புதன், 20 ஏப்ரல், 2016

சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?


இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் தகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே ! 

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "ஜோதிடதீபம்" கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு உறுதியாக பதிவு செய்கிறது, மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது )  ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த  நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

சித்திரை மாதம் பிறந்த ராஜயோக ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : விசாகம் 2ம் பாதம் 

சித்திரை மாதத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையான நிலையில் அமைந்திருக்கின்றது, ஜாதகர் பிறந்ததில் இருந்தே இவரது குடும்பம் நல்ல முன்னேற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து பெற்று கொண்டுதான் இருக்கின்றது, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, தெளிவான அறிவு திறன், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை என ஜாதகர் இதுவரை யோக  பலன்களையே அனுபவித்து கொண்டு இருக்கின்றார்.

சுய ஜாதக வலிமை அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல வளரும் சூழ்நிலையை தந்தது, பால்ய வயதில் அடிப்படை கல்வி சிறப்பாக கற்றார், இளமையில் சிறப்பாக பட்டய கல்வியில் முதன்மையில் தேர்ச்சி பெற்றார், அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்றார், சரியான வயதில் திருமணம் அமைந்து நல்ல வாரிசும் அமைந்தது, பதவி உயர்வு ஜாதகரை தேடி வந்தது, சுயமாக தொழில் ஒன்றை கூட்டு முறையில் அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்துள்ளது கவனிக்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  இதற்க்கு முன் நடைபெற்ற சனி திசை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வாக்கு குடும்பம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வாரி வழங்கி உள்ளது, 2ம் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவது, ஜாதகரின் வெற்றிகளை 100% விகிதம் உறுதிபடுத்தியது.

 தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 7ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகபலன்களை வழங்குவது, ஜாதகருக்கு புதன் திசையும் அதிர்ஷ்டங்களையும் லாபங்களையும் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதக பாவக வலிமையே ஜாதகருக்கு யோக, அவயோக பலன்களை   வழங்குகிறது, பிறந்த மாதங்களோ, பிறந்த நாட்களோ, ஜென்ம நட்சத்திரமோ, ஜென்ம ராசியோ அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே சித்திரை மாதம் ஆடி மாதம்  பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற மூட நம்பிக்கையை களைவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 14 ஏப்ரல், 2016

திசா சந்திப்பும், ஏகதிசை நடப்பும் தம்பதியர் வாழ்க்கையில் பிரிவை தருமா?

 
 
திருமண பொருத்ததில் அதிமுக்கியமான பொருத்தமாக கருதபடுவது, ஏக திசை நடப்பு எனும் திசா சந்திப்பு என்றால் அது மிகையில்லை, அதாவது வரணுக்கும் வதுவுக்கும் தற்பொழுதோ, எதிர்காலத்திலோ ஏக திசை நடைமுறைக்கு வருமாயின், தம்பதியரின் வாழ்க்கையில் புயல் அடிக்கும், திருமண வாழ்க்கை மன முறிவை நோக்கி இழுத்து செல்லும், எந்த ஒரு விஷயத்தாலும் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலையை தடுத்து நிறுத்தி விட முடியாது, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திசா சந்திப்பு எனும் ஏக திசை நடப்பு இல்லாமல் பார்த்து கொள்வது தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு நிலையை தாராது, ஏனெனில் தம்பதியருக்கு எதிர்வரும் காலங்களில் குரு திசை, மற்றும் சனி திசை ஏக காலத்தில் நடைபெறும் என்பதால், குரு திசையில் தம்பதியருக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது, சனிதிசை மிகுந்த தீமையை செய்யும் என்பதால், சனி திசையில் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டு நிச்சயம் பிரிவை தரும், சனி பகவானின் திசை என்றாலே தீமையைதான் செய்யும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை, எங்களது தலை சிறந்த ஜாதகத்தின் கணிப்பை மீறி திருமண செய்தால், அதற்க்கு பிறகு வரும் இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

என்று பொருத்தம் பார்க்க சென்ற உங்களை மிரட்டினால், துண்டை காணம் துணிய காணம் என்று ஓட்டம் பிடிப்பீர்களா? மாட்டீர்களா ? இவர்களது ஜாதக பொறுத்த கணிதத்தில் கல்லை கொண்டுதான் அடிக்க வேண்டும், மேற்கண்ட வாதத்திற்கு உற்பட்ட வது வரனின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே ! இவர்களின் கூற்படி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் ஏக திசை நடைபெறும் காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரிவை தருமா? குரு,சனி திசை தம்பதியருக்கு இன்னல்களை தருமா? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :

லக்கினம்: சிம்மம்
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

வது ஜாதகம் 


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

வரனின் ஜாதகத்தில் தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, வதுவின் ஜாதகத்தில் தற்பொழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது,

இருவருக்கும் நடைபெறும் திசை தரும் பலன்கள் பற்றி சிந்திப்போம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்புகளையும், சிறந்த பேச்சு திறமையையும்,  இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து பதவியில்  வெற்றி, பதவி உயர்வு, அதிகாரிகள் உதவி, சொந்த முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், நல்ல உடல் நிலை, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை  விரைவில் அடைதல், வசதிமிக்க உத்தியோகம், திடீர் பதவி உயர்வு, வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் என்ற  வகையில் யோகத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் சூல்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறி நன்மையை செய்யும், நல்ல அயன சயன சுகத்தை தரும், திடீர் பதவி உயர்வு, தொழில் துறையில் திடீர்  முன்னேற்றம், மன நிம்மதியான வாழ்க்கை என்ற வகையில் குரு திசை ஜாதகருக்கு யோகத்தை  தரும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு தசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கம் மூலம் பெயரும் புகழும் கிடைத்தல், நல்ல வாழ்க்கை துணை கிடைத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, சமூகத்தில் பெயரும் புகழும் கிடைத்தல் என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து நல்ல சுக  போகங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கை மற்றும் வண்டி வாகன  யோகத்தையும் ஸ்திரமாக வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் முன்னேற்றங்களையும், கெளரவம் குறையாத யோக வாழ்க்கையையும், ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும்,  நிலையான பதவியையும், தொழில் துறையில் நல்ல  முன்னேற்றத்தையும் தரும், எனவே வரன் வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை வரன் வதுவுக்கு தரும் பலாபலன்கள் :

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகர் சனி திசை காலங்களில் பதவியில் வெற்றி, செய்யும் தொழில் அபிவிருத்தி, திடீர் முன்னேற்றம், தான் செய்யும்  காரியங்களில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் அகலும் தன்மை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், மக்கள் செல்வாக்கும், ஆதரவும் ஜாதகிக்கு மிகுந்த பெயரையும் புகழையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணையுடன் இணைபிரியா யோக வாழ்க்கையை சனி மஹா திசை வாரி வழங்கும் .

இதுவே மேற்கண்ட 2 ஜாதகத்தில், குரு,சனி மகா திசை வழங்கும் பலாபலன்கள் ஆகும், இந்த உண்மைக்கு மாறாக பதிவின் ஆரம்பத்தில் மற்றவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் தேவையற்ற வீண் மன பயத்தையே தரும் என்பதை "ஜோதிடதீபம்" வரன்,வதுவின் உறவுகளுக்கு தெளிவு படுத்தியது.

நவ கிரகங்கள் தனது திசை புத்தி காலங்களில் தரும் பலாபலன்கள்  பற்றிய தெளிவு இல்லாத பொழுதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்ப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, சுப கிரகங்களின் திசாபுத்திகள் அனைத்தும் நன்மையை செய்துவிடுவதில்லை, அசுப கிரகங்களின் திசை புத்திகள் அனைத்தும் தீமையை செய்யும் என்பதும் முற்றிலும் தவறனா கருத்தாகவே உள்ளது, நவகிரகங்களின் திசா புத்திகள் அனைத்தும், சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே தமது திசை புத்திகளில் யோக அவயோக பலன்களை தருகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% விகிதம் ஜாதகருக்கு யோக பலன்களே நடைபெறும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நடைபெறும் திசை புத்திகள் சுப கிரகத்தின் திசாபுத்திகள் என்றாலும், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 9 ஏப்ரல், 2016

அவயோக ( தீமையான ) பலன்களில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ​- ( இலக்கின பாவகம் )


லக்கினம் 

கண்ணாடி நமது உருவத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுவது போல், சுய ஜாதகம் நமது அகம் புறம் ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொள்ள உதவும், சுய ஜாதகம் என்பது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அந்த பாதிப்பில் இருந்து விடுபட எவ்வித பரிகாரங்களை தேடிகொள்வது என்பது பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! 

சுய ஜாதகத்தில் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை இழப்பின், ஜாதகர் இலக்கின பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிக அளவிலான பாதிப்பை தரும், மேலும்  லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கை பாதிக்க படுவதற்கு "ஜாதகரின் செயல்பாடுகளே" காரணமாக அமையும், மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, ஜாதகரே தவிர்த்து உதறும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்ளாமல், தனது படைப்பின் ரகசியம் அறியாமல் சுக போகங்களிலும், கேளிக்கைகளிலும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த ஜீவ சக்திகளை வீண் விரையம் செய்வார், ஜாதகர் எடுக்கும் முடிவுகளே சரியானது என வாதம் செய்வார், ஆனால் நடைமுறையில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் யாவும், மிகப்பெரிய பின்னடைவை தரும், சரியென்று நினைத்து ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுய சிந்தனையும், அறிவும் ஜாதகருக்கு பலன் தாராது, ஜாதகரின் மன நிலையை உணர்ந்த மற்றவர்கள் தமது சுய தேவைகளுக்காக ஜாதகரை மிக  சுலபமாக பயன்படுத்தி கொள்வார்கள், இந்த விஷயத்தை ஜாதகர் உணர்ந்துகொல்வதற்கே வெகு காலம் பிடிக்கும்.

மேலும் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகரின் உடல் மனம் மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவற்றிற்க்கு உகந்ததது அல்ல, சுயமாக ஒரு முடிவு செய்வதற்கும் உகந்தது அல்ல, எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு காலகட்டத்தில் பொய்த்து போகும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல  எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அவசர கதியில் செய்யும் தனது நிலைப்பாட்டால், தனிமையில் கலங்கி நிற்கும் சூழ்நிலையை தரும், தனக்கு சரியான நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் ஜாதகரின் கணிப்பு 100%  சதவிகிதம் தவறிவிடும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார்கள், வறட்டு பிடிவாதமும், முரன்பட்ட கருத்து வேறுபாடுகளும் சமுதாயத்தில் ஜாதகரை வேறு கோணத்தில் பார்வைக்கு ஆளாக்கி விடும், எந்த ஒரு விஷயமும் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்காது, ஒருவேளை கிடைத்தால், அந்த விஷயங்கள் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், அடிப்படையில் "மானுட பிறவி பயனின்" பலனை அனுபவிக்க இயலாமலே ஜாதகர் தனது வாழ்க்கையை போராட்டத்துடன் வாழ்ந்து முடிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளும், உதவி இன்மையும் ஜாதகரின் மன நிலை மற்றும் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும்.

 இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் மகரம், மகரம் சர ராசியில் இயங்குவதால், ஜாதகருக்கு பாதகஸ்தானம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுகின்றது, ( லக்கினம் மட்டுமல்ல, 1,2,3,7ம் வீடுகளும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெருன்கினறது ) மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது தனசு ராசியில் வியாபித்து இருக்கின்றது, தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக, உபய நெருப்பு தத்வத்தில் அமைகின்றது, எனவே ஜாதகர் தனது பித்ருக்களின் கர்ம வினை பதிவினை, தனது இலக்கின பாவகம் பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, ஜாதகர் செய்யும் அவசர கதியிலான செயல்கள் அனைத்தும், ஜாதகரின் வாழ்க்கையில் வீண் அவ பெயரையும், இன்னல்களையும் வாரி வழங்கி கொண்டு உள்ளது, ஜாதகரின் அறிவு திறன் எவ்விதத்திலும் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவருக்கும் பலன் தரவில்லை, இயற்கையாக ஜாதகர் சுய கட்டுப்பாடு இன்றி செய்யும் காரியங்களால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை தற்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.

தன்னை விட வயதில் அதிக உள்ள பெரியவர்களின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கிக்கொண்டு, அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றார், செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தடைகள், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கே பாதகமாக திரும்பும் சூழ்நிலை, தனது முன்னேற்றத்தை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தி வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலை, முற்றிலும் அதிர்ஷ்டமற்ற ஜாதக நிலை, எதிலும் ஆர்வமின்மை, செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வருமானத்தை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மை, தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை அற்ற நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்ப்பட்டு தனது உடலையும் மனதையும் வெகுவாக கெடுத்து கொள்ளும் அமைப்பு என, ஜாதகர் தமது வாழ்க்கைக்கு தாமே முடிவுரை எழுதிக்கொண்டு இருக்கின்றார்.

ஜாதகம் என்பது தம்மை பற்றி ஒரு தெளிவு பெறுவதற்கும், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வதற்கும் சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதை அறிந்துகொள்ளாமல், தமக்கு அனைத்தும் தெரியும் என்ற மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன், ஜாதகரின் செயல்பாடுகள் அமைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஜாதகருக்கு இதற்க்கு முன் பெரியோர்கள் வழங்கிய அறிவுரைகளையும், ஜாதக பலாபலன்களையும், பரிந்துரை செய்த பரிகாரங்களையும்  இம்மியளவும் ஜாதகர் ஏற்றுகொள்வதாக தெரியவில்லை "விதி வலியது" ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசையும், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை மிக பெரிய கேள்விக்குறியாக மாற்றும் என்பது மட்டும் உறுதி, இதற்கு முன் நடைபெற்ற புதன் திசை ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வழங்கியது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தந்தது, கேது திசை ஆரம்பித்ததும், பொருளாதாரம் ஆதால பாதாளத்துக்கு சென்று கொண்டு இருப்பதை ஜாதகர் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் நலம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) தாம் எடுக்கும் முடிவுகள் சரியானது என்ற எண்ணத்தை ஜாதகர் முதலில் விட வேண்டும்.
2) பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு நெருப்பு தத்துவ ராசி என்பதால், சுய கட்டுப்பாடும், பொறுமையும் அவசியம் தேவை.
3) தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியோர்களின் ஆலோசனையை பெற்று வாழ்க்கை நடத்துவது சகல நலன்களையும் தரும்.
4) பித்ரு வழிபாடு சகல நலன்களையும் வாரி வழங்கும்.
5) சுய ஒழுக்கமும், உடல் மன நலனில் அதிக அக்கறையும் கொள்வது ஜாதகருக்கு நல்லது.
6) தம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து ஜாதகர் அறவே விடுபடுவது சகல விதங்களில் இருந்தும் நலம் தரும்.
7) எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது நல்லதல்ல.
8) முறையாக ஆன்மீக தீட்சை நல்ல குருவிடம் பெற்று, தனது நிலையை பற்றி தெளிவு பெறுவது நல்லது. ( வாய்ப்பு குறைவு இருப்பினும் விடா முயற்ச்சி நன்மையை தரும் )
9) பணிவு,அன்பு,ஸ்திரமான மன நிலை, சுய ஒழுக்கம், விட்டு கொடுத்து செல்லும் மன நிலை ஆகியவை ஜாதகரின் வாழ்க்கையில் பாதக ஸ்தான தீமைகளில் இருந்து மீட்டு எடுக்கும்.

குறிப்பு :

பரிகாரம் என்பது சுய ஜாதகத்தில் எந்த பாவகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொண்டு, கர்ம வினையினை கழித்து கொள்வதே சிறப்பானது, மேலும் சுய ஜாதக அடிப்படையில் தமக்கு உகந்த கோவில் வழிபாடு, ரத்தின ஆகர்ஷ்ணம், ஹோமம், தான தர்மங்கள் மூலம் சரியான நிவர்த்திகளை தேடி வாழ்க்கையில் சகல நலன்களையும், யோகங்களையும் சிறப்பாக பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஏப்ரல், 2016

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், மணமுறிவை தருமா?


சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் பாவகங்கலான குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது, ஒருவேளை பாதிக்க பட்டால் சம்பந்த பட்ட ஜாதகர் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதிக்க படுவது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை தரும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகியின் இல்லற
வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களையும், எதிர்பாராத இழப்புகளையும் கடுமையாக வாரி வழங்கும்.

 ஜாதகி சமுதாயத்திற்கு உற்படாத, கட்டுபடாத முரண்பட்ட வாழ்க்கை முறையையும் வழங்கி விடும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்தும் அதிக அளவில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கும், நடைபெறும் திசா புத்தியும் சாதகமாக அமையாவிடில், சம்பந்தப்பட்ட ஜாதகியின் வாழ்க்கை நரக வாழ்க்கைக்கு இணையான பலன்களை தர ஆரம்பித்துவிடும், இயற்கையாகவே குடும்ப கௌரவம் என்பது பெண்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே அமைவதால், பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்கபடுவது, ஜாதகிக்கு குடும்பம், சமுதாயம் மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, மேலும் ஜாதகியின் வாழ்க்கை பலரின் விமர்சனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிக அளவில் சம்பந்த பட்ட ஜாதகியின் வாழ்க்கை துணையான கணவரையே வெகுவாக பாதிக்கும், பாதிப்பின் தன்மை உணர்வதற்கு பாதக ஸ்தானம் சர, ஸ்திர, உபய இயக்க நிலையையும், நெருப்பு,நிலம்,காற்று மற்றும் நீர் தத்துவ ராசிகளின் தொடர்பை தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சுவாதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், உயிர் உடலாகிய லக்கினம் ஜாதகிக்கு தொடர்பு பெறுவது திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகம், எனவே அடிப்படையிலேயே ஜாதகிக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே சிதைத்துகொள்ளும் தன்மையையும், பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவில்லாமல் தனது போக்கிற்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகி செய்யும் காரியங்கள் யாரும் அறியாவண்ணம் ரகசியமாக அமைந்தது, வழிகாட்டுதல்கள் இல்லாத வாழ்க்கை முறை ஜாதகியின் குணநலன்களை வெகுவாக பாதித்தது, ஜாதகிக்கு லக்கினம் பாதிக்க படுவது,உடல்,மனம் மற்றும் வாழ்க்கை முறையை வெகுவாக பாதித்தது, இந்நிலை தற்பொழுதும் தொடர்வது ஜாதகிக்கு உகந்ததல்ல.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பேச்சு மற்றும் வாக்குவாதம் ஜாதகிக்கு பேரிழப்பை வழங்கியது, இதன் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருததக்கது, ஜாதகியின் வருமான நிலை தொடர்ந்து கேள்வி குறியாக இருப்பது பொருளாத பின்னடைவை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் திருமணம் நடை பெற்றும் குடும்ப வாழ்க்கை என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையாத சூழ்நிலையே நிலவுகிறது, பல எதிர்ப்புகளை தனது வாக்குவாதத்தின் மூலம் ஜாதகி உருவாக்கி கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது, குடும்ப வாழ்க்கையில் ஜாதகிக்கு ஆர்வம் இல்லாத தன்மையும், தேவையில்லாத வாக்குவாதமும் எதிர்பாராத இழப்புகளை ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருப்பது 2ம் பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பல்ல.

மேற்கண்ட பாவக வலிமை அற்ற நிலைக்கு, சிகரம் வைத்தார் போல் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, பாதக ஸ்தான பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து திருமணம் ஆனா சில நாட்களிலேயே வழங்க துவங்கியது ஜாதகியின் கணவருக்கு, திருமணதிற்கு முன்பு நல்ல வேலையில் ஜாதகியின் கணவர் கைநிறைவான வருமானத்துடன் இருந்தார், திருமணம் ஆனா 10 நாட்களிலேயே ஜாதகருக்கு வேலை பறிபோனது மட்டும் இன்றி, இதுவரை அவருக்கு ஒரு சிறு வேலை வாய்ப்பும் அமையவில்லை, ஜாதகர் வீணாக அலைந்தது மட்டுமே பலனாக கிடைத்தது, தனது மனைவி வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை ஜாதகர் பெற்றார், ஜீவன வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, வருமானம் முற்றிலும் நின்றது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவியது, மேலும் இதுவரை சிறப்பாக இருந்த, ஜாதகரின் சுய கௌரவமும், அந்தஸ்தும் வெகுவாக  பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது ( இதற்க்கு காரணமாக ஜாதகரின் சுய ஜாதக நிலையும் காரணமாக அமைந்தது கவனிக்க தக்க அம்சமாகும் ) திருமணதிற்கு முன்பு ஜீவன வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும், திருமணதிற்கு பிறகு ஜாதகரின் சூழ்நிலை நேரெதிராக மாறி ஜீவன வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்து ஜாதகரை திக்குமுக்காட வைத்து கொண்டு இருக்கிறது, தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் திசா புத்திகள் ஜாதகிக்கு சாதகமாக இருப்பது, ஜாதகியின் இல்லறவாழ்க்கையில் பிரிவை தர  வாய்ப்பில்லை என்ற போதிலும், களத்திர பாவக வழியிலான 200% விகித இன்னல்களை ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் தங்கு தடையின்றி தரும் என்பது கவலைக்கு உரியதாகும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகியின் கணவருக்கு நன்மைகளை தாராது, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படும்பொழுது, தம்பதியரின் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்க படும், திருமண பந்தம் விவாகரத்தில் முடியவும் வாய்ப்புள்ளது, எனவே திருமணதிற்கு முன்பே வாழ்க்கை துணையை ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை உணர்ந்து  தேர்வு செய்வது சிறந்த இல்லற வாழ்க்கையை  அமைத்து தரும், அதற்க்கு முன் தமது ஜாதகத்தில் 2,7ம் பாவக  வலிமையை பற்றி  தெளிவாக தெரிந்து வைத்திருப்பது, தமது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்க சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

 வரனின் ஜாதகதிலோ, வதுவின் ஜாதகதிலோ 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், இனிமையான இல்லறம் அமைய வாய்ப்புண்டு, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கபடுவதும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், இல்லற வாழ்க்கையில் மன கசப்பையும், பிரிவு என்ற நிலையையும் நிச்சயம் தரும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால, 200% விகித இன்னல்களை இருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது மாற்ற இயலாத ஜாதக நிலையாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 29 மார்ச், 2016

ஸ்திர லக்கினங்களுக்கு பாதக ஸ்தானம் எவ்வித இன்னல்களை தரும்!




ஸ்திர ராசிகள் என்று அழைக்கப்படும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசியினை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு வழங்கும் அவயோக பலன்களை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையை தாராது என்பதுடன், 200% விகித இன்னல்களை தரும், மேலும் ஜாதகர் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமையும், மேலும் லக்கினம் முதல் 12 வீடுகள் ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் அவயோக பலன்களை தட்டமால் தரும்.

 பொதுவாக நமது கிராமங்களில் ஒரு செலவேந்திரம் உண்டு " பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழி ஸ்திர லக்கினம் அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து, ஜாதகர் மேற்கண்ட பழமொழிக்கு உண்டான பலாபலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், உதாரணமாக ஒரு ஸ்திர இலக்கின அன்பருக்கு, லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால், ஜாதகர் தமது வாழ்க்கையை தாமே சிதைத்துகொள்ளும் தன்மையை தரும், சுய ஒழுக்கம் பாதிக்க படும், வீண் அவபெயரை ஜாதகரே தேடி சென்று பெற்றுகொள்வார், அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் எல்லாம், அதி முட்டாள் தனமான செய்கையாக அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய இன்னல்களையும், மன வருத்தங்களையும் ஏற்ப்படுத்தும், சாதாரணமான நன்மைகளை பெறுவதற்கே ஜாதகர் கடும் போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல்,மனம்,உயிர் ஆகியவற்றின் சக்த்திகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் விளைவறியா செயல்கள் வாழ்நாள் முழுவதும்  ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையும் துயரங்களையும் வழங்கும், சமூகத்தில் ஜாதகர் நர்ப்பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்பாகவே அமைந்து விடும்.

ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு பாதக ஸ்தானம் பெரும்பாலும் சர ராசிகளிலேயே அமையும் என்பதால், ஜாதகருக்கு கொடுக்க வேண்டிய இன்னல்களை தங்கு தடையின்றி மிக வேகமாக வாரி வழங்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்வது என்பது  மறுஜென்மம் எடுத்ததிற்கு இணையானதாக அமையும், பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் வீண் விவகாரங்களில் தலையீடு செய்து தேவையில்லாத வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத வீண் அலைச்சல் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்தை  வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் அறிவு திறன் பலன் தாராமல், உணர்ச்சி வேகமே மிகுந்து நிற்கும், பாதக ஸ்தானம் நீர் ராசி என்றால் ஜாதகரின் வீண் கற்பனையும், கனவு உலக வாழ்க்கையும் நிதர்சனமான உண்மையை  மறைக்கும், பெரும்பாலும் போதை வஷ்துகளுக்கு அடிமையாகும் தன்மையை தரும், வீண் கற்பனையில் தனது வாழ்க்கையை தானே சிதைத்துகொள்ளும் அமைப்பை தரும், ஜாதகரின் வாழ்க்கையில் அடையும் மன துயரங்கள் என்பது ஓர் அளவில்லாமல் வரும் என்பதை கருத்தில்  கொள்வது நலம், பெரும்பாலும் துஷ்ட சக்திகள் ஜாதகரை வெகுவாக  பயன்படுத்திகொள்ளும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஜாதகர் அடிமையானால் அதில் இருந்து விடுபடுவது என்பது சாதாரன காரியமல்ல என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

பாதக ஸ்தானம் காற்று ராசி என்றால், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் அற்ற தன்மையும், விளைவு அறியா நிலையும் ஜாதகர் படும் துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடும், புத்திசாலித்தனம் என்று  நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் வெகுவான  பாதிப்புகளை வாரி வழங்கும், செய்யும் காரியங்களில் ஜாதகருக்கு பெரும்பாலும் மிகப்பெரிய தோல்வியே கிட்டும், அடிப்படையில் உதவி செய்வார் எவருமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் வீண்  பிடிவாதமும், முரட்டு சுபாவமும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், அறிவார்ந்த பெரியோர்களின் சாபமும், விமர்சனமும் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும், பாதக ஸ்தானம் மண் தத்துவ ராசி என்றால் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும், ஜாதகரின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாகும், ஜாதகரின் சொத்து,வீடு,வண்டி,வாகனம் ஆகியவை அனைத்தும் மற்றவர்களால் அபகரிக்கும் சூழ்நிலையை தரும், அதற்க்கு ஜாதகரின் செயல்பாடுகள் காரணமாக அமையும், தமது பெயரில் உள்ள சொத்து, வண்டி, வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகர் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான தொடர்பு பெரும் ஓர் உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவாக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற நிலையையும், ஜாதகியின் அறிவற்ற செயல்களால் ஜாதகி வாழ்க்கையில் அதிக பாதிப்புகளையும், தனது பெயருக்கும்  புகழுக்கும் பெரிய களங்கத்தையும், தான் செய்வதே சரியானது என்ற அறிவீனத்தையும் ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, சம்பந்தம் இல்லாத மற்றவர் காரியங்களில் தலையீடு செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் பேச்சை கேளாமல் தமது வாழ்க்கையை தாமே கெடுத்துகொள்ளும் செயல்களில் ஜாதகி அசட்டு தனமாக இறங்குவது, ஜாதகியின் உடல் நிலையையும், மன நிலையையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நடவடிக்கைகள் ஜாதகியின் குடும்பத்தாருக்கு வெகுவான பாதிப்புகளை தொடர்ந்து வழங்குவது அவர்களின் நிம்மதியை வெகுவாக பாதித்துக்கொண்டு இருக்கிறது, முரண்பட்ட செயல்பாடுகள் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கும் அதிக இன்னல்களை தருவதற்கு, பாதக ஸ்தான தொடர்புகளே காரணமாக அமைகிறது என்பது கவனிக்க தக்கது.

மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஒன்றுமட்டும் ஆறுதல் தரும் விஷயம், ஆனால் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது, குரு திசையில் ஜாதகி அனுபவிக்க இருக்கும், இன்னல்கள் பற்றி தெளிவு பெறுவதும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்வதும், ஜாதகியின் வாழ்க்கையில் நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 22 மார்ச், 2016

கால சர்ப்ப யோகமா அல்லது கால சர்ப்ப தோஷமா? காலத்துக்கும் சர்ப்ப தோஷமா ?


நடிகர் திலகம் சிவாஜி நடித்த "கௌரவம்" திரைப்படத்தில், நகை சுவை மன்னர் நாகேஷுக்கு சிறந்த வசனம் ஒன்று வரும் அதாவது,

" ஒய் நீ 50 வயது வரைக்கும் தான் படாத பாடு படுவாய், 
ஜீவனத்துக்கே கஷ்ட படுவாய் "
"அதற்க்கு பிறகு "
அதுவே "பழகி விடும்" என்பார், 

இந்த நகை சுவைக்கு நிகராக இருக்கின்றது இந்த கால சர்ப்ப தோஷம் பற்றி அன்பர்கள் சொல்லும் கருத்துக்கள், குறிப்பாக ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்கின்றனர், மேலும் ராகு கேது கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அடைபடுவது சர்ப்ப தோஷம் என்கின்றனர், மேற்கண்ட கிரக நிலை அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும், சாய கிரகங்களான ராகுகேதுவே காரணம் என்று குற்றம் சாற்றுவது என்பது சகசமான நிலை என்றாகிவிட்டது.

மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, தொழில் விருத்தி இன்மை, பெயருக்கும் புகழுக்கும் வரும் களங்கம், விருப்ப திருமணம், விபத்து, திடீர் இழப்பு, தீயவர் சேர்க்கை, மனஅழுத்தம், தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகும் தன்மை என, வரும் இன்னல் அனைத்திற்கும் கால சர்ப்ப தோஷமும், ராகுகேது தோஷமும் காரணமாக அமைந்து விடுவதாக ஒரு சாரர் கருதுவது உண்டு, இது முற்றிலும் தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் சொல்லப்படும் கருத்தாகவே கருதுகிறது, ராகு கேது சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமையை தரும் அமைப்பில் இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகத்தையுமே செய்யும், ராகு கேது சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை இல்லாத நிலையில் இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகத்தையும் தரும், மேலும் சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினத்தில் ( லக்கினத்தை மட்டும் கருத்தில் கொள்க ) அமர்ந்தால் நிச்சயம் இலக்கின பாவகத்திர்க்கு 100% விகித நன்மைகளையே செய்யும், இது மறுக்க  இயலாத உண்மை, இலக்கின வழியில் இருந்து ஜாதகர் 100 % விகித யோக பலன்களையே அனுபவிப்பர் இதில் எவ்வித சந்தேகமும், மாற்றமும் இல்லை.

ராகுகேது வலிமையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 ஜாதகருக்கு லக்கினத்தில் ராகு நீச்ச நிலையிலும், 7ம் பாவகத்தில் கேது உச்ச நிலையிலும் அமர்ந்துள்ளது, இந்த நீச்ச உச்ச நிலை என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டானது, சுய ஜாதகதிர்க்கும் நீச்ச உச்ச நிலைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்திற்கு சாய கிரகங்களான ராகு கேது தரும் பலாபலன்கள் பற்றி ஆய்வு செய்வோம், லக்கினத்தில் அமரும் ராகுகேது ஜாதகருக்கு 100% விகத நன்மையை தரும் என்பதற்கு இணங்க ஜாதகர், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், சிறந்த மன நிலையுடன் திகழ்கிறார், ஜாதகருக்கு எவ்வித தீய பழக்க வழக்கங்களும் இல்லை, எதையும் பரந்த மன பக்குவத்துடன் அணுகும் மன வலிமை கொண்டவராகவும், நல்ல குணமும், நல்ல அறிவும் கொண்டவராக காணப்படுவதும், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறனை பெற்று இருப்பதற்கும் ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது.

மேலும் ஜோதிடம்,கணிதம்,கலைகள்,தான் எடுத்துக்கொண்ட துறையில் நல்ல புலமையை தருவதும் ராகு பகவானின் ஆசிர்வாதமே, ஜாதகரின் தன்னம்பிக்கை, உறுதியான நிலைப்பாடு, கம்பீரமான செயல்பாடுகள்,  தீர்கமான வாத திறமை அனைத்திற்கும் ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, ஜாதகருக்கு லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாக வருவதும், அதுவே ஜாதகருக்கு லக்கினமாக அமைவதும், ஜாதகருக்கு நல்ல பேச்சு திறனையும், தன்னிறைவான வருமான வாய்ப்புகளையும், நல்ல ஆரோக்கியமான உடல்  நிலையையும், நீண்ட ஆயுளையும் வாரி வழங்குவதற்கு ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, மேலும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வருமானத்திற்கு குறைவில்லை என்ற நிலையை தருவதும் லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானின் ஆசிவாதமே காரணமாக  அமைகிறது.

அடுத்து 7ல் அமர்ந்த கேது பகவான் ஜாதகருக்கு வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் வாய்ப்பையும், நிரந்தமாக குடிஉரிமை பெரும் யோகத்தையும் தந்திருப்பது கவனிக்க தக்கது, ஜாதகரின் வாழ்க்கையில் புதையலுக்கு நிகரான வருமானங்களையும், எடுக்கும் காரியங்களில் சுலப வெற்றி வாய்ப்புகளையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதை 7ல் அமர்ந்த கேது பகவான், களத்திர பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, ஜாதகரின் நண்பர்கள்  மற்றும் உறவினர்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெறுவதை உக்க படுத்துவது கேது பகவானே, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் களத்திர பாவகம், ஆயுளை குறிக்கும் 8ம் ராசியாக வருவது, ஜாதகருக்கு  பூர்ண ஆயுளை வாரி வழங்குகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நீடித்த திடீர் அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திடீர்  முன்னேற்றங்களையும் பெறுவதை கேது பகவானின் வலிமையே நிர்ணயம் செய்கின்றது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், பொதுமக்கள் வழியில் இருந்தும் ஜாதகர் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதற்கு முழு காரணமாக கேது பகவான் 7ம் பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகின்றது.

 எனவே மேற்கண்ட ஜாதகருக்கு, லக்கினத்தில் அமர்ந்த ராகு லக்கினத்திற்கு 100% விகித யோக பலன்களையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான் 7ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது. ஆக சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது வலிமை பெற்று அமர்ந்தால், சம்பந்த பட்ட ஜாதகருக்கு 100% விகித யோக பலன்களே நடைபெறும் என்பதே உண்மை, இந்த நிலைக்கே "காலசர்ப்ப யோகம்" என்று சொல்லாம், எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு எவ்வித பலன்களை வழங்குகின்றனர் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகுகேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்வதை "சர்ப்ப தோஷம்" என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டியுள்ளது.

குறிப்பு :

 ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து வலிமை பெற்று இருப்பின், சம்பந்த பட்ட ஜாதகருக்கு, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களையே நடைமுறை படுத்தும், ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து வலிமை அற்று இருப்பின், சம்பந்த பட்ட ஜாதகருக்கு, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித அவயோக பலன்களையே நடைமுறை படுத்தும், என்னவே சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை உணர்ந்து பலன்கான முற்படுவதே, துல்லியமான பலாபலன்களை கூற இயலும் அன்பர்களே!

 (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு 33 வயது திருமணம், தொழில், குடும்பம், வருமானம், ஆரோக்கியம் ஆகியவற்றில் இன்னல்களை தரும், அதற்க்கு காரணமாக ராகு கேது அமையும் என்பதெல்லாம் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பான கற்பனையே.
  
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 21 மார்ச், 2016

சுய ஜாதகத்தில் நன்மையையும்,யோகமும் தரும் பாவகங்கள் எவை? தீமையும் அவயோகமும் ஏற்ப்படுத்தும் பாவகங்கள் எவை?


கேள்வி :

எனது சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக வழிகளில் இருந்து நன்மையையும்,யோகமும் உண்டாகும்? எந்த எந்த பாவக வழிகளில் இருந்து தீமையும் அவயோகமும் உண்டாகும்?

பதில் :

நல்ல கேள்வி, தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை ஆய்வு செய்வோம்!



லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் வாரி வழங்கும், நல்ல ஆரோக்கியம், நல்ல மனநிலை, வளரும் சூழ்நிலை சிறப்பான யோகங்களை பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து சிறந்த சமயோசித புத்திசாலித்தனம், கல்வியில் தேர்ச்சி கலைகளில் ஆர்வம், எதிர்பாராத உதவிகள், கல்வி துறையில் நல்ல முன்னேற்றம், புதிய சிந்தனை மூலம் நல்ல வாய்ப்புகளை பெரும் யோகம், குல தெய்வ நல்லாசிகள், நல்ல குழந்தைகள் என ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை யோகங்களையும் தரும், கூட்டு முயற்ச்சி வெற்றி பெரும் வெளிநாடு யோகம் உண்டு, பொதுமக்கள் ஆதரவு மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், நல்ல வாழ்க்கை துணையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடுகளையும், முற்போக்கு சிந்தனை உடன் கூடிய யோக வாழ்க்கையையும் பெறலாம், சிறப்பான நல்ல குணம், சிறந்த மன நிலை, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை, புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் பெரும் யோகம் என்ற வகையில் யோக பலன்களையும் வாரி வழங்கும்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படும் பாவகங்கள் :

2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம், வருமானம், பேச்சு என்ற வகையில் இருந்து அவயோகத்தையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம், சொத்து, வீடு வண்டி வாகனம் என்ற வகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகளையும், கடன் பிரச்சனைகளையும், எதிரி தொந்தரவுகளையும், செய்யும் காரியங்களில் அதிக எதிர்ப்புகளையும் வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், வீண் மருத்துவ செலவுகளையும், கடுமையான விபத்துகளையும், அதிக மன கவலைகளையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து கௌரவ குறைவையும், ஜீவன முன்னேற்றம் இன்மையையும், தொழில் மற்றும் வேளையில் மன நிம்மதி இன்னமையையும், பொருளாதார தொந்தரவுகளையும் வாரி வழங்கும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மன போராட்டத்தையும், மன நிம்மதி இழப்பையும் தரும், வீண் விரையங்களை தவிர்க்க இயலாது, அனைவராலும் தொல்லைகளை தரும், எதிர்பாராத திடீர் இழப்பு மிகுந்த இன்னல்களை தரும், எனவே தங்களது ஜாதகத்தில் 2,4,6,810,12ம் பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

தங்களது ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவகங்கள் :

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவு இன்மையையும், எடுக்கும் முயற்சிகள் கடுமையான தோல்விகளையும், தன்னம்பிக்கை அதிக அளவில் குறையும் தன்மையையும், பயணங்கள் மூலம் அதிக இன்னல்களையும் வீண் அவபெயரையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல் மனம் இரண்டும் விரைவில் சோர்ந்து போகும், வீண் கற்பனையும் சந்தேகமும் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், 9ம் பாவக வழியில் இருந்து முன்னோர்கள் மற்றும் வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் ஆசியை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், லட்சியம் மற்றும் கனவுகள் யாவும் நிறைவேறாமல் தோல்வியை தரும், எதிர்பாராத தொந்தரவுகளும், வீண் அலைச்சல்களையும், தெளிவற்ற அறிவு திறன் இல்லாமல் பெரிய சிக்கல்களில் தாமாகவே சென்று சிக்கி கொள்ளும் தன்மையை தரும், தமது  புகழுக்கும் பெயருக்கும் களங்கத்தை தரும், உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தையும் பெரும் தன்மையையும்.

12ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், அதிக தொல்லைகளையும் தரும்.

9ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து கடுமையான பாதிப்புகளை தரும், சுய முன்னேற்றம் இன்மையையும், வீண் அவ பெயரையும், வீண் அலைச்சல்களையும், நீடித்த தொந்தரவுகளையும் தரும்,  அனைத்தும் தோல்வியை தரும்.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 11ம் பாவக பலனை தருவது மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் 1,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை தருவது, கடுமையான பாதிப்புகளை தரும், குறிப்பாக 3,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் இதில் இருந்து மீண்டு  வருவது என்பது கேள்வி குறியே.

குறிப்பு :

மறைவு ஸ்தானம் மற்றும் துர் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6,8,12ம் வீடுகள் மட்டுமே ஜாதகருக்கு தீமையையும் அவயோகத்தையும் தரும் என்பது பொதுவான கருத்து, லக்கினம் முதல் 12 பாவகங்களும் ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை, யோக அவயோக  பலாபலன்களை தருவதற்கு உண்டான வலிமை உள்ளது என்பதே எதார்த்தமான உண்மை அன்பர்களே! எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமையுடன் இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நிச்சயம் யோகங்களை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 20 மார்ச், 2016

பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமும் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக அமையுமா ?


"எண் சாண்  உடம்புக்கு சிரசே பிரதானம்" 
என்ற பழமொழிக்கு ஏற்ப சுய ஜாதகத்தில் லக்கினமே பிரதானமாக அமைகிறது, லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற 11 பாவகங்களும் இயங்குகிறது என்றால், அது மிகையில்லை, ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை வழங்குவதில் நிச்சயம் 12 பாவகங்களுக்கும் பங்குண்டு, இதில் ஜாதகருக்கு நடைபெறும் அவயோக பலன்கள் அனைத்திற்கும் பித்ரு தோஷம் மற்றும் குல தெய்வ சாபம் காரணமாக அமையும் என்பது சுய ஜாதக கணித அமைப்பிற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

பெரும்பாலும், வேலை தொழில் முன்னேற்றம் இன்மை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இன்மை,  ஆரோக்கியம் இன்மை, கல்வியில் தடை, பொருளாதார முன்னேற்றம் இன்மை போன்றவற்றிற்கு, குல தெய்வ சாபத்தையும், பித்ரு சாபத்தையும் காரணம் காட்டுவதுண்டு, இதுவும் தவறான அணுகுமுறையே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு, நடைபெறும் திசா புத்தியும் பாதிக்க பட்ட 5,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இன்னல்களை தரும், தமது பாவக வழியில் இருந்து, 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாது, ஜாதகருக்கு உதவும் அன்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், குல தெய்வ ஆசி கிடைக்காது, தமது குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தாராது.

9ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு சுய அறிவுத்திறன் ஜாதகருக்கு பலன் தாராது, சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்ல என்ற நிலையை உருவாக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பலன் தாராது, ஆன்மீக பெரியோர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் ஆசியை பெறுவது என்பது இயலாமல் போகும், ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல், நாத்திகத்தில் ஆர்வத்தை தரும், நல்ல ஞானம் என்பது கிட்டாமல் சூன்யமான வாழ்க்கை அமைந்துவிடும், ஜாதகருக்கு போதிக்கும் அறிவுரை அனைத்தும் வீணாக போகும், பெரியோர்களையும் முன்னோர்களையும் நிந்தனை செய்யும் போக்கு ஜாதகருக்கு அதிகரிக்கும், நல்லோர் மற்றும் பெரியோர்களின் ஆதரவை பெறுவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக மாறிவிடும்.

1) ஆரோக்கியம் 

ஆரோக்கிய பாதிப்பிற்கு சுய ஜாதகத்தில் 1,6,8,12ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் உடல் நலம் பாதிக்கும், அது சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு உடல் நல பாதிப்பு நிச்சயம் ஏற்ப்படும்.

2) கல்வி 

கல்வியில் தடை எற்ப்பட சுய ஜாதகத்தில் 2,5,9ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு கல்வியில் தடையும், முன்னேற்றம் இன்மையும்  உண்டாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கல்வி,உயர் கல்வி முயற்ச்சிகள் தோல்வியை தரும்.

3) திருமணம் 

திருமண வாழ்க்கையில் தடைகளுக்கும் தாமதத்திற்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு திருமண தடை மற்றும்  கால தாமத திருமணம் என்ற நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் சார்த்த தடைகளை தங்கு தடையின்றி வழங்கும்.

4) தொழில் 

தொழில் மற்றும் பணியில் விருத்தி இன்மைக்கு காரணமாக சுய ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு நல்ல தொழில் அல்லது வேலை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு ஜீவனம் அமையாமல் போராட்ட வாழ்க்கையை வழங்கி விடும், தனித்தோ கூட்டு முயற்சியாகவே ஜாதகர்  எவ்வித ஜீவனத்தையும் மேற்கொள்ள இயலாது.

5) குழந்தை பாக்கியம் 

நல்ல வாரிசு அல்லது குழந்தை அமையாதது என்பது தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும்,  மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது தம்பதியருக்கு நல்ல வாரிசோ அல்லது குழந்தை பாக்கியமோ அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தினால், புத்திர பாக்கியம் அமைவது என்பது அரிதாகிவிடும்.

6) பொருளாதாரம் 

பொருளாதரத்தில் தடைகளும் இன்னல்களும் ஏற்ப்பட சுய ஜாதகத்தில் 1,2,4,7,10,11ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு  இலக்கின வழியில் இருந்து பலன்களை உதறும் தன்மையும், 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாத  சூழ்நிலையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம் மற்றும் வண்டி வாகனம் மற்றும் சொத்து சுகங்களை  சுவீகாரம் செய்ய இயலாத சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை,  நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதரவின்மையையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் தன்மையை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல ஜீவனம் இன்மையையும், கௌரவ குறைவையும், சுய தொழில் செய்வதில் தோல்விகளையும் தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பொருளாதார தன்னிறைவு என்பது கானல் நீராக மாறிவிட வாய்ப்புண்டு.

எனவே ஆரோக்கியம்,கல்வி,திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் மற்றும் பொருளாதார தடைகளுக்கும், ஜாதகத்தில் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக பித்ரு தோஷமும், குல தெய்வ சாபமுமே காரணம் என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது அன்பர்களே! மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதை உணர்ந்து சம்பந்த பட்ட பாவகங்கள் வலிமை பெறுவதற்கு உண்டான தேடுதல்களை செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 19 மார்ச், 2016

திருமண தடை மற்றும் தாமத திருமணம் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

 ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதை அந்த ஜாதகரின் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் வீடும் வலிமை பெறுவது எந்த ஒரு ஜாதகருக்கும் சரியான கால நேரத்தில், திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வைத்துவிடும், மாறாக 2,7ம் வீடுகள் பாதிக்க படும் பொழுது, ஜாதகரின் திருமண முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும், கால தாமத திருமணமும், திருமண தடைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், 2,7ம் வீடுகள் பாதிப்பது திருமண வயதில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தருவதில்லை, இவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் மிகப்பெரிய தோல்விகளையே சந்திக்கிறது என்பது கண்கூடான உண்மை, திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகருக்கு வயது 40 மேல் ஆகிவிட்டது, பெண் பார்க்கும் படலத்தை தொடர்ந்து  செய்துகொண்டு உள்ளார், இருப்பினும் ஜாதகருக்கு உகந்த வாழ்க்கை துணை கிடைக்க வில்லை, மேலும் திருமனத்திர்க்காக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் ஜாதகருக்கு தொடர்ந்து தோல்வி மேல் தோல்விகளையே வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கும் ஜாதகரின் குடும்பத்தாருக்கும் பெரிய மன கலக்கத்தையும், வெளியில் சொல்ல இயலாத துன்பத்தையும் தந்து கொண்டு இருக்கிறது, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாதகர் பெண் தேடினாலும் இன்னும் கிடைத்தபாடில்லை, திருமண தாமதத்திற்கு ஜாதக ரீதியான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு மீன லக்கினம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், பொதுவாக சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வயதில் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று விடும், இந்த ஜாதகருக்கு அடிப்படையிலேயே 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 7ம் வீடு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, களத்திர ஸ்தானமாக அமைந்து ஆயுள் பாவகம் 100% விகிதம் பாதிக்க படுவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

சுய ஜாதகத்தில் லக்கினம் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் யாவும், ஜாதகர் மூலமாகவே விரையம் ஆவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகரின் கற்பனையும் எண்ணத்தின் விளைவும் தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளையும் வீண் விரையம் செய்வதை தெளிவாக காட்டுகிறது, லக்கினம் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிலும் திருப்தி இல்லாத மன நிலையை காட்டுகிறது, தமக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி ஜாதகரே ஒரு கற்பனையில் நீந்திக்கொண்டு, தமக்கு வரும் நல்ல, நல்ல பெண் ஜாதகங்களை தவிர்த்தது, திருமணம் நடைபெறாமல் ஜாதகரை 40 வயதுக்கு மேல் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது, திருமண வாழ்க்கை என்பது சரியான வயதில் நடைபெற்றால் மட்டுமே இல்லறம் சிறக்கும் என்ற விஷயம் ஜாதகருக்கு இதுவரை புரியாதது, ஜாதகரின் இலக்கினம் பாதிக்கும் தன்மையில் இருந்து "ஜோதிடதீபம்" தெளிவாக உணர்ந்து கொண்டது.

ஜாதகருக்கு 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருப்பினும், 02/02/2006 முதல் 02/02/2016 வரை நடைபெற்ற சந்திரன் திசை 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சந்திரன் திசை முழுவதும் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமையாமலும், வருமான ரீதியான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததிர்க்கு ஒப்பான பலன்களை தந்தது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிப்பதே திருமண வாழ்க்கையில் தடைகளை தரும், நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் அவஸ்தையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக பலனையே செவ்வாய் திசையும் ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு வந்த சோதனை காலம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை, எனவே செவ்வாய் திசையில் செவ்வாய் புத்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் திசையில், ராகு புத்தியும், குரு புத்தியும் சற்று நிறைவான நன்மையை செய்வதால் 30/06/2016க்கு மேல் தமக்கு வரும் வதுவின் ஜாதகத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சால சிறந்தது, இல்லை எனில் ஜாதகரின் கதி அதோ கதிதான்.

திருமண தடையும், திருமணம் தாமதம் ஆக காரணம் சம்பந்த பட்ட ஜாதகரின் 2,7ம் வீடுகளின் வலிமையின் தன்மையே என்றால் அது மிகையில்லை, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்தின் திசா அல்லது புத்திகள்  நடைபெறும் பொழுது திருமணத்திற்கு உண்டான முழு முயற்ச்சியில் இறங்கி நல்ல இல்லற வாழ்க்கையை தேடிகொள்வது 100% விகித நன்மைகளை  நிச்சயம் தரும், எனவே திருமணம் ஆகாமல் தாமதம், மற்றும் தடைகளை சந்தித்து வரும் அன்பர்கள், தமக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைத்துகொள்வது வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 18 மார்ச், 2016

எப்பொழுதும் நல்ல நேரமே! சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது !


" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் " 

என்ற திரைபட நகைசுவை விரும்பி பார்த்ததுண்டு, பொதுவாக எந்த ஒரு சுப நிகழ்ச்சி துவங்கும் முன் நல்ல நேரம் பார்ப்பது மக்களிடையே உள்ள இயற்க்கை நடைமுறை, இதில் அன்றைய நாளில் பஞ்ச அங்கங்களை கணிதம் செய்து முகூர்த்தமும், சுப நேரங்களையும் "ஜோதிடர்கள்" பரிந்துரை செய்கின்றனர், நல்லநேரம் நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு யோக பலன்களையும் அதிர்ஷ்டங்களையும் அதிக அளவில் வாரி வழங்கும்.

பொதுவாக சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு எப்பொழுதும் எல்லா நேரங்களையும் நல்ல நேரமாக நன்மை தரும் விதத்தில் அமைந்து விடும், குறிப்பாக சுய ஜாதக பாவக வலிமை ஜாதகருக்கு எப்பொழுதும் நன்மை மற்றும் யோகங்களை வாரி வழங்கிய வண்ணம் இருக்கும், மேலும் லக்கினம் முதல் 12 பாவகமும் வலிமை பெற்ற, ஜாதக அமைப்பை பெற்றவர்கள், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல், எந்த நேரத்திலும் எந்த காரியத்திலும் துணிந்து இறங்கலாம், நிச்சயம் 100% விகித நன்மையும் வெற்றியும் உண்டாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் தமக்கு உகந்த, தனது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் அடிப்படையில் நல்ல நேரத்தை தேர்ந்து எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

சில அன்பர்களின் ஜாதகங்களுக்கு பொதுவாக தீமையை தரும் என்று கருதும் ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவை அபரிவிதமான யோக பலன்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற அன்பர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகங்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக ராகு பகவான் அமர்ந்து லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு ராகு காலமே சகல யோகங்களையும் தரும், குறிப்பாக ஜாதகர் ராகு காலங்களில் எடுக்கும் முயற்ச்சிகள், புதிய காரியங்கள், புதிய தொழில்கள் யாவும் ஜாதகருக்கு வெற்றிமேல் வெற்றியையும், லாபங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுது, பாவ கிரகம் என்று அழைக்கப்படும்  ராகு,கேது,சனி, செவ்வாய்,சூரியன் திசாபுத்திகளும் ஜாதகருக்கு யோக பலன்களையே வாரி வழங்கும்.

 ஒருவருக்கு நல்ல நேரம் என்பது சம்பந்த பட்ட ஜாதகரின் பாவக  வலிமைக்கு ஏற்ப்பவே அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது எல்லா நேரமும் நல்ல நேரமே, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது நல்ல நேரமும் ஜாதகருக்கு எதிராக திரும்பு, ஜாதகரின் முயற்ச்சிகள், செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடியும், தமது சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ற பொருத்தமான நல்ல நேரத்தை தேர்வு செய்து வெற்றி காண்பதே புத்திசாலித்தனம், எல்லா நேரமும் நல்ல நேரமாக அமையும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : மிதுனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம் 

 ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

3,6,711ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித அவயோக பலன்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட  ஜாதகருக்கு பெரும்பாலனா வீடுகள்  ( 9,12 தவிர ) வலிமை பெற்ற பூர்வ புண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை தரும் அமைப்பாகும், மேலும் நடைபெறும் திசாபுத்திகள் அனைத்தும் ஜாதகருக்கு பூர்வபுண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்ற வீடுகளின் பலன்களையே ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு எந்நேரமும் நல்ல நேரமாக அமைவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகர் எந்த நேரத்திலும் எதை செய்தாலும் முழு வெற்றியினை பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும், இதற்க்கு காரணமாக அமைவது சுய ஜாதக பாவக வலிமையே, ஜாதகருக்கு 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு சாதகமான அம்சமாகும், 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் 12ம் பாவகம் ஜாதகருக்கு செயலிழந்து நிற்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக பொறுப்பு ஏற்ப்பது, ஜாதகர் ராகு காலங்களிலும் அபரிவிதமான யோகங்களை பெறுவதை உறுதி செய்கிறது, ஜாதகர் ராகு காலங்களில் துவங்கும்  காரியங்களும், முயற்ச்சி மற்றும் தொழில்களும் வெற்றி மேல் வெற்றியை வாரி குவிக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை, இந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் வாரி வழங்குவதே சாய  கிரகமான ராகு பகவான்தான் என்றால் அது மிகையில்லை.

" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் "

என்ற நகைசுவை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ "சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும்" வலிமை பெற்ற ஒருவருக்கு  நிச்சயம் பொருந்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 17 மார்ச், 2016

தொழில் ஸ்தான வலிமையையும், ஜாதகருக்கு பொருத்தமான தொழில் தேர்வும் !


சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு கல்வி காலத்திற்கு பிறகு சரியான வயதில், ஜாதகருக்கு உகந்த பொருத்தமான தொழில் அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமைந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை என்பது எவ்வித குறையும் இன்றி சிறப்பாக அமையும், கௌரவம் குறையாமல் "உத்தியோகம் புருஷ லட்சணம்" எனும் முதுமொழிக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது உகந்த தொழிலோ நிச்சயம் அமைந்து விடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்க படுவதும், நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகம் இன்றி இருப்பது, ஜீவன ரீதியான தேடுதல்களையும், தொழில் ரீதியான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், மேலும் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை சார்ந்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவும், தமக்கு உகந்த தொழில் மற்றும் வேலையை எப்படி தேர்வு செய்வது என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

கால புருஷ ராசி அமைப்பிற்கு 3 இயக்கங்கள் உண்டு, 

1) சர இயக்கம் ( மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ) 
2) ஸ்திர இயக்கம் ( ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம் ) 
3) உபய இயக்கம் ( மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்)

இதில் சர இயக்கம் உற்பத்தி பணியையும் ,
ஸ்திர இயக்கம் விற்ப்பனை பணியையும்,
உபய இயக்கம் சேவை  பணியையும் குறிப்பதாக வைத்துகொள்வோம்,

கால புருஷ ராசி அமைப்பிற்கு 4 தத்துவங்கள் உண்டு,

1) நெருப்பு தத்துவம் ( மேஷம்,சிம்மம்,தனசு )
2) நில தத்துவம் ( ரிஷபம்,கன்னி,மகரம் )
3) காற்று தத்துவம் ( மிதுனம்,துலாம்,கும்பம் )
4) நீர் தத்துவம் ( கடகம்,விருச்சிகம்,மீனம் )

எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட இயக்கம் மற்றும் தத்துவ  அமைப்பில்தான் நிச்சயம் ஜீவன ஸ்தானம் அமையும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மேற்கண்ட இயக்கம் மற்றும் தத்துவ அமைப்பில் இருந்து இயற்கையாகவே ஜீவன தொடர்புகளை ஏற்ப்படுத்தி ஜாதகருக்கு சிறந்த வேலையையோ, சிறந்த தொழில் வாய்ப்புகளையோ அமைத்து தந்துவிடும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இருப்பின் தன்னிறைவான வசதி வாய்ப்புகளை வாரி வழங்கி விடும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமற்ற நிலையில் இருப்பின், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இருக்காது, இருப்பினும் ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்கி கொண்டு இருக்கும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரியான தொழில் மற்றும் வேலையை வழங்கினால், நடைபெறும் திசாபுத்திகள் சிறப்பாக அமைவது ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் தன்னிறைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் நெருப்பு தத்துவ ராசி ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது, ஜாதகரை தொழில் நுட்பம் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : கணினி,தகவல் தொடர்பு

ஒருவரது சுய ஜாதகத்தில் நில தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது மண் தத்துவ பொருட்கள் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : கட்டுமானம், உலோக தாயரிப்பு 

ஒருவரது சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது அறிவு திறன் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : தரகு,யூகவணிகம்,ஆலோசனை

ஒருவரது சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது மனம் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : விவசாயம்,கல்வி,போதனை 

மேற்கண்ட விஷயங்களுடன் சர,ஸ்திர,உபய இயக்கங்களுடன் ஜீவன பாவகம் தொடர்பு பெரும் அமைப்பிற்கு உகந்தவாறு ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் சரியான முன்னேற்றங்களையும், யோகங்களையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, நடைபெறும் திசாபுத்திகள் யோக பலன்களை தருவது ஜாதகரின் தொழில் வெற்றியை நிர்ணயம் செய்கிறது.

தொழில் நிர்ணயம் :

ஒரு மகர இலக்கின அன்பருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவதாக இருப்பின், ஜாதகர் தனது அறிவு திறன் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைவார், நடைபெறும் திசா புத்திகளும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பலனை தருமாயின், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மிக குறுகிய காலத்தில் அமையும்,  வியாபர விருத்தி பன்மடங்கு பெருகும், உலகம் முழுவதிலும் ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப சரியான தொழில் செய்யும் பொழுது, நேர விரையம் குறைக்கப்பட்டு, செய்யும் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றமும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி பெற இயலும், சுய ஜாதகத்திற்கு பெருத்தம் இல்லாத தொழில் செய்வது ஜாதகரின் முன்னேற்றத்தையும், நேரத்தையும் காவு வாங்கும் என்பது மட்டும் உண்மை, கிராமங்களில் நமது பெரியோர்கள் சொல்லும் " பாடும் பட்டாப்பல வீடும் கெட்டப்பல " என்ற முது மொழிக்கு உதாரணமான வாழ்க்கையை அமைத்து தந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 16 மார்ச், 2016

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?


 பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியத்தில் தடை செய்யும், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டால், தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, பொதுவாக சுய ஜாதகத்தில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியத்தில் குறைகளை தரும், மாறாக ஒருவரது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்து, ஒருவரது ஜாதகத்தில் பாதிக்க பட்டு இருப்பின் புத்திர பாக்கியம் அமையும், மேலும் சாய கிரகங்களான ராகுகேது  5ம் பாவகத்தில் அமர்வது புத்திர பாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பானதே, 5ல் அமர்ந்த சாயா கிரகங்கள் ஜாதகருக்கு தொடர்ந்து ஆண் வாரிசாகவே வழங்குவதும் உண்டு, 5ல் அமர்ந்த சாய கிரகங்கள் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்யுமாயின், மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும் நிலை :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200% விகித பாதிப்பை, புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து தரும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகத்துடனும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகத்துடனும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெரும் 5ம் வீடு ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கிய தடைகளை தரும், குழந்தையே அற்ற நிலை, கருசிதைவு, புத்திரசோகம், சிறப்பு குழந்தைகள் என ஜாதகருக்கு புத்திர பாவக வழியில் இருந்து  வெகுவான பாதிப்புகளை வழங்கும்.

5ம் பாவகம் பாதிக்க படும் நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு 4,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தில் 60% விகத தடைகளை தரும், தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை மட்டும் வாரிசாக அமையும் தன்மை, மருத்துவ உதவியுடன்  செயற்கை முறையில் குழந்தை பாக்கியம் பெரும் தன்மை, தனது குழந்தைகள் வழியில் இருந்து மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்ளும் தன்மை என ஜாதகருக்கு புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், 

மேற்கண்ட 5ம் பாவக பாதிப்புகள் தம்பதியர் இருவரின்  ஜாதகத்திலும் அமைந்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவருக்கு மட்டும் இருப்பின் மேற்கண்ட பாதிப்புகளில் 10% விகிதம் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்ட ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேலும் அந்த ஜாதகர் 5ம் பாவக பாதிப்பில் இருந்து வெளிவரும் வழிமுறையையும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

ஜாதகருக்கு மிதுன லக்கினம், குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகருக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு சில முறை கரு சிதைவும் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் ஜாதகரின் 5ம் வீடு தொடர்பு பெரும் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது, ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவின் தாக்கத்தை காட்டுகிறது, மேலும் ஜாதகரின் 9ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பித்ரு சாபத்தின் தன்மையை தெளிவாக்குகிறது, எனவே ஜாதகருக்கு குல தெய்வம் பிதுர்க்கள் ஆசியும் அற்று, சாபம் என்ற நிலையை அதிகரிக்கின்றது, எனவே ஜாதகருக்கு புத்திர பாக்கிய குறைகளையும், புத்திர சோகத்தையும் வாரி வழங்குகிறது.

ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகருக்கு நல்ல வாரிசு அமைவதை கேள்விகுரியாக்குகின்றது, ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் அனுபவிப்பதை தவிர்க்க  இயலவில்லை, தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோகங்களை தந்த போதிலும், நடைபெற்ற செவ்வாய் புத்தி 8ம் பாவக பலனை வழங்கி திடீர் இழப்புகளை வழங்கியது, தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் பாவக பலனை தருவது நன்மைகளை தரும் என்று ஜாதகர் மகிழ்ச்சி அடையலாம்.

ஜாதகர் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) ஜாதகர் தான் குடியிருக்கும் பூர்வீக இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி பெயர்வது 5ம் பாவக இன்னல்களை தவிர்க்க வழிவகுக்கும், நல்ல புத்திர பாக்கியம் அமைய வாய்ப்பை அதிகரிக்கும், குறைவில்லா புத்திர பாக்கியத்தை வழங்கும்.

2) ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டினையும், பித்ரு வழிபாட்டினையும், எதிர் வரும் அமாவசை திதியில் அண்ணதானம் செய்து  வழிபடுவது சகல நலன்களையும் தரும்.

3) தமக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது, புத்திர பாக்கியம், குடும்பம், ஜீவனம் என சகல அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும்பொழுது, தனது பூர்வீகத்தில் இருந்து வெளியே சென்று ஜீவனம் மேற்கொள்வதே சால சிறந்தது, ஏனெனில் பூர்வீகத்தில் ஜாதகர் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696