குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 30 ஜூன், 2018

வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?


வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?

நிச்சயம் பேரிழப்பும், தாங்க இயலாத துன்பமுமே மிஞ்சும், " மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பது முற்றிலும் உண்மையானதே, ஓர் உடல் ஈருயிர் என்ற தத்துவத்தின் படி கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் சுபயோகங்களையும், அவயோகங்களையும் பெரும் நிலை இருவரது சுய ஜாதகத்திலும் உண்டாகும், தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையுடன் இருப்பதும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் நல்கும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், பாதிப்பு கடுமையாக இருப்பின் மணவாழ்க்கையில் பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கிவிடும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்.

ஜாதகிக்கு பெரும்பாலா வீடுகள் சத்ரு,ஆயுள் மற்றும் விரைய ஸ்தானத்துடனும், 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை  தரும் அமைப்பல்ல, குறிப்பாக  2,4,6,10ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகுக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகி தனது விருப்பப்படி இல்லற வாழ்க்கையை புதன் திசை கேது  புத்தியில் தேர்வு செய்கிறார், புதன் தனது திசையில் ஜாதகிக்கு 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தருவது, ஜாதகி சிந்திக்கும் திறனற்று செய்யும் காரியங்கள் வழியிலான இன்னல்களை புதன் திசையில் எதிர்கொள்ள தயார் நிலையில் நின்றிருப்பதை உறுதி செய்கிறது, கேது புத்தி ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளையும், வாழ்க்கை துணை வழியிலான திடீர் பொருள் இழப்புகளையும், வாழ்க்கை துணைக்கு எதிர்பாராமல் வரும் பொருளாதர நெருக்கடிகளையும் பாரபட்சம் இன்றி வழங்குவதுடன், 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகரின் கணவரின் பேரில் இருந்த பூர்வீக சொத்துக்களை அனைத்தையும் மொத்தமாக இழந்து, பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது.

இவையெல்லாம் திருமணம் ஆனா 5 வருடங்களுக்குள் நடைமுறைக்கு வருகின்றது, தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை, ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் 100% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும் பலாபலனாக நடைமுறைக்கு வருகின்றது, மேலும் ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, ஜாதகியின் அறிவற்ற செயல்பாடுகளினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, அடிப்படையிலேயே ஜாதகிக்கு நிறைவான அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் 5ம் பாவக பாதிப்பினால் வலுவிழந்து நிற்பதால், ஆற்றில் அடித்து செல்லும் ஆலிலை போல் வாழ்க்கையில் தன்வசமும், கணவர் வசமும் இருந்த சொத்துக்கள், இடம், நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்தது. அடிப்படையில் ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் நடைபெற்ற திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏக காலத்தில் ஏற்று நடத்தியது ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் குறுகிய காலத்தில் இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், கடும் துன்பத்தையும் வாரி வழங்க ஆரம்பித்தது, தம்பதியர் இருவரும் எதிர்பாராத விஷயமாகும்.

பொருளாதார  சீர்குலைவு ஏற்பட்டால் இல்லற  வாழ்க்கையில் மகிழ்ச்சி எது ? அதுவே இவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வந்தது, புதன் திசையில் சந்திரன் புத்தியில் இருவரும் ஆளுக்கொரு இடமாக பிரிந்து சென்றனர், ஜாதகி 5மாத கர்ப்பிணி என்ற சூழ்நிலையிலும் பிரிவை தவிர்க்க இயலவில்லை, இது  குழந்தை பிறப்பிற்கு பிறகும் 5 வருடங்கள் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது, பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோருக்கு சாதகமான நன்மைகளை  தரவில்லை, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  பொழுது பிறக்கும் குழந்தையும் யோகமற்றதாக பிறக்க கூடும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகியே நல்ல உதாரணம், ஜாதகியின் குழந்தையின் ஜாதகத்திலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள கேது திசை 12ம் வீடு பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது, இருப்பினும் எதிர்வரும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 4ம் பாவகம் விருச்சிக ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், எனவே ஜாதகி சுக்கிரன் திசை தரும் சுபயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுக, " வாழ்த்துகள் "

குறிப்பு :

எந்த காரணத்தை கொண்டும் சுய ஜாதகம் வலிமையற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, இல்லற வாழ்க்கையில் சிறப்பை தாராது, பெரும்பாலும் விருப்ப திருமணங்கள் சுய ஜாதக வலிமையற்று அமைவதாலே பிரிவு என்ற நிலைக்கு ஆர்ப்படுகின்றனர், மேலும் தனது சந்ததிகளுக்கும் பெரும் துன்பத்தை தருகின்றனர், நமது வாழ்க்கை எப்படி இருப்பினும், நமது சந்ததியின் வாழ்க்கை சிறப்பாக அமைவது அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டாவது, விருப்ப திருணம் செய்வோர் சரியான தீர்வுகளை தேடுவது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 26 ஜூன், 2018

" தத்து பரிகாரம் " செய்வது எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் சுபயோகங்களை வழங்குமா ?


கேள்வி :

 எங்களது குழந்தையின் ஜாதகத்தில் கிரகங்கள் பாதிப்பில் உள்ளதாலும், பெற்றோரை குறிக்கும் 4,9ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும் எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் கடுமையான இன்னல்களை தரும் என்றும், குழந்தைக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை பெற்றோரான எங்களிடம் இருந்து பிரிவினையை தரும், எனவே எங்களது பெற்றோரிடம் குழந்தை வளர்வதே தங்களுக்கு நல்லது என்கின்றனர், மேலும் குழந்தையை "தத்து" பரிகாரம் செய்து கொடுப்பதே அனைத்திற்க்கும் தீர்வாக அமையும் என்கின்றனர், இது உண்மையா? எங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்து கொடுக்கலாமா ? தத்து பரிகாரம் முறையாக செய்வது எப்படி ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

 மேற்கண்ட உதாரண ஜாதகமே "தத்து" பரிகாரம் செய்வதற்க்கான அனைத்து தகுதியும் உள்ள ஜாதகம் அன்பரே.

 தங்களது குழந்தையின் ஜாதகத்தில் தத்து பரிகாரம் செய்வதற்கான சிறு பாதிப்பு கூட இல்லை, அதற்க்கான அவசியமும் இல்லை என்பதே உண்மை நிலை, எனவே  தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துதரவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்பதை உணருங்கள், மேலும் தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 1,4,5,7,9,10 ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  சுக ஸ்தானமான கடக ராசியில் வியாபித்து நிற்பது தங்களுக்கும், தங்களது குழந்தைக்கும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், மேலும் நடைபெறும் சனி திசை குழந்தைக்கு 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது சிறப்பு மிக்க கல்வி காலத்தையும், கல்வியில் தேர்ச்சியையும், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தெளிவான சிந்தனை, தெளிந்த நல்லறிவு என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும் என்பதால் தாங்கள்  யாதொரு மனவேதனையும் கொள்ளாமல், தங்களது குழந்தையை தாங்களே பாசமுடன் வளர்ப்பது நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும்  4,10ம் வீடுகள்  மிகுந்த வலிமையுடன் இருப்பது தங்களுக்கே சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு நலம் பெறுங்கள்.

மேற்கண்ட உதாரண ஜாதகரை ஏன்? தத்து பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சற்று விரிவாக இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

லக்கினம் : துலாம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

பொதுவாக சுய ஜாதகத்தில் தாய்,தந்தையை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே அவரை  தத்து பரிகாரம் செய்து தரவேண்டும், குறிப்பாக 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவக தொடர்பை பெறுவது, திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக தொடர்பை பெறுவது, விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, போன்றவை மட்டுமே குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையிலான உறவில் பிரிவு, மிகுந்த இன்னல்கள், போராட்ட வாழ்க்கை, ஆயுள் பங்கம் என்றவகையில் சிரமங்களை தரக்கூடும், அதுவும் குழந்தைக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், மேற்கண்ட பாதிப்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தீய பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், என்பதை கருத்தில் கொள்க. 

உதாரண ஜாதகத்தில்  4,10ம் வீடுகள்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையிலேயே பெற்றோருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், பெற்றோருடன் சேர்ந்து ஜீவிக்க இயலாத நிலை, பெற்றோருக்கு வரும் பொருளாதர இன்னல்கள், நிலையற்ற தன்மையிலான வாழ்க்கை,  ஜாதகருக்கு வரும் உடல் மன நலம் சார்ந்த பாதிப்பு, போராட்ட வாழ்க்கை, ஒவ்வொரு விஷயத்தையும் போராடி பெறவேண்டிய நிலை, என்ற வகையில் பாதிப்பை தரும், மேலும் லக்கினம் விரைய ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு  வளரும் சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகளை சந்திக்கும் நிலையினை தரும், எடுக்கும் முயற்சிகள் தடைபெறும், அதிர்ஷ்டமின்மை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, ஜாதகரே விருப்பப்பட்டாலும், தனது பெற்றோருடன் ஜீவிக்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற நிலையை கொண்ட ஜாதகரை அவர்களது பெற்றோர், தமது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு தத்து பரிகாரம் செய்து தருவது, சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கும், ஜாதகரின் பெற்றோருக்கும் வாரி வழங்கும், ( என்ன செய்வது ஜாதகருக்கு கொஞ்சம் வயது அதிகம் ) எனவே தத்து பரிகாரம் செய்யுமுன் சுய ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தான வலிமையை கருத்தில் கொண்டு தத்து பரிகாரம் செய்வது சிறப்பை தரும்.

குறிப்பு :

கன்னி லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்ஷத்திரம் கொண்ட  தங்களது குழந்தையின் ஜாதகத்தில், பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன்  உள்ளது, மேலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிக வலிமையுடனும், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம் போன்றவை மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, தவறான அறிவுரையின் பேரில் தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துவிடாதீர்கள், ஏனெனில் குழந்தை வழியிலாக வரும் சுபயோகங்கள் தங்களுக்கு கிடைக்காமல் விரையமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது, எனேவ தங்களது குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள் என்பதே " ஜோதிடதீபம்" வழங்கும் துல்லியமான ஆலோசனை வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 22 ஜூன், 2018

பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு காரணம் என்ன ?



 திருமணம் நடைபெற்று 1 வருடம் கூட நிறைவு பெறவில்லை, இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பு, எங்களது விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்டோம், இருப்பினும் விவாகரத்து கேட்கிறார், என்னிடம் தவறு உள்ளதா? அல்லது எனது கணவரிடம் தவறு உள்ளதா? நிறைய ஜோதிடர்களை கண்டும் தெளிவான ஜாதக பலனையே இதுவரை அறிய இயலவில்லை, பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு உண்மையான காரணம் என்ன ? தயவு செய்து சரியான விளக்கங்களை தர வேண்டுகின்றேன், ஏதாவது பரிகாரம் மேற்கொண்டால் சேர்ந்து வாழ்வதற்கு வழியுண்டா? தயவு செய்து கூறவும்.


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

வணக்கத்திற்கு உரிய சகோதரி அவர்களுக்கு, இன்றைய எந்திரவியல் வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக அமைவதற்கு அடிப்படை தகுதியே பெண்களின் விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்பு தன்மை, தாய்மை உள்ளம், பொறுமை, அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம், பெருந்தன்மையான நடவடிக்கைகள், கணவர், குழந்தைகள் மற்றும் புகுந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்டுதல் போன்றவையே என்றால் அது மிகையில்லை, தங்களது இல்லற வாழ்க்கை மணமுறிவை நோக்கி செல்வதற்கு காரணம் என்ன ? என்பதை பற்றி தாங்களே ஓர் சுய மதிப்பீடு செய்துகொள்வது நல்லது, உதாரணமாக தங்களது செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகள் தங்களுக்கு உண்மையை உணரவைக்கும், இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் வழியிலான பலாபலன்களை மணமுறிவுக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, தங்களது ஜாதக வலிமையை பற்றியும், தங்களது வாழ்ககை துணையின் ஜாதக வலிமை பற்றியும் மேலோட்டமாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தங்களது சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகளின் வலிமை நிலை :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவாக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும். ( அடிப்படையே சறுக்குகிறது )

2,5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை தரும். ( 11ம் பாவகம் சர ராசியான மகரத்தில் 22 பாகைகளையும், ஸ்திர ராசியான கும்பத்தில் 9 பாகைகளையும் கொண்டிருப்பது அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பரிபூர்ணமாக தரும் )

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை மிக கடுமையாக வாரி வழங்கும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் தங்களது நல்ல குணம் மற்றவர்கள் வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

அடிப்படையில் தங்களது கணவரது ஜாதகத்தை விட தங்களது ஜாதகம் சற்று வலு குறைவாகவே காணப்படுகிறது, குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், பிரிவு நிலையையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது, தாங்கள் தேர்வு செய்த இல்லற வாழ்க்கைக்கான துணை சரியானது என்ற போதிலும், தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வலிமை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, தங்களுக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை நல்காது என்பதுடன், வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக தாங்களே இருப்பீர்கள் என்பதே உண்மை நிலை, மேலும் 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான மன உளைச்சலையும், மன போராட்டத்தையும் தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையை குறைக்கும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் மனநலம் கெடும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்கள் அறிவுரை வீணாகும், அவப்பெயர் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து தாம்பத்தியம், மனப்போராட்டம், நிம்மதியின்மை அதிகரிக்கும்.

எனவே அடிப்படையில் தங்களது ஜாதகமே இல்லற வாழ்க்கையில் மணமுறிவுக்கு காரணமாக அமைகிறது என்பதை தாங்கள் உணர்வது அவசியமாகிறது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்கது, இது தங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் ஆகும், தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தானம் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மிகவும் சிறப்பாக இருப்பது கவனிக்கத்தக்கது எனவே, பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து வரும் சந்தேகம், தவறான புரிதல், பிடிவாதம், வீண்வாதம் போன்ற வற்றை களைந்து, தங்களது வாழ்க்கை துணையுடன் பல்லாண்டு கால வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் லாப ஸ்தானம் மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதை அறியாமல் தங்களது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானம் தரும் பாதக ஸ்தான பலனை முன்னிறுத்தி உங்களது யோக வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்திவிடாதீர்கள், தங்களின் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தங்களது இல்லற வாழ்க்கையை மீண்டும் சிறப்பாக அமைத்து தரும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், தற்போழுது நடைமுறையில் உள்ள 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை முழுவீச்சில் நடத்துவதே, தங்களது இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது, எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தங்களது அறிவுத்திறன் கொண்டும், பெரியோர்கள் அறிவுரை கொண்டும் வெற்றிபெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் சனி புத்தி 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது மீண்டு இல்லற வாழ்க்கையில் சிறந்த துவக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் தாங்கள் குடியிருக்கும் வீடு வடக்குதிசை வாயிற்படி கொண்டதாக அமைவது சகல சௌபாக்கியங்களையும் தரும், சுகபோக யோக வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும்.

பரிகாரம் :

 தங்களின் மனமாற்றமே சிறந்த பரிகாரமாகும், இருப்பினும் சர்ப்ப சாந்தி பரிகாரமும், பிராமண ஆசிர்வாதமும் தங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களுக்கும் சரியான தீர்வை தரும், சனி வக்கிரக நிவர்த்தி திருவக்கரை சென்று செய்து வருவது சகல நிலைகளில் இருந்தும் சுபயோகங்ளை வாரி வழங்கும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

வெள்ளி, 8 ஜூன், 2018

சுபயோக ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !

 

 சுய ஜாதகம் வலிமை பெறுவது ஒவ்வொருவருக்கும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும், இறை அருளின் கருணையினால் வெகு சில ஜாதகங்களே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமை பெற்று அமைகிறது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெரும் நன்மைகளையும் யோக வாழ்க்கையையும் இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

 ஜாதகருக்கு ரிஷப லக்கினம், லக்கினம் மற்றும் சில வீடுகளும் சுபத்துவம் பெற்ற பாவகங்களுடனே சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் தரும் சுபயோகங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்,

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,2,6,8ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, ஒழுக்கம் சுய கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், சிறந்த மனப்பக்குவம், அனைத்தையும் அனுசரித்து செல்லும் குணம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், பல்துறை நுண்ணறிவு, பொறுமை சகிப்பு தன்மை, திட்டமிட்டு செயல்படும் யோகம், நீண்ட ஆயுள், மனதில் தெளிவு, எதிரிகளை வெல்லும் வல்லமை, இனிமையான பேச்சு திறன், கடவுள் ஈடுபாடு ஆன்மீக வெற்றி மனமும் உடலும் ஒருங்கே சிறப்பாக செயல்படும் தன்மை, வெற்றி, புகழ், கீர்த்தி மற்றும் சுய அந்தஸ்துடன் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மையை தரும்.

2ம் பாவக வழியில் இருந்து இனிமையான வாக்குவன்மை, பேச்சின் மூலம் காரியம் சாதிக்கும் யோகம், வார்த்தைகளில் வெளிப்படும் கம்பீரம் மற்றும் தைரியம், உறுதியான நிலைப்பாடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடன் நல்லுறவு, பொருளாதார ரீதியான வெற்றி வாய்ப்புகள், தன்னிறைவான வசதி வாய்ப்புகள், கைநிறைவான வருமானம், தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வல்லமை, சுய தொழில் வழியிலான வருமானம், வியாபாரம் மூலம் வரும் அபரிவித தனசேர்க்கை, பேச்சில் உறுதி, அனைவரையும் மதிக்கும் குணம், வலிமை மிக்க பதவிகள், வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவு மற்றும் தன சேர்க்கை, வாக்கு வன்மையை தொழில் முதலீடாக பெரும் யோகம், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிபெறும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் சற்று பாதிப்பை தரக்கூடும், செய்யும் தொழில் மற்றும் பணியில் நேர்மையை தரும், எடுத்த காரியங்களில் அபரிவிதமான வெற்றியை பெறுவார், அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை ஜாதகருக்கு நல்ல வெற்றிகளை வழங்கும், கடன் சார்ந்த இன்னல்கள் ஜாதகருக்கு சற்று சிரமங்களை தரக்கூடும், பொது காரியங்களில் ஈடுபாடு, சமூக அக்கறை அதிகரிக்கும், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் வல்லமை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் உண்டு, தொல்லைகள் யாவும் ஜாதகருக்கு புது உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மிக எளிதாக அனைத்தையும்  சாதிக்கும் வல்லமை, இன்சூரன்ஸ் துறையில் அபரிவித லாபத்தை வாரி வழங்கும், விபத்து மருத்துவ சிகிசையை தவிர்க்க இயலாது, அறுவை சிகிக்சை மூலம் உடல் நலம் பெரும் வாய்ப்பு உண்டு, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத கவனம் ஜாதகருக்கு தேவை என்பதை மனதில் கொள்வது அவசியமாகிறது.

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் கனவுகள் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும், அதிகப்படியான வண்டி வாகன யோகமும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், விவசாயம் மற்றும் விவசாய உபகரணம் மூலம் பெருத்த லாபம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம் சார்ந்த லாபம், தர்மத்தை நம்புதல் கடைபிடித்தல், கணிதம் மற்றும் சாஸ்திரத்தில் தேர்ச்சி, திருமணத்திற்கு பிறகான அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார்.

5ம் பவாக வழியில் இருந்து ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டாகும், முதலீடுகள் மற்றும் வியாபாரம் சார்ந்த லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும், தனது சமயோசித புத்திசாலித்தனத்தால் ஜாதகர் பன்மடங்கு வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெறுவார், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தரும், எப்பொழுதும் மகிழ்ச்சி, மனைவி மற்றும் குடும்பத்துடன் சுமுக போக்கு, குழந்தைகள் வழியிலான அதிர்ஷ்டம், கற்ற கல்வி  வழியிலான யோகம், வருமுன் காக்கும் வல்லமை, தெய்வீக அனுக்கிரகம்  மற்றும் குலதெய்வ ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை  தரும், நல்ல ஆண் வாரிசு அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகம் பெற்ற திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்று வாழ்க்கையை மிக  யோகமிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், முன்னோர்களின் புண்ணிய பதிவுகள் வழியில் இருந்து ஜாதகர் சிறப்பான சுபயோகங்களை பெறுவார், யோகமிக்க புத்திரபேறுகளை அடையும் நிலையம், அவர்கள் வழியிலான யோக பலன்களையும் ஜாதகர் தங்கு தடையின்றி  பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், எவ்வளவு பெரிய சிரமங்கள் ஏற்பட்டாலும் அதில் இருந்து குறுகிய காலத்தில் வெளிப்படும் தன்மையை தரும், ஜாதகரின் அறிவாற்றல் பெருமைப்படத்தக்க விஷயங்களில் ஈடுபட்டு அதன்வழியிலான நன்மைகளை  பரிபூர்ணமாக அனுபவிக்க வைக்கும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டத்தை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், ஜாதகரின் மேன்மையான நல்ல குணம் அனைவரிடத்திலும் நற்ப்பெயரை பெற்று தரும், யோகமிக்க எதிர்காலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க நன்மைகளை தரும், மனநிம்மதியும், ஒருமைப்பாடும் ஜாதகருக்கு வியக்கத்தக்க வெற்றி வாய்ப்புகளை நல்கும், பல தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து  சேரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும், புதிய முயற்சிகள் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும், நம்பிக்கை மிகுந்த மனவலிமை ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமையும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகனம், சொத்து சுகம், இடம் நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிக பெரிய சொத்துக்களை வாங்கும் வல்லமையை தரும், ஜாதகரின் நல்ல குணம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை தரும், போதிய வசதி வாய்ப்புகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்படும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் மேற்கொள்வது சகல சௌபாக்கியத்தையும், பெரும் செல்வ சேர்க்கையையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் வளர்ச்சி வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் மிகவும் அபரிவிதமானதாக அமையும், சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை ஜாதகர் பெறுவது அவசியமாகிறது.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முழு ஆதரவை தரும்,  திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும், இணக்கமான சூழ்நிலையை வாழ்க்கை துணையுடன் பெறுவது ஜாதகருக்கு மென்மேலும் யோக வாழ்க்கையை நல்கும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, அன்னியோனிய இல்லற வாழ்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு  நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகளில் யோகம், குடியுரிமை பெரும் வாய்ப்பு, பிரபல்ய யோகம், பொது வாழ்க்கையில் வெற்றி, மக்கள் ஆதரவு, வியாபாரம் சுய தொழில் செய்வதன் மூலம் அதீத லாபம் என்ற வகையில் சிறப்புகளை தரும், கலைத்துறையில் ஈடுபாடு, கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

10,12ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, தொழில், வணிகம், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவித முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் மிக்க பதவிகள் தேடி வரும், சுய முன்னேற்றம் சார்ந்த  நடவடிக்கைகள் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்,  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் அமைவது வரவேற்கத்தக்கது, ஜாதகரின் அறிவு திறன் சார்ந்த ஜீவன அமைப்புகளில் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தொழில் வழியில் எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சுய தொழில் செய்வதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட கால தொழில் முதலீடுகள் அபரிவித வளர்ச்சியை தரும், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை ஜாதகர் முதலீடுகள் வழியில் இருந்தும், தொழில் வழியில் இருந்தும் பெறுவார், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், போதும் என்ற மனமும், திருப்தியான மனநிறைவும் ஜாதகருக்கு அயன சயன ஸ்தான வழியில் இருந்து முழுமையாக கிடைக்கும், மனதில் உள்ள ஆசைகள் மற்றும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும், திடீர் மாற்றங்கள் ஜாதகருக்கு திகைப்பை தந்தபோதிலும், அதுவே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருப்பது அவசியமாகிறது.

எதிர் வரும் குரு திசை தரும் பலன்கள் ( 19/07/2018 முதல் 19/07/2034 )

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எதிர்வரும் குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மிகுந்த நன்மைகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை நல்கும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பது போராட்ட வாழ்க்கை தரும், ஆனால் எதிர்வரும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகமில்லை, ஜாதகர் 3,5,9,11ம் பாவக வழியிலான பலன்களை சுவீகரிக்க ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 21 மே, 2018

சனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !


சுய ஜாதக பலன்கள்

நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது ? சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது, எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் ?

லக்கினம் : மேஷம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 3ம் பாதம்



சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள்

1ம் வீடு உயிர் உடலாகி லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, சிறப்பான வளரும் சூழ்நிலையையும், நீண்ட ஆயுளையும், நல்ல மனம், சிறந்த குணம், ஆரோக்கியம், உடல் நலம், யோகம் நிறைந்த வாழ்க்கை வளம் என மிகுந்த நன்மைகளை தரும், ஜாதகி மேற்கொள்ளும் காரியங்களில் பரிபூர்ண வெற்றியையும், கீர்த்தியையும் தரும், லக்கினம் மேஷம் என்பதாலும் சர நெருப்பு ராசியின் இயக்கம் என்பதாலும், சுய கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகம், லட்சியங்களை அடைதல், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, நினைத்ததை அடையும் யோகம் என பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வாழ்நாள் முழுவது, சிறப்பான சுபயோகங்களை நல்கும் அமைப்பாக கருதலாம்.

2,4,5,7,8,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கைத்துணை, நிறைவான வருமானம், கல்வியில் வெற்றி, நல்ல உத்தியோகம், வியாபார மூலம் நல்ல முன்னேற்றம், கவுரவம் அந்தஸ்து, இனிமையான வாக்குவன்மை, புகழ், அரசு கவுரவம், அனைத்திலும் வெற்றி, செய்தொழில் வழியிலான அபரிவித வருமானங்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, எதிர்காலத்திற்க்கான சேமிப்பு என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், கைநிறைவான வருமானம், பெயரும் புகழும் தேடிவரும் யோகம், மண் மனை, வண்டி வாகன யோகம், திடீர் சொத்து சுக சேர்க்கை, வேலையாட்கள் மூலம் லாபம், சிறந்த நிர்வாக திறமை, பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுதல், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், அரசியல் சார்ந்த உதவிகள், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புகளை தரும், நல்ல குணம் ஜாதகிக்கு சிறந்த யோக வாழ்க்கையை  வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல புத்திர  பாக்கியம், நிறைந்த அறிவு, கல்வியில் வெற்றி, செல்லும் இடங்களில் இருந்து வரும் ஆதரவு, அருங்கலைகளில் தேர்ச்சி மற்றும் புகழ், நாடகம், சினிமா துறையில் லாபம் , குழந்தைகளால் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், விளையாட்டில் அதீத ஆர்வம், வாழ்க்கையில் சிறப்பான மேன்மைகளை பெறுதல், புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், குல தெய்வத்தின் ஆசி மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் பெரும் அமைப்பு, புதிய சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், அபரிவித்த வளர்ச்சி என ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, வெளிநாடுகளில் தொழில் முன்னேற்றம், அரசியல் மற்றும் வியாபாரத்தில் வெற்றி, சமூக வாழ்க்கையில் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைத்தல், பொதுவாழ்க்கையில் முன்னேற்றம், திடீர் செல்வாக்கு, பல தொழில் செய்யும் யோகம், கூட்டு தொழில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சி, செய்யும் காரியங்கள் யாவிலும் தனித்தன்மையான செயல்பாடுகள், வெளியூர் அல்லது வெளிநாடு சென்ற பிறகு வரும் பொருளாதார தன்னிறைவு என ஜாதகிக்கு களத்திர ஸ்தான  வழியில் இருந்து சுபயோகங்களை அதிக அளவில் வந்து சேரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு  நல்ல அந்தஸ்தை விரைவாக பெரும் யோகம், வசதிமிக்க வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்பு, பதவியில்  திடீர் உயர்வு, நீண்ட ஆயுள், எதிர்ப்புகள் அனைத்தையும் எதிர்கொண்டு திடீரென அபரிவித வளர்ச்சியை பெரும் தன்மை, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் பொருளாதர உதவிகள், நல்ல நண்பர்கள் உதவி, பொது மக்கள் செல்வாக்கு மூலம் கவுரவ பதவிகளை பெரும் யோகம், மருத்துவ உபகரணம்,மற்றும் மருந்துகள் மூலம் நல்ல லாபம், இன்சூரன்ஸ் துறையில் பெரும் அபரிவித லாபம் மற்றும் தொழில் வாய்ப்புகள் என ஜாதகிக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செய்யும் தொழில் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தரும், மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டு, அரசு ஆதரவு, தனியார் துறையில் இருந்து வரும் சிறப்பான தொழில் வாய்ப்புகள், தன்னம்பிக்கை மாறா மனநிலை, தொழில் வழியிலான சொத்து சுக சேர்க்கை வண்டி வாகன யோகம், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம், அதிர்ஷ்டத்தின் முழு வலிமையை ஜாதகி அனுபவிக்கு வல்லமை, தொழில் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபம் உண்டாகும், அறிய கலைகள் மூலம் செல்வாக்கும் தனசேர்க்கையும் உண்டாகும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் ஜாதகியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும், வேற்று மதத்தினர் அல்லது அயலார் மூலம் நன்மையையும் லாபத்தையும் பெற ஜாதகிக்கு வாய்ப்பு அதிகம், பயணங்கள் மூலம் நல்ல வாய்ப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அபரிவித லாபங்களை, தர்ம சிந்தனை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் வல்லமையும் ஜாதகிக்கு உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த பிரச்சனைகள் பெரும் சிரமங்களை தரக்கூடும், வேலையாட்கள் சிலநேரங்களில் இன்னல்களை ஏற்படுத்த கூடும், உடல் நல பாதிப்பு வயிறு சார்ந்து தருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, தேவையற்ற செலவுகள், எதிரிகள் தொந்தரவு, மறைமுக எதிர்ப்பு, எதிர்பாராத திடீர் செலவு, மறுத்துவ செலவினங்கள் என்று ஜாதகிக்கு சற்று பாதிப்பை அதிக அளவில் தரக்கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் தனது வெற்றியில் குறிக்கோளாக இருப்பது ஜாதகிக்கு சகல நலன்களையும் தரும்.

9 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு வெளிநாடுகளில் இருந்து பரிபூர்ண யோகத்தை வாரி வழங்கும், சொந்த இடத்தைவிட்டு வெகு தொலைவு சென்ற பிறகு பரிபூர்ண  சுபயோகங்களை வாரி வழங்கும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு மிகப்பெரிய இன்னல்களையும், வீண் அவப்பெயரையும் பெற்றுத்தரும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை மற்றும் லாட்டரி மூலம் பெரும் நஷ்டத்தை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை பெரும் சிரமங்களை தரக்கூடும், அனைவராலும் அதிக தொல்லைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மனநிம்மதி இழப்பும், மனஅழுத்தமும் ஜாதகியின் அதிர்ஷ்டத்தை வெகுவாக பாதிக்கும், முதலீடுகளில் கவனமில்லை எனில் ஜாதகி பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.

10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக அமையும், ஆலோசனை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அபரிவித்த தனித்தன்மையை வாரி வழங்கும், நிதி ஆலோசனை, நிதி மேலாண்மை இரண்டிலும் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பொது வாழ்க்கையில் எதிர்பாரா வெற்றிகள் உண்டு, இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத விருப்பம் உண்டாகும், பொருளாதரா வளர்ச்சி எதிர்பார்த்த வாறே அமையும்.

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை தரும் பலன்கள் : ( 26/11/2008 முதல்  27/11/2027 வரை )

சனி பகவான் தனது திசையில் 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், தொழில் ரீதியான வெற்றிகளையும், சமூக அந்தஸ்த்தையும் பரிபூர்ணமாக தரும், எதிர்பார்த்த நன்மைகள் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் உடல் ஆரோக்கிய பாதித்த போதிலும் ஜாதகியின் முயற்சிகள் நல்ல விருத்தியை தரும், பொருளாதர முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி திசை சுக்கிரன் புத்தி ஜாதகிக்கு 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகி தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றிகளை நல்கும், வண்டி வாகனம், வீடு சொத்து சுக சேர்க்கை பெற நிறைய வாய்ப்புகள் வந்து சேரும், சூரியன் புத்தி 6,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், சந்திரன் புத்தி களத்திர பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், செவ்வாய் புத்தி 4,7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகுபுத்தி லக்கின வழியில் இருந்து சுபயோகங்களையும், குரு புத்தி 7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது ஜாதகி மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும்.

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 27/11/2027 முதல் 26/11/2044 வரை )

புதன் தனது திசையில் 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஓரளவிற்கான சுபயோகங்களை நல்குவது ஜாதகிக்கு நன்மை என்ற போதிலும், சிறு சிறு விரயங்களை தவிர்க்க இயலாது, இருப்பினும் வியாபார முன்னேற்றம் என்பது மிகவும் சிறப்பாக அமையும், செய்யும்  தொழில் வழியிலான லாபம் நிச்சயம் உண்டு.

பரிகாரம் :

1) ஜாதகி திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தினமும் சூர்ய நமஸ்காரம் செய்து வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி  வழங்கும்.
3) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அண்ணதானம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
4) வருடம் ஒருமுறை பழனி சென்று முருக பெருமானை ராஜ அலங்கார தரிசனம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
5) சர்ப்ப சாந்தி பரிகாரம், ஜாதகிக்கு மென்மேலும் பரிபூர்ண ராஜயோகத்தை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 29 மார்ச், 2017

கணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அமையுமா ?



 ஒருவருக்கு நன்மையான பலன்கள் நடைபெறுவதற்கும், தீமையான பலன்கள் நடைபெறுவதற்கும் அவரவர் சுய ஜாதக வலிமையே காரணமாக அமையும், மேலும் ஒருவரின் ஜாதகம் மற்ற ஒருவருக்கு நன்மை தீமை பலாபலன்களையும் தாக்கத்தையும் தருகிறது என்றால்? அது கணவன் மனைவி ஜாதகங்களுக்கு மட்டும் சாத்தியம், ஆனால் பெற்ற குழந்தைகளின் ஜாதகம் வழியிலான இன்னல்களை பெற்றோர் அனுபவிக்கின்றனர் என்பது சற்று உண்மைக்கு புறம்பானதே, ஒருவேளை குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோர் இன்னலுற நேரும் என்றால், பெற்றோரின் ஜாதகம் மிகவும் வலிமை குறைவாக இருக்கும் என்பதே உண்மை நிலை, பொதுவாக குழந்தைகளின் ஜாதகம் பெற்றோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இல்லை ( குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே சிரமம் தர கூடும், அதுவும் பெற்றோரின் சுய ஜாதகம் வலிமை குறைவாக இருப்பதினால் மட்டுமே இது நடைபெறும் ) எனவே குழந்தைகள் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யாமல் பெற்றோரின் சுய ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சாலச்சிறந்தது, இதை ஓர் தம்பதியர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

கணவர் ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 5ம் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் களத்திர வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் வல்லமை பெற்றது, ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் அதிகமான மனஉளைச்சல் மற்றும் நிம்மதி இழப்பை ஜாதகர் வெகுவாக சந்திப்பார், ஜாதகருக்கு இரண்டு வாழ்க்கை துணை அமைந்தும் இருவரிடமும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார், தனது 2வது மனைவி வழியில் புத்திர பாக்கியத்தை பெற்றது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவாக வலிமையை காட்டுகிறது.

2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாய் வார்த்தை, பேச்சு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தமது குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் ( உண்மையில் குழந்தைகள் இந்த ஜாதகருக்கு சுபயோகங்களை தருகின்றனர் )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், பொருளாதார சரிவையும், தாங்க இயலாத மனப்போராட்டத்தையும் சந்திப்பர், பெரும் கவலைகள் ஜாதகரை வாட்டி எடுக்கும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை  குறிக்கும் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக சிதைக்கும்.

தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், குரு திசை ராகு புத்தி வலிமை அற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், தம்பதியர் தற்போழுது பிரிந்து இருக்கும் சூழ்நிலையையே தரும்.


மனைவி ஜாதகம் :


லக்கினம் : விருச்சகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம்

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 12ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், தனது கணவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் பெரும்பாண்மையானவை ஜாதகிக்கு மிகவும்  வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும்  ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசை மட்டுமே பாதிக்கப்பட்ட 10,12ம் பாவக  பலனை ஏற்று நடத்துகிறது, மேற்கண்ட தனது கணவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசையும், ஜாதகிக்கு நடைபெறும் திசையும் ஏக காலத்தில் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனையும், ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவதே தம்பதியரின் பிரிவுக்கு முழு முதற் காரணமாக அமைகிறது, அடுத்து வரும் சனி புத்தி ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தர கூடும் என்பது " ஜோதிடதீபத்தின் " எச்சரிக்கை.

மேலும் சனி புத்தி காலத்தில் ஜாதகி தன்னை விட வயதில் அதிகம் உள்ள  பெரியோர்கள் வார்த்தைகளை மதித்து நடப்பது சகல நலன்களையும் தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், நடைபெறும் திசைபுத்தி  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகர்  பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்பது மேற்கண்ட தம்பதியரின் ஜாதகம் கொண்டு தெளிவடையலாம்.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த ஓர் ஜாதகத்தை, அதை போன்றே பாதக ஸ்தானத்தால் பாதிப்படைந்த ஓர் ஜாதகத்துடன் இணைப்பது மாபெரும் தவறாகும், குறிப்பாக குடும்பம் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அதற்க்கு இணைசேர்க்கும் ஜாதகம் மிகுந்த வலிமையுடன் இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் , இல்லை எனில் இல்லற வாழ்க்கை வெகுவாக கசப்பை தந்து, குறுகிய காலத்தில் பிரிவை தரும், மேலும் தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது மிக முக்கியமான விஷயமாக அமைகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 22 மார்ச், 2017

ராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, புத்திரபாக்கியத்தை வழங்காதா ?



சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம்  பாவகத்தில் சாயா கிரகமான, ராகு அல்லது கேது அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, ஜாதகிக்கு புத்திர பாக்கிய தடைகளை தரும் என்பதும், புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாத நிலையை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தனது ஆளுமையின் மூலம் புத்திர பாவகத்திற்கு வழங்கும் வலிமை அல்லது வலிமை இன்மையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் பொது கருத்து என்பதை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு "ஜோதிடதீபம் " தெளிவு படுத்த விரும்புகிறது, சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேது புத்திர பாவகத்தில் அமர்ந்திருக்கும் பல ஜாதகங்களை புத்திர பாக்கியம் கிடையாது என்று திருமண பொருத்தத்தில் நிராகரிப்பதும், ஜோதிட உண்மைக்கு புறம்பானது.

 ஒருவருக்கு புத்திர ஸ்தானத்தில்தான் ராகுகேது அமர்ந்து இருக்கின்றதா? என்பதில் முதலில் தெளிவு பெறுவது அவசியம், அப்படி புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கின்றனரா? அல்லது வலிமை இழக்க செய்கின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது மிக மிக முக்கியமான அம்சமாக கருதவேண்டியுள்ளது, ஏனெனில் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி யாதொரு தெளிவும் இன்றி, குத்துமதிப்பாக புத்திரபாவகத்தில் ராகுகேது அமர்வது புத்திரபாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வதே அன்றி உண்மை சிறிதும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை பெற செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசு உண்டு, ஒருவேளை புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க  செய்தால் ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்ய இயலாது, ஏனெனில் தனது  வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்கிறாரா ? என்பதையும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் மற்றும் ஆண் வாரிசு அமைப்பை நிர்ணயம் செய்வதே துல்லியமானதாக அமையும்.   



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

 ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் ( 5ம் பாவகத்திற்க்கு உற்பட்ட பாகைக்குள் ) ராகு பகவான் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு அழகான, யோகம் நிறைந்த நல்ல ஆண் வாரிசை வழங்கி உள்ளது, மேலும் ஜாதகரின் முன்னேற்றம் என்பது தனது ஆண் வாரிசு மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் ஆண் வாரிசு வளர வளர ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை தொடர்ந்து வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து இருந்த போதிலும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு ஆண் வாரிசை மட்டும் அல்ல சமயோசித புத்திசாலித்தனத்தையும் வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஆதவனை கண்ட பனிபோல் நீக்கும் அறிவு திறனையும், இறை அருளின் கருணையையும் வாரி வழங்கி இருக்கின்றது, தான் கற்ற கல்வியை ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் வல்லமையை பெற்று இருப்பது வியப்புக்கு உரியது, ஜாதகரின் தெளிவான சிந்தனை, அறிவில் விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படும் தன்மை என 5ம் பாவக  வழியிலான சுப யோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ராகு 5ல் வலிமை பெற்று அமர்வது போல், கேதுவும் ஜாதகருக்கு 11ல் வலிமை பெற்று அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, ஜாதகர் தனது லட்சியம் ஆசை என விருப்பம் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் தன்னிறைவான யோகங்களை பெறுவதற்கு, சுய ஜாதகத்தில் வலிமை பெற்று 11ம் பாவகத்தில்  அமர்ந்து இருக்கும் கேது பகவானே முழுமுதற் காரணகர்த்தாவாக திகழ்கிறார், எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது அமரும் பாவகம் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களால் ஏற்படும் யோகம் மற்றும்  அவயோகத்தை பற்றி மிக துல்லியமாக கூற வழிவகுக்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால், மேற்கண்ட பலாபலன்களை எதிர்மறையான அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 8 மார்ச், 2017

காலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வழங்குமா ?


பொதுவாக சுய ஜாதகத்தில் காலதாமத திருமணம் பரிந்துரை செய்யும் சூழல் லட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு வரக்கூடும் அதற்க்கு காரணம் ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரோ, ஜாதகியோ திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, திருமணம் அமையாது, வீண் விரையம் மற்றும் மனஉளைச்சல்தான் அதிகரிக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருந்து, ஜாதகரை தாமத திருமணத்திற்கு பரிந்துரை செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை, ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும் பொழுதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும், ஜாதகருக்கு சரியான பருவ வயதில் திருமணம் கூடி வரும், இதை உணர்ந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமணம் செய்து வைப்பதே உகந்த நடைமுறையாகும், ஒருவேளை சில விஷயங்களை காரணம் கூறி திருமண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, விரும்பத்தகாத உறவுகளை உருவாக்கி விடும், ஏனெனில் காலமும் நேரமும் எவருக்கும்  காத்து இருக்காது.

( பொதுவாக தொழில்,வீடு,வசதி,வாய்ப்புகள், வண்டி வாகனம், சொத்து, நிலம், பொருளாதார விஷயங்களை நாம் எந்த வயதிலும் சம்பாதித்து கொள்ள இயலும், ஆனால் திருமணம் என்பது பருவ வயதில் செய்துகொள்வதே உகந்தது, இந்த விஷயத்தில் தாமதம் செய்ய செய்ய நிச்சயமாக சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் பாழ்படும். )

சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கால தாமதத்தை பரிந்துரை செய்ய வேண்டும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், திருமணத்திற்கு உகந்த வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு காலதாமதம் செய்யாமல் திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவது, சிறந்த யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை பெறுவதற்கு வழிவகுக்கும், நடைபெறும் திசாபுத்தி ஜாதகருக்கு அந்த வாய்ப்பை நல்கிவிடும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் யாவும் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தரவில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே தாமத திருமணத்தை பரிந்துரை செய்ய வேண்டும், அதுவும் பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறையில் உள்ள காலம் வரையில் மட்டுமே இந்த விஷயம் பொருந்தும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில்   2,5,7,8,12ம் பாவகங்களில் 8,12ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் 8ம் பாவகம் உபய ராசி தொடர்பை பெறுவதால் அதனால் யாதொரு இன்னல்களும் வாராது, 12ம் பாவகம் பாதிக்கப்படுவது மட்டுமே சற்று இன்னல்களை தர கூடும், ஜாதகர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் இருக்கும் ஓர் வதுவை தேர்வு செய்தால் போதும், ஜாதகரின்  திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதுடன், தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எடுத்துவரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் அமைப்பில், பொருத்தமான வரனை தேர்வு செய்து  கொடுப்பது மட்டுமே ஜோதிடரின் கடமை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது  நடைபெறும் திசை கேது என்பதால், அது இன்னல்களை  தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் திருமணம் செய்வது உகந்தது என்று பரிந்துரை செய்து இருக்க  கூடும் என்று  நம்புகிறேன், நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்ற போதிலும், சமபந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலேயே மேற்கண்ட குழப்பங்கள்  ஏற்படுகிறது, ஜாதருக்கு தற்போழுது நடைபெறுவது  கேது  திசை ( 02/01/2014 முதல் 02/01/2021 வரை ) என்ற  போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக  தொடர்பு என்பது, 5,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கேது திசை ஜாதகருக்கு 5,10,11ம் பாவக வழியில் இருந்து  யோகங்களையே வாரி வழங்குகிறது.

தற்போழுது கேது திசையில் நடைபெறும் ராகு புத்தியும்  ( 02/12/2016 முதல் 21/12/2017 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகர் திருமண வாழ்க்கையை தள்ளிப்போடாமல், உடனடியாக திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம்  பெறுவது அவசியமாகிறது,

குறிப்பு :

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும், வாரிசு ( ஆண் ) யோகமும் !

 
 
தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு பெரும் வலிமையின் அடிப்படையிலும், திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்கு நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்து பாவக வலிமையின் அடிப்படையிலும், குழந்தைபாக்கியம் சிறப்பாக அமைகிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதும், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, குறுகிய காலத்தில் புத்திரபாக்கியமும், தனது சந்ததி விருத்தி பெற நல்ல ஆண் வாரிசும் அமைகிறது.

 மாறாக தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ, நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதோ, புத்திர பாக்கியத்தில் தடைகளையும், ஆண் வாரிசு அற்ற தன்மையையும் ஏற்ப்படுத்துகிறது, குறிப்பாக தம்பதியர் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது, புத்திர பாக்கியத்தில் கடுமையான தடைகளையும், தாமதங்களையும் வாரி வழங்குகிறது, தனது சந்ததி விருத்தி பெற தம்பதியர், பல வேண்டுதல்கள் வழிபாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு அவதியுற நேருகிறது, இத்தனை இன்னல்களை கடந்து ஓர் குழந்தை கிடைத்தாலும், அந்த குழந்தை வழியிலான இன்னல்களை தம்பதியர்கள் அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின், நிச்சயம் அவர்களுக்கு தனது குலம் தழைக்க, நல்ல ஆண்வாரிசு அமையும், குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தை வழியில் இருந்து சிறப்பான யோகங்களை தம்பதியர் நிச்சயம் பெறுவார்கள், தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் வலிமை பெற்றும், சந்தானபாக்கியம் அமையவில்லை எனில், நடைபெறும் திசை அல்லது புத்தி தம்பதியருக்கு பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்க கூடும், காலதாமதம் ஆனாலும் நிச்சயம் அவர்களுக்கு நல்ல ஆண்வாரிசு உண்டு என்பதால், பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் முடிவுக்கு வரும்வரை தம்பதியர் அவசரபடாமல் பொறுமையை கடைபிடிப்பதே சால சிறந்தது, இயற்கைக்கு  முரணாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது குழந்தை பிறப்பில் சிக்கல்களையும், தம்பதியருக்கு இன்னல்களையும் தர வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் எந்த ஒரு பயமும் இல்லமால், சற்று பொறுமை காப்பதே சரியான வழி, இதை ஓர் தம்பதியர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்..

கணவர் :


லக்கினம் : ரிஷபம்
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

மனைவி :

லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம் 

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு அதிர்ஷ்டம், லாபம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை நல்கும் என்பது தெளிவாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை  வழியில் இருந்து ஜாதகர் ஜீவன முன்னற்றம் மற்றும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுவார் என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

ஜாதகிக்கு 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறை அருளின் கருணை மூலம் நல்ல வாரிசை பெறுவார் என்பது உறுதியாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து நார்ப்பெயரும், சமுதாய அந்தஸ்த்தையும் நல்ல அறிவு திறனையும் பெறுவார், பிறக்கும் குழந்தையும் மேற்கண்ட யோக பலன்களை அனுபவிக்கும், மேலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட குழந்தையாக திகழும்.

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

தம்பதியர் இருவருக்கும் தற்போழுது நடைபெறும் திசைபுத்தி தரும் பலன்கள் :

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,8,12ம் பாவக வழியில் இன்னல்களை தருகிறது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெரும் ராகு புத்தி வலிமை பெற்ற 2,10ம் பாவக பலனை தருவது சிறப்பான அம்சமாகும்.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று புத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, நல்ல ஆண் வாரிசை புதன் திசையில் தரும், புதன் திசையில் தற்போழுது நடைபெறும்  ராகு புத்தி ஜாதகிக்கு 8,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை தருவது இன்னல்களை தரும் என்ற போதிலும், 6,10ம் வீடுகள் புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ராகு புத்தி காலத்திலேயே நல்ல ஆண் வாரிசு உருவாகும் என்று உறுதியாக சொல்லலாம். 

கணவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகம் பாதிப்பதும், மனைவியின் ஜாதகத்தில் 8,11ம் பாவகங்கள் பாதிப்பது மட்டும் இன்னல்களை  தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை தம்பதியர் இருவரும் மேற்கொள்வது  சாலச்சிறந்தது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 28 ஜனவரி, 2017

இரசமணி அணிவதால் நாம் பெரும் நன்மைகள் மற்றும் யோக வாழ்க்கை !


ரசமணி உருவாகும் விதம் :

பல வருடங்களுக்கு முன் மலை உச்சியில் காணப்படும் கடும் பாறைகளுக்கு இடையே விழும் மழை துளியாகப்பட்டது , பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார்ப்போல், வெப்பத்தில் சூடாகியும் , குளிரில் உறைந்தும் பாறை இடுக்குகளில் படர்ந்து இருக்கும் , இதனை முறைப்படி வைத்தியர்கள் அல்லது ரசம் சேகரிப்பவர்கள் சேகரித்து , முறையாக ஸ்புடம் இட்டு, மூலிகையால் பதப்படுத்தி சுத்தி செய்து மணியாக தயாரித்து, மனிதர்களுக்கு பயன்படும் விதமாக வழங்குகின்றனர் .

 இதில் ஸ்புடம் இடும் வகையில் 108 , 1008 , 10008 , 100008 , முறையில் வகை படுத்துகின்றனர் , அதற்க்கு ஏற்றார் போல் மணிகளின் தன்மை சக்தி வேறுபடும் , இதில் அவரவர் ஜாதக அமைப்பு , நாடி அமைப்பை பொறுத்து ரசமணிகளை முறைப்படி சுத்தி செய்து அணிந்து கொள்பவர்களுக்கு , கிழ்கண்ட  நன்மையான பலன்கள் நடைபெறும் .

ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது  , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து
  இருக்கிறது .

உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக  இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் .

  குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும்  தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் .

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி  இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின்   பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை அணிவது நல்ல பலன்களை தரும்.

மேலும் வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக  சக்தியை மேலோங்கி நிற்கும் , தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் .
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி  ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும்.

குறிப்பு :

ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
   

புதன், 25 ஜனவரி, 2017

திருமணபொருத்தம் : சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறை !


திருமண பொருத்தம் காண்பதில் சுய  ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் காண்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும், 2ம் பாவகம் வலிமை பெறுவது இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த புத்திகூர்மை மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியர் இருவருக்கும் நல்ல தாம்பத்தியம் மற்றும் சமூக அந்தஸ்த்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் வழியில் ஒருவர் பெரும் பொருளாதார முன்னேற்றத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்க்கையையும் தரும், எனவே தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது, வெற்றிகரமான இல்லற வாழ்க்கையை நல்கும்.

கீழ்கண்ட வரனுக்கும், வதுவுக்கும் சுய ஜாதக ரீதியாக பாவக வழியிலான பொருத்தம் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதனை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

பாவக தொடர்புகள் :

 2,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது.
7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது.
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அம்சமாகும். எனவே ஜாதகர் சுக்கிரன் புத்தியில் திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை எடுப்பது சால சிறந்தது, விரைவாக இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வது ஜாதகம் 


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான யோகங்களை தரும்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பை தரும்.

மேலும் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, அடுத்து வரும் ராகு புத்தி ( 28/05/2017 முதல் 16/06/2018 வரை ) ஜாதகிக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும்.

வரனின் ஜாதகத்தில் 6,7,8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, வதுவின் ஜாதகத்தில் 2,4,6,8,10,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம்  மற்றோருவர் ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பது பரஸ்பர தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைதரும் அமைப்பாகும், மேலும் வரனுக்கு எதிர்வரும் சுக்கிரன் புத்தியும், வதுவுக்கு எதிர்வரும் ராகு புத்தியும் சிறப்பான நன்மைகளையே வழங்குவது, மிகுந்த யோகத்தை தாம்பத்திய வாழ்க்கையில் வாரி வழங்கும்.

தற்போழுது வரனுக்கு நடைபெறும் ராகு திசை வலிமையற்ற 12ம் பாவக பலனையும், எதிர்வரும் ராகு திசை வதுவுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், ஏக நேரத்தில் இருவருக்கும் நடைபெறும் திசை அவயோக பலனை வழங்கினால் மட்டுமே, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களை தரும்.

வரனுக்கும், வதுவுக்கும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் ராகு திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை நல்கும் என்பதினால், அவர்களின் விருப்பப்படி திருமணம் நடத்தி வைக்கலாம், பொருத்தமான ஜாதக அமைப்பே " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இல்லற வாழ்வை நரகம் ஆக்கும் பொருத்தமில்லா வாழ்க்கை துணை !


" நித்தியகண்டம் பூர்ணஆயுசு " என்ற நிலைக்கு ஆளாக்கும் வல்லமை பெற்றது சுய ஜாதக வலிமை அறியாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, பொதுவாக பருவவயதில் வரும் இனக்கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு இல்லற (காதல் ) வாழ்க்கையில் இணையும் அன்பர்களுக்கு! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாட்களில் இல்லற வாழ்க்கை தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது விடும், கணவன் செய்வது மனைவிக்கு பிடிக்காது, மனைவி செய்வது கணவனுக்கு முற்றிலும் பிடிக்காமல், வாக்குவாதம் அதிகரிக்கும், சமாதானம் செய்ய முற்படுபவரின் கருத்துக்கள் தம்பதியரின் காதுகளுக்கு சென்று அடைவதற்குள், மணவாழ்க்கையில் பிரிவை நோக்கி இருவரும் சென்றுவிடுவார்கள், நலம்விரும்பிகளின் ஆலோசனைகள் யாவும் வீண் விரையம் ஆகும், பெற்றோரின் ஆதரவு உள்ளவர்கள் அடிப்படை ஜீவனத்திற்கு யாதொரு சிரமமும் இன்றி வாழ்வதற்கு வழி உண்டு, பெற்றோர் ஆதரவை இழந்தவர்களின் அஸ்த்திவாரமே ஆட்டம் காணும், தன்னிடம் பல திறமைகள் இருப்பினும் யாவும் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ உகந்த நேரத்தில் பலன் தாராது, மேலும் பிரிவினால் வந்த மன அழுத்தம், மனஉளைச்சல் ஜாதகரையும், ஜாதகியையும் வெகுவாக பாதிக்கும், உடல் நலம் கெடும், மனநலம் பாதிக்கும், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியான கவலைகள் பூதாகரமாக கிளம்பி நிற்பதை, அந்த தருணத்தில் தான் உணரும் வாய்ப்பை பெறுவார்கள், விதியின் வலிமையை உணர்வார்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் சேர்ந்து வாழும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம், காதல் திருமணங்களில் அந்த வாய்ப்பு என்பதே இல்லை, திருமண வாழ்க்கையை நடத்தி வைத்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள் என்பதை உணருவதற்க்கே இவர்களுக்கு வெகு காலம் ஆகும், இதனால் "ஜோதிடதீபம்" காதலுக்கு எதிரி என்ற எண்ணம் வேண்டாம், சுய ஜாதகம் வலிமை பெற்ற காதலர்களின் வாழ்க்கையே மென்மேலும் பன்மடங்கு யோக வாழ்க்கையை பெற்று இருக்கிறது, சுய ஜாதகம் வலிமை அற்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட விவாகரத்துக்கு சென்று இருக்கின்றது, இது அவரவர் ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டது.

கீழ்கண்ட தம்பதியரின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே, உறவுகளால் இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்க்கு உரியது, தசவித பொருத்தம் கண்டும், சுய ஜாதக வலிமை அற்றதால் இல்லற வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர், இந்த தம்பதியர், இவர்களது சுய ஜாதக வலிமையையும், நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்களை கருத்தில் எடுத்துக்கொள்வோம் அன்பர்களே :

1) குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெறுவது வரன் வதுவின் சங்கமத்தில் அவசியமாகிறது, இனிமை நிறைந்த வார்த்தைகளும், சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் நல்கும் வலிமை பெற்றது என்பதனால் தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக முக்கியமாகிறது. ( பெரும்பாலும் தம்பதியருக்குள் வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே வாய்தானே )
2) பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அறிவு திறனையும், தமக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு உண்டான சமயோசித புத்திசாலித்தனத்தையும், பொறுமையான குணத்தையும் நல்குவது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவக வலிமையே, மேலும் தனது குலம் செழிக்க திருமணம் ஆனா சில வருடங்களிலேயே நல்ல வாரிசை வழங்குவதும் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே, மேலும் தம்பதியரின் ஒருமித்த கருத்து மற்றும் அறிவு திறனை ஒரே நேர்கோட்டில் இணைப்பது மேற்கண்ட 5ம் பாவகமே என்பதனால் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிக மிக முக்கியமாகிறது.
3) களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையை நகமும் சதையும் போன்ற உணர்வை தருவது, இருவரின் மனமும் உடலும் ஒன்றற ஜீவசக்தி விரையம் இன்றி கலக்க உதவுவது களத்திர ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது இணையை பிரியாமல் சேர்ந்து வாழும் யோகத்தை வழங்குவது ( பெரும்பாலான காதலர்களின் வாழ்க்கையை வெற்றிபெற வைப்பதற்கு களத்திர ஸ்தான வலிமையே அடிப்படையாக அமைகிறது ) மேலும் தம்பதியர் இருவரின் வாழ்க்கையில் கவுரவம் மரியாதை, சமூக மதிப்பை பெரிய அளவில் வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை குன்றி இருப்பின் தனது வாழ்க்கை துணையை தானே தேர்வு செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு பாலும் கிணற்றில் விழுவதற்கு சமமானது என்பதை அணைத்தது யுவன் மற்றும் யுவதிகளும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
4) ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஆயுளை விருத்தி செய்யும் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான திடீர் அதிர்ஷ்டங்களை உறுதி செய்யும், கணவன் மனைவி வழியில் இருந்தும், மனைவி கணவன் வழியில் இருந்தும் பெரும் தனசேர்க்கையை பற்றி தெரிவிக்கும் பாவகம் என்பதால், தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுது பரஸ்பரம் கணவன் மனைவிக்கு வரும் திடீர் இழப்புகளையும், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளையும் தவிர்க்க இயலாது, பெரும்பாலும் ஆயுள் பாவகம் வலிமை இழந்த வாழ்க்கை துணையை பெரும் அன்பர்களின் வாழ்க்கையில் விதி வெகுவாக விளையாடும், ( மனைவியோ கணவனோ ) காலடி எடுத்து வைத்த நேரம் அனைத்தும் இழந்து ஆண்டியாய் போனது அந்த குடும்பம் என்று ஊரார் பரிகாசிக்கும் நிலையை தந்துவிடும்.
5) அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் பதினொன்றாம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை, ஈடுபாடு, முற்போக்கு சிந்தனை, எதையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சிந்திக்கும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தின் முழு பலனை தம்பதியர் அனுபவிக்கும் யோகம், எதிர்கால வாழ்க்கையை யோகம் நிறைந்ததாக அமைத்துக்கொள்ளும் சரியான திட்டமிடுதல்கள் என தாம்பத்திய வாழ்க்கையின் 100% விகித வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் ஜாதகத்தில் உள்ள லாபஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையே, எனவே தம்பதியரின் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது.
6) அயன சயன ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் உடல் ரீதியாக வழங்கும் சந்தோஷங்களையும், மனநிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் அந்நியோன்னிய இல்லற இன்பங்களை வாரி வழங்கும், உடல் மனம் ரீதியான உணர்வுகளை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் யோகத்தை தரும், தாம்பத்திய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வல்லமையை தம்பதியர் இருவருக்கும் தரும், நல்ல ஆன்மீக வெற்றியையும், இறை அருளின் பரிபூர்ண ஆசிகளையும் வழங்கும் வல்லமை கொண்டது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய அந்நியோன்னிய வாழ்க்கையில் மனக்கசப்பை தருகிறது, இல்லற வாழ்க்கையில் பேரிழப்புகளையும், தவறான உறவுகள் வழியில் இன்னல்களை தேடிக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆர்ப்படுகிறார்கள், இதனால் இல்லற வாழ்க்கை 200% விகித இன்னல்களை சந்திக்கிறது என்பது கவனிக்க தக்க விஷயமாகிறது.


ஜாதகி


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 3ம் பாதம்

ஜாதகிக்கு அடிப்படையில் லக்கினம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இழப்புகளை பெரிய அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானமும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், ஜாதகியின் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மையை தரும், பொருளாதார சிக்கல்களை கடுமையாக, ஜாதகிக்கு ஜாதகியின் கணவருக்கும் தரும், 5ம் பாவக வலிமை பெறுவது ஜாதகிக்கு சிறப்பான விஷயம் என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜாதகிக்கு நல்லதொரு குழந்தை ( ஆண் ) பாக்கியம் அமைவது அவசியமாகிறது, களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எண்ணிலடங்கா துன்பங்களை வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்ப்பால் இன அமைப்பினரிடமும் ஜாதகி சந்திக்கும் துர்பாக்கிய நிலையை தரும், நண்பர்கள்,உறவுகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உயிர் பயத்தை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தன் கணவனுக்கு திடீர் யோகங்களை தரும், ஜாதகிக்கு பூர்ண ஆயுள் அமைப்பை தரும், இருப்பினும் தனது கணவரால் ஜாதகிக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பது கவனிக்க தக்கது, லாப ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டம் அற்ற வாழ்க்கையையும், தன்னம்பிக்கை இன்மையையும், பிற்போக்குத்தனமான செய்கையினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையையும், மன கட்டுப்பாடு இன்றி சிந்திக்கும் தன்மையையும், வீண் விரையங்களையும், அனைவராலும் கடுமையான தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலையையும் தரும், இல்லற வாழ்க்கையில் தேவையில்லாத சகவாசத்தை தந்து, விரைவாக குடும்ப வாழ்க்கைக்கு மூடு விழா நடத்தும், ஆனால் தற்போழுது நடைபெறும் சனி திசையும், புதன் புத்தியும் ஜாதகிக்கு 5,10ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தருவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகர்


லக்கினம் : மிதுனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் மற்றும் குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் 100% விகித யோகத்தை பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து தரும், களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை குறைக்கும், வாழ்க்கை துணை வழியில் திடீர் இழப்பை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணையை நிந்தனை செய்யும் தன்மையை தரும், லாப ஸ்தானம் வலிமை இழப்பது எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி செல்லும், தன்னம்பிக்கை குறையும், பிற்போக்கு தனமான வாதம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தும், மன நிம்மதி குறையும், எதிர்பால் உறவுகள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை அதிக அளவிலான இன்னல்களையும், சிக்கல்களையும் வழங்கும், தம்பதியருக்குள் மகிழ்ச்சி இன்மையும், கவர்ச்சி இன்மையும் அதிகரித்து பிரிவில் கொண்டுவந்து நிறுத்தும், ஜாதகருக்கு சில பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், ஜாதகரின் சகவாச தோஷம் ஜாதகரை படுகுழியில் தள்ளும்.

மேற்கண்ட தம்பதியரின் வாழ்க்கையில் சுய ஜாதக வலிமை இன்மையே பிரிவை நோக்கி அழைத்து சென்றுகொண்டு இருக்கின்றது, இதற்க்கு தம்பதியரின் சுய ஜாதக வலிமை இன்மையே மிக முக்கிய காரணமாக அமைகிறது, தற்போழுது நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், அடுத்து வரும் புதன் புத்தி தம்பதியரின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு இல்லை என்பதே முற்றிலும் உண்மை.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு சுய ஜாதக பாவக வலிமையை அறிந்து, இல்லற வாழ்க்கையை ஏற்று கொள்வதே புத்திசாலித்தனம், இதில் தவறு இழைத்தால் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறு செய்தத்திற்கு உண்டான இன்னல்களை தம்பதியர் சந்திக்க வேண்டி வரும், தம்பதியரின் ஒருவரது ஜாதகமாவது பாவக ரீதியாக வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696