பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 25 மார்ச், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெற.....


இறை அருள் அனைவருக்கும் எப்பொழுதும் தனது அருள் கரங்களை கொண்டு, வேண்டும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்க தயாராக இருப்பதை இறை அருள் நிரம்ப பெற்ற திருகோவில்களில், சிலை வடிவில் உள்ள இறைவனை காணும் பொழுது நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக உணர இயலும், "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதனை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இறை அருளின் பரிபூர்ண கருணையை பெற அடித்தளமாக அமையும் பாவகங்கள், லக்கினம் எனும் முதல் பாவகம், பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம், மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் இறை அருளின் கருணை சற்று அதிகம் என்றே சொல்லலாம், இவர்களுக்கு தடைகள் என்பது எதுவும் இல்லை என்ற நிலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், செய்யும் காரியங்கள் யாவிலும் சத்தியத்தை கடைபிடிக்கும் உத்தம நிலையை தருகிறது, சரியானதை லக்கினம் தேர்வு செய்கிறது, சிறப்பான நன்மைகளை பூர்வபுண்ணியம் வழங்குகிறது, நன்மைகள் வழியிலான பூர்ணகதியை பாக்கிய ஸ்தானம் நல்குகிறது, எனவே ஜாதகர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தேடி செல்லாமல், தம்மை தேடிவரும் வழியிலான செயல்களை செய்து சிறப்படைகிறார், எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது, எந்த ஓர் சூழ்நிலையிலும் இறையருளின் கருணையினால் ஜாதகர் நிலையான சுபயோக வாழ்க்கையை பெறுகிறார்.

சுய ஜாதகத்தில் உள்ள வலிமை வலிமை அற்ற நிலையை, யோகம் அவயோகம், தனது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மை தீமை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஜாதகர் துல்லியமாக அறிந்துகொள்ளவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னிலை முழுவதும் உணர்ந்தவராக திகழ்வார், வீண் கற்பனையில் காலத்தை எதிர்கொள்ளாமல், தனது சுய வலிமையையும், தனது திறமை மற்றும் தகுதியும் உணர்ந்து செயல்படும் யோகம் பெற்றவராக இருப்பார், குறிப்பாக தனது பிறவியின் நோக்கம் அறிந்து செயல்படும் வல்லமை பெற்றவராக திகழ்வார், மேற்கண்ட பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் சிறு வயது முதலே மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்வார், மனதிற்கு அப்பாற்ப்பட்ட, புலனறிவுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிலும் தெளிவு, அறிவார்ந்த செயத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி இவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும்.

நல்ல மனிதர்கள் சேர்க்கை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் அறிமுகம், ஆன்மீக பெரியோர்களின் ஆசி, குலதெய்வ அனுக்கிரகம், பித்ருக்கள் நல்லாசி ஆகியவற்றை பெற சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தனக்கு உகந்த விஷயங்களையும், தனக்கு உகந்த காரியங்களையும் தேர்வு செய்வதற்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமை மிக மிக அவசியமாகிறது, வருமுன் உணரும் சக்தியும், விளைவு அறிந்து செயல்படும் வல்லமையும் மேற்கண்ட பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு அமைகிறது, மேலும் தனக்கு வரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களை இறைவழியில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறவும், தன்னால் சாதிக்க இயலும் செயல்களை தேர்வு செய்து முன்னேற்றங்களை பெறவும் லக்கினம்,பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையே ஓர் ஜாதகருக்கு அடிப்படை உந்துதலாக இருக்கின்றது.

கால நேரம் அறிந்து செயல்படும் தன்மையும், சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவாக அறிந்து உணர்ந்து செயல்படும் வல்லமையையும், வாழ்க்கையில் வரும் சுப யோகங்களை தெளிவாக உணர்ந்து அதன் வழியிலான நன்மைகளை பெரும் ஆற்றலும் ஓர் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாகவும், முன்னேற்றம் மிகுந்ததாகவும் அமைத்துக்கொண்டு 100% விகித சுபயோகங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 28 செப்டம்பர், 2016

மங்களங்கள் நல்கும் சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு !

 

ஒருவர் மேற்கொள்ளும்  எந்த ஒரு நல்ல காரியங்களிலும் வெற்றி பெற அவருக்கு சுய அறிவு திறனின் வல்லமையும், இறைஅருளின் கருணையும், பித்ருக்களின் ஆசியும் சரி விகிதத்தில் அமைந்து இருப்பின், நிச்சயம் 100 சதவிகித வெற்றிகளை பெற்று தரும், இதை சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவகமும், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகமும் நிர்ணயம் செய்கின்றது, ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் சுபயோகங்களை நல்கும் "கோண" வீடுகளாக வர்ணிக்க படுகிறது, மேற்கண்ட பாவகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வரும் இன்னல்கள் துன்பங்கள் நீங்குவதற்கு, ஜாதகரின் அறிவு, குல தேவதையின் கருணை, பித்ருக்களின் ஆசி, ஆகியவை முழு வீச்சில் செயல்பட்டு ஜாதகருக்கு சரியான, அவருக்கு உகந்த நன்மையான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடும், தீமைகளின் தாக்கம் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பது கவனிக்க தக்க விஷயம் ஆகும்.

ஜெனன ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கபட்டோ, அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும், குறிப்பாக ஜாதகர் மேற்கொள்ளும் எந்த ஒரு முயர்ச்சியும் பலன் தாராது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்களை சந்திக்கும் நிலை, எதிர்பாராத இன்னல்கள், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளை தரும், உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வீண் விரையங்களை தவிர்க்க இயலாது, தொழில் முடக்கம், திடீர் நஷ்டம், முன்னேற்ற தடைகள், நல்ல வாழ்க்கை துணை அமையாதது, குழந்தை பாக்கியம் இன்மை, நல்ல ஆண் வாரிசு அமையாத நிலை, குடும்பத்தில் நிம்மதி அற்ற சூழ்நிலை, தீய பழக்கத்திற்கு ஆர்படுதல், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு சுய தன்மையை இழத்தல், எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்றம் இன்மை, தோல்வி மற்றும் அதிக மன கவலை, மன அழுத்தம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி தனது வாழ்க்கையை தானே பாதிக்க செய்துகொள்ளும் சூழ்நிலையை தந்து விடும், குறிப்பாக ஜாதகரின் வாழ்க்கையில் சுப நிகழ்வுகளுக்காக மிகப்பெரிய போராட்டங்களையும், மிகுந்த இன்னல்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும்.

மேற்கண்ட இன்னல்களை தவிர்க்க எதிர்வரும் "சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு" அனைவருக்கும் நன்மைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் நல்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும், 1,5,9ம் வீடுகள் பாதிக்கப்பட்ட அன்பர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசை தினத்தில் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்வதும், பித்ரு வழிபாட்டினை முறையாக செய்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் தமது குல தெய்வ கோவில்களிலும், இஷ்ட தெய்வ கோவில்களிலும் செய்வது சால சிறந்தது, இதனால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தைரியம் மற்றும் மனஉறுதி கிட்டும், சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் வெகுவாக தனது தாக்கத்தை குறைத்துகொள்ளும், சிந்தனையும் செயல்பாடும் எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனை, வருமுன் உணரும் அறிவு திறன், நல்லவர் சேர்க்கை என  சகல அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

 ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையில் இருந்து அமைய வேண்டிய, உடல் நலம், கல்வி அறிவு,நல்ல வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பொருத்தமான வாழ்க்கை துணை, சிறந்த வாரிசு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சொத்து சுகம், வண்டி வாகன சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து, செல்வாக்கு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் என சகல நலன்களையும் வாரி வழங்கும் வல்லமை "மஹாளய அமாவாசையில்" செய்யும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டிற்கும் நிச்சயம் உண்டு எனலாம், எந்த ஒரு வேலை இருப்பினும் முறையாக மேற்கண்ட வழிபாட்டினை கடைபிடிப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொள்க அன்பர்களே, ஏனெனில் மேற்கண்ட வழிபாடுகள் வருடம் தோறும் செய்து வரும் அன்பர்களுக்கு வரும் இன்னல்கள் யாவும் நிச்சயம் சூரியனை கண்ட பனித்துளி போல் காணாமல் போக அதிக வாய்ப்புகள் உண்டு, மேலும் நமது வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தையும், சரளமான வசதி வாய்ப்பினையும், நல்ல குழந்தை பாக்கியத்தையும் நல்கும், எதிர்பாராமல் நடைபெறும் இன்னல்களில் இருந்து உடனடி தீர்வுகள் கிடைக்கும், உறவுகள் மற்றும் அனைவரின் ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள், இல்லற வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூட வாய்ப்பை ஏற்படுத்தி தரும், பொதுமக்கள் ஆதரவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் உண்டாகும்.

தொழில் ரீதியான இன்னல்களில் உள்ள அன்பர்களுக்கு மேற்கண்ட வழிபாடுகள் சிறப்பான வெற்றி வாய்ப்பினை நல்கும், எதிர்பாராத முன்னேறமும் செல்வ சேர்க்கையும் கிடைக்க பெறலாம், புதிய முயற்ச்சிகள், புதுவித அணுகு முறைகளை கடைபிடித்து ஜீவன ரீதியான வெற்றிகளை 100 சதவிகிதம் பெற வாய்ப்பை ஏற்படுத்தி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்லோர் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும், முன்னோர்கள் ஆசியும் வழிகாட்டுதல்களும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகத்தையும் வாரி வழங்கும், இதுவரை தடைபட்ட எந்த ஒரு காரியங்களும், சிறப்பான வெற்றிகளை நல்கும், குடும்பத்தில் கஷ்டம் நீங்கும், திடீர் இழப்புகள் மற்றும் வீண் விரையங்கள் தவிர்க்கப்படும், விபத்து மருத்துவ செலவினங்கள் வெகுவாக குறையும், அனைத்து அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றமும் நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் அமாவாசை தினத்தில் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாட்டினை முறையாக செய்து சகல நலன்களையும் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் !




கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு  திகைக்காமல் மிக  எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல  வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது  சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து  பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை  சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம்  பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக  எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது  சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 6 நவம்பர், 2014

"குரு பார்க்க கோடி நன்மை" திரிகோண வீடுகளுக்கு குரு பகவான் வழங்கும் யோக பலன்கள் !



பிரகஸ்பதி என்று தேவர்களால் அலைக்கபெரும் ராஜ கிரகமான குரு பகவான், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார், பொதுவாக ஜோதிடர்கள் குரு பகவானை பற்றி சிலாகித்து பேசுவது அவரின் பார்வை பலன்களை பற்றியதாகவே இருக்கும், குறிப்பாக " குரு பார்க்க கோடி நன்மை " என்ற வாசகம் அறியாத ஜோதிட ஆர்வலர்கள் இல்லை எனலாம், இந்த ஒரு வார்த்தையிலேயே குரு பகவான் பார்வை தன்மையின் வலிமையை உணரலாம் அன்பர்களே!

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5,7,9ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் குரு பகவான் எந்த நிலையில் ( அதாவது பாவகத்தில் ) அமர்கிறார் என்பதை வைத்தே குரு பார்வையின் தன்மையை நிர்ணயம் செய்ய வேண்டும், குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ? அல்லது தீமை நடைபெறுமா ? என்று நிர்ணயம் செய்வது அவசியம், பொதுவாக பல ஜோதிடர்கள் குரு பார்வை நன்மை மட்டுமே வழங்கும் என்று சொல்வதுண்டு, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் குரு பகவான் 1,3,5,9,11ம் பாவகங்களில் அமரும் பொழுது அந்த ஜாதகர் மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த பாவக  வழியில் இருந்தும், குரு பகவானின் பார்வை பெரும் பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களையே பெறுவார்கள், இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் இதை தவிர்த்து வேறு பாவகங்களில் ( 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில்) அமரும் பொழுது ஜாதகருக்கு அமர்ந்த நிலையிலும் சரி, கோட்சார நிலையிலும் சரி ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் பாவக அடிப்படையில் நன்மையை மட்டுமே செய்வார் என்ற கருத்து நிச்சயம் தவறும் வாய்ப்பு உள்ளது.

 குரு பார்வை என்பது சுய ஜாதகத்தில் 1,3,5,9,11ம் வீடுகளில் அமர்ந்து, 1,3,5,9,11ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும், மாறாக வேறு பாவகங்களில் அமரும் பொழுது முரண்பட்ட பலன்களையே தருகிறது என்பது, 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில் அமர்ந்த ஜாதகரை பார்த்தல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் மேலும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான் நிச்சயம் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களுக்கு நன்மையை செய்ய வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி அன்பர்களே !

குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு கோண வீடுகளாக ( 1,5.9 ) அமைந்து அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 100% நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் " குரு பார்க்க கோடி நன்மை " எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் 100% பொருத்தமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து  மேஷம் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் உடல் வலிமை மனோ வலிமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு ஜாதகர் நல்ல முன்  உதாரணமாக இருப்பார், சர நெரப்பு தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் பலர் மெச்சும் வண்ணம் அமைந்திருக்கும் குறிப்பாக, ஜாதகர் நல்ல மேலாண்மை திறனை பெற்று இருப்பார், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் தன்மையையும், சுய கட்டுபாடுடன்  கூடிய ஒழுக்க சீலராக காணப்படுவார், ஜாதகர் தான் நினைக்கும்  செயல்களை யாவும் முடிக்கும் வல்லமையை பெற்று இருப்பார், குறிப்பாக ஜாதகரின் பாதுகாப்பில் அனைவரும் நலமாக இருக்கும் யோகத்தை தரும், ராணுவம், காவல் துறை, நீதி துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மைய தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்று இருக்கும், அதிகார தோரணையும் அடக்கியாளும் யோகமும் பெற்றவர்கள், தனது செயல்களில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் மதிப்பு மிக்க மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

சிம்மத்தில்  குரு பகவான் அமர்ந்து  சிம்மம்  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும், பல ஆன்மீக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், மனிதாபிமானம் அற்ற சமுதாயத்தை மற்றும் தன்மையையும், உலகுக்கு சமாதானத்தை எற்ப்படுத்து யோகமும் பெற்றவர்கள், மருத்துவ துறை, ஆன்மீகம், மன நலம், ஜீவ காருண்யா யோகம் போன்றவற்றில் வெற்றி பெரும் அன்பர்கள், இவர்களின் அறிவு திறனும் நல்லெண்ண செயல்பாடுகளும் பூஉலகில் சாமாதான தூதுவர் என்ற நற்ப்பெயரை பெற்று தரும், இந்த ராசி ஸ்திர ராசி அமைப்பில் வருவதால் ஜாதகர் இருள் அடைந்த உலகில்  அருள் விளக்கேற்றும் சிறந்த ஆன்மீக வாதியாகவும், இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொதுநல புரட்சியாளனாகவும், உலகத்தை அன்பின் வழியில் நடத்தி செல்லும் நல்ல மக்கள் நல  விரும்பியாவும் தனது அறிவின் வழியில் ஜாதகரை பிரகாசிக்க செய்யும்.

தனுசுவில்  குரு பகவான் அமர்ந்து  தனுசு  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் எண்ணங்களின் தன்மை உலகில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், ஜாதகர்  ஒரு புதுமை விரும்பியாகவும், சமூகத்திலும் மக்களின் மனதில் புதிய சிந்தனைகளை புகுத்தும் வல்லமையும், மக்கள் அறிவின் வழியில் செயல்படும் தன்மையை பெற தேவையான கல்வியில் அனைத்து நிலைகளிலும் சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்கள், இவர்களின் சிந்தனை  எண்ணம் யாவும் இவர்கள் மறைந்த போதிலும் உலகில் நடைமுறையில் இருக்கும், மக்கள் அனைவருக்கும் வற்றாத செல்வத்தை தரும் காமதேனுவை போல் நீடித்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும், ஒருவருக்கு ஏற்ப்படும் சந்தேகம் எதுவென்றாலும் இவர்களிடம் நிச்சயம்  சரியான  பதில் இருக்கும் என்பதால், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிக்கும் அமுத சுரபி என்று இவர்களை வர்ணிக்கலாம், மேலும் இந்த ராசி உபய நெருப்பு தத்துவ அமைப்பில் யோகங்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்கும்.

இதை போன்றே ஒருவரின் சுய ஜாதகத்தில் கோட்சார அமைப்பில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சில எதிர்பாராத யோக அமைப்புகளை பெற வைப்பது 1,5,9ம் பாவக வலிமை பெற்ற அமைப்பின் தன்மையே என்றால், அது மிகையாகாது. குருபகவான் குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் உயிர்களை உய்விக்கும் தன்மை கொண்ட நெருப்பு தத்துவ அமைப்பில் சரம்,ஸ்திரம்,உபயம் என்ற வழியில் ஜீவன்களுக்கு நன்மைகளையும், யோகங்களையும் ராஜ கிரகமான குரு பகவானின் அமர்ந்த, பார்த்த அமைப்பில் இருந்து வாரி வழங்குகிறது, மேலும் மற்ற பாவகங்களில் குரு பகவான் வழங்கும் நன்மையை கருத்தில் எடுத்து கொள்ளும் பொழுது, மேற்கண்ட  1,5,9ம் பாவகங்களுக்கும், மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகளில் 100 மடங்கு அதிகமாக செயல்படுவதை இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் யோக வாழ்க்கையை  வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 6


 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

கும்ப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கும்ப லக்கினத்திற்கு ராகு 8ம் பாவகத்திலும், கேது 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 8ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், விபரீத ராஜயோகத்தை தருகிறார், இதுவரை ஜாதகருக்கு வராமல் இருந்த பொருள் உதவிகள், ஆதரவுகள் ஜாதகரை தேடி  வரும், எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான வெற்றிகள் ஜாதகருக்கு தேடி வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், செய்யும் விஷயங்கள் யாவும் திடீர் வெற்றியை தரும், பெரிய மனிதர்களின் ஆதரவு ஜாதகருக்கு பல விதங்களில் உதவிகரமாக அமையும், முன்னேற்றம் என்பது யாரும் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு அமையும், உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், இதுவரை உடல் ரீதியாக இருந்து வந்த தொந்தரவுகள் விரைவாக குணம் பெரும் அமைப்பை தரும்.

கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், வருவாய் கடன் மற்றும் பணம் சம்பந்தம் பட்ட விஷயங்கள் தங்களுக்கு எதிர்பாராத லாபத்தை வாரி வழங்கும், வண்டி வாகனம் மற்றும் சுப விரைய செலவுகள் செய்யும் அமைப்பை தரும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறு அறுவை சிகிச்சையை ஜாதகர் மேற்கொள்ளும் அமைப்பை தரக்கூடும், முன்பின் தெரியாத நபர்களாலும், வேற்று மதத்தினராலும் நன்மையையும் லாபமும் உண்டாகும், அவர்களால் ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்ப்படும், புதையல்கள் அல்லது அதற்க்கு நிகரான பொருள் வரவுகள் ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இனி வரும் 18 மாதங்கள் மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

குறிப்பு :

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தேவையில்லாத செலவினங்களை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வைத்துகொள்வது இனிவரும் காலங்களில், சரியான நன்மைகளை பெறலாம், அவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வது நலம் தரும், பல முறை சிந்தித்து செலவுகளை செய்வது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

மீன லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மீன லக்கினத்திற்கு ராகு 7ம் பாவகத்திலும், கேது 1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு, திருமண வாய்ப்பை திடீர் என அமைத்து தருகிறார், இனி வரும் 18 மாத காலத்திற்குள் மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமணம் இனிதே நடைபெறும், வரும் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், புதியதாக கூட்டு தொழில் செய்யும் யோகத்தை வழங்கும் ராகு பகவான் அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை தருகிறார், இதன் வழியே ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெரும் யோகம் உண்டாகும், அரசியலிலும் கூட்டு தொழில் அமைப்பிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மக்கள் ஆதரவும் அதன் வழி நன்மையும், இனி வரும் காலங்களில் மிகவும் சிறப்பாக அமையும்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 1ல் சஞ்சாரம் செய்யும் கேது  பகவான், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த மன நலனையும் வாரி வழங்குகிறார், சுயமாக வாழ்க்கையில் முன்னேறும் அமைப்பையும், தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தையும் தருகிறார், சிறந்த ஆன்மீக அன்பர்களின் அறிமுகமும், பெரியோர்களின் நல்லாசியும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனைகள் மீன லக்கினதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மீன லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 16 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 5




சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

தனுசு லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது தனுசு லக்கினத்திற்கு ராகு 10ம் பாவகத்திலும், கேது 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

தனுசு லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள், வெளிநாடு வேலை வாய்ப்புகள், புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு, கூட்டு தொழில் செய்வதின் மூலம் மிகுந்த லாபம், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை விரைவில் அடையும் யோகம், திடீர் பதவி உயர்வு, கை நிறைவான பொருள் வரவு, புதிய சிந்தனைகள், புதிய தொழில் யுக்திகள் மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை தக்க வைத்துகொள்ளும் யோகம், தங்கு தடையின்றி நடைபெறும் தொழிலால், தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாதமும் 100% நன்மைகளை பெறுவார்கள்.

தனுசு லக்கினத்திற்கு 4ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிறப்பான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது, தனது வசமுள்ள சொத்துகளை விற்கும் சந்தர்ப்பமும், வண்டி வாகன அமைப்பில் இருந்து சிறு விரையங்களையும் செய்யும் சூழ்நிலையை உருவாக்க கூடும், மனதளவில் சிறு சிறு குழப்பங்களும் , சந்தேகமும் வந்து போகும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்ல உறக்கம் அற்ற சூழ்நிலையை தர கூடும், குறிப்பாக தேவையற்ற மன கவலை தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த துன்பத்தை தரக்கூடும், இனி வரும் 18 மாதமும் மண்,மனை,வீடு, வண்டி வாகனம் சம்பந்தபட்ட விஷயங்களில் தனுசு லக்கினத்தை சார்ந்தவர்கள் அதிக கவனமாக இருப்பது மிகுந்த நலம் தரும், அதிக முதலீடு செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை, இல்லை எனில் தேவையில்லாத இழப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மகர லக்கினத்திற்கு ராகு 9ம் பாவகத்திலும், கேது 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மகர லக்கினத்திற்கு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு சிறந்த ஆன்மீக வெற்றியை வாரி வழங்குகிறார், குறிப்பாக பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தருகிறார், சிறந்த ஆன்மீக பெரியவர்களின் சந்திப்பும், ஆசிர்வாதமும் மகர லக்கின்னதருக்கு சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், சிறந்த அறிவு திறன் உண்டாகும், எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு சொல்லும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும், சமுகத்தில் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், செய்யும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், மக்களின் ஆதரவும் உதவியும் நிச்சயம் கிடைக்கும், சொந்த பந்தங்களின் நல்லாதரவு கிடைக்க பெறுவார்கள், இனி வரும் 18 மாதமும் ராகு பகவான் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 100% வெற்றியை தருகிறார்.

மகர லக்கினத்திற்கு 3ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முயற்சியால் பல சாதனைகளை செய்யும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்துவரும் அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்குகிறார், சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மிகுந்த முன்னேற்றத்தை தரும் காலம் இது, குறுகிய காலத்தில் மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், சிறு முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி தரும், வீடு கட்டும் யோகம் உண்டாகும், புதிய சொத்து சேர்க்கை வண்டிவாகன யோகமும் ஏற்ப்படும், முன்னோர்களின் சொத்துகள் தங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும், இதுவரை இருந்த பல சிக்கல்கள் சூரியனை கண்ட பனிபோல் மறையும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு விரைவான திருமண யோகத்தை வாரி வழங்குகிறார், இனி வரும் 18 மாதமும் மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு யோக காலமே என்றால் அது மிகையில்லை.

மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

 குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் தனுசு லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மகர லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 22 ஜனவரி, 2014

பூர்வபுண்ணியம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் !


ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்பது கொஞ்சம் அதிகமே, குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை ஆற்றல் மட்டுப்படும், ஜாதகரின் திட்டங்கள் யாவும் கனவாகவே இருக்கும், நடைமுறை படுத்துவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், ஆக ஜாதகரின் வெற்றி என்பாது குதிரை கொம்பாகவே இருக்கும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஒருவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்று இருந்தாலும் சரி, உலக அனுபவம் பெற்று இருந்தாலும் சரி, பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சரி, சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமையற்று இருந்தால், ஜாதகரின் திறமைகள் யாவும் பயனற்று போகும், ஜாதகரால் வீணடிக்க படும், அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

பூர்வ புண்ணியம் பாதிக்கபடுவதை மூன்று வகையாக பிரிக்கலாம், 1 ஐந்தாம் பாவகம் உபய,ஸ்திர ராசிகளால் பாதிக்க படுவது, 2 ஐந்தாம் பாவகம் சர ராசியினால் பாதிக்க படுவது, 3 ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தான அமைப்பின்னால் பாதிக்கபடுவது, என்ற வகையில் பாதிப்பான பலன்களை ஐந்தாம்  பாவகம் வழங்கும், இதில் முதல் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 33% ஆகவும், இரண்டாம் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 80% ஆகவும், மூன்றாம் வகை பாதிப்பின் வீரியம் 200% மாகவும் அமையும், எனவே எந்த ஒரு  ஜாதகருக்கும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தாம் பெற  கூடவே கூடாது.

எடுத்துகாட்டாக பின் வரும் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!



  இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 9ம் வீடு காலபுருஷ  தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைவதும், ஐந்தாம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவத்திற்கு 9ம் வீடாக வருவதும் ஜாதகருக்கு தீமைகளை செய்யும் அமைப்பாக கருதலாம், இதனால் ஜாதகர் அடையும் இன்னல்கள் என்ன ? அனுபவித்த துன்பங்கள் என்ன ? என்பத்தை பற்றி சற்றே ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1 ஜாதகர் பிறந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ஜாதகரின் தகப்பனார் தனது பெயரில் தனது முன்னோர்களின் பெயர்களில் உள்ள சொத்து நிலம் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடி பெயரும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலையை மாற்றி அமைத்தது, ஜாதகர் தனது உறவுகளை விட்டு விட்டு மற்று மனிதர்கள் வாழும் ஒரு  புதிய இடத்தில் வளரும் சூழ்நிலையை தந்தது, இதனால் ஜாதகரின் குழந்தை  பருவம் பாதிப்படைந்தது, நல்ல ஆரோக்கியமான வளரும் சூழ்நிலையை  தரவில்லை.

2 ஜாதகரின் கல்வி காலம் பல போராட்டங்கள் நிறைந்ததாக அமைந்தது, பல தடைகளை  தாண்டி ஜாதகர் தனது பள்ளி கல்வியை நிறைவு செய்யும் தன்மையை தந்தது, மேலும் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஜாதகர் பல அவ பெயரையும் சந்திக்கும் தன்மை தந்தது, உயர் கல்விக்காக ஜாதகர் முயற்ச்சி செய்த பொழுது பல தடைகளை சந்த்தித்து ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் முழுமையாக முடிக்க இயலாமல் பாதியில்  கல்லுரி படிப்பு முடிந்தது.

3 பல போராட்டங்களை சந்தித்து கல்லுரி படிப்பு பாதியில் நின்ற பிறகு, வேலைக்காக ஜாதகர் குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், பணியாற்றும் காலத்தில் ஜாதகர் தனது விருப்பத்தின் பெயரில்  காதல் திருமணம் செய்துகொண்டார் ( ஜாதகருக்கு 2 மற்றும் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் இளமையில் திருமணம்   நடைபெற்றது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் 10 வீடுகள் பாதிப்பில் இருந்தது குறிப்பிட தக்கதது ) திருமணம் செய்து ஒரு வருடத்தில் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறந்தது, ஜாதகரின்  வருமான பற்றா குறையின் காரணமாக திருமண வாழ்க்கை கசந்தது, ஜாதகரின் தீய நண்பர்களின் சேர்க்கையினால் குடி பழக்கத்திற்கு  ஆளாகும் தன்மையை தந்தது, இதில் இருந்து மீள முடியாத நிலையில் ஜாதகர்  இன்னும் இருக்கின்றார்.

4 இவை மட்டுமல்ல இன்னும் பல சொல்ல இயலாத தீமைகளை ஜாதகருக்கு தந்துகொண்டே இருக்கின்றது, குறிப்பாக பாதக ஸ்தான பலனை எந்த எந்த திசை புத்திகள் தருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஜாதகர் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்க நேருகிறது, ஆக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு  கடுமையான பாதிப்பை தருகிறது என்பது  உறுதியாகிறது .

மேற்கண்ட தீய பலன்கள் நடைபெற முழுமுதற் காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகர் தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட 100 கிலோமீட்டரில் ஜீவனம் செய்ததுமே என்றால் அது மிகையாகாது, ஏனெனில் ஜாதகரின் மற்ற பாவகங்கள் மிக வலிமையாக அமைந்து  இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு கட்டியம்  கூறுகிறது,  இவரின் ஜாதகத்தில் 4,6,10 ம் வீடுகளின் வலிமை 80% யோகத்தையும், 1,2,3,7,11ம் வீடுகளின் வலிமை 50% யோகத்தையும் வாரி வழங்கி கொண்டு இருப்பது  சிறப்பான அமைப்பாக கருதலாம்.

ஆக ஜாதகரின் துன்பத்திற்கு முக்கிய காரணம் பூர்வீகம் பாதிக்க பட்டு தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட பகுதியில் ஜீவனம் செய்வதே, மேலும் ஜாதகரின் சிந்ந்தனை மட்டுப்படவும், திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வராமல்,  காரியதடை ஏற்ப்படுவதிர்க்கும் மேற்கண்ட விஷயமே காரணமாக  அமைகிறது  என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ஜாதகருக்கு ஜோதிட தீபம் பரிந்துரை செய்த ஆலோசனை ஜாதகரை  எல்லை தாண்டி ஜீவனம் செய்ய சொன்னதே, இதற்க்கு ஜாதகர் சொன்ன  பதில் ஜோதிட தீபத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, " அய்யா நான் வெளியில் சென்று ஜீவனம் செய்தால் எனக்கு வரும் வருவாய் போதியதாக அமையாது " இதை நினைத்து நாம் அழுவாத சிரிப்பதா ? என்றே தெரியவில்லை, ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றாலே ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையின் காரணமாக கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , இந்த விஷயத்தை ஜாதகருக்கு புரிய வைக்க நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ஆக ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகரின் அறிவாற்றலின் தன்மை வெகுவாக பாதிக்க படுகிறது, சிந்தனை திறனும் குறைகிறது , ஒட்டுண்ணி போல் மற்றவரை   சார்ந்து வாழும் தன்மையை தருகிறது, தன்னம்பிக்கை குறைகிறது, தன்முனைப்பு என்பது இல்லாமல் உயிரற்ற மீன் போல் ஆற்றில் அடித்து செல்லும் நிலையை தருகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 28 டிசம்பர், 2013

குழந்தை பிறக்கும் நேரம் என்று எதை எடுத்துகொள்வது ? குழந்தை தலை வெளிவரும் நேரமா ? அல்லது முதல் இதய துடிப்பு நேரமா ?





பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்கள் இந்த நவீன காலத்தில் ஏற்ப்படுகிறது, தாங்கள் சொன்னது போல் குழந்தை தலை வெளிவரும் நேரம் என்று எடுத்து கொண்டாலும் குழப்பமே மிஞ்சும், முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும் .


ஆக குழந்தை எப்பொழுது சுயமாக பூலோக காற்றை சுவாசிக் ஆரம்பித்து தனது, ஜீவ வாழக்கையை ஆரம்பிக்கிறதோ அந்த வினாடியே குழந்தை உண்மையான பிறந்த நேரம் என்று நிர்ணயம் செய்யலாம், குறிப்பாக குழந்தையின் சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிட முறையில் சிறப்பான வழிகாட்டுதல்கள் உண்டு, எனவே நமது ஜோதிட முறையில் பலன் காணும் அன்பர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பு மிக மிக குறைவு என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி .

ஒரு குழந்தையின் பிறப்பை துல்லியமாக தெரிந்துகொண்டால், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை நடைபெறும் நன்மை தீமை பலன்களை தெள்ள தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடியும் , ஜாதகர் அடிப்படையில் வளரும் சூழ்நிலை , ஜாதகருக்கு அமையும் உடல் நிலை , கல்வியில் பெரும் வெற்றி, ஜீவன வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றம் , இல்லற வாழ்க்கையில்  அனுபவிக்கும் இன்பம், ஜாதகருக்கு அமையும் குழந்தை பேரு, என்ற நிலைகளில் இருந்து , ஜாதகரின் ஆயுள் அமைப்பினை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

பொதுவாக குழந்தை பிறப்பில் சில நிமிடங்கள் குழப்பம் வர கூடும், அந்த குழப்பத்தை நீக்கவும் , சரியான பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளவும் நமது ஜோதிட முறையில் வழி உண்டு , இதற்க்கு தேவை 1) ஜாதகரின் பிறந்த தேதி , 2) ஜாதகரின் பிறந்த நேரம் 3) ஜாதகரின் பிறந்த இடம் ஆகியன மட்டுமே, மேற்க்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை எடுத்துவிட முடியும் , ஜாதகரின் ஜாதக பலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும் இதன் மூலம் ஜாதகரின் வாழ்க்கையை செழுமையாக வாழும் நிலையினை பெறலாம்.

மேலும் நவீன காலத்தில் நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பினை பலர் நிர்ணயம் செய்கின்றனர், இந்த அமைப்பும் ஜாதகருக்கு சரியான பலனை நிர்ணயம் செய்வதில்லை என்ற உண்மையை உணருவது அவசியம், இயற்கையாக பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும், நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும் பல சூட்சம விஷயங்கள் உண்டு , அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தையின் சரியான ஜாதகத்தை எடுப்பதே ஜோதிடரின் முழு திறமை அடங்கி இருக்கிறது .

எந்த காரணத்தை கொண்டும் இயற்கையாக பிறக்கும் குழந்தையை, நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பை நாம் நிர்ணயம் செய்வது, ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கி விடாது என்ற உண்மையை உணருவது அவசியம், சிறப்பான நேரம் என்று தாங்கள் நிர்ணயம் செய்யும் நேரம் கூட சில வினாடிகளில் ஜாதக பலன்களை மாற்றி அமைத்துவிடும் .

நமது பூர்வ புண்ணிய அமைப்பினை கொண்டும், பாக்கிய நிலையின் அடிப்படையிலும், நாம் செய்த வினை பதிவின் அடிப்படையிலுமே, நமக்கு பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மற்றும் ஜாதக யோக நிலை இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது என்ற அடிப்படை விஷயத்தை அனைவரும் கருத்தில் கொண்டால், நிச்சயம் மேற்கண்ட குழப்பங்கள் வர சிறிதும் வாய்ப்பில்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435 


வெள்ளி, 17 மே, 2013

முற்ப்போக்கு சிந்தனையும் , நேர்மறை எண்ணங்களாலும் வாழ்க்கையில் வெற்றி பெரும் ஜாதக நிலை !



இறை அருளின் கருணையினால் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் , உடல் உயிர் என்று வர்ணிக்கப்படும் லக்கினம் எனும் முதல் பாவகம் லக்கினத்துடன் தொடர்பு பெறுவதும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்து களத்திர ஸ்தானம் எனும் ஏழு, பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பது மற்றும் லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை தந்து , ஜாதகரின் சிந்தனையினாலும் , செயல்பாட்டினாலும் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை முழுவதும் அனுபவிக்கும் ஆற்றலை தரும் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் , தனது வாழ்க்கையை தானே சுயமாக வாழும் வல்லமையை சிறு வயதினில் இருந்தே பெற்று விடுவார்கள், இந்த சிக்கலான சமுக அமைப்பில் இருந்து , தனது வாழ்க்கையை எப்படியும்  செம்மையாக அமைத்து கொண்டு பிறர் வியந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக வாழும் தன்மையை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் , மேலும் இவர்களின் முற்ப்போக்கு சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும் , பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்று தரும் .

தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் அன்பர்கள் இவர்களே , இவர்களின் இறக்க சுபாவத்தை பலர் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள் , இருப்பினும் ஜாதகர் அதைபற்றிய கவலை எதுவும் இன்றி தனது செயல் மற்றும் நடவடிக்கை மற்றவரை பாதிக்கா வண்ணம் நடந்து கொள்வார்கள் , மேலும் தனக்கு வரும் துன்பம் மற்றும் சிரமங்களை கூட தனக்கு சாதகமாக மாற்றிகொண்டு வெற்றிகரமாக வாழும் சிறந்த வாழ்க்கையை இறையருள் ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

லக்கினம் முதல் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை விஷயங்களுக்கு தானே காரணம் , தனது வினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்தும் நடை பெறுகிறது , வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் எனும் சிந்தனையை தரும் , மேலும் சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை ஒழுக்கம் என்பது ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அடிப்படையாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமைந்து விடும் , இதுவே ஜாதகர் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு  ஆட்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி , இவரால் நிச்சயம் மற்றவர்கள்  பாதிக்க வாய்ப்பு இல்லை, இதுவே ஜாதகரை சிறப்பான முன்னேற்றத்திற்கு  எடுத்து செல்லும் .

லக்கினம் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரிடம் குடிகொண்டுள்ள இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் உறுதுணை புரியும் , ஜாதகர் சிறு வயது முதற்கொண்டே இறை நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவராகவும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்றவராகவும் திகழ்வார் , தன்னுடன் சேர்க்கை பெரும் அன்பர்களின் குணம் , எண்ணம் , செயல்  அறிந்து நட்பை வளர்த்துகொள்ளும் தன்மையை தரும் , இதுவே ஜாதகரின்  வாழ்க்கையை மேன்மை படுத்தும் , தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் , இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான விஷயம் , தன்னை சார்ந்துள்ளவர்களின்  தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கு  ஏற்ற விதத்தில் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , இவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க  ஒரு சிறப்பு அம்சம் .

லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் நல்வர்களாக திகழ்வார்கள் ,  பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக  அமைந்துவிடும் , இவர்கள் வழியே ஜாதகர் அதிக யோக பலன்களை  அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , ஜாதகரின் செயல்பாடுகளை ஜாதகரின்  நல்ல நண்பர்களும் , பொதுமக்களும் கூர்ந்து கவனிப்பதால் ஜாதகரின்  நடத்தை மற்றும் ஒழுக்கம் மிகவும் சிறப்பாக அமைந்துவிடும் , மேலும்  பொறுப்பான பதவிகள்  அல்லது பொறுப்பான நிர்வாகத்தை ஜாதகர் நிர்வகிக்கும்  யோகத்தை இளம் வயதிலேயே தந்துவிடுவதால் , ஜாதகர் அதில் சிறந்து விளங்கும்  தன்மையை பெறுவதற்காகவே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்நாள்  முழுவது வாழும் தன்மை தரும் .

லக்கினம் ஒன்பதாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது முன்ஜென்ம  நல்வினை காரணமாகவும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னேர்கள்  செய்த புண்ணிய பதிவின் காரணமாகவும் வாழ்க்கை பாதை சீரான  ஒரு நேர்கோட்டில் அமைந்துவிடும் , ஜாதகரே நினைத்தால் கூட தீய வழி  பாதையில் செல்ல இயலாது , அடிப்படையிலேயே ஒழுக்கத்தை தனது இரு கண்களாக  பாவிக்கும் தன்மையை தரும் , மானம் ஒன்றே வாழ்க்கை என்ற  சிந்தனையை தரும் , தவறி கூட தனது சொல்லால் , செயலால் மற்றும் சிந்தனையால் பிறருக்கு தீமை செய்யாத மன பக்குவத்தை தரும், ஜாதகர்  மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் முன்னோர்களின் ஆசியினாலும் , இறை அருளின் கருணையினாலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும் .

லக்கினம் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுகொண்டே இருக்கும் யோக நிலையை தரும் , குறிப்பாக ஜாதகருக்கு புதையல் , லாட்டரி போன்ற  அமைப்புகளில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும் அல்லது  ஜாதகர் தனது நேர்மறை எண்ணங்களால் , புதையலுக்கு நிகரான செல்வ வளங்களை பெரும் புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறனை வாரி வழங்கும் , ஜாதகரால் முடியாத காரியங்கள் என்பது எதுவும் இல்லை என்ற நிலையை தரும் , தன்னம்பிக்கையும் , மனோதிடத்தையும் இறை நிலை ஜாதகருக்கு மற்றவரை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து , அதில் வெற்றி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும் , இவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வீரியத்தை எவராலும் அறிந்து கொள்ள இயலாது , இதுவே ஜாதகரின் வெற்றிக்கு உண்டான  சூட்சமமாக விளங்கும் .

ஆனால் மேற்சொன்ன பாவகங்கள் ஜாதகரின் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது அப்படி அமையும் பட்சத்தில் மேற்சொன்ன பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களே நடைமுறைக்கு வரும் , மேலும் லக்கினம் என்பது 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்மறை எண்ணத்தை ஊக்கபடுத்தி , ஜாதகரை செயல்படாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும் தன்மையை தர கூடும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 9 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் !




ஐயா வணக்கம்,

கேள்வி :
ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள்,குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட
பாவத்தை,கிரகத்தை குரு பார்வை செய்தால் தோஷ நிவர்த்தி என பாரம்பரிய  ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி?
இதன் விதிவிலக்குகள் என்னவிளக்கங்களை ஜோதிடதீபத்தில் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்,
ஜோதிடபித்தன்


பதில் :
ஒரு ஜாதகத்தில் பாதிக்க பட்ட ஒரு பாவகத்தை குரு பகவானின் பார்வை சரி செய்து நன்மையை வாரி வழங்கும் என்பதெல்லாம் உண்மையில்லை , குரு பார்வை தரும் தீமையை பற்றி அறியாதவர்கள் சொல்லும் வார்த்தையாகவே இதை எடுத்து கொள்ள முடியும் , தனுசு அல்லது மீன இலக்கின ஜாதகருக்கு முறையே மிதுனம் மற்றும் கன்னியில் நட்பு நிலை ) அமர்ந்து  நேரெதிர் பார்வை செய்யும் குரு பகவான் தனது லக்கினத்தையே தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .

மேலும் தனுசு இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு மேஷத்தில் அமர்ந்து குரு பகவான் பகை நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை  தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு சிம்மத்தில் அமர்ந்த குரு பகவான் ( நட்பு நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே போன்று மீன இலக்கின ஜாதகருக்கு கடகத்தில்  அமர்ந்து குரு பகவான் உச்ச நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை  தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும்இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு விருச்சகத்தில் அமர்ந்த குரு பகவான் பகை  நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மேற்கண்ட அமைப்பில் தனது லக்கினத்திர்க்கே தனது பார்வையில் இரண்டுவிதமான பலன்களை தரும் குரு பகவான் , ஒரு பாவகத்தை பார்வை செய்தால் அந்த பாவகம் அணைத்தது தோஷங்களையும் , குறைகளை நிவர்த்தி செய்யும் என்பது எப்படி ? என்று எங்களுக்கு தெரியவில்லை .

சரி உங்களுக்காக ஒரு எளிய விதி முறை சொல்கிறோம் புரிகிறதா என்று பாருங்கள் , அதாவது ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கோண அதிபதியாக வந்து (லக்கினம் ஐந்து ஒன்பது )கோண பலம் பெற்று தனது வீட்டிற்கு முதல் , ஐந்து , ஒன்பது ) அமர்ந்தால் குரு பகவானின் பார்வை 100 சதவிகித நன்மையை தரும் .

ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர அதிபதியாக வந்து ( நான்கு , எழு , பத்து ) மறைவு பலம் பெற்றால் தனது வீட்டிற்கு 2,6,8,12 ல் அமர்ந்தால் ) நன்மை தருவார் கேந்திர பலம் பெற்று நான்குஎழுபத்து ) ஒரு பாவகத்தை  பார்வை செய்தால் 200 சதவிகிதம் தீமையான பலனை தரும்இந்த அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் குரு பகவானின் பார்வையின் தன்மையை  தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் குரு  பார்வையின்  நன்மை தீமையை லக்கினத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .

கேள்வி :
 நீசமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா?

 பதில் : 
ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் அதன் பார்வை , பார்க்கும் இடத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களை எவ்வித தங்கு தடையும் இன்றி செய்யும் , ஆக குரு நீச்சம் பெற்றாலும் சரி உச்சம் பெற்றாலும் சரி , பார்க்கும் பார்வை சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் .
கேள்வி :
வக்ரமான குருவின் பார்வைக்கு பலம் உண்டாஅஸ்தமனமான குருவின் பார்வைக்கு பலம் உண்டாஆறு,எட்டு,12 ல் மறைந்த குருவின் பார்வைக்கு பலம் உண்டா?

பதில் :
நிச்சயம் உண்டு இதில் எவ்வித குழப்பமும் இல்லை . மேலும் குரு பகவான் வகிரகம்அஸ்தமனம்,மறைவு எந்த நிலை பெற்றாலும் சரி அதன் பார்வை பலத்தில் எவ்வித வேறுபாடும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை .

கேள்வி :
லக்னத்திற்கு பாதகாதிபதியாக வரும் குருவின் பார்வையால் நன்மை உண்டா?

பதில் :
இந்த விஷயத்தை சுய ஜாதகம் கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது ,

கேள்வி :
குருவின் 3பார்வைகளில் வித்யாசம் உண்டா?சமம் தானா?

பதில் :
குரு பகவானின் 3 விதமான பார்வையில் எவ்வித வேறுபாடும் இருக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை .

கேள்வி :எந்த அமைப்பால் குருவின் பார்வையால்  ஜாதகனுக்கு தீமை ஏற்படும்?

பதில் :
ஒரு ஜாதகத்தில் கேந்திரங்களுக்கு அதிபதியாக வரும் குருபகவான் , கேந்திர பலம் பெற்று தனது வீட்டை தானே பார்வை செய்யும்பொழுது ஜாதகர் அடையும் இன்னல்களுக்கு ஒரு அளவே இருக்காது , இந்த பலன் கோட்சார குருபகவானுக்கும் பொருந்தும் . ஆக குரு பகவானின் பார்வையும் தீமை செய்யும் என்பதை ஜோதிடதீபம் இந்த பதிவின் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்