ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஒருவரின் சுய ஜாதகத்திற்கு துல்லியமாக ஜாதக பலன் காண்பது எப்படி ?


அன்பர்களே ! 

ஒருவரின் சுய ஜாதகத்திற்கு பலன் காண அடிப்படையில் தேவையான விஷயங்களை முதலில் காண்போம், ஒருவரின் சுய ஜாதகத்தில் நாம் பலன் காண வேண்டும் எனில் ஜாதகரின் லக்கினம் என்ன ? என்பது தெளிவாக தெரிய வேண்டும், எடுத்துகாட்டாக ஒருவரின் லக்கினம் கடகம் எனில், இந்த கடக ராசியில் லக்கினம் எனும் முதல் பாவகம் எந்தனை பாகையில் ஆரம்பிக்கிறது என்பது துல்லியமாக கண்டு உணர்வது ஜோதிடர்களுக்கு ஜாதக பலன்களை தெளிவாக கூற எதுவாக அமையும், ஏனெனில் லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், மற்ற பனிரெண்டு பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகைகையும், முடியும் பாகையும் வைத்தே நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .  

இதற்க்கு குறிப்பிட்ட ஜாதகரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவை இருந்தால் மட்டுமே, நாம் அந்த ஜாதகரின் லக்கினம் ராசி மற்றும் ஜாதகர் பிறக்கும் பொழுது என்ன திசை நடந்துகொண்டு இருந்தது, தற்பொழுது எந்த திசை நடைபெற்று கொண்டு இருக்கிறது, இனிவரும் திசை ஜாதகருக்கு என்ன பலனை தரும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள இயலும், மேற்கண்டவை ஒருவரின் சுய ஜாதக குறிப்பில் இருந்தே நாம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும், மேலும் ஜாதகர் பிறந்த நேரத்தை வைத்தே, அவரின் சுய ஜாதகம் சரியாக இருக்கின்றதா என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

அடுத்து ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜாதக பலன்களை தெளிவாக தெரிந்துகொள்ள, நமக்கு 3 விஷயங்கள் தேவை, 1) ஜாதகரின்  லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும், 2) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் 12 பாவகத்தில் எந்த பாவக பலனை  ஏற்று நடத்துகிறது,  3) அப்படி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தற்பொழுது சஞ்சாரம் செய்யும் கோட்சார கிரகங்கள் எவ்வித தொடர்பை பெறுகிறது யோகம் அல்லது  அவயோக பலன்களை தருகிறதா என்பது மட்டும் தெளிவாக தெரிந்தால் போதும், ஒருவரின் சுய ஜாதகத்திற்கு சரியான ஜாதக பலன்களை சொல்விட முடியும், மேலும் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற, நடக்க இருக்கின்ற பலன்களை மிகவும் துல்லியமாக எடுத்து கூற இயலும், இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம் 

ஜாதக அமைப்பில் 12 பாவகங்களின் நிலை 

1,3,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 5ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும்.

2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து யோக பலன்களை வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 11ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை வாரி வழங்கும்.

4,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் அவயோக பலன்களை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை வாரி வழங்கும்.

ஆக மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின்படி 1,2,35,7,10,11ம் பாவகங்கள் வலிமை பெற்றும். 4,6,8,9,12ம் பாவகங்கள் வலிமை குறைந்தும் காணப்படுகிறது.

அடுத்து ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை ( 02/03/1998 முதல் 02/03/2015 வரை ) 2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது.

புதன் திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ( 22/06/2012 முதல் 02/03/2015 வரை ) 2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்றும் 7,11ம் வீடுகள் லாப ஸ்தான பலனை ஏற்றும் யோக பலனை வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், ஜீவன வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தரும்.

இனி நடைபெறும் திசை மற்றும் புத்தி ஜீவன ஸ்தான பலனையும், லாப ஸ்தான பலனையும் தருவது தெளிவாக சுய ஜாதக ரீதியாக தெரிந்து விட்டது, மேலும் தற்பொழுது நடைபெறும் 10,11ம் பாவகங்களுடன் ஏதாவது கோட்சார கிரக தொடர்பு இருக்கிறதா, அப்படி தொடர்பு பெரும் கோட்சார கிரகம் 10,11ம் பாவகங்களுக்கு யோக பலனை தருகிறதா? அவயோக பலனை தருகிறதா? என்பது மட்டும் நாம் தெரிந்துகொண்டால் போதும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக சொல்லிவிட முடியும், எதிர்வரும் திசை மற்றும் புத்திகள் என்ன செய்யும் என்பதையும் சொல்லிவிட முடியும், தற்பொழுது கோட்சார கிரகங்களின் தொடர்பை 10,11ம் பாவகங்கள் பெறாத  காரணத்தால் கோட்சார ரீதியான பலன்கள் ஜாதகருக்கு எவ்வித யோக அவயோக பலன்களை தரவில்லை என்பதே ஜாதக ரீதியான கோட்சார பலன்கள், ஆக மேற்கண்ட முறையிலேயே ஜாதக பலனை சரியாக சொல்ல இயலும் அன்பர்களே !

சில அன்பர்கள் எனக்கு 7ல் சனி இருக்கிறது 2ல் ராகு இருக்கிறது, 3ல் சுக்கிரன் இருக்கிறது என்று கேள்விகளை எழுப்புகின்றனர், இதற்க்கு நாம் என்னவென்று பதில் சொல்வது? மொட்டைதாசன் குட்டையில் விழுந்தான் என்ற வண்ணம் கேள்விகள் வருவது சரியான அணுகு முறையில்லை அன்பர்களே ! எந்த ஒரு ஜாதகத்திற்கும் பலன் சொல்ல வேண்டும் எனில் கிழ்கண்ட விஷயங்கள் இல்லாமல் ஜாதக பலன்கள் சொல்ல இயலாது என்பதை ஜோதிட தீபம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறது.

1) பிறந்த தேதி, நேரம், இடம் 
2) ஜாதகரின் லக்கினம் உற்பட 12 பாவகங்களின் வலிமை.
3) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை.
4) கோட்சார கிரகங்கள் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் பெரும் தொடர்பு.

ஆகியவை வைத்து ஜாதகருக்கு ஜாதக பலன் காணும் பொழுது நிச்சயம் ஜாதகருக்கு உண்டான பலாபலன்களை மிக தெளிவாக சொல்லிவிட முடியும் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. ஐயா நான் பிறந்தது 20.04.1989, நேரம்:1.57 PM, இடம்: Attur......நான் 1.4 வருடமாக வெளிநாடு செல்ல காத்திருக்கிறேன். இதுவரை 20 க்கும் மேற்பட்ட ஜோதிடரை பார்த்து இருக்கிறேன்.அனைவரும் வெளிநாடு போவாய் என தெதியும் குறித்து கொடுத்துள்ளார்கள்.இதுவரை அப்படி எதுமே நடக்கவில்லை..அவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன்..இப்போது 4 மாதம் ஆகிவிட்டது..தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து எப்போது போவேன் என கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...நீங்கள் கூறியது போல நடக்கும் தசா புத்தியும் கோசார கிரகத்துடன் சாதகமாக தான் உள்ளது..குரு திசை சனி புத்தி,,சிம்ம லக்னம்,கன்னி ராசி,,கோசார குரு 11ல், பெயர்ச்சிக்கு பின் சனி 3ல்....

    பதிலளிநீக்கு
  2. உடன்பிறந்தவர்கள் 1 சகோதரர், 2 சகோதரியா?

    பதிலளிநீக்கு
  3. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளதா?

    பதிலளிநீக்கு