சனி, 19 மே, 2018

7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா ? இல்லற வாழ்க்கை அமையாதா ?


கேள்வி :

  7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல்  இருப்பது நல்லது என்று என்னை பயமுறுத்திவிட்டார், திருமணம் எனக்கு நடக்குமா ? தங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். எனது எதிர் காலம்,  குடும்ப வாழ்க்கை பற்றி பயம் கொள்ளும் விதமாக  ஏதும் சொல்லாமல், நல்ல வழிகாட்டுதல்களை கூறவும், இலங்கையில் எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் என்னுடைய நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் என்று கூறுகின்றனர் இது சரியானதா ? நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்கள் என்ன ?


பதில் :

 திருமண தடைகள் ஏற்படுவதற்கு ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் அமர்வது மட்டுமே காரணமாக அமைந்து விடாது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம், 7ம் ராசியான துலாம், இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டோ அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் திருமண தடைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை அற்ற பாவகங்களின் பலனை நடைமுறைப்படுத்தினால் ஜாதகர் திருமணம் சார்ந்த முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தங்களுக்கு திருமணம் தாமதமாக என்ன காரணம் ? என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, தங்களது சுய ஜாதக அமைப்பின்படி, லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மட்டும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறது, இல்லற வாழ்க்கையை குறிக்கும் மற்ற வீடுகளான 5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக 1,5,7,11,12ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களுக்கு 1,5,7,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னலைகளை தரும் அமைப்பாகும், தங்களின் திருமண முயற்சிகளில் வரும் தோல்விகளுக்கு, திருமண தடைகளுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவதும் இதுவேயாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் 2,3,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவக்கங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், திருமண தடைகளுக்கு ராகு ஓர் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவகங்கள் கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால், தங்களுக்கு நல்ல இல்லறமும் , சிறப்பான குடும்பமும் அமையும் இதில் மாற்றம் இல்லை தாங்கள் தேர்வு செய்யும் மணப்பெண்ணின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, தங்களின் சீரிய முயற்சி நல்லொதொரு வாழ்க்கை துணையை அமைத்து தரும்.

சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது  தங்களின் திருமண வாழ்க்கைக்கு பல தடைகளை தந்தபோதிலும், குடும்ப ஸ்தான வலிமை தங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, இனிமையான இல்லறம் காணுங்கள் வாழ்த்துக்கள் அன்பரே !

 நடைமுறையில் உள்ள புதன் திசை தங்களுக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அதே வேளையில் 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த இன்னல்களை தருவது தங்களுக்கு வெகு சிரமங்களை தரும் அமைப்பாகும், வீடு, வண்டி வாகனம், சொத்து  சுக சேர்க்கை போன்ற அமைப்பில் சிரமங்களையும், வீண் செலிவினங்கள், எதிர்பாராத திடீர் இழப்பு, மருத்துவ செலவுகள், என்ற வகையில் துன்பங்களை  தரக்கூடும், தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாடும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணையை தேடி அமைத்துக்கொள்வது, தங்களின் வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை  வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 எதிர்வரும் கேது திசை தங்களுக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்ற போதிலும், அதற்க்கு பிறகு வரும் சுக்கிரன் தசை 20 வருடம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ( சுக்கிரன் திசை 20 வருடமும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை  நல்குகிறது ) எனவே எதிர்காலம் தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதால் எஜென்ஜி, தரகு, கமிஷன் மற்றும் வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்களை பெற தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

குறிப்பு :

  ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக, ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரனின் அந்தரம் சிறப்பான மாற்றங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, திருமணம் சார்ந்த முயற்சிகளை முறையாக மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுக .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 17 மே, 2018

குழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா ?


கேள்வி :

 வணக்கம் அய்யா ,

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படும் என்றும், குழந்தையின் வாழ்க்கையும் சீரழியும் என்று ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் ஜோதிடர்கள் கூறியுள்ளனர், இது உண்மையா ? மேலும் எனது குழந்தையின் ஜாதகத்தில் 2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர் இது உண்மையா? எனது குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.


லக்கினம் : மகரம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படுமா ?

பதில் :

சுய ஜாதக வலிமையை உணராமல், நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலையை மட்டும்  கருத்தில் கொண்டு, பிதற்றும் வாய்ஜாலமாகவே இதை "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது கேள்வியில் 9பதுக்கு உடைய கிரகம் 8ல் மறைவு என்பதாக உள்ளது, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம், தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 9ம் வீட்டிற்கு அதிபதி புதன் என்று வைத்துக்கொண்டாலும், அவர் லக்கினத்திற்க்கு 7ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை, ஏனெனில் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 144:53:10 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 178:39:51 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ஆயுள் பாவகத்திற்கு உற்பட்ட பாகையில் புதன் அமராமல், சிம்ம ராசியில் 7ம் பாவகத்திற்கு உற்பட்ட ( 7ம் பாவகம் கடக ராசியில் 110:29:54 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில்  144:53:10 பாகை வரை வியாபித்து நிற்கிறது ) 132:59:33 பாகையில் அமர்ந்திருப்பதால் 9 பதுக்கு உடைய கிரகம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை மேலும் தனது பாவகத்திற்கு ( 9ம் பாவகத்திற்கு ) 11ல் அமர்ந்திருப்பது மிகுந்த சுபயோகங்களை 9ம் பாவக வழியில் இருந்து தரும் என்பதே உண்மை, 9ம் பாவகம் என்பது தகப்பனை குறிக்காது, தகப்பன் வழியிலான பாக்கியத்தை ( முன்னோர்கள் செய்த நற்பதிவுகள் ) குறிக்கும் என்பதால் தாங்களும் தங்களது குடும்பமும் யாதொரு கலக்கமும், பயமும் கொள்ளத்தேவையில்லை, தங்களின் உயிருக்கு தங்களின் குழந்தையின் ஜாதகத்தால் சிறு இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியுடன் கூற கடமைப்பட்டுள்ளது.

 மேலும் குழந்தையின் ஜாதகத்தில் தாய் தகப்பனை குறிக்கும் 4,10ம் வீடுகள் முறையே 4,10ம் பாவகங்களுடனே சம்பந்தம் பெறுவதால் பெற்றோருக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் யோக ஜாதகமாகவே காணப்படுகிறது என்பதால் தங்களுக்கும் தங்களது குழந்தைக்கும் மிகுந்த நன்மையையும், யோக வாழ்க்கையுமே  வாரி வழங்கும், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை சிறிதும் தாங்களும், தங்களது குடும்பமும் நம்பாமல் இருப்பது தங்களது வாழ்க்கையில் சிறப்புகளை சேர்க்கும்.

2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர்  இதனால் குழந்தையின் வாழ்க்கையும் சீரழியுமா ?

பதில் :

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்று இருப்பது மிகுந்த நமைகளை தரும் குறிப்பாக, தங்களது குழந்தையின் ஜாதகத்தில் பாவக கணிதத்தின் அடிப்படையில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் அமரவில்லை, லக்கினம் ( கும்பம் ) மற்றும் களத்திர ( சிம்மம்) ஸ்தானமான 1,7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை, மேலும் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது மற்றும் ராகு பகவான்  தாம் அமர்ந்த பாவகத்திற்கு  100 % விகித வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்து இருப்பது குழந்தைக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ராகு பகவானுடன் சேர்ந்த சந்திரன்,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தரும் சுபயோகங்களை தனது பலனாக சுவீகரித்து ராகு பகவானே தருகிறார் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

சூரியன் கடகத்தில் உள்ள சத்துரு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால், களத்திர ஸ்தானம் சார்ந்த கவலைகளை தவிர்த்துவிடுவது நல்லது, சுய களத்திர ஸ்தானம் ராகு பகவானால் 100% விகித வலிமையுடன் திகழ்வதால், களத்திர பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும் சுபயோகங்களை  தங்கு தடையின்றி பெறுவார் என்பதனையும், ஜாதகருக்கு யாதொரு களத்திர தோஷமும் இல்லை என்பதையும்  தெளிவுபடுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது நண்பரே !

குறிப்பு :

சுய ஜாதக வலிமை என்பது அவரவர் சுய ஜாதகத்தில் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு, லக்கினம் முதல் 12 பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், மேலும் இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  துல்லியமான பலாபலன்களை காண வழிவகுக்கும், நவகிரகங்களின் ஆதிக்கம்  என்பது பொதுவானது, இது அனைவருக்கும்  சரிநிகர் ஜீவகாந்த சக்தியை வழங்கும் தன்மை கொண்டதாகும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை சுவீகரித்து ஜாதகருக்கு யோகங்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள்  நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை  சுவீகரிக்க வலிமை அற்று அவயோக பலன்களை நடைமுறைப்படுத்தும் என்பதால், நமது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை பற்றி ஓர் தெளிவான விளக்கம் பெற்று இருப்பது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 16 மே, 2018

கால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் ஆளுமை திறன் !


 நவ கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது, அதற்க்கு மேலான வலிமையை பெற்றது ராகு, சுய ஜாதகத்தில் மேற்கண்ட சாயாகிரகங்களின் ஆளுமை என்பது விவரிக்க இயலாத ஒன்றாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரது ஜெனன ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், ராகுகேது அமர்ந்த பாவக வழியிலான சுபயோகங்களை தங்கு தடையின்றி சுவீகாரம் செய்வார், அபரிவித நன்மைகளும் சுபயோகங்களும் ஜாதகரை தேடிவரும் வரும் இதில் சிறிதும் மாற்றம் இருக்காது, அதே சமயம் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கவில்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், எவ்விதத்திலும் ஜாதகர் சாயாகிரகங்கள் அமர்ந்த பாவக வழியிலான சிறு நன்மைகளையும் பெற இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் அமரும் ராகு கேது தோஷத்தை தரும் என்பதாகவும், சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பின் கால சர்ப்ப தோஷத்தை தருவதாகவும் பொதுவான கருத்து உள்ளது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதனை "ஜோதிடதீபம்" அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளது, மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவுபடுத்த உவகை கொள்கிறது, ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

மேற்கண்ட கும்ப லக்கின ஜாதகருக்கு ராகு லக்கினம் எனும் முதல் பாவகத்திலும், கேது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு கடுமையான ராகுகேது தோஷத்தை ஏற்படுத்தும் என்றும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்வது மிகுந்த இன்னல்களை தரும் என்றும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது மற்றும் இல்லற வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க நேரும் என்றும் ஜாதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொதுவாக சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்வது தோஷம் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, தான் அமர்ந்த பாவகத்திற்கு எவ்வித வலிமையை பெற்று தருகிறது என்று தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை  தவிர்த்து 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, தெளிவான ஜாதக பலாபலன்கள் காணவும் இது உதவாது.

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும், லக்கினம் சம வீடு என்ற முறையில் அங்கு அமரும் ராகு ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ( கேந்திர ஸ்தானம் ) அமரும் கேது பகவானும் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு 100% விகித வலிமையை தருவதால், களத்திர ஸ்தான அமைப்பிற்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், எனவே மேற்கண்ட ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திரம் என இரண்டு பாவக வழியில் இருந்தும் சாயா கிரகங்களால் 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்க வல்லமை உடையவராக திகழ்கிறார்.

மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான், லக்கினம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர காற்று ராசியில்  10 பாகைகளும், உபய நீர் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த அறிவாளியாகவும், வளரும் சூழ்நிலையில் யோகத்தை பெற்றவராகவும், பரந்த மனப்பக்குவம், பெருந்தன்மையான குணத்தை பெற்றவராகவும் ஜாதகர் திகழ்கிறார், இது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு பகவானால் வழங்கப்படும் சுபயோகம் ஆகும், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர நெருப்பு ராசியில் 10 பாகைகளும், உபய மண் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த சுறுசுறுப்பு, சுய கட்டுப்பாடு, தெவீக அனுக்கிரகம், சமயோசித புத்திசாலித்தனம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் வல்லமை கொண்டவராக திகழ செய்யும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருப்பின் தான் அமர்ந்த பாவகத்திற்கு அது தரும் பாலாபலன்கள் என்ன ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ஜாதக பலன்களை விவரிக்க வேண்டும், மேற்கண்ட 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிடகணிதத்திற்கு புறம்பானது என்பதை கருத்தில் கொள்வது சிறப்புகளை தரும்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக ராகு கேது தோஷம் காரணமல்ல, நடைபெறும் ராகு திசை 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை மட்டும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இணைவதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, "வாழ்த்துக்கள்"

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை பெறுவார் இதில் மாற்றம் இல்லை,  சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை இழக்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித அவயோகங்களை பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, எனவே சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த  பாவக வழியில் இருந்து பெரும் வலிமை என்ன ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை பெற உதவி புரியும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 15 மே, 2018

திருமணம் தாமதமாக காரணம் என்ன ? யோகமான வாழ்க்கை துணை அமையுமா ? அமையாத ?


 " பருவத்தில் பயிர் " செய்யவில்லை எனில், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், பொதுவாக தொழில், பொருளாதரம் , சமூக அந்தஸ்து, சுய முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிறுத்தி பருவ வயதில் இல்லறவாழ்க்கையில் இணையாமல் தாமாதப்படுத்துவதும், தள்ளிபோடுவதும் ஆண் பெண் இருபாலருக்கும் பருவ வயது கடந்த பிறகு கடும் நெருக்கடிகளை வாரி வழங்க ஆரம்பித்து விடும், சரியான வரனோ அல்லது வதுவோ அமைவது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும், காலம் கடந்து செய்யும் திருமண வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பதியரே அதிகம் உண்டு, குறிப்பாக ஆணுக்கு 27, பெண்ணுக்கு 24 அகவைக்குள் இல்லற வாழ்க்கையில் இணைந்துவிடுவது நல்லது இதற்க்கு அதிகமாக தாமதம் ஆவது என்பது தவறான ஆலோசனையின் பெயரில் நமது வாழ்க்கைக்கு நாமே இன்னல்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு இணையானதாக அமைந்துவிடும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது ஆண் அல்லது பெண் இருவருக்கும் சரியான பருவ வயதில் இல்லற வாழ்க்கையில் இணையும் வாய்ப்பை நல்கிவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணிற்கு மட்டுமே திருமண வாழ்க்கை என்பது வெகு கால தாமதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக மேற்கண்ட வீடுகள் பாதிக்கப்பட்டு நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரோ, ஜாதகியோ இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல், பலவித தடைகளையும் தாமதங்களும் சந்தித்து, எவ்வித சுகபோகங்களையும் சுவீகரிக்க வலிமையின்றி தவிக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற ஜாதகரோ, ஜாதகியோ எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதை மட்டும் உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு சகல  சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, திருமணம் தாமதமாக சுய ஜாதக ரீதியான உண்மையான காரணம் என்ன என்பதனை இன்றை பதிவில் இரு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் :  அஸ்வினி 2ம் பாதம்

ஜாதகருக்கு அகவை 43 நடைபெறுகிறது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியையே சந்தித்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பின்னும், ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்கான காரணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது, எனவே ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகம் 100% விகிதம் வலிமை அற்றும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை அற்றும் இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை தடைகளுக்கும், தாமதத்திற்க்கும் அடிப்படை காரணமாக விளங்கிறது.

மேலும் ஜாதகருக்கு ( 01/02/2006 முதல் 01/02/2016 வரை ) நடைமுறைக்கு வந்த சந்திரன் திசை 10 வருடமும் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் தீமையான பலன்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரிவழங்கியது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியதுடன் கடும் நிதி பிரச்சனையை தந்தது, சந்திரன் திசை முழுவதுமான திருமண முயற்சிகள் ஜாதகருக்கு மிகப்பெரிய தோல்விகளை தந்தது என்பதே உண்மை, அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வழங்கிய போதும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2,8ம் பாவக வழியிலான இன்னல்களை வழங்கி திருமண தடைகளையும், பொருளாதார சீரழிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகரின் திருமண ஆசைகளுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துவிட்டது, எதிர்வரும் புதன் புத்தியில் ஜாதகரின் சீரிய முயற்சி இருப்பின், திருமண வாழ்க்கை கைகூடி வரலாம், இறை அருள் கருணை புரியட்டும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டும், சந்திரன் மற்றும் செவ்வாய் திசை வலிமையற்ற 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதுமே ஜாதகரின் திருமண தடைகளுக்கு அடிப்படை காரணம் என்பதை தெளிவுற கூற இயலும், ஜாதகர் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி, சுய ஜாதகம் வலிமையுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்ய "ஜோதிடதீபம்" பரிந்துரை செய்கிறது. " வாழ்த்துக்கள் "


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகிக்கு அகவை 31 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்தித்துள்ளது, இதற்கான காரணம் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களையும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களையும், 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 80% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது திருமண தடைகளுக்கான அடிப்படை காரணங்கள், மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நன்மைகளை மட்டுமே வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் சனி திசையில் சந்திரன்,செவ்வாய்,ராகு புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தியதும், தற்போழுது நடைபெறும் குரு புத்தி பாதிக்கப்பட்ட 4,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு திருமண வாழ்விற்க்கான யாதொரு அறிகுறியையும் காட்டவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

எதிர் வரும் புதன் திசையும் ஜாதகிக்கு 3,7,11ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு உகந்த நன்மைகளை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதனால், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் நலம் பெறுவதே சாலச்சிறந்தது என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமண வாழ்க்கையை இனிமையாக அமைத்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 14 மே, 2018

ராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் ! பாத ஸ்தான பாதிப்புகளும் !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவகத்தில் இருந்து பெரும் புகழ் மிக்க பொறுப்புகளை வாரி வழங்கும், மிதம் மிஞ்சிய ஜீவன மேன்மையையும், தொழில் ரீதியான சிறந்த ஞானத்தையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் நல்ல வேலை வாய்ப்பில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை நல்கும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை ஆகியவை ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமைந்து இருக்கும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், வளரும் சூழ்நிலையில் சிறப்புகளையும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையையும் ஜாதகருக்கு லக்கின பாவகம் வாரி வழங்கும், வருமுன் உணர்ந்து செயலாற்றும் யோகம் ஜாதகருக்கு உண்டு.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், மனைவி வழியிலான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்துவரும் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதா அமைந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் உழைப்பிற்கு மேலான வருமானம் தேடிவரும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் ஜாதகர் பெரும் நன்மைகளை அளவிட இயலாது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அமசமாகும், ஜாதகர் செய்யும் கூட்டு முயற்சிகள் அல்லது வியாபாரம் பெரும் லாபங்களை வாரி வழங்கும், மனதிற்கு இனிய வாழ்க்கை துணையுடன், எதிர்காலத்தை ஜாதகர் நம்பிக்கையுடன்  எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழாலாம், திருமணத்திற்கு  பிறகான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சிறந்த தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பரிபூர்ணமாக அமையும்.

10ம் பாவக வழியில் சிறந்த தொழில் வாய்ப்புகளையும், சிறந்த வேலை வாய்ப்புகளையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார், எதிர்பாராத வருமான உயர்வையும், கவுரவம் மிக்க பதவிகளையும் ஜாதகர் குறுக்கியகாலத்தில்  பெறுவார், வெளிநாடுகளில் பணியாற்றும் யோகமும் அதன் வழியிலான பொருளாதர தன்னிறைவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் நபராக ஜாதகர் விளங்குவார், தடைகளை தகர்த்து வெற்றிநடை போடும் யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் முயற்சிக்கும் எந்த ஒரு காரியங்களும் நல்ல  வெற்றிகளை தரும், ஜீவன ஸ்தானம் உபய நெருப்பு ராசி என்பதால், தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில் அபரிவித முன்னேற்றங்களை நல்கும், பரிபூர்ண தொழில் வெற்றிகளை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கும்  என்பதால் ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவார்.


2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்திலே மிகவும் வலிமையுள்ள பாவக தொடர்பாக இதனை கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அளவுக்கு அதிகமான வருமானம் வந்து சேரும், குறைந்த முதலீடுகளில் அதிக லாபத்தை தரும், இனிமையான  பேச்சு திறன் ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய நன்மைகளை வாரிவழங்கும், கை நிறைவான வருமானம் ஜாதகருக்கு திடீரென தேடிவரும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஜாதகர் முறையான நிதி மேலாண்மை கொண்டவராக திகழ்வது, ஜாதகரின் பொருளாதர தன்னிறைவை பெற குறுகிய காலத்தில்  வழிவகை செய்யும், தனக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் தனது பேச்சு திறனால் தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமையை தரும், வாழ்நாள் முழுவதுமான வருமானம் ஜாதகர் தொடர்ந்து வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கையும் பெரும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், நல்ல நண்பர்கள் அவர்கள் வழியிலான முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் மனதைரியம், தெளிவான சிந்தனை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றி வாய்ப்பு, உண்மையை மதித்தல், தேடிய விஷயங்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும் தன்மை, லட்சியங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை என ஜாதகருக்கு லாப ஸ்தானம் தொடந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், திட்டமிட்டு செயல்படும் வல்லமை ஜாதகருக்கு அதிகம் உண்டு, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஜாதகருக்கு அடிப்படையிலேயே 11ம் பாவகம் வாரி வழங்கி இருக்கும் என்பது  கவனிக்கத்தக்கது, எதிர்பார்த்த எதிர்பாராத யோகங்களை ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வாழ்க்கையை மிக சிறப்பாக திட்டமிட்டு நடத்தி செல்லும் வல்லமை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

3,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த பயத்தையும், முயற்சியின்மையையும் அதிகரிக்கும், ஜாதகரின் உறுதியில்லாத தன்மை வரும் யோக பலன்கள் யாவையும் தடுத்து நிறுத்தும், வீண் மன பயம் ஜாதகரை வெகுவான காரிய வெற்றிகளுக்கு பெரும் தடையாக விளங்கும், மெய் பொருள் காணாது வாழ்க்கையில் மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு பெரும் தோல்விகளை ஜாதகர் சந்திக்க கூடும், தன்னுள்  உள்ள சுய  வலிமையை உணராமல் பல காலம் ஜீவிக்கும் தன்மையை தரும், ஜாதகரை மற்றவர்கள் வெகுவாக பயன்படுத்திக்கொள்ள கூடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, விடாமுயற்சியுடன் போராடுவதே ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், கவன சிதறல்களும், ஞாபகம் இன்மையும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், எனினும் முறையான பயிற்சியும், பரிகாரமும் ஜாதகருக்கு தெளிவான யோக வாழ்க்கையை வாரி வழக்கும், சகோதர வழி ஆதரவு ஜாதகருக்கு அமைவது மிக மிக அரிதானதாக அமையும், சீரிய நல்ல நோக்கங்கள் ஜாதகரின் மனஉறுதி இன்மையால் வெகுவாக பாதிக்கப்படும், வீரியமிக்க செயல்திறன் ஜாதகருக்கு மிக அரிதாகவே அமையும் என்பதால், சரியான தீர்வுகளை ஜாதகர் தேடுவது சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் நல்ல சுகபோகங்கள் யாவும் மற்றவர்களால் தட்டிப்பறிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்து சுகம், வண்டி வாகனம் மற்றும் இடம் பொருள்கள் யாவற்றையும் காப்பாற்றிக்கொள்ள வெகுபாடு படவேண்டி இருக்கும் என்பதால், தனது பெயரில் எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், மற்றவர்களுக்கு கொடுக்கும் பொருட்கள் யாவும் திரும்பி வருவது மிக அரிதானதாக அமையும், வண்டி வாகனங்களில் ஜாதகர் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மற்றவர்கள் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்யாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், குடியிருக்க நல்ல இருப்பிடம் அமையாது என்பதால், சுய ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக தொடர்பிலான திசை குறிக்கும் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனை வாரி வழங்கும், சமயோசித புத்திசாலித்தனமும், சிறந்த அறிவு திறனும்ஜாதகரின்  வாழ்க்கையில் கணிக்க இயலாத சுகபோகங்களை வாரி வழங்கும், தனது தொழில் வழியிலான முன்னேற்றங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதுடன், தனது புத்திகூர்மை கொண்டு செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைவார், குலா தெய்வத்தின் ஆசியும், இறை அருளின் கருணையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், என்பதுடன் அவர்கள் வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமானதா அமையும், ஜாதகர் கற்ற கல்வி எப்பொழுதும் ஜாதகருக்கு மிகுந்த உறுதுணையாக அமைவதுடன் ஆராய்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் பெரும் செல்வந்தன் ஆவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளித்து முன்னுக்கு  வருவார், சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து குழந்தைகளால் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகர் பெரும் சொத்து சுக சேர்க்கையை பெறுவார், நீண்ட ஆயுள் உண்டாகும், ஜாதகர் ஆயுள் காப்பீடு, இன்சூரன்ஜ் போனஸ், கிராஜுவிட்டி மூலம் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்து பொருட்கள் மூலம் ஜாதகர் நிறைவான வருமான வாய்ப்புகளை பெறுவார், ஏமாற்றங்கள் அனைத்தும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், தனது வாழ்க்கை துணையின் அறிவும் பொருளாதர உதவிகளும் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள் வழியில் இருந்து நன்மைகளை பெரும் யோகத்தை தரும், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் தெளிவான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் வல்லமையை தரும் மற்றவர்கள் தனம் ஜாதகருக்கு பயனுள்ளதாக விளங்கும் வருமானம் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதுடன் குறுகியகால அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும், அனைவரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது ஜாதகருக்கு பெருத்த நன்மைகளை வாரி வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல் துன்பங்கள் வெகுவாக குறையும், பெரியோர் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்கள் உதவிகளை பெற்று தரும், ஆன்மீக பெரியோர்களின் ஆசி ஜாதகரின்  வளர்ச்சியை வெகுவாக அதிகரிக்கும், நற்பெயரும் பாராட்டுகளும் ஜாதகருக்கு தேடி வரும், பழமை மிக்க புராதான பொருட்கள் அதிக அளவில் தேடிவரும்  வாய்ப்பு உள்ளது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஜாதகரனுக்கு பேருதவிகளை வாரி வழங்கும், சிறந்த அறிவாளிகவும், ஒழுக்கம் நிறைந்த பண்பாளராகவும் ஜாதகர் வாழ்நாள் முழுவது இயங்குவார், பித்ருக்கள் ஆசி  ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், தெய்வீக அனுகூலம் உண்டாகும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும், சிறந்த அறிவாளியாக திகழ்வார்.

12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகளின் சூழ்ச்சியே சாதகமாக மாறும், சூழ்ச்சிகள் அனைத்தும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும், திடீர் பதவி உயர்வு ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்டம், செய்த முதலீடுகள் வழியிலான அதீத லாபம், எதிர்ப்புகளை களைந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தன்வசம் சுவீகரிக்க செய்யும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், போதும் என்ற மனம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக சுபயோகங்களை நல்கும், தெய்வீக அனுபவமும், ஆன்மீக வெற்றியும் ஜாதகருக்கு பரிபூரண நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பு மிக்க எதிர்காலத்தை ஜாதகர் நிர்ணயம் செய்யும் வல்லமை உண்டாகும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் : ( 21/06/2012 முதல் 22/06/2019 வரை )

 5,8ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், குறிப்பாக ஜாதகரின் கல்வி ஞானம், இறை வழிபாட்டின் மூலம் சுபயோகம் பெரும் அமைப்பு, கற்ற கல்வி வழியிலான தொழில் வாய்ப்புகளை பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மற்றும் மனோதைரியம் அதிகரிக்கும் தன்மை, மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தன்மை புதிய சிந்தனை, புதிய மாற்றங்களை நோக்கி ஜாதகர் பயணிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு அதிகரிக்கும், நிறைவான தானசேர்க்கை ஜாதகருக்கு தேடிவரும், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஜாதகருக்கு சீரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், கல்வி, வேலை, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் யாவும்  ஜாதகருக்கு படிப்படியாக அமையவரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தற்போழுது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கையும், நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியும், வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்களையும் பெறுவார், எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு தொழில் வழியிலான திடீர் அதிர்ஷ்டங்களையும், பெரும் பதவிகளையும் தரக்கூடும், செய்தொழில் வழியிலான முன்னேற்றம் ஜாதகருக்கு அபரிவித யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

எதிர் வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 22/06/2019 முதல் 22/06/2037 வரை )

 2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை, முழுவீச்சில் வாரி வழங்கும் யோக காலமாக ராகு மஹா திசையை கருதலாம், ராகு தனது திசையில் மிதம்மிஞ்சிய அதிர்ஷ்டத்தையும், அளவில்லா பொருளாதர வளர்ச்சியையும் தரும் என்பதனை " ஜோதிடதீபம் " கட்டியம் கூறுவதுடன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள ஆலோசனையும் வழங்குகிறது, ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், சர மண் தத்துவ அமைப்பிலும் இயங்குவதால் ஜாதகருக்கு 100% விகித யோகங்களை வாரி வழங்கும், நிறைவான வருமானம், செல்வ செழிப்பு, இனிமையான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், பொது வாழ்க்கையில் வெற்றி என மிகுந்த நன்மைகளையும், லாப ஸ்தான வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், நல்ல குணம் மூலம் மக்கள் செல்வாக்கினையும், தெளிவான சிந்தனை மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுவித கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வ சேர்க்கையையும் தொடர்ந்து பெரும் யோகத்தை நல்கும், தோல்விகள் அற்ற வெற்றிகரமான யோக வாழ்க்கையை "ராகு மகா திசை" ஜாதகருக்கு வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எனவே ஜாதகர் தனது வாழ்க்கையில் ராகு திசை காலத்தில் சுபயோகங்களை அனுபவிக்க தடையேதும் இல்லை என்பதனை ஜோதிடதீபம் வாழ்த்துக்களுடன் உறுதிகூறுகிறது.

பரிகாரம் :

1) சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு பீரிதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தாய் மற்றும் சகோதர வழியிலான பாதிப்புகளை ஜாதகர் சுவீகரித்து, தனது வாழ்க்கையில் தைரியம்,வண்டி வாகன யோகங்களை பெறுவது சிறப்புகளை நல்கும்.
3) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுக.
4) பழனி வருடம் ஒருமுறை சென்று " ராஜஅலங்கார " தரிசனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) சூரிய நமஸ்காரம் மற்றும் தீட்சை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 மே, 2018

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க  வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள்  மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள்,  வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு  பேரிழப்புகளை தரும், இருப்பதை  முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத  மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .


நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )

ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான  10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன்  புத்திகள்  3ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக  வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.

எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே !

பரிகாரம் :

1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று  சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக  நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.

2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய  வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.

3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

4) " சர்ப்ப சாந்தி "  பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.

5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று " முக்குண " நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ராகு திசை தரும் பலன்கள் என்ன ? சுய ஜாதகத்தில் பாவங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது ?



சுய ஜாதக பலாபலன்கள்


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3 ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நோய் எதிர்ப்பு திறன், சிறந்த உடல் மன வலிமை, முற்போக்கு சிந்தனை, தெளிவான நல்லறிவு, தீர்க்கமாக முடிவெடுக்கும் வல்லமை, நேர்மையான குணம், மண் தத்துவம் சார்ந்த சுபயோகங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனம், உயிரோட்டமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், புதிய சிந்தனை மற்றும் யுக்தி வழியிலான நன்மைகளை பெறுதல், சிறந்த திட்டமிடுதல், செய்யும் காரியங்களில் ஒருவித நேர்மை மற்றும் நேர்த்தியை கடைபிடித்தல், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, ஸ்திரமான மனநிலை என ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் தீர்க்கமான ஆயுள், நோயில் இருந்து விரைவில் குணம் பெரும் வல்லமை என ஜாதகருக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும், ஜாதகரின் புகழ், வெற்றி யாவும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக பயன்படும்.

2,3,6,8ம் வீடுகள்  வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றி, எழுது பொருள் மூலம் அபரிவித லாபம், சிறந்த பேச்சு திறமை, விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுதல், கவிதை இலக்கியம் சார்ந்த விஷயங்களில் நல்லறறிவு, எஜென்ஜி துறையில் பரிபூர்ண வெற்றி, கமிஷன் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகம், ட்ராவல் எஜென்ஜி மூலம் அபரிவித முன்னேற்றம், தரகு தொழில் வழியிலான மிகுந்த நன்மைகள், சிறு பிரயாணம் மூலம் நல்ல லாபம், இளைய சகோதரர் மூலம் நன்மை மற்றும் அதிர்ஷ்டங்களை பெறுதல், வாக்கு வன்மை மூலம் பெரும் செல்வம் சேரும் யோகம், எதிர்பாராத வருமான வாய்ப்புகள் என ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை நல்குவதுடன், இனிமையான குடும்ப வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர முன்னேற்றங்களை சிறப்பாக வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த செல்வச்செழிப்பு, எதிரிகளை வென்று வெற்றிவாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமை, நல்ல மனநிலை, சிந்தனை திறன் மூலம் அனைத்தையும் சாதித்தல், உண்மை சத்தியம் போன்றவற்றை மதித்து நடக்கும் குணம், மனதைரியம், மனஉறுதியுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை, சாகசம் செய்வதில் விருப்பம், விளையாட்டில் ஆர்வம், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுதல், புதிய மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளை விரும்புதல், எஜென்ஜி துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம், அதன் வழியிலான மிதமிஞ்சிய லாபம் என ஜாதகருக்கு வீர்ய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக பயணங்கள் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்கள் தேடிவரும் வாய்ப்பை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எஜென்ஜி அல்லது காண்டராக்ட் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் மிக அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் சீரிய முயற்சிகள் யாவும் நல்ல வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மற்றும் மனநலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது, மற்றவர்கள் மூலம் தனசேர்க்கை மிக சிறப்பாக குறுகிய காலத்தில் அமையும், தனது சுய சிந்தனையும், அறிவு திறனும் ஜாதகருக்கு பெருவாரியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தன்மையை தரும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதுடன் ஜாதகரின் முன்னேற்றம் எதிரியே மெச்சும் அளவிற்கு அமையும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டாகும், லாட்டரியில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு, ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் பெரும் சொத்து சுக சேர்க்கை உண்டாகும், கூட்டாளிகளின் பணம் ஜாதகருக்கு பயன்படும், சுலப வழியில் பெரும் செல்வம் ஜாதகருக்கு வந்து சேரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் எஜென்ஜி தொழில் அல்லது காண்ட்ராக்ட் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சொத்தது சுக சேர்க்கை வந்து சேரும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் பொருட்கள் ஜாதகருக்கு மிகுந்த லாபத்தை தரும், இஞ்சுரன்ஸ், ஆயுள் காப்பீடு துறையில் மிதமிஞ்சிய லாபம் மற்றும் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், உயிர் காக்கும் மருந்துகள் மூலமும் எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து எதிர்பாராத விபத்து அல்லது இழப்பை தரும், மருத்துவ சிகிக்சை, சொத்துக்களை பாதுக்காக்க போராடும் தன்மையை தரும், வண்டி வாகன சார்ந்த செலவுகள் அதிகரிக்கும், சில நேரங்களில் காரிய தடங்கல் உண்டாகும், வறுமை, துரதிர்ஷ்டம், இன்னல்கள், மனகுழப்பம், அதிக வேலைப்பளு, சுகபோக வாழ்க்கையில் தடங்கல், சுயமாக சொத்துக்களை சேர்க்க இன்னலுறும் தன்மை, கவனமின்மையால் ஏற்படும் திடீர் இழப்புகள் என ஜாதகரை வெகுவாக பாதிக்கும், எந்த காரணத்தை கொண்டும் தனது பெயரில்  தனியாக சொத்துக்களை பராமரிப்பது பேரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கூட்டு முயற்சியாக சொத்துக்களை வைத்திருப்பது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜீவனம் அமைவதில் சில இடர்பாடுகளை தரும், வெளியூர் அல்லது பிறந்த இடத்தை விட்டு செல்வதால் மட்டுமே ஜீவனம் சார்ந்த நன்மைகளை தரும், அடிக்கடி தொழில் வழியில் மாற்றங்களை தரும், வரவை விட செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராமல் செய்யும் செயல்களால் கவுரவ குறைவை ஏற்படுத்தும், சுய தொழில் செய்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை, போதுமான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படுவதே சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தொழில் சார்ந்த நன்மைகளை பெற ஜாதகர் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டிவரும், திட்டமிட்டு செயல்படுவது ஜாதகருக்கு வரும் தோல்விகளை தவிர்க்க உதவும்.

5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியை பெறுவதற்கு தடைகளை ஏற்படுத்தும், தெய்வ நம்பிக்கை இழப்பை தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமும்  சமயோசித அறிவு திறனும் பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை பலன் ஏதும் தாராது, கற்ற கல்வி ஜாதகருக்கு பயன்படாது, கடும் முயற்சிகளை மேற்கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிக சிறிய அளவிலேயே அமையும், நல்ல ஆண் வாரிசு அமைவது என்பது ஜாதகருக்கு சற்று சிரமமே, முறையான குலதெய்வ சாப நிவர்த்தி ஜாதகருக்கு சகல நன்மைகளையும் தரும்.

9ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு பெரும் பின்னடைவை தரும், முழு வீச்சில் ஜாதகர் மேற்கொள்ளும் விஷயங்களில் பெரும்  தடை தாமதங்கள் உண்டாகும், பெரியமனிதர்கள் ஆதரவை பெறுவது ஜாதகருக்கு சற்று சிரமமாக இருக்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் துன்பத்தை தரும், உறவுகள் சார்ந்த வகையில் சிரமங்கள் அதிக அளவில் ஏற்படுத்தும், பித்ரு சாபம் உள்ளதால், ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

11ம் பாவக வழியில் இருந் ஜாதகரின்  ஆசைகள் மற்றும் லட்சியங்கள் வெகுவாக பாதிக்கும், அதிர்ஷ்டமின்மையால் அதிக அளவிலான போராட்டங்களை மேற்கொள்ளும் நிலையை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகர்  பெறுவதில் தடை ஏற்படும், முற்போக்கு சிந்தனை ஜாதகருக்கு பலன் தாராது, எதிர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், எதிலும் மனக்குழப்பம், சந்தேகம், மனப்போராட்டம் என்றவகையில் பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்களில் 5,9,11ம் வீடுகளுக்கே முன்னுரிமை தரலாம், ஜாதகருக்கு 5,9,11ம் பாவக வழியில் இருந்தே 200% விகித இன்னல்கள் நடைமுறைக்கு  வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

7ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை  வழியில் இருந்து வரும் சின்ன சின்ன இன்னல்கள், கூட்டாளி வழியில் இருந்துவரும் ஏமாற்ற்றம், இழப்புகளுடன் கூடிய தொல்லைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் வார்த்தை சாடல்கள், கடன் பெறுவதால் வரும் சிரமங்கள், எதிராளிக்கு வாய்ப்பை வழங்குதல், கூட்டு வியாபாரத்தில்  பெருத்த நஷ்டம் என ஜாதகரை கடுமையாக பாதிக்கும், எந்த ஓர் விஷயத்திலும்  கூட்டு என்பது ஜாதகருக்கு ஆகாது, எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், பொது வாழ்க்கையில் பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரு ம், நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், உடல் நல பாதிப்பை தரும்.

12ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மனைவியின் சொற்படி நடக்கும் தன்மையை தரும், கூட்டாளிகளுக்கு நிறைவான லாபத்தை தரும், நிம்மதியான உறக்கம் கிட்டுவது அரிதிலும் அரிதாக அமையும், பொதுநல காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.


நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 02/02/2012 முதல் 02/02/2030 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனை 4,10ம் பாவக வழியில் இருந்து தருவதால் ஜாதகர், சொத்து, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, அதைப்போன்றே செய்யும் தொழில் வழியில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

7ல் அமர்ந்த ராகு ஜாதகியை " முதிர்கன்னி " என்ற நிலைக்கு ஆளாக்குமா ?



 களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை கடுமையாக பாதிப்பிற்க்கு ஆளாக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின்  திருமணம் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குரியாக மாறிவிடும், மேலும் ஜாதகர் திருமணத்திற்க்காக மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் முழுமை பெறாமல், மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கும், காதல் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பும் ஜாதகருக்கு கிட்டாது என்பதுடன், இல்லற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் பெரும் தவறு இழைத்து அதன் வழியிலான தொல்லைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகத்தை மிகவும் வலிமைப்படுத்தும் அமைப்பில் இருப்பது களத்திர ஸ்தான வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக வலிமை அற்ற நிலையை தருமாயின் ஜாதகரின் நிலை களத்திர பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதற்கு கீழ்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம் என்பதை, இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். 


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 4ம் பாதம்

ஜாதகிக்கு  ராகு பகவான் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் வலிமையற்று அமர்ந்து இருப்பதும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகியின் திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய பாவகம் என்று அழைக்கப்படும்  மீன ராசியில் அமைவதும் ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான மன நிம்மதி இழப்பையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பெரும்பாலான வீடுகளின் தொடர்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கை என்ற ஓர் அமைப்பையே கேள்விக்குறியாக மாற்றும் வல்லமையுடன் காணப்படுவது கவனிக்கத்தக்கது, எந்த ஓர் சூழ்நிலையிலும் ஜாதகி திருமண வாழ்க்கையில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை தட்டிப்பறித்துக்கொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது .

இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் முறையே 2,8,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும், 5ம் வீடு மட்டும் லாப ஸ்தானத்துடனும், 7ம் வீடு 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகிக்கு வயது 31 கடந்தும் திருமண வாழ்க்கை எனும் சுப நிகழ்வை நடைமுறைப்படுத்தவில்லை, பெரும்பாலான வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி அமைத்திருக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகியின் நற்குணங்களை இழந்து, அனைவருடனும் விரோத போக்கை கடைபிடிப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு தானே தேடிவைத்துக்கொள்ளும் சூன்யமாகும், குணக்கேடான செயல்பாடுகள் ஜாதகியின் நற்பெயருக்கு பெருத்த களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதை அறியாமல் , தனது செயலே சரியானது என்ற மனஇயல்புடன் ஜாதகி செயல்படுவதும் ஓர் வகையில் திருமண வாழ்க்கை அமைவதை வெகுவாக தடுத்துக்கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நண்பர்கள் கூறும் அறிவுரையும், ஜாதகியின் நடவடிக்கையை சிறிதும் மாற்ற முடியவில்லை என்பது கவலைக்கு உரியது.

 நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற லக்கின பாவக பலனை ஏற்று நடத்துவது  நல்ல ஜீவன மேன்மையை தந்து இருப்பது ஜாதகியின் பொருளாதார  தன்னிறைவை சிறப்பாக அமைத்து தந்துகொண்டு இருக்கிறது என்ற போதிலும், இல்லற வாழ்க்கை எனும் விஷயத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது, திருமண தாமதம் ஏன் ? என்ற கேள்விக்கு சுய ஜாதகத்திலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை, நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்திய போதிலும், அது ஜாதகிக்கு திருமணம் சார்ந்த நன்மைகளை வழங்காமல், ஜீவனம் சார்ந்த நன்மைகளை மட்டும் வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகி தனது சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, தனக்கு  வரும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை உள்ள ஜாதகமாக தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெறுவதே சாலச்சிறந்தது, மாறாக தனது எண்ணத்தின் படி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள், இறுதியில் இல்லற வாழ்க்கை சார்ந்த கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு நிம்மதி இழந்து வாடும் சூழ்நிலையை தந்துவிட வாய்ப்புண்டு, மேலும் தனது ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்க உதவும் என்பதை உணர்ந்து செயலாற்றுவது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவது, ஜாதகி வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அதை போன்றே சுய ஜாதகத்திலும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களும், தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகுந்த குழப்பத்தையும் ஏற்படுத்தும், மேலும் ஜாதகி 2,5,7,8,12 வீடுகள் வலிமை பெற்ற ஓர் ஜாதகரை தனது  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், வாழ்க்கையே நரகமாகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை நினைவில் கொள்வது ஜாதகியின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொடுக்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராகு திசை சுய புத்தி சுபயோக பலனை வழங்கினால், பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தருமா ?


 கேள்வி : 

   ராகு திசை சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை, இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா? ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

 ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. என்ற கருத்து சுய ஜாதக கணிதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பிதற்றும் வாய் ஜாலம் என்றே சொல்ல தோன்றுகிறது, அடிப்படையில் எந்த ஓர் கிரகத்தின் திசையும் சரி, புத்தியும் சரி தன்னிசையாக பலாபலன்களை வழங்கும் வல்லமை அற்றவை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையை மட்டுமே தனது திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும், இதை சுய ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்றவர்கள் மிக எளிதாக உணர இயலும், கீழ்கண்ட ஜாதகருக்கு ராகு தனது சுய புத்தியில் யோக பலனை வழங்கியதால், அடுத்து வரும் மற்ற புத்திகள் அவயோகங்களை வாரி வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ராகு தனது திசையில் தரும் பலனும், ராகு சுய புத்தியிலும் மற்ற புத்திகளில் நடைமுறைக்கு வரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம்

ராகு திசையில் சுய புத்தி ஜாதகருக்கு யோக பலனை வழங்கியது எப்படி ?

ஜாதகருக்கு ( 17/01/2008 முதல் 16/01/2026 வரை ) நடைமுறையில் உள்ள ராகு திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளான 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து முழு வீச்சில் யோக பலன்களை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் நடைபெறும் நவக்கிரக திசை அல்லது புத்தி எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், மாறாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட் ஜாதகருக்கு ராகு திசை 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், ராகு திசை ராகு புத்தி மேற்கண்ட பாவக வழியிலான தொடர்புகளை பெற்று சுய திசையில் சுய புத்தி ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே வழங்கியது தெளிவாகிறது, அடுத்து வந்த ராகு திசை குரு புத்தி ஜாதகருக்கு 3,4 ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகருக்கு ராகு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு நன்மைகளை வழங்கியிருக்கிறது, குரு புத்திக்கு அடுத்து வந்த சனி புத்தி 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடாகும் ) பெற்று 200% மடங்கு இன்னல்களை வாரி வழங்கியுள்ளது, ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தியும் 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சில நன்மைகளையும் வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

 ஜாதகர் 29/12/2015 முதல் 18/07/2018 வரை 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான கடுமையான இன்னல்களை தொடர்து வழங்கிக்கொண்டு இருப்பதால் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் லக்கினம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரே தன்னை தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்வார், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாலின சேர்க்கையின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகரின் தொழில் ஸ்தான வழியிலான இன்னல்களுடன், சுய கவுரவம் பாதிக்கும் சூழ்நிலையை தரும்.

 ராகு திசையில் அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சில எதிர்பாராத நன்மைகளையும், சூரியன் மற்றும் செவ்வாய் புத்திகள் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக பலனை ஏற்று நடத்தி நிறைவான வருமான வாய்ப்புகளையும், சுபயோகங்களையும், சந்திரன் புத்தி 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை நடத்த தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 நவகிரகங்கள் தன்னிசையாக நன்மை தீமை பலாபலன்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையையே ஏற்று நடத்தும் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய நேரமிது, மேலும் கோட்சார கிரகங்களின் தாக்கம் என்பதனையும் மேற்கண்ட முறையிலேயே கையாண்டு துல்லியமான பலாபலன்களை உணர்ந்து, நமது வாழ்க்கையை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் , நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வது, நமது வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை தரும், குறிப்பாக நமது எதிர்கால திட்டமிடுதல்களை மிக சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 12 மார்ச், 2018

ராகு 3 6 9 11 ல் ( மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் ) இருந்தால் யோக பலன்களை வாரி வழங்குமா ?


ஐயா ...வணக்கம்!

1--10--1967 காலை 10: 30 மணி திண்டுக்கல் ...இந்த ஜாதகருக்கு ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன.இதை ஆய்வு ஜாதகமாக தாங்கள் எடுத்து கொள்ளலாம் ..ஜோதிடஅடிப்படை விதிகள் இந்த ஜாதகத்திற்கு பொருந்தவில்லை...உங்கள் கருத்து என்ன ....

ஐயா தற்போது ராகுதிசை குரு புத்தி நடக்கிறது ...
ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம் மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால் யோகம் இந்த ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம் ...ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் .....இதில் எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லை .... இப்போது நிலமை இந்த ஜாதகருக்கு மிக மோசம்......எப்போது யோகம் வேலை செய்யும் ....ஐயா

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது நவகிரகங்கள் ஓர் பாவகத்திலோ அல்லது ராசியிலோ அமர்ந்து இருப்பதால் வருவது அல்ல, ஜெனன நேரத்தில் கிரகங்களின் ஆளுமையின் அடிப்படையில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் பெரும் தொடர்பின் அடிப்படையில் அமைவதாகும், பெரும்பாலும் நாம் ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு பலன் காண்கின்றோம், இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதுடன், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை என்ன ? என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள இயலாது, கிழ்கண்ட ஜாதகருக்கு ராசியில் ராகு மேஷத்தில் அமர்ந்து இருப்பதால் 6ல் ராகு அமர்ந்து இருப்பதாக கருதிக்கொண்டு கேள்வி எழுப்பி இருக்கின்றார் அது தவிர உப கேள்விகளும் உண்டு, இதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம்  இந்த ஜாதகத்திற்கு பலன் தர மறுப்பதேன் ?

கிரகங்கள் ஓர் ராசியில் அமர்ந்தாலே யோகத்தை தரும் என்று கருதுவது ஜாதக கணிதத்திற்க்கு புறம்பானது, ( ராகு கேது கிரகங்களுக்கு விதி விளக்கு உண்டு  என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை  பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 6ல் ராகு அமர்ந்து இருக்கின்றார் என்பதே முற்றிலும் தவறானது, ஜாதகரின் 6ம் பாவகம் மேஷ ராசியில் 18:59:40 பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசியில் 45:57:51 பாகையில் முடிவடைகிறது, ராகு மேஷ ராசியில் 05:27:27 பாகையில் அமர்ந்து இருப்பதால், மேஷ ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மையானது, அடிப்படையில் ராகு 6ல் அமர்ந்து இருக்கின்றார் என்பதே தவறானதா அமைந்து விடுகிறது.

அடுத்து மேஷத்தில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% சதவிகித பாதிப்பை தரும் அமைப்பில் காணப்படுகிறார், எனவே ராகு ஜாதகருக்கு 5ம் பாவகத்தை 100% விகிதம் கெடுத்து விடுகிறார் என்பதால், ஜாதகரின் பூர்வீகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது, சமயோசித அறிவு திறன் செயல்பட மறுக்கும், அறிவார்ந்த செயல்திறன் வெகுவாக குறைவதுடன், ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகவும், ஜாதகரின் விளைவு  அறியாத செயல்கள் யாவும் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பது ராகு 5ல் அமர்ந்து பாதிப்பிற்க்கு ஆளாக்குவதால் ஏற்படும் இன்னல்கள், சுய ஜாதகத்தில் ராகு தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பதுடன் சுய ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம்

குரு 9ம் பாவகத்தில் அமர்ந்து தனது 9ம் பார்வையை 5ம் பாவகத்தை வசீகரித்த போதிலும், 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை தனது கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொள்வதால் குரு பகவானின் பார்வைக்கும் வலிமை அற்று போகிறது, பொதுவாக குரு பார்வை நல்லது என்ற போதிலும், பார்க்கும் பாவகம் கேந்திரமா கோணமா என்பதில் வித்தியாசம் உண்டு, கோண பாவகங்களுக்கும், சம பாவகங்களுக்கும் குரு வின் பார்வை யோகத்தை நல்கும், இருப்பினும் கோண சம பாவகங்களில் ராகு அல்லது கேது தனது ஆளுமையை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் பொழுது குரு பகவானின் பார்வையும் பலன் தாராது, அனைத்து கிரகங்களையும் சாயாகிரகங்கள் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம்

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் உண்டாகும் என்பது ஓர் கட்டுக்கதையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையே ஓர் ஜாதகருக்கு சுபயோகங்களையும், அவயோகங்களையும் நல்குகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நம்பி, வாழ்க்கையில் இன்னலுறுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது, மேலும் நவகிரகங்கள் ஒருவருக்கு நன்மையையும், ஒருவருக்கு தீமையும் வழங்காது, அவரவர் சுய ஜாதக வலிமையே ஜாதகருக்கான நன்மை தீமை பலாபலன்களை நிர்ணயம் செய்யும் என்ற உண்மையை உணர்ந்து நமது சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெற்று வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லையே இது ஏன் ?

அடிப்படியில் சுய ஜாதகம் வலிமை இன்றி காணப்படுவதே இதற்க்கு காரணம் குறிப்பாக ஜாதகருக்கு 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் பெரும் பகுதி சிம்ம ராசியில் அமைந்து இருப்பதும் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை 1,3,9ம் பாவக  வழியில் இருந்து வாரி வழங்கும்.

ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன இது ஏன் ?

ராகு தனது திசையில் வலிமை அற்ற 11ம் பாவக பலனை சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து வாரி வழங்குவதும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷம் மற்றும் ரிஷப ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும், ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் குரு புத்தி மட்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, சிறந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண உதவும், ராசிகளில் கிரகங்கள் அமர்ந்து இருப்பதை கருத்தில்கொண்டு அவை நன்மை செய்யும், தீமை செய்யும் என்று பலன் கூறுவது சுய ஜாதக கணிதம் ( பாவக கணிதம் மற்றும் தொடர்பு  ) என்னவென்றே தெரியாமல் பிதற்றும் வாய் ஜாலம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 6 மார்ச், 2018

ராகு கேது தோஷமும், சுய ஜாதகத்தில் பாவக வலிமை தரும் யோக பலாபலன்களும் !



 ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற பாதிப்புகளை, சுய ஜாதகத்தில் ( 1,7 ) ( 2,8 ) ( 5,11 ) வீடுகளில் அமரும் ராகு கேது ஜாதகருக்கு வழங்குவதாகவும், இது ஜாதகருக்கு தாமத திருமணம், இல்லற வாழ்க்கையில் துன்பம், வாழ்க்கை துணைக்கு பாதிப்பு, குழந்தை இன்மை போன்ற பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக அமையும் என்பதுடன், மேற்கண்ட தோஷங்களை பெற்ற ஜாதகரோ, ஜாதகியோ தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட தோஷம் உள்ள ஜாதகியை, ஜாதகரை தனது இல்லற துணையாக ஏற்க வேண்டும், அதுவே பொருத்தமானது, இதற்க்கு மாறாக திருமணம் செய்தால் செய்துகொள்ளும் ஜாதகரோ, ஜாதகியோ தனது வாழ்க்கை துணையை இழந்து தவிக்க வேண்டி வரும் என்பதாக ஓர் கருத்து நிலவுகிறது, இது பரவலாக அனைவரின் மனதிலும் ஓர் இனம்புரியா பயத்தை தந்துகொண்டு இருப்பது ஆலோசணை பெற வரும் அன்பர்களின் கேள்விகளில் இருந்து மிக தெளிவாக தெரியவருகிறது, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான விஷயங்கள், மூடநம்பிக்கைகள் நமது வாழ்க்கையில் எந்த விதத்திலும் பயன்தர போவதில்லை, மேலும் இதுபோன்ற விஷயங்கள் யாவும் சுய ஜாதக வலிமை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறப்படும் கட்டுக்கதைகளே என்பதை எதிர்வரும் சந்ததிகள் நன்கு புரிந்துகொண்டு, சரியான ஜோதிடத்தை நாடி வருவார்கள் என்பது மட்டும் சத்தியம், கீழ்கண்ட ஜாதகருக்கு நிகழ்ந்த நிகழ்வும் மேற்கண்ட மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததே என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள வலிமை என்ன ? மற்றவர்கள் சொன்ன மூடநம்பிக்கை கருத்துக்கள் என்ன ? என்பதை மிக தெளிவாக இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

உண்மைக்கு புறம்பாக ஜாதகருக்கு கூறப்பட்ட மாறுபட்ட கருத்துக்கள் :

1) ஜாதகருக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்திருப்பது கடுமையான களத்திர தோஷம் .

2) ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்பதால், இதை போன்றே ராகுகேது தோஷம் உள்ள வதுவையே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

3) ராகுகேது தோஷம் உள்ள ஜாதகர் என்பதால், ராகுகேது தோஷம் அற்ற வதுவை திருமணம் செய்துவைத்தல் , ஜாதகர் மனைவியை இழந்துவிடுவார்.

4) சர்ப்ப தோஷம் உள்ளதால், ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும்.

5) திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட ராகுகேது தோஷமே காரணம்.

6) ராகுகேது தோஷம் உள்ளதால் புத்திர பாக்கியம் விரைவில் அமையாது.

7) களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு கடுமையான  வியாதியை தரும்.

8)  கேது லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது.

9) லக்கினத்தில் கேது ஜாதகரை  சாமியாராக மாற்றிவிடும்.

10 ) கடுமையான ராகுகேது தோஷம் என்பதால் உயிருக்கே பாதிப்பை தரும்.

என்பது போன்ற கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

  இனி ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வுக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்று கூறுவதே  அடிப்படியில் தவறாகும், ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் ( சிம்ம ராசியில் 131:59:56 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 162:02:38 பாகையில் முடிவு பெறுகின்றது ) எனவே ஜாதகரின் லக்கினம் என்பது சிம்ம ராசியில் 18 பாகைகளையும், கன்னி ராசியில் 12 பாகைகளையும் கொண்டிருக்கின்றது, கேது பகவான் ஜாதகருக்கு சிம்ம ராசியில் ( 126:49:11 பாகையில் ) உள்ள பனிரெண்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதால்  ஜாதகருக்கு லக்கினத்தில் கேது அமர்ந்திருப்பதாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதுடன் , சிம்ம ராசியில் உள்ள 12ம் பாவகத்திலேயே கேது அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, அடுத்து ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் ( கும்ப ராசியில் 311:59:56 பாகையில் ஆரம்பித்து மீனராசியில் 342:02:38 பாகையில் பாகையில் முடிவு பெறுகின்றது ) எனவே ஜாதகரின் களத்திர ஸ்தானம் என்பது கும்ப ராசியில் 18 பாகைகளையும், மீன ராசியில் 12 பாகைகளையும் கொண்டிருக்கின்றது,  ராகு பகவான் ஜாதகருக்கு கும்ப ராசியில் ( 306:49:11 பாகையில் ) உள்ள ஆறாம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு களத்திரத்தில் ராகு அமர்ந்திருப்பதாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதுடன் , கும்ப ராசியில் உள்ள 6ம் பாவகத்திலேயே ராகு அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, எனவே ஜாதகருக்கு லக்கினத்தில் கேது அமர்ந்து இருக்கிறார் என்பதும், களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார் என்பது உண்மைக்கு புறம்பானது, சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் கேது பகவானும், கும்பத்தில் உள்ள 6ம் பாவகத்தில் ராகு பகவானும் அமர்ந்து இருக்கின்றனர்  என்பதே முற்றிலும் சரியானது, மேலும் இது கடுமையான களத்திர தோஷத்தை தரவில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்பதால், இதை போன்றே ராகுகேது தோஷம் உள்ள வதுவையே திருமணம் செய்து வைக்க வேண்டும், என்பது எந்த ஓர் சாஸ்த்திரத்திலும் கூறப்பட்டதாக தெரியவில்லை, மேற்கண்ட ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக  வழியில் இருந்து ஜாதகருக்கு சாயா கிரகங்கள் மிகுந்த வலிமையுடன் சுபயோகங்களை நல்குவதால், இயற்கையாகவே ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்று இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும், அமர்ந்த  பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் உள்ளதா ? என்பதை மட்டும் தெளிவு படுத்திகொண்டு திருமணம் செய்யலாம்.

 ராகுகேது தோஷம் உள்ள ஜாதகர் என்பதால், ராகுகேது தோஷம் அற்ற வதுவை திருமணம் செய்துவைத்தல் , ஜாதகர் மனைவியை இழந்துவிடுவார் என்பது மூடநம்பிக்கையின் உச்சம் என்றே சொல்லலாம், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணைக்கு யாதொரு துன்பமும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, இதை போன்ற தவறான மூடநம்பிக்கைகளை கூறுவது என்பது அதனால் வரும் வினைப்பதிவின் தாக்கத்தை ஜோதிடர் அனுபவிக்கும் நிலையை தரும் என்பதே உண்மை என்பதால் சுய ஜாதகத்தில் உள்ள வலிமை நிலையை மட்டும் கருத்தில் கொண்டு  பலன் காண முற்படுவதே சகல நலன்களையும் தரும்.

சர்ப்ப தோஷம் உள்ளதால், ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும் என்பதும் உண்மைக்கு புறம்பான விஷயமாகும், மேலும் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பற்றி யாதொரு விஷயமும் தெரியாமல் கூறப்படும் கருத்தாகும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதுடன் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம் நிறைவாக வானத்து சேரும்.

திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட ராகுகேது தோஷமே காரணம் என்பதும் தவறானது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று  நடத்தும் குரு திசை  சுக்கிரன் புத்தி அல்லது ராகு புத்தியில் திருமண வாய்ப்பு ஜாதகருக்கு கைகூடி வரும், திருமணமும் சிறப்பாக நடைபெறும்.

ராகுகேது தோஷம் உள்ளதால் புத்திர பாக்கியம் விரைவில் அமையாது என்பதும் உண்மைக்கு புறம்பானது, ஜாதகருக்கு 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பதால் நல்ல புத்திர பாக்கியம் திருமணம் ஆன குறுகிய காலத்தில் கிடைக்க பெறுவார்.

 களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு கடுமையான  வியாதியை தரும். இது முற்றிலும் தவறானது, ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் ராகு அமரவில்லை என்பதுடன், சத்ரு ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு எதிரிகளை  வெற்றிகொள்ளும் தன்மையையும், போட்டி பந்தயங்களில் எதிர்பாராத வெற்றியையும் நல்கும்.

 கேது லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதும் தவறானது, கேது அயன சயன ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு, நல்ல உறக்கத்தையும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி, செயல்களில் திருப்தியையும் வாரி வழங்கும், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியை நல்கும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும்.

 லக்கினத்தில் கேது ஜாதகரை  சாமியாராக மாற்றிவிடும். இது மிகுந்த நகைப்புக்கு உரியதாக உள்ளது, 12ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு நிறைந்த அறிவு திறனையும், தொழில் நுட்பம் சார்ந்த நுண்ணறிவையும், தேடுதலுக்கான பதில்களையும், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியையும் வாரி வழங்கும்.

 கடுமையான ராகுகேது தோஷம் என்பதால் உயிருக்கே பாதிப்பை தரும், என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் 6,12ல் வலிமை பெற்ற ராகுகேது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் வலிமையையும், விரைவாக குணம் பெரும் ஆற்றலையும் தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிதம்மிஞ்சிய பொருளாதார  வெற்றிகளையும், படைப்பின் சாராம்சத்தையும் தெளிவு படுத்தும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் அமர்ந்துள்ள ராகு கேது ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து வழங்கும் பலாபலனை மிக துல்லியமாக கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சகல நன்மைகளையும் தரும் என்பதால், சுய ஜாதக பாவக வலிமையை மிக தெளிவாக உணர்ந்து நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696