தமிழகத்தில் நடப்பு வருட கணக்கெடுப்பின் படி இல்லறவாழ்வில் ஏற்ப்படும் பிரச்சனைகளால் விவாகரத்து சதவிகிதம் 8 . 82 உயர்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் பதிவாகி உள்ள வழக்குகள் எண்ணிக்கையை வைத்து அறிவித்துள்ளனர் .
இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஒரு தனியார் செய்தி தொலை காட்சியில் ( தொல்லை காட்சியில் ) பல நிபுணர்கள் விவாதித்துகொண்டு இருந்தனர் , இவர்களின் விவாதத்தை பார்த்த பொழுது எனக்கு சிரிப்புதான் வந்தது , விவாகரத்து சதவிகிதம் அதிகரிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி தனது கருத்தை திணிக்கவே
செய்தனர் .
உண்மையில் நாம் நமது பாரம்பரிய ( கூட்டு குடும்ப ) வாழ்க்கையில் இருந்து என்று தடம் மாறி வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தோமோ அன்றே இது ( கணவன் மனைவி தாம்பத்திய பிரிவு ) நமக்கு அறிமுகம் ஆகிவிட்டது , மேலும் கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போனது காலத்தின் கொடுமை .
ஆராய்ச்சியில் கிடைத்த விவாகரத்து சதவிகிதம் 8 . 82 ஆக இருந்தாலும், உண்மையில் வாழ்க்கையில் மன போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர் எண்ணிக்கை 88 .82 ஆக இருக்கும் என்பது முற்றிலும் உண்மை .
தமக்கு அமைந்த கணவனையும், தனது குழந்தையையும் குடும்பத்தையும் நேசித்து , அனுசரித்து , விட்டுகொடுத்து குடும்பம் நடத்த தெரியாமல் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் தமிழ் மரபில் வந்தவளாக இருக்க முடியாது , மேலும் தமிழ் குல பெண்களுக்கே உரித்தான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற உயரிய குணங்களை தொலைத்துவிட்ட மங்கையாகவே இருப்பாள் . நமது தமிழ் பெண்களின் தியாகமும் வீரமும் தான் போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது.
மேலும் இந்தநிலை வருவதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பே காரணம், பெற்றோர்கள் தமது குழந்தைகளை சரியாக வளர்த்து இருந்தால் இந்த நிலை ஏன் வருகிறது , சரியான அறிவுரை சொல்லி நமது பாரம்பரியத்தையும் , தாம்பத்திய உறவுமுறையையும் உணர்த்தியிருந்தால் இந்த நிலை வருமா ? நிச்சயம் இல்லை .
மாறுகின்ற நாகரிக வாழ்க்கையில், மனிதன் தொழில் நுட்பத்தை மட்டும் நவீனமாக நுகர்ந்து கொண்டு , ஐந்தறிவு வாழ்க்கையை வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் என்பதே உண்மை .
நல்ல வேலை மறைந்த நமது ஆன்மீக அருட் தந்தை வேதாத்திரி அய்யா , மற்றும் ஞான வள்ளல் பரஞ்சோதியார் அவர்களும் , பரஞ்சோதி நகரில் தற்பொழுது தம்மை நாடி வருபவர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் அய்யா பரஞ்சோதி மகான் போன்றோர்கள் , நமது பாரம்பரியத்தையும் , உறவுகளின் உன்னதத்தையும் , கணவன் மனைவி தாம்பத்திய புனிதத்தையும் எப்படி போற்றி பாதுகாப்பது அதன் வழி முறைகளையும் இன்றளவும் நமக்கு அறிவுரித்திகொண்டு இருப்பது தமிழகம் செய்த தவ பலன்.
மன நல மருத்துவர் ஷாலினி அவர்கள்
தமிழகத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் , காதலர்களும் , தம்பதியினரும் சந்திக்க வேண்டிய ஒரு மிகசிறந்த மன நல மருத்துவர்
டாக்டர் ஷாலினி அவர்கள் . இவரிடம் ஆலோசனை பெற வரும் அனைவருக்கும் நிச்சயம் வாழ்க்கை ஒரு புதிய பூந்தோட்டமாக மலர்ந்து மனம் வீசும் என்பதில் சந்தேகமே இல்லை .
இறுதியாக ஒன்று :
திருமண பந்தத்தை எந்த சட்டத்தை போட்டும் நல்ல வாழ்வினை தந்துவிட முடியாது இதை தான் " அடுத்தவன் படுக்கை அறையை எட்டி பார்க்காதே " என்று பெரியவர்கள் சொன்னார்கள் , தனது குடும்ப பிரச்சனைகளை எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம் ( அரசு , நீதிமன்றம் ) தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவது முற்றிலும் தவறானது. அதற்க்கான தீர்வு அவர்களிடமே ( தமபதியரிடம் ) இருப்பதை உணர்ந்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நமது தமிழகம் உலகத்திற்கே பாடம் கற்று தரும் .
விவாகரத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்களை பின் வரும் பதிவுகளில் காணலாம் !?
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக