புதன், 8 பிப்ரவரி, 2012

மனைவி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை ?



தெரிந்தோ தெரியாமலோ நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அய்யா சொன்னது முற்றிலும் உண்மை .


ஒருவனுக்கு இல்லற வாழ்விற்கு துணையாக வரும் இல்லத்தரசி நல்ல குணம் மற்றும் பதிபக்தி, அதிர்ஷ்டம் நிறைந்த அமைப்புடன் வந்தால், அவரது வாழ்க்கை பூலோக சொர்க்கம் இதுவே மாறி அமைந்து விட்டால், ஜாதகனது வாழ்க்கை போராட்டம் மற்றும் பூகம்பம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. 

இதைப்பற்றி சற்றே சிந்தித்தால் கிடைக்கும் பதில் இதுவே :


சுய ஜாதக அமைப்பில் குடும்பம், மற்றும் களத்திரம் எனும் வீடுகள் சிறப்பாக அமைந்த ஒரு ஜாதகனுக்கு நிச்சயம், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், என்பதில் சந்தேகமே இல்லை , 

இதற்க்கு மாறாக அமைந்து விட்ட சில குடும்பங்களில் தனது மருமகள் வந்த நேரம்தான் எங்களது குடும்பம் இப்படி நொடிந்து விட்டது என்று அனைத்து பழியும் மருமகளின், தலையில் விடிந்து விடுகிறது , இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த பெண்ணின் வாழ்க்கையும் , அவளது பெற்றோரும் என்பதை சற்றேனும் மணமகன் வீட்டினர் சிந்திப்பது இல்லை.

இதில் கணவன் மனைவிக்குள் எவ்வித சண்டை சச்சரவு இல்லாதா நிலையிலும், அவர்களது உறவினர்களால் நீதி மன்ற படிக்கட்டுகளில் காத்திருப்போர் ஏராளம் , இது போல் பாதிக்கப்பட்ட தம்பதிகள் அனைவரும் தம்மை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படித்திகொல்லுவது மிகவும் நன்மையை தரும். என்னென்றால் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ அவர்களது குழந்தைகள் தான் என்பது கசப்பான உண்மை 

மேலும் இந்த இயந்திர காலத்தில் அன்பு, பாசம், பரிவு, இறக்கசுபாவம், எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல், ஓடி மறைந்துவிட்டது  இந்த நிலை மாறி தம்பதியர் ஒருவர் மீது ஒருவர்   அன்பு செலுத்தும் பொழுது, இந்த திருமணபந்தம் எவ்வளவு மதிப்பு மிக்கது எனும் உணரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை .

இன்று ஜோதிட ஆலோசனை பெறவந்த  (விவாகரத்து வரை சென்றுவிட்டவர்கள் ) தம்பதிகள் இருவரையும் சேர்த்து வைத்த திருப்தியில்.
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
94433355696 




செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

லக்னாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு நன்மைதானே செய்வர்?

ஜாதகருக்கு சனி.ராகு,கேது,செவ்வாய்...போன்ற தீய கிரகங்கள் லக்னாதிபதியாக வந்தால் அவர்கள் லக்னாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு நன்மைதானே செய்வர்?
(அல்லது)
லக்னம்,லக்னாதிபதி அந்த ஜாதகருக்கு எப்போதும் நன்மைதானே செய்யும்?(அது தீய கிரகமாக இருந்தாலும்)



ஒரு ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையில் தீய கிரகமானாலும் , நல்ல கிரகமனாலும் நன்மையே செய்வார் என்று கொள்வோமானால், சில ஜாதகர்கள், தன் வாழ்வை தானே கெடுத்து கொள்கின்றனர் இது ஏன் ?
 மேலும் இவர்களது ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது லக்கினாதிபதி பாதிப்படைந்து, தனது வீட்டை தானே கெடுத்துக்கொண்டு இருப்பார், 

உதாரணமாக தனுசு இலக்கண ஜாதகருக்கு, குரு பகவான் மிதுனத்தில் நின்று நேரெதிர் பார்வையாக லக்கினத்தை பார்த்தால்.
உண்மையில் எந்த ஒரு ஜாதகருக்கும் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி,
சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு நல்ல அமைப்பில் நின்றால் மட்டுமே நன்மையை செய்கின்றனர் , மாறாக பாதிப்படைந்தால் தனது வீட்டை தானே கெடுப்பவராக மாறி விடுகிறார் .

இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு, ராகு அல்லது   கேது இரு கிரகங்கள்  லக்கனத்தில் உற்காரும் பொழுது மட்டும் , லக்கினாதிபதி கெட்டாலும்,  ராகு கேது கிரகங்கள் லக்கினத்தை வலு சேர்த்து லக்கினம் சிறப்பாக செயல்பட காரணமாக அமைந்து விடுகின்றனர். எனவேதான் ராகு கேது லக்கினத்தில் உள்ளவர்கள் சிலர் அபரிவிதமான முன்னேற்றமான வாழ்க்கையினை பெற்றுவிடுகின்றனர் .

லக்கினத்தில் ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்த ஜாதகங்களை சிலவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டு பார்த்ததில் கிடைத்த உண்மை இது .
 
எந்த ஒரு லக்கினமானாலும், சுய ஜாதகத்தில் லக்கினத்தில்  ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் 100  சதவிகித நன்மையை பெறுவார்  அந்த இலக்கின  ராசி தத்துவத்திற்கு உட்ப்பட்டு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

8 ம் எண் மற்றும் சனி என்ன செய்யும் ?

கேள்வி :

8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்கள் , கூட்டு எண்ணாக 8 ம் எண்  பெற்றவர்களுக்கு வாழ்க்கையில்  மிகவும் சிரம பட வேண்டும் என்றும். குறிப்பாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை எனும் கருத்து பொதுவாக உள்ளது இது உண்மையா ? சனிபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாழ்க்கையில் மிகவும் சிரம பட வேண்டும் என்றும் சொல்லுகின்றனர் இது உண்மையா ?



பதில் :

உண்மையில் ஒரு கிரகத்தை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் பதில் சொன்னால் இது போன்ற தவறான கருத்தே மிஞ்சி நிற்கும்.

8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்கள் , கூட்டு எண்ணாக 8 ம் எண்  கொண்டவர்கள் எல்லோருக்கும் இந்த பலன் நடைபெறுவதில்லை, இந்த என்னை பெற்றவர்கள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளவர்களை நான் கண்டு இருக்கிறேன் .

குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றவர்களில் இந்த எண் அமைப்பை கொண்டவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

தொழில் துறையில் மிகவும் சிறந்து செயல்படக் கூடியவர்கள் இந்த எண்ணை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் விட்டுகொடுக்கும் மனப்பான்மை அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர், நிர்வாக திறமை அதிகம் இவர்களிடம் மறைந்து உள்ளது வாய்ப்பு கிடைக்கும் பொழுது மிகவும் சிறப்பாக செயல் படுகின்றனர்.  

கடுமையான உடல் உழைப்பு , நேர்மை , பணிவு , ஜீவ காருண்யா அன்பு மனித நேயம் , சகிப்புத்தன்மை போதும் என்ற மனம் , மற்றவருக்காக தியாகம் செய்யும் தியாக மனப்பான்மை, போன்ற குணங்கள் இவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுவது மிகப்பெரிய ஆச்சர்யமான விஷயம்.

அதிகமாக இவர்கள் மருத்துவ துறையில் பணியாற்றும் வாய்ப்பினை அதிகம் பெறுகின்றனர். இந்த துறையில் இவர்களது செயல்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியவை ஏனெனில், இரவு பகல் பாராமல் உழைக்கும் குணம் இவர்களது அடிப்படியிலேயே அமைந்து விடுகிறது.

 இந்த 8 ம் எண்ணை பற்றி பார்க்கும் பொழுது இவர்களால் மற்றவர்களுக்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை, ஆனால் மற்றவர்களுக்கு ஏற்ப்படும் துன்பத்தைக்கூட தாம் முன்வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை தருகின்றனர் என்பது முற்றிலும் உண்மை.



இதற்க்கெல்லாம் காரணம் என்ன ஒரு சிறு ஆய்வு :
கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி சனிபகவான் வீடு என்பது 10 ம் வீடாகவும், 11 ம் வீடாகவும் வருகின்றது , இந்தவீடுகள் முறையே சர தத்துவமும்  , நில ராசியாகவும் . ஸ்திர தத்துவமும் காற்று ராசியாகவும் வருகின்றது .


கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி 10 ம் வீடு சனிபகவானின் வீடாக வருவதால் அவர்களை தொழில் துறையில் சிறப்பாக செயல் பட முடிகிறது , மேலும் நில ராசியாகையால் இந்த ராசி அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் இறக்க சுபாவமும் சேவை மனப்பான்மையும் அமைவதில் ஆச்சர்யம் இல்லை .

மேலும் கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி 11  ம் வீடும்  சனிபகவானின் வீடாக வருவதால் மற்றவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுகிறது, ஸ்திர தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நீண்ட நெடுங்காலம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது, மேலும் காற்று ராசி அமைப்பை இந்த ராசி பெறுவதால் இவர்களின் அறிவு பூர்வமான செயல் பாடுகளால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர், எனவே சனிபகவானின் பரிபூரண அருள் பெற்ற இவர்கள் அனைவரும் போற்றுதலுக்கு  உரியவர்கள் என்பதே உண்மை .
மேலும் ஒருவரது ஜாதகத்தில் சனிபகவான் பாதிக்கப்பட்டுவிட்டல் தான், அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது என்பது, சாதாக ரீதியாக ஆய்வு செய்ததில் கண்ட உண்மையும் கூட , சனிபகவான் நன்றாக அமையாதவர்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவதில்லை என்பது ஆய்வில் கண்ட உண்மை .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 


திங்கள், 6 பிப்ரவரி, 2012

வேதங்களின் துணை கொண்டு எப்படி நல்லாட்சி செய்வது?

அரசர் காலத்திலெல்லாம் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தனர்?சுயம்வர முறைதானே,அப்போதிருந்த குடிமக்களும் பொருத்தம்பார்காமல் தானே திருமணம் செய்தனர்.மேலும் பல குடும்பங்களில் அத்தை,மாமன் உறவிலேயே திருமணம் செய்தனர்.அவர்களெல்லாம் நன்றாக இல்லையா?மேலும் இந்த பொருத்தம் பார்ப்பதென்பது இப்போது ஏற்பட்ட சமாசாரம் தானே,
ஒரு ஜாதகம் பொருத்தமாக உள்ளது என்று ஜோதிடர் கூறிய பிறகே(பத்து பொருத்தம்,தோஷம்,ஸ்தான பலம் எல்லாம்தான்)திருமணம் நடக்கிறது.ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கே புத்திர பாக்கிய தடை,இன்ன பிற கஷ்டங்களுக்காக மீண்டும் ஜோதிடர்களிடம் செல்கின்றார்களே?எனில் திருமண பொருத்தம் பார்ப்பது தேவையற்ற ஒன்று என்றுதானே ஆகிறது.அல்லது அவ்வளவு துல்லிய மாக பார்த்தால் 100க்கு 2,3 தான் பொருந்தும்.எனவே பெற்றோர்களுக்கு அந்த அளவு பொறுமை இருக்காது என்று கருதி ஜோதிடர்கள் பொருந்தாத ஜாதகத்தையும் பொருந்தக்கூடியதாக சொல்கிறார்களா?
மேலும் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லா ஜாதகம் என ஒரு 50 ஜாதகம் இருந்தால் அவர்களை தட்டிகழித்தே வந்தால் அவர்களின் நிலை என்ன?

மன்னர் காலங்களில் அரசவை ஜோதிடர் என்று தனி பிரிவே செயல் பட்டுள்ளது, இவர்களுடைய  வேலை என்னவென்றால், ஒரு கரு எப்பொழுது உருவாகினால் அரச குலத்துக்கு ஏற்ற அமைப்பில் இருக்கும் என கணித்து சொல்லுவது ஜோதிடர்களின் முக்கி பணியாக இருந்தது.

எனவே அந்த காலங்களில் மன்னர் இளவரசர் என்று  தொடர்ச்சியாக அரசாட்சி செய்து வந்தனர், மேலும் இந்து தர்மப்படி , வேதங்களின் துணை கொண்டு எப்படி  நல்லாட்சி செய்வது , என்று மந்திரி மார்களும் இருந்தனர்.

மேலும் நான்கு வர்ணங்கள் உண்டு அதாவது :

உடல் வலிமை மனோவேகமும் நிறைந்த இராணுவவீரர்கள், தீயணைப்பு துறையினர், அரசியல்வாதி ஆகியோர் சத்ரிய குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தேச நன்மைக்காக தங்களது இன்னுயிரையும், குடும்பத்தையும் தியாகம் செய்ய தயங்காதவர்கள்.

மனோ வேகம் குறைந்து, உடல் வலிமையை மட்டுமே கொண்டு வாழ்க்கை வளங்களைத் தேடி கொள்பவர்கள் சூத்திரர்கள், உழைப்பாளிகள் , விவசாயிகள், தொழிலாளர்கள், இவர்களிடம் பொது நலம் குறைவாகவும், சுயநலம் அதிகமாகவும் இருக்கும்.

உடல் வலிமையை விட மனோபலம் அதிகமாக உடையவர்கள் வைசியர்கள். இவர்கள் தங்களின் மனோபலமான அறிவைக்கொண்டு பிறருக்கு யோசனை  சொல்லுதல், வியாபாரம், கடிதம் போன்ற தொழில்களை செய்பவர், இவர்களிடம் சுயநலமும், பொது நலமும் கலந்து இருக்கும்.

இறுதியாக பிராமணர்கள். இவர்களிடம் உடல் வலிமை குறைந்து, மனோபலமான அறிவு விஞ்சி இருக்கும். எனவே ஆசிரியார்கள், குருமார்கள் , நிதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர் என இருப்பார்கள். இவர்களிடம் பொது நலமே அதிகமாக இருக்கும் .

எனவே சத்திரியரும் , பிராமணரும் பொதுநலம் கொண்டவர்களாக உள்ளனர் . இதில் சத்திரியர் உடல் வலிமையிலும் , பிராமணர் அறிவொளியிலும் சிறந்து விளங்குகின்றனர், பொது நலம் மிகுந்த சத்திரியர் தன் அதிகாரத்தில் ஒரு சிக்கலை தீர்க்கும் பொழுது, பொதுநலம் நிறைந்த ஒரு பிராமணர் தன் அறநெறியால், அச்சிக்கலை தீர்ப்பார்.
இந்த நான்கு வர்ணமும் சமுதாயத்தில் அவர் அவர் வழியில் முன்னேற்றம் பெறுகின்றனர். மேலும் இது பற்றிய விளக்கம் பின்னாளில் வரும் .

மேலும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியில்லாத ஜாதகம் என ஒரு 5 சதவீத ஜாதகம் மட்டுமே உண்டு , இந்த ஐந்து சதவிகித ஜாதகர்கள், தமது கர்ம வினைபதிவின் காரணமாகவே இந்த நிலை ஏற்ப்படுகிறது. கர்ம வினைபதிவினை கழித்துகொள்ள நாம் இந்த பிறவியை கொண்டுள்ளோம் என்ற மன நிலைக்கு வந்து, மறுமணம் அல்லது வாழ்வை இழந்தவர்க்கு வாழ்க்கை தருவது என , தமது கர்ம வினை பதிவினை கழித்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும், 
ஒருவருக்கு இந்த இரண்டு , ஏழு ஆகிய ஸ்தான பலன் கெட்டால், இவர் இந்த காரக பலன் சம்பந்தப்பட்ட கர்ம வினை பதிவினை கடந்த பிறவியில்  செய்து இருப்பார் எனவேதான், இந்த ஸ்தான பலன் கெட்டு இருக்க வாய்ப்பு உண்டு, மேலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தமது துணை எவ்வித துன்பத்தை தந்தாலும் ஏற்றுக்கொண்டு கர்ம வினை பதிவினை கழித்துகொள்வது சால சிறந்தது.

ஜோதிடன்வர்ஷன் 
9842421435 
9443355696 

திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்பட காரணம் என்ன ?

  நட்சத்திர பொருத்தம் 10 /10 இருந்தும் பல தம்பதிகளின் திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்பட காரணம் என்ன ?

தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானம் எனும்  இரு பாவங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே, திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்படுகிறது. இதில் நட்சத்திர பொருத்தம் எவ்வித பலனையும் தருவதில்லை, மேற்கண்ட அமைப்பு தம்பதியர் ஒருவருக்கு இருந்தாலும் போதும் திருமண வாழ்க்கை சிறப்பதில்லை .

மேலும் இந்த இரு வீடுகள் பாதிக்கப்படும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதக அமைப்பை சேர்ந்தவர், குண இயல்பு மாறுபடுகிறது அதாவது சகிப்பு தன்மை இல்லாமை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாதது ,தேவை இல்லாத விசயங்களுக்கு வாக்குவாதம் , சந்தேக புத்தி , ஒருவர் மனதை ஒருவர்  பாதிக்கும் வகையில் செயல் பாடுகள், பலி வாங்கும் மனப்பான்மை ஆகிய குணங்கள் ஜாதகரிடம் அதிகமாக காணப்படுகிறது , இதன் காரணமாக குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்ப்படுகிறது என்பது, அவர்களது ஜாதக அமைப்பில் இருந்து தெரிந்து கொண்ட உண்மை.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் , சரியான ஜோதிட ஆலோசனையும் , உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பது எனது கருத்து . 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நட்சத்திரங்கள் பாதிப்பை தருமா ?


 கேள்வி :

பெண்ணின் நட்சத்திரம் மூலம் ஆயின் மாமனாருக்கும், ஆயில்மானால் மாமியாருக்கும், கேட்டை ஆனால் மூத்த மைத்துனருக்கும், விசாகம் ஆனால் இளைய மைத்துனருக்கும், ஆகாது என்பது உண்மையா?



பதில் : 
           27 நட்சத்திரங்களில் ( அபிஜித் உடன் 28 ) எந்த ஒரு நட்சத்திரமும் பாதிப்பை தருவது இல்லை, 

ஆகாது என்றால்  ஜாதகிக்கும, சம்பந்தப்பட்ட நபருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுமே தவிர, இதனால் பெருளாதாரம், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் ,முன்னேற்றம் போன்ற அமைப்புகளில் இருந்து பதிப்பு வருவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பு இல்லை. 

இதனால் பல இளம் பெண்களின் திருமண வாழ்கை அமைவதற்கு தடையாக பெற்றோரே இருப்பது கலிகாலத்தின் கொடுமை, இதனால் பதிக்கப்பட்ட ஜாதக அமைப்பை கொண்ட பெண்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த பதிவை இங்கு சமர்ப்பிக்கிறேன், அவர்களின் கண்ணீர் இனி மாற வேண்டும் என்பது எனது ஆவல். 

மேலே சொல்லப்பட்டவை போல் ,ஆகாத அமைப்பு அனைத்தும் ஒரு காலத்தில் தமிழர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம், இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்து வர வாய்ப்பில்லை.

 மேலும் திருமணதிற்கு பிறகு 80 சதவிகித தம்பதியினர் தனி குடித்தன அமைப்புக்கு சென்று விடுகின்றனர், இதனால் அவர் அவர் வாழ்க்கையை சுயமாக வாழ தெரிந்து கொண்டுள்ளனர், இதனால் தமக்கு  வரும் பிரச்சனைகளை அவர்களே சமாளித்துகொல்கின்றனர், இதனால் பெற்றோர்கள் பயம் கொள்ள தேவையில்லை,  

இனியாவது இந்த பெற்றோர்கள் தங்களது மகனுக்கு மூலம்,ஆயில்யம் ,கேட்டை,விசாகம் நட்சத்திரம் கொண்ட பெண்களை திருமணம் செய்து வைத்து நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்க வேண்டும்.

 மேலும் ஒரு ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 சதவிகிதம் மட்டுமே பலன் தரும், 

திருமண வாழ்க்கைக்கு இருவரது ஜாதக அமைப்புகளை ஆராய்ந்து குடும்பம் எனும் இரண்டாம் வீடு, புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு , களத்திரம் எனும் எழாம் வீடு , ஆயுள் எனும் எட்டாம் வீடு , ஜீவனம் எனும் பத்தாம் வீடு முறையே நான்றாக இருக்கும் பொழுது, திருமணம் செய்து வைத்தால் தம்பதியர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழை அடி வாழையாக சிறப்பாக இருப்பார்கள் என்பதே உண்மை .

மேற்க்கண்ட வீடுகள் வலுவாக இருந்தால் ரச்சு பொருத்தம் கூட தேவை இல்லை என்பதே நான் கண்ட உண்மை, இதை பல தம்பதிகளின் ஜாதக அமைப்பு மற்றும் அவர்களது வெற்றிகரமான திருமண வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன் ,

  நட்சத்திர பொருத்தம் 10 /10 இருந்தும் பல தம்பதிகளின் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததையும்  பார்த்திருக்கிறேன் ,

மேலும் சில ஜோதிடர்கள் சொல்லுவது போல், செவ்வாய் தோஷம் , ராகு கேது தோஷம், களத்திர தோஷம்,  புதிதாக கண்டு பிடித்துள்ள திசா சந்திப்பு, இதுவெல்லாம் சுத்தமான மூட நப்பிக்கையே தவிர வேறு  ஒன்றும் இல்லை.
செவ்வாய் , ராகு கேது , களத்திரம்  திசா சந்திப்பு போன்றவைகள் ஒரு ஜாதகருக்கு, நன்மையை தருகிறதா தீமையை தருகிறதா, என்று தெரியாத ஜோதிடர்கள் வேண்டுமானால் இவ்வாறு செல்லி மக்களை குழப்பம் பெற வைக்கலாம், ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் யாரும் இந்தமாதிரி சொல்ல வாய்ப்பில்லை. 

மனித வழக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது அதை மேலும் சிறப்பாக வாழ தெரிந்து கொண்டு சகல நலமுடனும் அனைத்து வளமுடன் ,

 வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

துல்லியமான ஜாதகம் கணிக்க என்ன வழி?

வணக்கம்,
அது புதுமையோ பழமையோ சரியான காரணத்துடன் கூறப்படும் விளக்கங்களை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஜோதிடத்தில் பல முரண்பாடுகள் உள்ளதே.
ஆரம்பமே பஞ்சாங்க முரண்பாடு.அடுத்து ஜாதக கணித முரண்பாடு.இதில் சரியான ஜாதகத்தை கணிப்பதே பெரும்ப்ரச்சனையாக உள்ளது.இதில் அதை வைத்து பலன் சொல்வது அதை விட கொடுமை.

ஒரு குழந்தை பிறக்கும்போது எந்த கிரகம் எங்கே இருந்தது என்பதுதானே ஜாதகம்.இதை 100% துல்லியமாக கணிக்க (பஞ்சாங்க உதவி இன்றி) நாசா போன்ற அறிவியல் ஆய்வு மையங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியுமா?

அதாவது

துல்லியமான ஜாதகம் கணிக்க என்ன வழி?

மக்கு தெரிந்து  ஒரே வழிதான் உண்டு, எமது குரு திரு அருள்வேல் அய்யா அவர்களிடம் ஜோதிட பயிற்ச்சி எடுத்துகொண்டு, அவரிடம் உள்ள ஜாதகம் கணிக்கும் கணினி மென்பொருளை பெற்று, சரியான மற்றும் துல்லியமான ஜாதக கணிதத்தை பெறலாம்.
எமது குருவின் 35 வருட கடின உழைப்பின் பலனாக கிடைத்த பொக்கிஷம் இந்த  ஜாதகம் கணிக்கும் கணினி மென்பொருள் ஆகும் .

இந்த கணித முறையினை வைத்து பலன் சொல்ல அவரிடம் ஜோதிட கலையினை பயின்றால் மட்டுமே முடியும்.

முயற்ச்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்.




சனி, 4 பிப்ரவரி, 2012

ஜோதிட கலை !

ஜோதிட கலை !

ஆம் இந்த தெய்வீக கலையினை கற்றுகொள்ள எமக்கு ஆக்கமும் , ஊக்கமும் கொடுத்து பாராட்டிய, எமது துணைவியார் கார்த்திகா ஸ்ரீ மற்றும், எமது ஆன்மீக ஜோதிட ஆசான் அருள்வேல் அய்யா , ஞான குரு பரஞ்சோதியார் சுவாமிகள், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிசொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.
உண்மையில் ஜோதிடம் என்றால், எனது இருபது  வயது வரை எனக்கு ஒன்றுமே தெரியாது, இதற்க்கு பிறகே எமது துணைவியாரின் ஆலோசனை படி ஜோதிடத்தை முறையாக பயின்றேன், என்னுள் இருக்கும் ஜோதிட திறமையை கண்டு உணர்த்திய எமது இல்லற துணைவியாருக்கு கோடான கோடி நன்றிகள் . 

இந்த ஜோதிட கலையின் மூலம் , எந்த ஒரு மனிதரையும் வாழ்வில், முன்னேற்ற நிலைக்கு ,வெகு விரைவில் எடுத்து செல்ல இயலும், என்பது கண்கூடாக பார்த்த உண்மை .

ஜோதிடம் என்பது கணிப்பு அல்ல அது கணிதம். கணிப்பு தவறி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் கணிதம் தவற வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் .

ஜோதிடத்தில் உள்ள சில மூட நம்பிக்கைகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம். அவற்றில் இருந்து தெளிவு பெறுவோம்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 

குண்டலினி

அய்யா அருமை

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இது யோகா பற்றி பதிவா ? இல்லை ஜோதிடம் பற்றிய ??
//இதன் மூலம் ஒருவருக்கு எந்த ஆதார சக்கரம் சரியாக அமையவில்லையோ//
எப்படி கண்டு பிடிப்பது? அதற்கு சிலவகை கேமரா பயன்படுத்தவேண்டுமே ?

//அந்த ஆதார சக்கரத்தினை முறையான யோகா பயிற்ச்சியின் மூலம் சரிவிகித நிலைக்கு கொண்டுவந்து கர்மவினை பதிவினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்,//

என்ன மாதிரியான பயிற்சிகள் ? பயிற்சி என்றல் இடைவிடாது நாம் முயற்சி செய்யும் போது முன்று சக்கரம் activated ஆவதற்குள் நாம் பாதி வயது கடந்துவிடுமே?




 சந்தேகமே இல்லை இரண்டும் சம்பந்தப்பட்ட பதிவுதான் :

 மேலே பார்த்தவற்றில் குண்டலினி  பற்றி அராய்ச்சி உள்ளவர்களுக்கு நிச்சயம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
முதலில் குண்டலினி பற்றிய ஒரு சிறு விளக்கம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் இந்த குண்டலினி சக்தியாகப்பட்டது கருமைய்யம் எனும் மூலதாரத்தில் ஒடுங்கி இருக்கும், இதன் இயக்கம் என்பது மிகவும் ரகசியமானது அதாவது உயிருடன் சம்பதபட்டது, மனிதனின் ஆறாவது அறிவு தெளிவாகவும் , விழிப்புடன் செயல்பட வைக்கும் தன்மை இதற்க்கு உண்டு , இந்த சக்தியை நாம் சுயமாக இயக்க முடியாது, அப்படி சுயமாக இயக்க வேண்டும் என்றால் அய்யா வேலு சொன்னது போல், பாதி வயது மட்டும் அல்ல ஆயுள் முழுவதையும் நாம் இதற்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

இது நடை முறைக்கு சாத்தியம் இல்லை, இதற்க்காத்தான் பல ரிஷிகளும் , சித்தர்களும் தேடி அலைந்து தனிமையாக காடுகளுக்கு சென்று இந்த குண்டலினி சக்தியை இயக்க தலை கீழாக தவம் புரிந்தனர்.
இதைப்பற்றிய விளக்கம் பிறகு காண்போம், குண்டலினி சக்தியை மூலதாரத்தில் இருந்து, தண்டு வடத்தின் வழியே கொண்டு சென்று ஆக்னையில் வைத்து தவம் இயற்றும் பொழுது , மற்ற ஆதாரங்கள் அனைத்தும், நன்றாக இயங்க ஆரம்பித்து விடும் , இதற்க்கு நாம் செய்ய வேண்டியது இதில் சிறந்தவராக விளங்கும் குரு முகமாக நின்று பயிற்ச்சி செய்வது மட்டும்தான்.

குரு என்பவர் காந்தம் போன்ற அமைப்பை பெற்றவர், நாம் இரும்பு துகள் மாதிரி அமைப்பை பெற்றவர்கள், காந்தத்துடன் இரும்புதுகள்  சேரும்பொழுது இரும்புதுகள் எப்படி காந்தமாக மாறுகின்றதோ அது போல் நாமும் இந்த குண்டலினி சக்தியை, செயல் பட வைக்க இயலும். இதற்க்கு ஒரு வருடம் போதும்.

கரு மைய்ய துய்மை பெற இது ஒரு சிறந்த வழி, இதனால் என்ன பயன் :

மனிதன் பூமியில் வாழுவதற்கு தேவையான, அனைத்து வகை செல்வங்களையும் நேர்மையாக  பெறுவதற்கு, சரியான வழிகாட்டுதல் கிடைக்கும், உங்களது சுய அறிவு சிறப்பாக செயல்படும், விழிப்புணர்வு உங்களக்கு எப்பொழுது உதவி புரியும். 
 இதை பற்றி தெளிவான  விளக்கம் வரும் காலங்களில் தருகிறோம் !
 
ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 


வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒவ்வொரு மனிதரும் தமது கர்ம வினை பதிவினை தெரிந்துகொள்ள எளிமையான வழி !

ஒவ்வொரு மனிதரும் தமது கர்ம வினை பதிவினை தெரிந்துகொள்ள எளிமையான வழி !


ஆரா எனப்படும் ஒரு வகை அறிவியல் ரீதியான சோதனை செய்துகொண்டால் , ஒருவரது கர்ம வினை பதிவுகள் பற்றியும், 7 வகை ஆதாரங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்,


இதன் மூலம் ஒருவருக்கு எந்த ஆதார சக்கரம் சரியாக அமையவில்லையோ அந்த ஆதார சக்கரத்தினை முறையான யோகா பயிற்ச்சியின் மூலம் சரிவிகித நிலைக்கு கொண்டுவந்து கர்மவினை பதிவினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்,

கருமையம் எனும் ஒரு அமைப்பு ஒரு ஜாதகருக்கு பாதிப்படைந்து விட்டால், அந்த ஜாதகர் மனநிம்மதி இழப்பு, பொருளாதார முன்னேற்றம் இல்லாமை , மணவாழ்வில் போராட்டம் , செய்யும் செயல்களில் தோல்வி, மன ஆற்றலை ஒரு முகமாகா நிலை நிறத்த முடியாமை, தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உதவி செய்யாத நிலை போன்ற தீமையான பலன்கள் ஜாதகருக்கு நடக்கும் .

இந்த கரு மைய துய்மை நாம் பெரும் பொழுது , மேலே கண்ட பலன்கள் நடக்காமல் நன்மையான பலன்களை ஜாதகர் அனுபவிக்க முடியும் .

மேலும் தொடர்புக்கு :

ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 

செவ்வாய், 31 ஜனவரி, 2012

10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு

வணக்கம்,
10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
ஒரு ஜாதகர் என்ன தொழில்/வேலை செய்து வருமானம் ஈட்டுவார் என எப்படி கண்டுபிடிப்பது?



உதாரணமாக
1.பத்தாம் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் காரகமான தொழிலா?

2.சாரம் பெற்ற கிரகத்தின் தொழிலா?

3.பத்தாம் வீட்டுக்கு உரியவனின் காரக தொழிலா?

4.பத்தாம் வீட்டுக்கு உரியவன் சாரம் பெற்ற கிரகத்தின் காரகமான தொழிலா?

5.பத்தாம் வீட்டை பார்ப்பவனின் காரகமான தொழிலா?

6.அல்லது வேறு எப்படி முடிவு செய்வது? 


பதில் : 
       
உங்களின் கேள்வியில் உள்ளபடி ஒரு ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்பு இல்லை, 

கால புருஷ தத்துவப்படி  ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எந்த வீடாக வருகிறதோ, அந்த அமைப்பின் படி தொழில் அமையும்,

சர, ஸ்திர, உபய , தத்துவப்படி இயற்கையாகவே ஜீவனம் ஜாதகருக்கு அமைந்து விடும் ,

நெருப்பு ,நிலம், காற்று, நீர்  ராசிகளில் ஜாதகருக்கு ஜீவன வீடாக எது அமைகிறதோ அவ்வகை தொழில் அமைப்புகளில் வெற்றிபெறுவார் ,
மேலும் ஜீவன ஸ்தான அமைப்பு நல்ல நிலையில் இருந்தால், தொழில் அமைப்பு, ஜாதகரை தேடி வரும்,   ஜீவன ஸ்தான அமைப்பு பாதிக்கப்பட்டால் , ஜிவனத்தை தேடி இவர் செல்ல வேண்டி வரும்.

எடுத்துகாட்டாக :

               ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் ரிஷபமாக வந்து, அந்த வீடு நல்ல நிலையில் இருந்தால், ஸ்திரமாக ஒரு இடத்தில் ஜீவனம் அமையும், மேலும் வக்கீல் , நிதி நிறுவனம் , வட்டி தொழில் , கமிஷன் தொழில் , அதிக முதலீடு செய்யப்படும் தொழில்கள் , உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், வாக்கு சம்பந்தப்பட்ட தொழில்கள் என அமையும் .

தொழில் என்பது ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தை மட்டுமே வைத்து நிர்ணயம் செய்து விட முடியும், இத்தனை குழப்பங்கள் தேவையில்லை, இதை நிர்ணயம் செய்ய கண்டிப்பாக சுய ஜாதகம் தேவை.


தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.


 கேள்வி :

 அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?
(எதிரிகள் தொந்தரவு ஏற்படும் என்று பயமா ?)
விளக்கவும்
அய்யா பழைய பாடல்களில் ஜோதிட குறிப்பு இல்லையா?
பரிஹர்ரம் இல்லையா ?
சித்தர்களின் பாடல்கள் மற்றும் புலிபானி அவர்களின் பாடல்கள் நிறைய ஜோதிட குறிப்புகள் கொடுத்துள்ளனர் ?? விளக்கவும்.

 பதில் : 
முக்கிய நபர்களின் ஜாதகங்கள், தீய எண்ணம் கொண்ட மற்றவர்களுக்கு கிடைக்கும் பொழுது, அவர்கள் ஜாதகரை பல வழிகளில் செயல் இழக்க வைக்க முடியும், அஷ்டம சித்து எனும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் இக்காரியங்களை சரியாக செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். 

எனவே அவர்களது ஜாதகங்கள் மறைக்கப்படுகின்றது,
இக்கலையினை பயன்படுத்தி தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.

இதில் அதிகம் பாதிக்க பட்டவர்கள் தமிழகத்தில் சிறந்த அரசியல் வாதிகள், கலை துறையை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் என பட்டியல் நீளுகிறது, 

ஒருவருடை உண்மையான ஜாதகம் இருந்தால் அவரை உலகின் சிறந்த மனிதராகவும் மாற்ற முடியும் அல்லது உலகின் கடை கோடியிலும் நிறுத்த முடியும்( இது அவருக்கு தெரியாமலே ), இந்த அஷ்டம சித்துவின் மூலம். இதை துரியம் நன்றாக செயல் படுபவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்

பழைய பாடல்களில் பரிகாரங்கள் மறை முகமாகவே உணர்த்தப்படுகிறது , ஒரு பாடலுக்கு ஒன்பது விளக்கங்கள் உண்டு, என்பதினை தமிழ் பழைய பாடல்கள் ஆராய்ச்சி செய்பவர்கள் தமிழ் ஆர்வலர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம், 

மேலும் பரிகாரம் என்பது ஜாதகரே செய்யும் அமைப்பில் மட்டுமே உள்ளது எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பத்தாம் வீடு என்பது ஜீவனம் மற்றும் தகப்பனார் வகை காரக பலன்களை வழங்கும்,
( பாரம்பரிய முறையில் ஒன்பதாம் வீடு தகப்பனார் ஸ்தானம் என்பார்கள் )

இந்த பத்தாம் வீடு ஒருவருக்கு பாதிப்படைந்தால், அந்த ஜாதகருக்கு தக்கப்பனார் வழியில் பதிப்பு இருந்து கொண்டே இருக்கும் அதற்க்கு ஜாதகர் அவரது தகப்பனார் மூலம் எவ்வித துன்பம் ஏற்ப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு, அந்த காரக கர்ம வினை பத்தி வினை கழித்துக்கொள்ள வேண்டும், இதுவே சரியான பரிகாரம், ஏனெனில் அவர் கடந்த பிறவியில் இந்த காரக சம்பந்தபட்ட பாவ வினையினை செய்திருப்பார்.

சித்தர்கள் எப்பொழுதுமே தீர்க்க  தரிசிகள், அவர்களது பாடல்களில் ஜோதிட குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள சுழி முனையில் நின்று மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும், இதற்க்கு கடுமையான பயிற்ச்சிகள் தேவை, மேலும் அவர்களது அருளாசி கண்டிப்பாக தேவை.
   
மேலும் வரும் ...
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696