சனி, 23 ஜூலை, 2016

சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொருத்தமான தொழிலை ஜாதகரீதியாக தேர்வு செய்வது எப்படி ?


சுய ஜாதக ரீதியாக தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகரின் நிலையானது, நமது கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல், வீடும் கெட்டது போல் " என்ற பழமொழிக்கு உதாரணமாக அமைந்துவிடும், தமக்கு உகந்த தொழிலை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதக பாவக வலிமை 100% விகிதம் சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்றால் அது மிகையல்ல, ஒரு ஜாதகர் தனது சுய ஜாதகம் கொண்டு தமக்கு உகந்த சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழிலை தேர்வு செய்வாராயின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடைசெய்ய இயலாது, ஏனெனில் இறைஅருள் விதித்த கர்மத்தை செய்ய தகுதி உடையவர் ஆகிறார், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் மென்மேலும் வளர்ச்சி பாதையில் வெற்றிநடை போடும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகரின் உழைப்பும், லட்ச்சியங்களும் மிகவிரைவாக சாதிக்கும் வல்லமையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியான காலநேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், பொருளாதார தடைகள் அற்ற தன்னிறைவான வசதிவாய்ப்புகளை ஜாதகர் சிறப்பாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

சுய ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகரை செக்குமாட்டிற்கு பொருத்தமான நிலையையும், குறுகிய வட்டத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையையும், ஜாதகரின் லட்ச்சியங்கள் மற்றும் கனவுகள் "கானல்நீராக" மாறிவிட வாய்ப்புண்டு, தாம் செய்யும் தொழிலில் விருப்பமும், கடமை உணர்வும், அதீத ஆர்வமும் கொண்டதாக அமையும் பொழுதே ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது அபரிவிதமான வெற்றிகளை நல்கும், விருப்பம்,ஈடுபாடு,கடமை மற்றும் ஆர்வம் இன்றி செயல்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான நன்மைகளை தந்துவிட நிச்சயம் வாய்ப்பில்லை, ஏனெனில் புது சிந்தனைகள் மற்றும் புதிய யுக்திகளை கண்டுணரும் வாய்ப்பினை ஜாதகருக்கு ஜீவன பாவகம் வழங்குவது கேள்விக்குறியே, தமக்கு உகந்த தொழிலை தேர்வு  செய்யும்பொழுது ஜாதகரின் வளர்சசி ஓர் சீரிய முன்னேற்றத்துடன் வளர்ச்சிப்பாதையில் சிறப்பாக வெற்றிநடைபோடும்.

  ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கேற்ப, தமக்கு பொருத்தமான தொழிலை நிர்ணயம் செய்வது எப்படி? என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம் 

1) ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவாகத்துடன் தொடர்பு பெறுவது, ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது தெளிவாகிறது, எனவே ஜாதகர் சுய தொழில் செய்தால் நிச்சயம் திடீர் பேரிழப்பும் வீண் விரையமுமே ஏற்படும், மேலும் ஜாதகர் தான் செய்யும் சுய தொழில் மூலம் அதிக மன உளைசலுக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையை பெரிய அளவில் தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகமாக அமைவது ஜாதகரின் சொத்து,வீடு, வண்டி,வாகனம் மற்றும் சுக போகங்கள் அனைத்தையும் சுய தொழில் செய்வதால் விரையமாக்கும் சூழ்நிலையை தரும், மேலும் சொத்து,வீடு,வண்டி,வாகனம் மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழிலை தேர்வு செய்து செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தொழில்  ரீதியாக மிகப்பெரிய தோல்வியே கிட்டும் என்பதை கவனத்தில் கொள்வது சாலச்சிறந்தது.

2) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை மிக துல்லியமாக நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே ஜாதகர் சுய தொழில் செய்ய முழு தகுதி உடையவர் ஆகிறார், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் நிற்பது, ஜாதகர் கூட்டு தொழில் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை ஸ்திரமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஸ்திர காற்று ராசியான கும்பம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றிகளை கூட்டு தொழில் மூலம் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் அறிவு திறனும் தொழில் வல்லமையும் கூட்டு தொழில் மூலம் விருத்தி அடையும், மேலும் திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமான ஜீவன வாழ்க்கையை பெரும் யோகம் பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே, ஜாதகர் தனது அறிவு திறன்,சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் புதியசிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு கூட்டு தொழில் மூலம் பன்மடங்கு லாபங்களை பெறுவார் என்பது மிக தெளிவாக தெரிய வருகிறது.

3) ஜாதகர் அடிமை தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்று காணப்படும் பொழுது, ஜாதகர் அடிமை தொழில் செய்யவும் தகுதி அற்றவர் என்பது உறுதியாகிறது, ஏனெனில், ஒரு இடத்தில் நிலையாக பணியாற்றும் வாய்ப்பினை தாராது, பல இடங்களில் ஓடி அலைந்து திரியும் நிலையை தந்துவிடும், இதனால் ஜாதகரின் திட்டமிடுதல்கள், செயல் திறன் வெகுவாக குறையும், கெளரவம் பார்க்காமல் சுய மரியாதை இழந்து செய்யும் வேலையை ஜாதகரே விரும்பி ஏற்றுக்கொண்டால் இது சாத்தியம், அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தி வர வாய்ப்பில்லை ஏனெனில் ஜாதகரின் லக்கினம் சிம்மம், கட்டுப்பாடு அற்ற சுதந்திர நிலையை கையில் ஏந்தும் அன்பர்கள், இந்த சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், இந்த ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு மட்டுமே கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றது, ஆனால் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் முறையே 2,6,8,12 பாவகங்கள் ஆகும் என்பதால் ஜாதகர் கூட்டு தொழில் மூலமோ அல்லது வெளிநாடுகளில் உயர்பதவி மூலமோ ராஜயோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை சிறப்ப சுய ஜாதக பாவக வலிமை தெளிவுபடுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எவ்வித சூழ்நிலையிலும், தனக்கு உகந்த தொழிலை தாமாகவே தேர்வு செய்து வெற்றிகாணும் யோகம் பெற்றவர் என்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் இவர் பக்கம் நிற்பதால் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மைகளையும், ஜாதகத்திற்கு உற்ப்பட்ட யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும், அடுத்தது வரும் செவ்வாய் திசையும் கூட்டுதொழில்  அல்லது வெளியூர், வெளிநாடுகளில் சிறப்பான தொழில் அல்லது வேலை வாய்ப்பினை நல்கும்,  அதற்கு அடுத்து வரும் ராகு திசை ஜாதகரை கூட்டு தொழில் மூலம் பரிபூரண யோகத்தை வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்" வழங்கும் அறிவுரை உடனடியாக ஜாதகர் திருமணம் செய்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 21 ஜூலை, 2016

தொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழங்கும் பலாபலன்கள் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " ஒரே வாக்கியத்தில் ரத்தினைசுருக்கமாக ஓர் ஆண் மகனுக்கு ஜீவனத்தின் அவசியத்தை முன்னோர்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர், சரியான இளம் வயதில் தாம் விரும்பிய தொழிலை தேர்வு செய்து, ஆர்வமுடனும் முழு அர்ப்பணிப்பையும்  தமது சுய உழைப்புடன் விதைத்தால், அதன் பலனானது மிகப்பெரிய விருச்சமாக நம்மையும் காத்தருளும், தம்மை நாடி வருவோரையும் காத்தருளும், கடனுக்காக பணியாற்றும் தன்மையானது தொழில் விருத்தியையும், அடிப்படை முன்னேற்றத்தையும் வெகுவாக பாதிக்கும், இன்றைய சூழ்நிலையில் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தும் யோகம் எத்தனை அன்பர்களுக்கு வாய்க்கிறது என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டால் மிக மிக குறைவான சதவிகித அளவிலேயே உள்ளது தெளிவாக தெரிய வரும்.

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு உதவி செய்யும் சில பாவகங்களின் தன்மை ஆகியவை வைத்தே ஒருவரின் தொழில் முன்னேற்றம் நிர்ணயம் செய்யப்படுகிறது, சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, நல்ல தொழில் வெற்றிகளை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல தொழில் அல்லது ஜாதகருக்கு உகந்த தொழில் அமைவது குதிரை கொம்பாகவே உள்ளது, ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு துல்லியமாக வழிகாட்டும், மேலும் ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை பரிபூர்ணமாக பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர், தன் உடல் உயிர், வளரும் சூழ்நிலை, சுய அறிவு திறன், தனிப்பட்ட திறமைகள், திட்டமிடுதல்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வல்லமை என ஜாதகரை சிறப்பாக இயக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன், எனவே ஜாதகர் இயற்கையாகவே சுய தொழில் செய்து அதில் நிச்சய வெற்றியை பெறுவார் என்பது தெளிவாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்கும் வல்லமையை பெற்று தரும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மேலும் உடல்,மனம்,அறிவு ஆகியவற்றை எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்க வைக்கும், ஜாதகர் தொழில் செய்வதற்கெனவே படைக்கப்பட்டவர் என்பது லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதில் இருந்தே தெளிவாக அறியலாம், லக்கினம் முதல் கேந்திரம்/கோணமாக அமையும்.

அடுத்து சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் தான் ஈட்டிய செல்வத்தை நுகரும் சக்தி கொண்டவரா? அற்றவரா? என்பதை மிக தெளிவாக அறிவித்துவிடும், மேலும் ஜாதகரின் குண நலன்கள், சொத்து சுக போகம், வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவற்றின் மூலம் ஜாதகர் பெரும் லாபம் மற்றும் நன்மைகளை தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது உழைப்பின் மூலம் சொத்து,வீடு,வண்டி,வாகன யோகத்தை பெற தகுதியானவர் என்பதும், மேற்கண்ட விஷயங்களில் இருந்து தொழில் வாய்ப்பினை பெரும் யோகம் பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, சுய ஜாதகத்தில்  4ம் பாவகம் வலிமை பெறுவது சுக போக வாழ்க்கையையும், வீடு வண்டி வாகன யோகத்தையும் நல்கும், மேலும் ஜாதகரின் குண நலன்களும் மற்றவர்களுடன் ஜாதகர் பழகும் தன்மை நிலையை பற்றியும், தனது தாய் வழியில் இருந்து யோகங்களையும் வாரி வழங்கும், சுக ஸ்தானம் மூன்றாம் கேந்திரமாக அமையும்.

அடுத்து களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் பொதுமக்களுடன் கொண்டுள்ள நல்லுறவையும், நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து பெரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தெளிவுபடுத்தும், மேலும் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் ஜீவன உதவிகளையும், வியாபார வழியில் இருந்து பெரும் முன்னேற்றங்களையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து பெரும் ஆதரவு, தொழில் விருத்தியையும் தெளிவு படுத்தும், வியாபாரத்தில் பொதுமக்கள் செல்வாக்கினை உறுதிப்படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வியாபாரம் மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை சிறப்பாக வழங்கும் என்பதும், தமது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், தொழில் முறை கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்தும் மிகுந்த யோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது, களத்திர ஸ்தான வலிமை ஜாதகருக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் சிறப்பான அறிமுகத்தையும், பெருமை மிக்க வரவேற்பையும் பெற்றுத்தரும், சுய ஜாதகத்தில் ஒருவருக்கு களத்திர ஸ்தானம் ஆறாம் கேந்திரமாக அமையும்.

அடுத்தது ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை வெளிப்படுத்தும், ஜாதகர் தனது தொழிலில் கொண்டுள்ள ஆர்வத்தையும் கடின உழைப்பையும் ஜீவன ஸ்தான வலிமை மூலம் உணரலாம், தொழில் ஞானம் என்பது ஜாதகருக்கு ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே அமைகின்றது, தனது தொழில் பற்றிய விசாலமான பார்வை, அதன் வளர்ச்சி மீது ஜாதகர் கொண்டுள்ள அக்கறை மற்றும் திட்டமிடுதல்கள், போட்டியாளர்கள் மூலம் வரும் எதிர்ப்பை கிரகித்து வலிமையை வெளிப்படுத்தும் தன்மை, தொழில் மீது கொண்டுள்ள பற்று மற்றும்  நிலையான உண்மை தன்மை, பிரபல்யம் பெரும் யோகம், அபரிவிதமான விருத்தி என தாம் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றத்தின் தன்மையை மிக தெளிவாக ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் புரிந்துகொள்ள இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, சிறப்பான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவத்தில் நிற்பதும், ஜாதகரின் தொழில் விருத்தியை தமது அறிவு திறன் கொண்டு நிர்ணயம் செய்வார் என்பதும், அது பரிபூர்ணமாக ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதும் வரவேற்கத்தக்கது, பொதுமக்கள் விரும்பும் ஆடை ஆபரணங்கள், உயர் ரக சொகுசு பொருட்கள், கேளிக்கை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், மூலம் ஜாதகர் தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பது உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் எட்டாம் கேந்திரமாக அமையும்.

ஜாதகர் 1ம் பாவக வழியில் இருந்து வட்டிதொழில், வாக்கின் வழியில் தொழில், நிலம் இடம் சார்ந்த தொழில் செய்யவும், 4ம் பாவக வழியில் இருந்து, வண்டிவாகனம், வீடு, மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை தொழில் செய்யவும், 7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் விற்பனை, பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த தொழில்கள் செய்யவும், 10ம் பாவக வழியில் இருந்து தரகு தொழில், பங்கு வர்த்தகம், அறிவு சார்ந்த வர்த்தகங்கள், சந்தை முதலீடு, பெரிய அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் தொழில்கள், மின்னணு, கணினி சார்ந்த தொழில்கள் செய்யவும் தகுதி பெற்றவர் ஆகிறார், மேற்கண்டவற்றில் ஜாதகரின் விருப்பமே தொழில் விருத்தியை  மிகவும் சிறப்பாக நிர்ணயம் செய்யும்.

சுய ஜாதகத்தில் ஜீவனத்தை வழங்கும் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன், இருப்பது ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்ற போதிலும், நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் ஜாதகரின் தொழில் வெற்றியை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதிக்கப்படுமாயின் மேற்கண்ட யோக பலன்களை தனது பூர்விக்கத்தில் இருந்து பெறுவதற்கு பகிதரான முயற்சசிகளை மேற்கொண்டாலும் நடைமுறைக்கு வாராது, மேலும் தடைகளும் இடர்பாடுகளும் வெகுவாக அதிகரிக்கும், தொழில் செய்வதற்கு தடையாக யாராவது ஒருவர் காரணமாக இருந்துகொண்டே இருப்பார்கள், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், கைநிறைவான லாபங்களை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 18 ஜூலை, 2016

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் அவர்களது ஜாதகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே, இன்றைய சூழ்நிலையில் திருமண பந்தம் பற்றிய தெளிவும் புரிதலும் வெகுவாக குறைந்துள்ளது என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்விகளில் இருந்தே தெளிவாக தெரிய வருகிறது, மேலும் ஒருவருக்கு திருமணம் என்பது எவ்வித நன்மைகளையும் யோகங்களையும் வாழங்குகிறது என்ற விழிப்புணர்வும் வெகுவாக குறைந்துள்ளது, இல்லற வாழ்க்கையில் இணையும் பொழுது கட்டுப்பாடின்றி இயங்கி கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க குடும்ப தலைவனாக பிரகாசிக்கிறார், தம்மை நம்பி வந்த  தனது வாழ்க்கை துணையையும், தமக்கு அமையும் வாரிசுகளையும், தம்மை ஈன்ற பெற்றோர்களையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதை, சொந்த பந்தங்கள் மற்றும் உறவுகள் ஒன்று கலந்த தனது திருமண விழாவில் அனைவர் முன்னிலையிலும் உணரும் அருமையான வாய்ப்பை பெறுகின்றார், ஒரு பெண்ணை வாழ்க்கையை துணையாக ஏற்றுக்கொண்ட பிறகு ஜாதகனின் இயக்கமும் செயல்பாடுகளும் வெகுவாக, குறுகிய காலத்தில் பல மாற்றங்களை சந்திக்கிறது, சமுதாயத்தில் இதுவரை சாதாரணமாக இயங்கிக்கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க மாமனிதனாக செயல்படும் யோகத்தை நல்குவதே திருமணம் எனும் சுப நிகழ்வே, இவ்வளவு பெருமை வாய்ந்த திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய நட்ச்சத்திர பொருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்ற கூற்று நிச்சயம் பொருத்தமற்றதாகவே  இருக்கும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.

திருமண வாழ்க்கையில் ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கை துணையாக அமையும் வதுவின் ஜாதக வலிமையை பற்றியே, நமது சாஸ்திரங்களும், புராணங்களும் சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கின்றது என்றால் அதுமிகையில்லை, காரணம் இல்லற வாழ்க்கையின் இனிமையையும், தனது கணவனின் கவுரவம், அந்தஸ்து மற்றும் முன்னேற்றகரமான யோக வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் மற்றும் ஜாதக வலிமையே, அடிப்படையில் ஜீவனத்திற்க்கே சிரமப்பட்டு கொண்டு இருக்கும் சில அன்பர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை அவருக்கு அமையும் மனைவியின் ஜாதக வலிமைக்கு நிச்சயம் உண்டு, இதை போன்றே பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேடியதின் விளைவாக மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை கூட இழந்து, ஒரு வேலை உணவிற்க்காக சிரமகதியில் ஜீவித்திக்கொண்டு இருக்கும் சில அன்பர்களை நாம் கண்டு இருக்கின்றோம், எனவே திருமண பந்தம் என்பது ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுவிடும் விஷயம் அல்ல என்பதில் தெளிவு பெற்று திருமண பொருத்தம்  காண்பதும், அதன் அடிப்படையில் இல்லற வாழ்க்கையில் இணைவதும் தம்பதியர் வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

இறை அருளின் கருணையினால் இயற்கையாகவே பொருத்தமான தேர்வை செய்து  இல்லறவாழ்க்கையில் இணைந்து வெற்றிகண்ட ஒரு தம்பதியரின் ஜாதகத்தை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


ஜாதகர் 
லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகி 
லக்கினம் : மேஷம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய தம்பதியர் இருவரின் ஜாதக வலிமையும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது இறையருள் கொடுத்த நன்கொடையாகும், குறிப்பாக ஜாதகியின் சுய ஜாதக வலிமை போற்றுதலுக்கு உரியது, தம்பதியர் இருவரும் விருப்ப மணம் செய்துகொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பு வரை ஜாதகர் ஜீவன ரீதியாக அதிக சிரமங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தவர், திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் தொழில் விருத்தி என்பது பன்மடங்கு உயர்ந்தது, குறுகிய காலத்தில் பொருளாதார தன்னிறைவை தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தந்தது, தன்னம்பிக்கை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தம்பதியர் இருவரும் பெற்றனர், இல்லற வாழ்க்கையில் குறைவில்லா நிலை, நல்ல பெண் குழந்தைகள், அவர்கள்  வழியில் இருந்து யோகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வியாபாரத்தில் விருத்தி உலகம் முழுவதும் பிரபல்யம், செல்லும் இடங்களில் எல்லாம்  நல்ல வரவேற்பு என ஒரு முழுமை பெற்ற யோக வாழ்க்கையை தம்பதியர் பெறுவதற்கு அவர்களது சுய ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

தம்பதியரின் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்த சுய ஜாதக வலிமையை பற்றி இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் பாவகங்களின் வலிமையை பற்றி பார்ப்போம், சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும்  முன்னேற்றம் தரும், மேலும் இந்த அமைப்பு வாழ்க்கை துணையாக வரும் வதுவின் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து இருப்பது, தமது கணவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகங்களையும், முன்னேற்றங்களையும் பரிபூரணமாக வாரி வழங்கும், கணவனின் ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும் மனைவியின் ஜாதக வழியில் இருந்து ஜாதகர் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க இயலும், மேலும் நேற்றுவரை மிக சாதாரணமாக இருந்த மனிதனை கூட ஒரு பெண்ணின் ஜாதக வலிமை, அவரை வெற்றி பெற்ற மனிதனாக சமூகத்திற்கு வழங்கும்  வல்லமை பெற்றது, அதே போல் பெண்ணின் ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மிகப்பெரிய தனவந்தனையும், கடைநிலைக்கு தள்ளிவிடும் வாய்ப்புண்டு.

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் :

லக்கினம் இருவரது ஜாதகத்திலும் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமது முயற்ச்சியில் சற்றும் தளர்வடையாமல் போராடும் குணத்தையும், அதன் வழிகளில் இருந்து வெற்றி வாகையை சூடும் யோகத்தையும் நல்குகிறது, மேலும் தமது லட்ச்சியங்களை முழு முயற்சசியுடன் வென்று எடுக்கும் சூட்ஷம அறிவு திறனையும், அதற்கு உண்டான உடல் மற்றும் மன வலிமையையும் வாரி வழங்குகிறது, தம்பதியரின் ஒருமித்த கருத்து இவர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்குகிறது, இதற்கு ஆதாரமாக இருவரது ஜாதகத்திலும் லக்கினம் என்பது முறையே உபய நெருப்பாகவும், சர நெருப்பாகவும் ஒரே தத்துவத்தில் பொருத்தம் பெற்று வலிமை சேர்க்கிறது.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் குடும்ப வாழ்க்கைக்கு சரியான  பொருத்தமான தேர்வை குல தேவதையின் அருளாலும், இறை நிலையின் கருணையினாலும் சரியான நேரத்தில் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஜாதகியின் 2ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பித்ருக்களின் நல்லாசியினாலும், பெரியோர் செய்த புண்ணியத்தினாலும் தமக்கு பொருத்தமான கணவனை தேர்வு செய்யும், யோகத்தை ஜாதகிக்கு வழங்கியது, இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது வருமானத்திற்கும், பொருளாதார  முன்னேற்றத்திற்கும் குறைவில்லா யோகத்தை தந்தது, தம்பதியருக்குள் வாக்குவாதம் இல்லாத இனிமையான பேச்சு இல்லற வாழ்க்கையில் இனிமையை வாரி வழங்கியது, தம்பதியருக்குள் உண்டான புரிதலும் ஆறுதல் வார்த்தைகளும், தேறுதல்களும் இல்லறவாழ்க்கையில் நல்ல  நம்பிக்கையும், மன நிம்மதி மற்றும் மன தைரியத்தையும் வழங்கியது, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தம்பதியருக்கு தந்தது, இதற்கு இருவரின் ஜாதகத்திலும் 2ம் பாவகம் வலிமையாக இருப்பது காரணமாக அமைந்தது.

புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் இருவரின் ஜாதகத்திலும் முறையே பூர்வ  புண்ணியம் எனும் 5ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றது, நல்ல குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கியது, இருப்பினும் ஆண் வாரிசு இல்லை இதற்கு என்ன காரணம் என்று இறுதியில் விளக்கம் தரப்படும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் நல்லோர் ஆதரவையும், இறை அருளின் கருணையையும் பரிபூரணமாக பெரும் யோகத்தை தந்தது, மேலும் தம்பதியரின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சிறப்பாக பிரகாசிக்கும் வல்லமையை தந்தது, வருமுன் காக்கும் சிறப்பு சக்தியும், வரும் இன்னல்களில் இருந்து மீண்டுவரும் யோகத்தையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல வெற்றிகளை பெற்றார், அதற்கு ஜாதகியின் முன்யோசனைகள் ஆதாரமாக விளங்கியது.

களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனும், வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு நல்ல  தொழில் வாய்ப்புகளையும், தொழில் விருத்தியையும் நல்கியது, ஜாதகருக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து, கவுரவம், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வெற்றிகளை வாரி வழங்கியது, ஜாதகரின் தொழில் வெற்றிகளை நிர்ணயம் செய்ய, அவரது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகிக்கு தான் கொண்ட லட்ச்சியங்களையும் கனவுகளையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தந்தது, திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தம்பதியருக்கு மிகப்பெரிய யோகங்களை வாரி வழங்கியது, பிரிவில்லா தாம்பத்திய வாழ்க்கையை இருவரும் சுவீகரிக்கும் யோகம் உண்டாக இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தான வலிமை ஆதாரமாக விளங்கியது.

ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, ஆயுள்  பாவகமான 8ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, நீண்ட ஆயுளையும், மனைவி வழியில் இருந்து யோகங்களையும் ஜாதகருக்கு வழங்கியது, இருவரும் பூர்ண ஆயுள் பலத்துடன் ஜீவிக்கும் யோகத்தை வழங்கியது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பெரும் வருமான வாய்ப்புகளையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்தது.

அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, தம்பதியருக்குள் பிரியமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, நல்ல மன நிம்மதியையும், நிறைவான மன நிலையையும், கவலைகள் இல்லா ஏகாந்த வாழ்க்கையையும் வாரி வழங்கியது, அயன சயன ஸ்தானம் வலிமை பெறுவது தம்பதியருக்குள் உள்ளன மன நிறைவையும், மன ஓற்றுமையையும் வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகங்களில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், மேலும்   நடைபெற்ற திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியதும், நடத்திக்கொண்டு இருப்பதும் யோக வாழ்க்கைக்கு  குறைவில்லா நிலையையே தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் சரியான திசை வாயிற்படி கொண்ட வீட்டில் ஜாதகர் குடியிருப்பதும் ஒரு நல்ல விஷயமாகும்.

குறிப்பு :

தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்றும் "ஆண்" வாரிசு இல்லை என்ற நிலைமைக்கு தம்பதியர் தமது பூர்வீகத்தை விட்டு வெளிநாட்டில் குடியிருப்பதே காரணமாக அமைந்துவிட்டது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல ஆண் வாரிசை நல்கும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று வசித்தால், இந்த பாக்கியம் பலன் தாராமல் போக வாய்ப்புண்டு.

 எனவே திருமண வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயம் செய்வது சுய ஜாதக பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! நட்ச்சத்திர பொருத்தம் ஓர் சிறிய அளவில் மட்டுமே ( 5%விகிதம் ) பலன் தரும், லக்கினம் முதல் 12 பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும் என்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை, இனிவரும் காலங்களில் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு முக்கியதுவம் தந்து திருமண பொருத்தம் கண்டால் நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கை 100% விகித வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே, மேலும் திருமணம் என்பது தம்பதியரின் நல்வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் என்பதால், சரியான பொறுத்த நிர்ணயம் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

வெள்ளி, 15 ஜூலை, 2016

தொழில் முன்னேற்றமும்,நடைபெறும் சுக்கிரன் திசை வழங்கும் பலன்களும் !



ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக தொடர்பு அதன் வலிமையும் மிக முக்கிய காரணியாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, "அவன் இன்றி அணுவும் அசையாது" என்பதற்கு இணங்க சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறும் யோக அவயோகங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும்.
 மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தவிர்க்க இயலாது, பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மையை பெறுவதற்கு ஆயத்தப்படுவதே சிறப்பானதாக ஜோதிடதீபம் கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகர் தமது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எவ்வித யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்கள் என்னவென்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம் 

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை தரும்  அமைப்புகள் :

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும்  வாரி வழங்கும்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை அற்ற  அமைப்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை  வழங்கும், குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகரின் கேள்வி தனது ஜீவன மேன்மை பற்றியதாக இருக்கின்றது என்பதால், ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! ஜாதகருக்கு 10ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் இந்த அமைப்பு ஜாதகருக்கு சிறந்த ஜீவன மேன்மையை வாரி வழங்கும், குறிப்பாக நல்ல வியாபாரியாக ஜாதகரை பரிணமிக்க செய்யும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு நுண்ணறிவு தொழில் சார்ந்த வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் 3ம் பாவகம் ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது ஜாதகரின் அறிவு திறனின் வல்லமையையும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகத்தையும் தரும், ஜாதகரின் ஜீவன  ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியிலும், அது தொடர்பு பெரும் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியிலும் அமைவது ஜாதகருக்கு மிகுந்த நன்மை தரும் அமைப்பே! எனவே ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து இன்னல்கள் இல்லை என்பதும், நல்ல வேலை அல்லது தொழில் அமையும் என்பதும் தெளிவாகிறது.

அடுத்தது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலனை தருவதே தற்போழுது பிரசனையாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக  பாதிக்கிறது, மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, பாக்கியம் என்று வழங்கும் 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவது ஜாதகர் எதிர் பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து அதிக அளவில் மன கவலைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேலும் பாதக ஸ்தானம் வழங்கும் பலாபலன்களில் இருந்து ஜாதகர் மீண்டுவருவது அவசியமாகிறது, மற்றவர்களால் தமது எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மிகவும் எச்சரிக்கை உடன் அணைத்தது விஷயங்களையும் கையாள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களின் தாக்கம்  மிகவும் அதிகமாக உள்ளதை மறுக்க இயலாது.

சுக்கிரன் திசையில் கடந்த சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகரை வருமானத்திற்கு திண்டாடும் சூழ்நிலையை உருவாக்கி, மிகுந்த மன வேதனையையும் மன போராட்டங்களையும் வாரி வழங்கி இருக்கும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு நல்ல ஜீவன மேன்மையை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஜாதகர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவார் என்பது வரவேற்கத்தக்க அமசமாகும், இனிவரும் எதிர்காலம் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, பாதக ஸ்தானம் வழங்கும் பாதிப்பில் இருந்து வெளிவர ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்வதும், பாதக ஸ்தான ஸ்தான பலனை ஏற்று  கொள்வதும் ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகங்களை 100% விகிதம் 5,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை பெறுவதற்கு  உண்டான முயற்சசிகளை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லையா?

  
  ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றதோ அந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் வல்லமை பெற்றவை என்பதை இதற்கு முன் சில பதிவுகளில், ஜோதிடதீபம் பதிவு செய்து விளக்கம் தந்திருக்கும், சாயா கிரகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்ய இயலாது, ஏனெனில் தாம் அமர்ந்த புத்திர ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக புத்திர ஸ்தானத்திற்கு வலிமையற்று அவயோகங்களை தரும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு புத்திர சோகத்தை தருவதிலும் தவறுவதில்லை, சுய ஜாதகத்தில் 5ம்  பாவகம் பாதிப்பை பெறுவது ஜாதகருக்கு யோகம் மற்றும் நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்குவதில் அதிக தடைகளை ஏற்படுத்துவதுடன் வருமுன் உணரும் சக்தியை வெகுவாக குறைக்கின்றது, ஜாதகர் நன்மைகளையும் நல்லோர் ஆதரவையும் பெறுவதற்கு அதிக அளவிலான போராட்டங்களையும், முயற்ச்சிகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

 சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் சாயா கிரகங்களால் பாதிப்பை பெறுவது மிகுந்த இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வாழங்கும், சாயா கிரகங்களால் 5ம் பாவகம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் மற்றும் புத்திகூர்மை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, முன்னேற்றத்தில் அக்கறை, பொறுப்பு மிக்க  செயல்பாடுகள், சுயமாக சகல முடிவுகளையும் மேற்கொள்ளும் வல்லமை, தன்னம்பிக்கை மிக்க மன நிலை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், லட்சியங்களை விரைவாக நிறைவேற்றும் தனி திறமை என்ற வகையில் யோக பலன்களை வழங்கும், மேலும் ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், அனைவராலும் உதவி பெரும்  தன்மை சிக்கல் மிகுந்த சூழ்நிலைகளை மிக எளிதாக கையாளும் வல்லமையை பெற சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையே காரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களால், 5ம் பாவகம் வலிமை பெறுவதே நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக சாயா கிரகங்களால் 5ம் பாவகம் பாதிக்கப்படுவதும், அல்லது அதற்கு  நிகரான பாதிப்பை பெறுவதும் ( 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அளவில்லா துன்பங்களையே தரும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை  ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

ஜாதகிக்கு 5ம் பாவகமான கன்னியில் கேது, 5ம் பாவக அதிபதி இங்கு கேந்திர அதிபதியாக காணப்படுகிறார் ( சூரியனுடன் சேர்ந்த புதன் ) அடிப்படையில் 5ம் பாவகம் கோண வீடு, அதன் அதிபதி கேந்திர அதிபதி, அங்கு அமர்ந்த கேது 5ம் பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை பெறுகிறார், மேலும் 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் 5ம் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது, எனவே மேற்கண்ட ஜாதகி தமது வாழ்க்கையில் அளவில்லா போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், ஜாதகிக்காக எடுக்கும் சுப முயற்சசிகள் யாவும் பெரிய பின்னடைவையே சந்தித்து கொண்டு இருக்கின்றது.

அடிப்படையில் கல்வியில் தடை, உடல் நல குறைபாடு, வேலை வாய்ப்பில் தடை, திருமண முயற்ச்சிகளில் தடை என ஜாதகிக்கு தொடர்ந்து இன்னல்களே நடைபெற்று கொண்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது சிரமங்களை வாரி வழங்கும் எனும் போதில், பூர்வ புண்ணியமான 5ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் வாய்ப்பையே வழங்காது, மேலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பாதிப்பிற்கு அதிக அளவில் சாயா கிரகமான கேது பகவானே காரணமாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு 5ம் பாவகம் உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவது, உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும் வழங்கிக்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது, ஜாதகிக்கு வரும் எதிர்ப்புகளும், இன்னல்களும் மிகப்பெரிய பாதிப்பை தரும், சுய முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்கப்படும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதை ஜாதகி கவனத்தில் கொள்வது நல்லது, சுயமாக ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் சாயா கிரகமான கேது அமர்ந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகிக்கு சாதகமான அமைப்பு அல்ல எனவே தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் 100% விகிதம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியம் கிட்டும், மாறாக இதை போன்றே 5ம் பாவகம் பாதிக்கப்பட்ட ஜாதகர் வாழ்க்கை துணையாக அமைந்தால் புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களுக்கும், புத்திர சோகம் அனுபவிக்கும் சூழ்நிலைக்கும் ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும், இயற்கையாகவே இந்த ஜாதகிக்கு பெரும்பாலான பாவகங்கள் விரைய  ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கடுமையான நெருக்கடிகளையும், மன கவலைகளையும் அதிக அளவிலான மன போராட்டங்களையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமை பெற்றதாக இருந்தால் மட்டுமே ஜாதகி தமது வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகை உண்டாகும், இதற்கு மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகமும் பாதிப்பை பெற்று இருந்தால் ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்புண்டு.

ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்பை 5ல் அமர்ந்த கேதுபகவானின் வலிமை தடுக்கும், மற்றவர் உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பையும் வழங்காது, ஜாதகியின் சுய ஜாதகமும் வலிமை அற்று காணப்படுவது மேலும் மேலும் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கியவண்ணமே இருக்கும் என்பதால் இனிவரும் காலங்களை ஜாதகி மிக எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது, நடைபெறும் சுக்கிரன் திசையும் ( லக்கினாதிபதி திசை பொதுவாக அனைவருக்கும் நன்மையை செய்யும் என்பது இங்கே பொருந்துவதில்லை, எந்த கிரகத்தின் திசை என்றாலும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையும் யோகமும் உண்டாகும்) ஆயுள் பாவக பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகிக்கு நன்மையை தரும் நிலை அல்ல என்பதை கருத்தில் கொள்வது  நல்லது, ஜாதகி லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து மன கவலைகளையும், சகோதர ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையையே, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்குவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டியது ஜாதகியின் கடமையாகும், வீண் மாயையில் வீழ்ந்தால் ஜாதகியின் வாழ்க்கை சுய ஜாதக வலிமைக்கு  ஏற்ப நடைமுறைக்கு  வருகிறது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 2 ஜூலை, 2016

திருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான இல்லறவாழ்க்கையும் !


திருமண பொருத்தத்தில் வரன் மற்றும் வதுவின் ஜாதகங்களில் ஏககாலத்தில் இருவருக்கும், ஒரு கிரகத்தின் திசை நடைமுறையில் இருந்தாலோ, எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தாலோ, அது பொருத்தமற்ற ஜாதக அமைப்பாக கருதப்படுகிறது, இதனால் இல்லற வாழ்க்கையில் பிரிவு நிலை வர கூடும் என்று அறிவுறுத்தப்படுகிறது, மேலும் திருமண பொருத்தம் காணும் பொழுது ஏகதிசை நடைமுறையில் இருப்பின் எவ்வித இன்னல்களை தம்பதியர் அனுபவிக்க நேரும் என்பதை  கீழ்கண்டவாறு பட்டியல் இடுகின்றனர்.

1) வது வரன் ஜாதகத்தில், இருவருக்கும் ஒரே கிரகத்தின் திசை நடைமுறையில் இருப்பின், தம்பதியருக்கு ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும், சுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் நன்மை நடைபெறும், அசுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் தீமையான பலனே நடைபெறும், மேலும் எதிர்காலத்தில் இதே நிலை தொடரும்.
2) தம்பதியரின் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்காது பிரிவை தரும், மனவாழ்க்கை சிரமத்தை தரும்.
3) திருமணத்திற்கு இது பொருத்தம் அற்ற நிலையை தரும்.
4) குழந்தை பாக்கியத்தில் தடையை தரும்.
5) தம்பதியரின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்கள் அதிக அளவில் வரும்.
6) உடல் மனம் மற்றும் பொருளாதார சிக்கல்களை தம்பதியர் இருவரும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
7) மறுமணம் செய்யும் சூழ்நிலைக்கு இருவரையும் ஆளாக்கும்.

வது வரன் ஜாதகத்தில் ஏக காலத்தில் ஒரு கிரகத்தின் திசை நடைபெறுமாயின், மேற்கண்ட காரணங்கள் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு வரும் என்பதால் திருமண பொருத்தம் இல்லை என நிராகிக்கின்றனர், இதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, கீழ்கண்ட உதாரண ஜாதகங்களை துணைகொண்டு.

வரன் ஜாதகம் 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 10/07/2007 முதல் 10/07/2023 வரை )

வது ஜாதகம் 



லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 23/02/2014 முதல் 23/02/2030 வரை )

மேற்கண்ட ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்த பொழுது, ஜாதகரின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயம் யாதெனில், ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது குரு திசை நடைபெறுகின்றது, எனவே ஏக திசை நடைபெறுவதால் திருமண பொருத்தம் இல்லை, மேலும் அடுத்து வரும் சனி திசை இருவருக்கும் அதிக துன்பத்தை தரும், மணமகனுக்கு  சனி திசை ஆரம்பித்தவுடன் ( 10/07/2023) திருமண வாழ்க்கையில் பிரிவை தரும் என்பதால் இருவருக்கும் பொருத்தம் இல்லை, எனவே திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது மேற்கண்ட கூற்று  ( ஏகதிசை பொருத்தம் ) கடந்த சில வருட காலமாக பிரபல்யம் அடைந்து வருகிறது, தம்பதியர் இருவருக்கும் தற்ப்பொழுதோ, எதிர்காலத்திலோ ஒரு கிரகத்தின் திசை ஏக காலத்தில் நடைமுறைக்கு வந்தால் இல்லற  வாழ்க்கைக்கு உகந்ததல்ல, நிச்சயம் பிரிவை தரும் என்ற கருத்து ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் மேற்சொன்ன  7 காரணங்களையும் தவறான கருத்தாகவே உள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது.

மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலையை பற்றி சிந்தனைக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 5ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த நன்மைகளை  தான் கற்ற கல்வி வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாகவும், உபய மண் தத்துவ அமைப்பிலும் உள்ளது, ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை தெளிவுபடுத்துகிறது, ஒரு  நல்ல நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்துடன் ஜாதகர் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை லாபஸ்தான பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 6,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான யோக பலன்களை தந்து கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகி 6ம் பாவக வழியில்  இருந்து குறுகிய கால வெற்றிகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை, பெறுபவர் என்பதையும், 9ம் பாவக வழியில் இருந்து தமது சுய அறிவு கொண்டு கற்ற கல்வி வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதை குறிக்கிறது, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ  ராசியில் இயங்குவதால் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஜாதகியை பிரகாசிக்க செய்யும் அதன் வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, மேலும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகிக்கு மிகப்பெரிய புகழையும், பெருமைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

வரனின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை பலனை தருவது, ஜாதகருக்கு வாக்குவாத தன்மையை அதிகரிக்கும், வருமானம் மேலோங்கும், வீண் செலவுகளை தவிர்க இயலாது, 8ம் பாவாக  வழியில் இருந்து பூரண ஆயுளை தரும், மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக, உபய காற்று தத்துவத்தில் அமைவது ஜாதகருக்கு எடுக்கும் முயற்சசிகளில் வெற்றிகளையும், திடீர் அந்தஸ்த்தையும் தரும், எனவே சனி திசை ஜாதகருக்கு 30% விகித  இன்னல்களையும், 70% விகித நன்மையையும் தரும் என்பதால் மன வாழ்க்கையில் நிச்சயம் பிரிவு வாராது. ஆயுள் பாவகம் உபய ராசி என்பதால் இன்னல்கள் பெரிய பாதிப்பை தாராது.

வதுவின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

1,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், யோக பலனை தருவது, ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும்,லாபமும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கை மிக்க மன ஆற்றலையும், முற்போக்கு சிந்தனையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை மூலம் மிகுந்த நன்மைகளையும், வாழ்க்கை துணையுடன் சந்தோஷமான யோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க வாழ்க்கையையும், தேடிவரும் அந்தஸ்த்தையும் ஒருங்கே பெரும் யோகத்தை தரும், மேலும் ஜீவன வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றங்களையும் வாரி வழங்கும் என்பதால் இந்த ஜாதகங்களை திருமணத்தில் இணைக்கும் பொழுது இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிக்கும் என்பதில் மாற்றம் இல்லை, இதுவே மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலை.

பட்டியல் இட்ட 7  கருத்துக்களுக்கு உண்மை விளக்கங்கள் :

1) வது வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால், இருவருக்கும் நடக்கும் சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஏனெனில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது  என்ற அடிப்படை விஷயம் தெரிந்தால் மட்டுமே அது நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா என்பதில் தெளிவு பெற இயலும், சுப கிரகத்தின் திசை நன்மையை செய்யும் என்று கருதுவதும், அசுப கிரகத்தின் திசை தீமையை செய்யும் என்று கருதுவதும் ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்தாக அமையும், மேலும் ஒரு கிரகத்தின் திசை இருவருக்கும் நடைபெற்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும் என்று நினைப்பதும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதே.

2) தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியரின் இருவரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இல்லற வாழ்க்கையில் பிரிவு வரும், அதுவும் நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். சுய ஜாதகத்தில் இருவருக்கும் 2,7ம் வீடுகள்  வலிமை பெற்று இருப்பின் பிரிவு என்ற நிலை வர வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்க அமசமாகும்.

3) தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் பொருத்தம் உண்டு, 

4) குழந்தை பாக்கியத்திற்கும் திசாபுத்திக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை தரும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால், நடைபெறும் திசை வலிமை அற்ற பலனை நடத்தினாலும் தம்பதியருக்கு நல்ல குழந்தை பேறு அமையும், மேற்கண்ட இருவரது சுய ஜாதகத்திலும் 5ம் பாவகம் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.

5) பொருளாதார சிக்கல்களுக்கும் நடைபெறும் ஏக திசை பலாபலன்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் பொருளாதார நன்மை தீமைகளை தருவதற்கு பாவக வலிமையே காரணமாக அமையும்.

6) சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மேற்கண்ட இன்னல்கள் வரக்கூடும், மேற்கண்ட ஜாதகங்களில் இந்த பாவகங்கள் நல்ல வலிமையை பெற்று இருக்கின்றது.

7) சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மறுமணம் அமையும், அதற்கும் 11ம் பாவகம் வழிகாட்ட வேண்டும்.

குறிப்பு :

திருமண பொருத்தம் காணும் பொழுது வரன்வதுவின் ஜாதகங்களில், ஏகதிசை நடைமுறையில் இருந்தால், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்று பொருத்தம் நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது, மேலும் இருவருக்கும் ஏகதிசை நடைமுறையில் இருந்தால் பொருத்தம் இல்லை என நிர்ணயம் செய்வது, வது வரனின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்றுநடத்தும் பாவக வலிமையை பற்றியும், அவை தரும் நன்மை தீமையை பற்றியும் சிறிதும் அறியாமல் செய்யும் முடிவே அன்றி வேறு எதுவும் உண்மை இல்லை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 25 ஜூன், 2016

திருமண தடையை தரும் ராகுகேது ! சர்ப்ப தோஷம் உள்ள ஜாதக அமைப்பு !




சாயா கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் சுவீகரிக்கும் தன்மை கொண்டது என்பதை, நாம் இதற்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் இருந்து அறிந்திருப்போம், இயற்கையில் ஒரு பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தரும் அமைப்பில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகத்தையும் பெறுவதில் எவ்வித குறையும் இருக்காது, மாறாக சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தீமையை தரும் அமைப்பில் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, சாயா கிரகங்கள் தரும் அவயோகங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஜாதகருக்கு நிச்சயமாக தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் சாயா கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்கள் உறுதியாக வரும், அதன் தாக்கத்தை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும். 

கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்க பெறுவோம் 


லக்கினம்  : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம் 

ஜாதகிக்கு ரிஷப லக்கினம், சாயா கிரகங்களான ராகுகேது பாவக அமைப்பில், ஆயுள் ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், அமர்ந்திருக்கின்றது, தாம் அமர்ந்த பாவக அமைப்பிற்கு இருவரும் வலிமை அற்று தீமையை செய்யும் நிலையில் உள்ளனர், ஜாதகிக்கு வயது 25 திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்து கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் வலிமை அற்று ஆளுமை செய்யும் கேதுபகவானே இதற்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார், ஒருவரது சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமோ, 7ம் வீடான களத்திர ஸ்தானமோ வலிமை குறைவாகவோ, பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை தாமதப்படும் என்பது விதி, இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் தனது கட்டுப்பாட்டில் 2ம் பாவகத்தை முழுவதும் சுவீகரித்து, கடுமையான பாதிப்பையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், ஜாதகிக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகத்தை பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் ராகுகேது தோஷம் என்றும், சர்ப்பதோஷ ஜாதகம் என்றும், இதனால் திருமணம் தாமத படுவதாகவும், இதை போன்றே ராகுகேது, சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.

மேற்கண்ட ஜோதிடர்களின் கருத்திற்கு "ஜோதிடதீபம்" மாற்று கருத்தையே முன்மொழிகிறது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு, திருமண தடை, குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள், போதிய வருமானம் இன்மை, எந்த விஷயத்திலும் வாக்குவாதம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பேசும் பேச்சல் வம்பு வழக்கு, வீண் தகராறு,  இடம் பொருள் ஏவல் தெரியாமல் செயல்படும் தன்மை, வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம், போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கும், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் இருப்பின் ஜாதகரின் இல்லற வாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பையும், மன வாழ்க்கையில் பிரிவையும் நிச்சயம் தரும், எனவே சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ களத்திர ஸ்தானமோ வலிமை அற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அப்படி வலிமையுடன் அமைந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மை நடைபெறும்.

 தனது வாழ்க்கை துணையின் வலிமை பெற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தான பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சுவீகரிக்க இயலும், இதுவே 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கைக்கு உகந்தது, இல்லறவாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும், பிரிவற்ற நிலையையும் தரும், மாறாக ஜாதகருக்கு ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் உள்ளது எனவே இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் இந்த தோஷம் இருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாக முடிவு செய்து, வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தல், இல்லறவாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பை தந்து, பிரிவை நோக்கி வெகு வேகமாக அழைத்துச்செல்லும், மேலும் திருமணம் செய்த பிறகு நம்மால் ஏதும் செய்ய இயலாது, இதனால் பெற்றோருக்கும் மன உளைச்சல், திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு மன உளைச்சல், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலையோ அந்தோ பரிதாபம், இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலர் அமைப்பில் இருந்தும் சுதந்திரம் மிக்க தனிப்பட்ட சுய நல போக்கே அதிகம் உள்ளது, இதற்கு சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலை காரணமாக உள்ளது, எனவே வாழ்க்கை துணையின் கருத்துக்கும், அவர்களது விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் ஒரு பொருத்தமான வரனோ அல்லது வதுவோ அமைய வேண்டும் எனில், தமது ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு சிறந்த பரிகாரமாகவும் அது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகிக்கு 2ல் வலிமை அற்று அமர்ந்த கேது பகவான், வீண் வாக்குவாதத்தையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும், போதிய வருமானம் அற்ற சூழ்நிலையையும் வழங்குகின்றார், மேலும் தனது பேச்சில் அறிவு பூர்வமான விஷயங்கள் அற்ற தன்மையையும், பேச்சின் மூலம் முயற்ச்சியை தடுக்கும் பிற்போக்கு வாதங்களையும் கையாள்கிறார், இது இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் முயற்ச்சிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடைகளை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணையின் நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரும் வருமானத்தை கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தும் வல்லமையும் ஜாதகிக்கு இல்லை, வீண் செலவுகளால் தமது வாழ்க்கை  துணைக்கு கடும்  நிதி நெருக்கடியை தருவார், இல்லையெனில் வாழ்க்கை துணையை தனது வீண் வாக்குவாதத்தால் செயல் இழக்க செய்வார், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பேச்சு குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளை தரும், குறிப்பாக தனக்கு வரும் வாழ்க்கை துணை மேற்கண்ட இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தரும், இதனால் ஜாதகிக்கு கடுமையான இன்னல்கள் வந்து சேரும், எனவே தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே  அவரால் ஜாதகியை அனுசரித்து செல்ல இயலும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும், கருத்தில் கொள்வது நன்மை தரும்.

ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஆயுள் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், ஆயுள் பாவகம் என்பது ஜாதகியின் ஆயுள், தனக்கு வரும் திடீர் விபத்து , திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், ரண சிகிசிச்சை, உடல் நல கோளாறு, தனது உடல் ஆரோக்கியத்தை தாமே பாதிக்க செய்யும் நிலை, என்ற வகையில் இன்னல்களை தரும், குறிப்பாக தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் மற்றும் வருமானம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வது ஆயுள் பாவகமே, எனவே ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருள் மற்றும் வருமான இழப்பை தவிர்க்க இயலாது என்பது உறுதியாகிறது, மேலும் கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரிய அளவினாலான நன்மைகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை பெற இயலாது என்பதும் உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை, சுலப பொருள் வரவையும் குறிக்கும், இந்த ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் வலிமையின்றி அமர்ந்த ராகு பகவான் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து, வீண் பேச்சு, அவமானம், திடீர் இழப்பு, மனம் மற்றும் உடல் வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருவார், மேலும் ஜாதகியின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பித்ருக்கள் செய்த வினை பதிவையும், தான் செய்த கர்ம வினை பதிவையும் ஏக காலத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அனுபவிக்கும் நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

 மேற்கண்ட ஜாதகமே ராகுகேது பாதிப்பிற்கு உதாரணமாக விளங்குகிறது, ஜாதகிக்கு 2ல் அமர்ந்த கேதுவும், 8ல் அமர்ந்த ராகுவும் முழு வீச்சில் இன்னல்களை வாரி வழங்குகின்றனர், நல்ல வேலை தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ராகு கேதுவால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, 3,5,9,11,12ம் வீடுகள் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது, 3ம் பாவக வழியில் இருந்து சுய முயற்ச்சியில் வெற்றியையும், 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும், 9ம் பாவக வழியில் உயர்கல்வி மாற்றும் ஆராய்ச்சி படிப்பில் சிறப்பான இடத்தையும், வெளியில் சென்று பணியாற்றுவதால் நல்ல வருமானத்தையும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இன்னல்களையும் தந்து கொண்டு இருக்கிறது, திருமண தாமதத்திற்கு இதுவும் காரணமாக அமைகின்றது.

ஆனால் அடுத்து வரும் சூரியன், சந்திரன் திசை இரண்டும் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு, ஜாதகிக்கு அமையும் திருமண வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கைக்கும் உகந்தது அல்ல, எனவே திருமணம் செய்து கொள்ளும் முன், மிகுந்த எச்சரிக்கையுடன் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஒரு வரனை தேர்வு செய்து மணம்முடிப்பது ஜாதகிக்கு நன்மையை தரும், இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை, சூரியன் திசையிலேயே ஆயுள் பாவகத்தில் வலிமை அற்று அமர்ந்திருக்கும் ராகு பகவான் எவ்வித தயக்கமும் பிரிவை தந்து, இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

குறிப்பு :

ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித நன்மைகளை அனுபவிக்கும் நிலையை தரும், ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித தீமைகளை அனுபவிக்கும் நிலையை தரும், சுய ஜாதகத்தில் ராகுகேது கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை, நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ராகுகேது பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களால் ஜாதகருக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன்வர்ஷன் 
9443355696

வெள்ளி, 24 ஜூன், 2016

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக கூறுகின்றனர் இது உண்மைய ? எனக்கு திருமணம் நடக்குமா? எந்த வருடத்தில் திருமணம்?


கேள்வி :

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக  கூறுகின்றனர் இது உண்மைய ? 
எனக்கு திருமணம் நடக்குமா? 
எந்த வருடத்தில் திருமணம்?


சாயாகிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் யோகத்தை தரும் நிலையை பற்றியும், அவயோகத்தை தரும் நிலையை பற்றியும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! மேலும் மேற்கண்ட கேள்விகளுக்கு உண்டான உண்மையான பதில் பற்றி ஆய்வு செய்வோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : பூரம்2ம் பாதம்

ஜாதகத்தில் 2,8ல் ராகு கேது இருப்பது சர்ப்ப தோஷமாக கருதப்படுகிறது, உண்மையில் கீழ்கண்ட ஜாதகத்தில் 2,8ல் அமர்ந்த ராகு கேது மிகவும் வலிமையுடன் இருப்பதும், தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும் தோஷத்தை தர வாய்ப்பில்லை, தாம் அமர்ந்த பாவகத்தை தமது  கட்டுப்பாட்டில் முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் வல்லமை பெற்ற கிரகங்களான ராகுகேது இந்த ஜாதகத்திலும் தனது பணியை சிறப்பாகவே செய்துகொண்டு இருப்பது கவனிக்க தக்கது, மகர லக்கினத்திற்கு 2ல் அமர்ந்த ராகு, ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தை மிகுந்த வலிமை பெற செய்கிறார், மேலும் கும்ப ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டத்தின் தன்மையை காட்டுகிறது, ஜாதகரின் அறிவு திறனும், அதிர்ஷ்டமும் ஒன்று இணைந்து  ராகு பகவான் தரும் வலிமையால் யோகங்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் ஜாதகரின் வருமானம் என்பது ஸ்திர தன்மையுடன், ஜாதகரின் அறிவு திறன் கொண்டும், பேச்சு திறன்கொண்டும் ஈட்டப்படுவதாக அமையும், இதற்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவானின் ஆளுமையே காரணமாக அமைகிறது.

சிம்மத்தில் அமர்ந்த கேது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியினை ஆயுள் பாவகமாக கொண்ட மகர லக்கின அன்பருக்கு, நீண்ட ஆயுளை வாரி வழங்கி உள்ளதும், ஆயுள் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் கவனிக்க தக்கது, மேலும் தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகரின், வாழ்க்கையில் திறம்பட செயல்படும் நிர்வாக திறமையின் காரணமாக புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்கும் என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் அறிவு திறனையும், சுறு சுறுப்பு மிக்க  செயல்பாடுகளையும் கட்டியம் கூறும், ஜாதகர் மருத்துவம் சார்ந்த விஷயங்கள், காப்பீடு சார்ந்த விஷயங்கள் மூலம், மிகப்பெரிய  பொருளாதார சேர்க்கையை பெறுவதற்கு உண்டான ஞானத்தை வழங்குவார் என்பது தெளிவாகிறது, இன்ஷுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் யோகத்தையும் வாய்ப்பையும்  கேது பகவானே வழங்குகிறார் என்றால் அது மிகையில்லை, ஆயுள் பாவகம் ஜாதகரின் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புலனுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை வழங்கும் என்பதால், புவியில் மற்றவர்கள் மனதில் உள்ள எண்ணத்தை அறியும் யோகத்தை தரும், மேலும் முக்காலங்களையும் கண்டு உணர்ந்து செயலாற்றும் யோகத்தை தரும். பிரபஞ்ச ரகசியங்களை உள்ளுணர்வாக சுவீகரிக்கும் ஆற்றலும், எண்ணிய எண்ணத்தை செயல்வடிவமாக காணும் பேராற்றலையும் வாரி வழங்கும், முன்னில் கும்பத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு சகல அதிகாரம் சுகபோகத்துடன்  கூடிய அதிர்ஷ்டத்தை வழங்குகின்றார், சிம்மத்தில் அமர்ந்த கேது அறிவு திறன் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஞானத்தை வாரி வழங்குகிறார், எனவே ஜாதகர் தனது பிறவி பயனை முழுவதும் தங்குதடையின்றி பெறுவதற்கு சாயா கிரகங்கள் 100% விகித யோகங்களை வாரி வழங்குகின்றது என்பதால் இந்த ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மையாகிறது 

எனவே மேற்கண்ட ஜாதகம் சாயாகிரகங்கள் வலிமை பெற்ற யோக ஜாதகமாக கருதுவதே உண்மையாகிறது, மேலும் 2,8ல் சாயா கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டே, ஜாதக பலன் காண முற்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன் காண உதவி புரியும்.

திருமணம் நடக்குமா என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்"  வழங்கும் பதில் 100% விகிதம் நடைபெறும் என்பதை, சுய ஜாதக பாவக வலிமை கொண்டு வழங்குகிறது.

திருமணம் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு         "ஜோதிடதீபம்" நடைபெறும் திசாபுத்திகள் வழங்கும் பலன்கள் அடிப்படையில் நடைபெறும் "செவ்வாய் திசையில்" எதிர்வரும் "சனி புத்தியில்" நடைபெறும் என்று தெளிவு படுத்துகிறது.

மேலும் மேற்கண்ட ஜாதகம் எப்படி சாயாகிரகங்களின் வலிமையை பறைசாற்றுகின்றதோ, அதேபோல் சாயா கிரகங்கள் வலிமை அற்ற நிலையில் சுய ஜாதகத்தில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் பற்றியும் துன்பங்கள் பற்றியும் விளக்கம் "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் உள்ள ஜாதகத்தை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 22 ஜூன், 2016

சுக்கிரன் திசை எனது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ளது, இதனால் எனக்கு சுகபோகங்களும் நன்மையும் பெருகுமா ?


கேள்வி :

அய்யா எனக்கு யோகாதிபதி சுக்கிரன் திசை நடைபெறுவதாகவும், இந்த சுக்கிரன் திசை அனைத்து நன்மைகளையும் தரும் என்கின்றனர், சுக்கிரன் திசையில் நான் பெரும் யோகங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெளிவுபடுத்தவும்.

பதில் :

தங்களின் ஜாதக நிலை


லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம்

 தங்களுக்கு  தற்போழுது சுக்கிரன் திசை 08/03/2013 முதல் 08/03/2033 வரை நடைபெறுகின்றது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விளக்கமாக காண்போம் அன்பரே! அதற்க்கு முன்  தங்களின் சுய ஜாதக பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே!

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
1,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.
2,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் உள்ளது, 2,6,8,9,12ம் வீடுகள் பாதிப்பையும், 3,5,11ம் வீடுகள் கடுமையான பாதிப்பையும்  பெற்று இருக்கின்றது, மேலும் தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 7ம் பாவகத்தில் அமர்ந்து, திடீர் இழப்பை தரும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் தேவையற்ற மருத்துவ செலவினங்கள், திடீர் விபத்து, எதிர்பாராத பொருள் இழப்பு, மற்றும் அவசரப்பட்டு செய்யும் காரியங்களில் இன்னல்கள், மன கவலைகள், வீண் சிரமங்கள், மற்றவர்களாலும் வாழ்க்கை துணையினாலும் இழப்புகள், விரையங்கள் என சற்று சிரமத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும், தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால் பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே உண்மை.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஆனால் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம், லக்கினாதிபதி மற்றும் யோகாதிபதி திசா புத்தி என்றாலும் சரி இது விதிவிலக்கல்ல, நடைபெறும் திசா புத்தி எதுவென்றாலும் சரி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே  சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நடைபெறும், மாறாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களுமே நடைமுறைக்கு வரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது அவசியமாகிறது.

தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை, யோகாதிபதி திசை என்ற போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பானது, 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறுவது தங்களுக்கு நன்மையை தரும் அமைப்பல்ல, மேலும் ஆயுள் பாவகம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது தங்களின் அறிவு திறனை பாதிக்கும், மேலும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தங்களுக்கு எதிர்பாராத இன்னல்களை வழங்க கூடும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமான சிம்மமும் பாதிக்கப்படுவதும், நடைபெறும் சுக்கிரன் திசை பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, தங்கள் தங்களது பூர்வீகத்தில் சிறப்பான ஜீவனத்தை தாராது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான யோகங்களையும் பெற இயலாத நிலையை தரும்,  குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், ஜீவன முன்னேற்றமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வாழ்க்கை நடத்துவது சகல யோகங்களையும் தரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகுக்கும்.

மேலும் தங்களது சுய ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும் திசா புத்திகள்  பற்றியும், தீமையையும் அவயோகத்தையும் தரும் திசாபுத்திகள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜெனன காலத்தில் அமைந்த சனி திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,

2வதாக நடைபெற்ற புதன் திசை  ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,

3வதாக நடைபெற்ற கேது  திசை  ( புத்தி ) தங்களுக்கு சுக ஸ்தானமான 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும்,

4வதாக தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தந்துகொண்டு இருக்கின்றது.

5வதாக நடைபெற இருக்கின்ற சூரியன் திசையும் ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

6வதாக நடைபெற இருக்கின்ற சந்திரன் திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

7வதாக நடைபெற இருக்கின்ற செவ்வாய் திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

8வதாக நடைபெற இருக்கின்ற ராகு திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

9வதாக நடைபெற இருக்கின்ற குரு திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

பெரும்பாலான திசா புத்திகள் பாதிப்பான பலனை தருவதால் தங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் அல்லது வலிமை பெற்ற ஜாதகத்தை சார்ந்தவர்களின் நட்பு மற்றும் வலிமை மிக்க கூட்டாளிகள் தொடர்பை பெறுவது மிகுந்த நன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்ற ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வது சகல யோகங்களையும் தரும், தங்களுக்கு பிறக்கும்  குழந்தைகள் ( பூர்வீகத்தை விட்டு வெளியேறினால் ) வழியில் இருந்து யோகங்களை அனுபவிக்க இயலும் என்பதை கருத்தில் கொள்க, சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை வழங்கும், 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நிலை, சிறப்பான மன நிலை, 4ம் பாவக வழியில் இருந்து வசதிமிக்க வீடு வண்டி வாகனம், சொத்துசுக சேர்க்கை, 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், சிறப்பான கூட்டாளிகள், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான பொருளாதார சேர்க்கை என தங்களின் வாழ்க்கையில்  நன்மைகளுக்கு குறைவு இருக்காது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696