ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்? புத்திர பாக்கியம் உண்டா ?

கேள்வி :

ஐயா நான் 27/7/84 இரவு 9.50க்கு ஆரணியில்  பிறந்தேன், பிறகு அங்கு இருந்து நான் 6ம் வகுப்பு படிக்கும் தருவாயில் அப்பாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்ப்பட திருவண்ணாமலைக்கு வந்தோம், 2009; 2011 நான் தொழில் தொடங்கினேன் இரண்டு வருடம் கடுமையான பொருள் சேதம் 10 லட்சம் நஷ்டம்,  அங்கு இருந்து சென்னை வந்தேன் ஆறு வருடம் வேலை பார்த்தேன், தற்பொழுது தொழில் தொடங்கினேன் man power contract இந்த தொழிலும் பண நஷ்டம் வருகின்றது,  இந்த தொழில் நடத்தலாமா?  இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா? ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை, தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில் :

 ஒருவரின் வாழ்க்கையில் கடந்த,நிகழும், எதிர்வரும் மூன்று காலங்களில் நடைபெறும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதகப்படி தனக்கு உள்ள பலம், பலமின்மை, தகுதி, தகுதியின்மை, யோகம் அவயோகம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் விளக்கத்தை தருவதில் " ஜோதிட சாஸ்திரம் " பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை, தனது சுய ஜாதகத்தின் வலிமையை பற்றி சிறிதும் அறியாமலேயே, வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பர்களின் ஜாதகத்தில், 5,9ம் பாவக வலிமை இன்மை வெகுவாக தனது ஆளுமையை செலுத்தி கொண்டு இருக்கின்றது என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அன்பர்களே ! சரியான ஜோதிட பலன் அறிந்துகொள்வதர்க்கே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட கேள்வியை வினவியிருக்கும் அன்பரின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல், ஜாதகர் தனது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை தற்பொழுது வரை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பது அவரது சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது எனும் பொழுது விதியின் வலிமையை நினைத்து வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஜாதகருக்கு கடந்த சனி திசை வழங்கிய பலன்களை மட்டும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஜாதகருக்கு பிராப்தம் இருப்பின் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ள இறை அருள் கருணை புரியட்டும்.


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோகம் அவயோக நிலைகளை பற்றி தெளிவு படுத்தும், மேலும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் நன்மை தீமையை பற்றி மிகத்துல்லியமாக காண வழிவகை செய்யும், மேற்கண்ட ஜாதகருக்கு கடந்த சனி  திசை ( 25/04/1988 முதல் 25/04/2007 வரை ) தனது திசையில் வழங்கிய பலன்களையும், ஜாதகர் அதனால் பெற்ற நன்மை தீமையை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சனி திசை ஜாதகருக்கு பால்ய வயதில் வந்துள்ளது, மேலும் சனி திசை 12ம் வீடு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமான ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, நடைபெற்ற சனி திசை காலங்களில் ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை அற்ற தன்மை, உடல் நல பாதிப்பு, கல்வியில் தடை, கற்ற கல்வி வழியிலான பலன்களை அனுபவிக்கும் தன்மை இல்லாதது, எந்த ஒரு விஷயத்தையும் போரடி பெறவேண்டிய கட்டாயம், என சனி திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கி இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று தத்துவ ராசியிலும் அமைகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியிலும் அமைவது, ஜாதகர் பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, சுய தொழில் ( அறிவு சார்ந்த ), ஆகியவற்றை அடிப்படையாக செய்வதற்கு உகந்தவர் அல்ல என்பது தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசி பாதிக்கபடுவது, ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்சிகளில் இன்னல்களையும், துன்பத்தையும் தரும் என்பது கவனிக்கதக்கது, இது ஜாதகர் தொழில் துவங்கிய காலங்களில் நடைமுறைக்கு வந்து எதிர்பாராத இழப்புகளையும், நஷ்டங்களையும் வழங்கி இருக்கின்றது.

சுய தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒன்று, மேலும் ஜாதகர் வேலைக்கு செல்வது சிறப்பனதா ? என்பதை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்வது சரியான தீர்வை தரும், புத்திர பாக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் முடிவு  செய்ய வேண்டும் என்பதால் ஜாதகர் முறையான ஜாதக ஆலோசனை கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


கேள்வி :

எந்த லக்கனம் என்றாலும், அந்த லக்கினத்திற்கு அதிபதியான கிரகத்தின் திசை நன்மையையே தரும் என்றும், யோக அதிபதிகளின் திசையும் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் என்றும் கூறுகின்றனர், ஆனால் கடந்த சனி திசை ( லக்கினாதிபதி ) எனக்கு மிகப்பெரிய இன்னல்களையும் மீள முடியா துயரங்களையுமே பலனாக தந்தது, சனி திசையில் நான்பட்ட கஷ்டத்திற்கு ஓர் அளவில்லை எனலாம், இது எதனால், தற்போழுது நடைபெறும் புதன் திசையாவது எனக்கு நன்மைகளை தருமா ? 6,9க்கு உடையவன் இன்னல்களை தரக்கூடும் என்கின்றனர், எனது ஜாதகம் யோக ஜாதகமா?

பதில் :

ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அறியாமலும், நவகிரகங்களின் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமையை பற்றி அறியாமலும், பொது கருத்தாக , சுப கிரகங்களின் திசாபுத்தி நன்மையையும், அசுப கிரகங்களின் திசாபுத்தி இன்னல்களையும் தரும்  என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் கூறும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் காலபுருஷ தத்துவத்திற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு, சமம்,பகை,நீச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு
ஆட்சி,உச்சம்,நட்பு, சமம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை யோகங்களை தரும் என்றும், பகை,நீச்சம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை அவயோகங்களை தரும் என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் நவகிரகங்கள் தனது திசாபுத்தியில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை மற்றும் யோகம் அவயோகம் பற்றிய புரிதல் இல்லாமலும் கூறும் பொது பலனாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி ஓர் தெளிவு இல்லை எனில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்கள் கூற இயலாது, மேலும் நடந்த,நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய புரிதல் இல்லாத பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது கற்பனை மூலம் " ஜாதக பலன்களை " வாய் ஜாலம் மூலம் நிகழ்த்த இயலுமோ அன்றி, கூறும் பலாபலன்கள் ஜாதக வலிமையின் அடிப்படையிலானதாக அமைய சிறிதும் வாய்ப்பு இல்லை, இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கு உண்டான திட்டமிடுதல்களை நடைமுறை படுத்துவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய சவால்களை வாரி வழங்கும், என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஜாதகர் இயங்குகிறார், பாவக வலிமை தரும் யோக அவயோகங்களையே நவ கிரகங்களின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் அனுபவிக்கின்றார், என்பதை கீழ்கண்ட அன்பரின் ஜாதகத்தின் மூலம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ?

 நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசாபுத்திகளில் காலங்களில் ஏற்று நடத்துகிறது, தனிப்பட்ட முறையிலான யோக அவயோகங்களை தர நவ கிரகங்களுக்கு வலிமை இல்லை என்பதை அடிப்படையில் புரிந்துகொள்வது நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினாதிபதியின் திசையான சனிதிசை, லக்கினாதிபதி என்பதால் ஜாதகருக்கு யோகங்களை தருவார் என்று ஜாதக பலனாக கூறப்பட்டு இருக்கின்றது, ஆனால் லக்கினாதிபதியான சனி திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும், பாதக ஸ்தானத்தால் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 1,7,8,10ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, இதனால் ஜாதகர் சனி திசை முழுவதும் பாதக ஸ்தானம் தரும் கடுமையான இன்னல்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, லக்கினவழியில் இருந்து ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையில் இல்லாமல் தவிக்கும் தன்மையையும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இன்னல்களில் துன்புறும் தன்மையையும், லக்கினாதிபதி திசை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் வளர்ச்சி சீரிய முறையில் இல்லாமல் பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து இருக்கின்றார், அடிப்படையில் கல்வி, உடல்நலம், வருமானம், தொழில், திருமணம் ஆகிய வழிகளில் ஜாதகர் அதிக இன்னல்களை சந்தித்து இருக்கின்றார்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்மை, கூட்டு முயற்சி தோல்வி, சமூகத்தில் போராட்டம், குறுகிய வட்டத்தில் ஜாதகர் இன்னலுறும் தன்மை என்ற வகையிலும், எதிர்பால் அமைப்பினரால் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தந்து இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள், வீண் தனவிரையம், உடல்நல கேடு, எதிர்பாராத செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களின் திடீர் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து வேலை தொழிலில் முன்னேற்றம் இன்மை, ஜீவன ரீதியான கடுமையான  இன்னல்கள், போராட்டம், தன்னம்பிக்கை பாதிக்கும் விதமான செயல்பாடுகள், தெளிவில்லாத வாழ்க்கை முறை, சுய முன்னேற்றத்தில் அக்கறை இன்மை, தகுதிக்கு உகந்த செயல்களை செய்யாமல், பொழுது போக்கு அம்சங்களில் அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பதித்து இருக்கின்றது, கடந்த லக்கினாதிபதியின் திசையான சனி திசையில்.

எனவே ஜாதகருக்கு நடைபெற்ற திசை லக்கினாதிபதியின் (சனி ) திசை என்றாலும், அவர் ஏற்று நடத்தியது 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலன் என்பதனால் ஜாதகர் 1,7,8,10ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை சனி திசையில் அனுபவிக்கும் நிலையை தந்தது, எனவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பலன் கூற வேண்டும், அதுவே ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த வழி காட்டுதல்களாக அமையும், மாறாக லக்கினாதிபதி திசை, யோகாதிபதி திசை, ராசியாதிபதி திசை, சுப கிரகத்தின் திசை என்பதால் நன்மையை செய்யும் என்று கூறுவது முற்றிலும் பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் வார்த்தைகளாகவே அமையும், தங்களுக்கு கடந்த சனி திசை ( லக்கினாதிபதி திசை என்ற போதிலும் ) அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் தாங்கள் 1,7,8,10ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது என்பதே முற்றிலும் உண்மை அன்பரே !

நடைபெறும் புதன் திசை நன்மையை தருமா ?

நிச்சயமாக மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் நடைபெறும் புதன் தசை தங்களுக்கு 6,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விபரீத ராஜயோகத்தை வாரி வழங்குகிறது, குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள் மிதமிஞ்சிய அளவில் இந்த புதன் திசை தங்களுக்கு தரும், சொந்த முயற்சியில் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், சொத்து சுக சேர்க்கை, திடீர் அதிஷ்டம் என புதன் திசை தங்களுக்கு சிறந்த நன்மைகளை 100% விகிதம் தர காத்துகொண்டு இருக்கின்றது, 6,9க்கு அதிபதி என்ற போதிலும் அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன் என்பதால் மிகுந்த யோகமும், நன்மையையும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், "வாழ்த்துக்கள்"

எனது ஜாதகம் யோக ஜாதகமா ?

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை தாங்கள் உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது, அடிப்படையில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு வரும் சிறப்பான யோகங்களை தாங்களே உதறித்தள்ளும் தள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் போதிய விழிப்புணர்வு இன்றி வாழ்க்கையில் வரும் நன்மைகளை  தாங்கள் தட்டி கழிக்க கூடும், எனவே முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வழிவகுக்கும், முறையான பீரிதி பரிகாரங்கள், தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும், வாரி வழங்கும். முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 4 பிப்ரவரி, 2017

நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?


 கேள்வி :
இதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா? திருமணம் எப்பொழுது அமையும்? எதிர்காலம் நன்றாக இருக்குமா?

பதில் :

 ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து  தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

நல்ல வேலை எப்பொழுது அமையும் ?

எதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம்  அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.

திருமணம் எப்பொழுது அமையும் ?

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.

நடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் ?

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு  பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன்  அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம் நன்றாக இருக்குமா?

சந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை  பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சனிமஹா திசை சுபத்தை தருமா ? அசுபத்தை தருமா ? சுய ஜாதக வலிமை நிலை என்ன ?


கேள்வி :

எனக்கு சனிதிசை சுபத்தை தருமா? அசுபத்தை தருமா?  கிரக பரிவர்த்தனை யோகம் சிறப்பா? தெளிவுபடுத்துங்கள்.

பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், மேலும் நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேற்கண்ட ஜாதகரின் கேள்விகளுக்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


சுய ஜாதக வலிமை நிலை :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகர் 1,5,9,11ம் பாவக  வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை அனுபவிப்பர்.

2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை பெரிய அளவில் தரும்.

சனி மஹாதிசை தரும் பலன்கள் : ( 14/01/2017 முதல் 14/01/2036 வரை )

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு 2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம்,குடும்பம்,தனம் சார்ந்த இன்னல்களை தரும், மேலும் எதிர்பாராத செலவினங்கள், திடீர் விரையம் என ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், கடன் பெறுவது கொடுப்பது இன்னல்களை தரும், எதிரிகளால் அதிக தொந்தரவு, உடல் நல குறைவை ஏற்படுத்தும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், விபத்து, திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இருப்பினும் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு எதிர்பாராத இன்னலைகளை கடுமையாக தரும், என்பதால் சனிமகா திசை தங்களுக்கு அவயோகத்தையே தருகிறது.

கிரக பரிவர்த்தனை யோகம் :

பெரும்பாலும் கிரக பரிவர்த்தனை மிகுந்த நன்மைகளை தரும் என்பது பொது கருத்து, கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிவிட வாய்ப்பு இல்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையிழந்து காணப்பட்டால், எவ்வித பரிவர்த்தனை யோகமும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்குவதில்லை, உதாரணமா மேற்கண்ட ஜாதகருக்கு செவ்வாய் வீடான மேஷத்தில் சுக்கிரனும் ( மேஷத்தில் உள்ள 7ம் பாவகத்தில் சுக்கிரனும் ) சுக்கிரன் வீடான ரிஷபத்தில் செவ்வாயும் ( ரிஷபத்தில் உள்ள 8ம் பாவகத்தில் செவ்வாயும் ) அமர்ந்து இருப்பது யோக பலன்களை வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, இருப்பினும் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சுக்கிரன் செவ்வாய் இருவரும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், ஆனால் இதைமட்டும் கருத்தில் கொண்டு பரிவர்த்தனை யோகம் நன்மையை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பாதக ஸ்தானம் ஏறிய சுக்கிரன் ( களத்திர ஸ்தானம் ) ஜாதகருக்கு மேற்கண்ட பாதக ஸ்தான பலனையும் தரக்கூடும்.

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளும் யோகங்களும் நடைமுறைக்கு வரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களே நடைமுறைக்கு வரும்.

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம்  பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளையும், துன்பங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை, திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு பாதக ஸ்தானம் சார்ந்த இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

குறிப்பு :

ஜாதகருக்கு சனி திசை கடுமையான பாதிப்பை தரும் நிலையில் இருப்பதால், முறையான ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக, மேலும் அன்னதானம் செய்வது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் சிம்மம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சிம்மம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஐந்தாம் ராசியான சிம்ம ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், சிம்ம லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இறை அருளின் பரிபூர்ண கருணையையும், மிதம்மிஞ்சிய புத்திக்கூர்மையையும் ஒருங்கே அமைய பெற்று, இந்த பூவுலகில் அறிய பல சாதனைகளை புரியும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இதுவரை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சரித்த சனி பகவானால், சுகபோகங்களை துறந்து, ஒருவிதமான மனசஞ்சலத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வந்த தங்களுக்கு, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கு சனிபகவானால் சிறு சிறு இன்னல்கள் வந்த போதிலும், பெரும்பாலான நன்மைகளும் நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறு தாமதங்களை தர கூடும், தங்களின் வெகுநாள் திட்டமிடுதல்கள் மிக மெதுவாக வெற்றிபாதையை நோக்கி நகர ஆரம்பிக்கும், வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு என்பதால் அவர்களது வாழ்க்கையில் சிறிது அக்கறை கொள்வது நலம் தரும், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், சுயமுன்னேற்றம் பெறுவதற்கு உண்டான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில ரகசியங்களை காப்பது தங்களுக்கும், தங்களது முன்னேற்றத்திற்கும் பேருதவிகளை தரும், மேலும் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும், மற்றவர்கள் விஷயங்களில் தாமாக முன்வந்து தலையீடு செய்வது தங்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே சாலச்சிறந்தது, தன்னம்பிக்கையை  அதிக அளவில் வளர்த்துக்கொள்வதும், எதையும் சமாளிக்கும் மனதைரியத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது, தங்களுக்கு உகந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்களது குல தேவதை வழிபாடு சகல நிலைகளில் இருந்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், சனி மாற்றத்தால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தங்களது பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆலோசனையை பரிசீலனை செய்வது தங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதிய தொழில் வாய்ப்புகளையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்குவார், மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், இதுவரை திருமண தடைகளை சந்தித்து வந்த வரனுக்கும், வதுவுக்கும் பொருத்தமான துணை வந்து சேரும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், உடல் ரீதியாக கடினமான இன்னல்களை சந்தித்து வந்த அன்பர்களுக்கு, சரியான மருத்துவரிடம் சென்று தனது உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவ சிகிசிச்சையை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும், உடல் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடும் யோகமும் உண்டாகும், வட்டி தொழில், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகத்தை தரும், பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பாராத அளவிற்கு வாரி வழங்கும், தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் நேரமாக இந்த சனிபெயர்ச்சி விளங்கும் என்பதில் மாறு கருத்து இல்லை, எனவே சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான வெற்றி உறுதி என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

11ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை தனது அறிவு திறன் மூலம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து, வெற்றிகரமான வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை இனிவரும் காலங்களில் சனி பகவான்  தனது திருஷ்ட்டி மூலம் வழங்குகிறார், இனிவரும் காலங்களில் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் பிரகாசிக்கும், தான்  நினைத்ததை சாதிக்கும் வல்லமை உண்டாகும், எதிர்கால திட்டமிடுதல்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், தனது சமயோசித அறிவு திறன்  மற்றும் புத்திசாலித்தனம் சிம்மலக்கின அன்பர்களுக்கு  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பொதுக்காரியங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும், கமிஷன்,தரகு மற்றும் பங்கு வர்த்தக துறையில்  உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும், தனது அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வதற்கு உண்டான  சந்தர்ப்பங்கள் இயற்கையாக இவர்களுக்கு தேடிவரும், அதிகார பதவி,  மக்கள் ஆதரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம், உலக புகழ், பிரபல்ய யோகம் என சிம்ம லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தில் பல படிக்கட்டுகளை மிக எளிதாக கடக்கவும், அதன் வழியில் யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளையும் சனி பகவான்  சம சப்த 7ம் பார்வை வாரி வழங்கும், உண்மையில் சனி பகவானின் பார்வையின் மூலம் சகல யோகத்தையும் பெரும் அன்பர்கள் சிம்ம லக்கினத்தை, தனது ஜென்ம லக்கினமாக பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

2ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா வருமான வாய்ப்புகளை தொடர்ந்து வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையான தாம்பத்திய வாழ்க்கையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு சகல மரியாதையும் கிடைக்கும், மக்களை வசீகரிக்கும் யோகம் உண்டாகும், தனது வாக்கை தொழிலாக கொண்டவர்களுக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் காலம் இது, தன்னிறைவான பண வசதி, குறுகிய காலங்களில் நல்ல தன சேர்க்கையை பெரும் யோகம், எதிர்ப்புகளை களைந்து வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம், சகல விதங்களில் இருந்தும் மிகப்பெரிய நன்மைகளை பெரும் யோகம், தனது பரோபகார செயல்களால், சமூக மதிப்பு கூடும், ஜாதகர் ஈடுபடும் போட்டி பந்தயம், தேர்வு, தேர்தல் என அனைத்திலும் வெற்றிவாய்ப்பினை வாரி வழங்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து மற்றும் அரசியல் பதவிகளை வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, திட்டமிட்ட செயல்பாடுகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மன நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு இறை அருள் தந்த " நன்கொடை " என்றால் அது மிகை அல்ல, மேலும் தற்போழுது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், சிம்மலக்கின அன்பர்களுக்கு சகல விதங்களில் இருந்தும், 2ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகின்றார் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 5,10,11,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  5,10,11,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திங்கள், 30 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் பரிபூர்ண யோகங்களை வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணை தேர்வு !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை உண்மையாக்க, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகிறது, இயற்கையாக சில அன்பர்களுக்கு இந்த வாய்ப்பு இறை அருளின் கருணையினால் வழங்கப்பட்டு விடுகிறது ( அதற்க்கு சம்பந்தப்பட்டவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருக்கும் என்பது வேறு விஷயம் ) இல்லற வாழ்க்கையை சிறப்பிக்க யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர்களுக்கு யாதொரு கவலையும் இல்லை, ஏனெனில் பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்ப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும், கடவுளின் கருணையினால் தேடிவரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்த அன்பர்கள், எதிர்கால வாழ்க்கையை பற்றி யாதொரு பயமும் இன்றி மிக சிறப்பாகவும், முழு யோகத்துடன் எதிர்கொள்ள இயலும், இன்றை சூழ்நிலையில் தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறிவிடும் தற்கால இளைஞர்கள் தமது வாழ்க்கையையே பணயம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது, மறுக்க இயலாத உண்மையாக உள்ளது.

இதுபோன்ற தவறான, பொருத்தமற்ற தேர்வுகளை தவிர்க்க " ஜோதிட சாஸ்த்திரம் " இன்றைய சந்ததியருக்கு 100% விகிதம் உதவுகிறது என்றால் அது மிகையில்லை, ஆனால் இன்றைய சந்ததியினர் " ஜோதிட சாஸ்த்திரம் " எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பது கேள்விக்குறியே !, முழு மனதாக " ஜோதிட சாஸ்த்திரம் " எனும் கலையை நம்பும் அன்பர்களுக்கு நிச்சயம் சரியான தீர்வுகளையும், யோகம் நிறைந்த நல்வாழ்க்கையையும் வாரி  வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

இன்றைய சிந்தனைக்கு தனது ஜாதக வலிமையின் மூலம், தனது கணவனுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் ஓர் ஜாதகத்தை  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : விசாகம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு பாவக தொடர்பு :

1,3,5ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் சிறந்த மனவலிமையை  தரும், அனைவருடன் சுமுக போக்கு, பெருந்தன்மையான குணம், மற்றும் கண்டிப்பு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த செல்வ செழிப்பு , எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல மனநிலை, சிறப்பான சிந்தனை, சத்தியத்தை மதித்தல், கல்வி வழியில் யோக வாழ்க்கை, சிறந்த வியாபார வல்லமை, கமிஷன் தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத வெற்றி மற்றும் லாபங்கள் வந்து சேரும் அமைப்பு, 5ம் பாவக வழியில் இருந்து குலதெய்வ அனுக்கிரகம், ஆய கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளிடம் அன்பு, எதிர்ப்புகளை மிக எளிதாக கையாளும் தன்மை, புதிய சூழ்நிலையில் ஆர்வம், எஜென்ஜி துறையில் நல்ல லாபம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கையை, இனிமையான பேச்சு திறன், கைநிறைவான வருமான வாய்ப்பு, கணவருடன் பாசம் மற்றும் சகல வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகம் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், பொருளாதார முன்னேற்றம், சகல வசதிகளும் கொண்ட வீடு, பண்ணை தோட்டம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் கணவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், கணவரால் தனது வாழ்க்கையில் சிறப்பான யோகங்களையும், நீண்ட ஆயுளுடன் சுமங்கலியாக திகழும் சுப யோகத்தையும் ஜாதகி பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கவுரவம், தாய் வழியிலான யோக வாழ்க்கை, பாரம்பரியம் மிக்க விஷயங்களை கடைபிடிக்கும் யோகம், கவுரவ பதவி, கணவருக்கு தொழில் வழியிலான நன்மைகளை தரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தனது  கணவருக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக செய்து கொடுக்கும் வல்லமை, தனது கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மையை தரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் இன்றி சுமுகமாக, சந்தோஷத்துடன் வாழும் யோகம், கூட்டு முயற்சியின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் என்றவகையில் நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி  பரிபூர்ண மஹாலக்ஷ்மி யோகம் நிறைந்தவர் என்பது உறுதியாகிறது, தனது கணவருக்கு சகல நிலைகளில் இருந்தும் அதிர்ஷ்டங்களை வாரி  வழங்குபவர் என்பது 100% விகிதம் உறுதி மேலும் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் தன்னகத்தே கொண்டவர், மெய்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க, தனது அறிவு திறனால் சகல விஷயங்களையும் சீர்துக்கி பார்க்கும், சமயோசித அறிவாற்றல் பெற்றவர் என்பதுடன், அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, ரண சிகிச்சையும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தால் வீண் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் புதன் திசை ( 05/05/2012 முதல் 05/05/2029 வரை ) 

தற்போழுது நடைபெறும் புதன் திசை, ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, புதன் திசை முழுவதும் தனது  கணவருக்கு முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுபவர்  என்பதும் உறுதியாகிறது, புதன் திசைக்கு பிறகு வரும் கேது மற்றும் சுக்கிரன் முறையே 11ம் பாவக பலன் மற்றும் 3ம் பாவாக பலனையே தனது திசைகளில்  ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே ஜாதகியும், ஜாதகியின் கணவரும் முழு அளவிலான யோக வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை தரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சுபயோக  அமைப்பாகும்.

குறிப்பு :

 பெண்களின் ஜாதகத்தில் இல்லற வாழ்க்கைக்கு சுபயோகங்களை நல்கும் 2,5,7ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் தசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், மிகசிறந்த யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வாரி வழங்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், காதல்  திருமணமோ, நிச்சயிக்க பட்ட திருமணமோ 100% வெற்றியை பெரும், இல்லற வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 28 ஜனவரி, 2017

இரசமணி அணிவதால் நாம் பெரும் நன்மைகள் மற்றும் யோக வாழ்க்கை !


ரசமணி உருவாகும் விதம் :

பல வருடங்களுக்கு முன் மலை உச்சியில் காணப்படும் கடும் பாறைகளுக்கு இடையே விழும் மழை துளியாகப்பட்டது , பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார்ப்போல், வெப்பத்தில் சூடாகியும் , குளிரில் உறைந்தும் பாறை இடுக்குகளில் படர்ந்து இருக்கும் , இதனை முறைப்படி வைத்தியர்கள் அல்லது ரசம் சேகரிப்பவர்கள் சேகரித்து , முறையாக ஸ்புடம் இட்டு, மூலிகையால் பதப்படுத்தி சுத்தி செய்து மணியாக தயாரித்து, மனிதர்களுக்கு பயன்படும் விதமாக வழங்குகின்றனர் .

 இதில் ஸ்புடம் இடும் வகையில் 108 , 1008 , 10008 , 100008 , முறையில் வகை படுத்துகின்றனர் , அதற்க்கு ஏற்றார் போல் மணிகளின் தன்மை சக்தி வேறுபடும் , இதில் அவரவர் ஜாதக அமைப்பு , நாடி அமைப்பை பொறுத்து ரசமணிகளை முறைப்படி சுத்தி செய்து அணிந்து கொள்பவர்களுக்கு , கிழ்கண்ட  நன்மையான பலன்கள் நடைபெறும் .

ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது  , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து
  இருக்கிறது .

உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக  இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் .

  குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும்  தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் .

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி  இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின்   பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை அணிவது நல்ல பலன்களை தரும்.

மேலும் வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக  சக்தியை மேலோங்கி நிற்கும் , தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் .
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி  ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும்.

குறிப்பு :

ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
   

வியாழன், 26 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும்?


கேள்வி :
காதல் திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, கணவருடன் நித்தம் சண்டை சஞ்சாரவு, எங்களது எதிர்காலம்  எப்படி இருக்கும், மணவாழ்க்கையில் பிரிவு நேருமோ ? ஆண் குழந்தை ஒன்று உள்ளது, 
எங்களது மூவரின் ஜாதகம் எப்படி உள்ளது?

பதில் : 

சுய ஜாதக பாவக வலிமை உணராமல், விருப்பத்தின் அடிப்படையில் காதல் திருமணம் செய்வது, இன்னல்களை தருவதில் வியப்பில்லை, பெரும்பாலும் சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பொழுது காதல் வாழ்க்கை கசப்பதில்லை, சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுது தாம்பத்திய வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை தருகின்றது, சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது, காதல் திருமண வாழ்க்கை கடந்து, இல்லற வாழ்க்கையில் பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, மேற்கண்ட தம்பதியர் விருப்பமனம் முடித்தவர்கள், இவர்களது சுய ஜாதக வலிமையையும், இனிவரும் எதிர்கால வாழ்க்கையை பற்றியும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகி 

லக்கினம் : கடகம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையாகும்.

ஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
1,7,10,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.
2,4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.
9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் தரும்.

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 11/11/2016 முதல் 11/11/2026 வரை ) 

ஜாதகிக்கு கடந்த சூரியன் திசை 9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தந்துள்ளது, ஆனால் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தரும், இனிவரும் சந்திரன் திசை 10 வருட காலமும் மிகுந்த யோகங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஜாதகர் 

லக்கினம் : கன்னி 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை தரும் பலன்களை : ( 07/11/2012 முதல்  07/11/2032 வரை )
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை, 100% சதவிகிதம் வாரி வழங்குகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் மிகவும் வலிமையான ஜாதகம் கணவரின் ஜாதகமே, இதில் மனைவியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது ஜாதக வலிமையை உணர்ந்து, தனக்கு வாய்த்த கணவர் யோகமானவர் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பாக இல்லற வாழ்க்கையை எதிர்கொள்வதே நல்லது, ஏனெனில் கணவரினால் ஜாதகிக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, ஜாதகி மட்டும் தனது நாவை அடக்கி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்வதே ஜாதகிக்கு சிறந்தது, இல்லை எனில் ஜாதகியின் சுய ஜாதக வலிமை இன்மை, இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தந்து, பிரிவை நோக்கி நகர்த்தி செல்லும், இருவரது ஜாதகத்திலும் 2ம் வீடான குடும்ப  ஸ்தானம் வலிமை இழப்பது, தேவையற்ற வாக்குவாதத்தை வளர்க்கும் என்பதால், தனது காதலுக்கு மரியாதை செய்து இருவரும் நாவடக்கத்துடன் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்துவதே சாலச்சிறந்தது, மேலும் தற்போழுது இருவருக்கும் நடைபெறும் திசைகளான, சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல யோகங்களையும் தரும்.

 மேலும் இருவரது சுயஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது, தனது ஆண் குழந்தை வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், இதனால் குழந்தையின் பொருட்டாவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு வர வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு :

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் மனைவியின் ஜாதகம் வலிமை இன்றி இருந்த போதிலும், கணவரின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது, மேலும் கணவர் எந்த சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடமாட்டார் என்பது அவரது ஜாதக வலிமையில் இருந்து தெரிய வருகிறது, எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஒவ்வொருவரும், குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அனைவரும், தனது ஜாதக வலிமையை விட, தனக்கு வாழ்க்கை துணையாக வர இருக்கும் வரன் அல்லது வதுவின் சுய ஜாதகம் மிக மிக வலிமை மிக்கதாக தேர்வு செய்துவிட்டால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் இருக்காது என்பதனை " ஜோதிடதீபம் " இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 25 ஜனவரி, 2017

திருமணபொருத்தம் : சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறை !


திருமண பொருத்தம் காண்பதில் சுய  ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் காண்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும், 2ம் பாவகம் வலிமை பெறுவது இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த புத்திகூர்மை மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியர் இருவருக்கும் நல்ல தாம்பத்தியம் மற்றும் சமூக அந்தஸ்த்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் வழியில் ஒருவர் பெரும் பொருளாதார முன்னேற்றத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்க்கையையும் தரும், எனவே தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது, வெற்றிகரமான இல்லற வாழ்க்கையை நல்கும்.

கீழ்கண்ட வரனுக்கும், வதுவுக்கும் சுய ஜாதக ரீதியாக பாவக வழியிலான பொருத்தம் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதனை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

பாவக தொடர்புகள் :

 2,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது.
7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது.
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அம்சமாகும். எனவே ஜாதகர் சுக்கிரன் புத்தியில் திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை எடுப்பது சால சிறந்தது, விரைவாக இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வது ஜாதகம் 


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான யோகங்களை தரும்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பை தரும்.

மேலும் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, அடுத்து வரும் ராகு புத்தி ( 28/05/2017 முதல் 16/06/2018 வரை ) ஜாதகிக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும்.

வரனின் ஜாதகத்தில் 6,7,8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, வதுவின் ஜாதகத்தில் 2,4,6,8,10,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம்  மற்றோருவர் ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பது பரஸ்பர தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைதரும் அமைப்பாகும், மேலும் வரனுக்கு எதிர்வரும் சுக்கிரன் புத்தியும், வதுவுக்கு எதிர்வரும் ராகு புத்தியும் சிறப்பான நன்மைகளையே வழங்குவது, மிகுந்த யோகத்தை தாம்பத்திய வாழ்க்கையில் வாரி வழங்கும்.

தற்போழுது வரனுக்கு நடைபெறும் ராகு திசை வலிமையற்ற 12ம் பாவக பலனையும், எதிர்வரும் ராகு திசை வதுவுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், ஏக நேரத்தில் இருவருக்கும் நடைபெறும் திசை அவயோக பலனை வழங்கினால் மட்டுமே, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களை தரும்.

வரனுக்கும், வதுவுக்கும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் ராகு திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை நல்கும் என்பதினால், அவர்களின் விருப்பப்படி திருமணம் நடத்தி வைக்கலாம், பொருத்தமான ஜாதக அமைப்பே " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது கணவனுக்கு யோகத்தை தருமா ?



 வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் நன்மை சேர்க்கும் அமைப்பாகும், தனக்கு அமைந்த மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகங்களை தருவதில் தவறுவதில்லை, அதே சமயம் மனைவியின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் அது சார்ந்த இன்னல்களையும் கணவனுக்கு தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம், எனவே தனக்கு அமையும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன்பு, அவரது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை,புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தேர்வு செய்வதே சாலச்சிறந்தது, கீழ்கண்ட ஜாதகம் தனக்கு வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்ற கேள்விக்கு உண்டான பதிலை சம்பந்தப்பட்ட ஜாதக வழி ஆய்வு மூலம், சிந்தனைக்கு எடுத்த்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் 
ஸ்திரமாக, அதிர்ஷ்டத்துடன் வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள்.

2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகியின் வாழ்க்கையில் ஸ்திரமாக தரக்கூடும், குறிப்பாக திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களை தரும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் :

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் அடுத்து வரும் ராகு புத்தி வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகிக்கு 28/05/2017 தேதிக்கு மேல் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். 

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் :

எதிர்வரும் ராகு திசை முழுவதும் ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் களத்திர ஸ்தான பலனை தருவது, ஜாதகிக்கும் ஜாதகியின் வாழ்க்கை துணைக்கும் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடாக அமைவது, தம்பதியருக்கு அறிவார்ந்த செய்கையினாலும், புத்திகூர்மையினாலும் ஸ்திரமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், செவ்வாய் திசையில் தம்பதியர் சிறிது இன்னல்களை சந்தித்த போதிலும், ராகு திசை பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

திருமண வாழ்க்கை :

ஜாதகிக்கு 2,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது இல்லற வாழ்க்கையில் தடை தாமதத்தை தந்த போதிலும், 1,5,7,9,11ம் பாவகங்கள் மிகவும் வலிமையாக இருப்பது சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும், ஜாதகி வருமானம், தனது வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தனது கணவனுக்கு யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகியை மணந்து கொள்ளும் வரனுக்கு யோக வாழ்க்கையே கிட்டும், மேலும் தனது வாழ்க்கை துணையுடனான இணக்கம், ஜாதகிக்கு வாழ்க்கையில் இறுதிவரை வரும் என்பதால், ஜாதகியின் கணவனுக்கு நன்மையே, மேலும் எதிர்வரும் ராகு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது யோகம் மிகுந்த இல்லற வாழ்க்கையை தரும். 

குறிப்பு :

ஜாதகிக்கு எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பதே ஓர் யோகம்தான், மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு வரும் கணவனுக்கு 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும், என்பதால் இது ஒரு வலிமை பெற்ற யோக ஜாதகமே, இதனால் ஜாதகியின் கணவரும் சுபயோக பலாபலன்களை நிச்சயம் பெறுவார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 24 ஜனவரி, 2017

வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோக வாழ்க்கை !


சுயஜாதக பொதுபலன்கள்

தனது குழந்தையின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுகோள் வைத்த தகப்பனாருக்கு, இறை அருள் கொடுத்த அதிர்ஷ்டமிகு வாரிசு என்று சொல்வதில் "ஜோதிடதீபம்" பெருமை கொள்கிறது, மேலும் குழந்தையின் ஜாதகத்தை பற்றியும், அதில் உள்ள சுபயோக பலன்கள் பற்றியும், இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! தோன்றின் புகழோடு தோன்றுக என்ற குறளுக்கு ஏற்ப யோக வாழ்க்கையை பெரும் சிறந்த ஜாதகம் என்பதை சொல்வதற்கு " ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்



ஜாதகத்தில் மிக மிக வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக லாபம், செல்வ செழிப்பு, பரஸ்பர உதவி, நோய்குணமடைதல், வருமுன் காப்பது, எண்ணம் ஈடேறுதல், திருமணத்தால் யோகம், நல்ல புத்திர பாக்கியம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், தெளிவான புத்திகூர்மை, அனைத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் கையாளும் வல்லமை, எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் வல்லமை, நல்ல வளரும் சூழ்நிலை, நல்லவர் சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாத மன நிலை என வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்குதடையின்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பெரிய அளவில் உணரும் வாய்ப்பை தரும் குறிப்பாக குல தேவதையின் அருள் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவார், லாட்டரி, பங்கு சந்தையில் நல்ல லாபமும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது புத்திசாலி தனத்தால் தனக்கு வரும் யோகங்களை தக்கவைத்துகொள்ளும் வலிமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, தனது குடும்பம் குழந்தைகள், வாழ்க்கை துணை என அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் யோகம் உண்டாகும், இனிமையான வாழ்க்கைக்கு உண்டான அனைத்து திட்டமிடுதல்களும் ஜாதகரிடம் எப்பொழுதும் கைவசம் இருக்கும், மிதம் மிஞ்சிய அறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், அனைத்திலும் சுலப வெற்றிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், லாட்டரி பங்கு சந்தையில் அடிகடி லாபம் பெரும் யோகத்தை நல்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துகொள்வார்கள், குருகியகால வெற்றிகள் இவர்களுக்கு அதிக புத்துணர்ச்சியை வாரி வழங்கும், மற்றவர்கள் தோல்வியுறும் துறையில் இவர்களின் வெற்றி சிறப்பாக பேசப்படும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான சேமிப்புடன் மிக சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நண்பர்கள் சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, வாழ்க்கை துணையின் உதவிகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் நிறைவான லாபம், தனிப்பட்ட ஆசைகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் ஆதரவை பெறுதல், மக்கள் செல்வாக்கின் மூலம் அரசியல் பாதவிகளையும், கௌரவ பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், வாழ்க்கை துணைக்கு நல்ல யோகம், என ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் பெறுவார்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு குறைவிருக்காது, மேலும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வழக்குகள் மூலம் சொத்து சேர்க்கை, எதிர்ப்பவர்கள் வழியில் இருந்து வரும் லாபம், தன்னிறைவான பொருளாதார வசதி, எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் சொத்து சேர்க்கை, பொதுமக்கள் ஆதரவு வழியில் இருந்து வரும் வருமானம், அரசியலில் புகழ், அந்தஸ்து மற்றும் பதவிகள் தேடி வருதல் என ஒரு முழுமையான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகருக்கு குறை ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும், நீண்ட ஆயுள் உண்டு நல்ல ஆரோக்கியம் உண்டு , மேலும் ஜாதகர் ஆயுள் பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைவான அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் லாபமும், நல்ல குணமும் ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாத யோக வாழ்க்கையை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்சியங்களில் வெற்றியும் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு சாதகமாக மாறும், தனது சரியான திட்டமிடுதல்கள் மூலம் சகல நன்மைகளையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள், எந்த சூழ்நிலையிலும் வாக்கு தவறாத நேர்மையானவர்களாக திகழ்வார்கள்.

2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கூட்டாளிகள் மூலம் அதிக லாபம், அதிர்ஷ்டம் உண்டாகும், கான்ராக்ட் தொழில் வழியில் அதிக லாபமும், ஏஜென்சி மூலம் கை நிறைவான வருமானமும் உண்டாகும், வழக்குகள் மூலம் பெரும் சொத்து சுகம் சேரும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருமான வாய்ப்புகளை தந்துகொண்டே இருக்கும், நிலையான தொழில் நல்ல வருமானம் ஆகியவை சிறப்பாக அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வாக்கு வன்மையும், இனிமையான பேச்சு திறனும் தங்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறும், சிறந்த வியாபர ஆளுமையை தரும், நிறைவான வாகன வசதி, பண்ணை மற்றும் விவசாயத்தில் நல்ல லாபம் உண்டாகும், கை நிறைவான வருமானம் மூலம் அதிக சொத்து சுக சேர்க்கை உண்டாகும், உண்மை சத்தியத்தில் ஈடுபாடும், ஜோதிடத்தில் புலமையும், கலை துறையில் தேர்ச்சியும், கணிதத்தில் தனி திறமையும் உண்டாகும், ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு யோக வாழ்க்கை உண்டாகும், மதிப்புக்கு உரிய செயல்களால் உலக புகழ் பெரும் வாய்ப்பு ஏற்படும், விளையாட்டில் அதித ஆர்வம் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவாளி என்பதும், பயணங்களில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பதும் தெளிவாகிறது, இறை அருளின் கருணை ஜாதகர்  எங்கு சென்றாலும் காத்து நிற்கும், பல ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும் ஜாதகருக்கு இயற்கையாகவே ஏற்படும், ஆராய்ச்சி மனப்பான்மையும், உயர் கல்வி, பட்டைய படிப்பில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறனும், மறைபொருள் உணரும் சக்தியும், ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கையும், அதிக அளவிலான வண்டி வாகன யோகமும் உண்டாகும், மேலும் தொழில் ரீதியான சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தாய் வழியிலான ஆதரவு, பொருட் சேர்க்கை உண்டாகும், நற்பெயரும் புகழும் தேடிவரும், சகல நிலைகளிலும் ஆள் வசதி, மக்கள் ஆதரவு, பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், அரசு வழியிலான ஆதாயம் மட்டும் கவுரவம் உண்டாகும், அரசியலில் சிறப்பான வெற்றி, சமூக அந்தஸ்து ஜாதகரை தேடி வரும், பரிபூர்ண சுகபோக வாழ்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும்.

1௦ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல அந்தஸ்தை பரிபூர்ணமாக பெறுவார், நண்பர்கள் உதவி மூலம் தொழில் துறையில் வெற்றி, கூட்டு முயற்சி மூலம் அதிக லாபம், நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகள், அதிக அளவிலான சொத்து சுக சேர்க்கை, அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகும் வாய்ப்பு, எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பு, எதிர்ப்புகளை களைந்து வெற்றிநடை போடும் யோகம், சுய தொழில் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் ஜாதகரை தேடிவரும் யோகம் என்ற வகையில் ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், நிறைய செலவு, திடீர் இழப்பு, அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், நல்ல உறக்கம் இன்மை, அயன சயன சுகம் இன்மை, எதிர்பாராத விபத்து என கடுமையான இன்னல்களை தரும்.



தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 2,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவதும் யோக பலன்களையே தரும், மேலும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் பால்ய வயதில் இருப்பதால், சிறப்பாக வளரும் சூழ்நிலை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, கல்வியில் சிறந்த தேர்ச்சி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிறந்த உடல் ஆரோக்கியம், பெற்றோர் உடன் ஜீவித்திற்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசைதான் ஜாதகருக்கு மிதமிஞ்சிய ராஜ யோக பலன்களை வாரி வழங்குகிறது, ஏனெனில் ராகு திசை ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, எனவே ராகு திசை காலத்தில் ஜாதகர் 1,5,6,7,8,11ம் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் அனுபவிப்பர். ராகு திசையினை தொடர்ந்து குரு திசையும் ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை தருவது தொடர் அதிர்ஷ்டங்களை ராகு மற்றும் குரு திசை காலங்களில் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

குழந்தையின் ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் மிக சிறப்பான நன்மைகளும் யோக பலன்களுமே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, இதுவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு துல்லியமாக காணும் ஜாதக பலாபலன்கள் . "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 21 ஜனவரி, 2017

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ?



கேள்வி :

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ? கடந்த சில வருடங்களில் பெருத்த  நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது தவிர்க்க என்ன வழி ? நான் செய்யும் தொழில் எனக்கு ஏற்றதா ?

பதில் :

சுய ஜாதக பாவக வலிமை உணராமல் தொழில் செய்வதும், தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யாததும், நடைபெறும் திசையும் எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு வலிமை அற்ற அல்லது பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே ஒருவருக்கு தொழில் ரீதியான பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலையை தரும், தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்.

 தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தங்களுக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், விரைய ஸ்தான வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும் ஒரு சேர வழங்கி கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும், தங்களது சுய ஜாதகத்தில் அடிப்படையிலேயே தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பதினால் தங்கள்  சுய தொழில் செய்வதே சரியான தேர்வு அல்ல, மேலும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்கள் முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் தங்களின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் தத்துவ ராசியாகவும் அமைகிறது, எனவே தங்களது சுய ஜாதகத்தின் படி நீர் தத்துவ ராசியான கடகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, தாங்கள் தேர்வு செய்த தொழிலான பால் பண்ணை என்பது நீர் தத்துவத்துடன் சம்பந்தம் பெற்ற தினமும் அழிவை சந்திக்கும் பொருளான பால்  பொருட்களை அடிப்படையாக வைத்து செய்யப்படும் தொழிலாகும், தங்களது ஜாதகத்தில் நீர்த்துவ ராசி பாதிக்கப்பட்டு ( அதுவும் தொழிலை குறிக்கும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் நேரடி நேரடி தொடர்பு பெற்று முற்றிலும் வலிமை அற்று காணப்படுகிறது ) தாங்கள் நீர் தத்துவம் சார்ந்த பால் பண்ணை தொழிலை தேர்வு செய்து நடத்தியதால் தவிர்க்க முடியாத பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் தந்து கொண்டு இருக்கின்றது.

எனவே தாங்கள் அடிப்படையிலேயே  சரியான தொழிலை தேர்வு செய்யவில்லை என்பது முதல் தவறு, இரண்டாவது தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை வலிமை அற்ற பாவக தொடர்பை பெற்று முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது மிக வருந்தத்தக்கது, ஆக நடைபெறும் செவ்வாய் திசையும் தங்களுக்கு தொழில் சார்ந்த நன்மைகளை தரவில்லை, பாக்கிய ஸ்தான வலிமை இன்மை தங்களுக்கு, மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளையும் தரவில்லை, தங்களின் அறிவு திறனும் இழப்பை தவிர்ப்பதற்கு உண்டான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை, எனவே தாங்கள்  மேற்கண்ட தொழிலில் கடுமையான நெருக்கடிகளையும், இழப்பு  மற்றும் நஷ்டங்களையும் சந்தித்து வருகிண்றீர்கள்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாங்கள் முறையாக நேரில் வந்து  ஜாதக ஆலோசனை பெற்று கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே சால சிறந்தது, ஒன்று மட்டும் உறுதி தாங்கள் தேர்வு செய்த பால் பண்ணை தொழில் தங்களுக்கு சிறிதும் பொருந்தாதது, மேலும் நீர் தத்துவம் சார்ந்த எந்த தொழிலும் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையே தரும்.

எதிர் வரும் ராகு திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், முறையாக ஜாதக ஆலோசனை பெற்று தங்களுக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுக.

குறிப்பு :

சுய ஜாதக ரீதியாக ஜீவன ஸ்தான வலிமையை  கருத்தில் கொண்டும் , தற்போழுது நடைபெறும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சரியான தொழிலை தேர்வு செய்வது என்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வாஸ்து சாஸ்த்திரமும் சுய ஜாதக பாவக வலிமையும் !


" எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது, மேலும் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கையை நல்கிறது, இதில் ஒருவர் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்த்திர முறைப்படி இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பதும், ஜாதகர் சுய ஜாதக ரீதியாக வரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார் என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, " அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்ற இறைஅருளின் கருணைக்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் சுய ஜாதக வலிமையே நிர்ணயம் செய்கின்றது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குடியிருப்பதற்கு, நிறைவான வசதி மற்றும் சரியான வாஸ்து  கொண்ட வீடு இயற்கையாகவே அமைந்துவிடும்.

 எனவே ஒருவருக்கு நல்ல வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதற்கு, சுய ஜாதக பாவக வலிமையே அடிப்படையாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை வாஸ்து முறைப்படி அமைந்த வீடு கொடுத்துவிட வாய்ப்பு இல்லை, அனைத்திற்கும் மூலஆதரமாக அமைவது சுய ஜாதக வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பெரும் வலிமையின் அடிப்படையிலும், 4ம் வீடு தொடர்பு பெரும்  பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், தனக்கு உகந்த திசை அற்ற வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்கும் அன்பர்களுக்கு ( சம்பந்தப்பட்ட வீடு வாஸ்து பிரகாரம் அமைந்து இருப்பினும் ) கடுமையான நெருக்கடிகளையும் அதிக அளவிலான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், ஜாதகர் தமது வாழ்க்கையில் சுய ஜாதகப்படி அனுபவிக்க வேண்டிய இன்னல்களில் இருந்து வாஸ்து நன்றாக அமைந்த வீடு நிச்சயம் காப்பாற்ற வழியில்லை, ஏனெனில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நாம் குடியிருக்கும் வீடுகளையும், நாம் புதிதாக கட்டும் வீடுகளையும் நிர்ணயம் செய்வது சாலச்சிறந்தது, இதை கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் 2 தலைமுறைக்கு பிறகு வீடுகளை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தனர் அல்லது புதிய வீடுகளை தமது சந்ததிகளுக்கு அவர் அவர்களுக்கு உகந்தபடி புதிதாக கட்டி கொடுத்தனர், இதனால் யாதொரு இன்னல்களும் இன்றி அவர்களது சந்ததிகளும், அவர்களும் சுகபோக வாழ்க்கையில் யாதொரு நெருக்கடியும் இன்றி சிறப்பாக வாழ்ந்தனர்.

 தகப்பனாருக்கு உகந்த கிழக்கு திசை வாயிற்படி மகனுக்கு ஏற்றதாக இல்லை எனில் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகனின் ஆதிக்கமும் வெற்றியும் தட்டி பறிக்கப்படும், மகனின் உழைப்பு திறமை யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பயனற்றதாக மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 4ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, அவரவருக்கு உகந்த திசை கொண்ட வீடுகளில் குடியிருப்பதே சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் உழைப்பும் வீணாகாது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை பெறலாம், தனக்கு பொருத்தம் இல்லாத வீடுகளில் ( அது அரண்மனையாக இருந்தாலும் கூட ) குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் 100% சதவிகித இன்னல்களையே வாரி வழங்கும், வாஸ்து சாஸ்த்திரத்தை தனக்கு உகந்த வகையில் ( சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப )  பயன்படுத்திக்கொண்ட அன்பர்களே, வாழ்க்கையில் சகல யோகங்களையும் மிகசிறந்த  முன்னேற்றங்களையும் பெற்று உள்ளனர்.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதத்தில் லக்கினம் மற்றும் நான்காம் பாவகம் களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது சகல யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் தனது ஜீவனம் சார்ந்த விஷயங்களை மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட அலுவலகமாக பார்த்துகொள்வது சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தரும், மேற்கண்ட விஷயம் சர லக்கினத்தாருக்கும், ஸ்திர லக்கினத்தாருக்கும் பொருந்தும் ஆனால் உபய லக்கினத்தாருக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனெனில் உபய லக்கினத்தாருக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமையும் என்பதால், சுய ஜாதகத்தில் உபய லக்கினம் பெற்றவர்களுக்கு 1,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் அவர்கள் மேற்கு திசை சாந்த வீடுகளில் குடியிருப்பது உகந்தது அல்ல ஏனெனில் 200% சதவிகித இன்னல்களையும் துன்பங்களையும் தரும்.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் தொடர்பு படுத்தும் திசை சார்ந்த வீடு மற்றும் அலுவலகங்களை பயன்படுத்தும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளும் தேடிவரும், இதில் யாதொரு மாற்றமும் இல்லை ஆனால் தொடர்பு பெரும் வீடு பாதக ஸ்தானமாக அமைந்து, பாதக ஸ்தானம் குறிக்கும் திசையில் குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்கும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்கின்ற 4ம் பாவகமும், காலபுருஷ தத்துவத்திற்கு  4ம் ராசியான கடகமும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாஸ்து சார்ந்த கவலைகளை விட்டுவிடலாம், ஏனெனில் இயற்கையாகவே அவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வாஸ்து அமைந்துள்ள வீடு கிடைத்துவிடும், சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பாதிக்கப்பட்டும் காலபுருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கையாக தான் குடியிருக்கும் வீட்டினை தேர்வு செய்ய வேண்டி வரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வீடுகளை தேர்வு செய்து வசிப்பது, பாதிக்கப்பட்ட 4ம் பாவாக கெடுதல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டும்.

குறிப்பு :

ஒருவருக்கு சரியான வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, எனவே சுய ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டு தமக்கு உகந்த வீட்டை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696