ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஜாதக ஆலோசணை : சனி திசை தரும் பலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலன் என்ன ?

ஜாதக ஆலோசணை



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜென்ம லக்கின வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம் மிக்க செயல்பாடுகள், துணிச்சலான செயல்திறன் மூலம் வெற்றிகொள்ளும் யோகம், சிறு பயணங்கள் மூலம் நன்மை, தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, சகோதரம் மற்றும் சுற்றத்தாருடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடித்தல், நல்ல நட்புறவு, அவர்கள் வழியில் இருந்து  பெரும் நன்மைகள், சரியாக மேற்கொள்ளும் முடிவுகள், தெய்வீக சிந்தனை, பொருளாதார மேம்பாடு சார்ந்த திட்டமிடுதல்கள், உடல் நலம் பேணும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உறுதுணை புரியும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்பாராத நேரத்தில் ஜாதகருக்கு நிகழும் திடீர் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு செல்வச்செழிப்பு உண்டாகும், தைரியமாக எடுக்கும் முடிவுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையை மிக சிறப்பாக எடுத்து செல்லும் ஆற்றல், எதிரிகளை வென்று நன்மைகளை அடையும் யோகம் உண்டாகும்,   ஜாதகரின் மனநிலையில் தெளிவும் சிறப்பான சிந்தனைகளும்  மேலோங்கி நிற்கும் என்பதால் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும்   தன்னிறைவாக பெறுவதற்கான யோகம் உண்டாகும், சத்தியத்தை மதித்தல் மற்றும் உண்மையை பேசுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்வதுடன்  அனைவரிடத்திலும் பிரபல்ய யோகத்தை நல்கும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், லட்ச்சியங்கள் அனைத்திலும் வெற்றிகொள்ளும் யோகத்தை தரும், உறவினர் மற்றும் நண்பர்கள் வழியில் சிறப்பான சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் , தைரியம் சாகசம் போன்றவற்றில் ஈடுபாட்டை தரும், விளையாட்டில் வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், பயணம் மூலம்  லாபம் உண்டு, படிப்பு மற்றும் கல்வியில் சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்,  புதுமையை விரும்பும் தன்மை, புதுமையான சூழ்நிலைகளில் அதீத ஆர்வம், ஏஜென்சி துறையில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தொழில் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.

2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறை சார்ந்த பணியில் வெற்றி வாய்ப்பையும் , அறிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், பணியில் திருப்தி அற்ற நிலையை தரக்கூடும், வாக்கின் வழியில் இருந்து இன்னல்கள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பு உண்டு, வருமானம் சில நேரங்களில் ஜாதகருக்கு எதிர்மறையான இன்னல்களை தரக்கூடும், பொருளாதர ரீதியான திட்டமிடுதல்கள் இல்லையெனில் ஜாதகரின் வருமானம் வெகுவான இழப்புகளை தரக்கூடும், பேச்சில் கவனம் தேவை என்பதுடன் சேமிப்பில் அதீத நாட்டத்தை செலுத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், குடும்பத்தில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாளும் வல்லமையை தரும் என்ற போதிலும், மன நிம்மதி வெகுவாக  பாதிக்க வாய்ப்பு உண்டு, பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகருக்கான இன்னலைகளை வெகுவாக குறைக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் சிறப்பாக அமையும், தன்னிறைவான வருமான வாய்ப்பும் உண்டு, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகருக்கு உண்டு, வரவை விட சில நேரங்களில்  செலவு அதிக அளவில் வந்து  சேரும், தவிர்க்க இயலாத பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், முரண்பட்ட வருமான வாய்ப்பும் ஜாதகருக்கு உண்டாகும், செய் தொழில் வழியில் சில நேரங்களில் ஜாதகருக்கு மன நிம்மதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, தொழில் முறையில் அனைவரிடமும் அனுசரித்து செல்வதே ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சுய தொழில் முயற்சி பின்னடைவை  தரும்,  வெளிநாடுகளில் ஜீவனம் மேக்கொள்ளும் பொழுது அபரிவிதமான  பொருளாதார சேர்க்கை உண்டு.

 12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள் மற்றும் கடும் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும், அனைவராலும் தொல்லை, துன்பங்கள் என வாழ்க்கையை சிரமத்துடன் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் கிட்டுவது அரிது, நிம்மதியற்ற தன்மை, மனப்போராட்டம், தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு சிக்கல்கள், கருத்து ஒற்றுமை இன்மை இவை அனைத்தும் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், சரியான முடிவுகளை எடுக்க வில்லை எனில் அதீத துன்பத்தை ஜாதகர்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு அதிக துன்பத்தை தரும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  4ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் இருந்து வரும் சொத்துக்கள் கிடைக்கும் குறிப்பாக தகப்பனார் வழியில் இருந்து வரும் யோக  வாழ்க்கை சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், உயில் போனஸ் கிராஜுவிட்டி போன்றவற்றிலும் இஞ்சுரன்ஸ் வழியில் இருந்தும் ஜாதகருக்கான பொருளாதார உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க பெரும், எதிர்பாராத விபத்து மூலம் வண்டி வாகனம் கடுமையான   பாதிப்பை அடைய கூடும், உடல் நலம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, காரியங்களில் அதீத தடை தாமதங்களை சந்திக்கும் நிலையை தரும், தாயார் வழியில் இருந்து வரும் சில இன்னல்கள் ஜாதகருக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமையும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள்  வீடு வண்டி  வாகனங்களை மிக கவனமாக பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், தனது குணநலன் சார்ந்த விஷயங்களில்  சரியான  கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமானது.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, இருப்பினும் எதிர்பாராத  ஏமாற்றம், எதிர்பாராத திடீர் இன்னல்கள் ஜாதகரை சில  நேரங்களில் அதீத துன்பத்திற்க்கு ஆளாக்கும், விபத்து, உடல் நல பாதிப்பு போன்றவை ஜாதகருக்கு பொருளாதார சிக்கல்களை அதிகரிக்க கூடும், அனைவராலும் தொல்லை, எதிர்பாலின அமைப்பினர் மூலம் வரும் இன்னல்கள் ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிகரிக்கும், கவனமான பாதுகாப்பான  பயணம் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு மேற்கண்ட  இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை தன்னிறைவாக வாரி வழங்கும், லாட்டரியில் திடீர் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டம், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் சூரியனை கண்ட பனிபோல்  விலகிவிடும் தன்மை, குலதெய்வத்தின் பரிபூர்ண அருளாசி, சமயோசித  புத்திசாலித்தனம், இன்னல்கள் அனைத்தையும் தனது நுண்ணறிவு திறனால் வெற்றிகொள்ளும் வாய்ப்பு, தான் பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் சுபயோக வாழ்க்கை, நம்பிக்கை மிக்க   எதிர்காலம் எதிர்பாராத உதவிகள் ஜாதகரை வந்து சேரும் தன்மை, அனைவரின் அன்பையும் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் தன்மை, புத்திசாலித்தனத்தால் ஆதாயமும் லாபமும் உண்டாகும், எப்பொழுதும் மகிழ்ச்சி, குழந்தை குடும்பத்துடன் தன்னிறைவான யோக வாழ்க்கை என்ற வகையில்  ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை உண்டாகும், வெளிநாடு ஜீவனமும், குடியுரிமையும் திடீரென அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், பொறுப்பு  மிக்க செயல்பாட்டையும் வாரி  வழங்கும், நல்ல அதிஷ்டத்தை ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், லட்சியங்களை விடாமுயற்சியுடன் போராடி பெரும் யோகம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்ப படும், எடுக்கும் காரியங்கள்  யாவிலும் தன்னிறைவான அதிர்ஷ்டங்களையே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகருக்கு புதிய உத்வேகத்தையும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தரும், எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் தனது தன்னம்பிக்கையை விடாமல் ஸ்த்திரமாக நின்று யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை இந்த மதிப்பு மிக்க லாப ஸ்தானம் எடுத்துரைக்கிறது, சரியான  திட்டமிடுதல்கள் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், லாப  ஸ்தான வலிமை ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சபந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்,  கடன் உடல்நல பாதிப்பு குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள், எதிரிகள் தொந்தரவு, அதீத எதிர்ப்புகள் கடன் கொடுத்தவர் வாங்கியவர்கள் வழியில் இருந்து  வரும் இன்னல்கள் எதிர்பாரா மருத்துவ செலவினங்கள், எதிரிகள் வழியில்  இருந்து வரும் துன்பங்கள், அடிக்கடி உடல் நல பாதிப்பை சந்திக்கும் தன்மை, முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் சில  பிரச்சனைகள், தெய்வீக அனுகூலத்தை பெற வாய்ப்பில்லாமல் தடைகளை  சந்தித்தல், மாந்திரீக பாதிப்பு, செயல் முடக்கம், சுபயோகங்களை தடை செய்யும் தன்மை என்ற வகையில் ஜாதகருக்கு 200% விகித  இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அறிவு திறன் முழுமையாக முடக்கப்படும் தன்மை , மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் இன்னல்கள், தெளிவில்லாத சிந்தனை, முடிவெடுக்க முடியாமல்  தடுமாறும் சூழ்நிலை எதிர்ப்புகளை கையாள தெரியாமல் சிரமப்படும் நிலை, தெய்வீக உதவியை பெற இயலாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் பகைமை  பாராட்டும் தன்மை, உறுதியில்லாமல்  சில முடிவுகளை மேற்கொண்டு  அதன் வழியிலான துன்பங்களை அதிக அளவில்  அனுபவிக்கும் நிலை என்ற வகையிலும், எதிர்பாலின சேர்க்கை வழியில் தேவையற்ற இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  அதீத யோக வாழ்க்கையை களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணை அவரது பரிபூர்ண ஒத்துழைப்பு மற்றும் தன்னலமற்ற ஆதரவு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் குடியுரிமை, நிறைவான பொருளாதர சேர்க்கை, நிம்மதியான யோக வாழ்க்கை, தனித்திறமையான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், நினைத்தைதை அடையும் வல்லமை, தன்னிடம் உள்ள தனி திறமையை கொண்டு வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெறுதல், கூட்டு முயற்சி வழியில் இருந்து வரும் யோகம், வெளிநாடுகள் சென்று சிறப்பான வரவேற்பை பெரும் தன்மை, ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் செய்வதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, அதிகார பதவி, சிறந்த நிர்வாக திறமை என்ற வகையில் ஜாதகரின் வாழ்க்கையில் சகலவிதங்களில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

நடைபெறும்  சனி திசை தரும் பலன்கள் : ( 11/03/2003 முதல் 11/3/2022 வரை )

தற்போழுது நடைபெறும் சனி மகா திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து தனி  திறனை வெளிப்படுத்தும், ஜாதகரின் வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த நன்மைகளை அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடனான யோக வாழ்க்கையை முழுவதும் சுவீகரிக்கும்  தன்மையை  தரும் எதிர்ப்புகள் விலகும், வெளியூர் அல்லது  வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகளை பூர்த்தி  செய்யும், நம்பிக்கை மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து ஜாதகரின் யோக வாழ்க்கை பரிபூர்ண துவத்தை அடையும், குறிப்பாக ஜாதகரின் சுய வலிமை பிரகாசிக்கும் நேரமாக  இது அமைவதுடன் சனி திசை  மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி மகா திசையில் தற்போழுது நடைபெறும் குரு புத்தியும் மேற்கண்ட 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் சுபயோக பலாபலன்களை ஏக காலத்தில் வாரி வழங்குவதால் ஜாதகர் எதிர்வரும் காலங்களில் சுபயோக பலாபலன்களையே தன்னிறைவாக பெறுவார் .

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 11/03/2022 முதல் 11/3/2039 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் புதன் மகா திசை 1,3ம் வீடுகள் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை நல்குவது வரவேற்கத்தக்கது, புதன் திசை ஜாதகருக்கு நல்ல மனநிலை, சிறந்த உடல் ஆரோக்கியம், பயணங்கள்  மூலம் அதீத லாபங்கள் நிரந்தர குடியுரிமை, கோர்ட் கேஸ், வழக்குகள் வழியிலான தீர்வுகள்,  சாதகமான சூழ்நிலை, எதிர்ப்புகள் விலகுதல்,  நினைத்த காரியம் நிறைவேறுதல், சகோதர வழி ஆதரவு, உறவுகளுடன் நல்ல பற்றுதல், தெய்வீக அனுகூலம், தைரியமாக சரியான  முடிவுகளை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் சரியான நேரமாக புதன் திசை அமையும் மேலும் 3ம் பாவக வழியில் இருந்து நிறைவான செல்வச்செழிப்பு, பொருளாதர முன்னேற்றம், எதிரி மற்றும் எதிர்ப்புகளை வெல்லுதல், மனோதைரியம், தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடு, முற்போக்கு சிந்தனை என சகல  ஐஸ்வர்யங்களும் ஜாதகரை தேடிவரும் யோக காலம் இந்த புதன் திசை  என்று தெளிவாக கூறலாம் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696