கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

வியாழன், 13 ஜூலை, 2017

5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது தரும் அதிர்ஷ்டங்கள் !



கேள்வி :

5ல் ராகு அமர்வது ஜாதகருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை ( ஆண்  வாரிசு இல்லை ) என்பது உண்மையா ?

பதில் :

 இது முற்றிலும் தவறான கருத்து மேலும் ஜோதிடகணிதம் பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் பலனாகவும் சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறும் பொது கருத்தாகவே உள்ளது, 5ல் அமரும் ராகு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றிய தெளிவில்லாமல் கூறப்படும் விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, 5ல் ராகு அமர்ந்து தான் அமர்ந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு பொருத்தமானதாக அமையும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலை இருப்பின் அதற்க்கு சரியான தீர்வு உண்டு என்பதால் அதைபற்றிய கவலை தேவையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு கேது ஜாதகருக்கு தரும் யோக வாழ்க்கை பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் மேலும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும்  5ம் பாவகமான மீனத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றார், அதற்க்கு சம சப்தமாக லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமான கன்னியில் கேது அமர்ந்து இருக்கின்றார், சாய கிரகங்களான ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு  தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று யோகத்தை தருகின்றனரா ? அல்லது தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை அற்று
அவயோகத்தை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தெளிவர அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பாவகங்களின் அதிபதி ( பாரம்பரிய முறைபடி ) யார் என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, 5 ம் பாவகத்திற்கு முழு முதற் சுப கிரகமாகவும் ( கோணஅதிபதி ) "பிரகஸ்பதி" என்று ஜோதிட சாஸ்திரத்தால் போற்றபடும் "குருபகவான்" பொறுப்பு ஏற்கிறார், 11ம் பாவகத்திற்க்கு ( கோண அதிபதி )  "வித்யாகாரகன்" என்று போற்றப்படும் புதபகவான் " பொறுப்பு ஏற்கிறார், இதில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கோண வீடாகவும், லாப ஸ்தானம் சம வீடாகவும் அமைவது  அங்கு அமரும் சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு சுப துவத்தை தந்து, சம்பந்தப்பட்ட 5,11ம் பாவகங்களுக்கு 100% விகித வலிமையை பெற்று தருகின்றது.

 இதன் காரணமாக சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமும், அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகமும் முழு வலிமை பெற்று ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் அமைப்பை பெறுகின்றது. சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே புத்திர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு புத்திர தடையை தாராமல் நல்ல யோகம் மிக்க புத்திர பாக்கியத்தை நல்கி இருக்கின்றது, யோகம் மிக்க ஓர் ஆண் வாரிசும், அதிர்ஷ்டமிக்க 2 பெண் குழந்தைகளும் ஜாதகருக்கு இறைஅருள் வாரி வழங்கி இருப்பது நடைமுறை உண்மை ஆகும், மேலும் இதுவே சுய ஜாதக வலிமை ஆகும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் சாயா கிரகங்களால் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது குழந்தைகளால் அதிர்ஷ்டம் மற்றும் சுபயோகங்களை 100% விகிதம் பெறுவார் என்பதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், ஜாதகருக்கு வாரிசு அமைந்தவுடன் ஜாதகர் பெற்ற முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானது, மேலும் ஜாதகருக்கு நடைபெற்ற திசாபுத்திகள் சாதகமாக அமைந்தது ஜாதகரின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்தது.

 பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்று தான் அமர்ந்த பாவகத்தை முழு அளவில் வலிமை பெற செய்வது முன் ஜென்ம கர்மவிணை பதிவினை இறைஅருளின் துணையுடன் கழித்துகொள்ளவும், பிறப்பில்லா யோக வாழ்க்கையை பெற்று ஜீவன் முக்தி பெறவும் சிறந்த வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், சிலருக்கு இளமையில் இன்னல்களையும், மத்திம வயதில் மிகுந்த யோக வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் நல்கும் வல்லமை பெற்றது, இது அவரவர் சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப மாறுபடும், மேலும் தாம் அமர்ந்த பாவக வலிமைக்கு ஏற்ப யோக பலாபலன்களை ஸ்திரமாக வாரி வழங்கும், எது எப்படி இருப்பினும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்றவர்கள் "வாழ்ந்து கெட்டவர்கள் " அல்ல, கெட்டபின்பு வாழ்ந்து காட்டுபவர்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, அமர்ந்த பாவகத்திற்கு  தரும் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சால சிறந்தது, இதை தவிர்த்து 1,2,5,6,7,8,12ல் அமர்வது தோஷம் என்று முடிவு செய்வது சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை மனதில்  நிறுத்துவது அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 5 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 30 மார்ச், 2017

சத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாதிபதி ஜாதகருக்கு மிகுந்த பாதிப்பை தருவாரா ?


சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை சிறப்பாக அமைத்துத்தரும், குறிப்பாக சுபயோகங்களை ஜாதகர் பெறுவதற்கு யாதொரு தடைகளும் இருக்காது, சரியான நேரம் காலம் கூடி வரும்பொழுது யாருடைய உதவியும் இன்றி ஜாதகரே தன்னிறைவாக பெறுவார், எதிர்ப்புகள் இல்லாமல் சுப நிகழ்வுகள் யாவும் ஜாதகருக்கு தொய்வின்றி நடைபெறும், ஜாதகரின் நடவடிக்கையும் செயல்பாடுகளும் அனைவரும் மெச்சும்வண்ணம் இருக்கும், ஜாதகரும் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை, சுய கட்டுப்பாடு மற்றும் பண்பாடு கொண்டவராக திகழ்வார், வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார்.

சுய ஜாதகத்தில் லக்கினம் அல்லது லக்கினாதிபதி பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரே தனது  வாழ்க்கை முன்னேற்றமின்மைக்கு காரணகர்த்தாவாக விளங்குவார், ஜாதகரின் மனம் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டு இருக்கும், சிந்தனையும் செயல்திறனும் அற்று வீண் கற்பனையும் மனபயமும் கொண்டவராக காணப்படுவார், வரும் எதிர்ப்புகளை சந்திக்க திறன் இன்றி மற்றவர் ஆளுமையின் கீழ் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தரும், பொறுப்புகளை தட்டிக்கழிப்பதும், மற்றவர்கள் மீது காரணம் காட்டி தப்பித்துக்கொள்வதும், ஜாதகரின் வாழ்க்கையில் பல தோல்விகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், வாழ்க்கையில் நேர் வழியை கடைபிடிக்காமல், மாற்றுவழியில் சென்று தனது வாழ்க்கைக்கு பொருத்தமில்லா செயல்களை செய்து இன்னலுறும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களையும் ஜாதகர் பெற இயலாமல் வீண் விரயங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்பதில் இருந்தே லக்கினம் என்ற முதல் பாவகத்தின் வலிமை மற்றும் லக்கினாதிபதி பெரும் வலிமையின் அவசியம் நமக்கு  புரிய வரும்.

லக்கினம் என்பது மனிதனின் இதயம் போன்றது, இதயம் செயல் இழந்தால் எப்படி உயிர் இயக்கம் பெறாதோ ? அதைப்போன்றே லக்கினம் வலிமை குறைவது ஜாதகரின் இயக்கத்தை பாதிக்கும், சுய ஜாதகத்தில் பலவித யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பயனும் ஜாதகருக்கு கிடைக்காது, யோகங்கள் தரும் பாவக வழியிலான உறவுகள் ஜாதகரை பயன்படுத்திக்கொண்டு நன்மைகளை பெறுவார்கள், ஜாதகரின் ஆசைகள் யாவும் நிராசையாக மாற அதிக வாய்ப்புகள் உண்டு, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு, கன்னி ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் உள்ளார், லக்கினாதிபதி 6ல் மறைவு, லக்கினம் தொடர்பு பெறுவது விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் எனவே ஜாதகருக்கு லக்கினாதிபதியும் பாதிக்கப்பட்டு, லக்கினமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது, ஜாதகர் மனதளவில் எப்பொழுதும் கவலையும் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றார், சிந்தனையும் செயல்பாடுகளும் நம்பிக்கை அற்ற தன்மையுடன் இருப்பதால் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தருகின்றது, மற்றவர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகிறது, ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடங்கல், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தவிர்த்து, இன்னல்களை தரும் காரியங்களில் ஆர்வம் செலுத்தியதால், இன்று வரை ஜாதகர் ஓர் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டை பெற இயலவில்லை, திருமண வாழ்க்கையிலும் தடை, ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு என்றாலும் அவர் சத்ரு ஸ்தானத்தில் வலிமை அற்று அமர்வதால் நல்ல ஞானத்தை வழங்கவில்லை, சாஸ்திர ஞானம் அற்ற நிலையையும், தனது உடல் நிலையில் அக்கறை கொள்ளாத தன்மையையும் தருவது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை அற்ற  5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவதும், ராகு திசை ஜாதகருக்கு பருவ வயதில் வருவதும் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துகொண்டு இருக்கின்றது, குல தேவதையின் அருளாசி இன்மையும், ஜாதகருக்கு ஏற்படும் திடீர் இழப்புகளும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தருவது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் 8ம்  பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது ஜாதகரின் கூட்டாளி, நண்பர்கள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உடல் நிலையும் கடுமையாக பாதித்துக்கொண்டு இருக்கின்றது, இந்த நிலை இப்படியே நீடித்தால் ஜாதகர் ராகு திசை இறுதியில் கடுமையான நெருக்கடிகளை  சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது, அதாவது ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்தால், ஜாதகரின் வாழ்க்கையிலும் சுபயோகங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது, அதற்க்கான சாத்தியக்கூறுகள் சிறிது உள்ளது என்று சொல்லலாம் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகர் 2ம் பாவக வழியில் ( குடும்பம் ) இருந்து மட்டும் நன்மைகளை பெரிய அளவில் பெற இயலும், இறுதி வரை குடும்ப வாழ்க்கையை ஜாதகர் சிதைக்காமல் வாழ்வது அவர் முன் உள்ள சவாலாக இருக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினாதிபதி சத்ரு ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு பாதிப்படைந்து, ஜாதகருடன் சேர்பவரையும் பாதிப்படைய செய்யும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 16 மார்ச், 2017

குரு திசை வழங்கும் யோக பலன்கள் ! லாப ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை !


 சுய ஜாதகத்தில் குரு திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோக அமைப்பை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது உண்டு, குரு திசை ஒருவருக்கு நடைபெறும் பொழுது அவருக்கு நன்மையான பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்து, இது உண்மைக்கு புறம்பானது என்ற போதிலும், நடைபெறும் குரு திசை ஒருவருக்கு சுப யோகங்களை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

எந்த ஓர் ஜாதகத்தில் நவகிரகங்களின் திசைபுத்தி ( சுபர் அசுபர் ) தனிப்பட்ட நன்மை தீமைகளையும், யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றதல்ல என்ற அடிப்படை விஷயத்தை முன் வைத்து இந்த பதிவை தொடர்கிறது " ஜோதிடதீபம் " உண்மையில் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை ஏற்றே நவ கிரகங்களின் திசாபுத்திகள் யோக அவயோக பலாபலன்களை வழங்குகிறது என்பதால், சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக பலன்களையும், சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் நிலையை தருகிறது, இதை மறுத்து சுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு யோக பலன்களையும், அசுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு அவயோக பலன்களையும் தரும் என்ற வாதம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலை உணராமல் கூறும் பொது பலன்களாகவே கருத வேண்டி உள்ளது, கிழ் கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை, அடுத்து வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம்.

ஜாதகருக்கு குரு திசை ( 07/02/2007 முதல் 07/02/2023 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், ஜாதகர் நினைத்தபடி நிகழ்வுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தன்னம்பிக்கையும் தைரியமும் வெகுவான  லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனை, செய்யும்  காரியங்களின் புதுமையை விரும்பும் மனநிலை என ஜாதகர் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார்.

குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துவதும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடான கடகம் ஜாதகருக்கு லாப ஸ்தானமாக அமைவது ஒரு வகையில் வண்டி வாகன யோகம், வீடு, நிலம், இடம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை என்ற வகையிலும் சுபயோகங்களை தரும், தனது தாய் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகர் இந்த குரு திசை காலத்தில்  தடையின்றி பெறுவார், தனது எண்ணத்தின் வலிமையை வெற்றிகரமான சாதனைகளுக்கு மூலதனமாக பயன்படுத்தும் யோகம் பெற்றவராக மாற்றும் வல்லமையை தரும்  தற்போழுது நடைமுறையில் உள்ள குரு தசை என்பது மேற்கண்ட ஜாதகத்தில் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம். ( தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனை தருவது இன்னல்களை தரும் அமைப்பாகும் )

ஜாதகருக்கு எதிர் வரும் ( 07/02/2023 முதல் 07/02/2042 வரை ) சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பதும் மிகுந்த யோகத்தை தரும் அமைப்பிலேயே உள்ளது அதாவது 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் , 8ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் தருவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே எதிர்வரும்  ( இயற்க்கை பாவியான ) சனி திசையும் ஜாதகருக்கு பாக்கியம் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுப யோகங்களையே வாரி வழங்குகிறது என்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 9,10ம் பாவக பலனை ஏற்றுநடத்துவதில் இருந்து தெளிவாகிறது.

குறிப்பு :

நவகிரகங்கள் தனது திசையில் தரும் பலன்களை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அவர்கள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பை கருத்தில் கொண்டு  நிர்ணயம் செய்வதே மிக சரியான அணுகு முறை, இதை தவிர்த்து பொது பலன் கூறுவது என்பது, ஜோதிட கணிதத்தின் உண்மை நிலையை புரியாமல் சொல்லும் வாய்ஜாலம் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 15 மார்ச், 2017

செவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையைதான் தேர்வு செய்ய வேண்டுமா ?


 செவ்வாய் தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருப்பின், அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருப்பதே திருமணம் வாழ்க்கைக்கு நல்லது, இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், தம்பதியர் ஒற்றுமை குறையும், குறிப்பாக மணமகன் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தை விட மணமகள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் சற்று வலிமை குறைவாக இருப்பது நல்லது, செவ்வாய் தோஷம் என்பது ஜாதகத்தில் 2,4,7,8,12ல் இருப்பின் அந்த ஜாதகரோ ஜாதகியோ செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்படுவார்கள், என்ற  விஷயங்கள் யாவும் காலம் காலமாக மக்களிடம் பரவலாக உள்ள மூட நம்பிக்கை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, தங்களின் ஜாதகத்தையே இந்த செவ்வாய் தோஷம் சார்ந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் 7ல் அமர்ந்து இருப்பதால் கடுமையான செவ்வாய் தோஷம் என்றும், இதனால் தாங்கள் செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையையே தேர்வு செய்ய வேண்டும் என்பதனை, தங்களின் கேள்வியில் இருந்தே தெளிவாக அறிய முடிகிறது, ஆனால் தங்களின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தங்களுக்கு தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்து இருக்கின்றார் என்பது மற்றவர்களின் கூற்று, இதில் உண்மை இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து பொதுவாக ஓர் பாவகம் ஆரம்பிக்கும் பாகை, முடிவுறும் பாகை ஆகிய விஷயங்கள் தெளிவாக தெரிந்த ஜோதிடர்களுக்கு மேற்கண்ட குழப்பம் வர சிறிதும் வாய்ப்பில்லை, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு மீன ராசியில் 347:04:48 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:22:32 பாகையில் முடிவடைகிறது, தங்களது களத்திர பாவகம் மீன ராசியில் 13 பாகையும், மேஷ ராசியில் 17 பாகையும் கலந்து நிற்கின்றது, செவ்வாய் பகவான் தங்களது ஜாதகத்தில் 339:17:46 பாகையில் நிற்கின்றார், எனவே செவ்வாய் மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை.

இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் ( மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் ) அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதியாகிறது, எனவே சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமரவில்லை, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றார் எனும் பொழுது, இங்கு செவ்வாய் தோஷத்திற்கு கூறும் விதி முறைகள் யாவும் பொய்த்து போகின்றது, 7ல் செவ்வாய் அமர்வதே செவ்வாய் தோஷம் ( உண்மைக்கு புறம்பானது )  என்றால் , தங்களது ஜாதகத்தில் செவ்வாய்  6ல் அமர்ந்து இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதே சரியானது, ஆகவே செவ்வாய் தோஷம் என்ற விஷயம் தங்களது ஜாதகத்திற்கு  பொருந்தி வாராது.

செவ்வாய் தோஷம் என்ற மாயையை களைந்து சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு வாழ்க்கை துணையை தாங்கள் தேடுவதே சாலச்சிறந்தது என்று  அறிவுறுத்த ஜோதிட தீபம் விரும்புகிறது, தங்களது திருமணம் தாமதமாக செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பது உறுதி, திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பரே, 

தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களது திருமண வாழ்க்கை தாமதமாக முழு முதற்காரணமாக அமைகிறது என்பதே உண்மை, எனவே அதற்க்கான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 3 மார்ச், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்னி !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கன்னி :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கன்னி லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மானுடம் பயன்பெற வாழ்க்கையில் பல தியாகங்களையும், தன்னுள் இருக்கும் இருக்கும் அணைத்து விஷயங்களையும் தனது குழந்தைக்கு தந்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடும் தாயின் குணத்தை பெற்ற கன்னி இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை வீர்ய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வெற்றிகளை வாரி வழங்கிய சனி பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது  மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் சுக போக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது.

4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த சிறு மாற்றங்களை தரக்கூடும், பழைய வீடு, வண்டி வாகனம்  போன்றவற்றை மாற்றிக்கொள்ள இது சிறந்த கால நேரமாக கருதலாம், மேலும் உயர்கல்வி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சரியான நேரம் இதுவே, புதியதாக வண்டி வாகனம் வீடு நிலம் வாங்க விரும்புவார்கள், அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது உடனடியாக நல்ல பலன் தரும், இருப்பினும் தங்களது உடமைகளை, சொத்துக்களை மற்றவர்களை நம்பி கொடுக்கும் பொழுது சற்று கவனம் தேவை, நம்பிக்கைக்கு உகந்த நபர்களிடம் மட்டுமே தாங்கள் தங்களது உடமைகளையும் சொத்து, வண்டி வாகனத்தையும் தரலாம், இல்லை எனில் தவிர்த்து விடுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் இழப்புகளையும் தவிர்க்க உதவும், அரசு துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல பதவி உயர்வு உண்டாகும், கல்வி மற்றும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், யோக வாழ்க்கையும் கிடைக்க பெறுவார்கள், தங்களது வாழ்க்கையில் கவுரவம் அந்தஸ்த்து போன்றவை வெகுவாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் யோக காலமாக அமையவிருக்கிறது என்பதால், சனியின் சுக ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு நன்மையையே தரும்.

9ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, கல்வி கேள்விகளில் நல்ல அதிர்ஷ்டத்தையும், குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நல்கும், வெகுநாள் லட்சியங்கள் தங்களுக்கு விரைவாக நிறைவேறும், தனபிராப்பர்த்தி சரளமாக வரும் வாய்ப்பு உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றி, சிறந்த பேச்சு திறமை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், ஆன்மீக அன்பர்களுக்கு சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும், தங்களின் தேடுதல்களுக்கு சரியான குரு அமைவார், சகல செல்வாக்கும் மக்களின் ஆதரவு மூலம் பெருகி வரும், தெய்வ அனுகிரகம் மூலம் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்கள் பன்மடங்கு பெருகி வளரும், விவசாயம் செய்வோருக்கு திடீர் யோகம் உண்டாகும், விளைச்சல் அதிகரிக்கும், அரசு சார்ந்த  உதவிகள் தங்களை தேடிவரும் வாய்ப்பும் உண்டு, திருமண வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர், ஓர் பெரிய மனிதரின் ஆசியினால் ஒன்று கூடும் வாய்ப்பு உண்டாகும், தங்களின் வேண்டுதல்கள் எதிர்பார்ப்புகள்  நிறைவேறும், குறிப்பாக பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 10ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, இதுவரை தொழில் ரீதியாக இருந்த இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவார், அதன் அடிப்படையில் முடங்கி கிடந்த தொழில்கள் இனி வரும் காலங்களில் சிறப்பாக ஏற்றமிகு லாபத்துடன் நடைபெறும், சுய தொழில் செய்வோர்க்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்ச்சிகளில் நிச்சய வெற்றி கிட்டும், குறிப்பாக கமிஷன், தரகு, எஜென்ஜி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு சரளமான பண வசதியும், செல்வாக்கும் அதிகரிக்கும், தங்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல வெற்றி வாய்ப்பினை நல்கும், தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும், எதிர்ப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு பணிந்து போவார்கள், வியாபாரத்தில் வெற்றி, பன்முக  திறமை மூலம் வாழ்க்கையில் ஜீவன ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் தங்களை தேடி வரும், குறிப்பாக தங்களின் அறிவு திறன்  மிக சிறப்பாக செயல்படும், தொழில் முன்னேற்றம் என்பது இரண்டு மடங்கு பல்கி பெருகும்.

1ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி  லக்கின அன்பர்களுக்கு, வயிறு சார்ந்த இன்னல்களை சற்று அதிகமாக தரக்கூடும், இதனால் வரும் தொந்தரவுகள் தங்களுக்கு சற்று செலவினத்தை தரகூடும், இருப்பினும் உடல் ரீதியாக வரும் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வும், சிறந்த மருத்துவமும் கிடைக்க பெறுவீர்கள், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன் சார்ந்த இன்னல்கள் உடனடியாக முடிவுக்கு வரும், எதிர்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் நேரம் இது, தங்களின் செயல்பாடுகளில் சற்று வீரியம் அதிகரிக்க வேண்டிய நேரம் இது, அதிக விழிப்புணர்வுடன் ஒவ்வொரு காரியத்திலும் ஈட்டுபட்டு, நன்மைகளை மட்டும் தேர்வு செய்து முன்னேற்றங்களை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், தங்களின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை கொள்ளுங்கள், இதனால் தங்களின் ஜீவன மேன்மை என்பது பலமடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,9,10,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,9,10,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கன்னி லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )


"ஜோதிடதீபம்" ஆருடம் கூறியபடியே சரியாக அமைந்த தீர்ப்பு ....

கடந்த 13ம் தேதி தமிழக மக்களின்  மனதில் முக்கியஸ்தர் ஒருவருக்கு வரும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று எழுந்த கேள்விகளுக்கு உண்டான பதிலாக குருவின் ஆசியுடன் ஒரு ஆருடத்தை " ஜோதிடதீபம்" பதிவு செய்து இருந்தது, அதற்க்கு அடுத்தநாளே ஆருடத்தை மெய்பிக்கும் தன்மையாகவும், அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விதமாகவும், சம்பந்த பட்ட நபருக்கு தீர்ப்பு அமைந்து இருந்தது, ஆருடம் கேட்ட நேரமும் அதில் இருந்த சிறப்பு சாராம்சங்கள் பற்றியும், ஆருட லக்கினத்திற்கு அமைந்த பாவக தொடர்புகள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



ஆருட கேள்வி :

சம்பந்தப்பட்ட நபருக்கு வரும் தீர்ப்பு எப்படி அமையும்? அவரின் எதிர்காலம் என்னவாகும் ?

ஆருட பதில் :

ஆருட நேரத்தில் அமைந்த லக்கினம் : கடகம்
ஆருட நேரத்தில் அமைந்த ராசி : கன்னி
ஆருட நேரத்தில் அமைந்த நட்சத்திரம் : உதிரம் 2ம் பாதம்.
ஆருட நேரத்தில் அமைந்த பாவக தொடர்புகள்

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11 வீடுகள் 200 % விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  லக்கின வழியில் கலையில் நாட்டம், தனிமை விரும்பி ( சேராமாரி ) முதலீட்டில் விருப்பம், அதிக தொல்லை, பொறாமை, மறைமுக எதிரி, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, சிறை செல்லுதல், ஏமாற்றம், கொள்ளை அடித்தல், இராஜ துரோகம், சதி செய்தல் என்றவகையில் பலனை தரும்,எனவே ஆருட லக்கினம் என்பதே கடுமையாக பாதிக்கப்படுகிறது ( ஆரூடத்தில் லக்கினம் மிக முக்கியமாக கருதப்படும் ) , மேலும் ஆருட லக்கினாதிபதியான செவ்வாய், லக்கினத்திற்கு 8ல் மறைவு அடிப்படையிலேயே லக்கினமும் பாதிக்கப்பட்டு, லக்கினாதிபதியும் பாதிக்கப்படுவது, அவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு கட்டியம் கூறுகிறது, 3ம் பாவகம் பாதிக்கப்படுவது அவரது முயற்சியில் பெரும் தோல்வியையும், 4ம் பாவகம் பாதிக்கப்படுவது விபத்து, சொத்துக்களை இழத்தல், தடங்கல், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், ஜெயில் வாழ்க்கை, அதிக வேலைப்பளு, விஷ பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவகம் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்களால் தொல்லை, கடன் பெற்றவர்களால் இன்னல்கள், வேலையாட்கள் விசுவாசிகள் மூலம் அதிக தொல்லை, வேலை நிறுத்தம், தேவையற்ற செலவு, எதிர்பாராத மருத்துவ செலவு, 7ம் பாவகம் பாதிப்படுவது நோயுற்ற வாழ்க்கை துணை, அரசியல் சிக்கல்கள், கூலியாட்கள் மூலம் அதிக தொல்லை, அனைத்திலும் தோல்வி, அதிக இன்னல்கள் என்ற வகையிலும், 9ம் பாவகம் பாதிக்கப்படுவது பித்ருக்கள் ஆசி இன்மை, சரியான நேரத்தில் அனைவரும் காலைவாரிவிடும் சூழ்நிலை, முட்டாள் தனமான செய்கைகள் மூலம் தன்னை ஓர் அறிவிலி என்று நிரூபித்தால், மற்றவர்களை நம்பி சோரம் போகுதல், உடன்பிறப்பை விட்டு, பிறந்த ஊரை விட்டு பிரிதல் என்ற வகையில் இன்னல்களையும், 10ம் பாவகம் பாதிக்கப்படுவது வெளியூர், வெளிநாட்டில் ஜீவனம், அடிக்கடி ஜீவன மாற்றம், வரவைவிட செலவுகள் அதிகம், தவறான வழியில் பணம் ஈட்டுதல், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடுதல், என்றவகையில் இன்னல்களையும், 12ம் பாவகம் பாதிக்கப்படுவது, நிறைய வீண் செலவு, சூது மூலம் பேரிழப்பு, திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் தொல்லை, விபத்து  என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், 12ம் வீடு மிதுனத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலும்   கடக ராசியிலே வியாபித்து இருப்பது ஆருடத்தால் சம்பந்தப்பட்ட்டவர் அனுபவிக்கும் மன ரீதியான கடுமையான போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக மனபயம், மனப்போராட்டம், மனக்குழப்பம் ஆகியவற்றை தெளிவு படுத்துகிறது.

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து இன்ஷுரன்ஸ் மூலம் லாபம், குடும்பத்தில் இன்னல்கள்,  வாக்கு தவறும் தன்மை, வருமான பாதிப்பு என்ற வாழ்க்கையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தி அற்ற மன நிலை, அனைத்தையும் திடீரென இழக்கும் தன்மை எல்லாவகையிலும் இன்னல்களை தரும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்நதம் பெறுவது, (  எதிர்காலம் ஒன்று இல்லை என்பதை பாதக ஸ்தான தொடர்பு தெளிவுபடுத்துகிறது ) சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத தன்மை, வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாமல் வீணடிக்கும் தன்மை, தனது வாழ்க்கைக்கு தானே எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளும் தன்மை, குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாததால் வரும் இன்னல்களுக்கு தீர்வு காண இயலாமல் சிரமப்படும் தன்மை, விதி தரும் இன்னல்களில் இருந்து விடுபட முடியாமல் இன்னலுறும் தன்மை, சுய அறிவு இன்றி  மற்றவர்கள் அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, துரதிர்ஷ்ட வாழ்க்கை, எதிர்காலம் சூன்யம் ஆகுதல், பிற்போக்கு தனமான செய்கைகள், தன்னம்பிக்கை இன்மை, அவநம்பிக்கையினால் எதிர்கால வாழ்க்கையினை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, அனைத்திலும் தோல்வி என்ற வகையில்  அவயோகத்தையும் வழங்கு, மேலும் பாதக ஸ்தானம் என்பதால் 200 சதவிகித இன்னல்களை தரும்,  ஆரூடத்தில் 1,5,9ம் பாவகங்கள் வலிமை அற்று  இருப்பது மிக மோசமான விளைவை தரும் அமைப்பாகும், இந்த நிலை 17/12/2020 வரை நீடிக்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சனிமஹா திசை சுபத்தை தருமா ? அசுபத்தை தருமா ? சுய ஜாதக வலிமை நிலை என்ன ?


கேள்வி :

எனக்கு சனிதிசை சுபத்தை தருமா? அசுபத்தை தருமா?  கிரக பரிவர்த்தனை யோகம் சிறப்பா? தெளிவுபடுத்துங்கள்.

பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், மேலும் நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேற்கண்ட ஜாதகரின் கேள்விகளுக்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


சுய ஜாதக வலிமை நிலை :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகர் 1,5,9,11ம் பாவக  வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை அனுபவிப்பர்.

2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை பெரிய அளவில் தரும்.

சனி மஹாதிசை தரும் பலன்கள் : ( 14/01/2017 முதல் 14/01/2036 வரை )

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு 2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம்,குடும்பம்,தனம் சார்ந்த இன்னல்களை தரும், மேலும் எதிர்பாராத செலவினங்கள், திடீர் விரையம் என ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், கடன் பெறுவது கொடுப்பது இன்னல்களை தரும், எதிரிகளால் அதிக தொந்தரவு, உடல் நல குறைவை ஏற்படுத்தும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், விபத்து, திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இருப்பினும் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு எதிர்பாராத இன்னலைகளை கடுமையாக தரும், என்பதால் சனிமகா திசை தங்களுக்கு அவயோகத்தையே தருகிறது.

கிரக பரிவர்த்தனை யோகம் :

பெரும்பாலும் கிரக பரிவர்த்தனை மிகுந்த நன்மைகளை தரும் என்பது பொது கருத்து, கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிவிட வாய்ப்பு இல்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையிழந்து காணப்பட்டால், எவ்வித பரிவர்த்தனை யோகமும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்குவதில்லை, உதாரணமா மேற்கண்ட ஜாதகருக்கு செவ்வாய் வீடான மேஷத்தில் சுக்கிரனும் ( மேஷத்தில் உள்ள 7ம் பாவகத்தில் சுக்கிரனும் ) சுக்கிரன் வீடான ரிஷபத்தில் செவ்வாயும் ( ரிஷபத்தில் உள்ள 8ம் பாவகத்தில் செவ்வாயும் ) அமர்ந்து இருப்பது யோக பலன்களை வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, இருப்பினும் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சுக்கிரன் செவ்வாய் இருவரும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், ஆனால் இதைமட்டும் கருத்தில் கொண்டு பரிவர்த்தனை யோகம் நன்மையை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பாதக ஸ்தானம் ஏறிய சுக்கிரன் ( களத்திர ஸ்தானம் ) ஜாதகருக்கு மேற்கண்ட பாதக ஸ்தான பலனையும் தரக்கூடும்.

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளும் யோகங்களும் நடைமுறைக்கு வரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களே நடைமுறைக்கு வரும்.

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம்  பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளையும், துன்பங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை, திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு பாதக ஸ்தானம் சார்ந்த இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

குறிப்பு :

ஜாதகருக்கு சனி திசை கடுமையான பாதிப்பை தரும் நிலையில் இருப்பதால், முறையான ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக, மேலும் அன்னதானம் செய்வது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 9 ஜனவரி, 2017

ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன?


 கேள்வி :

எதிர்வரும்  ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன? எனது ஜாதகப்படி எதிர்காலம் எப்படி இருக்கும்? சற்று மனபயமும் குழப்பமாகவும் உள்ளது, இதற்க்கு சரியான தீர்வு வேண்டுகின்றேன்.

பதில் :

கடந்த தலைமுறையினரை சார்ந்த அன்பர்களின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை சரியாக தெரியாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் முதல் எழுத்தை கருத்தில் கொண்டும், நாம நட்ஷத்திரம் கண்டறிந்து அதன் மூலம் ராசியை அடிப்படையாக கொண்டு சம்பந்தபட்ட நபருக்கு ராசி பலன் கண்டு, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான அறிவுரைகளை ஜோதிடர்கள் வழங்கினார், இது கடந்த தலைமுறையினருக்கு ஓரளவு மன ஆறுதல்களையும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் ஏற்பட்ட செய்தது, தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இந்த பிரச்சனை 100% விகிதம் இல்லை எனலாம், ஏனெனில் ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை அனைவருக்கும் சரியாக தெரிந்து இருக்கின்றது,( இன்னும் ஒருபடி மேலே சென்று மக்கள் தமக்கு பிறக்கும் குழந்தையை நல்ல நேரத்தில் அறுவை சிகிசிச்சையின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர், இது எந்தளவுக்கு சரி என்பது ஆய்வுக்கு உற்ப்பட்டது ) இவற்றின் துணை கொண்டு ஒருவருக்கு மிக துல்லியமாக சுய ஜாதகத்தை கணிதம் செய்து விடலாம், இதை ஓர் கணினி சில நொடிகளில் செய்து விடுகிறது, கால மாற்றத்தில் தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம், எனவே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணவேண்டிய கட்டாயம் இந்த தலைமுறையினருக்கு இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவரது லக்கினம் தெரியும் பொழுது, ராசியை அடிப்படையாக கொண்டு பலன்காண வேண்டிய கட்டாயமும் இல்லை, எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் எனும் முது மொழிக்கு ஏற்ப, சுய ஜாதகத்தில் சகல விஷயங்களையும் கட்டுப்படுத்துவதும், யோக அவயோக, நன்மை தீமை பலன்களை வழங்குவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையே என்றால் அது மிகையாகாது, மேலும் ஒருவரது சுய ஜாதகத்தை கொண்டு பலன் காண முற்படும் பொழுது சந்திரன் அமர்ந்த ராசியை கொண்டு பலன் காண வேண்டிய அவசியமில்லை என்பதை இந்த பதிவில் தெளிவாக விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் :

1) சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகர் பிறந்த லக்கினத்தை கொண்டே பலன் காணலாம் எனும் பொழுது, சந்திரன் நின்ற ராசிக்கு உண்டான பலாபலன் பற்றி நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை, நமக்கு சுய ஜாதகம் இல்லாதா நிலையிலே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணலாம்.

2) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் பொழுது, ஜாதகருக்கு உள்ள யோகம் மற்றும் அவயோகம் பற்றிய ஒரு தெளிவும், இதனால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மை தீமை பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

3) நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகர் நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தரும் யோக அவயோகம் மற்றும் ஜாதகர் பெரும் நன்மை தீமையை பற்றி மிக மிக துல்லியமாகவும் உண்மையாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

4) தற்போழுது நடைமுறையில் உள்ள நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் தரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற கூடிய யோக அவயோக நிகழ்வுகள் மிக துல்லியமாக அறிந்துணர்ந்து, அவரின் வாழ்க்கையில் வரும் யோகங்களை ஏற்று கொள்ளவும், அவயோகங்களை கிரகித்து கொள்ளவும் அறிவுரைகளை நிச்சயம் வழங்க முடியும்.

5)  மேற்கண்ட முறையில் லக்கினத்தை கொண்டு ஒருவருக்கு துல்லியமான சுய ஜாதக பலன் காண்பது போல், சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டும், நாம நட்ஷத்திர ராசியை கொண்டும் ஒருவருக்கு  நிச்சயம் துல்லியமான பலன் காண இயலாது என்பதை உறுதி படுத்துகிறோம், ஒருவேளை ராசியை வைத்து பலன் கண்டு அது சரியாக இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே அமையும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகருக்கு  ஜோதிடர்கள் அறிவுறுத்திய விஷயம், ஜாதகர் மகர ராசி என்பதனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி ஏழரை சனியாக அமைவதால், ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும், இதனால் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும், தங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்காது, கடன் தொந்தரவு அதிகரிக்கும், திடீர் விபத்து மூலம் வீண் மருத்துவ செலவுகள் வரும், சண்டை சச்சரவு, வம்பு வழக்கு, உடல் நல பாதிப்பு , உறவுகள் மனகசப்பு, குழந்தைகள் வழியில் இன்னல்கள் என கடுமையான இன்னல்களை எதிர் வரும் ஏழரை சனி தரும், என்று சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டு, ஜாதக ஆலோசணை வழங்கப்பட்டு இருக்கின்றது, இனி அவரது சுய ஜாதகத்தை கொண்டு அவரது சுய ஜாதக வலிமை, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக பலன்கள் தரும் நன்மை தீமை, அதற்க்கு கோட்சார கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், இதனால் ஜாதகர் 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இனிமையான குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறமையையும் தரும், தனம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் ஜாதகருக்கு வாராது.
6,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6,8,9,10ம் பாவக வழியில் இருந்து 70% விகித சுபயோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4,12ம் பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான 70% விகித இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியிலான பாதிப்பை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் ஜாதகர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் இருப்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகம் 95% விகித மிக மிக வலிமையுடன் உள்ளது என்பதால், முழு அளவிலான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை கொண்டவர் என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது குரு மஹா திசை ( 23/03/2013 முதல்  23/03/2029 வரை ) நடைபெறுகின்றது, தனது திசையில் குரு பகவான் ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துகின்றார், இதானால் ஜாதகர் ஜீவன வழியில் நல்ல முன்னேற்றமும், கவுரவம் மற்றும் அந்தஸ்த்து குறையாத யோக வாழ்க்கையையும் பெறுவார் மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் தனது தொழில் ரீதியாக பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே குரு திசை முழுவதும் ஜாதகருக்கு ஜீவன வழியிலான நன்மைகளே நடைபெறும், தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ( 12/05/2015 முதல் 22/11/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, சனி புத்தியும் ஜாதகருக்கு  6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகின்றார், எனவே ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், சனி புத்தியும் வலிமை பெற்ற 6,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குரு திசையில் அடுத்து வரும் புதன் புத்தி ( 22/11/2017 முதல் 28/02/2020 வரை ) தனது புத்தியில் 1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜயோக பலன்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும், குரு திசையில் கேது புத்தி ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான திடீர் அதிர்ஷ்டங்களையும், குரு திசையில் சுக்கிரன் புத்தி  8,9ம் வீடுகள்  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக வழியில் தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டத்தையும், 9ம் பாவக வழியில் சமூக அந்தஸ்து மற்றும் பெயரும் புகழையும் ஜீவன ரீதியாக வழங்கும். எனவே ஏழரை சனி நடைபெறும் நேரமான ஏழரை வருடமும் ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளே சுய ஜாதக ரீதியாக நடைபெறுகின்றது என்பது உறுதியாகிறது அன்பர்களே, மேலும் தற்போழுது நடைபெற இருக்கின்ற சனி பெயர்ச்சி மேற்கண்ட திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு சம சப்த்த பார்வையாக சனி பகவான், தனது வர்க்க கிரகமான புதனுக்கு உரிய மிதுன ராசியை வசீகரித்து, ஜாதகருக்கு மென்மேலும் ஜீவன ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகுந்த லாபத்தை தரும், வியாபார விருத்தி, செல்வச்செழிப்பு என்ற வகையில் ஜீவன ஸ்தானத்தை வசீகரிக்கும் கோட்சார சனி ஜாதகருக்கு நன்மையே செய்கின்றார் என்பதும் உறுதியாகிறது.

எனவே எதிர்வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ( மகர ராசிக்கு ஏழரை சனி என்ற வாதம் சுய ஜாதகம் வலிமை பெறுவதாலும், நடைபெறும் திசாபுத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும் எடுபடாது ) மேற்கண்ட ஜாதகருக்கு எவ்வித துன்பமும் சிறிதும் இல்லை என்பதே சுய ஜாதக ரீதியான உண்மை நிலை என்பதை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :

 ஒருவரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தாலோ, தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்தாலோ, கோட்சார கிரகங்களினால் யாதொரு பாதிப்பு இருக்காது என்பதே உண்மை நிலை, மேலும் சந்திரன் நின்ற ராசியை வைத்து பலன்காண முற்படுவது சம்பந்தப்பட்ட நபரின் மனம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பாதிக்கும், சுய ஜாதக வலிமையை சிறிதும் பாதிக்காது என்பது 100% விகித உண்மை என்பதை இங்கே "ஜோதிடதீபம்" பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 7 ஜனவரி, 2017

தொழில் நிர்ணயம் : சுய தொழில் செய்வதற்கு ( பால் பண்ணை ) ஏற்ற ஜாதகமா ?


கேள்வி :

புதியதாக சுய தொழில் துவங்கலாம் என்று இருக்கின்றேன், எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா? குறிப்பாக பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா? தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா? சற்று விரிவான விளக்கம் தரவும்.


லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம் 

பதில் :

" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒருவர் செய்யும் தொழில், அவருக்கு சமூகத்திலும், உறவுகள் வழியிலும் மிகுந்த மதிப்பு மரியாதை மற்றும் கௌரவத்தை பெற்று தரும் என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தாம் பெற்ற தொடர்புகளுக்கு ஏற்ற நன்மை தீமை பலன்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும், இதில் ஒருவரது ஜீவன ( சுய தொழில் ) வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை மட்டும் அல்ல, மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்வதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு பொருத்தமான வெற்றியை நல்கும் தொழில் எது? என்பதனையும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் என்ன? என்பதனையும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) நான்கு கேந்திரங்களான ( 1,4,7,10 ம் ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்க அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சுய உழைப்பு, தொழில் மீது ஜாதகர் காட்டும் ஆர்வம், தொழில் நுணுக்கம் ஆகியவற்றை ஜாதகர் கிரகித்துக்கொள்ளும் பேராற்றல் என ஜீவன ஸ்தான வெற்றியை நிர்ணயம் செய்ய லக்கினம் வலிமை பெறுவது மிக முக்கியமாகிறது, சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வழியில் பயன்படுத்திடும் உபகரணங்கள் சார்ந்த அறிவு, அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள், தொழிலார்களிடம் காட்டும் இணக்கம் மற்றும் நல்ல குணம், வண்டி,வாகனம், இடம் மற்றும் தொழில் ஸ்தாபனம் மூலம் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றி சுக ஸ்தானமே நிர்ணயம் செய்யும்.

 களத்திர ஸ்தானம் வலிமை ஜாதகர் செய்யும் தொழிலில் கூட்டு முயற்ச்சி, கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் யோகம், வியாபார விருத்தி, பொதுமக்களுடனான அறிமுகம், ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஜாதகர் பெரும் யோகம், பிரபல்ய யோகம் என ஜாதகர் செய்யும் தொழில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற களத்திர ஸ்தான வலிமை அவசியமாகிறது, ஜீவன ஸ்தான வலிமை ஜாதகர் தான் செய்யும் தொழில் மீதான ஈடுபாடு மற்றும் அக்கறையை காட்டும், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்றவர்தானா? என்பதை நிர்ணயம் செய்வதே ஜீவன ஸ்தான வலிமைதான், மேலும் ஜாதகர் செய்யும் தொழில் வெற்றியினை 100% விகிதம் நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தான வலிமையே என்றால் அது மிகையில்லை, தொழில் வழியில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள், சரியான தனக்கு உகந்த தொழில் தேர்வு, ஸ்திர தன்மையிலான விருத்தி, எந்த சூழ்நிலையிலும் தனது தொழிலை திறம்பட நடத்தும் நிர்வாக திறமை, தனது கட்டளைக்கு அனைவரையும் அடிபணிய செய்யும் வல்லமை, தனது செயல்கள் மூலம் சிறப்பாக தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் யோகம், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளும் தனித்திறமை என, ஒருவரது ஜீவன வாழ்க்கையில் பெரும்பாலான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டுவர சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அவசியமாகிறது.

2) கோண ஸ்தானங்களான ( 5,9 ம்  ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக அறிவு பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும், சரியான தொழில் தேர்வை செய்வதற்கு அடிப்படையாக விளங்குவது  மேற்கண்ட பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான தொழிலை தேர்வு செய்து அதில் மிகுந்த நஷ்டத்தை அனுபவிக்கும் நிலையை தாராது, சரியான நபர்கள், சரியான தொழில் எது என்பதனை மிக துல்லியமாக ஜாதகருக்கு உள்ளுணர்வாக உணர்த்துவது மேற்கண்ட பாவகங்களின் வலிமையே, பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும், காலநேரம் அறிந்து செயல்படும் நேர்த்தியான ( smart work ) வேலைபாட்டினை வாரி வழங்கும் வல்லமை கொண்டது, பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான அனுபவத்தையும், வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும், தனது தொழில் வளர்ச்சிக்கான சரியான நபர்களை தன்னுடன் இணைத்து வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு அதிகம் உண்டு, மேலும் தனது தொழில் ரீதியான நற்ப்பெயரை பொதுமக்கள் மனதில் வேரூன்ற செய்யும் வல்லமையும் இந்த பாக்கிய ஸ்தானத்திற்கு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமைபெறுவது சம்பந்தபட்ட ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும்.

3) சுய ஜாதகத்தில் ( 2,6,8,12 ம் ) பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமான வாய்ப்பு, பேச்சு திறன், வாக்கு வன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் குறுகிய கால லாபங்களை, சத்ரு வழியில் வரும் வெற்றிகளையும், 8ம் பாவக வழியில் இருந்து செய்தொழிலில் கிடைக்கும் புதையலுக்கு நிகரான வருமானத்தையும், 12ம் பாவக வழியில் செய்த முதலீடுகள் வழியில் இருந்து பெரும் மிதமிஞ்சிய லாபங்களை குறிக்கும், தானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவை மேற்கண்ட பாவக வலிமையே நிர்ணயம் செய்யும்.

4) சுய ஜாதகத்தில் ( 3,11 ம் ) பாவகங்கள்  வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு, 3ம் பாவக வலிமையே ஜாதகர் எடுக்கும் முயற்சிகளில் பெரும் வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் தரும், சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட 3ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, 11ம் பாவக வலிமை செய்தொழில் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் லாபங்களை குவிக்கும் யோகம், நீடித்த அதிர்ஷ்டம், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் யோகம் என சகல யோகங்களையும் ஜாதகருக்கு ஜீவன ரீதியாக வாரி வழங்கும்.

5) மேற்கண்ட பாவக வலிமையுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசைகளும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதானால் யாதொரு இன்னல்களும் ஏற்படாது, நடைபெறும் திசை தரும் நன்மையான பலாபலன்களை ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை அனுபவிக்க செய்யும் என்பது கண்கூடான உண்மை.

ஜாதகரின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

1) எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா?

நிச்சயமாக ஏற்றது, ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.

2) பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா?

சுய ஜாதகத்தில் சர நீர் தத்துவ ராசியான கடகம் 100% விகிதம் வலிமை பெற்று லாப ஸ்தானமாக அமைவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம்  ராசியாகவும் அமைவதால் பால் பண்ணை வியாபாரம் தங்களுக்கு மிக பொருத்தமான தொழிலாக அமையும், மேலும் ஸ்திர நீர் ராசியான விருச்சிகம் மற்றும்  உபய நீர் ராசியான மீனமும் வலிமை பெற்று இருப்பது தங்களை இந்த தொழிலில் கொடிகட்டி பறக்க வைக்கும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு இந்த தொழில் மிக மிக லாபகரமாக அமையும்.

3) தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா?

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், அதில் சிறிதளவும் மாற்றம் இல்லை, மேலும் உதாரணம் சொல்ல வேண்டும் எனில் Amul நிறுவனம் பெற்ற வெற்றிக்கு ஒப்பான தொழில் முன்னேற்றத்தை தங்களுக்கு வாரி வழங்கும். தொழில் துவங்க இதுவே காலதாமதம் என்று சொல்லவே "ஜோதிடதீபம்" கடமைபட்டுள்ளது.

தற்போழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் புதன் திசை ( 09/12/2001 முதல் 09/12/2018 வரை ) 1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பெரிய அளவிலான வெற்றிகளை தரவில்லை என்ற போதிலும், எதிர்வரும் கேது திசை ( 09/12/2018 முதல் 09/12/2025 வரை ) தங்களுக்கு 2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் யோக பலன்களை தருவதாலும், இதுவே தங்கள் சுய தொழில் துவங்க சரியான நேரம், மேலும் தற்போழுது நடைபெறும் புதன் திசை சனி புத்தியும்  2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது சுய தொழில் துவங்குவதற்கு உண்டான நல்ல வாய்ப்பை வாரி வழங்கும், மேலும் கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ( 09/12/2025 முதல் 09/12/2045 வரை )  4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 100% விகித யோக பலனையே தருவது தங்களுக்கு செய்யும் தொழில் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும் வாரி வழங்கும், எனவே காலதாமதம் இன்றி உடனடியாக சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுங்கள், இறைஅருள் தங்களுக்கு துணை நிற்கும் "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடகம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கடகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கடக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், கலியுக வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் கடக ராசியினை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவானால், தங்களின் சிந்தனை மற்றும் அறிவு திறன் எதுவும் தங்களுக்கு பயன்படாமல், வாழ்க்கையிலும் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான சிரமங்களை அனுபவித்திருக்க கூடும், ஆனால் தற்போழுது  சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கும் சனிபகவான் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்க இருக்கின்றார் என்பது, சனி பெயர்ச்சி தரும் வரப்பிரசாதம் ஆகும்.

6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு திடீர் அந்தஸ்து மற்றும் உயர்பதவியை வாரி வழங்குவார், குறுகிய கால முன்னேற்றங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், போட்டி பந்தயம், தேர்வு தேர்தலில் வெற்றி உண்டாகும், சட்ட ரீதியான உதவிகள் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், உடல் நலம் மிக சிறப்பாக அமையும், வெகுநாள் உடல் தொந்தரவுகள் தங்களுக்கு நீங்க அதிக வாய்ப்பு உண்டு, கேட்ட இடத்தில் இருந்து தனஉதவிகள் வந்து சேரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், திடீர் தன பிரப்பர்த்தி, வங்கிகள் வழியிலான உதவிகள் தங்களுக்கு விரைவாக கிடைக்கும், சகல விதமான முயற்சிகளுக்கும் நல்ல வெற்றி கிட்டும், கல்வியில் நல்ல முன்னேற்றமும், உயர்கல்வி மற்றும் பட்டைய படிப்பு மூலம் சமூக அந்தஸ்து உயரும், அதன் வழியில் நல்ல வேலைவாய்ப்பும், புதிய தொழில் அமையவும் அதிக வாய்ப்பு உண்டு, புதிய வீடு வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, தங்களது முன்னோர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்க பெறுவீர்கள், எதிர்ப்பவர்கள் அனைவரும் செயல் இழந்து நிற்ப்பார்கள், எதிர்ப்புகள் அனைத்தும் "சூரியனை கண்ட பனிபோல்" விலகும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து சனி பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார்.

11ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், தன்னம்பிக்கையும் மனஉறுதியும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் மனமகிழ்சியும், இல்லற வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, இதுவரை திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த வரன் வதுவிற்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்து மிக பொருத்தமான வாழ்க்கை துணையை அடைவீர்கள், கைநிறைவான வருமான வாய்ப்புகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவும் தங்களின் வாழ்க்கையில் புதுவிதமான உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்ச்சியங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றும் வல்லமையும் உண்டாகும், அபரிவிதமான பேச்சு திறன் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, கலைகளில் ஈடுபாடு, திடீர் பிரபல்ய யோகம் என மக்கள் செல்வாக்கையும் வாரி வழங்கும், கலைத்துறைகளான இயல்,இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளையும் அளவில்லா   முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்குவார், புதிய சொத்துக்கள் அல்லது வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, சமூகத்தில் மக்கள் ஆதரவின் மூலம் தங்களுக்கு பொறுப்பு மிக்க பதவிகள் தேடிவரும்.

12ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகள் வழியிலான பெரும் செல்வ சேர்க்கையை பெறுவதற்கு வழிவகை செய்வார், நெடுநாள் முதலீடுகள் வழியிலான அளவில்லா வருமானங்களை பெறுவதற்கு உண்டான யோக நேரம் இதுவாகும், தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றிகளை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமிது, கமிஷன் தரகு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஈடுபடுவோருக்கு அபரிவிதமான முன்னேற்றம், சரளமான பணவசதி வாய்ப்புகள் வந்து சேரும், எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் தங்களுக்கு வெற்றிவாய்ப்பை நல்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுகபோகங்களும், ஆன்மீகத்தில் வெற்றியும் உண்டாகும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள், சுக ஜீவனத்திற்கு யாதொரு குறைகளும் இல்லை எனலாம், தாங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆன்மீக பெரியோர் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை தடையின்றி பெரும் யோகம் உண்டாகும், முன்னோர்களின் சொத்துக்கள் மற்றும் சகோதரர்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டாகும், தங்களின் மனதில் உள்ள அனைத்து ஆசைகளும் தடையின்றி நிறைவேறும், இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு மிக பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

3ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, சகோதர வழி ஆதரவும், சீரிய முயற்சியிலான வெற்றிகளையும் வாரி வழங்குவார், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பையும் நல்குவார், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தியும், வியாபார விருத்தியும் உண்டாகும், தன்னிறைவான பண வசதி தங்களை தேடி வரும், நிதி நிறுவனம் மற்றும் வட்டி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எதிர்பார்த்த வருமான வாய்ப்புகளையும், சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்குவார், புதிய நண்பர்களின் அறிமுகம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை தரும், செல்வந்தர்களின் ஆதரவும், உதவியும் தன்னிறைவாக தங்களுக்கு கிடைக்கும், புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான யோக காலமாக சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு அமையும், மண்ணில் கிடைக்கும் பொருட்கள் வழியிலான விருத்திகள் அதிகரிக்கும், குறிப்பாக சுரங்க பொருட்கள், உலோக பொருட்கள், உயர் மதிப்பு கொண்ட உலகம் மற்றும் ரத்தினங்கள் மூலம் எதிர்பாராத லாபங்களை கடக லக்கின அன்பர்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு, விவசாயம் அல்லது உணவு பொருட்கள் சார்ந்த தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை சனி பகவான் வாரி வழங்குவார், தங்களுக்கு இதுவரை இருந்த வந்த இன்னல்கள் யாவும் மறைந்து, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும், கடக லக்கின அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

 கடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 6,11,12,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  6,11,12,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696