சனி, 23 பிப்ரவரி, 2019

தொழில், திருமண யோகம் சுய ஜாதக ரீதியான ஆய்வு !


சுய ஜாதக பலாபலன்கள்

" அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்பதற்கிணங்க சுய ஜாதக வலிமை இன்றி யாதொரு நிகழ்வுகளும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யாவருக்கும் நன்மை தீமைகளோ, யோக அவயோகங்களோ நடைமுறைக்கு வருகின்றது, கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? அது தரும் யோக அவயோகம் என்ன ? நவ கிரகங்கள் தனது திசாபுத்திகளில் தரும் பலாபலன்கள் என்ன என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான அம்சமாகும், 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெற்றி புகழ், கீர்த்தி, சுய முன்னேற்றம், தெளிந்த நல்லறிவு, எதிர்ப்புக்களை களைந்து நலம் பெரும் தன்மை, முற்போக்கு சிந்தனை, நல்ல நண்பர்கள், பொதுமக்கள் ஆதரவு, சிறந்த கூட்டாளிகள், எதிர்பாராத முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, எதிர்பாலின சேர்க்கை வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றம், தெய்வீக சிந்தனை, சமயோசித அறிவு திறன், உடல்நல குறைவில் இருந்து விரைவாக குணம் பெரும் யோகம், யோக உடற்பயிற்சியில் ஆர்வம், புதிய சிந்தனை, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், நட்பு வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், பொதுமக்கள் சார்ந்த தொழில், வியாபாரம் அல்லது சேவைகள் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், வியாபார விருத்தி சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல ஞானம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், சிறப்பான வெளிவட்டார பழக்க வழக்கங்கள், வியாபார முன்னேற்றம், சிறந்த தொழில் ஞானம், பல தொழில் புரியும் யோகம், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் தன்மை, எண்ணத்தின் வழியில் சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் நிலை, தெய்வீக சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, வண்டி வாகன யோகம், கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடு யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் ஆதரவு, அந்நியர் மூலம் ஆதாயம், வலிமை மிக்க கூட்டாளி, யோகமிக்க வாழ்க்கை துணை, வியாபார ரீதியான அபரிவித வளர்ச்சி, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை, கூட்டு முயற்சியின் மூலம் அபரிவித லாபம் என வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும்.

2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றம், எழுத்து வழியில் லாபம், பத்திரிகை துறையில் முன்னேற்றம், இனிமையான பேச்சு திறன், பயணங்கள் வழியிலான லாபம், வெளிநாட்டார் மூலம் முன்னேற்றம், ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகத்தில் தெளிவு, அரசியல் ஆளுமை, சாஸ்த்திரம், மருத்துவம் மற்றும் ஜோதிடத்தில் தேர்ச்சி, செயற்கரிய காரியங்களை சரியான திட்டமிடுதல்களுடன் செய்யும் வல்லமை, புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் தன்மை, வாக்கு வன்மை, எதிலும் தெளிவு என்ற வகையில் நன்மைகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் நல்ல ஞானம், பயணம் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், வருமுன் உணரும் சக்தி, முன்னோர் செய்த புண்ணியத்தின் பலனை சுவீகரிக்கும் தன்மை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக வெளியேறும் தன்மை, மற்றவர் பணம் கையிருப்பு, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை சத்ரு ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்ல கல்வி ஞானம், சிறந்த அறிவாளி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, பயணங்கள் மூலம் நல்ல லாபம், சாஸ்திரத்தில் தேர்ச்சி, எதிர்பாராத முன்னேற்றம், பெரிய மனிதர்கள் ஆதரவு, பல தொழில் வழியிலான வருமான வாய்ப்பு, மண் தத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், தெய்வீக ஞானம், சூழ்ந்தநிலை மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வாழும் தன்மையை தரும், பாதிப்புகள் தானாக விலகும்.

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், குறிப்பாக 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிக்கும் காரியங்களில் தொய்வு, சகோதர வழி ஆதரவு இன்மை, செயல்பாடுகளில் வீரியமின்மை, தோல்வியால் துவண்டு போகும் தன்மை, சரியான விஷயங்களை கிரகிக்க இயலாத நிலை, தன்னம்பிக்கை பாதிக்கும், சுய முன்னேற்றம் தடை படும், உறவுகள் வழியிலான இன்னல்கள், எதையும் விரைவாக பெற இயலாமல் தடுமாறும் நிலையை உருவாக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொள்வதால் வரும் தொந்தரவுகள், சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, நுண்ணறிவு தன்மையில் குறைபாடு, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லமை அற்ற நிலை, குல தெய்வ சாபம், முன்னேற்ற தடைகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் நிலை, சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் தடுமாறும் தன்மை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னலுறும் நிலை, சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மை என ஜாதகருக்கு அதீத துன்பங்களை தருவதுடன், முதலில் பெண் வாரிசை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தன்மை வெகுவாக குறையும், சுய உழைப்பு மட்டுமே ஜாதகருக்கான வாழ்க்கையினை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனை குறைந்து பழமை வாதங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனம் வெகுவாக பாதிக்கும், குழப்பமும் சந்தேக எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அதீத இன்னல்களை தரும், சில நேரங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் முடிவுகள் யாவும் பேரிழப்பை தரக்கூடும் என்பதை கருத்தில் நலம் பெறுவது அவசியமாகிறது.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள்,  எதிர்பாராத மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம்,தலைவலி சார்ந்த இன்னல்கள், உடல் நல குறைபாடுகள், அதீத மனப்போராட்டம், அனைவராலும் ஏமாற்றம், அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இழப்புகள், முன்னேற்ற தடை என்ற வகையில்  இன்னல்களை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை அல்லது தொழில் அமையும் தன்மை, போதிய வருமானம் இன்மை, அடிக்கடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம், வரவைவிட செலவு அதிகம், முரண்பட்ட கருத்துக்கள் மூலம் தொழில் அமைப்பில் சிக்கல்கள், கவுரவ குறை ஏற்படும் நிலை, நிலையற்ற தொழில், செய்யும் தொழிலில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலை, தனித்து செயல்படும் காரியங்களில் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் நிலை என்ற வகையில் துன்பங்களை தரக்கூடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள், பங்கு சந்தை லாட்டரி தொழில் வழியில் இழப்புகள், சூது மூலம் பெரும்நஷ்டம், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் நஷ்டம், விபத்து அதீத துன்பங்களை சந்திக்கும் நிலை, போதிய விழிப்புணர்வு அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

நடைபெறும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 05/12/2018 முதல் 04/12/2024 வரை)

ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையில் சிறப்பு, கைநிறைவான வருமானம், இனிமையான இல்லற வாழ்க்கை, வாக்கு வன்மை மூலம் சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோக வாழ்க்கையை தரும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், சத்ரு வழியில் ஆதாயம், மருத்துவ துறையில் சீரிய முன்னேற்றம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீக பெரியோர்கள் வழியில் வாழ்க்கையில் வெகு சிறப்பு, தனது சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

அடுத்து வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, எனவே எதிர் வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மிகுந்த சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதக பலன் காண மூன்று விதி முறைகளை கையாள்வது அவசியமாகிறது, 1) சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவாக உணர்வது, 2) நடைபெறும் திசைபுத்திகள் 12 பாவகங்களில் எந்த பாவக தொடர்பை பெற்று பலனை தருகிறது என்பதை பற்றி தெளிவாக உணர்வது, 3) திசை புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மையை பற்றிய தெளிவு பெறுவது ஆகியவை சுய ஜாதக பலாபலன் துல்லியமாக கண்டுணர வாய்ப்பை வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கன்னி லக்கினம் ( 2019-2020 )


கன்னி லக்கின அன்பர்கள் சோதனைகளை வெற்றிகொள்ளும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : கன்னி

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாகவும், உபய மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திலும், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஜீவன ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திரதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே யோக பலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு வெகுவான சிறப்புகளை வழங்கும், குறிப்பாக செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதா அமையும், கமிஷன், தரகு, வியாபாரம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து மேலோங்கி நிற்கும், உயர்பதவிகள் செய் தொழில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான யோக பலன்கள் தேடி வரும், புதிய முயற்சிகள் யாவும் பலிதம் பெரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கை அமையும், கன்னி லக்கின அன்பர்களின் அறிவு திறன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிக்க செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றிநடை போடும் நேரமிது, சுய தொழில் செய்யசரியானநேரமாக இதை கருதலாம், மேலும் தொழில் வழியிலான முன்னேற்றம் என்பதும் படி படியாக அமையும், அரசியலில் கவுரவ பதவி உண்டு, பொதுமக்கள் ஆதரவு மேலோங்கும், தூர தேச பிரயாணம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை வாரி வழங்கும், தகப்பனார் வழியிலான ஆதரவு தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் கன்னி லக்கின அன்பர்கள் மிகுந்த சோதனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தரும் குறிப்பாக கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் அதிக அளவில் வரும் என்பதுடன், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை தரும், தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள், தாமதங்களை தவிர்க்க இயலாது, கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து தொழில் முன்னேற்றத்தை கவனிப்பது அவசியமாகிறது, மனக்கசப்புகளை தவிர்த்து ஜீவன முன்ன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அவசியமாகிறது, தொழில் வழியினாலான பணப்பரிமாற்றம் தங்களுக்கு சில நேரங்களில் வெகுவான இழப்புகளை தரும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாள்வது அவசியமாகிறது, தங்களின் முன்னேற்றம் தங்களின் முயற்சியில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், முயற்சி இன்மை தங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மறவாதீர்கள் கன்னி லக்கின அன்பர்களே !

கேது பகவானின் சஞ்சாரம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமைவதும், 4ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவதும் கவனிக்கத்தக்கது, கன்னி லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது உகந்ததது அல்ல, மேலும் தனுசு கோண அதிபதி வீடாக அமைவது 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், சுகபோக விஷயங்களுக்கு வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலை தரும், ஆடம்பர பொருட்கள் சுவீகரிப்பதன் மூலம் வீண் விரையம் ஆகும், பொருளாதார ரீதியான சிக்கல் அதிகரிக்கும், வீடு, நிலம், இடம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் கடும் மனநிம்மதி இழப்பை தரக்கூடும், முன்னேற்ற தடைகள் மூலம் வாழ்க்கையில் அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், பெரியவர்கள் ஆதரவு இன்றி தனித்து செயல்படும் சூழ்நிலையை தரும், அனைத்திலும் போராட்டம் என்ற சூழ்நிலையையையும், தோல்வியால் இன்னலுறும் தன்மையையும் தரும், எதிர்ப்புகள் பல விதங்களில் தங்களை பாதிக்கும், நல்ல குணம், பரந்த மனப்பக்குவம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்வது மிகுந்த சிறப்பை தரும், சுக ஸ்தான வழியில் இருந்து சற்று கடுமையான இன்னல்கள் தங்களுக்கு வந்த போதிலும், நல்ல குணம் கொண்டு அனைத்தையும் வெல்லுங்கள்.

வண்டி வாகனம், சொத்து, வீடு நிலம், இடம் ஆகிவற்றில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இழப்புகளை தவிருங்கள், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் செல்வதே தங்களுக்கு நன்மைபயக்கும், வீண் மருத்துவ செலவினங்களை தவிர்க்கலாம், பெற்ற தாயை பேணி காப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுமே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், அருங்குணங்களை சீரமைப்பதும், பொறாமை, கோபம், பதட்டம் போன்றவற்றை  தவிர்ப்பதும் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், புதிதாக சொத்து வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு முயற்சிப்பது நன்மை தரும், முடிந்த அளவு பொறுமையை கடைபிடித்து கேது பகவான் சுக ஸ்தான வழியில் இருந்து தரும் இன்னல்களை தவிர்க்க முற்படுங்கள், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தடையை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கடினமான உழைப்பை கையில் எடுத்து வெற்றி பெறுங்கள், எந்த சூழ்நிலையிலும் நல்ல குணத்துடன் ஸ்திரமாக நின்று வெற்றியை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கன்னி லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கன்னி லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : சிம்ம லக்கினம் ( 2019-2020 )


 "அடிச்சது ஜாக்பாட்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு என்று சொல்லலாம் -  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : சிம்மம்

கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடு மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானமாக விளங்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் ராகு பகவானும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதீத லாபங்களை அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் நிலையில் தனது சஞ்சார நிலையை துவங்குவது வரவேற்கத்தக்கது, இதுவரை வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருந்த சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டத்தின் தாக்கம் சற்று அதிக அளவில் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல லாபங்களுடன் கூடிய வெற்றியை தரும், முற்போக்கு சிந்தனையும் தன்னம்பிக்கையும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்லதோர் முன்னேற்றத்தை வழங்கும், தெய்வீக அனுகிரகம் எதிர்ப்புகளை களைந்து சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், வியாபாரம் சிறக்கும், தொழில் வழியிலான புதிய நடவடிக்கைகள் எதிர்பாராத நன்மைகளை தரும், புதிய பொறுப்புகள் வழியிலான அதிர்ஷ்டங்கள் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தெளிவான வாழ்க்கை பாதையை அமைத்து தரும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு நற்பெயரும் எதிர்ப்புகளற்ற வெற்றியும் கிட்டும், தனது வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உடையவர்களாக சிம்ம லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பிரகாசிப்பார்கள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள், வருமானம் அதிர்ஷ்டம் போன்றவை இவர்களது வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும்.

கமிஷன் வியாபாரம், தரகு, காண்ட்ராக்ட் போன்ற துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், நிலுவையில் உள்ள பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வும், எதிர்ப்புகளற்ற வியாபர வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அபரிவித முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், குறிப்பாக மனதில் உள்ள திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் காலம் இதுவென்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் அதிர்ஷ்டமும் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதால் தங்களின் முயற்சியில் யாதொரு தொய்வும் இன்றி செயல்படுவது அவசியமாகிறது, சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு வழியில் இருந்து நல்ல வெற்றிகளை தாங்கள் நிச்சயம் உறுதியாக எதிர்பார்க்கலாம், வியாபாரம் மட்டுமே நோக்கமாக உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் நல்லொதொரு வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு நலம் பெறுங்கள், சாயா கிரகமான ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தான சஞ்சார நிலையில் நின்று 100% விகித நன்மைகளை மட்டுமே  தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கலைத்துறையில் தேடுதல் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வெற்றிமீது வெற்றி வந்து சேரும் என்பதுடன் பிரபல்ய யோகம் உண்டாகும், அதிர்ஷ்டத்தின் வழியில் தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்று யோக வாழ்க்கையை பெறுவதற்கு தயார் நிலையில் இருக்க "ஜோதிடதீபம்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்க கடமை பட்டுள்ளது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து இனிவரும் 18 மாதங்கள் 100% விகித நன்மைகளை மட்டுமே வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது, சிம்ம லக்கின அன்பர்களின் சமயோசித புத்திசாலித்தனம் இனி மேலோங்கி நிற்கும், தங்களுக்கு வரும் யாதொரு பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உண்டாகும், தேடிவந்து உதவி செய்வார்கள், பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத செல்வாக்கை பெற்று தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களின் வாழ்க்கையில் சிறப்பானதொரு வெற்றி பாதையை அமைத்து தரும், பொறுப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள் மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்புகளை இறை அருள் வாரி வழங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் யோகம் மிக்கதாக அமையும் என்பது உறுதியான விஷயமாக படுகிறது, தெய்வீக காரியங்கள் ஆற்றி அதன் வழியில் சுபயோகங்களையும், வெற்றிகளையும் சுவீகரிக்கும் வாய்ப்பை தரும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சமூக அந்தஸ்த்து வெகுவாக உயரும், நல்ல நண்பர்கள் சேர்க்கை அல்லது வயதில் அதிகமுள்ளோர் வழிகாட்டுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறந்த திருப்பு முனையை ஏற்ற்படுத்தும், ஆன்மீக திருத்தல வழிபாடுகள், நீண்டநாள் கனவான ஆன்மீக சுற்றுலா சார்ந்த விஷயங்களில் தடை இருப்பின் அது நீங்கி எண்ணம் போல் ஆசைகள் நிறைவேறும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், இதுவரை புத்திர பாக்கியம் அற்ற அன்பர்களுக்கு யோகம் மிக்க வாரிசுகள் அமையும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கைக்கு நல்லதோர் அடித்தளத்தை அமைத்து தரும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜோதிடம், சாஸ்திர ஞானம், மந்திர உபதேசம், இறைவழிபாடு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் இயற்கையாக அமையும், தெய்வீக தரிசனமும், ஆன்மீக வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றியும் இதுவரை எதிர்பார்த்த பதவியும் தங்களை தேடிவரும், புதிய கண்டுபிடிப்புகள் தங்களின் எதிர்கால  வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நிம்மதி மிக்க வாழ்க்கையில் பெருமை மிகு காரியங்களை செய்து புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னிறைவான பொருளாதர வசதிகளை தனது அறிவுத்திறன் கொண்டு சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் தேடிவரும், ஆய கலைகள் 64ல் ஆர்வம் உள்ள கலையில் தேர்ச்சியும் வெற்றியும் 100% விகிதம் உண்டாகும், முற்போக்கு சிந்தனை சமயோசித அறிவு திறன், மேம்பட்ட அறிவாற்றல் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை சிம்ம லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, கேது பகவானின் தனுசு ராசி சஞ்சார நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதுவித யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக கலை துறையில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் காலம் மிகப்பெரிய யோக காலமாக அமையும், சாஸ்திர சார்ந்த ஆய்வுகளில் வியக்கத்தக்க உண்மைகள் வெளிவரும், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றமும், ஞானம் பெற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக மக்களிடம் பிரகாசிப்பார்கள், சிம்ம லக்கின அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியும், லாபமும் பெறுவார்கள், சிம்ம லக்கின அன்பர்களின் அறிவு திறன் மிக பெரிய அளவில் பிரகாசிக்கும், பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள் சிம்ம லக்கின அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து சிம்ம லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 14 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )


  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : கடகம்

 கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடு மற்றும் சுக ஸ்தானமாக விளங்கும் கடக லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் ராகு பகவானும், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கேந்திர அதிபதி ) சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவார், நிம்மதியான வாழ்க்கை, முதலீடுகளில் இருந்து வரும் லாபம், வெளியூர் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து வரும் நன்மைகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், நல்ல அயன சயன சுகம், திருப்தியான மனநிலை, நினைக்கும் எண்ணங்கள் பலிதம் பெரும் யோகம், வியாபார விருத்தி, தரகு தொழில் வழியில் இருந்து வரும் மிகுந்த லாபம், மிதம் மிஞ்சிய அதிர்ஷ்டம், முதலீடு செய்து அதன் வழியில் பெரும் வருமானம், தெய்வீக அனுபவம், ஆன்மீகத்தில் பெரும் வெற்றி, நல்ல சிந்தனைகள், வாழ்க்கை துணையுடனான அன்பு மற்றும் ஆதரவு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், எண்ணத்தின் வலிமை மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை, பொருளாதரத்தில் எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டம் மூலம் யோக வாழ்க்கை மற்றும் தன்னிறைவான பண வசதி வாய்ப்புகள் என மிகசிறந்த நன்மைகளை தரும், அறிவில் தெளிவும் சிந்தனை திறனில் மாற்றமும் தங்களது வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை தரும், எதிர்ப்புகள் அனைத்தையும் தங்களது முயற்சியால் மிக எளிதாக கடந்து சென்று வெற்றி வாகை சூடும் வாய்ப்பை நல்கும்.

 அதே சமயம் 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கோண அதிபதி ) சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மிகுந்த துன்பத்தை வாரி வழங்குவார், குறிப்பாக தீய பழக்க வழக்கங்களில் அதீத ஈடுபாடு, லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகள், மனம் சார்ந்த நோயில் சிக்குண்டு இன்னலுறும் தன்மை, குடி நோயாளியாக மாறும் சூழ்நிலை, மற்றவர்களை நம்பி மோசம் போகும் தன்மை, செய்த முதலீடுகள் பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணையுடனான மனப்போராட்டம், எதையும் துணிந்து செய்யும் வல்லமை இன்றி தடுமாறும் தன்மை, மற்றவர்களால் தவறாக புரிந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், சந்தேகம் நிலைத்தன்மை இல்லாமல் போராடும் போக்கு, தவறான வார்த்தை பிரயோகம், எதிர்பாராமல் செய்யும் தவறுகளால் பாதிப்பை சந்தித்தல், முன் யோசனை இன்றி செய்யும் காரியங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்பு வம்பு வழக்குகள் வழியில் இருந்து வரும் துன்பங்கள், உறுதியான மனநிலை இல்லாமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, சிந்தனை சக்தி குறையும் நிலை, உடல் நிலையில் கடுமையான பாதிப்பு, வீண் மனபயம், கட்டுக்கடங்காத கற்பனை மூலம் வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் எதிர்கொண்டு தோல்வியை சந்திக்கும் நிலை, வீரியமிக்க செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு என்ற வகையில் மிகுந்த துன்பத்தை  தரும்.

 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்கள் கடுமையான நெருக்கடிகளை தரும், நண்பர்கள் எதிரியாக மாறக்கூடும், தனம் சார்ந்த விஷயங்களில் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, முன்னேற்ற தடைகளும், தோல்விகளும் சற்று அதிக அளவில் தங்களுக்கு பாதிப்பை தரும் என்பதுடன் எதிரிகளின் தொல்லை அதிகமாக வாய்ப்பு உண்டு, மனநிம்மதி வெகுவாக பாதிக்கும், பெரியமனிதர்களின் கோபத்திற்கும், மேல் அதிகாரிகளின் தண்டனைக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், உடல்  ரீதியானபாதிப்பு தங்களின் வாழ்க்கையில் மிகுந்த தாமதத்தை தரக்கூடும், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு நெருக்கடியை தரும், பொழுதுபோக்கு விஷயங்கள் வீண் செலவினங்களை ஏற்படுத்தும், தெய்வீக அனுக்கிரகம் பெற கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், உயர் கல்வி அல்லது பட்டைய படிப்புகளில் தடை உண்டாகும், உடல் நலனில் அக்கறை செலுத்த வில்லை எனில் வாழ்க்கையில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடி கவனம் எடுத்து நலம் பெறுவது அவசியமாகிறது.

முடிந்த அளவு கடன் வாங்காமல் ஜீவனத்தை மேற்கொள்வது கவுரவத்தை தரும், புது முயற்சிகளை தவிர்ப்பதும், வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடப்பதும் சகல சௌபாக்கியங்களையும் தரும், எதிர்பாராத உடல் தொந்தரவு ஏற்படும் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்வது தங்களது செயல்திறனில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும், தொழில் வழியில் அதிக கடன் பெறாமல் சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், உறவுகளுடன் பகைத்துக்கொண்டு இன்னல்களை தேடிக்கொள்ளவேண்டாம், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது, ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதும், சூரிய வழிபாடு மேற்கொள்வதும் தங்களுக்கு கேது பகவானின் சஞ்சார நிலையில் இருந்து வரும் இன்னல்களுக்கு நிவர்த்தியாக அமையும், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளோர் சுய ஜாதக வலிமை உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லையெனில் கடன் சார்ந்த நெருக்கடிகளில் மாட்டிக்கொள்ள நேரும், மேலும் எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து வருவதால் தங்களின் செயல்திறன் வெகுவாக குறையும், வீட்டில் உள்ளோர் எவரும் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை, சுய மரியாதையும், சுய கெரவம் பாதிக்கும் என்பதால் அனைவரிடமும் கவனமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. ராகு கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கடக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கடக லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )



 நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 27 டிசம்பர், 2018

சுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் !



பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம்  சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

இந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில்  பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி  வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த  பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 29 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : சிம்மம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வாரி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது  நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை  வெற்றி கொள்ளுங்கள்.

குறிப்பு :

சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )



( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள்  என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அது மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர  நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், " மனமது செம்மையானால் " மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய  ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும்  என்பது கவனிக்கத்தக்கது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில்  முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பு :

கடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )


( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : ரிஷபம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான  யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில்  அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான  முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை  தரும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும்  மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என  வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை " வாழ்த்துகள் "

குறிப்பு :

ரிஷப  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 9 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மேஷம்)


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மேஷம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான மேஷ ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மேஷ லக்கினத்திற்க்கு, அஷ்டமாதிபதி மற்றும் விரைய ஸ்தான அதிபதி என்ற நிலையை பெறுவது கவனிக்கத்தக்கது, மேலும் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மேஷ லக்கின அன்பர்களுக்கு சிறப்பை தரும் விஷயமல்ல, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத எச்சரிக்கை தேவை, பயணங்களில் மிகுந்த பாதுகாப்பும், உடல் நலனில் அதிக அக்கறையும் கொள்வது நல்லது, தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவது சிறப்பை தரும், திடீரென எடுக்கும் முடிவுகள் யாவும் தங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரக்கூடும், தன்னம்பிக்கை குறையும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இறக்குமதி பொருள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டு, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு அதிகம் என்பதால் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், வண்டி வாகனங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் முதலீடு செய்யுமுன் மிகுந்த கவனமுடன் இருப்பதும் மேஷ லக்கின அன்பர்களுக்கு நன்மை பயக்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது, நிம்மதியின்மையை உருவாக்கும், மனம் ஒரு நிலைப்படுவது என்பது சற்று கடினமான காரியமாக அமையும், தெளிவில்லாத நிலை, எடுக்கும் காரியங்களில் தொய்வு, மன உறுதியின்மை, துவங்கும் காரியங்களில் திருப்தி இன்மை, பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் தன்மை, எந்த ஓர் காரியத்தையும் ஆர்வத்துடன் செய்ய இயலாமை, கடமைக்கு செய்து இன்னலுறும் தன்மை, பணியில் நிம்மதியின்மை, தொழில் வழியில் பாதிப்பு, மனதிருப்திக்காக செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கும் நிலை, வீண் விரையங்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில்  இருந்து வரும் தொந்தரவுகள், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் பாதிப்பு என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், சிறிது கவனமின்றி செயல்பட்டால் கூட வாழ்க்கையில் வெகுவான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் சற்று இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக வருமானம் சார்ந்த இன்னல்கள் என்பது அதிக அளவில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வீண் வாக்குவாதம் குடும்பத்தில் நிம்மதியிழப்பை தரும், செலவினங்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக அமையும், தனம் சார்ந்த விஷயங்களிலேயே அதீத இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, திட்டமிட்டு செயல்படுவதும், நிதி சார்ந்த விஷயங்களில் முறையான மேலாண்மையை கடைபிடிப்பது மட்டுமே சற்று நிம்மதியை தரக்கூடும், போதிய நிதி இன்மை காரணமாக மற்றவர்களிடம் கடன் பெரும் சூழ்நிலை உருவாகலாம், வக்கிரக காலங்களில் மட்டும் தங்களுக்கு எதிர்பாராத சுபயோகங்கள் தேடி வரக்கூடும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு உண்டு என்பதால் சரியான நேரமறிந்து செயல்பட்டு வெற்றிகாணலாம்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் தேய்பிறை காலங்களில் நன்மையை தரும், திடீர் வண்டிவாகன யோகம், வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை உருவாக கூடும், மற்றவர்கள் தனம் தனது கையிருப்பாக உயரும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறும் நேரமிது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை தரும், வண்டி வாகன தொழில் அல்லது கட்டுமான துறை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் புதுவித தொழில் விருத்தி உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு திடீரென முன்னேற்றமும், நிறைவான வாய்ப்புகளும், பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியை சுக ஸ்தான அமைப்பில் இருந்து இந்த  குரு பகவானின் வசீகர பார்வை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேஷ  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 27 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கும்பம் )



 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கும்பம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும், ஸ்திர வாயு தத்துவ தன்மையை பெற்றதுமான கும்ப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப லக்கினத்திற்க்கு குடும்பம் மற்றும் லாப ஸ்தான அதிபதியாகிறார், கும்ப லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற நிலையை பெறுவது கும்ப லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, ஒரு வகையில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ( சுய வர்க்கம் ) என்பதால் தொழில் வழியில் இருந்து நன்மைகளை வழங்கிய போதிலும், கும்ப லக்கின  அன்பர்கள் தனது மனம் சொன்னபடி நடந்தால் இன்னல்கள் ஏற்படும், கவுரவ குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு, பொது காரியங்களில் மிகுந்த கவனம் தேவை, தொழில் வழியிலான புதிய முயற்சிகள் அல்லது முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே ஈடுபடவும், இல்லையெனில் அமைதி காப்பதே சாலச்சிறந்தது, ஏமாற்றத்தை தவிர்க்க அதுவே சிறந்த வழி, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவும், பொருளாதர உதவிகளும் கும்ப லக்கின அன்பர்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் வழியிலான விருத்தி மிகவும் சிறப்பாக அமையும், தனது பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமானதாகிறது, சுய தொழில் புரிவோர் அனைவரும் மிகுந்த கவனமுடன் இயங்குவது பேரிழப்பை தவிர்க்க உதவும், குறிப்பாக சுய ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் அதிக அளவில் தேவைப்படும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, வருமானம் சார்ந்த விஷயங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் அதிக அளவில் தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் துன்பங்களும், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, முறையான நிதி மேலாண்மை செய்யவில்லை எனில் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தனது பேச்சு திறமையை சிறப்பாக கையாண்டு நன்மைகளை பெரும் நேரமிது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் நிதி கையிருப்பை உறுதிசெய்துகொள்வது நல்லது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக்கொள்வதும், உறவுகள் வழியில் பகைமை பாராட்டுவதும் மிகுந்த துன்பங்களை தரக்கூடும், சேமிப்பின் மூலம் நலம்  பெற வேண்டிய நேரமிது, வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு மாத்ரு ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது ஆண்கள் எனில் பெற்ற தாய்க்கும், பெண்கள் எனில் பெற்ற தகப்பாவுக்கும் இன்னல்களை தரக்கூடும், உடல் நலம் மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், போக்குவரத்து மற்றும் சரக்கு உந்து சார்ந்த தொழில் செய்வோர் வருமானம் சார்ந்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும், சுகபோக வாழ்க்கைக்கு யாதொரு குந்தகமும் வாராமல் பார்த்துக்கொள்வது நல்லது, தன்னிறைவான பொருளாதார மேம்பாடு, நிதி மேலாண்மை, சரியான திட்டமிடுதல்கள், எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் தன்மை என சில நன்மைகள் நடைமுறைக்கு வந்த போதிலும், பாதிப்புகளை தவிர்க்க இயலாது, கேளிக்கை, பொழுது போக்கு அம்சங்களில் அதீத கவனம் செலுத்தினால் வாழ்க்கையே சூனியமாகிவிட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொள்க.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், இருப்பினும் தேய் பிறை காலங்கள் வெகுவான இன்னல்களை தரும், உடல் நலம், கடன் தொந்தரவு, எதிரி தொந்தரவு, எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, போதிய வருமானம் இன்மை, வீண் செலவினங்கள், வட்டி வரவு செலவு சார்ந்த பிரச்சனைகள் என்ற வகையில் துன்பங்களை தரும், புதிய முயற்சிகள் வழியிலான வெற்றிகள் பாதிக்கப்படும் அல்லது தடை ஏற்படும், உறவுகள் வழியில் மனக்கசப்பு, பொருளாதார சிக்கல்கள், சரியான வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்ய இயலாத நிலை, வயிறு சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் அதிக அளவிலான துன்பங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது உகந்தது அல்ல, அவர்களால் வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் வெகுவான பாதிப்பை தரும், வாழ்க்கை முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696