சந்திரன்திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரன்திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 பிப்ரவரி, 2017

நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?


 கேள்வி :
இதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா? திருமணம் எப்பொழுது அமையும்? எதிர்காலம் நன்றாக இருக்குமா?

பதில் :

 ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து  தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

நல்ல வேலை எப்பொழுது அமையும் ?

எதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம்  அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.

திருமணம் எப்பொழுது அமையும் ?

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.

நடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் ?

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு  பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன்  அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம் நன்றாக இருக்குமா?

சந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை  பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 19 டிசம்பர், 2016

ஏழரை சனியின் தாக்கமா? சுய ஜாதக வலிமை இன்மையா ?



 பொதுவாக நாம் அதிக அளவில் இன்னலுறும் நேரங்களில் ஜோதிட ஆலோசனை பெரும் பொழுது பெரும்பாலும் சந்திரனுக்கு 12,1,2ல் சனி பகவான் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பின், ஏழரை சனி காலம் இதன் காரணமாகவே தாங்கள் அதிகம் இன்னல்களை சந்திக்க வேண்டி  உள்ளது, எனவே சனி ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்ற வழிகாட்டுதல்களை "ஜோதிடர்கள்" வழங்குவது உண்டு, இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவர் இன்னல்களை சந்திப்பதற்கும், சனி ராசிக்கு 12,1,2ல் சஞ்சாரம் செய்வதற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு படுத்த விரும்புகின்றோம், ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், 12 பாவகங்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் அறிய முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நன்மைகளையும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம்

ஒருவருக்கு கடுமையான நெருக்கடிகளையும், இன்னல்களையும் வழங்குவது, ராசிக்கு சில இடங்களில் இருந்து சஞ்சாரம் செய்யும் கிரகங்களின் தாக்கம் என்பது உண்மையல்ல, ஒருவருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் நிலை வெகு பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும், கிரகங்களின் கோட்சார வழங்கும் இன்னல்களை விட ( ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ) பல நூறு மடங்கு இன்னல்களை தந்து விடும், மேற்கண்ட ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறுவது சந்திரன் திசை, இவர் தரும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படியே சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகர் யோகம் பெற்றவரே, மாறாக நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கத்தி அதோ கதிதான், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், எவராலும் மேற்கண்ட பாதிப்பில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதே உண்மை நிலை.

மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை ( 24/07/2011 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே விரையம், பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகர் மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், வீரியமிக்க செயல்திறன் அற்ற சூழ்நிலைகளையும் வழங்குகிறது, மேலும் சுய முயற்சி தடை பெரும், நிம்மதி அற்ற சூழ்நிலையை உருவாக்கும், 12ம் பாவக வழியில் இருந்து மனநிம்மதி இழப்பு, வீண் விரையம், அதிக மன போராட்டம், தெளிவற்ற வாழ்க்கை முறை, அதிக அளவிலான தொல்லைகள், பொருள் இழப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியின்மையை தரும், மேற்கண்ட இன்னல்கள் ஜாதகருக்கு 100% விகிதம் நடைமுறைக்கு வரும், அடுத்து பாதக ஸ்தான தொடர்பை பெரும் லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் ஆசை மற்றும் எண்ணங்கள் யாவும் நிராசையாக மாறிவிடும், தன்னம்பிக்கை வெகுவாக கெடும், மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு தனமான எண்ணங்களால் ஜாதகர் சூழப்பட்டு தனது வாழ்க்கையே தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், ஜாதகருக்கு  வரும் இன்னல்களின் தாக்கம் பெரிய அளவிலான அமைப்பில் இருக்கும், துன்பத்தில் ஜாதகர் அனலில் இட்ட புழு போல் தவிக்க நேரும், சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் இதன் பாதிப்பு ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து  200% விகிதம் இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர்கள் ஜாதகருக்கு ஏழரை சனியின் தாக்கத்தினாலே பெரும் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கின்றார் என்பதாக கூறியிருக்கின்றனர், நடைபெறும் சந்திரன் திசை தரும்  விரையம் மற்றும் பாதக ஸ்தான பலனை பற்றி யாதொரு விஷயமும் கூறவில்லை என்பது கவனிக்க தக்கது, உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், எனவே  ராசியை அடிப்படையாக கொண்டும் நவ கிரகங்களின் கோட்சர நிலையை கொண்டும் பலன் காண்பதை தவிர்த்து, சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், அந்த பாவகங்களுக்கு நவகிரகங்களின் கோட்சாரம் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் காண முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூற உதவி புரியும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 4 நவம்பர், 2016

கிரக சேர்க்கை மற்றும் பார்வை மூலம் ஜாதகத்தில் சுபயோகங்களை நிர்ணயம் செய்வதும், அதன் வழியில் யோக பலன்களை எதிர்பார்ப்பதும் உகந்ததா ?



பெரும்பாலும் சுய ஜாதகங்களில், சுப கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்கள் இருப்பின், யோகங்களை தரும் கிரகமும், அந்த கிரகங்களின் திசா புத்திகளும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் சில பாவகங்களின் சுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு யோக பெற்ற ஜாதகம் என்றும், அசுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு அவயோகம் பெற்ற ஜாதகம் என்றும் நிர்ணயம் செய்வதில் உண்மை இல்லை என்பதை தெளிவு படுத்தவும் விருப்பம் கொள்கிறது.

உதாரணமாக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டையர் ஜாதகங்களில் ஒரேமாதிரியான கிரக அமர்வு இருப்பினும், இருவரின் வாழ்க்கை முறை ஒரேமாதிரியான அமைப்பில் இருப்பதில்லை, இருவருக்கும் அவரவர் ஜாதகங்களில் ஒரே மாதிரியான கிரக சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கிரகங்களின் யோக அமைப்புகள் இருப்பினும், நடைமுறையில் அவரவர் வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசனமான பலாபலன்களே நடைமுறைக்கு வருகிறது, எனவே சுய ஜாதகங்களில் உள்ள கிரக சேர்க்கையையும், பார்வையும் வைத்து இது யோக ஜாதகம் என்று முடிவு செய்வதும், அவயோக ஜாதகம் என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரணான தவறான அணுகுமுறை என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே!

அடிப்படையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு தனிப்பட்ட சுய ஜாதகம் உண்டு என்பதனையும், அந்த ஜாதகம் ஒருவருக்கு இருப்பதுபோல் மற்றவருக்கு இருக்காது என்பதும் மாற்ற இயலாத விதி மேலும் இதை ஒவ்வொருவரின் கைரேகைக்கு ஒப்பிடலாம், ஒருவருக்கு உள்ளதுபோல் மற்றவர்க்கு கைரேகை அமைய வாய்ப்பில்லை என்பதுபோல், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை எனலாம், மேலோட்ட்மாக கிரகங்களின் அமர்வு நிலை மற்றும் பார்வையை வைத்து காணும் பொழுது இந்த விஷயங்கள் பிடிபட வாய்ப்பு இல்லை, சுய ஜாதக பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் நம்மால் உணர இயலும்.

கிரக அமர்வு நிலை, கிரக சேர்க்கை நிலை, கிரகங்களின் பார்வை நிலை, மற்றும் நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவைகளை கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்குவதற்கு பொருத்தமானது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பலன் கூறுவது என்பதும் முற்றிலும் தவறான அணுகுமுறையே, இதனால் நிச்சயம் தவறான பலாபலன்களை கூற அதிக வாய்ப்பு உண்டு, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பலன்காண முற்படுவதே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நல்வழியை காட்டும், அதுவே நமது வாழ்க்கையில் விழிப்புணர்வை தந்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும், அது தரும் பலன்கள் பற்றியும், தெளிவான விளக்கம் ஒரு ஜாதகருக்கு கிடைக்குமெனில், அந்த ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள இயலும் உதாரணமாக, ஒருவருக்கு எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனை பற்றி தெளிவாக தெரிந்து இருப்பின் நன்மை நடைபெறும்  பொழுது ஜாதகர் அதை பரிபூர்ணமாக ஏற்றுக்கொள்ளவும், தீமை நடைபெறும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு திட்டமிட்ட வாழ்க்கையை பெறுவதற்கும் உதவும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகருக்கு லக்கினம் : மீனம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகரின் கேள்வி :

1) நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி தரும் பலன்கள் யாது? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன?

நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே சந்திரன் புத்தி நடைபெறும் காலத்தில் தங்கள் களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், எதிர்ப்பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்கள், நண்பர்கள் வழியில் இருந்து துன்பங்கள் என மனநிம்மதி இழப்பையும், மனபோராட்டத்தையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வீண் விரையங்களும், துன்பங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்பட்ட வாய்ப்பு உண்டாகும் என்பதால் சந்திரன் புத்தியில் தங்கள் 7,12ம் பாவக வழியில் இருந்து எச்சரிக்கை உடன் நடந்து கொள்வது நல்லது.

எதிர் வரும் குரு திசை தங்களுக்கு உடல் உயிராகிய 1ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று முதல் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது, குரு திசை 16 வருடங்களும் தங்களுக்கு லக்கின வழியில் இருந்து புகழ்,வெற்றி,கீர்த்தி என அனைத்து நன்மைகளும் நடைமுறைக்கு வரும், தங்களது லக்கினம் மீனத்தில் 340:45:13 பாகையில் ஆரம்பித்தது மேஷத்தில் 014:16:57 பாகையில் முடிவு பெறுவதால் உபய நீர் தத்துவத்திற்கு உண்டான பரந்த மனபக்குவத்தையும், மனதில் நினைக்கும் காரியங்களில் வெற்றிகளையும், சர நெருப்பு தத்துவத்திற்க்கான வீரியம் மிக்க செயல்பாடுகளையும், சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்க நெறியையும் பேணும் வல்லமையை வாரி வழங்கும், மேலும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்த  காரியத்தை வெற்றி கொள்ளும் வல்லமையை வாரி வழங்கும், லட்சியங்கள் யாவும் நிறைவேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், திருப்தியையும் போதும் என்ற மன நிறைவையும் நல்கும், எனவே குரு திசை தங்களுக்கு யோகம் மிகுந்த நல்வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு உண்டான பலன்கள் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டும், திசை,புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை அடிப்படையாக கொண்டு தெளிவாக விளக்கம் தர சுய ஜாதக கணிதம் நமக்கு மிகவும் உதவியாக அமைந்தது, இதன் அடிப்படையில் ஜாதகர் துல்லியமாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள இயலும்,

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696