வீரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

வெள்ளி, 24 ஜூலை, 2015

பாதகமான பலன்களை, பாதகம் இல்லாமல் செய்யும், பாதக ஸ்தானம்!




 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தொடர்பு பெற கூடாத ஸ்தானம் பாதக ஸ்தானமே, ஏனெனில் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பாவகங்கள் தனது பாவக வழியில் இருந்து சில நன்மைகளை செய்யக்கூடும், ஆனால் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு வீடு ஜாதகருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்ய வாய்ப்பில்லை, அதன் பாதிப்பில் இருந்து தப்புவதற்கும் சந்தர்ப்பங்களை தாரது என்பது கவனிக்க தக்கதுஇந்த , மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை, பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களை எவ்வித பாகுபாடும் அனுபவிக்கும் தன்மையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமே பாதக  ஸ்தானமாக அமைகிறது, மேலும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சகோதர  பாவகமான 3ம் வீடு, பூர்வபுண்ணியத்தை குறிக்கும் 5ம் வீடு, பாக்கியத்தை குறிக்கும் 9ம் வீடு, எனவே ஜாதகர் ஜாதகர் 3,5,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி அமைப்பு, ஆக ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் இன்னல்கள்  எவ்விதம் அமையும் என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை தரும், சகோதர வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு வெகுவாக குறையும், கமிஷன் தரகு தொழில்கள் ஜாதகரின் பொருளாதார வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், திட்டமிடுதல்களும் செயல்திறனும் வெகுவாக குறையும், மிக முக்கியமாக தனது அறிவு திறனும் புத்திசாலித்தனமும் ஜாதகரின் வாழ்க்கைக்கு பலன் தாராது, பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, பொது காரியங்களில் இறங்கினால் தோல்வியே மிஞ்சும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், எதையும் திட்டமிட்டு செயல் வடிவம் பெற இயலாது, திறமை   இருப்பினும் ஜாதகருக்கு பலன் தாராது.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உதவி செய்யும் ஆட்கள் மிக குறைவே எனலாம், அனைத்தையும் தானே எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி வரும், குல தெய்வத்தின் ஆசியை பெற ஜாதகர் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டி வரும், தனது பூர்வீகத்தில் உள்ள வரை ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கும், தன்னை சார்ந்தவர்கள் மூலம் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும், சுய அறிவும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் கைகொடுக்காது, வீண் விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், முரண்பட்ட சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் வாழ்க்கையில் மிக பெரிய ஏமாற்றங்களையும், தொல்லைகளையும் வாரி வழங்கும்,  கற்ற கல்வி ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தாரது, சுய அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், சூழ்நிலை கைதியாக தனிமையில் போராடும் சந்தர்ப்பங்களை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கை முன்னேற்றத்தை தானே பாதிப்பிற்கு    உள்ளாக்குவார் என்பது கவனிக்கத்தக்கது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் அவப்பெயர், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள், நம்பிக்கைகள் வீணாகும் சூழ்நிலை, சரியான  சந்தர்பங்களை தவறவிடும் தன்மை, அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக அமையும் தன்மை, எதிர்பாராத இழப்புகள் நஷ்டங்கள், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கும் தன்மை, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்ப்படும் இடையூறுகள், மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பு, அனைத்து விஷயங்களை உணர்ந்த போதிலும் சூழ்நிலைக்கு அடிமை ஆகும் தன்மை, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்ப்படும் இடைஞ்சல்கள், சரியான குரு அமையாத தன்மை, முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையில் போராடும் சூழ்நிலை, பக்குவம் இல்லாத நடைமுறைகள், சுய கட்டுபாடு இன்றி வீண் பிடிவாதம் என ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் .

மேற்கண்ட பாதிப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையல் நன்மை உண்டாகும், நடைபெறும் திசை எதிர்வரும்  திசை தரும் பலன்களை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை சனி ( 27/10/2013 முதல் 27/10/2032 வரை )

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி தசை 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 1,7,11ம் வீடுகள் லாபம்  மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது லாப ஸ்தான வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டமும் லாபமும் கிடைத்த போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, மேலும் ஜாதகர் 3,5,9ம் பாவகங்களுக்கு   உண்டான பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது பாதக ஸ்தான கர்மவினை பதிவுகளை கழித்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பை  வழங்கலாம்.

குறிப்பு :

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்களின் பலனை நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தல் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, ஆனால் நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தினால் ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது அனுபவித்து கழித்து  கொள்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696