திங்கள், 29 ஏப்ரல், 2024

குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் ( 2024 - 2025 )

 


தேவகுரு, பிரகஸ்பதி, புத்திரகாரகன்,  நான்கு வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவரான முழு முதற் சுபகிரகம் குருபகவான் எதிர்வரும் 01/05/2024 அன்று "அபிஜித் முகூர்த்த" சுப வேளையில் சரியாக மதியம்  11:58 மணிக்கு தனது எதிர்வர்க்க கிரகமான சுக்கிர பகவான் வீடான ரிஷப ராசியில் பிரவேஷம் செய்து இனிவரும் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், குரு பகவான் தனது வர்க்க கிரகமான சூரியனின் "கார்த்திகை" நட்சத்திரத்தில் சஞ்சாரத்தை ஆரம்பிக்கும் பிருகஸ்பதி தொடர்ந்து வருடம் முழுவதும் தனது வர்க்க கிறக்கங்களான சந்திரனின் "ரோகிணி மற்றும் செவ்வாயின் மிருகசீரிட" நட்சத்திரத்திலும் 14/05/2025 வரை சஞ்சாரம் செய்ய இருக்கின்றார். 

தனது சஞ்சார நிலையில் இருந்து முழு முதற் சுப கிரகமான "குருபகவான்" மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் வழங்கும் சுபயோக பலாபலன்கள் என்ன என்பதை பற்றி இனி வரும் பதிவுகளில் மிக துல்லியமாக கண்டுணர்வோம் "ஜோதிடதீபம்" அன்பர்களே !

மேஷராசி 

ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த "குரு பெயர்ச்சியின்" மூலம் மிகப்பெரிய அளவிலான தனசேர்க்கையையும், பொருளாதார வளர்ச்சியையும், வாக்கு பலிதத்தையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், திருமண யோகத்தையும், சந்தான பாக்கியத்தையும், தொழில் முன்னேற்றங்களையும், சொத்து சுக சேர்க்கை மற்றும் அரசியல், அரசு அதிகாரத்தையும் 100% விகிதம் சுவீகரிக்கும் ராசியினர் மேஷ ராசியினரே என்றால் அது மிகையாகாது, தனது வாழ்க்கையில் இதுவரை திறமை இருந்தும் முன்னேற்றம் பெற இயலாமல் சூழ்நிலை கைதியாக இருந்த மேஷ ராசியினர் இனிவரும் காலங்களில் சுதந்திர பறவையாக சிறகடித்து பறக்கும் யோக வாழ்வை "குருபகவான்" நிறைவாக வாரி வழங்குகிறார், தங்களின் லட்சியங்களுக்கு தடையாக இருந்தவை அனைத்தையும் தகர்த்தெறிந்து வெற்றிகளை அறுவடை செய்யும் நேரமிது என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் சகல நலன்களை தயக்கமின்றி பெறுங்கள்.

உடல்நலம் தங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கும், மனவலிமை மிக சிறப்பான காரியங்களை வெற்றிகொள்ள ஆதரவை தரும், தெளிவான சிந்தனை துல்லியமான வாத திறமை தங்களின் செல்வாக்கை அதிகரிக்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், புலமையும் உண்டாகும், அடிப்படை கல்வி, உயர் கல்வி, பட்டய படிப்பு, வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் என இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வெகு சிறப்பாக உண்டு, மேலும் அறியகலைகளில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான உலக புகழையும் பெற்று நற்பெயர் பெறுவீர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு உண்டு, உறவுகள் ஓடி வந்து உதவி புரிவார்கள், சமுதாயத்தில் உள்ள பெரியமனிதர்கள் ஆதரவு தேடி வரும், தெய்வீக அனுகிரகம் உண்டாகும், ஜோதிட துறையில் புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும், மருத்துவம், அரசியல், காவல், ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இது, எதிர்பாராத பதவி உயர்வு, வருமான உயர்வு, இடமாற்றம் மூலம் நலம் பெறுதல், தன்னிறைவான பொருளாதார சேர்க்கை என சகல சௌபாக்கியங்களும் இந்த குரு மாற்றம் தங்களுக்கு வாரி வழங்கும்.

தனது ஐந்தாம் பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) எதிர் வர்க்க கிரகமான புத பகவான்  வீடான "கன்னி" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் அதீத வெற்றிகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க தக்கது, இருப்பினும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அடிமை தொழில் அல்லது கூட்டு தொழில் புரிவோருக்கு இனிவரும் காலம் மிக சிறப்பான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், தனது சுய முயற்சியில் முழுமையான வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம் உண்டு, விவசாயம் மற்றும் விவசாய தொழில் புரிவோருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல லாபம் உண்டாகும், இதுவரை இருந்து வந்த கடன்கள் நீங்கும், வருமானம் அதிகரிக்கும், சிறு தொழில் செய்வோருக்கு தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், பொது மக்கள் தொடர்பு உள்ள தொழில்கள் விருத்தி பெரும், விவசாயம் செழித்தோங்கும், பண்ணை தொழில் சிறப்பான வளர்ச்சியை பெரும், தொழிலாளர் துறையில் உள்ள அன்பர்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும், கூட்டுறவு மற்றும் கூட்டு முயற்சி சார்ந்த நிலைகளில் அபரிவிதமான நன்மைகளும், லாபங்களும் உண்டாகும், கேட்ட இடங்களில் இருந்தெல்லாம் பண உதவி கிடைக்கும், கடன் பெற இயலும், இருப்பினும் மற்றவர்களுக்கு  ஜாமீன் போடுவது என்பது தங்களின் முன்னேற்றத்திற்கு தாங்களே தடையை ஏற்படுத்தி கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர அற்புதமான வாய்ப்புகளை குருபகவான் தங்களுக்கு தொடர்ந்து வாரி வழங்குவர் தங்கள் விழிப்புணர்வுடன் இருந்து நலம் பெறுவது அவசியமானது, கடின உழைப்பால் உங்களுக்கான  அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் பெற்று மகிழும் அற்புதமான நேரமிது, எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், எதிரிகள் வழியிலான சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் அற்புதமான நேரமிது, சத்ரு ஸ்தான வழியில் சௌபாக்கியங்கள் வந்து சேரும்.

தனது சமசப்த பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவான்  வீடான "விருச்சிக" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு திடீர் தன சேர்க்கையை புதையலுக்கு நிகராக வழங்குவதுடன், திருமண யோகத்தையும் நல்குவது கவனிக்கத்தக்கது, குறிப்பாக மேஷ ராசி பெண்களுக்கு திடீர் திருமண யோகம் உண்டு என்பதுடன், நல்லதொரு ஆண் வாரிசும் அமையும், வெளிநாடு யோகம்  கல்வி அல்லது வேலை வாய்ப்பை வெளிநாடுகளில் திடீரென சுவீகரிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குகிறார், தங்களது வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்கள் இனிவரும் காலங்களில் தங்களுக்கு சிறப்பு கவுரவம் மற்றும் அந்தஸ்த்தை நல்கும், அயல் தேச பயணங்கள் தங்களுக்கு மேலும் சிறப்பு மிக்க தொழில் வளர்ச்சியை நல்கும், எதிர்பாலின சேர்க்கை வழியிலான நன்மைகள் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடி வரும், இதுவரை இருந்து வந்த மனஅழுத்தம் மனப்போராட்டம் நீங்கி, தெளிவான சிந்தனையை பெறுவீர்கள், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு உயரிய பதவிகளை பெற்று தரும், சமூக மதிப்பு, அரசு கௌரவம், அரசியல் பதவிகள் போன்றவை தங்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும், எதையும் துணிச்சலுடன் செய்து வெற்றிகொள்ளும் நேரமிது, கூட்டு தொழில் வழியிலான லாபம் அதிகரிக்கும், விவசாய தொழில் புரிவோருக்கு மிகுந்த அதிர்ஷ்டம் உண்டு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு துறையில் உள்ளவர்கள் மிகுந்த லாபம் அடைவர், நெசவு தொழில் மற்றும் கைவினை தொழில் புரிவோர் மிகுந்த நன்மைகளை பெறுவர், ஆன்மீக வெற்றி உண்டு, உணவு தொழில் அல்லது உணவகம் நடத்துவோருக்கு எதிர்பாராத வருமான வாய்ப்பும் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் சிகிச்சை உபகரணம் தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றுவோருக்கு இடமாறுதல், பதவி உயர்வும் உண்டாகும், ஓர் வலிமை மிக்க நபராக தங்களை குரு பகவான் பிரகாசிக்க வைப்பார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

 தனது ஒன்பதாம் பார்வையால் ( சுப திருஷ்ட்டி ) எதிர் வர்க்க கிரகமான சனி பகவான்  வீடான "மகர" ராசியை வசீகரிக்கும் குருபகவான் மேஷ ராசியினருக்கு ஸ்திர தன்மையான தொழில் அல்லது வேலைவாய்ப்பை  நல்குவார், இதுவரை இருந்து வந்த தொழில் சார்ந்த இன்னல்கள் நீங்கி நலம் பெறுவீர்கள், நிரந்தர தொழில் அமையும், தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றங்களை பெறுவீர்கள், நிர்வாக திறன் வெகு சிறப்பாக வெளிப்படும், தங்களது நிறுவனம் பலமடங்கு வளர்ச்சியை இந்த நேரத்தில் தங்குதடையின்றி பெற்றிடும், நல்ல பணியாட்கள் அமைவார்கள், தொழிலார் ஒற்றுமை மற்றும் ஆதரவு தங்களுக்கு சாதகமாக மாறும், நிறுவனத்தின் மீதான கண்ணோட்டம் தங்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும், சமுதாயத்தில் நற்பெயரும், கவுரவமும் அதிகரிக்கும், எதிர்பாராத முதலீடுகள் தங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், மிகப்பெரிய முன்னேற்றங்களையும் நல்கும், தெய்வீக ஆசிர்வாதம் அல்லது ஆன்மீக சுற்றுலாக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சென்றுவர வாய்ப்பு வந்து சேரும், ஆன்மீக பெரியோர்கள் ஆசீர்வாதம் அல்லது புண்ணிய திருத்தலம் சென்று வரும் யோகமும் உண்டு, உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள், தங்களது துறை சார்ந்த அறிவு திறன் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய வாய்ப்புகள் தங்களின் முன்னேற்றத்திர்க்கு உறுதுணையாக அமையும், பயணங்கள் மூலம் தொழில் விருத்தி உண்டு, பித்ரு வழிபாடு வழியில் தங்களுக்கான சுபயோகங்கள் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள், ஆன்மீக வெற்றியின் மூலம் சகல சௌபாக்கியங்களையும் இனிவரும் காலங்களில் முழுமையாக சுவீகரிக்கும் யோகமுண்டு.

குறிப்பு :

மேஷ ராசி அன்பர்களே தங்களின் சுய ஜாதகத்தில் 2,6,8,10ம் பாவக பலன்கள் தற்போழுது நடைபெற்றால் மேற்சொன்ன அனைத்து சுபயோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, இருப்பினும் தங்களது பிறந்த குறிப்பின் அடிப்படையிலான சுய ஜாதக பலனை கருத்தில் கொண்டு குருபெயர்ச்சியை அணுகுவது சிறப்பாக அமையும், "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696


செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


 கன்னிராசி "அஸ்தம்" நட்சத்திரம்
வாழ்வில் நினைத்ததை சாதிக்கும் வல்லமையையும், தொட்டதெல்லாம் பொண்ணாக மாறும் அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புத நட்ஷத்திரம், தனது உள்ளங்கையில் அனைத்தையும் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், ஆன்மீகத்தின் வழியிலான அருளாசிகளையும், புவியில் மனிதர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பேராற்றலும் கொண்டவர்கள், கற்பனை வளம், விவசாயம் செழிப்படைதல், தானிய விருத்தி, பொருள் விருத்தி, பூமியின் மேலும் புவியின் கீழும் உள்ள பொருட்களை ஆளுமை செய்யும் நட்ஷத்திரம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனும், வருமுன் கண்டுணரும் உள்ளுணர்வும், நடப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் பேராற்றலும், தெய்வீக சிந்தனையும், சுய முயற்சி வழியிலான பொருள் தேடுதல்களையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் சிறப்பாக சுவீகரிப்பார்கள், தனது வாத திறன் கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகளை படைப்பார்கள், கடின உழைப்பிற்கும் சுய முயற்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவார்கள், அனைத்து காரியங்களிலும் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பவர்கள், துணிச்சலும் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் இறுதிவரை போராடி வெற்றி பெரும் வல்லமையும் பெற்றவர்கள், 
இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கு அளவில்லா சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும் அற்புதமான திருக்கோவில், கேட்ட அனைத்தையும் தாய் பகவதி வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர், அஸ்த நட்சத்திர அன்பர்கள் வளர்பிறை திங்கள் அன்று இத்திருக்கோவிலுக்கு சந்திர ஹோரையில் மல்லிகை மலர்மாலை மற்றும் வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இவர்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும், குறிப்பாக உடல் ஆரோக்கியம், மனோ வலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, திருமண யோகம், புத்திர பாக்கியம், வீடு வண்டி வாகன யோகம், புதிய வேலை அல்லது தொழில், பொருளாதார வழியிலான முன்னேற்றங்கள், விவசாயம் மற்றும் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ சாபம் நீங்குதல், பித்ரு சாபம் நீங்குதல், பெண்சாபம் நீங்குதல் என சகல தோஷங்களில் இருந்தும்  விடுதலை வழங்கும் வல்லமை  பெற்ற தெய்வம்  "சோட்டானிக்கரை பகவதியம்மன்" என்பதை அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் வழிபாடு செய்வதன் வழியில் இருந்து உணர முடியும்.

 வருடம் ஒருமுறை   (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" சென்று வரும் கன்னி ராசி அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் நிலைத்தன்மையிலான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கமுடியும், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை, புதிய முயற்சிகள் வழியிலான முன்னேற்றங்கள் உண்டாகும், தனது துறை சார்ந்த ஞானம் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி உண்டு, அருங்கலைகள் மூலம் உலகப்புகழ் பெரும் யோகம் உண்டாகும், சாதனை படைப்பதற்கான அத்துணை வாய்ப்புகளும் வந்து சேரும், ஜீவன விருத்தி, திருமணயோகம் வெகு சிறப்பாக வந்து சேரும், உயரிய குணங்களால் வாழ்க்கையில் உன்னத வெற்றிகளை பெறுவதுடன் சமுதாயத்திற்க்கு பயனுள்ள வாழ்க்கையை முன்னெடுக்கும் யோகம் உண்டாகும், நல்ல எண்ணமும் சிறந்த நற்செயல்களும் அஸ்த நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், தொட்ட காரியங்கள் விருத்தி பெறுவதுடன், புகழ் மிக்க பொறுப்புகளும் அரசியல் பதவிகளும் வந்து சேரும், முறையான வாழ்க்கை, நேர்மையான முன்னேற்றம், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பாரம்பரிய விஷயங்களை கட்டிக்காக்கும் பேராற்றல், உறவுகளுடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடிக்கும் வல்லமை, தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள், அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை சுவீகரித்தல் என்ற வகையில் தன்னிறைவான யோக வாழ்வை பெற்று நலம் பெறுவார்கள்.

 குறிப்பு :

கன்னிராசியில் "அஸ்தம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், அதிர்ஷ்டத்தையும் ஆளுமை திறனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அதிர்ஷ்டகரமாக அமையும், வாழ்வை மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன  (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலய" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் பொருள் ஆதாயத்தையும் அதிகார பதவிகளையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கன்னிராசி "உத்திரம்" நட்சத்திரம் பொறுமையின் பிறப்பிடமாகவும், நிர்வாக திறனில் தனித்தன்மையுடன் இயங்கசெய்யும் அற்புத நட்சத்திரம், சவால்கள் அனைத்தையும் தனது நிர்வாக வல்லமையால் வெற்றிகொள்வார்கள், தனது சிந்தனை திறனையும் செயல்பாடுகளையும் மற்றவர்கள் அறியா வண்ணம் லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, ரகசியமான கலைகளில் நல்ல தேசியும், புகழ் மிக்க பொறுப்புகளை குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகமும் உண்டாகும், தெளிவான சிந்தனை, முற்போக்கு செயல்பாடுகள், எந்த பொருளையும் பன்மடங்கு விருத்தி செய்யும் வல்லமை, சிறிதாக ஆரம்பித்து வெகு விரைவில் சாம்ரஜ்ஜியத்தை கட்டமைக்கும் நிர்வாக வல்லமை, எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக நின்று சாதிக்கும் யோகம், சிறந்த பொருளாதார திட்டமிடுதல்கள், சார்ந்து இருப்போர் அனைவரையும் காப்பாற்றும் யோகம், உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியிலான நன்மைகளை முழுமையாக பெறுதல், பல தொழில் செய்யும் யோகம், விவசாயத்தில் சாதனை படைக்கும் வழிமுறைகளை கையாளும் யோகம், தொலைநோக்கு பார்வை, மண் மற்றும் பூமியை பற்றிய நுண்ணறிவு, வாஸ்து கலையில் அதீத புலமை, இயற்க்கை மருத்துவத்தில் உணவு சம்பந்தப்பட்ட துறையில் அதீத வெற்றிவாய்ப்புகள், மற்றவர் நோய் தீர்க்கும் தனித்திறன் அல்லது கைராசி, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்புகளை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

தலச்சேரியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், அகஸ்திய மகா முனிவர் "ஆதித்ய ஹிருதயமந்திரத்தை"  3முறை பாராயணம் செய்து ராவணனை வெற்றிகொள்ள "பகவான் ராமருக்கு" கொடுத்த திருத்தலம்.

 "சூரியனின் தேசம்" என்பதின் சுருக்கம் கதிரூர் அல்லது கதிரவபுரம், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் கன்னி ராசி உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, சிறந்த நிர்வாக திறனையும் அகிலம் போற்றும் ஆளுமை திறனையும் வாரி வழங்குவார், எதிரிகளை வெற்றி கொள்ளவும், மாந்திரீகம் சூனியம் செய்வினை கோளாறுகள் வழியிலான துன்பங்களை நீக்கவும், அரசுதுறையிலான பணிகளில் வெற்றி பெறவும், அரசியல் ரீதியான வளர்ச்சிகளை பெறவும், தலைமை பொறுப்புகளை வென்று நிலையான ஆட்சி செய்யவும் வல்லமையை தருவார், தொழில் ரீதியான இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் அனைத்து அன்பர்களுக்கு இந்த திருத்தலம் மிகப்பெரிய மாற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் மிகப்பெரிய அளவில் வாரி வழங்கும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போட்டி பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றிகளையும், தன்னிறைவான யோக வாழ்க்கையையும் நிச்சயம் பெறுவார்கள், எதிராளிகள் இவர்களது அசுர பலத்தை கண்டு அச்சமுறும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி கல்வி கேள்விகளில் புகழ், கலைத்துறையில் சாதனை, யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து நின்று போராடி வெற்றி பெறுதல், பொதுமக்கள் ஆதரவு, நீதி நேர்மை கடமை கண்ணியம் போன்ற உயரிய குணங்களை சுவீகரித்தல், சத்தியத்தையும் உண்மையையும் பாதுகாத்தல், சாஸ்திர ஞானம், தவவாழ்வில் முக்தியை பெறுதல் என்ற வகையில் மிகப்பெரிய சுபயோகங்கள் உண்டாகும்.

வருடம் ஒருமுறை  "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" சென்று வரும் கன்னி ராசி உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் தனித்துவமான சாம்ராஜ்யத்தை நிறுவி சாதனை புரியும் வல்லமையை பெறுவார்கள், கல்வி உயர்கல்வி, வேலை தொழில் , காதல் வெற்றி திருமணயோகம், ஆண்வாரிசு, பொருளாதார தன்னிறைவு, எதிர் பாரத சுபயோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, தெய்வீக தரிசனம், மூதாதையர் சொத்துக்கள் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, இந்தியாவின் உயரிய ஆட்சி பணிகளை பதவிகளை மிக எளிதாக சுவீகரித்தல், புதிய சிந்தனை புதிய மாற்றங்கள் என வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முழுமையான சுபயோகங்களை வாரி வழங்கும் யோகம், தனது துறை சார்ந்த ஞானம் அல்லது தான் செய்யும் தொழில் வழியிலான உச்ச நிலையை அடைதல், என்ற வகையில் சிறப்புகளை தரும்.

குறிப்பு :

கன்னிராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பரோபகரமான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன "கதிரூர் சூரிய நாராயணா கோயில்"வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 27 ஜனவரி, 2024

சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


 சிம்மராசி "உத்திரம்" நட்சத்திரம் கடின உழைப்பும் ஸ்திர தன்மையான அறிவாற்றலும் சமயோசித புத்திசாலித்தனமும் பரிபூரணமாக நிறைந்த அற்புத நட்சத்திரம், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வீரியமிக்க வெற்றிகளை பதிவு செய்வார்கள், தன்னை பின்பற்றி வாழ அனைவரையும் உற்சாகப்படுத்தும் அன்பர்கள், பிரதிபலன் பாராமல் அனைவருக்கும் நன்மைகளையும், பேதம் பாராமல் மக்களுக்கான சேவைகளை செய்வத்தில் வல்லவர்கள், அன்பு பாராட்டுதல், உறவுகளை அனுசரித்து செல்லுதல், தன்னை சார்ந்து இருக்கு அன்பர்களுக்கான வழிகாட்டுதல், சுயநலம் இன்றி பொதுநலன் காத்தல், உயரிய நோக்கங்கள், சமுதாய விழிப்புணர்வு, வெற்றிகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்பாலினர் சேர்க்கை வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் சுவீகரித்தல், தெய்வீக சிந்தனை, ஆன்மீக வெற்றி அரசுத்துறை சார்ந்த பணிகளை இலகுவாக கையாளுதல், அரசாட்சி செய்யும் யோகம், நிதி மேலாண்மை சார்ந்த திட்டமிடுதல்களை வெகு அற்புதமாக கையாளுதல், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தொழில்களை வெகு விரைவில் மீட்டு எடுத்து முன்னேற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் சுவீகரிக்கும் தன்மை, உறவுகளும் நட்புகளும் புடைசூழ யோக வாழ்வை சுவீகரிக்கும் பேராற்றல் என மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கும்பகோணம் அருகில் அமைந்துள் சூரியன் நவக்கிரக தலம் "சூரியனார் கோவில்"  உத்திரம் நட்சத்திரம் அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் பெருந்தன்மையான குணத்தையும், தலைமை பொறுப்பேற்கும் வலிமையையும், கல்வி கேள்விகளில் மிகப்பெரிய ஆளுமைத்திறனையும், முற்போக்கு சிந்தனையையும், நேர்மறை எண்ணத்தின் வழியிலான வெற்றி வாய்ப்புக்களையும், நிலைத்து நின்று ஸ்திர தன்மையுடன் தனது வெற்றிகளை பதிவு செய்யும் யோகத்தையும், அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த பணிகளை சுவீகரிக்கும் நிலையையும் வெகு விரைவாக வழங்குவார் மேலும் உடல் வலிமை மனஉறுதி இரண்டையும் ஏககாலத்தில் உத்திர நட்சத்திர அன்பர்கள் பெற்று நலமடைவார்கள், தொழில் ரீதியான தடைகள் நீங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் மேலோங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக வந்து சேரும், மலைபோல் வந்த சிரமங்கள் பனிபோல் விலகும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க பெறுவதுடன் எதிர்பாராத முன்னேற்றங்கள் வெகு சிறப்பாக வந்து சேரும், செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு முழுஅளவில் கிடைக்க பெறுவார்கள்.

வருடம் ஒருமுறை  "சூரியனார் கோவில்" சென்று வரும் உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் அரசருக்கு நிகரான யோக வாழ்வை சுவீகரிப்பதுடன் பொதுமக்கள் ஆதரவு, தொழில் சாதனைகள், எதிர்பாலினர் ஆதரவு, வசதி வாய்ப்புகள் நிறைந்த சொகுசு வாழ்க்கை, சுயமாக செயல்பட்டு தனசேர்க்கை பெறுதல், சமுதாயத்தில் உயரிய பதவிகள், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், மருத்துவம் தொழில் நுட்பம் நிதிமேலாண்மை போன்றவற்றில் அபரிவிதமான முன்னேற்றங்கள், சுய சம்பாத்தியம், பொருளாதார முன்னேற்றங்கள், மண் மனை வண்டி வாகன யோகங்கள் என்ற வகையில் அபரிவிதமான வளர்ச்சி வாய்ப்புகள், தடைகள் யாவும் நீங்கி சுபயோக வாழ்வை சுவீகரிக்கும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை வரி வழங்கும்.

 குறிப்பு :

 சிம்மராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஸ்திர தன்மையான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள், இயல் இசை நாடகம் போன்ற கலைத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தையும், அதிக அளவிலான செல்வத்திற்கும்  சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும்,அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சூரியனார் கோவில்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

வியாழன், 25 ஜனவரி, 2024

சிம்மராசி பூரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  

 சிம்மராசி "பூரம்" நட்சத்திரம் "கலை உலக இளவரசன் கவிஞர்களுக்கு கதாநாயகன் " என்பதற்கு இணங்க தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும் அற்புத நட்சத்திரம், சுயகட்டுப்பாடு சிறந்த நிர்வாகத்திறமை அதீத தைரியம் தன்னம்பிக்கை, உடல் நலம் பேணுவதில் வல்லவர்கள், என்றும் இளமை என்பதற்கு இணங்க வயோதிகத்திலும் துடிப்புடன் செயல்படுதல், வயதை கணிக்க இயலாத தன்மை, ரகசிய கலைகளை கற்றுணர்ந்து தேர்ச்சி பெறுதல், தெளிவான சிந்தனை, குழப்பம் அற்ற மனநிலை, நினைத்தது நிறைவேற்றும் செயல்பாடுகள், சுதந்திர மனப்பான்மை, எதிர்கால வாழ்வை சிறப்பாக மகிழ்ச்சிகரமாக வாழும் தன்மை, தன்னிறைவான பொருளாதார சேர்க்கை, சிறப்பு தொழில் நுண்ணறிவு துறை சார்ந்த ஞானம், எதையும் சமாளிக்கும் வல்லமை, எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இயங்குதல், தொழில் ரீதியான வளர்ச்சியை விரைவாக சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பைத்தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 கடலூர் மாவட்டம் "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" கோவில் "பூரம்" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று சிகப்பு வர்ண பட்டு வஸ்திரம் சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் பூர நட்சத்திர அன்பர்கள் 14 நாட்களில் அரசு ஆதாயம், அரசு வேலை வாய்ப்பு, அரசுத்துறை சார்ந்த மானியங்கள், அரசியல்வாதிகளில் ஆதரவு என மிக சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், மேலும் கலைத்துறையில் இயங்கும் அன்பர்களுக்கு தனது தனித்திறமையையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் தன்மையை தரும், நேர்த்தியான விஷயங்களை கடைபிடிக்கும் பூர நட்சத்திர அன்பர்களுக்கு இத்திருக்கோவில் வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும் என்றால் அது மிகையாகாது, பூர்வீக சொத்துக்கள் சார்ந்த இன்னல்களை எதிர்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான தீர்வையும்  தனது பக்கமுள்ள ஞாயமான கோரிக்கைகளையும் வென்று எடுக்கும் வல்லமையையும் தருவதுடன், சுகபோக யோக வாழ்வை நல்கும் தன்மை பெற்றவர், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் மனஉறுதி, போட்டி பந்தயம் மற்றும் வழக்குகளில் அபரிவிதமான வெற்றிகள், விளையாட்டு துறையில்  சாதிக்கும் பேராற்றல், அரசியலில் தனது வலிமையை வெகு சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தரும்.

 வருடம் ஒருமுறை சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் சென்று வரும் பூர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் பொதுமக்களின் ஆதரவு, உறவுகளின் அன்பு, பூர்வீக சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், உடல் ரீதியான சுறுசுறுப்பு, தெய்வீக ஆளுமை, தெய்வ தரிசனம், குறுகிய காலத்தில் உலக பிரபல்யம் அடைதல், இயல்பான வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்வது, வாழ்வின் நெறிமுறைகளை உணர்ந்து புரிந்து வெற்றிகரமாக ஜீவனம் செய்வது, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, பலபுண்ணிய திருத்தலங்களுக்கும்  சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரும் யோகம், கண்ணியமிக்க செயல்பாடுகள், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்குவார், குறிப்பாக பூரம் நட்சத்திர பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, அரசியல் ரீதியான செல்வாக்கு, திருமணயோகம், நல்லதொரு ஆண் வாரிசு, பொருளாதார முன்னேற்றம், புதிய தொழில் வழியிலான வெற்றிகள், வெளிநாடுகள் பயணம் மூலம் தொழில் விருத்தி அல்லது  வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் வெற்றிகளை "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" தன்னிறைவாக வாரி வழங்குவார்.

குறிப்பு :

சிம்மராசியில் "பூரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ரகசிய கலைகளில் தேர்ச்சியும் வெகு ஜன மக்கள் ஆதரவும் உண்டாகும், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது செயல்பாடுகள் மிகவும் வலிமையானது என்பதனால், எதிர்ப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது கற்பனை திறன் என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் காணப்படும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், வாழ்க்கையை புரிந்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696