செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக