சகோதரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சகோதரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்கினம்


சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுன ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 3ல் ராகு பகவானும், 9ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மிதுன இலக்கின சிறப்பு இயல்புகள் :

மிதுன  ராசியை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகரின் அறிவு திறன் மேம்படும், சிந்தனையும் செயல்திறனும் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், தனது அறிவுக்கு உகந்த செயல்களில் மட்டும் ஆர்வத்தை காட்டும் அன்பர்களாக திகழ்வார்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது லட்சியம் மற்றும் முடிவில் இருந்து மாறாமல் செயல்பட்டு முன்னேற்றம் காண்பவர்கள், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளுக்கு பொருத்தமான அன்பர்கள் எனலாம், மிதமிஞ்சிய அறிவுத்திறனும், புத்திசாலித்தனமும் இருந்த போதிலும், பொருளாதார ரீதியான இன்னல்களை சந்தித்த வண்ணமே இருப்பார்கள், சாஷ்திரத்தில் நல்ல ஞானமும் பண்டித்தியமும் உண்டாகும், நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இயற்கையாகவே அமையும், சரியான வாய்ப்புகள் அமைந்தால் சிறந்த சாதனைகளை படைக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை குறையாது வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை சரியான திட்டமிடுதல்களுடன் பெரும் யோகதாரிகள், சிறந்த நிர்வாக திறமைகளை தமக்கு அமையும் வாய்ப்புகளில் பிரகாசிக்க செய்யும் வல்லமை பெற்றவர்கள், தமக்கு வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் யோகத்தை தரும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கிடைத்த போதிலும், அதை பொது நலனுக்காக பயன்படுத்தும் தன்மை கொண்டவர்கள், இயற்கையாகவே மிதுன இலக்கின அன்பர்களுக்கு புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன் சிறப்பாக செயல்படும் என்பதால், ஜாதகர் யூகிக்கும் விஷயங்கள் மிகவும் சரியாக நடைபெறும், இதனால் எதிர்காலத்தில் நடைபெறுவதை துல்லியமாக உணரும் சக்தியை சிறப்பாக பெற்று இருப்பார்கள், மிதுன இலக்கின அன்பர்களின் முன்னேற்றம் என்பது சீரிய இடைவெளியில் ஏறுமுகமாக ஜாதகரின் எண்ணத்தின் படி மிகவும் துல்லியமாக அமையும், தாம் திட்டமிட்டபடி வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன  இலக்கின அன்பர்களுக்கு 10ல் கேதுவின் சஞ்சாரமும், 4ல் ராகுவின் சஞ்சாரமும், 10ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு நன்மையையும், 4ம் பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வாரி வழங்கியது, தற்பொழுது பெயர்ச்சி பெற்றுள்ள  சாய கிரகங்கள், ராகு பகவானின் 3ம் பாவக சஞ்சார அமைப்பில் இருந்து மிதுன இலக்கின அன்பர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றியை தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும், தன்னிறைவான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிர்பாராத வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் சிறப்பான வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும் உண்டாகும், ஆராய்ச்சி கல்வி சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றியும், சமூக கௌரவமும் கிடைக்கும், செல்லும் காரியங்கள் பலிதமாகும், பெரிய மனிதர்களின் உதவியும், மக்கள் செல்வாக்கும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும், இதுவரை தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்கள் அனைவரும்  சிறந்த வெற்றிவாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், குறிப்பாக விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல் நபர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும், கமிஷன் தொழில் அல்லது  தரகு சார்ந்த வியாபாரங்களை செய்து வரும் அன்பர்களின் வாழ்க்கையில் இனிவரும் காலம், வருமான வாய்ப்புகளை வாரி குவிக்கும், செய்யும் தொழில் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், ஜீவன ரீதியான வளர்ச்சி என்பது மிதுன இலக்கின அன்பர்களுக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், அரசு துறை வேலை வாய்ப்புகளும், அரசு சார்ந்த கடன் உதவிகளும் மிதுன இலக்கின அன்பர்களை தேடி வரும், தனது வாழ்க்கைக்கான  அடிப்படை முன்னேற்றங்களை பெரும் யோககாலமாக  இந்த ராகுவின் சஞ்சாரம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு அமையும்.

மிதுன இலக்கின அன்பர்களுக்கு 9ல் கேதுவின் சஞ்சாரம், பெரிய அளவில் நன்மையை தர வாய்ப்பில்லை, குறிப்பாக தனது அறிவு திறனுக்கும், திறமைக்கும் உகந்த வரவேற்ப்பு என்பது மிகவும் அரிதாகவே அமையும், தனது திறமையை நிருபிக்க ஜாதகர் பல தோல்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும், மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பது, மன நிம்மதியையும் வீண் விரையத்தையும் தவிர்க்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை ஜாதகர் வீணடிக்கும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் , மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதும் ஜாதகரின் கடமையாகும், எதிர்பால் இன அமைப்பினருடன் அதிக கவனமாக பழகுவது மிகுந்த நன்மையை தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தங்களுக்கு மிகப்பெரிய சவால்களை முன்னிறுத்தும் என்பதால், அனைத்தையும் கவனமாக கையாள்வது மிகுந்த நன்மையை தரும், மற்றவர்களுக்கு  உதவும் முன்  அதிக கவனம் தேவை, பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிக அளவில்  வரும் என்பதால் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகள் தங்களின் ஜீவன வாழ்க்கையை காப்பற்றும், கை பொருள் இழப்பை தவிர்க்கலாம்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மிதுன இலக்கின அன்பர்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியையும், 9ம் பாவக வழியில் இருந்து நற்ப்பெயருக்கு களங்கத்தையும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களையும்  வழங்கும், மிதுன இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால்3ம் பாவக வழியில் இருந்து வெற்றிகளையும் , 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மிதுன இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக அவயோக  பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மிதுன இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 1





பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் நவக்கிரக அமைப்பால் , லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிப்படைந்து இருக்கும் எனில் , அந்த  பாவகங்களின் பலன்களை நடப்பு திசை அல்லது எதிர்வரும் திசை தருமாயின் , இதனால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து துன்பங்களையும் , கெடுதலான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும் , இதையே பல ஜோதிடர்கள் தோஷம் என்று சொல்கின்றனர் , மேலும் அப்படி வரும் தீமையான பலன்களில் இருந்து ஒரு ஜாதகர் எப்படி தப்பிப்பது , தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்வது , சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம் . அதாவது பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் )

லக்கினம் பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் சுயமாக முடிவெடுக்காமல் , குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் , அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று செய்வது காரியங்களில் 100 சதவிகித வெற்றியை தரும் , போதை வஸ்துகளின் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த நன்மையை தரும் , மேலும் மனதை அலைய விடாமல் ஒருநிலை படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துகொல்வதும் , சுய கட்டு பாட்டுடன் வாழ்க்கையை நடத்துவதும் , நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வாழ்வதும் நிச்சயம் தீமையான பலன்களில் இருந்து காப்பாற்றி , நன்மை தரும் , மேலும் விழிப்புணர்வுடன் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் .


இரண்டாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் அளவறிந்து செலவு செய்வதும் , தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும் ,வீண் ஆடம்பரங்களை களைந்து எளிமையான வாழ்க்கையை வாழ பழகி கொள்வது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பம் வந்து சேரும் , மேலும் தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் , வாழ்க்கை துணை தங்களை மனம் நோகும் படி செய்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் , குறிப்பாக தேவையில்லாமல் பேசகூடாது , இதனால் மன நிம்மதி கெடும் , யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது தங்களுக்கும் நல்லது , தங்களை சார்ந்தவருக்கும் நல்லது .


மூன்றாம்  பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


சகோதர வழயில் இருந்து வரும் இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்றுகொள்வது ஜாதகரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக எடுக்கும் முயற்ச்சிகளில் சரியாக கவனம் செலுத்துவது குறிப்பிட்ட காரியத்தில் வெற்றியை தரும் , தேவையில்லாமல் பெண்களிடம் பேசுவது ஜாதகருக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் , மன நிம்மதி கெடும் தேவையில்லாத வீண் முயற்ச்சிகள் எடுத்து தோல்வியை தழுவ வேண்டி வரும் , திட்டமிடாத செயல்களால் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , மேலும் சரியான உண்மை  தகவல்களை ஜாதகர் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆட்ப்படலாம் , இதனால் தவறான முடிவு அவசரப்பட்டு எடுத்து சிக்கல்களை உருவாக்கி கொள்ள கூடும் எனவே எதிலும் நிதான போக்கை கடை பிடிப்பது அவசியம் , பொறுமையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் .

நான்காம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் குடியிருக்கும் வீடு தனக்கு உகந்த அமைப்பில் இருக்கிறதா என்று சரியான ஜோதிடரின் மூலம் ஆலோசனை பெற்று , தனக்கு உகந்த வாயிர்ப்படி அமைந்த வீடுகளில் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனது பெயரில் , வீடு , வண்டி , வாகனம் ஆகியவற்றை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது , தனது தாய்க்கு ஏதாவது உடல் நிலை பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனடியாக ஓடி சென்று கவனித்துகொள்வது நான்காம் வீட்டு பாதிப்பான பலனில் இருந்து காப்பாற்றும் , மேலும் வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமுடன் வாகனத்தை இயக்குவது நலம் தரும் , அல்லது வாகன ஓட்டுனரை பணிக்கு நியமித்து கொள்வது சால சிறந்தது , மற்றவரிடம் பழகும் பொழுது கோப உணர்வை காட்டாமல் , அன்பாக பேசுவது நலம் தரும் .

ஐந்தாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று ஜீவனம் செய்வது மிகுந்த நன்மை தரும் , ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது ஒன்ற சரியான தீர்வாக இருக்க முடியும் , மேலும் தனது குழந்தைகளால் வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுக்கொள்வதும் , முறையாக குலதெய்வ வழிபாட்டினை மேற்க்கொல்லுவதும் நிச்சயம் இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக அமாவசை தினங்களில் குலதெய்வ கோவில்களுக்கு சென்று முன் பின் தெரியாத மக்களுக்கு அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் நன்மை தரும் , இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் விரைவில் வலிமை பெரும் .

ஆறாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் யாரிடமும் தேவையின்றி கடன் வாங்காமல் , கொடுக்காமல் இருப்பது மிகுந்த நன்மை தரும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய உடல் நிலை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் , இந்த கால கட்டங்களில் சிறு முதலீடு செய்வது நிச்சயம் இழப்பையே தரும் , மன நலம் கெடும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல் இருப்பது நன்மை . இல்லையெனில் மீள தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , யாவரிடமும் பகைமை பாராட்டாமல் சுகுமுமான போக்கை கடைபிடிப்பது சால சிறந்தது , மேலும் மற்றவருக்கு ஜாமீன் ஏற்காமல் இருந்தால் ஜாதகரின் பெயருக்கு எவ்வித களங்கமும் வர வாய்ப்பிருக்காது .




வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696