற்றும் புதன் புத்தி ( இன்றோடு நிறைவு பெரும் புதன் புத்தி ) ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்ன? அடுத்து  வரும் கேது புத்தி, சுக்கிரன் புத்தி தரும் பலாபலன் என்ன? என்பதை சற்று விரிவாக ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை ( 23/12/2012 முதல் 23/12/2031 வரை ) 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சனி திசையில் பாதக ஸ்தான பலனை நடைமுறை படுத்துகிறது என்பதால் ஜாதகர் சனி திசையில் 200% விகித இன்னல்களை சந்திக்கிறார் என்பதுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியும் ( 26/12/2015 முதல் 04/09/2018 வரை ) ஜாதகருக்கு 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் புதன் புத்தியும் பாதக ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கான நெருக்கடிகளை வெகுவாக வாரி வழங்கியுள்ளது, ஒருவருடைய சுய ஜாதகத்தில் தாங்க இயலாத துன்பங்களை தருவது பாதக ஸ்தான தொடர்பை பெரும் வீடுகளே என்றால் அது மிகையல்ல, இதற்க்கு சரியான உதாரணமாக மேற்கண்ட ஜாதகம் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் கேது புத்தி மற்றும் சுக்கிரன் புத்திகள் தரும் பலன்கள் :

 ஜாதகருக்கு இன்று முதல் நடைமுறைக்கு வரும் கேது புத்தி சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்றும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்றும் 1,3,5,7,9ம் வீடுகள் வழியில் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, குறிப்பாக ஜாதகருக்கு சனி திசையில் கேது புத்தி சுபயோகங்களை வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, அடுத்து வரும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் பாக்கிய ஸ்தான பலனையே தொடர்ந்து நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதிலும், எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

 அதற்க்கு அடுத்து வரும் சூரியன் சந்திரன் புத்திகள் ஜாதகருக்கு சற்று இன்னல்களை 2,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் , செவ்வாய் புத்தி 4ம் பாவக வழியில் இருந்து யோகத்தையும், ராகு புத்தி 6,10ம் பாவக வழியில் சுபயோகங்களையும் வாரி வழங்கும், என்பதுடன் குரு புத்தி ஆயுள் ஸ்தான வழியில் இருந்து உடல் நல பாதிப்பை தரக்கூடும். சுய ஜாதகத்தில் 8ம் வீடு மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கான ஆயுளை உறுதி செய்யும் என்ற போதிலும் உடல் நலம் அல்லது பொருளாதர பாதிப்பை ஜாதகர் சிறப்பாக நிர்வகிப்பது அவசியமாகிறது.

 குறிப்பு :

 நவ கிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் தரும் பலாபலன்களையே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதை உணர்வது அவசியமாகிறது, தன்னிசையாக ஒருவருக்கு யோக அவயோக பலன்களை தர நவகிரகங்களுக்கு சக்தி இல்லை என்பதை சுய ஜாதக கணிதம் உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவர், மேற்கண்ட ஜாதகருக்கும் அதுவே நடைமுறைக்கு வருகிறது, சனி திசை பாதக ஸ்தான பலனை நடைமுறைப்படுத்துவதாலே, ஜாதகர் கடுமையான இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார், சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் வலிமையுடன் இருந்த போதிலும், நடைபெறும் சனி திசை, புதன் புத்தி ஜாதகருக்கு சாதகமற்று இருப்பதே அனைத்து துன்பத்திற்கும் காரணமாகும், எதிர்வரும் புத்திகள் வலிமையான வீடுகளின் பலனை தருவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 19 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

விருச்சகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை  தந்தது, ஆனால்  இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு  உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின்  2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.

7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும்  அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான  வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்  வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சனி பகவான் கொடுப்பின் எவர் தடுப்பார் ?


ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும் வல்லமை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்திர்க்கு உண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ( சர இலக்கின அன்பர்களை தவிர ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், நிறைவான லாபத்தையும் நிச்சயம் தரும், மேலும் ஜாதகர் தனது பிறவி பலனை முழுவதும் பெரும் யோகமும் உண்டாகும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், காலபுருஷ தத்துவத்திற்கு 10,11க்கு அதிபதியான சனி பகவான், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக அமர்ந்தால், ஜாதகரின் யோக வாழ்க்கைக்கும், அதிர்ஷ்டங்களுக்கும் குறைவேதும் இருக்காது, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எண்ணிய காரியங்கள் வெற்றி, செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் ஜாதகரை வந்து சேரும், சனி பகவான் இன்னல்களையே தருவார் என்ற கூற்றை இங்கே உடைத்தெறிந்து ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு தாமே காரணம் என்று நிருபித்து " சனி கொடுப்பின் எவர் தடுப்பார்" என்ற வாக்கினை 100% விகிதம் உறுதி செய்வார்.

சனிபகவான் தரும் யோகம் பற்றி இந்த பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு லக்கினம் : சிம்மம் 
ஜாதகருக்கு ராசி : துலாம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது ஜாதகருக்கு  11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

5,9ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும்.

2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

மேற்க்கண்டவையே ஜாதகரின் பாவக வலிமைக்கு உண்டான பொது பலன்கள், இதில் 1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக கருதலாம், கால புருஷ தத்துவத்திற்கு 10,11க்கு உடைய சனிபகவான் ஜாதகருக்கு எந்த எந்த பாவகத்திர்க்கு அதிபதியாக வருகிறார், என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, இந்த ஜாதகருக்கு 1,3,7 மற்றும் 11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவானே வருவது கவனிக்க தக்க  அம்சமாகும், மேலும் 1,3,7,11ம் பாவகங்கள் தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே என்பதும், 11ம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவானே வருவதும், ஜாதகரின் வாழ்க்கையில் சனிபகவான் லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை வாரி கொடுக்கும் நிலையில்  இருப்பது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், சிறந்த கல்வி யோகத்தையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட மனதினையும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமையும்  பெற்று இருப்பதும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும்  முயற்ச்சியில் வெற்றியையும், சிறந்த அறிவு திறனையும், வீரியமிக்க செயல்களால்  வெற்றிகளையும், சாஸ்திர ஞானத்தையும், மிதமிஞ்சிய மனோ தைரியத்தையும், எதிலும் துணிவுடன் செயல்படும் வல்லமை கொண்டவராகவும், 7ம் பாவக வழியில் பொது வாழ்க்கையில்  அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கை துணை  வழியில் இருந்து ஒத்துழைப்பையும், நண்பர்கள்  மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து முன்னேற்றத்தையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை பெறுபவராகவும், 11ம் பாவக  வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நிலையான யோக வாழ்க்கையையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம் பெற்றவராகவும் , தன்னம்பிக்கையும் மனோ தைரியத்தையும் நிறைவாக பெற்றவராகவும் காணப்படுகிறார், மேற்கண்ட 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனி பகவான் அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி தாம் அதிபதியாக உள்ள பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.

ஜாதகருக்கு 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவான் அமர்ந்தது மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கவில்லை,  இதற்க்கு முன் ( 14/12/1998 முதல் 14/12/2014 வரை) நடைபெற்ற குரு திசையும், தற்பொழுது ( 14/12/2014 முதல் 14/12/2033 வரை ) நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு  1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைந்தது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டும் யோகத்தை தாராது, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேலும் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தனது காரக துவத்தில் இருந்து யோகங்களை வாரி வழங்குவது கண்கூடான உண்மை.

ஜாதகரின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல், 
ஜாதகரின் அதிர்ஷ்ட எண்  எட்டு.
ஜாதகரின் அதிர்ஷ்ட நாள் சனி,

என தனது காரக துவத்தில் இருந்து சனி பகவான் ஜாதகருக்கு தொடர்ந்து யோகங்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே சனி பகவான் ஒரு ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டால் அதை தடுக்க எவராலும் இயலாது என்ற கூற்று முற்றிலும் உண்மையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 28 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கும்பம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

கும்ப லக்கினம் :
கும்ப லக்கினத்தை  சார்ந்த அன்பர்களுக்கு 10ல் அமர்ந்த சனி  அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மேன்மையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றத்தையும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்த்து மற்றும் சிறப்பு  மிக்க அதிகார பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்கும்  யோகத்தை தருகிறார்,  ஜாதகரின் திடீர் முன்னேற்றம் என்பது தவிர்க்க இயலாத வண்ணமே  அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் தனது வாழ்கை துணை வழியில் இருந்து 100% விகித யோகத்தை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், மேலும் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து புதையலுக்கு ஈடான சொத்து வரவுகளை பெரும் யோக காலமாக இனிவரும் 5வருடங்கள் அமையும்  என்பதை கருத்தில் கொண்டு  ஜாதகர் தனது உழைப்பை தொழில் துறையில் பயன்படுத்தினால், தனது வாழ்நாள் முழுவதிற்கும் உண்டான பொருளாதார தன்னிறைவை ஜாதகர் பெற இயலும் என்பது சனிபகவான் கும்ப லக்கினத்தாருக்கு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதலாம் அன்பர்களே !
6ம் பார்வையாக 3ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவானால் கும்பலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சிறந்த வெற்றிகள் உண்டாகும், தான் எடுக்கும் எந்த ஒரு காரியங்களும் வெற்றி மேல் வெற்றி தரும் போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றிகள், அரசியலில் வெற்றி, தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கை வெற்றி  படிகட்டுகளில் ஏறுவதற்கு உண்டான யோக காலமாக இதை கருதலாம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் , உலக பிரபல்யம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து குவியும், ஜாதகரின் தனி  திறமையான செயல்பாடுகள் யாவரும் பாராட்டும் வண்ணம் அமையும், ஜாதகர் விளையாட்டு மற்றும் காவல் துறை, பாதுகாப்பு துறையில் இருப்பின் சம்பந்தபட்ட துறைகளில் திடீரென உயர்பதவி அல்லது அதற்க்கு நிகரான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத குறுகியகால வளர்ச்சியை வாரி வழங்கும், இரும்பு மற்றும் கட்டுமான துறையில்  ஏஜென்சி அமைப்பில் செயல்படும் தொழில்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், எதிர்பாராத  முன்னேற்றம் சம்பந்தபட்ட தொழில்  துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும், குறிப்பாக ஏஜென்சி மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமாக இது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

7ம் பார்வையாக 4ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சொத்து சுகம், வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறார், இதுவரை சொந்தமாக வீடு,வண்டி,வாகனம்,நிலம் இல்லாத அன்பர்களுக்கு ஸ்திரமான சொத்துகள் அமையும், வண்டி வாகன யோகம் உண்டாகும், புதிய  வீடு  வாங்கும் யோகம்  அல்லது புதிதாய் கட்டி குடிபோகும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் செல்வசெழிப்பு உண்டாகும், எதிர்பாராத வருமானம் கும்ப லக்கினத்தாருக்கு  வந்து சேரும், முற்ப்போக்கு சிந்தனை உடன் வாழ்க்கையில் சகல பொருளாதார வெற்றிகளையும்  இனிவரும் காலங்களில் பெறுவார்கள், தாய் வழியில் இருந்து அல்லது குடும்ப அமைப்பில் இருந்து தங்களுக்கு  வரவேண்டிய சொத்து பணம் அல்லது நகை  அனைத்தும் வந்து சேரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் யாரும் எதிர்பாராத  வண்ணம் வருமான  வாய்ப்புகள் தங்களை தேடிவரும், பேச்சை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி மற்றும் வருமானம் கிடைக்க பெறுவார்கள்.

10ம் பார்வையாக 7ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்பலக்கின அன்பர்களுக்கு, இதுவரை  திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தருவார், திருமண வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த அன்பர்களுக்கு திடீர் திருப்பு முனையாக சேர்ந்து வாழும் யோகத்தை தருவார், திருமண  வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள்  வசந்த காலமாக மாறி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்,   தம்பதியரின் ஒற்றுமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பு கிடைக்கும், பொதுமக்கள் ஆதரவு மூலம் குடும்ப வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் நல்ல முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், இதுவரை திருமணம் ஆகாத கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உறவுகளின் ஆதரவின் மூலம் பல நன்மைகளும், தொழில் அபிவிருத்தியும் உண்டாகும்,  கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் அபரிவிதமான லாபங்கள் 100% விகிதம் வந்து சேரும்  என்பது கவனிக்க தக்கது.

கும்ப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும், திசை மற்றும் புத்தி மேற்கண்ட 
10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும் ஒருவேளை நடைபெறும் திசை 10,3,4,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - விருச்சிகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


விருச்சிக லக்கினம் : 


லக்கினத்தில் அமர்ந்த சனி பகவான் தங்களுக்கு மனோ ரீதியான போராட்டங்களை தந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானத்தை தரும் வாய்ப்பை தருகிறார், குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், தன்னம்பிக்கை மேலோங்கும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் வாழ்க்கை பிரகாசிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு திடீரென சென்றுவரும் யோகத்தை தரும், எதிர்பாராத உதவிகள் திடீரென கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தனது சிந்தனையும் மனதையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் ஒருமுகபடுத்துவது சால சிறந்தது, தெளிவான சிந்தனையும் செயல்பாடுகளுமே ஜாதகருக்கு வெற்றியை தரும் என்பதால் தனது சுய முன்னேற்றத்தில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது நல்லது, நல்ல வேலையாட்கள் கிடைக்கும் யோக காலம் இதுவென்பதால், ஜாதகர் தான் செய்துவரும் தொழில்களில் விருத்தியை பெறுவதற்கு உண்டான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு எதிராக செயல்படும் அன்பர்கள் மூலமாகவே நன்மையை பெறுவார், மேலும்  ஜாதகருக்கு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து வருமான வாய்ப்பை தந்த வண்ணமே இருப்பார் என்பதை கவனத்தில் கொள்வது சால சிறந்தது, சனி பகவான் தரும் வருமான வாய்ப்புகள் யாவும் சனி பெருக்கம் போல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்து ஜாதகர் தனது செயல்பாடுகளை அமைத்துகொல்வது சிறந்த நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், ஜாதகரை தேடி பண உதவிகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது மிகுந்த நன்மையை தரும், புதிய பொருட்கள் இயந்திர பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு 100% விகித வெற்றியை தரும், உடல் நிலையில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, ஏனெனில் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும், மருத்துவ சிகிச்சை தவிர்க்க இயலாது, சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது பெரிய தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றும்.

7ம் பார்வையாக களத்திர பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஆதரவை வாரி வழங்குகிறார், குடும்ப வாழ்க்கையில் எவ்வித தொந்தரவும் இன்றி சுமுகமான உறவுகள் நீடிக்கும், பிரிவு வரை சென்ற தம்பதியரை சேர்த்து வைக்கும் வல்லமையை சனிபகவான் தனது பார்வையின் மூலம் தருகிறார், வருமான வாய்ப்புகள் என்பது ஸ்திரமான தன்மையுடன் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, கை நிறைவான வருமானம் மூலம் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், புதிய வீட்டிற்கு தேவையான உபகரணங்களையும், வழக்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், கல்வியில் ஏற்ப்பட்ட தடைகள் நீங்கி, கல்வியில் வெற்றியும் உயர் கல்விக்கு உண்டான வாய்ப்பும் உண்டாகும், ஜாதகருக்கு குடும்பம், வாழ்க்கை துணை, வருமானம் என்ற அமைப்பில் இருந்து 100% விகித வெற்றி நிச்சயம் உண்டு என்பதால், இனிவரும் காலங்களை விரிச்சிக லக்கினம் கொண்டவர்கள் சிறப்பாக கையாண்டு நன்மை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக ஜீவன ஸ்தான அமைப்பை வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் ஜீவன மேன்மையை எதிர்பாராத வண்ணம் ஸ்திர தன்மையுடன் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, ஜாதகரின் குல தெய்வ அருளால் புதிய தொழில் துவக்கம், புதிய தொழில் வாய்ப்புகள், சிறந்த வேலைவாய்ப்பை பெரும் யோகம் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெகு விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், தனது அறிவார்ந்த செயல்திறனால் சமுகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்தை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தன்னிறைவான பெருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான சரியான நேரம் இதுவே என்று ஜாதகர் செயலாற்றும் தருணம் என்பதால், வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி நிலையான வெற்றி காண்பது இவர்களது கடமை, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள், நிச்சயம் தாங்கள் ஆற்றிய கடமைக்கு 100% விகித பலன்கள் உறுதியாக கிடைக்கும்.

விரிச்சிக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696