திங்கள், 29 ஏப்ரல், 2024

குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் ( 2024 - 2025 )

 


தேவகுரு, பிரகஸ்பதி, புத்திரகாரகன்,  நான்கு வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவரான முழு முதற் சுபகிரகம் குருபகவான் எதிர்வரும் 01/05/2024 அன்று "அபிஜித் முகூர்த்த" சுப வேளையில் சரியாக மதியம்  11:58 மணிக்கு தனது எதிர்வர்க்க கிரகமான சுக்கிர பகவான் வீடான ரிஷப ராசியில் பிரவேஷம் செய்து இனிவரும் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், குரு பகவான் தனது வர்க்க கிரகமான சூரியனின் "கார்த்திகை" நட்சத்திரத்தில் சஞ்சாரத்தை ஆரம்பிக்கும் பிருகஸ்பதி தொடர்ந்து வருடம் முழுவதும் தனது வர்க்க கிறக்கங்களான சந்திரனின் "ரோகிணி மற்றும் செவ்வாயின் மிருகசீரிட" நட்சத்திரத்திலும் 14/05/2025 வரை சஞ்சாரம் செய்ய இருக்கின்றார். 

தனது சஞ்சார நிலையில் இருந்து முழு முதற் சுப கிரகமான "குருபகவான்" மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் வழங்கும் சுபயோக பலாபலன்கள் என்ன என்பதை பற்றி இனி வரும் பதிவுகளில் மிக துல்லியமாக கண்டுணர்வோம் "ஜோதிடதீபம்" அன்பர்களே !

மேஷராசி 

ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த "குரு பெயர்ச்சியின்" மூலம் மிகப்பெரிய அளவிலான தனசேர்க்கையையும், பொருளாதார வளர்ச்சியையும், வாக்கு பலிதத்தையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், திருமண யோகத்தையும், சந்தான பாக்கியத்தையும், தொழில் முன்னேற்றங்களையும், சொத்து சுக சேர்க்கை மற்றும் அரசியல், அரசு அதிகாரத்தையும் 100% விகிதம் சுவீகரிக்கும் ராசியினர் மேஷ ராசியினரே என்றால் அது மிகையாகாது, தனது வாழ்க்கையில் இதுவரை திறமை இருந்தும் முன்னேற்றம் பெற இயலாமல் சூழ்நிலை கைதியாக இருந்த மேஷ ராசியினர் இனிவரும் காலங்களில் சுதந்திர பறவையாக சிறகடித்து பறக்கும் யோக வாழ்வை "குருபகவான்" நிறைவாக வாரி வழங்குகிறார், தங்களின் லட்சியங்களுக்கு தடையாக இருந்தவை அனைத்தையும் தகர்த்தெறிந்து வெற்றிகளை அறுவடை செய்யும் நேரமிது என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் சகல நலன்களை தயக்கமின்றி பெறுங்கள்.

உடல்நலம் தங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கும், மனவலிமை மிக சிறப்பான காரியங்களை வெற்றிகொள்ள ஆதரவை தரும், தெளிவான சிந்தனை துல்லியமான வாத திறமை தங்களின் செல்வாக்கை அதிகரிக்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், புலமையும் உண்டாகும், அடிப்படை கல்வி, உயர் கல்வி, பட்டய படிப்பு, வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் என இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வெகு சிறப்பாக உண்டு, மேலும் அறியகலைகளில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான உலக புகழையும் பெற்று நற்பெயர் பெறுவீர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு உண்டு, உறவுகள் ஓடி வந்து உதவி புரிவார்கள், சமுதாயத்தில் உள்ள பெரியமனிதர்கள் ஆதரவு தேடி வரும், தெய்வீக அனுகிரகம் உண்டாகும், ஜோதிட துறையில் புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும், மருத்துவம், அரசியல், காவல், ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இது, எதிர்பாராத பதவி உயர்வு, வருமான உயர்வு, இடமாற்றம் மூலம் நலம் பெறுதல், தன்னிறைவான பொருளாதார சேர்க்கை என சகல சௌபாக்கியங்களும் இந்த குரு மாற்றம் தங்களுக்கு வாரி வழங்கும்.

தனது ஐந்தாம் பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) எதிர் வர்க்க கிரகமான புத பகவான்  வீடான "கன்னி" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் அதீத வெற்றிகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க தக்கது, இருப்பினும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அடிமை தொழில் அல்லது கூட்டு தொழில் புரிவோருக்கு இனிவரும் காலம் மிக சிறப்பான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், தனது சுய முயற்சியில் முழுமையான வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம் உண்டு, விவசாயம் மற்றும் விவசாய தொழில் புரிவோருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல லாபம் உண்டாகும், இதுவரை இருந்து வந்த கடன்கள் நீங்கும், வருமானம் அதிகரிக்கும், சிறு தொழில் செய்வோருக்கு தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், பொது மக்கள் தொடர்பு உள்ள தொழில்கள் விருத்தி பெரும், விவசாயம் செழித்தோங்கும், பண்ணை தொழில் சிறப்பான வளர்ச்சியை பெரும், தொழிலாளர் துறையில் உள்ள அன்பர்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும், கூட்டுறவு மற்றும் கூட்டு முயற்சி சார்ந்த நிலைகளில் அபரிவிதமான நன்மைகளும், லாபங்களும் உண்டாகும், கேட்ட இடங்களில் இருந்தெல்லாம் பண உதவி கிடைக்கும், கடன் பெற இயலும், இருப்பினும் மற்றவர்களுக்கு  ஜாமீன் போடுவது என்பது தங்களின் முன்னேற்றத்திற்கு தாங்களே தடையை ஏற்படுத்தி கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர அற்புதமான வாய்ப்புகளை குருபகவான் தங்களுக்கு தொடர்ந்து வாரி வழங்குவர் தங்கள் விழிப்புணர்வுடன் இருந்து நலம் பெறுவது அவசியமானது, கடின உழைப்பால் உங்களுக்கான  அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் பெற்று மகிழும் அற்புதமான நேரமிது, எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், எதிரிகள் வழியிலான சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் அற்புதமான நேரமிது, சத்ரு ஸ்தான வழியில் சௌபாக்கியங்கள் வந்து சேரும்.

தனது சமசப்த பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவான்  வீடான "விருச்சிக" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு திடீர் தன சேர்க்கையை புதையலுக்கு நிகராக வழங்குவதுடன், திருமண யோகத்தையும் நல்குவது கவனிக்கத்தக்கது, குறிப்பாக மேஷ ராசி பெண்களுக்கு திடீர் திருமண யோகம் உண்டு என்பதுடன், நல்லதொரு ஆண் வாரிசும் அமையும், வெளிநாடு யோகம்  கல்வி அல்லது வேலை வாய்ப்பை வெளிநாடுகளில் திடீரென சுவீகரிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குகிறார், தங்களது வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்கள் இனிவரும் காலங்களில் தங்களுக்கு சிறப்பு கவுரவம் மற்றும் அந்தஸ்த்தை நல்கும், அயல் தேச பயணங்கள் தங்களுக்கு மேலும் சிறப்பு மிக்க தொழில் வளர்ச்சியை நல்கும், எதிர்பாலின சேர்க்கை வழியிலான நன்மைகள் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடி வரும், இதுவரை இருந்து வந்த மனஅழுத்தம் மனப்போராட்டம் நீங்கி, தெளிவான சிந்தனையை பெறுவீர்கள், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு உயரிய பதவிகளை பெற்று தரும், சமூக மதிப்பு, அரசு கௌரவம், அரசியல் பதவிகள் போன்றவை தங்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும், எதையும் துணிச்சலுடன் செய்து வெற்றிகொள்ளும் நேரமிது, கூட்டு தொழில் வழியிலான லாபம் அதிகரிக்கும், விவசாய தொழில் புரிவோருக்கு மிகுந்த அதிர்ஷ்டம் உண்டு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு துறையில் உள்ளவர்கள் மிகுந்த லாபம் அடைவர், நெசவு தொழில் மற்றும் கைவினை தொழில் புரிவோர் மிகுந்த நன்மைகளை பெறுவர், ஆன்மீக வெற்றி உண்டு, உணவு தொழில் அல்லது உணவகம் நடத்துவோருக்கு எதிர்பாராத வருமான வாய்ப்பும் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் சிகிச்சை உபகரணம் தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றுவோருக்கு இடமாறுதல், பதவி உயர்வும் உண்டாகும், ஓர் வலிமை மிக்க நபராக தங்களை குரு பகவான் பிரகாசிக்க வைப்பார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

 தனது ஒன்பதாம் பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) எதிர் வர்க்க கிரகமான சனி பகவான்  வீடான "மகர" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு ஸ்திர தன்மையான தொழில் அல்லது வேலைவாய்ப்பை  நல்குவார், இதுவரை இருந்து வந்த தொழில் சார்ந்த இன்னல்கள் நீங்கி நலம் பெறுவீர்கள், நிரந்தர தொழில் அமையும், தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றங்களை பெறுவீர்கள், நிர்வாக திறன் வெகு சிறப்பாக வெளிப்படும், தங்களது நிறுவனம் பலமடங்கு வளர்ச்சியை இந்த நேரத்தில் தங்குதடையின்றி பெற்றிடும், நல்ல பணியாட்கள் அமைவார்கள், தொழிலார் ஒற்றுமை மற்றும் ஆதரவு தங்களுக்கு சாதகமாக மாறும், நிறுவனத்தின் மீதான கண்ணோட்டம் தங்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும், சமுதாயத்தில் நற்பெயரும், கவுரவமும் அதிகரிக்கும், எதிர்பாராத முதலீடுகள் தங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், மிகப்பெரிய முன்னேற்றங்களையும் நல்கும், தெய்வீக ஆசிர்வாதம் அல்லது ஆன்மீக சுற்றுலாக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சென்றுவர வாய்ப்பு வந்து சேரும், ஆன்மீக பெரியோர்கள் ஆசீர்வாதம் அல்லது புண்ணிய திருத்தலம் சென்று வரும் யோகமும் உண்டு, உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள், தங்களது துறை சார்ந்த அறிவு திறன் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய வாய்ப்புகள் தங்களின் முன்னேற்றத்திர்க்கு உறுதுணையாக அமையும், பயணங்கள் மூலம் தொழில் விருத்தி உண்டு, பித்ரு வழிபாடு வழியில் தங்களுக்கான சுபயோகங்கள் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள், ஆன்மீக வெற்றியின் மூலம் சகல சௌபாக்கியங்களையும் இனிவரும் காலங்களில் முழுமையாக சுவீகரிக்கும் யோகமுண்டு.

குறிப்பு :

மேஷ ராசி அன்பர்களே தங்களின் சுய ஜாதகத்தில் 2,6,8,10ம் பாவக பலன்கள் தற்போழுது நடைபெற்றால் மேற்சொன்ன அனைத்து சுபயோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, இருப்பினும் தங்களது பிறந்த குறிப்பின் அடிப்படையிலான சுய ஜாதக பலனை கருத்தில் கொண்டு குருபெயர்ச்சியை அணுகுவது சிறப்பாக அமையும், "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696