வெளிநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஜாதக ஆலோசணை : சனி திசை தரும் பலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலன் என்ன ?

ஜாதக ஆலோசணை



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜென்ம லக்கின வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம் மிக்க செயல்பாடுகள், துணிச்சலான செயல்திறன் மூலம் வெற்றிகொள்ளும் யோகம், சிறு பயணங்கள் மூலம் நன்மை, தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, சகோதரம் மற்றும் சுற்றத்தாருடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடித்தல், நல்ல நட்புறவு, அவர்கள் வழியில் இருந்து  பெரும் நன்மைகள், சரியாக மேற்கொள்ளும் முடிவுகள், தெய்வீக சிந்தனை, பொருளாதார மேம்பாடு சார்ந்த திட்டமிடுதல்கள், உடல் நலம் பேணும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உறுதுணை புரியும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்பாராத நேரத்தில் ஜாதகருக்கு நிகழும் திடீர் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு செல்வச்செழிப்பு உண்டாகும், தைரியமாக எடுக்கும் முடிவுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை மிக சிறப்பாக எடுத்து செல்லும் ஆற்றல், எதிரிகளை வென்று நன்மைகளை அடையும் யோகம் உண்டாகும்,   ஜாதகரின் மனநிலையில் தெளிவும் சிறப்பான சிந்தனைகளும்  மேலோங்கி நிற்கும் என்பதால் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும்   தன்னிறைவாக பெறுவதற்கான யோகம் உண்டாகும், சத்தியத்தை மதித்தல் மற்றும் உண்மையை பேசுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்வதுடன்  அனைவரிடத்திலும் பிரபல்ய யோகத்தை நல்கும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், லட்ச்சியங்கள் அனைத்திலும் வெற்றிகொள்ளும் யோகத்தை தரும், உறவினர் மற்றும் நண்பர்கள் வழியில் சிறப்பான சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் , தைரியம் சாகசம் போன்றவற்றில் ஈடுபாட்டை தரும், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், பயணம் மூலம்  லாபம் உண்டு, படிப்பு மற்றும் கல்வியில் சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்,  புதுமையை விரும்பும் தன்மை, புதுமையான சூழ்நிலைகளில் அதீத ஆர்வம், ஏஜென்சி துறையில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தொழில் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.

2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறை சார்ந்த பணியில் வெற்றி வாய்ப்பையும் , அறிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், பணியில் திருப்தி அற்ற நிலையை தரக்கூடும், வாக்கின் வழியில் இருந்து இன்னல்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உண்டு, வருமானம் சில நேரங்களில் ஜாதகருக்கு எதிர்மறையான இன்னல்களை தரக்கூடும், பொருளாதர ரீதியான திட்டமிடுதல்கள் இல்லையெனில் ஜாதகரின் வருமானம் வெகுவான இழப்புகளை தரக்கூடும், பேச்சில் கவனம் தேவை என்பதுடன் சேமிப்பில் அதீத நாட்டத்தை செலுத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், குடும்பத்தில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாளும் வல்லமையை தரும் என்ற போதிலும், மன நிம்மதி வெகுவாக  பாதிக்க வாய்ப்பு உண்டு, பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகருக்கான இன்னலைகளை வெகுவாக குறைக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் சிறப்பாக அமையும், தன்னிறைவான வருமான வாய்ப்பும் உண்டு, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு உண்டு, வரவை விட சில நேரங்களில்  செலவு அதிக அளவில் வந்து  சேரும், தவிர்க்க இயலாத பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், முரண்பட்ட வருமான வாய்ப்பும் ஜாதகருக்கு உண்டாகும், செய் தொழில் வழியில் சில நேரங்களில் ஜாதகருக்கு மன நிம்மதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, தொழில் முறையில் அனைவரிடமும் அனுசரித்து செல்வதே ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சுய தொழில் முயற்சி பின்னடைவை  தரும்,  வெளிநாடுகளில் ஜீவனம் மேக்கொள்ளும் பொழுது அபரிவிதமான  பொருளாதார சேர்க்கை உண்டு.

 12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள் மற்றும் கடும் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும், அனைவராலும் தொல்லை, துன்பங்கள் என வாழ்க்கையை சிரமத்துடன் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் கிட்டுவது அரிது, நிம்மதியற்ற தன்மை, மனப்போராட்டம், தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு சிக்கல்கள், கருத்து ஒற்றுமை இன்மை இவை அனைத்தும் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், சரியான முடிவுகளை எடுக்க வில்லை எனில் அதீத துன்பத்தை ஜாதகர்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு அதிக துன்பத்தை தரும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  4ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் இருந்து வரும் சொத்துக்கள் கிடைக்கும் குறிப்பாக தகப்பனார் வழியில் இருந்து வரும் யோக  வாழ்க்கை சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், உயில் போனஸ் கிராஜுவிட்டி போன்றவற்றிலும் இஞ்சுரன்ஸ் வழியில் இருந்தும் ஜாதகருக்கான பொருளாதார உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க பெரும், எதிர்பாராத விபத்து மூலம் வண்டி வாகனம் கடுமையான   பாதிப்பை அடைய கூடும், உடல் நலம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, காரியங்களில் அதீத தடை தாமதங்களை சந்திக்கும் நிலையை தரும், தாயார் வழியில் இருந்து வரும் சில இன்னல்கள் ஜாதகருக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமையும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள்  வீடு வண்டி  வாகனங்களை மிக கவனமாக பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், தனது குணநலன் சார்ந்த விஷயங்களில்  சரியான  கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமானது.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, இருப்பினும் எதிர்பாராத  ஏமாற்றம், எதிர்பாராத திடீர் இன்னல்கள் ஜாதகரை சில  நேரங்களில் அதீத துன்பத்திற்க்கு ஆளாக்கும், விபத்து, உடல் நல பாதிப்பு போன்றவை ஜாதகருக்கு பொருளாதார சிக்கல்களை அதிகரிக்க கூடும், அனைவராலும் தொல்லை, எதிர்பாலின அமைப்பினர் மூலம் வரும் இன்னல்கள் ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிகரிக்கும், கவனமான பாதுகாப்பான  பயணம் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு மேற்கண்ட  இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை தன்னிறைவாக வாரி வழங்கும், லாட்டரியில் திடீர் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டம், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் சூரியனை கண்ட பனிபோல்  விலகிவிடும் தன்மை, குலதெய்வத்தின் பரிபூர்ண அருளாசி, சமயோசித  புத்திசாலித்தனம், இன்னல்கள் அனைத்தையும் தனது நுண்ணறிவு திறனால் வெற்றிகொள்ளும் வாய்ப்பு, தான் பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் சுபயோக வாழ்க்கை, நம்பிக்கை மிக்க   எதிர்காலம் எதிர்பாராத உதவிகள் ஜாதகரை வந்து சேரும் தன்மை, அனைவரின் அன்பையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் தன்மை, புத்திசாலித்தனத்தால் ஆதாயமும் லாபமும் உண்டாகும், எப்பொழுதும் மகிழ்ச்சி, குழந்தை குடும்பத்துடன் தன்னிறைவான யோக வாழ்க்கை என்ற வகையில்  ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை உண்டாகும், வெளிநாடு ஜீவனமும், குடியுரிமையும் திடீரென அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், பொறுப்பு  மிக்க செயல்பாட்டையும் வாரி  வழங்கும், நல்ல அதிஷ்டத்தை ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், லட்சியங்களை விடாமுயற்சியுடன் போராடி பெரும் யோகம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்ப படும், எடுக்கும் காரியங்கள்  யாவிலும் தன்னிறைவான அதிர்ஷ்டங்களையே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகருக்கு புதிய உத்வேகத்தையும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தரும், எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் தனது தன்னம்பிக்கையை விடாமல் ஸ்த்திரமாக நின்று யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை இந்த மதிப்பு மிக்க லாப ஸ்தானம் எடுத்துரைக்கிறது, சரியான  திட்டமிடுதல்கள் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், லாப  ஸ்தான வலிமை ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சபந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்,  கடன் உடல்நல பாதிப்பு குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள், எதிரிகள் தொந்தரவு, அதீத எதிர்ப்புகள் கடன் கொடுத்தவர் வாங்கியவர்கள் வழியில் இருந்து  வரும் இன்னல்கள் எதிர்பாரா மருத்துவ செலவினங்கள், எதிரிகள் வழியில்  இருந்து வரும் துன்பங்கள், அடிக்கடி உடல் நல பாதிப்பை சந்திக்கும் தன்மை, முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் சில  பிரச்சனைகள், தெய்வீக அனுகூலத்தை பெற வாய்ப்பில்லாமல் தடைகளை  சந்தித்தல், மாந்திரீக பாதிப்பு, செயல் முடக்கம், சுபயோகங்களை தடை செய்யும் தன்மை என்ற வகையில் ஜாதகருக்கு 200% விகித  இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அறிவு திறன் முழுமையாக முடக்கப்படும் தன்மை , மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் இன்னல்கள், தெளிவில்லாத சிந்தனை, முடிவெடுக்க முடியாமல்  தடுமாறும் சூழ்நிலை எதிர்ப்புகளை கையாள தெரியாமல் சிரமப்படும் நிலை, தெய்வீக உதவியை பெற இயலாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் பகைமை  பாராட்டும் தன்மை, உறுதியில்லாமல்  சில முடிவுகளை மேற்கொண்டு  அதன் வழியிலான துன்பங்களை அதிக அளவில்  அனுபவிக்கும் நிலை என்ற வகையிலும், எதிர்பாலின சேர்க்கை வழியில் தேவையற்ற இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  அதீத யோக வாழ்க்கையை களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணை அவரது பரிபூர்ண ஒத்துழைப்பு மற்றும் தன்னலமற்ற ஆதரவு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் குடியுரிமை, நிறைவான பொருளாதர சேர்க்கை, நிம்மதியான யோக வாழ்க்கை, தனித்திறமையான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், நினைத்தைதை அடையும் வல்லமை, தன்னிடம் உள்ள தனி திறமையை கொண்டு வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெறுதல், கூட்டு முயற்சி வழியில் இருந்து வரும் யோகம், வெளிநாடுகள் சென்று சிறப்பான வரவேற்பை பெரும் தன்மை, ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் செய்வதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, அதிகார பதவி, சிறந்த நிர்வாக திறமை என்ற வகையில் ஜாதகரின் வாழ்க்கையில் சகலவிதங்களில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

நடைபெறும்  சனி திசை தரும் பலன்கள் : ( 11/03/2003 முதல் 11/3/2022 வரை )

தற்போழுது நடைபெறும் சனி மகா திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து தனி  திறனை வெளிப்படுத்தும், ஜாதகரின் வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த நன்மைகளை அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடனான யோக வாழ்க்கையை முழுவதும் சுவீகரிக்கும்  தன்மையை  தரும் எதிர்ப்புகள் விலகும், வெளியூர் அல்லது  வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகளை பூர்த்தி  செய்யும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து ஜாதகரின் யோக வாழ்க்கை பரிபூர்ண துவத்தை அடையும், குறிப்பாக ஜாதகரின் சுய வலிமை பிரகாசிக்கும் நேரமாக  இது அமைவதுடன் சனி திசை  மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி மகா திசையில் தற்போழுது நடைபெறும் குரு புத்தியும் மேற்கண்ட 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை ஏக காலத்தில் வாரி வழங்குவதால் ஜாதகர் எதிர்வரும் காலங்களில் சுபயோக பலாபலன்களையே தன்னிறைவாக பெறுவார் .

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 11/03/2022 முதல் 11/3/2039 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் புதன் மகா திசை 1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை நல்குவது வரவேற்கத்தக்கது, புதன் திசை ஜாதகருக்கு நல்ல மனநிலை, சிறந்த உடல் ஆரோக்கியம், பயணங்கள்  மூலம் அதீத லாபங்கள் நிரந்தர குடியுரிமை, கோர்ட் கேஸ், வழக்குகள் வழியிலான தீர்வுகள்,  சாதகமான சூழ்நிலை, எதிர்ப்புகள் விலகுதல்,  நினைத்த காரியம் நிறைவேறுதல், சகோதர வழி ஆதரவு, உறவுகளுடன் நல்ல பற்றுதல், தெய்வீக அனுகூலம், தைரியமாக சரியான  முடிவுகளை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் சரியான நேரமாக புதன் திசை அமையும் மேலும் 3ம் பாவக வழியில் இருந்து நிறைவான செல்வச்செழிப்பு, பொருளாதர முன்னேற்றம், எதிரி மற்றும் எதிர்ப்புகளை வெல்லுதல், மனோதைரியம், தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடு, முற்போக்கு சிந்தனை என சகல  ஐஸ்வர்யங்களும் ஜாதகரை தேடிவரும் யோக காலம் இந்த புதன் திசை  என்று தெளிவாக கூறலாம் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 6 அக்டோபர், 2018

ஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா ? சிறப்பான வேலை அமையுமா ?


கேள்வி :

பிறந்த தேதி : 04.05.1995. 
பிறந்த நேரம் : இரவு 10.10. 
இடம் : கும்பகோணம். 

1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு நேரம் காலம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்து சொல்ல வேண்டுகிறேன். 

2) லக்னாதிபதி 12ல் இருப்பதும், 4ம்இடம், 6ம்இடம், 8ம் இடங்களைப் பார்ப்பதும், 6ஆம் அதிபதி உச்ச மாகி குரு பார்வை பெறுவதால் உள்ள பலன். 

3) செவ்வாய் 8இல் நீசபங்கமாகி குரு பார்ப்பதால் உள்ள பலன். 

4) சந்திரன் ஸப்தம கேந்திரத்தில் இருக்கும் பலன்கள். 

5) சனியின் 3ம் இட பலன்கள், பார்வை பலன்களை பார்த்து சொல்ல வேண்டுகிறேன். 

6) ராகு 11லும்,கேது 5ல்இருக்கும்(சூரியனின் சேர்ந்து) 
பலன்கள். 

7) சனியின் 2,3 இட ஆதிபத்யம் சனி திசை யில் எப்படி இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், பாதகாதிபதியின் சாரத்தில் இருக்கும் பலன்கள். 


பதில் :

1) நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று கடுமையான இன்னல்களை தருவது கவலை தரும் விஷயம் என்ற போதிலும், குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு புத்தி ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகர் ராகு புத்தியில் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்லதொரு முன்னேற்றங்களையும், வெற்றியையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த முன்னேற்றங்களை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வெளிநாடு சார்ந்த கல்வி அமைப்பில் வெகுவான தடைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இருப்பினும் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ( லாப ஸ்தானம் ) வரவேற்கத்தக்கது வெளிநாட்டில் கல்வி சார்ந்த வெற்றிகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதிப்பது வெளிநாடு செல்வதில் அதீத தடைகளை தரக்கூடும், நடைபெறும் ராகு புத்தி மிகவும் வலிமை பெற்ற 2,5,11ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் பூர்வீகத்தில் ( தமிழகத்தில் ) கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகர் தனது உடல் நலம், நிதி மேலாண்மை, நண்பர்கள் கூட்டாளிகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை மிக நுணுக்கமாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

2) லக்கினாதிபதி 12ல் இருப்பது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் என்ற போதிலும், லக்கினம் எனும் முதல் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு சுய ஒழுக்கம், பெரியோர் ஆதரவு, பித்ருக்கள் ஆசி என்ற விதத்தில் யோகத்தை தரும், கல்வியில் வெற்றியும், அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றியும், முதல் நிலையையும் தரும். குருவின் பார்வைகள் சுய ஜாதகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது இருப்பினும் 4ம் வீடு சற்று வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது, 6,8ம் வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சுக்கிரன் குரு பார்வை பெறுவதும் சிறப்பானததல்ல.

3) செவ்வாய் குரு பார்வை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்பதுடன், உடல் வலிமையை அதிகரிக்கும், இருப்பினும் சுய ஜாதகத்தில் 8ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ரண சிகிச்சையை தரக்கூடும், வாழ்க்கை துணை வழியில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத இழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

4) சந்திரன் இங்கு நிற்பது கடுமையான இன்னல்களை தரக்கூடும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் தாங்க இயலாத  மனத்துயரத்தை தருவதை தவிர்க்க இயலாது, லக்கினத்தை பார்வை செய்வது ஜாதகருக்கு சற்று நன்மையை தரும் என்பதுடன், வரும் இன்னல்களில் இருந்து விடுபட சரியான முன்யோசனைகளை வழங்கும்.

5) சனி தான் அமர்ந்த நிலையில் நன்மையையும், 6ம் பார்வை அமைப்பில் யோகத்தையும், 7ம் பார்வை அமைப்பில் இன்னல்களையும், 10ம் பார்வை அமைப்பில் துன்பத்தையும் தரக்கூடும் என்ற போதிலும், பொதுவாக சனி பகவான் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை வழங்குகின்றார் என்பது கவனிக்கத்தக்கது, நல்லோர் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

6) உண்மையி ஜாதகருக்கு 4ல் ( பாவக கணித முறைப்படி ) மேஷத்தில் அமர்ந்து சிறப்பான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நல்ல குணம், வண்டி வாகன யோகம், வடக்கு திசை வாயிற்படி உள்ள வீடுகளில் குடியிருப்பதால் வரும் யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளையே தருகின்றது, 10ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் மற்றவர்களால் வரும் வீண் அவப்பெயரையும் தவிர்க்க இயலாமல் வழங்குவது வருத்தத்த்திற்கு உரியது, ஜாதகர் எந்த காரணத்தை கொண்டும் சுய மரியாதை இழக்கும் விதத்திலான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, நல்ல தொழில் விருத்தி ராகு பகவானால் உண்டாகும்.

7) சனி திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்று சுபயோகங்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று வீடு வண்டி வாகன யோகம் என்ற வகையில் நன்மைகளையும் ஒருசேர வழங்குவது வரவேற்க தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை தருவது மட்டுமே ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிர்க்காரிக்கும், எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை தருவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

செவ்வாய், குரு பகவானின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், சுக்கிரனின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நன்மையையும் தரும். எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்க காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை இல்லை எனில் வாழ்க்கை மிகவும் துன்ப நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதை கவனத்தில் கொள்க, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தவும், வாழ்த்துக்கள்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது சிறப்பான எதிர்காலத்தை தரும்.
2) திருவக்கரை வக்கிர காளி அம்மன் கோவிலுக்கு சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரகநிவர்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
3) சனி பிரீதி வழிபாடு ஜாதகருக்கான இன்னல்களில் இருந்து நலம் தரும், பாதக ஸ்தான இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
4) வருடம் ஒரு முறை பழனி சென்று வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் புரட்டாசி அமாவாசை அன்று செய்து நலம் பெறவும், அண்ணதானம் செய்து வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

வெளிநாட்டில் தொழில் யோகம் உண்டா ? எதிர்வரும் செவ்வாய் திசை தரும் பலன்கள் என்ன?



வெளிநாடு வெளியூர் சென்று தொழில் மேன்மையும், வேலை வாய்ப்பில் நன்மைகளும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் 7ம் வீடான களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் மேற்கண்ட வீடுகளுக்கு 1,4,10ம் வீடுகள் உறுதுணையாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் பரிபூர்ண அயல் தேச ஜீவன மேன்மையை வாரி வழங்கும், தொழில் அல்லது வேலை என்ற அமைப்பில் இது சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், குறிப்பக தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட வலிமை பெற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கான முன்னேற்றம் வெளிநாடுகளில் இருந்து சரளமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மீனம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் மிகவம் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அளவற்ற செல்வம், குடும்ப ஒற்றுமை, நல்ல உணவு, சிறந்த பேச்சு திறன் என்ற வகையில் சிறப்பை தரும்,
3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையிலும் சுகபோகம், பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் எளிதில் வெற்றி, போக்குவரத்து துறை, வீட்டு மிருகங்கள், விவசாயம் மூலம் லாபம் உண்டு, 4ம் பாவக வழியில் இருந்து, வடக்கு திசை வாயிற்படி வீடுகளில் குடியிருப்பது சகல சௌபாக்கியத்தையும் தரும், சுய முன்னேற்றம் பெறுவதற்கான யோகம் உண்டு, மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு.

5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், குறிப்பாக லாட்டரி யோகம், புத்திசாலித்தனம் மூலம் லாபம், எப்போதும் மகிழ்ச்சி, குழந்தைகள் வழியில் யோகம், குடும்பம் வாழ்க்கை துணை வழியிலான ஒற்றுமையை வெகுவாக தரும், நீண்ட ஆயுள், திடீர் அதிஷ்டம், எதிர்பாராத பொருளாதார வசதி வாய்ப்புகள் உண்டு, நல்ல அந்தஸ்து, நண்பர் உதவி, மன நிறைவான யோக வாழ்க்கை, சுய தொழில் முன்னேற்றம், நல்ல நிதி மேலாண்மை, அனைவரிடமும் அனுசரித்து செல்லுதல், எல்லாம் வெற்றி மயம், மிகுந்த அதிர்ஷ்டம்,அனைத்திலும் லாபம், நல்ல குணம் என்ற வகையில் சிறப்பை தரும்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடன் தொல்லை, வேலை வாய்ப்பில் இன்னல்கள், தேவையற்ற மருத்துவ செலவுகள், பிறந்த ஊரை விட்டு வெகு தொலைவில் சென்று முன்னேற்றம் பெறுதல், நிறைய செலவினங்கள், பங்கு சந்தையில் திடீர் இழப்புகள், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் இன்னல்கள் என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும்,

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் இன்னல்கள், கல்வியில்  தடை, சுய முன்னேற்றத்தில் பாதிப்பு, தெளிவில்லாத முடிவுகள் மூலம் பாதிப்பை தானே சுவீகரிக்கும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் சம்பாதிக்கும் நிலை, உடல் மனம் சார்ந்த விஷயங்களில் சிறு சிறு இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், கூட்டு முயற்சியால் வரும் பாதிப்புகள், வெளியூர் அல்லது வெளிநாட்டில் முயற்சிக்கும் காரியங்கள் பெரும் பாதிப்பு, வெளிநாட்டில் யோகமின்மை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் கடுமையான பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், பொது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களையும் தோல்வியையும் கடுமையாக தரும்.

நடைபெறும் சந்திரன் திசையில் அடுத்தது வரும் சூரியன் புத்தி மட்டும் ஜாதகருக்கு சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனையும், 3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்கும், கைநிறைவான வருமானம், பொருளாதார வசதி வாய்ப்புகள், தெய்வீக அனுகிரகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், வீடு நிலம் வாங்கும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகருக்கான யோக வாழ்க்கை எதிர்வரும் செவ்வாய் திசையில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

குறிப்பு :

 ஜாதகருக்கு பூர்வீக அமைப்பிலேயே சிறப்பான யோகங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், ஜாதகர் வடக்கு திசை சார்ந்த வீட்டில் குடியிருப்பது மட்டுமே ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் செவ்வாய் திசை 2,3,4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், வெளிநாடு யோகம் ஜாதகருக்கு இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, "வாழ்த்துகள்"


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 18 ஜூன், 2018

வெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ! புதன் திசை தரும் பொருளாதார தன்னிறைவும் !


  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.

 மேலும் சுய ஜாதகத்தில்  5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை. 


லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை  தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது,  ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.

ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.

ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி  வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.

ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.


குறிப்பு :

 சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி  மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 30 ஜனவரி, 2018

தொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் தேர்வை செய்வது எப்படி ? சனி திசை தரும் பலன்கள் என்ன ?


 தொழில் ஒருவருக்கு இயற்கையாக அமைவதென்பது சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமையின் அடிப்படையில் நிகழும் ஓர் விஷயமாகும், நடைபெறும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான தொடர்பை பெற்று பலாபலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு தொழில் ரீதியான தன்னிறைவான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நடைபெறும் திசை வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துமாயின், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் பெரிய அளவில் நடைமுறைக்கு வாராது, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : ரிஷபம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2ம் பாதம்

ஜாதகருக்கு 2,6,9ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுய ஜாதக வலிமையை நமக்கு தெளிவு படுத்தும், குறிப்பாக 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், எனவே ஜாதகர் தொழில் வழியில் இருந்து மிக அபரிவிதமான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, ஜாதகரின் சுக ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர நெருப்பு ராசியில் அமைவதும், ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர காற்று ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கிடைத்த புதையல் யோகம் என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் ஜீவனம் மேற்கண்ட இரண்டு தத்துவங்களை சார்ந்து அமையும் பொழுது ஜாதகரின் தொழில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.

ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாகவும், ஸ்திர நெருப்பு ராசியான சிம்மராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் சிறப்பான வெற்றிகளை பெற உதவிபுரியும் ஜாதகர் கட்டிடக்கலை, வண்டிவாகன தொழில் நுட்பம், மின் சாதனம் தயாரிப்பு அல்லது பராமரிப்பு, நுண் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டம் ஜாதகர் செய்யும்  தொழில் வழியில் இருந்து அபரிவித நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, சிறந்த அறிவு திறன், முற்போக்கு சிந்தனையுடனான யோக வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப அறிவு திறனை வியாபாரமாக்கும் யுக்தி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

 ஜாதகருக்கு  சிம்மமும், கும்பமும் வலிமை பெற்று இருப்பது அறிவார்ந்த செயல்கள் மற்றும் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வாழ்க்கையில் சகலவித அதிர்ஷ்டங்களையும் தான் செய்யும் ஜீவன வழியில் இருந்து ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது , நடைபெறும் சனி திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சனி திசை தரும் பலன்கள் : ( 14/01/2001 முதல் 15/01/2020 வரை )

ஜாதகருக்கு தற்போழுது  நடைமுறையில் உள்ள சனி திசை 9ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களையும் வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்துமட்டும் சிறப்பான நன்மைகளை பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு சனி திசை நல்ல கல்வி அறிவை சிறப்பாக வாரி  வழங்கி இருக்கும், இதன் அடிப்படியிலான சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வழங்கி இருக்கும், ஜாதகர் மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து அதன் வழியிலான துன்பங்களை வெகுவாக அனுபவித்திருக்கக்கூடும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இருப்பினும் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை குரு புத்தி ( 03/07/2017 முதல் 15/01/2020 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக  ஓர் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஜாதகர் இதை உணர்ந்து செயல்படுவது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனக்கு வரும் நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்று சிறப்பான முன்னேற்றங்களை காண்பது மிக மிக அவசியமாகிறது.

எதிர்வரும் புதன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதால், தற்போழுது ஜாதகருக்கு வரும் நல்ல ஜீவன வாய்ப்புகளை ஏற்பதே நன்மையை தரும், குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன வாய்ப்புகளை தவறாமல் கைப்பற்றி, எதிர்வரும் புதன் திசை தரும் "களத்திர ஸ்தான" பலாபலனை பரிபூர்ணமாக அனுபவிப்பதே புத்திசாலித்தனம், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?


 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட  ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்யும் அமைப்பிற்க்கு அந்த காலத்தில் "பரதேஷ ஜீவனம்" என்று அழைத்தனர், இன்று அது மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 சுய ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை இழப்பதும், 7,12ம் வீடுகள் வலிமை பெறுவதும் ஓர் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன வாழ்க்கையை அமைத்து தரும், 8,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம்  மற்றும் கைநிறைவான தன சேர்க்கையை வாரி வழங்கும், லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை ஜாதகரின் வாழ்க்கையில் எங்கு இருப்பினும் சுபயோகங்களையே நல்கும், கீழ்கண்ட ஜாதகரின் கேள்வியான, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?  தற்ப்பொழுது வெளியூரில் செய்து வரும் தொழில் இன்னல்களையும் கடன் சுமையையும் ஏற்படுத்தியதற்க்கு காரணம் என்ன ? என்பதற்கு உண்டான பதிலை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம்

 வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 7ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வெளிநாடு வெளியூர் கனவை நிராசையாக மாற்றுகிறது, வெளிநாடு சென்று ஜீவனம் தேடும் யோகம் அற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 12ம் பாவகம் வலிமை பெறுவது வெளிநாடுகளில் ஜாதகரின் வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தும், இந்த ஜாதகத்தி மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை குறைந்து காணப்படுவது ஜாதகரின் வெளியூர் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கையானது மனநிம்மதி அற்றதாகவும், அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேற்கண்ட விஷயங்களை விட தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன ? என்பதே ஜாதகரின் நிகழ்கால வாழ்க்கையை படம்பிடித்து காட்டும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள திசை ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 12/04/2006 முதல் 12/04/2024 வரை )

ராகு தனது திசையில் ஜாதகருக்கு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான வழியில் விரையங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது, இதனால் ஜாதகர் கடன்பட்டு செய்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை தந்தது, ஜாதகருக்கு அதிக அளவிலான கடன் சுமை ஜாதகரின் மனநிம்மதியை வெகுவாக பாதித்தது, இதனால் ஜாதகரின் மன நிம்மதி கெட்டு தெளிவற்ற செயல்பாடுகள் மூலம் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டார், பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மற்றும் பாக்கியம் எனும் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லாமல் தான் அமர்ந்த இடத்தில் ( பூர்வீகம் ) இருந்துகொண்டே சகல சௌபாக்கியங்களையும் தன்னை தேடிவர செய்யலாம், பூர்வீகம் பாதிப்பு அடைந்து இருந்தால் மட்டுமே ஜாதகர் வெளியூர் வெளிநாடு ( பரதேசஜீவனம் ) சென்று ஜீவனம் தேடலாம், அதுவும் சுய ஜாதகத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், மாறாக குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தனது பூர்வீகத்திற்கு அருகிலேயே ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாலசிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டு பலனை, விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை தருகின்றது மேலும் ஜாதகரின் 6ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக அமைவது ஜாதகரின் வருமானம் சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக மாற்றுகிறது, ஜாதகருக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆகிறது, ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்குகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைவது வெளிநாடு வெளியூர் சென்று ஜீவிப்பது ஜாதகருக்கு மிக பெரிய இழப்புகளையும், அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வி மற்றும் மனநிம்மதி இழப்பையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்றும், நடைபெறும் ராகு திசை வலிமை  அற்ற பாவக பலனையும் ஏற்று நடத்துவதே ஜாதகரின் வெளியூர் சார்ந்த தொழில் வழியில் இருந்து கடுமையான தோல்வியை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடி நலம் பெறுவதற்க்கு உண்டான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, அடுத்து வரும் குரு திசையும் ஜாதகருக்க சாதகமின்றி இருப்பது ஜாதகரின் வெளியூர் வெளிநாடு கனவுகளை வெகுவாக சிதைக்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுவதே ஜாதகருக்கு உகந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுய ஜாதகத்தில் பாவக வலிமையும், தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களின் வலிமை, அந்த ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கிறது, நடைபெறும் திசா புத்திகள் 12 பாவக பலன்களை ஏற்று நடத்தி யோக அவயோக பலன்களை அனுபவிக்க வைக்கிறது, கோட்சார கிரகங்கள் தனது கோட்சார அமைப்பில் நின்று திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தனது வலிமை அல்லது வலிமை அற்ற பலன்களை வாரி வழங்குகிறது, இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஜாதகரின் பலாபலன்களும் நிர்ணயம் செய்யபடுகிறது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காணும் பொழுது நமக்கு மிக தெளிவாக புரியும் அன்பர்களே! 

உதாரண ஜாதகம் :


ஜாதகரின் லக்கினம் : விருச்சிகம் 
ஜாதகரின் ராசி : ரிஷபம் 
ஜாதகரின் நட்சத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

இவரது சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்ற பாவகங்கள் :

1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக அமைப்பில் 70% யோகத்தை தருகிறது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து 50% யோக பலன்களை வழங்குகிறது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வழங்குகிறது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 70% யோக பலன்களை வழங்குகிறது.

இவரது சுய ஜாதகத்தில் வலிமை அற்று பாதிப்பை தரும் பாவகங்கள் :

4,8,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து 30% அவயோக பலன்களை வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை தருகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களை தருகிறது.

மேற்கண்ட முறையில் ஜாதகருக்கு 12 பாவக அமைப்புகளின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை காணப்படுகிறது, அடுத்து ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைபெறும் சனி திசை( 21/06/2014 முதல் 21/06/2033 வரை )  ஜாதகருக்கு இரண்டு விதமான பலன்களை தருகிறது அதாவது 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருகிறது, இதில் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல உடல் நலம், மன நலம் சிறந்து விளங்கும், ஜாதகரின் செயல்கள் யாவும் பெருமைக்கு உரியதாக அமையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த யோகத்தை பெறுகிறார், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் மிகுந்த லாபமும், குல தெய்வத்தின் அருளாசியும் கிடைக்க பெறுகிறார், எங்கு சென்றாலும் ஜாதகருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கும், தனது தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் புகழ் கீர்த்தி மேலோங்கும், தனது குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கையை பெரும் சிறப்பான நேரமிது.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து உதவியும், ஆதரவும் அதிகரிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், தம்பதியர் இருவரின் சுய முயற்ச்சியால் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோக காலம் இது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியை குவிக்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை கூட்டு முயற்ச்சியாக ஜாதகர் பெறுவார் என்பது உறுதியாகிறது, வெளிநாடு வெளியூர் செல்வதற்கு உண்டான யோக காலம்  இதுவென்றே  சொல்லலாம், சனி திசை சனி புத்தியில் வெளிநாடு வாய்ப்புகள் தேடிவரும் சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ரிஷப ராசியில் அமைவதால் ஜாதகர் வெளிநாடு செல்வதால் நல்ல வேலை வாய்ப்பினையும், பொருளாதார முன்னேற்றத்தையும், அபரிவிதமான வருமானத்தையும் பெரும் யோகத்தை தரும், பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கையை தற்பொழுது நடைமுறையில் உள்ள சனிதிசையே வாரி வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்தும் 9ம் பாவக வழியில் இருந்தும் அதிக இன்னல்களை தரும், குறிப்பாக 9ம் பாவகம் சர நீர் ராசியாக இருப்பதால் மனோ ரீதியான போராட்டங்கள் ஜாதகரின் முயற்ச்சிக்கு தடையாக அமையும், உதாரணமாக ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் ஜாதகரின் மன நிலையின் காரணமாக தடை ஏற்ப்படும், இதானால் சில நேரங்களில் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வரும் பல அதிர்ஷ்ட வாய்புகள் தட்டி போக வாய்ப்பு உண்டு எனவே ஜாதகர், தனது மன நிலையை முறையாக ஒருமை படுத்துவது நலம் தரும், அல்லது ஜாதகர் 8,9,12ம் பாவக அமைப்பிர்க்குண்டன பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது சால சிறந்தது.

தற்பொழுது நடைபெறும் சனி திசை சனி புத்தியும் (21/06/2014 முதல் 24/06/2017வரை ) 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவதால் ஜாதகருக்கு 7,9ம் பாவக பலன்களே நடைமுறைக்கு வருகிறது, இந்த இரண்டு பாவகங்களுடன்  சம்பந்தம் பெரும் கோட்சார கிரகம் பற்றி ஆய்வு செய்யும் பொழுது குரு பகவான் மட்டும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% யோக பலன்களை வாரி வழங்குவதால் ஜாதகருக்கு 9ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த நன்மையே நடைபெறும். ( அதாவது குரு பகவான் கடகத்தில் சஞ்சாரம் செய்யும் வரை ) ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனிதிசை சனி புத்தி மிகுந்த யோகத்தை தரும் காலமாகவே காணப்படுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உண்டா ? வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பும், பொருளாதார முனேற்றமும் பெற இயலுமா?



கேள்வி :

 ஐயா நான் பிறந்தது 20.04.1989, நேரம்:1.57 PM, இடம்: Attur......நான் 1.4 வருடமாக வெளிநாடு செல்ல காத்திருக்கிறேன். இதுவரை 20 க்கும் மேற்பட்ட ஜோதிடரை பார்த்து இருக்கிறேன்.அனைவரும் வெளிநாடு போவாய் என தெதியும் குறித்து கொடுத்துள்ளார்கள்.இதுவரை அப்படி எதுமே நடக்கவில்லை..அவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன்..இப்போது 4 மாதம் ஆகிவிட்டது..தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து எப்போது போவேன் என கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...நீங்கள் கூறியது போல நடக்கும் தசா புத்தியும் கோசார கிரகத்துடன் சாதகமாக தான் உள்ளது..குரு திசை சனி புத்தி,,சிம்ம லக்னம்,கன்னி ராசி,,கோசார குரு 11ல், பெயர்ச்சிக்கு பின் சனி 3ல்....






பதில் :


அன்பு தம்பி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் பாவகமும், காலபுருஷ  தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருந்தால் ஜாதகருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் சென்று புகழ் பெரும் யோகத்தை தரும், மேலும் 7ம் வீடு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் சிறந்த தொழில் அல்லது வேலை வாய்ப்பு அமையும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் என்பது அபரிவிதமான வளர்ச்சியை பெரும், ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டமும், நண்பர்களின் ஆதரவும் பரிபூரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ஜாதகருக்கு வெளிநாடு யோகத்தை தருகிறது, வெளிநாடுகளில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவான முடிவை  மேற்கண்ட 7ம் பாவக வலிமையை வைத்தே நிர்ணயம் செய்து விடலாம் அன்பரே !


உனது சுய ஜாதக அமைப்பின் படி 3,7ம் விடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்தில் சிறந்த அமைப்பாகவே கருதலாம், குறிப்பாக 7ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக வருவது தங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பினையும், சிறந்த எதிர்காலத்தையும் அமைத்து தரும் என்பது உறுதியாக தெரிகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2011 முதல் 14/11/2027 வரை ) தங்களுக்கு  3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், பலனை தருவது மிகுந்த யோகமே, மேலும் சுய ஜாதகத்தில் துலாம் ராசியும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையையே செய்கிறது என்பதால் தாங்களுக்கு நிச்சயம் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பும், சிறப்பான அதிர்ஷ்டம் மிகுந்த யோக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

  நடைபெறும் குரு திசையில் சனி புத்தியும் ( 01/01/2014 முதல் 15/07/2016வரை ) தனது புத்தியை 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நடத்துவது சிறப்பான விஷயமே, இதில் சனி புத்தி வேறு பாவக தொடர்புகளையும் நடத்துகிறது அதாவது திடீர் இழப்பை தரும் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% இன்னல்களை தருகிறது, 5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 30% யோகத்தை தருகிறது, இதில் நடைபெறும் சனி புத்தி 12ம் பாவக வழியில் இருந்து அதிக தீமையை செய்வதால், தங்களின் முயற்ச்சிகள் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் விரையம் ஆகிறது, மேலும் 12ம் வீடு சர நீர் ராசியாக இருப்பதால் மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தருகிறது, தங்களின் வெளிநாடு பயணத்தின் முக்கிய முட்டுகட்டையாக இந்த 12ம் பாவகம் அமைகிறது.

எதிர் வரும் சுக்கிரன் அந்தரத்தில் தங்களுக்கு வெளிநாடு செல்ல 50% வாய்ப்பு இருக்கிறது, இதை தவிர்த்தல் தங்களுக்கு சனி புத்தி முடியும் வரை வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை, சனி புத்திக்கு பிறகு வரும் புதன் புத்தியிலும் வாய்ப்பு இல்லை என்பதை மிக தெளிவாக சொல்ல முடியும்.

தங்களது சுய ஜாதகத்தில் 12ம் பாவக வழியில் இருந்து வரும் தீய பலன்களுக்கு முறையான நிவர்த்தி செய்வதும், ஜாதகத்தில் கடுமையாக பாதிக்க பட்ட 2,4,6,8,12ம் பாவகங்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை பெற்று பரிகாரம் தேடிகொள்வதும் தங்களின் வெளிநாடு யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும், தம்பி உனது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்டுள்ளது, வரும் வருமானம் அனைத்தையும் வீண் செலவு செய்யும் சூழ்நிலையை தருகிறதே, இதற்க்கு சரியான தீர்வை நாடு, இல்லை எனில் உனது உழைப்பு யாவும் வீணாக போகும் வாய்ப்பு உண்டு.

மேலும் உனது சுய ஜாதக ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், உனது சுய ஜாதக ரீதியாக முறையான தீர்வுகளை பெறவும், நேரில் வந்து முறைப்படி ஆலோசனை பெற்றுகொள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696                                                                                                           


புதன், 30 அக்டோபர், 2013

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?



நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை  செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான  நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு  நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான  4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால்  ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை  வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி  சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழில் நிர்ணயம் செய்வது எப்படி ?




சுய ஜாதகத்தில் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகத்தில் முதன்மையாக கருதவேண்டிய பாவகம் ஜீவன ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், மாறாக வலிமை இழக்கும் பொழுது ஜாதகரின் வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையாமல் ஜாதகரின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய  சில நல்ல விஷயங்கள் கூட நடை பெறாமல் தாமதம் அல்லது தடையை ஏற்படுத்துகிறது , குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜாதகருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைந்தால் மட்டுமே நல்ல திருமண வாழ்க்கை சரியான வயதில் அமைகிறது, மேலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற இயலும்.

முக்கியமாக  தனது பெற்றோர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் வயதான காலத்தில் ஜாதகரால் சந்தோஷமாக வைத்துகொள்ள முடிகிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே ஜாதகர் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதராக இயங்க முடியும், இல்லை எனில் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்புதான், மேலும் தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ஜாதகர் மற்றவர்களின் கரங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டிய சூழ்நிலை தந்துவிடுகிறது .

ஜீவனம் நல்ல நிலையில் அமையாத பொழுதே ஜாதகர் தவறான வழியில் தனது வாழ்க்கை வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் , தான் சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை தரும் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகரால் தனிப்பட்டு செயல்பட  இயலாமல் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, ஒருவேளை சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்டு இருந்தால் 10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியம்.

10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெரும் காலம் வரையில் ஜாதகருக்கு நல்ல ஜீவனம் அமையாது , திருமணம் நடைபெற்ற குறுகிய காலத்திலேயே ஜாதகர் நல்ல ஜீவன முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தந்துவிடும், சில அன்பர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பது இதன் அடிப்படியிலேயே என்பது மட்டுமே முற்றிலும் உண்மை , இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையை மிகவும் அன்பாக நடத்துவது அவசியம் காரணம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தந்ததும், சமுதாயத்தில் சிறந்த கௌரவத்தையும் தந்தது ஜாதகரின் வாழ்க்கை துணைதானே .

மேற்கண்ட  ஜீவனம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர்  களத்திர ஸ்தானத்திற்கு 10ம் வீடான 4ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவக வழியில் இருந்தும்  ஜீவனத்தை தரும் , ஜாதகர் 4ம் பாவக வழியில் இருந்து ஜீவன வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் .

ஆக ஒரு ஜாதகர் வாழ்க்கையில் ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் 10ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது தாயாரை குறிக்கும் 4ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், இந்த இரண்டும் ஒருவேளை பாதிக்க படும் பொழுது  ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேற்கண்ட 3பாவகமும் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சார ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் தனது சுய முயற்ற்சியால் தனித்து செயல்பட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பில் எளிமையான வெற்றிகளையும் , மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை பெரும் தன்மையை தந்துவிடும். குறிப்பாக ஜாதகருக்கு அமையும் தொழில் அல்லது வேலை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கி விடும் , வருமானம் என்பது மிக அதிக அளவில் கிடைக்கும், ஜாதகருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது எவராலும் நினைத்து பார்க்காத அளவில் இருக்கும்.

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர  ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் ஸ்திரமான நிலையுடன் நிரந்தர  ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும் , மேலும் ஜாதகர் பல தொழில் செய்யும் யோகத்தையும், தொடர்ந்து நிலையான நல்ல வருமானத்தை பெரும் தன்மையையும் தந்துவிடும், ஜாதகர் ஆரம்பிக்கும் தொழில்கள் பல தலைமுறைக்கு தொடர்ந்து நிலையாக நடந்துகொண்டே இருக்கும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் கூட்டு தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றங்களை பெறுபவராக இருப்பார், பல பெரிய மனிதர்கள் செய்யும் தொழில்களில் ஜாதகருக்கும் கணிசமான பங்கு நிச்சயம் இருக்கும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மற்றவர்களை சார்ந்தே இருக்கும் என்பது கவனிக்க தக்கது, இவர்கள் செய்யும் சிறு தொழில்கள் அல்லது கூட்டு தொழில்கள் நல்ல வெற்றியை தரும், ஆனால் ஜாதகர் பெரிய தொழில்களில் தனித்து இறங்குவது அவ்வளவு நல்லதல்ல, பெரிய வளர்சியையும் தருவதில்லை.

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் செய்யும் எந்த ஒரு தொழிலும் ஜாதகருக்கு நிச்சயம் தோல்வியை தருவதில்லை, இதை ஒரு சிறந்த  ஜோதிடரை கொண்டு தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திரம்,சுக ஸ்தானத்தின் வலிமை உணர்ந்து , செய்யும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள் அன்பர்களே !

அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தாங்கள் செய்யும் தொழில் 3 அல்லது 4 வருடங்களில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவான வாழ்க்கையையும் தரும் , இதை தவிர்த்து 4 வருடங்களுக்கு மேலும் தங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்றால்,  தங்களுக்கு பொருந்தாத தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதே முற்றிலும் உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696