புதன், 20 மே, 2015

ஜாதகத்தில் பாவக வலிமையையும்! நடைபெறும் திசை மற்றும் புத்திகள் வழங்கும் பலன்களும்!



சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பொறுத்தே நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை வாரி வழங்குகிறது என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, மாறாக லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை அற்று அமரும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,9,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில்  வலிமை மற்றும் யோக நிலையாகும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில் வலிமை அற்ற மற்றும் அவயோக நிலையாகும்.

இதில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதக அமைப்பிலேயே மிகுந்த இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கும் தன்மையில் உள்ளது கவனிக்க தக்கது.

இனி ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

ஜாதகருக்கு நடைபெறும் திசை : 

செவ்வாய் ( 04/11/2008 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசை ஜாதகருக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெற்றும் யோக பலன்களை தருவது மிகுந்த சிறப்பான நன்மைகளை செய்யும், குறிப்பாக ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு செவ்வாய் திசையில் நடைபெறும் புத்தி :

சந்திரன் ( 05/04/2015 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசையில் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று பலனை தருவதும், இதற்க்கு முன் நடந்த சூரியன் புத்தியும் 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை நடத்தியதும், ஜாதகரின் வாழ்க்கையை மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்து இருக்கும், ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து சொல்ல இயலாத துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்து, வாழ்க்கையில் பல போராட்டங்களை                எதிர்கொண்டு சமூகத்தில் எதிர்நீச்சல் அடிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்க கூடும், பாதக ஸ்தானத்தின் பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது நித்தியகண்டம் பூரண ஆயுசுக்கு சமாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரனும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை வெகுவாகவே பாதிக்கும் என்பதில்  மாற்றுகருத்து இல்லை, குறிப்பாக ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள், உறவினர்கள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பெரியமனிதர்கள், என்ற அமைப்புகளில் இருந்து தேவையில்லாத இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கும், மேலும் கோட்சார கிரகங்களின் சஞ்சாரமும் 7ம் பாவகத்திர்க்கு சாதகமாக இல்லாத காரணத்தால் இன்னல்களின் சதவிகிதம் அதிகரிக்கும், எனவே ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் பிரச்சனைகளை கவனமாக எதிர்கொள்வது, ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பாக ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை அமைப்பில் இருந்து 5,11ம் பாவக வழியில் சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கிய போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்துவதால் ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாது 

ஜாதகருக்கு எதிர்வரும் திசை : 

ராகு ( 04/11/2015 முதல் 04/11/2033 வரை ) ராகு திசை ஜாதகருக்கு 2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குவதும், ஜாதகரின் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவதாலும் திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ராகு திசை வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஏஜென்சி துறையில் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார், 3ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் செயல்படுவதால் ஜாதகரின் மனம் தெளிவடையும், ஜாதகருக்கு உணவு சார்ந்த தொழில்களில் அளவில்லா வருமான  வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ராகு திசையில் உணவு சார்ந்த தொழில்களில் ஏஜென்சி எடுத்து நடத்துவதால் அளவில்லா யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த நற்பலன்களை ஸ்திரமாக வாரி வழங்க காத்து   இருக்கிறது என்பதை  நினைத்து ஜாதகர் மகிழ்ச்சி உடன் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெறலாம், வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக